Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மெனிக்கே மகே ஹித்தே: பாடல் பிரபலமானதற்கு இந்தியாவின் “றோ” உளவுப் பிரிவே காரணம்- நளின் டி சில்வா கருத்து

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மெனிக்கே மகே ஹித்தே: பாடல் பிரபலமானதற்கு இந்தியாவின் “றோ” உளவுப் பிரிவே காரணம்- நளின் டி சில்வா கருத்து

October 23, 2021
 
menike song மெனிக்கே மகே ஹித்தே: பாடல் பிரபலமானதற்கு இந்தியாவின் “றோ” உளவுப் பிரிவே காரணம்- நளின் டி சில்வா கருத்து

இலங்கையின் தற்போதைய அரசாங்கத்தையும், சிங்கள மக்களையும் வென்றெடுப்பதற்காக இந்தியா மிகவும் அக்கறையுடன் செயற்பட்டு வருகிறதாக சிங்கள தேசியவாதியான பேராசிரியர் நளின் டி சில்வா தெரிவித்துள்ளார்.

இளம் சிங்கள பாடகி யோஹானி டி சில்வாவின் “மெனிக்கே மகே ஹித்தே” என்ற பாடல் உலகம் முழுவதும் பிரபலமானதற்கு இந்தியாவின் “றோ” உளவுப் பிரிவின் சூழ்ச்சியான வேலையாக இருக்கலாம் எனவும் நளின் டி சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கை மக்களுக்கு இந்தியா மீதுள்ள அதிருப்தியை போக்கு வதற்காக இந்தியா, யோஹானி டி சில்வாவை தெரிவு செய்துள்ளது.

இலங்கையில் இதுவரை பிரபலமாகாத அந்த பாடலுக்குத் திட்டமிட்ட அடிப்படையில் பிரச்சாரத்தைப் பெற்றுக் கொடுத்துள்ளனர், அமி தாப்பச்சன் மாத்திரமல்ல, சல்மான்கான்போன்றோரும் இதற்கு உதவி வருகின்றனர்.

இந்தியத் திரை கலைஞர்கள் தன்னிச்சையாக உதவவில்லை. சிலர் அவர்களை வழிநடத்துகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியா என்பது இலங்கையை விட மிகவும் திட்டமிட்டு வேலை செய்யக் கூடிய நாடு. அந்நாட்டின் நிர்வாக அதிகாரிகள், உளவுப் பிரிவுகள் என்பன வேலை செய்கின்றன எனவும் நளின் டி சில்வா தெரிவித்துள்ளார்.

அந்த அதிருப்தியைப் போக்க இந்தியா இலங்கை பாடகியைத் தெரிவு செய்துள்ளது. அந்த பாடகி, முக்கிய பிரமுகர் ஒருவரின் மகள் என்பது கருத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயம்.

இலங்கையில் கூட பிரபலமாக இல்லாத பாடலுக்கு இந்தியாவில் குறித்த பாடலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து விளம்பரப்படுத்தியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 

https://www.ilakku.org/manike-mage-hithe-song-comment-by-nalin-de-silva/

 

  • கருத்துக்கள உறவுகள்

இருக்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காகம் இருக்க பனம்பழம் விழுந்த கதையாய்த்தான் இந்த பாட்டு பிரபலமானது போல கிடக்கு....

  • கருத்துக்கள உறவுகள்+

என்னைப் பொறுத்த வரைக்கும் இந்தப்பாடல் செயற்கையாகத்தான் பரப்பப்பட்டிருக்கிறது. மக்கள் விரும்பி பார்க்காமல் அவர்களுடைய யூரியூப் ஊட்டத்தில் இது யுரியூப்பால் ஊட்டப்பட்டிருக்கலாம் என்றே எண்ணுகிறேன், ஏதேனும் உள்நோக்கத்திற்காக!

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பாடல் எழுந்தமானமாக பாடப்பட்டிருந்தாலும்.. அது பரந்தளவில் விசிறிகளைச் சென்றடைய வேண்டும் என்ற குறிக்கோளில்.. தமிழ்.. மலையாளத்திலும் கலப்பு மொழிப் பாட்டுக்களாகவும் வெளியிடப்பட்டிருந்தது.

இதில்.. ஒரு போர்க்குற்றவாளியின் மகளின் பாடலை மையமாக வைத்து சிங்கள இராணுவத்தை தூய்மைப்படுத்திக் காட்டும் உள்நோக்கமும் நிறைந்திருக்கிறது.

அதன் பின்னணியில் ஹிந்திய போர்க்குற்றவாளிகளும் குறிப்பாக றோ போன்ற சக்திகளும்.. பரப்புகைக்கு உதவி இருக்கலாம். 

றோ மற்றும் இஸ்ரோ முள்ளிவாய்க்கால் மனிதப் பேரழிவில் நேரடியாகப் பங்காற்றியமை உலகறிந்த விடயமே. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நன்னிச் சோழன் said:

என்னைப் பொறுத்த வரைக்கும் இந்தப்பாடல் செயற்கையாகத்தான் பரப்பப்பட்டிருக்கிறது. மக்கள் விரும்பி பார்க்காமல் அவர்களுடைய யூரியூப் ஊட்டத்தில் இது யுரியூப்பால் ஊட்டப்பட்டிருக்கலாம் என்றே எண்ணுகிறேன், ஏதேனும் உள்நோக்கத்திற்காக!

இது உண்மையா என்பது தெரியவில்லை ஆனால், சிந்திக்க வைக்கக்கூடிய கருத்து.

பாடல் பிலபல்யமான விடயம் சிங்கள தேசியவாதிக்கும் பிடிக்கவில்லை,  தமிழ் தேசியவாதிக்கும் பிடிக்கவில்லை.

ஆனால் ………

உலகெங்கும் வாழும் இசை ரசிகர்களுக்கு மொழி வேறுபாடுன்றி பிடித்திருக்கிறது. அது தான் இசையின் வலிமை. இத்த பாடல் பிடித்தவர்கள் இதைக் கேட்டு மகிழலாம். பிடிக்காதவர்கள் தமக்கு பிடித்த வேறு பாடலை கேட்டு மகிழலாம். 

  • கருத்துக்கள உறவுகள்

உலக இசை ரசிகர்களை எல்லாம் கொள்ளை கொள்ளும் அளவுக்கு இந்தப் பாடலில் என்ன இசை நுணுக்கம் இருக்கின்றது?

25 minutes ago, வாலி said:

உலக இசை ரசிகர்களை எல்லாம் கொள்ளை கொள்ளும் அளவுக்கு இந்தப் பாடலில் என்ன இசை நுணுக்கம் இருக்கின்றது?

வை திஸ் கொலை வெறி பாடலில் என்ன இசை நுணுக்கம் இருந்து உலகெங்கும் ட்ரென்ட் ஆனது? 

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, tulpen said:

வை திஸ் கொலை வெறி பாடலில் என்ன இசை நுணுக்கம் இருந்து உலகெங்கும் ட்ரென்ட் ஆனது? 

அதைத்தான் நான் கேட்கிறேன். கொலவெறி பாடலிலும் என்ன இசை நுணுக்கம் இருக்கின்றது.  நான் எந்தஒரு சந்தர்ப்பத்திலும் இந்த கொலவெறி பாடலை ஒரு பாடலாகவே எடுத்துக்கொண்டது கிடையாது.

அது போக, ஒரு தவறு விடப்பட்டால் அந்தத் தவற்றை மேற்கோள்காட்டி இன்னொரு தவறு விடப்படவேண்டுமா? 

கொத்தலாவலை இராணுவ பல்கலைகழக் பட்டதாரியும் , போர்க்குற்றவாளி ஒருவரின் மகளையும் தூக்கிப் பிடிக்கவேண்டிய அவசியம் தமிழ்ச் சமுகத்துக்கு ஏன் தேவைப்படுகிறது?. 

இதுவே இராணுவத்துடன் எந்தவகையிலும் தொடர்பு இல்லாத ஒரு சாதாரண சிங்களப்பெண்ணாக இருந்தால் தூக்கிக் கொண்டாடியிருக்கலாம்.

 

  • கருத்துக்கள உறவுகள்

இத்தனைக்கும் அதன் மூலப்பாடல் கடந்த வருடம் வந்திருந்தது. யாரும் கவனிக்கப்படாமல்

இந்த பாடலின் பிரபல்யத்துக்கு பின்னால் அரசியல் காரணங்கள் இருக்கு என்றேபடுகிறது. (ஒரு தமிழனை சேர்ந்து பாட வைத்தது உட்பட)

அதில் எமக்குள் புடுங்குப்படுவதும் ஒன்றாக இருக்கலாம். 

18 minutes ago, வாலி said:

அதைத்தான் நான் கேட்கிறேன். கொலவெறி பாடலிலும் என்ன இசை நுணுக்கம் இருக்கின்றது.  நான் எந்தஒரு சந்தர்ப்பத்திலும் இந்த கொலவெறி பாடலை ஒரு பாடலாகவே எடுத்துக்கொண்டது கிடையாது.

அது போக, ஒரு தவறு விடப்பட்டால் அந்தத் தவற்றை மேற்கோள்காட்டி இன்னொரு தவறு விடப்படவேண்டுமா? 

கொத்தலாவலை இராணுவ பல்கலைகழக் பட்டதாரியும் , போர்க்குற்றவாளி ஒருவரின் மகளையும் தூக்கிப் பிடிக்கவேண்டிய அவசியம் தமிழ்ச் சமுகத்துக்கு ஏன் தேவைப்படுகிறது?. 

இதுவே இராணுவத்துடன் எந்தவகையிலும் தொடர்பு இல்லாத ஒரு சாதாரண சிங்களப்பெண்ணாக இருந்தால் தூக்கிக் கொண்டாடியிருக்கலாம்.

 

வாலி உங்களுக்கு பிடிக்காத ஒரு பாடலை ரசிக்குமறு கட்டாயப்படுத்தும் உரிமை  எவருக்கும் இல்லை.  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

பாடல் பிலபல்யமான விடயம் சிங்கள தேசியவாதிக்கும் பிடிக்கவில்லை,  தமிழ் தேசியவாதிக்கும் பிடிக்கவில்லை.

ஆனால் ………

உலகெங்கும் வாழும் இசை ரசிகர்களுக்கு மொழி வேறுபாடுன்றி பிடித்திருக்கிறது. அது தான் இசையின் வலிமை. இத்த பாடல் பிடித்தவர்கள் இதைக் கேட்டு மகிழலாம். பிடிக்காதவர்கள் தமக்கு பிடித்த வேறு பாடலை கேட்டு மகிழலாம். 

உங்களுக்கு இந்தப் பாடல் பிடித்ததோ இல்லையோ, சிங்களத்தைக் குறை கூறுவது பிடிக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nedukkalapoovan said:

இந்தப் பாடல் எழுந்தமானமாக பாடப்பட்டிருந்தாலும்.. அது பரந்தளவில் விசிறிகளைச் சென்றடைய வேண்டும் என்ற குறிக்கோளில்.. தமிழ்.. மலையாளத்திலும் கலப்பு மொழிப் பாட்டுக்களாகவும் வெளியிடப்பட்டிருந்தது.

இதில்.. ஒரு போர்க்குற்றவாளியின் மகளின் பாடலை மையமாக வைத்து சிங்கள இராணுவத்தை தூய்மைப்படுத்திக் காட்டும் உள்நோக்கமும் நிறைந்திருக்கிறது.

அதன் பின்னணியில் ஹிந்திய போர்க்குற்றவாளிகளும் குறிப்பாக றோ போன்ற சக்திகளும்.. பரப்புகைக்கு உதவி இருக்கலாம். 

றோ மற்றும் இஸ்ரோ முள்ளிவாய்க்கால் மனிதப் பேரழிவில் நேரடியாகப் பங்காற்றியமை உலகறிந்த விடயமே. 

 

கலைஞர் யோகானி மூன்று வருடங்களுக்கு முன் யூரியூப்பில் பகிர்ந்த நேர்காணல் பார்த்தேன். நாம் அறியவில்லை. ஆனால், அப்போதே அவர் பிரபலமாகி விட்டார். இப்போது இன்னோர் படிமுறையில் செல்கின்றார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பது போல் சிங்களம் இந்த பாடலையும் அரசியல் ஆயுதமாக எடுத்து விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சில்லறைகளுக்கு நாங்கள் முக்கியத்துவம் கொடுப்பதாலேயே இது பிரபல்யமாகிறது. பாத்தோமா போனோமா என்று போய்க்கொண்டே இருப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பாடல் நிச்சயமாக ஏதோ ஒரு மறை நோக்கத்துக்காக் வலிந்து பரப்பபட்டுள்ளது என்பது கண்கூடு.

பெரும் எண்ணிக்கையில் பின் தொடர்பாளர்களை கொண்ட அமிதாப்பச்சன் போன்றவர்களின் ஒவ்வொரு endorsement உம் மிக பெரும் பண மதிப்புக்கு உரியது. அவர்கள் யாரோ ஒரு முகம் தெரியாத இலங்கை பாடகியின், சப்பையான ஒரு பாடலை இப்படி முன்னுரிமை கொடுத்து இலவசமாக promote பண்ணும் போதே இதன் பின்னான திட்டம் அம்பலமாகி விடுகிறது.

யாழ் உட்பட தமிழ் தளங்களிலும் தமிழர் மத்தியில் சமூக வலைதளங்களிலும் இதை காவி வந்தவர்களை கூர்ந்து அவதானித்தால் - இந்த சந்தேகம் மேலும் உறுதியாகும்.

யாழில் இந்த சந்தேகம் ஆகஸ்டு 17 அன்றே எழுப்பபட்டுவிட்டது.

 

Edited by goshan_che

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
52 minutes ago, goshan_che said:

யாழ் உட்பட தமிழ் தளங்களிலும் தமிழர் மத்தியில் சமூக வலைதளங்களிலும் இதை காவி வந்தவர்களை கூர்ந்து அவதானித்தால் - இந்த சந்தேகம் மேலும் உறுதியாகும்.

யாழில் இந்த சந்தேகம் ஆகஸ்டு 17 அன்றே எழுப்பபட்டுவிட்டது.

அப்பிடியெண்டால் நாதமுனியர் சிங்களத்தின்ரை அடியாள் எண்டுறியள்? 🤣

 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

அப்பிடியெண்டால் நாதமுனியர் சிங்களத்தின்ரை அடியாள் எண்டுறியள்? 🤣

 

யோகானியின் பாடல், ஐரோப்பா, அமெரிக்கா, ரஷியா, பிரேசில், துருக்கி, பாகிஸ்தான், பங்களாதேஷ் என்று உலகம் முழுக்க பார்க்கிறார்கள். இந்தியாவில் மட்டும் இல்லை.

வெள்ளை, கறுப்பு என்று பேதம் இல்லாமல் பார்க்கிறார்கள்.

15 கோடி பேர் பார்த்து, இன்னும் வளர்கிறது. நான் முன்னரே சொல்லி விட்டேன். இவர் முன்னரும் பாடி உள்ளார். அவை சோபிக்கவில்லை. இனியும் சோபிக்காது என்றே நினைக்கிறேன்.

தனுசின் வை திஸ் கொலைவெறி, ரவுடி பேபி, உலகெல்லாம் பில்லியன் தடவைக்கு அதிகமாக பார்கப்பட்டுள்ளது.

அமிதாப்பச்சன் அதனை promote பண்ணவில்லை. அவரது பேத்தி தான், அவரது நடனத்தினை இந்த பாடலுடன் இணைத்து, வீடியோ வெளியிட்டார். பேத்தியின் திறமையினை புளுகவே அவர் அதனை வெளியிட்டார்.

சும்மா, யாரு ஒரு பைத்தியம், நளின் டீ சில்வா இதுக்கும், ரோவுக்கும் தொடர்பு எண்டவுடன், இங்கே கிளப்பி அடிக்கிறார்கள். 

மொட்டை தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு.  இதைத்தான் சொல்வது, வேலை இல்லாத டெய்லர், பூனைக்கு கோவணம் தைச்சு போட்டு ரசிச்சான், எண்டு.

கொஞ்ச நாளைக்கு இங்கே வராமல் இருப்பம்.... வேலை இருக்குது எண்டு பார்த்தால், வம்புக்கு இழுக்கிறதே வேலையா போச்சுது. 😁

*****

நண்பனின் பார்ட்டியில் சந்தித்த, பயங்கரவாதத்தினை அழித்ததால், நாம் வந்து, ஊர் போய் வரக்கூடியதாக உள்ளது என்று சொன்ன, சிஙகள ராணுவ அதிகாரிக்கு, தீவில் தெலுங்கு நாயக்கர்கள் எப்படி, தமிழர்கள் போல வந்து, சிங்களவர்களுக்கும், தமிழர்களுக்கும் பெரும் பிரிவினையினை உண்டாக்கினர் என்று தெளிவாக்கினேன். அவருக்கு அந்த புரிதல் இருக்கவில்லை. 

அவரது கருத்தினை மாத்திய வகையில் இன்றும் மகிழ்ச்சி.

அதனால், மறுநாள் தேடி வந்து இலங்கையில் போர்த்துக்கேயர் ஆட்சி என்று புத்தகத்தினை பரிசாக, தந்து போனார் என்றும் சொல்லி இருந்தேன். 

இதனை எல்லாம் விட்டு விட்டு, சிங்கள ராணுவ அதிகாரியுடன் தண்ணி அடித்தவர் என்று தூக்கி பிடிக்க முடிகிறது நம்மாளுக்கு. 

SJV செல்வநாயகம் நாயக்கர் இல்லையா என்று திரி திறந்து, தனது திராவிட பாசம் காட்டியவர் நம்மாளு.....

ஆக, நாம் திராவிடர்!!. 🤑

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

அப்பிடியெண்டால் நாதமுனியர் சிங்களத்தின்ரை அடியாள் எண்டுறியள்? 🤣

 

இண்டைக்கு பைட்ஸ் அவ்வளவு உறைப்பா மாட்டேல்லையோ🤣.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் இந்த பாட்டு முதலில் பிரபல்யமாகாதற்கு காரணம் ஏற்கனவே பிரபல்யமாய் இருந்த பாடகர்கள் இந்த பாடலை பிரபல்யப்படுத்த விரும்பவில்லை.
இந்த பாட்டு பிரபல்யமானதற்கு காரணம் குருட்டு அதிஸ்டம் ...கொஞ்ச நாளில் எல்லாம் ஓய்ந்து விடும்...இதில் தமிழர்கள் ஏன் குத்தி முறியினம் என்று தெரியவில்லை.
விருப்பம் என்டால் கேளுங்கோ இல்லாட்டில் பேசாமல் இருங்கோ 

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவரே தெலுங்கர் என்ற நிலையிலிருந்து "தெலுங்கு நாயக்கர், சிங்களவர், தமிழர்"  என்று மூன்று பிரிவுகள் இருப்பதை ஏற்றுக் கொள்ளும் நிலை வந்திருப்பது மகிழ்ச்சி! 😄

(பாட்டைப் பார்க்கவில்லை)

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

சிங்களவரே தெலுங்கர் என்ற நிலையிலிருந்து "தெலுங்கு நாயக்கர், சிங்களவர், தமிழர்"  என்று மூன்று பிரிவுகள் இருப்பதை ஏற்றுக் கொள்ளும் நிலை வந்திருப்பது மகிழ்ச்சி! 😄

(பாட்டைப் பார்க்கவில்லை)

செல்வநாயகம் திரி தன் இலக்கை அடைந்தது 🤣.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Nathamuni said:

அமிதாப்பச்சன் அதனை promote பண்ணவில்லை. அவரது பேத்தி தான், அவரது நடனத்தினை இந்த பாடலுடன் இணைத்து, வீடியோ வெளியிட்டார். பேத்தியின் திறமையினை புளுகவே அவர் அதனை வெளியிட்டார்.

 

 

நானும் இப்படித்தான் நினைத்தேன்..

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, tulpen said:

வை திஸ் கொலை வெறி பாடலில் என்ன இசை நுணுக்கம் இருந்து உலகெங்கும் ட்ரென்ட் ஆனது? 

தேடுதல் இணைய தேடுதல் பொறிமுறை கால மாற்றத்திற்கு ஏற்ப மாற்றமடைந்து வருகிறது, அதாவது முன்பெல்லாம் ஒரு தகவல் தொழில்னுட்பவியலாளரை வேலைகமர்த்தினால் உங்களது இணைய தளத்தினையோ அல்லது இணைய ஒளிப்பதிவு தளத்தினை தேடுதல் பக்கத்தில் முன் பக்கத்தில் கொண்டு வரலாம், ஆனால் இப்போது நிலமை அவ்வாறில்லை, உங்களது சரக்கு தரமாக இருந்தாலும் உங்களால் தேடுதல் பொறிமுறையைத்தாண்டி  வரமுடியாது.

பொதுவாக உங்களுக்கென ஏற்கனவே இணைய விசிறிகள் காணப்படவேண்டும், இதற்கு காரணம் செயற்கை கணனி பார்வை மற்றும் SEO களை தவிர்க்க Google இவ்வாறு நடவடிக்கை எடுக்கிறது.

இதில் கூறப்பட்டுள்ள தமிழ்ப்பாடலுக்கு அந்த வகையான சாதக அமைப்பு காணப்படுகிறதோ தெரியவில்லை, ஆனால் அந்த சாதகமற்ற இந்தப்பாடலை கோசான் கூறியது போல வட இந்திய விசிறிகள் பின்புலம் கொண்டவர்களின் (Organic viewers)  மூலம் இந்த பாடலை திட்டமிட்டு பரப்பப்பட்டிருக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.