Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழநாதன் அகாலமரணம்!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழவனின் இழப்பால் துயருறும் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

  • Replies 103
  • Views 15.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஈழவனிற்கு அஞ்சலிகளும் குடும்பத்தினரிற்கு ஆழ்ந்த அனுதாபங்களும்.

ஆழ்ந்த அனுதாபங்கள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

என்ன எழுத

எப்படி ஆறுதல் சொல்ல

ஏன் எம்மை நேசிப்போர்

எமக்காக வாழுவோர் மட்டும்

இவ்வளவு அவசரமாகப்போகிறார்கள்

யாருக்கு ஆறுதல் சொல்ல

அந்த பச்சைக்குழந்தைக்கா

இல்லை பரிதவிக்கும் அபலைக்கா

அல்லது துடித்து நிற்கும் பெற்றோருக்கா

இல்லை பிள்ளையை பறி கொடுத்து தவிக்கும் தமிழுக்கா..........

சாந்திக்காக வேண்டுகின்றேன்.

சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

ஆழ்ந்த அனுதாபங்கள்.

[size=4]ஈழவனிற்கு அஞ்சலிகளும் , [/size][size=4]இவரின் இழப்பால் துயருறும் உற்றார் உறவினர் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.[/size]

ஈழவனுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

யாழ் களத்தில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் வசம்புவின் மரணமும் இதே மாதத்திலேயே வந்தது. யாழ் களத்தில் பலராலும் அறியப்பட்ட வசம்புவின் மரணத்தின் பின் மீண்டும் சரியாக இரண்டு வருட இடைவேளைகளின் பின்னர் இன்னோர் யாழ் உறவின் இழப்பு.

நான் இவருடன் கருத்தாடல் செய்யவில்லை. இதனால் எனக்கு இவரை பரீட்சயம் இல்லை. கடைசியாக 2006ம் ஆண்டு கருத்துக்களத்தில் எழுதியுள்ளார். வேறு பெயர்களில் பின்னர் வந்தாரோ தெரியாது. நூலகம் இணையம் பற்றிய விபரங்கள் கருத்துக்களத்தில் 2006 ஆண்டின் பின்னரும் தொடர்ச்சியாக பகிரப்பட்டு வந்துள்ளன.

பழைய களத்தில் தேடல் செய்தபோது ஈழவனின் விபரங்கள் கிடைத்தன:

ஈழவனின் சுய விபர கோவை: http://www.yarl.com/forum/index.php?showuser=278

ஈழவனின் தலைப்புக்கள்: http://www.yarl.com/forum/index.php?act=Search&nav=au&CODE=show&searchid=8c30e491a50f8b81c301fdabacf0e83a&search_in=topics&result_type=topics

ஈழவனின் கருத்துக்கள்: http://www.yarl.com/forum/index.php?act=Search&nav=au&CODE=show&searchid=4d31063c515610c15b450f71b8d0273a&search_in=posts&result_type=posts

மேலே கவிஞர் கேட்டதுபோல் இவருடன் கருத்தாடல் செய்த எவராவது யாழில் ஈழவனுடனான தமது நினைவு பகிர்வுகளை எழுதி போடுங்கள்.

(தூயவன், இப்படியான விபரங்களை எதிர்காலத்தில் அறிவிக்கும் போது சற்று விரிவாக எழுதினால் நல்லது.)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விரிவாக எழுதும் மனநிலையில் நான் அப்போது இருக்கவில்லை... தவிர என்னை விட நிறைய யாழ் நண்பர்களோடு அவர் நெருக்கமான தொடர்பினை வைத்திருந்தார். நான் யாழ்களம் சார்ந்த தொடர்புகளைத் தான் பேணிக் கொண்டிருந்தேன்...

கனா பிரபா அண்ணா, அவர் சந்திப்புப் பற்றிய பதிவு ஒன்றை எழுதியிருக்கின்றார்...

http://kanapraba.blogspot.com.au/2012/10/blog-post.html

[size=4]ஆழ்ந்த அஞ்சலிகள்![/size]

[size=4]அன்னாரின் குடும்பத்திற்கு எனது ஆறுதல்கள். [/size]

ஈழவனிற்கு அஞ்சலிகளும் குடும்பத்தினரிற்கு ஆழ்ந்த அனுதாபங்களும்.

ஆழ்ந்த அனுதாபங்கள் .

..ஊர் உளவாரம் என்ற வலை பதிவு வைத்திருந்த பொழுது ..அநேகமான பதிவுகளினூடு என்னோடு இணைந்திருக்கிறார்..தமிழ் வலைபதிவுகள் ஆரம்பித்த கால கட்டத்தில் விரல் விட்டு எண்ண கூடியவர்களே இருந்தார்கள் .அப்பொழுதும் அவரும் முக்கிய பதிவராக இருந்தார்.

அவரின் மைத்துனரின் முகநூல் தகவலின் படி தொழில் போட்டி காரணமாக உணவில் விசம் வைத்து கொல்லப்பட்டிருக்கிறாராம் ...அதிர்ச்சியான தகவல் ....

Edited by sinnakuddy

இனிய தம்பி ஈழநாதனின் இழப்பு அதிர்ச்சியளிக்கிறது....

இனியவனே

உன் அன்பு நெருடலில்

சிங்கப்பூர் நண்பர்களோடு சந்தித்த கணங்களை நினைக்கிறேன்.....

வரவேற்க மட்டுமல்ல

வழியனுப்பிவிட்டு எழுதிய உன் எழுத்துகள்

என் இதயத்தை வருடுகின்றன......

நீ மிக மிக வித்தியாசமான அன்பன்.

அதை உன்னோடு வாழ்ந்தோர் மறுக்கார்?

உன் ஆத்மா சாந்தியடையவும்

உன் இழப்பில் துயருறும்

உன் உற்றார் - உறவினர் - நண்பர்களுடன்

என் துயரை பகிர்ந்து ஆறுதலடைய முயல்கிறேன்...

அவை முடியுமோ????

காலம் எப்போதும் எங்களுக்கு அகாலமாகவே போய் விடுகின்றது. நல்ல விடயங்களில் முனைப்புக் கொண்டவர்களை மட்டும் இடையில் முறித்துக் கொண்டு சென்று விடுகின்றது காலம்.

அன்னாருக்கு கண்ணீர் அஞ்சலிகள்...

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞன் அண்ணா,மற்றும் தூயவன் அண்ணா இணைத்த இணைப்புகளில் ஈழநாதனின் கருத்துக்களை,பதிவுகளை இவ்வளவு நேரமும் இருந்து ஒரே மூச்சில் படித்து முடித்தேன்..படிக்க படிக்க அவரைப் பற்றிய பிம்பம் என்னுள் விரிந்து எண்ணங்களால் ஒன்றான ஒருவரை இவ்வளவு நாளும் அறியாமல் இருந்து விட்டோமே என்று வருந்தவைக்கிறது..மிக நல்ல கருத்தாளன் சிந்தனையாளனாக அவர் அந்தக்காலங்களில் இருந்திருக்கிறார்..எண்ணங்களிலும் சிந்தனைகளிலும் எனது கோட்டில் பயணித்த ஒருவர்..அவர் இன்னும் பலகாலம் எங்களுடன் இருந்து தன் எண்ண்ங்களை பகிர்ந்திருக்கலாம்...காலம் அந்த சந்தர்ப்பத்தை எங்களிடம் இருந்து தட்டிப்பறித்துவிட்டது...மிக இளவயதுகளிலேயே இப்படியான உயர்வான சிந்தனைகளால் தன்னை உருவாக்கிகொண்ட ஒரு நல்ல அண்ணணை இழந்துவிட்டோம்...கண்ணீர் அஞ்சலிகள் ஈழவன் அண்ணாக்கு...

ஈழவன் குடும்பத்தினரிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள். அறியாத உறவென்றாலும் யாழை வளர்த்திருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

[size=1]நம்பவே முடியவில்லை![/size]

[size=1]

கண்ணீர் அஞ்சலிகள்![/size]

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள் .

..ஊர் உளவாரம் என்ற வலை பதிவு வைத்திருந்த பொழுது ..அநேகமான பதிவுகளினூடு என்னோடு இணைந்திருக்கிறார்..தமிழ் வலைபதிவுகள் ஆரம்பித்த கால கட்டத்தில் விரல் விட்டு எண்ண கூடியவர்களே இருந்தார்கள் .அப்பொழுதும் அவரும் முக்கிய பதிவராக இருந்தார்.

அவரின் மைத்துனரின் முகநூல் தகவலின் படி தொழில் போட்டி காரணமாக உணவில் விசம் வைத்து கொல்லப்பட்டிருக்கிறாராம் ...அதிர்ச்சியான தகவல் ....

ஆண்டவனே உடம்பெல்லாம்

நடுங்குது...இந்த உலகில் இப்படி பட்ட மனிதரா...... :(

  • கருத்துக்கள உறவுகள்

ஈடு செய்யமுடியாத ஒரு இழப்பு

ஈழவனிற்கு அஞ்சலிகள்

அவரின் பிரிவால் வாடும் உறவுகளுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ஈழவனின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன். அன்னாரின் குடும்பத்தினருக்கு எனது ஆறுதல்கள்.

அன்னாரின் ஆன்மா சாந்தியடைய பிராத்திக்கிறேன்.. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்..

  • கருத்துக்கள உறவுகள்

"ஆழ்ந்த அனுதாபங்கள்" என்ற வார்த்தை இலகுவில் கூறலாம், இந்த சூழ்நிலையைப் பொறுத்தவரையில் யாருக்கு கூறுவது? இரண்டுமாதக் குழந்தையுடன் தனிமையாக்கப்பட்ட மனைவியிற்கு கூறுவதா அல்லது பெற்றதாய் தகப்பனுக்கு கூறுவதா, இழப்பு என்பது எல்லோருக்கும் பொதுவானது இருப்பினும் இந்த வயதிலா?

நான் கிட்டத்தட்ட 5வருடங்களாக யாழ் கருத்துக்கள உறுப்பினராக இருக்கின்றேன், "எனது ஊர் இலக்கணாவத்தை" என்ற தலைப்பில் நான் பிறந்த ஊரான "இலக்கணாவத்தை" பற்றி நீண்ட ஒரு "பதிவு" படங்களுடன் இணைத்திருந்தேன் அந்தவேளை கூட இவரும் எனது ஊரைச்சேர்ந்தவர் அல்லது எனது குடும்ப உறவு என்றோ நான் அறிந்திருக்கவில்லை.

தற்சமயம் கிடைக்கப்பெற்ற தகவலின்படி நாளை அதாவது செவ்வாய்க்கிழமை அன்னாரது பூதவுடல் சிங்கப்பூரில் இருந்து ஊருக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்னாரது ஆத்மா சாந்திக்காக இறைவனை வேண்டுவோமாக...

ஓம்சாந்தி!

https://www.facebook.com/groups/mainthan/

  • கருத்துக்கள உறவுகள்

ஆத்மா சாந்தியடையட்டும்...அன்னாரின் குடும்பத்திற்கு எனது அஞ்ச‌லிகள்

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகளும், ஆழ்ந்த அனுதாபங்களும்!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.