Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாமியார் வீடு...

Featured Replies

அருமையாக எழுதியிருக்கிறீர்கள். காதல் உணர்வுகளை சிறப்பாகத் தந்திருக்கிறீர்கள். இந்தக் கதைக்கு "மாமியார் வீடு" என்கின்ற தலைப்பு பொருத்தமானதா என்கின்ற கேள்வி எனக்குள் இருக்கிறது.

  • Replies 276
  • Views 24.7k
  • Created
  • Last Reply

வார்தைகள் இல்லை . யாழ் இணையம் கண்டெடுத்த இளய தலைமுறை படைப்பாளிகளான கவிதை , தும்பளையான் , சுபேஸ் , வரிசையில் நீங்களும் இணைந்துள்ளீர்கள் . இந்த இளைய வயதில் உங்கள் மூவரின் சொல் ஆழுமை என்னை மலைக்க வைக்கின்றது . பகலவனின் வயது எனக்குத் தெரியாததால் அவரை இங்கு குறிப்பிட முடியவில்லை . அவரும் உங்களையொத்த வயதென்றால் ,  நீங்கள் நால்வரும் தான் வருங்காலத்தில் யாழ் இணையத்தின் படைப்புத்துறையில் புதியபாதையைத் திறக்கப்போபவர்கள் . உங்கள் வெற்றிப்படைப்பிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் ஜீவா .

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

மிக அருமையான் தொடர் ஜீவா. தொடர்ந்தும் இதுபோன்ற படைப்புக்களை எமக்காகத் தரவேண்டும். :rolleyes:

என்ன எழுதுவது என்று தெரியவில்லை ஜீவா, வாழ்த்துகள்

மிக அருமையான் தொடர் ஜீவா! வாழ்த்துக்கள்!!

ஜீவா அண்ணா, மிகவும் அழகாக கொண்டு சென்று முடித்திருக்கிறீர்கள். பாராட்டுகள்.

பிரியா அக்காவிடமிருந்து விடைபெற்றதிலிருந்து ஜேர்மன் சென்று சேர்ந்தமை வரையான சம்பவங்கள் மனதை கனக்க வைத்து விட்டன. சிறு சிறு சண்டைகள் பல பிடித்தாலும் அவற்றை குறித்து வைத்து பின்னர் சிறிது காலத்தால் வாசிக்கும் போது  இப்படியெல்லாம் நடந்திருக்கிறோமே என்று தோன்றும். அது உங்கள் இருவருக்குமிடையில் அன்பை அதிகரிக்கவே வழிவகுக்கும். மிக விரைவில் இருவரும் ஒன்று சேர வாழ்த்துகள்.

உங்களுக்கு நல்ல எழுத்தாற்றல் உள்ளது. பகலவன் அண்ணா கூறியுள்ளது போல் உங்கள் இந்த தொடர் மூலம் ஒரு சிறந்த எழுத்தாளன் யாழில் உதயமாகி விட்டான் என்றே நினைக்க தோன்றுகிறது. இத்துடன் கைவிடாமல் பல கதைகள் தொடர்ச்சியாக எழுதுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தற்காலிக பிரிவானாலும் தாங்கமுடியாதே  விரைவில்  விசா கிடைத்து  ஒன்றுசேர  பிரார்த்திக்கின்றேன் 

  • கருத்துக்கள உறவுகள்

அனுபவப் பகிர்வுக்கு நன்றிகள், ஜீவா!

 

எந்த இடத்திலுமே, தொய்வில்லாத ஒரு கதையோட்டம்! 

 

கம்பராமாயணத்தில் வந்த அம்பிகாபதியும் அமராவதியும் மீண்டும் நினைவில் வந்து போனார்கள்! :D

 

எல்லோருக்கும் உங்கள் மாதிரி வாழ்வும்,துணையும் கிடைத்துவிடுவதில்லை. அதனால், கரம் பிடித்தவளின் விழியோரங்கள் நனைந்துபோகாமல், வாழ்வை நகர்த்துங்கள்.

 

உங்கள் இருவருக்கும் எனது வாழ்த்துக்களும், நல்லாசிகளும்! :D

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கதையைத் தொடர்ந்து வாசித்தேன் ஜீவா 


இறுதிப்பகுதியை வாசித்துவிட்டு என்ன எழுதலாம என சில கணங்கள் யோசித்தேன்.

அப்படியே என் மேனி சிலிர்த்தது தோள் மூட்டுக்கள் இரண்டும்  ஒருமுறை ஆடி அசைந்தன.


கவலைவேண்டாம்  வழமைபோல இருங்கள் எல்லாம் நன்றாக முடியும்.

 

மீண்டும் ஒருமுறை வாழ்த்துகளும் பாராட்டுக்களும்  ஜீவா  

  • கருத்துக்கள உறவுகள்

சம்பவங்களை கோர்த்து சென்ற விதம் அருமை  பாராட்டுக்கள். இத்துடன் நின்று விடாது தொடர்ந்தும் எழுதி வாருங்கள்.

 

 

சுடச்சுட மிளிரும் பொன் போல ..பிரிவு அன்பைக் கூட்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லாருக்கு ஜீவா,அனுபவித்து எழுதியுள்ளீர்கள்.

 

அதென்ன தலைப்பு ?  'மாமியார் வீடு' என்றால் ஜெயில் என்றும் சொல்லுவார்கள். :D 

 

பூத்து குலுங்குற குஞ்சுகள்!!!!!...............நாலுசுவருக்கு நடுவிலை தனியாயிருந்தாலும்..அக்கம்பக்கம் இடைஞ்சலாயிருந்து...நிம்மதியாய் எதுவும்..........செய்யேலாட்டி அது மாமியார் வீடுதானே ராசா :lol:

 

http://www.youtube.com/watch?v=L6CwgtFCJVo

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்

Well...ஒரு ஓர‌மாக‌ நின்று நானும் பார்த்துக் கொண்டிருந்தேன். சொல்ல‌ எதுவும் இல்லைத் த‌ம்பி ! " நீ தானே என் பொன் வ‌ச‌ந்த‌ம்" ப‌ட‌த்திற்கு இணைய‌த்தில் வ‌ந்த விம‌ர்ச‌ன‌ங்க‌ள் சில‌வ‌ற்றைப் பார்த்த‌ பின்ன‌ர் நான் ஒரு ஆய்வு தொட‌ங்கியிருக்கிறேன். அது தொட‌ர்பாக‌ ஒரு கேள்வி: அந்தப் ப‌ட‌த்தைப் ப‌ற்றி நீங்க‌ள் என்ன‌ நினைக்கிறீர்க‌ள்?

 

 

 

 

 

reason for edit: (எழுத்துப் பிழை திருத்த‌ப் ப‌ட்டுள்ளது)

Edited by Justin

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு தொடர் நண்பா வாழ்த்துக்கள். உன்னுடைய நிலையில் நானும் இருந்திருப்பதால் அதே வலி புரிகிறது. முதல் முறை நான் போய் வந்தபோது தான்
அதிகம் வலித்தது. அதுவும் இரண்டரை வருடங்களின் பின்னர் போயிருந்தேன். எனது பயண நாள் நெருங்க நெருங்க, நான் போகிறேன் என்ற வலி மனதைப் பிழிந்தது.
கட்டுநாயக்கா போகும் வரை வாகனத்தில் அழுதபடியே வந்தாள். கட்டுநாயக்காவில் கடைசி நிமிடம்.... நானும் உன்னோட வரப்போறன் எண்டு கட்டிப்பிடித்து
அழத்தொடங்கிவிட்டாள். எனது மனதும் கனத்துப்போய் இருந்தது. நண்பன் ஒருத்தனுடன் போய்  வந்ததால் மனது கொஞ்சம் ஆசுவாசப்பட்டது. விமானம் ஓடி
கிளம்பும் போது இருந்த பீலிங்கை வார்த்தையில் கொட்டிவிட முடியாது. இரண்டாவது முறை பயணம் அனுப்பும்போது அவள் கலங்கவில்லை, அடுத்தமுறை உன்னுடன்
நானும் வருவேன்  என்று சந்தோசமாக கையசைத்தாள். மூன்றாவது தரம் சொன்னமாதிரியே கூட்டி வந்துவிட்டேன், அப்போது அவள் கலங்கினாள். பெற்றவரை,
நாட்டை விட்டுவிட்டு வருகிறோமே என. தூரத்தில் இருந்து பார்க்கும் போது அழகாக இருப்பவை அருகில் வரும்போது அதன் அழகியல் குறைந்து விடுகிறது. அவள்
ஊரிலும், நான் இங்கும் இருந்தபோது இருந்த காதல் பிணைப்பு இப்போது இருப்பதை விட அழகாகவே இருந்தது. இப்போது இயந்திரங்களுடன் இயந்திரங்களாய்
டொலர்களையும், படிப்பு பட்டங்களையும் நோக்கிய போட்டியில் காதல், ஊடல் என்பது இன்னொரு சடங்காக மாறி விடுகிறது. பிரியா விரைவில் ஜெர்மனி வந்து சேர
மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவா.. அருமையாக இருந்தது.. :rolleyes:

 

Spoiler
எதுக்கு இம்மாம்பெரிய ஐஸ் எண்டுதான் விளங்கேல்ல.. :lol:

 

 

  • கருத்துக்கள உறவுகள்

நானும் அடிக்கடி வந்து ஒவ்வொரு பாகத்தையும் வாசித்து விட்டு போவேன்..பகிர்வுக்கு நன்றி ஜீவா.வேறை என்னத்தை சொல்வது.மிக விரைவில் பிரியா நீங்கள் இருக்கும் இடத்திற்கு வரவேண்டும்.என் நல் வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவா.. அருமையாக இருந்தது.. :rolleyes:

 

Spoiler
எதுக்கு இம்மாம்பெரிய ஐஸ் எண்டுதான் விளங்கேல்ல.. :lol:

 

அண்ணோய், கலியாணம் கட்டி எத்தினை வருஷம்? :unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பி , என்ன அழகான எழுத்து நடை.வாழ்த்துக்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல தொடர், வாழ்த்துக்கள் ஜீவா



அத்துடன் விரைவில் முடித்ததுக்கும் நன்றிகள் வெறுப்பேத்தாமல் :D

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணோய், கலியாணம் கட்டி எத்தினை வருஷம்? :unsure:

 

அஞ்ஞானவாசம் போகிற அளவுக்கு ஆகிப்போட்டுது தும்ஸ்.. :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாராட்டுகள் ஜீவா, 

 
ஆரம்பத்திலிருந்து உங்கள் இருவரின் நட்புடனும் , புரிந்துணர்வுடனும் கூடிய காதலை ரசித்தேன். கண் பட்டு விடாமல் காலம் முழுவதும் இதே காதலுடன் வாழ மனமார்ந்த வாழ்த்துக்கள். :)

 

நன்றி நீதிமதி அக்கா.

வரவுக்கும், கருத்துப் பகிர்வுக்கும்.

உங்கள் வாழ்த்துக்கள் எம்மை வாழவைக்கும். :)

 

(எழுத்துப் பிழை திருத்தப் பட்டுள்ளது. சுட்டிக் காட்டிய விசுகு அண்ணாக்கு என் நன்றிகள். :) )

Edited by ஜீவா

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நீதிமதி அக்கா, வரவுக்கும், க்ருத்துப்பகிர்வுக்கும்.

உங்கள் வாழ்ட்துக்கள் எம்மை வாழவைக்கும். :)

 

என்னாச்சு ராசா

தமிழ் தடுமாறுது

தடம் புரளுது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னாச்சு ராசா

தமிழ் தடுமாறுது

தடம் புரளுது

 

மன்னிக்கவும் விசுகு அண்ணா,

திருத்தம் செய்து விடுகிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழில் ஒரு சிறந்த எழுத்தாளன் உருவாகிவிட்டான் என்பதை கட்டியம் கூறும் படைப்பு இது. உங்கள் காதலை  போலவே உங்கள் வாழ்க்கையிலும் தடைகளை தகர்த்து மென்மேலும் முன்னேற மனசார வாழ்த்துகிறேன்.

 

இந்தளவு பெரிய வார்த்தைக்க்கு நான் தகுதியானவனா தெரியாது.

இருந்தும் உங்கள் வாழ்த்திற்கு என் மனமார்ந்த நன்றி பகலவன் அண்ணா.

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவாவின் எழுத்தாற்றால் பிரமிக்க வைத்தது.தொடர்ந்து எழுதுங்கள்.பிரியாவுடன் தொடர்ந்து பேசுங்கள்.விரைவில் உங்களிடம் வருவார். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கடை ஊர் சின்னப்பெடி ஒண்டு இப்பிடி நல்லா எழுதியிருக்கு எண்டு பாக்க சந்தோசமாய் இருக்கு . உங்கடை கதைக்கு என்ரை பாராட்டுக்கள் தம்பி .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.