Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆச்சியும், தேசிக்காயும்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

sudharsana.jpg

[size=4]அன்றைக்குச் சனிக்கிழமை![/size]

[size=4]ஆச்சிக்குக் கொஞ்சநாளா மனம் சரியில்லாமல் இருந்தது![/size]

[size=4]மாமா, ஆச்சிக்கு ஒரே மகன். அவரும் கொழும்பில இருந்து வந்திருந்தார். அவர் வரப் போறது, என்டாலே ஆச்சிக்கு, ஒரு பத்து வயது குறைஞ்சு போயிரும்! இவ்வளவுக்கும் மாமா, ஒரு ஆம்பிளை என்டதைத் தவிர வேற ஒன்டுமே பெரிசா, வெட்டி விழுத்தினதா, எனக்கு நினைவில் இல்லை,[/size]

[size=4]மாமாவும், ஆச்சி வெங்காயக் கூடையும், பாயும் இழைச்சுச் சேர்த்த காசுக்கு ஒரு வழி பண்ணும் வரையும் கொழும்புக்குத் திரும்பிப் போக மாட்டார்![/size]

[size=4]மாமா செய்த பெரிய காரியங்கள் பற்றி ஆச்சிக்கு எப்போதும் பெருமை![/size]

[size=4]அதில் ஒன்றை, மட்டும் சொல்லிக் கதையைத் தொடர்கிறேன்![/size]

[size=4]அந்தக் காலத்தில, எங்கள் ஊரில் ஆம்பிளைப் பிள்ளை, பிறந்தால், உலக்கை எறிவது வழக்கமாம்! [/size][size=4]நான் பிறந்த செய்தி கேட்டதும், மாமா ஒரு உலக்கையை எறிந்தாராம். அதுவும் இரண்டு, மூண்டு வளவு தாண்டிப் போய் தூரத்தில் விழுந்ததாம். ஆச்சி, வளவுகள் கொஞ்சம் சின்னனா இருந்திருக்கும் போல என்று நான் சொல்ல, ஆச்சிக்குப் பெரிய கோபம் வந்தது எனக்கு இன்றும் நினைவில் இருக்கின்றது![/size]

[size=4]ஆச்சிக்குக் கொஞ்சம் சந்தோசம் வரட்டும் என நினைத்து, எனது ஒன்று விட்ட அக்காவுக்கு, முதல் ஆம்பிளைப் பிள்ளை பிறந்த போது, நானும் ஒரு உலக்கையை எடுத்து, 'ஜவலின்' எறியிற மாதிரி எறிய, அது அடுத்த வீட்டுக் கிணத்தில குளிச்சுக் கொண்டிருந்த, அக்காவின்ர தலைக்குக் கிட்ட போய், கிணத்தடியில விழுந்திட்டுது! பிறகு அந்த மாமா, என்னை அடிக்கத் திரிய, ஆச்சியிடம் அடைக்கலம் கேட்க வேண்டி வந்திட்டுது! அதுக்குப் பிறகு, ஆச்சி இந்த உலக்கைக் கதையைக் கதைக்கிறது குறைவு![/size]

[size=4]மாமா கடற்கரையிலிருந்து வாங்கின 'ஓரா' மீன்களை, பனை ஈக்கில் கோர்த்தபடி, ஆச்சியிட்டைக் குடுத்து, இதை இண்டைக்குக் காச்சித் தாணை, எண்டதும் ஆச்சி மீனைக் கழுவத் தொடங்கினா! வழக்கமாக, அந்த முருக்க மரத்துக்குக் கீழதான், அந்த மீன் வெட்டுற கத்தி, ஒரு பலகையில், செங்குத்தாகப் பூட்டப்பட்ட படி இருக்கும்! மீனைச் சுத்தப் படுத்தியபின், அந்தத் தண்ணியை, ஆச்சி அந்த முருக்க மரத்தடியில் எத்துவது வழக்கம்! அண்டைக்கும் வழக்கம் போல, தண்ணியை வீசியபோது, அந்தக் கறுத்தப் பூனையும், வழக்கம் போல அந்த இடத்துக்கு வந்து, தனது தினசரிக் குளிப்பை முடித்துக் கொண்டது! அப்போது தான், ஆச்சியின் கண்ணில், அந்தத் தேசிக்காய், கண்ணில் பட்டிருக்க வேண்டும்! [/size]

[size=4]அண்டைக்குப் பின்னேரம், ஆச்சியும் மாமாவும், அடிக்கடி குசு குசுத்துக் கொண்டார்கள்! நானும், மாமா, ஆச்சியிடம் பணம் பறிக்கிறதுக்கு, என்னவோ கதையளக்கிறார் என, அதனைப் பெரிது படுத்தவில்லை! எனது கவனம் முழுவதும், ஆச்சி அண்டைக்கு வைக்கப் போகும் மீன் குழம்பிலேயே இருந்தது! மத்தியானம், ஆச்சி வைச்ச மீன் குழம்போடையும், பருப்போடையும், சாப்பிட்டு விட்டுத் தூங்கப் போய் விட்டேன்! நல்ல நித்திரை போல கிடக்கு! முழிக்கும் போது, பின்னேரமா, அல்லது விடியக் காலமையா என்று தெரியாமல் இருந்தது! ஆச்சி, அரிக்கன் லாம்புச் சிமினியைத் துடைக்கிறதைப் பார்த்துப், பின்னேரம் தான் என உறுதிப் படுத்திக் கொண்டேன்![/size]

[size=4]கொஞ்ச நேரத்தில, வீட்டுக்குக் கொஞ்சம் வயசு போன ஆக்கள் வரத் துவங்கிச்சினம்! அதில் ஒருவரை, எனக்கு, நன்றாகத் தெரியும்! அவரும், அவரோட வந்த ரெண்டு பேரும், வீடு வளவெல்லாம், சுத்திச் சுத்தி என்னவோ தேடின மாதிரிக் கிடந்தது. பிறகு, ஆச்சி கொடுத்த சுளகில, அமெரிக்கன் மாவால, இரண்டு பொம்மை மாதிரி உருவங்கள் செய்து, அதுகளுக்குக் கண்ணும், மூக்கும் கீறி, ஒரு மீசையும் கீறிச்சினம்! எனக்கு மெல்ல,மெல்ல என்னவோ விளங்கின மாதிரி இருக்க, ஆச்சியைக் கூப்பிட்டேன்! ஆச்சியும், சின்னப் பிள்ளையள் எல்லாம், இதுக்குள்ள வரக் கூடாது, என்று கண்டிப்பாகச் சொல்லிப் போட்டா! சரி, என்ன நடக்கிறது என்று பாப்பம் என நினைத்துக் கொண்டு நானும் ஒரு மூலைக்குள்ள ஒதுங்கிக் கொண்டேன்! அப்போது மாமாவும், ஒரு பெரிய நீத்துப் பூசணிக்காயோட வந்து சேர்ந்தார்![/size]

[size=4]ஒரு பெரியவர், மிகவும் கணீரென்ற குரலில், ' மூன்றாம் பருவமடி! காளி! காளி! என்று ஏதோ பாடத் தொடங்கினார்! இவர் தான், ஊரில ஆருக்கும், பாம்பு அல்லது புலிமுகச் சிலந்தி கடித்தால், 'பார்வை' பார்க்கிறவர்! எல்லோரும் பயத்துடன் அவரைப் பார்த்துக் கொண்டிருக்க, அவர் உரத்த குரலில், ஏதோ பாடிக் கொண்டேயிருந்தார்! அவரது வாயிலிருந்து, பாட்டுடன் சாராய நெடியும் வந்து கொண்டிருந்தது!பிறகு, கொஞ்சம் வேப்பமிலையை, எடுத்துக் கொண்டு வளவுக்குள் ஓடினார்! அவருக்குப் பின்னால, அவற்றை இரண்டு உதவியாளர்களும் ஓட, மாமாவும், அரிக்கன் லாம்பையும் தூக்கிக் கொண்டு அவர்களுக்குப் பின்னால் ஓட, நானும் ஓடினேன்! பின்னர் ஒரு இடத்தைக் காட்டி, இஞ்சை, இஞ்சை என்று கத்தினார்! அவரோட வந்த ஆக்களும், அலவாங்காலும், மண் வெட்டியாலும் அங்கே கிண்டினார்கள்! உடனே பெரியவர், இஞ்சயில்லை இன்சையில்லை எண்டு சொல்லி இன்னொரு இடத்தைக் காட்டினார்! பிறகு அதுகும் இல்லையென்று, மூன்றாவது இடத்திற்கு ஓடினார்! காளிப் பாட்டு மட்டும், அவரது வாயிலிருந்து தடையில்லாமல் வந்து கொண்டே இருந்தது. அத்துடன் கொஞ்சம் நுரையும், வந்து கொண்டிருந்தது! அவருடன் வந்தவர்கள், அங்கு முதலில் மண் வெட்டியாலும், பின்னர் இன்னொருவர் ஒரு வாளியால் தண்ணீரூற்ற, பின்னர் அலவாங்காலும் கிண்டினர்! கடைசியாகப் பெரியவர், இது தான், இது தான் என்று கூச்சலிட, உதவியாளர்கள், ஒரு செப்புத் தகடு ஒன்றை, அந்தக் கிடங்கிலிருந்து வெளியே எடுத்தனர்! ஆச்சியின் முகத்திலும், மாமாவின் முகத்திலும் ஒரு சிரிப்பு, ஒரே நேரத்தில் வெளிப்பட்டது! அந்தச் செப்புத்தகட்டில், சூரியன், சந்திரன், மற்றும் எனக்குத் தெரிந்திராத பல கிரகங்களின், படங்களும் கீறப் பட்டிருந்தது![/size]

[size=4]பின்பு பெரியவர் அமைதியானார்! அந்த நீத்துப் பூசணிக்காயை, இரண்டாகப் பிழந்து அதற்குக் குங்குமப் பொட்டும் வைத்தார்! பின்னர், சுளகில் இருந்த இரண்டு மாவால் செய்யப்பட்ட உருவங்களுக்கும், கறுப்புப் புள்ளிகள் போட்டு, அதைக் கொண்டு போய்க் கடலில் போடும்படி மாமாவிடம் கொடுத்தார். மாமாவும், பய பக்தியாக, அந்தச் சுளகுடன், நீத்துப் பூசணிக் காயையும், வாங்கிக் கொள்ள, சில ரூபாய் நோட்டுக்களும் கை மாறின![/size]

[size=4]மறு நாள், ஆச்சி மிகவும் சந்தோசமாய் இருந்தா! அதைப் பார்க்க எனக்கும் சந்தோசமாக இருந்தது! ஆச்சியும் அந்தத் தேசிக்காயால தான் இவ்வளவு பிரச்சனையும் எண்டு சொல்ல, எனக்குத் திக்கெண்டு இருந்தது! ஏனெண்டால் மூண்டு நாளைக்கு முதல், நானும் பேரின்பனும், கோயிலடியில விளையாடேக்க, கோயில் குப்பையில் அது கிடக்க, இருவரும் அதை எறிந்து, பந்து விளையாடிய போது, முருக்க மரத்தடியில் விட்டு விட்டோம்! அதில ஒரு சின்ன ஓட்டையும், இருந்த படியால், வைரவ சூலத்தில், குத்தி வைத்திருந்ததாக இருக்கலாம்![/size]

[size=4]அப்படியானால், அந்தச் செப்புத் தகடு? மில்லியன் டொலர் கேள்வி![/size]

[size=4]இன்று வரை எனக்கு விளக்கம் கிடைக்கவில்லை! நானும் தேசிக்காய் பற்றி, இன்று வரையும் வாய் திறக்கவில்லை![/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=4] [/size][size=4]அந்தச் செப்புத் தகடு? மில்லியன் டொலர் கேள்வி! :D[/size]

கதை நன்றாக இருக்கிறது புங்கையூரான்.

.

ஊரில ஆம்பிளப் பிள்ளை பிறந்தால் அயலட்டைகள் ஹெல்மட் போட்டுக் கொண்டு தான் நிக்கோனும் போல. :icon_idea:

செப்புத்தகட்டை அந்த குடிகார மந்திரவாதி புதைத்து வைத்திருக்ககூடும்..............

அருமையான கதை புங்கை................இன்னும் தொடருங்கள்..............

நல்ல கதை புங்கை ,

கதை வாசிக்கும் போதே காட்சிகள் கண் முன்னே விரிகின்றது .

தொடருங்கள் ....

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்தும் பல மூட நம்பிக்கைகளுடன் பல மனிதர்கள் இருக்கின்றார்கள்.

அவர்களிடம் பணம் பறிக்கப் பல பண்டித் ஜோதிடர்களும் வலம் வருகின்றார்கள்.

புங்கையூரானின் எழுத்து அபாரம்.

தொடருங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் புங்கையூரான்! கதை நன்றாக இருக்கின்றது.நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

ஊர்ப்பாசையில் எழுதிய அருமையான கதை புங்கையூரான்.

உங்களிடம், பல திறமைகள் உள்ளது. பாராட்டுக்கள். :)

  • கருத்துக்கள உறவுகள்

கதை என்று எழுதமுடியவில்லை

எமது கிராமத்து வாழ்க்கையை சொல்லியுள்ளீர்கள்

பாயிழைத்தல்

கிடுகு பின்னுதல்

கடற்கரையில் மீன் வாங்குதல்

அதை பனை ஈக்கில் கோர்த்தல்

முருங்கை மரத்தடியில் மீன் களுவுதல்

களுவும் தண்ணீரை முருங்கை முருங்கைமரத்துக்கு ஊத்துதல்

மீன் களுவுவதை கண்டவுடன் ஓடிவரும் பூனை

பார்வை பார்த்தல்...............................................என்ற கிராமத்து வாழ்க்கையை பதிவு செய்தமைக்கு நன்றிகள்

தொடர்ந்து எழுதுங்கள்.

எனக்கும் இப்படி ஒரு சம்பவம் நடந்தது.

எனனது அக்காவுக்கும் அவரது மாமியாருக்கும் நடந்த இதுபோன்ற செய்வினை என்ற விளையாட்டில் நானும் ஒருமுறை மாட்டிக்கொண்டேன்.

பாடசாலை விடுமுறைக்கு வந்திருந்த என்னை ஒரு வீட்டுக்கு கூட்டிப்போனார். அந்த வீட்டின் நடுப்பகுதியில் என்னை அமரச்சொன்னார். (அந்த வீட்டுக்கு செல்வதையே என் வீட்டார் அனுமதிப்பதில்லை).

சிறிது நேரத்தில் என்னைச்சுற்றி அந்த வீட்டுக்காறர் வேப்பமிலையால் அடிக்கத்தொடங்கினார்.

அந்த வயதில் இதிலெல்லாம் எனக்கு நம்பிக்கையில் என எழும்ப வெளிக்கிட அக்கா கெஞ்சி என்னை சில நிமிடங்கள் இருக்கும்படி கேட்டார். வெளியில் வந்து என்னவென்று கேட்டதற்கு எனது காலடி மண்ணைஅவரது மாமியார் எடுத்துவிட்டாராம். அதற்கு இது பரிகாரமாம்.

இந்த செய்வினை என்ற விசக்கொல்லியை யாராவது செய்கிறார்களோ ,இல்லையோ இதை நம்புகிறவர்களுடைய

வாழ்க்கை வினையாகவே போய்விடும் என்பதுதான் உண்மை. இது கூட தன்னம்பிக்கையும் ,திடமும் இல்லாத

மனித பலவீனமே ......இதிலிருந்து விடுபட்டு ,இது ஒரு மாயை என நினைப்பவன் வாழ்க்கையில் தன துன்பங்களை

குறைத்துக்கொள்ளலாம்........

நன்றி விசுகு அண்ணா உங்கள் அனுபவப்பகிர்வுக்கு..........

[size=4]ஒரு கதை நேரடியாக வெறும் செய்திகளை மட்டுஞ்சொல்லாமல் , சுற்றுப்புறச் சூழலையெல்லாம் தடவி வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல சொல்லவந்த செய்தியை புகுத்துவது எல்லோருக்கும் கைவராது . ஆனால் உங்களுக்கு அது வந்திருக்கின்றது . மேலும் தொடர வாழ்த்துகின்றேன் புங்கை .[/size]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=5]எழுத்துநடை அபாரம் புங்கையூறான் [/size]

[size=5]http://leo-malar.blogspot.no/[/size]

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையூரான் யாழில் முதல் கவிதையை எழுதிய போதே இவர் எழுதக்கூடியவராக இருப்பார் என நினைத்தேன்.நினைத்தது சரியாக நடந்துள்ளது.தொடருங்கள்.

எல்லா இடம்களிலையும் இப்பிடியான பிரச்சினைகள் இருந்திருக்கின்றன/ இப்போதும் இருக்கின்றன தொடர்ந்து எழுதலாமே அண்ணா :)

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்ச் சூரியன் குறிப்பிட்ட மாதிரி "பார்வை" பார்ப்பவர்கள்தான் செப்புத் தகட்டைப் புதைத்திருப்பார்கள். இல்லாவிட்டால் தொழில் செய்யமுடியாதே!

  • கருத்துக்கள உறவுகள்

ஊரின் பல நினைவுகளையும் கிழறிவிட்ட பதிவு இப்பிடி இடைக்கிடை எதையாவது எடுத்து விடுங்கோ. பாராட்டுக்கள். :)

  • கருத்துக்கள உறவுகள்

அட எங்கட ஆஸ்திரேலியால இருந்து கதை எழுதும் இன்னும் ஒருவர் சுபெர்ப் அண்ணா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[size=4]அந்தச் செப்புத் தகடு? மில்லியன் டொலர் கேள்வி! :D[/size]

எனது அபிப்பிராயப் படி, அதை ஏற்கெனவே தாட்டிருக்க வாய்ப்பில்லை! ஒரு வேளை, மஞ்சள் கலந்த, அந்த வாளித் தண்ணிக்குள் இருந்திருக்கலாம், என்றே அனுமானிக்கிறேன்! முன்பு தாட்டிருந்தால், கிண்டுவதற்கு, அலவாங்கு தேவைப் பட்டிருக்காது!

கருத்துக்கு நன்றிகள், நிலாமதியக்கா!

கதை நன்றாக இருக்கிறது புங்கையூரான்.

நன்றிகள், தப்பிலி!

.

ஊரில ஆம்பிளப் பிள்ளை பிறந்தால் அயலட்டைகள் ஹெல்மட் போட்டுக் கொண்டு தான் நிக்கோனும் போல. :icon_idea:

ஆம்பிளைப் பிள்ளைக்கும், உலக்கைக்கும் என்ன சம்பந்தம்?

ஒரு வேளை, நீங்கள் கூறியபடி,

தண்டாயுத பாணி, எனும் நாமம் பெற்றாய்? :icon_idea:

நன்றிகள், ஈசன்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செப்புத்தகட்டை அந்த குடிகார மந்திரவாதி புதைத்து வைத்திருக்ககூடும்..............

அருமையான கதை புங்கை................இன்னும் தொடருங்கள்..............

முன்பே புதைத்து வைத்திருக்கவில்லை என்றே நினைக்கிறேன்!

ஆச்சி வீட்டு நாய், வாழைப்பழம் சாப்பிடுகிற சாதி நாயல்ல!

நான் நினைக்கிறேன், கிடங்கு மாதி மாத்தித் திரியிற நேரத்தில, மஞ்சள் கலந்த தண்ணி வாளிக்குள்ள, சுருட்டிக் கிடந்திருக்கும்!

என்னவோ, எல்லாருக்கும் நிலாக் காட்டிப் போட்டான்!

கருத்துக்கு நன்றிகள், தமிழ்ச்ச்சூரியன்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கதை புங்கை ,

கதை வாசிக்கும் போதே காட்சிகள் கண் முன்னே விரிகின்றது .

தொடருங்கள் ....

கருத்துக்கு நன்றிகள், சுடலை!

தொடர முயற்சிக்கின்றேன்!

புலம்பெயர்ந்தும் பல மூட நம்பிக்கைகளுடன் பல மனிதர்கள் இருக்கின்றார்கள்.

அவர்களிடம் பணம் பறிக்கப் பல பண்டித் ஜோதிடர்களும் வலம் வருகின்றார்கள்.

புங்கையூரானின் எழுத்து அபாரம்.

தொடருங்கள்.

நன்றிகள் வாத்தியார்!

எங்கள் சைவ மதத்தில், இந்தப் பில்லி, பேய், சூனியம், மற்றும் தந்திரீகம், நீங்கள் சொல்லும் மூடநம்பிக்கைகளை நீக்கி விட்டால்,மிகவும் உன்னதமான தத்துவமான மதம்!

கறையான் அரிக்கிற மாதிரி, இவை எமது அழகிய மதத்தை அரித்துக் கொண்டிருக்கின்றன!

ஆனால், பார்வை பார்ப்பது போன்றவற்றிற்கு, விஞ்ஞான ரீதியான விளக்கங்கள் இருக்கலாம் என எண்ணுகின்றேன்!

வணக்கம் புங்கையூரான்! கதை நன்றாக இருக்கின்றது.நன்றி

நன்றிகள், குமாரசாமியண்ணை! :D

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையூரான் ...நல்ல ஒரு கதை..இதை வைச்சு சிட்னியிலயும் காசு சம்பாதிக்கலாம் போல கிடக்கு சிட்னிவாழ் மக்களில் பலருக்கு இந்த விடயத்தில் நம்பிக்கை இருக்கு வியாபாரத்தை தொடங்குவோமா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஊர்ப்பாசையில் எழுதிய அருமையான கதை புங்கையூரான்.

உங்களிடம், பல திறமைகள் உள்ளது. பாராட்டுக்கள். :)

நன்றிகள், தமிழ் சிறி!

உங்களைப் போல பெரியவர்களின் பாராட்டுகளால், மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்! :D

எனக்கும் இப்படி ஒரு சம்பவம் நடந்தது.

எனனது அக்காவுக்கும் அவரது மாமியாருக்கும் நடந்த இதுபோன்ற செய்வினை என்ற விளையாட்டில் நானும் ஒருமுறை மாட்டிக்கொண்டேன்.

பாடசாலை விடுமுறைக்கு வந்திருந்த என்னை ஒரு வீட்டுக்கு கூட்டிப்போனார். அந்த வீட்டின் நடுப்பகுதியில் என்னை அமரச்சொன்னார். (அந்த வீட்டுக்கு செல்வதையே என் வீட்டார் அனுமதிப்பதில்லை).

சிறிது நேரத்தில் என்னைச்சுற்றி அந்த வீட்டுக்காறர் வேப்பமிலையால் அடிக்கத்தொடங்கினார்.

அந்த வயதில் இதிலெல்லாம் எனக்கு நம்பிக்கையில் என எழும்ப வெளிக்கிட அக்கா கெஞ்சி என்னை சில நிமிடங்கள் இருக்கும்படி கேட்டார். வெளியில் வந்து என்னவென்று கேட்டதற்கு எனது காலடி மண்ணைஅவரது மாமியார் எடுத்துவிட்டாராம். அதற்கு இது பரிகாரமாம்.

கருத்துக்கு நன்றிகள். விசுகர்!

புத்தியுள்ளவர்கள், தனி மனித பலவீனங்களைக் காசாக்குகிறார்கள்!

அன்றும், இன்றும் இது தான் நிலை!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.