Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம் பெயர் அப்பனும் வெளிநாட்டு பிள்ளையும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
புரட்டாதி  30
எனது பிறந்தநாள்.
முதல் நாள் இரவு  10 மணியளவில் நானும் எனது இரண்டாவது மகனும் கடையைப்பூட்டிவிட்டு காரில் புறப்படுகின்றோம்.
 
அவர் தொலைபேசியில் குறும் செய்தி  அனுப்பியபடி வருகின்றார்.  இடையில் அப்பா வீட்டுக்கு கொஞ்சம் தள்ளி  என்னை இறக்கிவிடமுடியுமா என்று கேட்கின்றார். எதற்கு? அதுவும் இந்த நேரத்தில்?? இது நான்.
எனது  நண்பர் ஒருவரை சந்திக்கணும்  சில நிமிடங்கள் மட்டுமே.
சரி   கெதியாக வா என்ற படி பயணம் தொடர்கிறது. 
 
இடையில் யாரிடம் போறாய்?  என்ற  கேள்விக்கு  தன்னுடன் படித்த பெண் வீட்டுக்கு என்று பெயரையும் சொல்கின்றார். அந்தப்பிள்ளை  பற்றி  முன்பும் கேள்விப்பட்டிருக்கின்றேன்.  வகுப்பில் எப்பொழுதும் முதலிடம்.  உயர் தரத்திலும் எல்லா பாடத்திலும் திறமைச்சித்தி  பெற்றவர்.  வைத்தியத்துறைக்கு வந்தும் பாண் கேக் செய்யும் துறையை (patisserie)  தெரிந்து எடுத்தார் என அறிந்தேன். 
 
எம்மைப்போல் அகதியாக வந்தவர்கள்.  சொந்த நாடு கம்பூச்சியா. 3 பெண்களில் இவர் 2வது.
 
அருகாமையில் வந்ததும் இடத்தை சொல்கிறார்.  அவர் சொன்ன வீட்டுக்கு அண்மையில் போனதும்.  மழை  பெய்கிறது.  எப்படி வரப்போகின்றாய்?
முடியுமென்றால் கொஞ்சம் வெயிற் பண்ணுங்கோ ஓடி வாறன்.
சரி  நிற்கிறன்  கெதியா வா இது நான்.
 
இனித்தான் விசுகுவின் இன்னொரு முகம் தெரியப்போகுது.
 
போனவரை
5 நிமிடம்
 
10 நிமிடமாக காணவில்லை.
அப்பனின் மனம் மரத்தில் ஏறத்தொடங்கியது.
 
ஏதோதோ  யோசனைகள்
 
சீ அப்படி இருக்காது
 
15 நிமிடம்
அப்பனையே  காவலுக்கு வைத்துவிட்டு...........??
சீ சீ............
 
எண்ணிக்கொண்டிருக்கும்போது ஆள் ஒரு பையுடன் வந்து பையை பின் சீற்றில் வைத்துவிட்டு முன்னால் வந்து ஏறுகின்றார்.
 
பயணம் தொடர்கிறது.   எனக்குள் ஒரு குற்ற உணர்வு.  வேறு கதைகளைக்கதைத்தபடி வீடு வந்து சேர்கின்றோம்.
 
வீட்டை வந்ததும் பெரியவனிடம் ஒரு படம் போடு பார்க்கப்போறன் என்றவுடன் அவன் படத்தைப்போட்டுவிட்டு தங்களது அறைகளுக்கு போய் விட்டனர்.
 
சரியாக 12 மணி அடிக்க
மெழுகுதிரி  வெளிச்சத்துடன் கேக்குடன் 5  பேரும் வருகிறார்கள்.  பிறந்த நாள் வாழ்த்துக்கள் அப்பா என எல்லோரும் கொஞ்சி  கேக் வெட்டி ஆளாளுக்கு பரிசுகளும் தந்து படம் எடுத்தாச்சு.
கேக்கை வெட்டி  சாப்பிட்டாச்சு. 
 
கேக் நல்ல ருசியாக இருக்கிறது என்று என்றுமில்லாதவாறு   பல துண்டுகளை சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது தான் மகன் கேட்டான்.
இந்த கேக் எப்படி வந்தது தெரியுமா என்று? 
இல்லையே.
எனது நண்பி  செய்து தந்தார்.
அதை எடுக்கத்தான் அபபோது போயிருந்தேன்.
அதை உங்களுக்கு தெரியாமல் கொண்டு வந்து சேர்க்கத்தான் கொஞ்சம் நேரம் அதிகமெடுத்தது.
 
எனக்கு தலையில் யாரோ ஓங்கி  குட்டியது போலிருந்தது.
 
உண்மையில் ஒட்டமுடியாத தூரத்தில் இரு பருவங்கள்.
  
  • Replies 77
  • Views 6.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது........... இந்த தவறைத்தான் பல பெற்றோர்கள் செய்கிறார்கள்.. :(

 

தமது இரத்தம், தனது பிள்ளை வளர்ப்பில் நம்பிக்கை இருந்தால் இப்படியான எண்ணங்கள் வராது.

 என்ன செய்யிறது விசுகு
உங்கள் மகனின் வயதில் நீங்கள் என்ன செய்தீங்களோ அதே மனநிலையிலை மகனையும் நினைச்சிருக்கிறீங்கள். அவ்வளவுதான். :icon_idea: :icon_idea:

இது........... இந்த தவறைத்தான் பல பெற்றோர்கள் செய்கிறார்கள்.. :(

 

தமது இரத்தம், தனது பிள்ளை வளர்ப்பில் நம்பிக்கை இருந்தால் இப்படியான எண்ணங்கள் வராது.

 

ஜீவாவின் கருத்தே எனதும்.  பிள்ளைகள் வழிதவறிப் போவதற்கு முக்கிய காரணமே இந்த சந்தேகக் குணம்தான்.  பிள்ளைகள் வளர்ந்தபின்னர் பிள்ளைகள் பெற்றோரிடையே இடைவெளி வருவதற்கும் இது காரணமாகிவிடுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா நினைத்ததில் தவறில்லை. பெற்றோர் அந்தவயதில் பிள்ளைகளாக மாறவே முடியாது. :D

  • கருத்துக்கள உறவுகள்

பல வேளைகளில், தேவையில்லாமல், சுமைகளை நாங்களே எம்மீது ஏற்றிக் கொள்கிறோம்!

 

சிவன் கூட முருகனிடம் தான் பாடம் கற்றான்!

 

வெட்கப் படத் தேவையில்லை! பெருமைப் படுங்கள்! :D

 

 

விசுகு அண்ணா நினைத்ததில் தவறில்லை. பெற்றோர் அந்தவயதில் பிள்ளைகளாக மாறவே முடியாது. :D

 

பெற்றோர் பிள்ளைகளின் வயதைக் கடந்து வந்தவர்கள்.  ஆகவே அவர்கள் பிள்ளைகளாக நிச்சயமாக மாறலாம்.  ஆனால், பிள்ளைகள் எப்போதும் பெற்றோரின் வயதைக் கடந்தவர்களாக இருக்க முடியாது.  அப்படியிருந்தும் இந்தக் காலத்துப் பிள்ளைகள் பலர் பெற்றோரின் நிலையிலிருந்து சிந்தித்துச் செயற்படுகிறார்கள்.  ஆனால் பெற்றோர்கள்??????????????????

  • கருத்துக்கள உறவுகள்
இது........... இந்த தவறைத்தான் பல பெற்றோர்கள் செய்கிறார்கள்.. :(

 

தமது இரத்தம், தனது பிள்ளை வளர்ப்பில் நம்பிக்கை இருந்தால் இப்படியான எண்ணங்கள் வராது.

 

உங்கள் பெற்றோர் உங்கள் மேல் வைத்த நம்பிக்கையை நீங்கள் காப்பாற்றினீங்களா ஜீவா?[மன்னிக்கவும்]

  • கருத்துக்கள உறவுகள்

இதை வெளிப்படையா எழுதுவதற்கே பெரிய மனசு வேணும் அண்ணா

  • கருத்துக்கள உறவுகள்
இனித்தான் விசுகுவின் இன்னொரு முகம் தெரியப்போகுது. 

 

இதுதான் விசுகு ஐயாவின் சொந்த முகம் <_<

 

பிள்ளைகள் வளர்ந்து பக்குவமாக இருந்தாலும் பெற்றோர்களுக்கு அவர்கள் குழந்தைப் பிள்ளைகளாகவே தெரிவார்கள்.  அதனால்தான் அவர்களை தொடர்ந்தும் வழிநடத்தவேண்டும் என்று விரும்புகின்றார்கள் போலும்..

இதுதான் விசுகு ஐயாவின் சொந்த முகம் <_<

 

பிள்ளைகள் வளர்ந்து பக்குவமாக இருந்தாலும் பெற்றோர்களுக்கு அவர்கள் குழந்தைப் பிள்ளைகளாகவே தெரிவார்கள்.  அதனால்தான் அவர்களை தொடர்ந்தும் வழிநடத்தவேண்டும் என்று விரும்புகின்றார்கள் போலும்..

உண்மை கிருபன் அண்ணா ..............வயதில் ,அனுபவத்தில் சிறியவனாய் இருந்தாலும் .......என்னுள்ளும் அதே எண்ணமே உள்ளது ..............ஏனனில் என்னை எனது தந்தை தாய் வளர்த்த பின்னோட்டத்தை என்னால் மறக்க முடியாமலுள்ளது ........அன்று அவர்கள் அப்படி வளர்த்ததால் நான் இன்று சாதாரண மனிதன் என்னும் வரம்புக்குள் வாழ முடிகிறது .............ஆனால் இந்த புலம்பெயர் வாழ் வாழ்க்கையில் முற்றிலும் மாறுபட்ட ஒரு சவால் நிறைந்த பகுதியில் ,இடத்தில் ,இரண்டு கலாச்சாரங்கள் நிறைந்த இந்த புண்ணிய பூமியில் ................ சொல்ல வார்த்தைகள் வரவில்லை ...ஆனாலும் முயற்சிப்போம் .........ஒருவர் அனுபவத்தை மற்றவருடன் பகிர்ந்து கொள்வோம் .அந்த வகையில் வி அண்ணாவுக்கு நன்றிகள் ...................கடினமான ,ஆனால் உண்மைகள் நிறைந்த பாதையூடு பயணிக்க முயற்சிப்போம் ..
  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் சிறீலங்காவில் அநேக பிள்ளை வளர்ப்பிற்கும்.. மேற்குலகில் உள்ள வளர்ப்பிற்கும் உள்ள வேறுபாடு.

 

மேற்கு நாடுகளில் நண்பி என்றால் நண்பி தான். அதுக்குள்ள வேறையை செருகிறதில்ல நாங்க. கேர்ள் பிரண்ட் என்றால் கேர்ள் பிரண்டு என்று சொல்லுவம். அதை மறைக்கனுன்னு அவசியம் இல்லை. ஆனால் சிறீலங்காவில.. கேர்ள் பிரண்டை பிரண்டு.. என்று சொல்லி சமாளிச்சு.. அந்தப் பொய் பித்தலாட்டம்.. வளர்ந்தும் போறதில்ல. அதையே பிள்ளைகளிடமும் எதிர்பார்க்கிறது தப்பு. ஏன்னா.. இங்க சூழலும் வளர்ப்பு முறையும் வித்தியாசம். வீட்டில நீங்க உங்களுக்கு விரும்பிற வடிவில வளர்க்கிறதா நினைக்கலாம்.. ஆனால் உண்மையில் பிள்ளைகள் பள்ளியில் தான் அதிகம் சூழலுக்கு இசைவாக்கப்படுகின்றன. இங்குள்ள பள்ளிகளுக்கும் பெற்றோருக்கும் உள்ள இடைவெளிதான் இந்த கருத்து வேற்றுமைக்குக் காரணம். நீங்களும் இங்க படிச்சிருந்தா... நிச்சயம் இப்படி நினைக்கமாட்டீங்க.. விசுகு அண்ணா.

 

இது உங்க தப்பும் இல்ல. உங்களை வளர்த்த சமூகம் சூழல் அப்படி..!  :lol: உண்மைச் சம்பவத்தை சுய தவறை உணர்ந்து தரும்.. நல்ல பகிர்வு..! இந்த மனநிலை எல்லோருக்கும் வராது..! இது  நீங்கள் மற்றவர்களில் இருந்து மாற்றி யோசிக்க செய்வதை இனங்காட்டுகிறது. இதுவே உங்களை பிள்ளைகளுக்கு குடும்பத்திற்கு நல்ல விடயமும் கூட..! :icon_idea::)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
உங்கள் பெற்றோர் உங்கள் மேல் வைத்த நம்பிக்கையை நீங்கள் காப்பாற்றினீங்களா ஜீவா?[மன்னிக்கவும்]

 

சிக்கலான கேள்வி, ஆனால் இந்த நொடி வரை முயற்சி செய்கிறேன் என்று தான் சொல்லுவேன்.

ஆனால் வெளிநாடு போக வேண்டும் என்று தீர்மானித்தது நான் அல்ல, நான் வரவேண்டிய காரணமும் அவர்களுக்கு தெரியும். நீ இங்கை இருப்பதை விட எங்கையாவது முதல் போ என்று சொல்லி அனுப்பியது அவர்கள் தான். காதல் என்ற ஒரு விடையத்தை தவிர்த்து வேறு எதிலும் நான் அவர்கள் அவநம்பிக்கை கொள்ளும்படி நடக்கவில்லை. 

 

இன்னொருத்திக்கு நம்பிக்கை துரோகம் செய்து தான் என் வீட்டார் என் மீது வைத்த  நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என்ற சூழ்நிலையில் நான் செய்தது பிழையாக இருந்தாலும், ஏதோ ஒரு விதத்தில் என்னை நானே திருப்திபட்டுக்கொள்ளவும் முடிகிறது அக்கா. :(

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளைகளது உணர்வுகளை மதிப்பதற்கான, ஒரு நல்ல விடையத்தை தான்கள் பதிவு செய்திருக்கிறேர்கள். அண்மையில் ஒரு முகநூல் செய்தியொன்று, குப்பிளானைச் சேர்ந்த இளஞன் ஒருவர் விபத்தில் அண்மையில் இறந்துபோனார், அவரது பிரிவுபற்றி எனது முகநூல் நண்பராகவுள்ள பெண்  ஒருவர், "எனது ஆருயிர் நண்பனுக்குக் கண்ணீர் அஞ்சலி" என இடுகை இட்டிருந்தார், அப்பெண்ணிற்கு வேறொரு பையனுடன் திருமணம் நிச்சயிக்கப் பட்டிருக்கின்றது இருந்தும் மனதில் பட்டதை துணிந்தும் நேர்மையுடனும் தெரிவித்திருந்தாள். இதேபோல் புலம்பெயர் தேசங்களில் வாழும் எம்மவர்களது பெண்பிள்ளைகள், தமது ஆண் நண்பர் ஒருவரது இழப்பிற்காக மனதில் பட்டதை சொல்லில் ஏற்றி தமது கருத்தினை பதிவு செய்யமுடியுமா எனும் வினா அவ்விடுகயை வாசித்தவுடன் எனது மனதுக்குள் தோன்றியது. பகிந்துகொண்டைமைக்கு நன்றிகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
சிக்கலான கேள்வி, ஆனால் இந்த நொடி வரை முயற்சி செய்கிறேன் என்று தான் சொல்லுவேன்.

ஆனால் வெளிநாடு போக வேண்டும் என்று தீர்மானித்தது நான் அல்ல, நான் வரவேண்டிய காரணமும் அவர்களுக்கு தெரியும். நீ இங்கை இருப்பதை விட எங்கையாவது முதல் போ என்று சொல்லி அனுப்பியது அவர்கள் தான். காதல் என்ற ஒரு விடையத்தை தவிர்த்து வேறு எதிலும் நான் அவர்கள் அவநம்பிக்கை கொள்ளும்படி நடக்கவில்லை. 

 

இன்னொருத்திக்கு நம்பிக்கை துரோகம் செய்து தான் என் வீட்டார் என் மீது வைத்த  நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என்ற சூழ்நிலையில் நான் செய்தது பிழையாக இருந்தாலும், ஏதோ ஒரு விதத்தில் என்னை நானே திருப்திபட்டுக்கொள்ளவும் முடிகிறது அக்கா. :(

 

இது உணர்வுபூர்வமான பதில், விஞ்ஞான ரீதியான விளக்கங்களை எழுதவில்லை, காரணம் எல்லாருக்கும் தெரிந்ததனால்.

நீங்கள் வாழ்ந்த சூழல், பார்த்த திரைப்படங்கள் உங்களை அப்படி எண்ண வைத்தாலும், உங்கள் மனகட்டுபாடோடு உங்கள் மகனிடம் அது குறித்து கேள்வி கேட்காதாது உங்கள் பெருந்தன்மையை காட்டுகிறது.

 

அதே வேளை இதே புலம்பெயர் நாட்டில் பாலுறவு வைத்தல், போதைக்கு அடிமையாதல் தப்பில்லை என்ற உணர்வில், நண்பிகளுடன் உடலுறவு கொள்ளும், போதைவஸ்து உட்கொள்ளும்  பிள்ளைகளும் உண்டு என்பதும் மறுபதற்கு இல்லை.  

 

வெளிப்படையான உங்கள் அனுபவத்துக்கு பாராட்டுகள் விசுகு அண்ணா .

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு அனுபவ பகிர்வை தந்த விசுகுக்கு நன்றிகள்.இன்றைய காலகட்டத்தில் புலத்திலும் சரி தாயகத்திலும் சரி நல்லதொரு பிரஜயை உருவாக்குவது என்பது பெற்றோரின் கையில் தங்கியுள்ளது....

  • கருத்துக்கள உறவுகள்

இத்தகைய பிணைப்பு அவர்களை நல் வழியில் இட்டுச் செல்லும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் விசுகர்! நீங்களும் ஒரு சாதாரண தகப்பன் தான். ஒழுங்கான பெற்றோருக்கு இருக்க வேண்டிய உணர்வுகள்.

  • கருத்துக்கள உறவுகள்
தற்போதைய இளையோர்கள் பரந்து தூர நோக்கோடு சிந்திக்கிறார்கள்(பலர்). பெற்றோர் தமது பிள்ளைகள் தவறான வழியில் போகக்கூடாது என்பதில் கவனமாக இருத்தல் தவறில்லை. உங்கள் மகன் உங்கள் நிலையில் (பெற்றோர்) எனும் நிலை வரும்  போது  நீங்கள் நினைத்தது போல் நினைக்க மாட்டார் என்று சொல்ல முடியாது.
 
என்னுடன் வேலை செய்யும் வெள்ளை தாய் பாடசாலை விடுமுறையில் அடிக்கடி வீட்டுக்கு போன் செய்வார்.எல்லாம் ஓகேயா என நான் கேட்க அவர் தன்னுடைய ரீன் ஏஜ் பெண் என்ன செய்கிறார் என அடிக்கடி செக் பண்ணுவதாக கூறுனார்.  அப்படி என்ன செய்யப்போகிறார்கள் என்று நான் கேட்க தான் கல்லூரி நாட்களில் செய்த கூத்துக்களை தனது பிள்ளையும் செய்து விடுமோ என படபடப்புடனும், வெட்கத்துடனும் கூறினார். விசுகு அண்ணாவின்  சந்தேகத்துக்கான காரணம் இப்போ விளங்குகிறது.  :)  :)
  • கருத்துக்கள உறவுகள்

இனித்தான் விசுகுவின் இன்னொரு முகம் தெரியப்போகுது.

 
போனவரை
5 நிமிடம்
 
10 நிமிடமாக காணவில்லை.
அப்பனின் மனம் மரத்தில் ஏறத்தொடங்கியது.
 
ஏதோதோ  யோசனைகள்
 
சீ அப்படி இருக்காது
 
15 நிமிடம்
அப்பனையே  காவலுக்கு வைத்துவிட்டு...........??
சீ சீ............

 

எல்லா தமிழ் தந்தைகளிலும்... உள்ள சந்தேகம், விசுகுக்கும்... ஏற்பட்டதில் வியப்பில்லை.

எப்படிக் கட்டுப்பாடாக... வளர்த்தாலும், குறிப்பிட்ட வயது தாண்டு மட்டும் தாயோ... தகப்பனோ... மடியில் நெருப்பை கட்டிக் கொண்டு இருக்க வேணும்.

  • கருத்துக்கள உறவுகள்
விசுகு அண்ணா நினைத்ததில் தவறில்லை. பெற்றோர் அந்தவயதில் பிள்ளைகளாக மாறவே முடியாது. :D

 

விசுகருக்கு... பயங்கர உள்குத்து விழுந்திருக்கு. :D  :lol:  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

விறுவிறுப்பாய் சென்றது கதை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதை கதை எண்டு சொல்லேலாது . தாய்தகப்பன் பிள்ளையளிலை ஒரு கண் வைக்கத்தான் வேணும் . அது பிள்ளையளுக்கு தெரியாமல் இருக்கவேணும் . இல்லாட்டில் எப்பவுமே ஒரு இடைவெளி இருக்கும் .

அந்த நேரம் உங்கள் மனதில் வந்ததை வெளிப்படையாக எழுதியுள்ளீர்கள் .

ஆணும பெண்ணும் கதைத்தாலே அதுக்குத்தான் என நினைக்கும் ஒரு கலாச்சாரத்தில் இருந்து வந்துவிட்டோம்  அப்படிதான் நினைக்க சொல்லும் .

ஆனால் பலர் இப்போ அந்த நிலையில் இல்லை என நினைக்கின்றேன் .கரீபியன் தீவுகள் ,அமெரிக்கா ,இந்தியா என்று எமது பெண்பிள்ளைகளே தனிய படிக்க போய்விடுகின்றார்கள் ,இப்படி எல்லாம் நினைத்துக்கொண்டு இருக்கமுடியாது .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.