Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெறும் கள் வடிக்கும் பன்னாடை அல்ல இது...!

அது வெறும் பூச்சிகளை மட்டும் வடிக்கும்...!

இது கொஞ்சம் வித்தியாசமானது...!

 

மனிதர்களை மட்டும் வடிக்கும் வல்லமை கொண்டது...!

மேலைத் தேசங்களின் மகத்தான கண்டு பிடிப்பு...!

 

மண்டலாவை வடித்த போது...,

கறுப்பன் இவன்...அரைக் காச்சட்டை போதுமென்றது..!

மகாத்மாவை வடித்த போது,

கொஞ்சம் வெளிர் நிறம்..முழுக்காச்சட்டை போடு என்றது...!

அரேபிய அகதிகளுக்கு...,

அதன் வடி கண்களை இறுக்கிப் பிடித்தது,,,!

பாலஸ்தீனக் குழந்தைகள் அழுகையில்...,

தன் காதுகளை முழுதாக மூடியது...!

 

முள்ளி வாய்க்காலில்...,

முகத்தையே மூடியது..!

பன்னாடைக்கு என்ன நடந்தது...?

எல்லோரும் தேடினார்கள்...!

மனித உரிமைகள் சபையில் குந்தியிருந்தது...!

ஒன்று...இரண்டல்ல...,

பத்து வருடங்கள்..!

வேலையில்லாத ஒரு பட்டதாரியைப் போல..!

போர்க் குற்றமா..?

எங்கே நடந்தது...?

புதினம் கேட்டது, பன்னாடை..!

 

உக்ரெயினில் யுத்தமாம்..!

ஓடோடி வந்தது...பன்னாடை..!

தங்கத்தின் நிறத்தில்..தலை மயிர்....!

அங்கத்தின் நிறமோ, வெள்ளை...!

கண்களின் நிறமோ....மரகதம்..!

கச்சிதமாக வடி கட்டி எடுத்தது, பன்னாடை...!

 

உக்ரெயின் யுத்தம் தொடங்கி...,

இன்னும் பத்து நாள் ஆகவில்லை...!

நாலாயிரம் அகதிகள் வருகிறார்களாம்...!

ஆயிரம் பேர் வந்தும் விட்டார்களாம்..!

எவ்வளவு வேகமாகிறது, பன்னாடை..!

 

அகதி முகாமில் பிறந்த குழந்தயை...,

ஆயிரம் கேள்விகள் துளைக்கின்றன...!

அந்தக் குழந்தயை....,

பன்னாடை வடிகட்டாது...!

ஏனெனில்..,

அவள் ஒரு ஈழத்து அகதி...!

 

 

 

 

 

 

Edited by புங்கையூரன்
எழுத்துப் பிழை

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் புங்கை, இந்தப் பன்னாடைகளின் நகர்வு காலவோட்டத்தில்  பாரதத்தையும் பங்கு போடும்போல் இருக்கின்றது.......!

இவைபோன்ற கவிதைகள் சிறப்பு......!  👍

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான கவிதை.. மனிதாபிமானம் பேசும் உலகின் இரட்டைவேடத்தை தோலுரிக்கும் கவிதை..

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, புங்கையூரன் said:

வெறும் கள் வடிக்கும் பன்னாடை அல்ல இது...!

அது வெறும் பூச்சிகளை மட்டும் வடிக்கும்...!

இது கொஞ்சம் வித்தியாசமானது...!

 

மனிதர்களை மட்டும் வடிக்கும் வல்லமை கொண்டது...!

மேலைத் தேசங்களின் மகத்தான கண்டு பிடிப்பு...!

 

மண்டலாவை வடித்த போது...,

கறுப்பன் இவன்...அரைக் காச்சட்டை போதுமென்றது..!

மகாத்மாவை வடித்த போது,

கொஞ்சம் வெளிர் நிறம்..முழுக்காச்சட்டை போடு என்றது...!

அரேபிய அகதிகளுக்கு...,

அதன் வடி கண்களை இறுக்கிப் பிடித்தது,,,!

பாலஸ்தீனக் குழந்தைகள் அழுகையில்...,

தன் காதுகளை முழுதாக மூடியது...!

 

முள்ளி வாய்க்காலில்...,

முகத்தையே மூடியது..!

பன்னாடைக்கு என்ன நடந்தது...?

எல்லோரும் தேடினார்கள்...!

மனித உரிமைகள் சபையில் குந்தியிருந்தது...!

ஒன்று...இரண்டல்ல...,

பத்து வருடங்கள்..!

வேலையில்லாத ஒரு பட்டதாரியைப் போல..!

போர்க் குற்றமா..?

எங்கே நடந்தது...?

புதினம் கேட்டது, பன்னாடை..!

 

உக்ரெயினில் யுத்தமாம்..!

ஓடோடி வந்தது...பன்னாடை..!

தங்கத்தின் நிறத்தில்..தலை மயிர்....!

அங்கத்தின் நிறமோ, வெள்ளை...!

கண்களின் நிறமோ....மரகதம்..!

கச்சிதமாக வடி கட்டி எடுத்தது, பன்னாடை...!

 

உக்ரெயின் யுத்தம் தொடங்கி...,

இன்னும் பத்து நாள் ஆகவில்லை...!

நாலாயிரம் அகதிகள் வருகிறார்களாம்...!

ஆயிரம் பேர் வந்தும் விட்டார்களாம்..!

எவ்வளவு வேகமாகிறது, பன்னாடை..!

 

அகதி முகாமில் பிறந்த குழந்தயை...,

ஆயிரம் கேள்விகள் துளைக்கின்றன...!

அந்தக் குழந்தயை....,

பன்னாடை வடிகட்டாது...!

ஏனெனில்..,

அவள் ஒரு ஈழத்து அகதி...!

 

 

 

 

 

 

அருமையான பகிர்விற்கு நன்றிகள் தோழர்..💐

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, புங்கையூரன் said:

வெறும் கள் வடிக்கும் பன்னாடை அல்ல இது...!

அது வெறும் பூச்சிகளை மட்டும் வடிக்கும்...!

இது கொஞ்சம் வித்தியாசமானது...!

 

மனிதர்களை மட்டும் வடிக்கும் வல்லமை கொண்டது...!

மேலைத் தேசங்களின் மகத்தான கண்டு பிடிப்பு...!

 

மண்டலாவை வடித்த போது...,

கறுப்பன் இவன்...அரைக் காச்சட்டை போதுமென்றது..!

மகாத்மாவை வடித்த போது,

கொஞ்சம் வெளிர் நிறம்..முழுக்காச்சட்டை போடு என்றது...!

அரேபிய அகதிகளுக்கு...,

அதன் வடி கண்களை இறுக்கிப் பிடித்தது,,,!

பாலஸ்தீனக் குழந்தைகள் அழுகையில்...,

தன் காதுகளை முழுதாக மூடியது...!

 

முள்ளி வாய்க்காலில்...,

முகத்தையே மூடியது..!

பன்னாடைக்கு என்ன நடந்தது...?

எல்லோரும் தேடினார்கள்...!

மனித உரிமைகள் சபையில் குந்தியிருந்தது...!

ஒன்று...இரண்டல்ல...,

பத்து வருடங்கள்..!

வேலையில்லாத ஒரு பட்டதாரியைப் போல..!

போர்க் குற்றமா..?

எங்கே நடந்தது...?

புதினம் கேட்டது, பன்னாடை..!

 

உக்ரெயினில் யுத்தமாம்..!

ஓடோடி வந்தது...பன்னாடை..!

தங்கத்தின் நிறத்தில்..தலை மயிர்....!

அங்கத்தின் நிறமோ, வெள்ளை...!

கண்களின் நிறமோ....மரகதம்..!

கச்சிதமாக வடி கட்டி எடுத்தது, பன்னாடை...!

 

உக்ரெயின் யுத்தம் தொடங்கி...,

இன்னும் பத்து நாள் ஆகவில்லை...!

நாலாயிரம் அகதிகள் வருகிறார்களாம்...!

ஆயிரம் பேர் வந்தும் விட்டார்களாம்..!

எவ்வளவு வேகமாகிறது, பன்னாடை..!

 

அகதி முகாமில் பிறந்த குழந்தயை...,

ஆயிரம் கேள்விகள் துளைக்கின்றன...!

அந்தக் குழந்தயை....,

பன்னாடை வடிகட்டாது...!

ஏனெனில்..,

அவள் ஒரு ஈழத்து அகதி...!

 

 

 

 

 

 

புங்கை அண்ணா, நியாயமான ஆதங்கத்தை வெளிப்படுத்திய நல்லதொரு கவிதை 🙏. போரின் வலி, இழப்பு எங்குமே, எல்லோருக்குமே ஒன்றுதான் நீங்கள் கூறிய பன்னாடைகள் போல் அல்லாமல் இருக்க தமிழர்கள் கடவர்கள். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, புங்கையூரன் said:

உக்ரெயினில் யுத்தமாம்..!

ஓடோடி வந்தது...பன்னாடை..!

தங்கத்தின் நிறத்தில்..தலை மயிர்....!

அங்கத்தின் நிறமோ, வெள்ளை...!

கண்களின் நிறமோ....மரகதம்..!

கச்சிதமாக வடி கட்டி எடுத்தது, பன்னாடை...!

 

உக்ரெயின் யுத்தம் தொடங்கி...,

இன்னும் பத்து நாள் ஆகவில்லை...!

நாலாயிரம் அகதிகள் வருகிறார்களாம்...!

ஆயிரம் பேர் வந்தும் விட்டார்களாம்..!

எவ்வளவு வேகமாகிறது, பன்னாடை..!

 

அகதி முகாமில் பிறந்த குழந்தயை...,

ஆயிரம் கேள்விகள் துளைக்கின்றன...!

அந்தக் குழந்தயை....,

பன்னாடை வடிகட்டாது...!

ஏனெனில்..,

அவள் ஒரு ஈழத்து அகதி...!

மேற்குலகின் மேட்டுக்குடி தனத்தை தோலுரித்துக் காட்டும் கவிதை.
நன்றி புங்கையர் 👍

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கின்  ஓரவஞ்சகத்தை தோலுரித்து காட்டும் அற்புதமான கவிதையை வடித்த புங்கையூரானுக்கு நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, புங்கையூரன் said:

மனிதர்களை மட்டும் வடிக்கும் வல்லமை கொண்டது...!

மேலைத் தேசங்களின் மகத்தான கண்டு பிடிப்பு...!

அருமையான கவிதை புங்கையூரன் அவர்களே! ஐரோப்பியர்கள் கைப்பற்றி ஆண்ட, ஆளும் நாடுகளில் இந்தப் பன்னாடையானது, அந்த ஐரோப்பியரை மட்டும் வடித்தெடுத்துப் பாதுகாத்து வருவது கண்கூடு.🧐

Edited by Paanch

  • கருத்துக்கள உறவுகள்

பன்னாடை விரைவில் பல துண்டுகளாக பிரியும்👍, அருமையான கவிதை

நல்ல கவிதை புங்கை. நீண்ட காலத்தின் பின் உங்களின் சுய ஆக்கம் நல்ல கனமான ஒன்றைத் தாங்கி வந்துள்ளது.

மேற்குலக ஊடகங்களால் மூளைச்சலவை செய்யப்பட்டு, மேற்குலகில் வாழ்கின்றோம் என்பதற்காய் அதன் போர்களை நியாயப்படுத்துகின்றவர்கள் கூட இந்த பன்னாடையை போன்றவர்கள் தான். உலகமே ஒரு விதத்தில் இந்தப் பன்னாடை போன்றது தான் - நாம் உட்பட.

  • கருத்துக்கள உறவுகள்

மழை தூறினால் பன்னாடைகள் அவ்வளவாக உபயோகிக்க ஏலாது தானே.அது போல் தான் எல்லாம்.பகிர்வுக்கு மிகவும் நன்றியண்ண..✍️

  • கருத்துக்கள உறவுகள்

பன்னாடையில் பிழையா?

வடிப்பவனின் பிழையா?

தோண்ட தோண்ட பிபி தான் ஏறுது.

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான கவிதை புங்கை. 👍🏽
முதலில்… ஐ.நா. பன்னாடையை, காவோலை போட்டு… கொழுத்த வேணும்.

  • கருத்துக்கள உறவுகள்

காலத்தோடு ஒட்டிய கவி வரிகள். பகிர்வுக்கு நன்றி 

 

உக்ரெயின் யுத்தம் தொடங்கி...,

இன்னும் பத்து நாள் ஆகவில்லை...!

நாலாயிரம் அகதிகள் வருகிறார்களாம்...!

 

இன்றோடு இருபத்தாறு   நாட்களாகி விட்ட்ன 🙂.
 

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, தமிழ் சிறி said:

அருமையான கவிதை புங்கை. 👍🏽
முதலில்… ஐ.நா. பன்னாடையை, காவோலை போட்டு… கொழுத்த வேணும்.

நாட்டில இருந்து காவோலையை இறக்குமதி செய்ய நிறைய செலவாகும் சிறியர்......!

இங்கு பெற்றோல் 0.50 cts கூட்டி விட்டார்கள் என்பதற்காக காவோலையை மலினமாக்கக் கூடாது........!   😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, suvy said:

உண்மைதான் புங்கை, இந்தப் பன்னாடைகளின் நகர்வு காலவோட்டத்தில்  பாரதத்தையும் பங்கு போடும்போல் இருக்கின்றது.......!

இவைபோன்ற கவிதைகள் சிறப்பு......!  👍

உண்மை தான், சுவியர்…!

பாரதமும் எமது பழியைத் தேவையில்லாமல் தேடிக்கொண்டது…! வரவுக்கு நன்றி…!

22 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

அருமையான கவிதை.. மனிதாபிமானம் பேசும் உலகின் இரட்டைவேடத்தை தோலுரிக்கும் கவிதை..

நன்றி, ஓணாண்டியார்…!

நீங்கள் பதிந்த பிராமணன் மச்சம் சாப்பிட்ட கதை இன்னும் தலைக்குள் ஓடிக் கொண்டிருக்கின்றது..! 

22 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

அருமையான பகிர்விற்கு நன்றிகள் தோழர்..💐

வருகைக்கும் , ஊக்குவித்தலுக்கும் நன்றி, தோழர்….!

Edited by புங்கையூரன்
கூகிள்

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களுக்கு ஒரு பிரச்சினை வரேக்கை தான் அவர்களின் இரட்டை வேடம் அப்பட்டமாக தெரிகிறது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 22/3/2022 at 20:08, Sasi_varnam said:

புங்கை அண்ணா, நியாயமான ஆதங்கத்தை வெளிப்படுத்திய நல்லதொரு கவிதை 🙏. போரின் வலி, இழப்பு எங்குமே, எல்லோருக்குமே ஒன்றுதான் நீங்கள் கூறிய பன்னாடைகள் போல் அல்லாமல் இருக்க தமிழர்கள் கடவர்கள். 

வணக்கம் சசி..! தமிழர்கள் போரின் வலியை நன்றாக உணர்ந்தவர்கள்...!

இருப்பினும் வலிக்குக் காரணமானவர்களை இலகுவாக மறந்து விட மாட்டார்கள்!

நிச்சயம் மன்னிப்பார்கள் எனினும் மறந்து விட மாட்டார்கள்! ஏனெனில் அவர்களும் மனிதர்கள்...!

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...!

 

 

On 22/3/2022 at 20:45, குமாரசாமி said:

மேற்குலகின் மேட்டுக்குடி தனத்தை தோலுரித்துக் காட்டும் கவிதை.
நன்றி புங்கையர் 👍

நன்றி, குமாரசாமி அண்ணா...!

மேட்டுக்குடித் தனம் என்பது பொருத்தமான வார்த்தை தான்..!

On 22/3/2022 at 21:28, Paanch said:

அருமையான கவிதை புங்கையூரன் அவர்களே! ஐரோப்பியர்கள் கைப்பற்றி ஆண்ட, ஆளும் நாடுகளில் இந்தப் பன்னாடையானது, அந்த ஐரோப்பியரை மட்டும் வடித்தெடுத்துப் பாதுகாத்து வருவது கண்கூடு.🧐

உண்மை தான், பாஞ்ச்...! அண்மையில் ஒரு காணொலி பார்த்தேன்! அதை இங்கு இணைத்தால் பொருத்தமாக இருக்கும்!

ஆனால் அதில் வரும் சில வார்த்தைகள் யாழ் கள விதிகளை மீறுவதாக உள்ளன!

மிக்க நன்றி, பாஞ்ச்....!

  • கருத்துக்கள உறவுகள்

அஃறிணை பன்னாடைகள் நல்லதை வடிகட்டுவன. 

ஆனால் இந்த உயிரிணை பன்னாடைகள் மனிதாபிமானம் என்ற இன்னொரு பன்னாடையையும் இணத்து வடிகட்டும் பாங்கு இருக்கே. நிலம் வெடிக்காமல் இது அடங்காது.

நன்றி அண்ணா இன்றைக்கு இங்கும் தேவையான கவிதை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 22/3/2022 at 23:01, உடையார் said:

பன்னாடை விரைவில் பல துண்டுகளாக பிரியும்👍, அருமையான கவிதை

பொறுத்திருந்து பார்ப்போமே....உடையார்...!

அந்தக் காலத்தில் வாழக்கிடைத்தது ஒரு அரிய பாக்கியமே...!

நன்றி, உடையார்....!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 22/3/2022 at 23:07, நிழலி said:

நல்ல கவிதை புங்கை. நீண்ட காலத்தின் பின் உங்களின் சுய ஆக்கம் நல்ல கனமான ஒன்றைத் தாங்கி வந்துள்ளது.

மேற்குலக ஊடகங்களால் மூளைச்சலவை செய்யப்பட்டு, மேற்குலகில் வாழ்கின்றோம் என்பதற்காய் அதன் போர்களை நியாயப்படுத்துகின்றவர்கள் கூட இந்த பன்னாடையை போன்றவர்கள் தான். உலகமே ஒரு விதத்தில் இந்தப் பன்னாடை போன்றது தான் - நாம் உட்பட.

நன்றி...  நிழலி...!

நீங்கள் கூறிய படியே...நாமெல்லாம் கூட, எம்மையறியாமலே மூளைச் சலவை செய்யப் பட்டுக் கொண்டேயிருக்கின்றோம் என்பது தான் உண்மை...! யாழ் களத்தில் இப்போது எழுதுவது, மிகவும் இலகுவாக உள்ளது...! தொடர்ந்து எழுதலாம் என உத்தேசித்துள்ளேன்!

யாழுக்கு வெறும் வயது மட்டும் போகவில்லை..! அவள் தன்னைத் தானே, மேலும்...மேலும் மெருகூட்டிய படியே வளர்கின்றாள்..!

இதற்கான பெருமை முழுவதும்...மோகனுக்கும், மட்டுறுத்துனர்களுக்கும், தினமும் வந்து போகின்ற கள உறுப்பினர்களுக்கும், அதன் அடித்தளமாக உள்ள வாசகர்களுக்கும் உரியது என்பதில் கருத்து வேறுபாடு இருக்க முடியாது...!

  • கருத்துக்கள உறவுகள்

வித்தியாசமாக இருக்கின்றது கவிதை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 23/3/2022 at 02:00, யாயினி said:

மழை தூறினால் பன்னாடைகள் அவ்வளவாக உபயோகிக்க ஏலாது தானே.அது போல் தான் எல்லாம்.பகிர்வுக்கு மிகவும் நன்றியண்ண..✍️

உண்மை தான் யாயினி...! வரவுக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி....!

On 23/3/2022 at 02:10, ஈழப்பிரியன் said:

பன்னாடையில் பிழையா?

வடிப்பவனின் பிழையா?

தோண்ட தோண்ட பிபி தான் ஏறுது.

எனக்கும் அது தான் பிரச்சனை..! அதுக்காகத் தான் இப்பவெல்லாம் அடக்கி வாசிக்கிறது...!

நன்றி....ஈழ்ப்பிரியன்...!

On 23/3/2022 at 03:10, தமிழ் சிறி said:

அருமையான கவிதை புங்கை. 👍🏽
முதலில்… ஐ.நா. பன்னாடையை, காவோலை போட்டு… கொழுத்த வேணும்.

பன்னாடையில் பிரச்சனை இல்லை, சிறியர்...! அதன் பார்வையின் தான் கோளாறு உள்ளது...!

உக்ரெயினில் ஐ.நா.பன்னாடை செய்யவேண்டியதெல்லாம்....ஒழுங்காத் தானே செய்யுது...!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 23/3/2022 at 03:24, நிலாமதி said:

காலத்தோடு ஒட்டிய கவி வரிகள். பகிர்வுக்கு நன்றி 

 

உக்ரெயின் யுத்தம் தொடங்கி...,

இன்னும் பத்து நாள் ஆகவில்லை...!

நாலாயிரம் அகதிகள் வருகிறார்களாம்...!

 

இன்றோடு இருபத்தாறு   நாட்களாகி விட்ட்ன 🙂.
 

நன்றி...நிலாக்கா...! 

கவிதை எழுத நினைச்ச போது....பத்து நாள் தான் முடிஞ்சிருந்தது...!😁

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.