Jump to content

பாம்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்


 

குறிப்பு.

 

பாதைகள் மூடப்பட்டு, இராணுவத்தால் சூழப்பட்ட பகுதிக்குள் இருந்து வெளியேறுவது என்பது அவ்வளவு இலகுவானதல்ல. இரவுகளில் மட்டுமே பயணங்கள் இருளுக்குள் சன நெரிசல்படும் குளுவன் காடுகளூடாக….. சேறு சகதி என நீர்வழிப்பயணங்களாகவும் 90 களின் ஆரம்பங்களில் யாழ்ப்பாண மக்களின் பயணங்கள் அமைந்தன.

 

 

 

பாம்பு

Mia_Ngoo--large-msg-114707533575.jpg

 

 

“க்வ்”………. முனகலும் இல்லாமல் அழுகையும் இல்லாமல் ஈனசுரத்தில் எழுந்து அடங்கியது குரல். அடிவயிற்றைக் கைகளால் அழுத்தியபடி இருண்ட கொட்டிலுக்குள் அவ்வுருவம் சுருண்டு விழுந்தது.

 

அந்தக்கரையில் இருந்த திடீர் தேனீர் கடையின் முன்னால் டிரம்மில் கிடந்த தண்ணீரில் சேறாகிய பஞ்சாபியைக் கழுவிக் கொண்டாள் சுபாங்கி. ஈரம் சொட்டச்சொட்ட பஞ்சாபி உடலோடு ஒட்டியது. சிறு குடிலான திடீர் தேனீர்கடையில் லாந்தர் சின்ன மின்மினியாக அந்த இருளுக்குள் ஒளிதரும் தேவதையைப்போல் சிரித்தது. அந்தத் தேவதையின் சிரிப்பை அதிகம் பரவவிடாமல் மேல்பக்கம் தடுக்கப்பட்டதில் உயிர்ப்பயம் தெரிந்தது. அக்கடையில் சுடச் சுட வாய்ப்பனும் பிளேன் ரீயும் வாங்கித் தந்த தகப்பனிடம் ஆனந்தைக் கொடுத்துவிட்டுச் சாப்பிடும் நேரத்தில்….., பேரிரைச்சலோடு சடசடவென மழை கிளம்ப…, அங்கு தற்காலிகமாக வேயப்பட்ட அரைகுறை நிலையில் தென்பட்ட குடில்களுக்குள் நின்றவர்கள் ஓடி ஒதுங்கிக் கொண்டார்கள். சுபாங்கியும் தந்தையும் கூடவே பயணம் செய்யும் சுபனும் சுபாங்கியின் மகன் ஆனந்த்தைத் தூக்கிக் கொண்டு அக்குடில் ஒன்றுக்குள் புகுந்து கொண்டனர்.

 

பேரிரைச்சலுடன் இடி முழங்கியபடி மழை சோவென்று பெய்து கொண்டிருந்தது. வெளிச்சமற்ற குடில்களுக்குள் ஆளையால் நெருக்கியபடி நின்றவர்கள்…பயணம் எப்படி தொடர்வது என்ற அங்கலாய்த்து நிற்க, பிள்ளைக்கு மழைச்சாரல் அடிக்காது காக்க சுபாங்கி குடிலின் தாழ்ந்த முனைக்குள் சென்று நின்று கொண்டாள். குடிலின் முன் பகுதியில் தகப்பனும் சுபனும் மழை நிற்கும் நேரம் அவசரமாக தொடரவேண்டிய பயணத்திற்காக அந்தரப்பட்டனர். சுபாங்கிக்கும் அவர்களுக்கும் இடையில் வேறு சிலர் புகுந்து நிரவிக் கொண்டார்கள்.

 

இருள், தனிமை, மழை ஆனந்த் கண்களை இறுக மூடியபடி தாயை இறுக்கிகட்டிக் கொண்டான். அவன் பயத்தைப் போக்க சுபாங்கியும் அந்த மழலையின் முதுகையும் தலையையும் வருடியபடி நிற்க முதுகில் ஏதோ ஊர்ந்தது. மனம் கிலீரிட்டது. ஏற்கனவே அவ்விடத்தில் பாம்புகள் அதிகம் என்ற பயம் குளிரைத்தாண்டி நடுக்கத்தைக் கொடுத்தது. ஊர்வதும் நிற்பதுமாக சிறிது நேரம் நகர்ந்தது. அருகில் இருப்பர்களை பார்க்கமுடியில்லை அந்தகார இருள் மின்னல் அடிக்கும் இடைவெளிக்குள் பார்த்தால்தான் உண்டு. மழைக்காக ஒதுங்கியவர்கள் தன்னுடன் நிற்பதை சுபாங்கியால் உணர முடிந்தது. மனதிற்குள் இல்லாத கடவுள்களை எல்லாம் கூப்பிட்டு வேண்டுதல்களை அடுக்கிக் கொண்டேபோனாள். திரும்பிப் பார்க்க அவளுக்குப் பயமாக இருந்தது.

 

நேரம் ஆக ஆக ஊர்வதில் வித்தியாசங்கள் தோன்ற ஆரம்பித்தன. மெல்ல ஏறியும் இறங்கியும் அசையத் தொடங்கியது. இரண்டு கைகளாலும் பிள்ளையை அணைத்திருந்தவள். பாம்பு எங்கிருந்து நீள்கிறது என்பதை அந்த இருட்டுக்குள் அறிய முற்பட்டாள். இருமருங்கிலும் நெருக்கமாகப் பலர். சுபாங்கி முதுகை நெளித்து சற்று முன்னகர்ந்தாள்.. ஊர்ந்த பாம்பு சட்டென நின்றது. வெளியே மழை விட்டேனா பார் என்று விசமத்திற்கு தலை விரித்தாடியது. இடைவெளிவிட்டு மீண்டும் தொடங்கிய பாம்பு சற்று அழுத்தமாக உரச ஆரம்பித்தது. அந்த இருளுக்குள் எந்தப்பக்கத்தில்இருந்து பாம்பு ஊர்கிறது என்பதை அடையாளங் காணுவதற்காக பல்லைக் கடித்தபடி இரும்பாக நின்றாள் சுபாங்கி. இப்போது பாம்புக்கு சற்று துணிவு வந்துவிட்டதுபோல் அலையோதும் உரசலுடன் அவள் கைகளுக்கு இடையால் பட்டென நுழைந்து அவள் தனத்தை வெறித்தனமாக தொட்டுவிட்டு சட்டென மறைந்தது.

 

மழை மெதுவாக தூர ஆரம்பித்தது. முன்னுக்கு நின்ற தகப்பனும் சுபனும் குடையை விரித்துக் கொண்டு ஒரு மைல் தூரம் நடந்தால் உடனடியாக வாகனத்தைப் பிடிக்கலாம் என்று பயணவழிகாட்டி சொல்வதாக சுபாங்கியை முன்னே வரும்படி அழைத்தனர். இவர்களுடன் பயணத்தில் ஈடுபட்டிருந்த மற்றவர்களும் திபுதிபுவென தமது பொருட்களை எடுத்துக் கொண்டு வெளியேற ஆரம்பித்தனர்.சுபாங்கி கால்களுக்குள் முறிந்து கிடந்த சிலாகையை குனிந்து எடுத்துக் கொண்டாள். இருளில் குனிவைத் தனக்குச் சாதகமாக எண்ணிய பாம்பு முன்னரைக்காட்டிலும் உசுனத்துடன் நெருங்கியது.

 

விறுவிறென்று ஒற்றைக்கையை உதறியபடி மற்றக்கையால் பிள்ளையை அணைத்தபடி வெளியே வந்த சுபாங்கி சுபன் விரித்துக் கொடுத்த குடையை வாங்கி பயண வழிகாட்டியை நோக்கி மற்றவர்களுடன் தந்தையோடு சேர்ந்து நடந்தாள்.  



 

Edited by வல்வை சகாறா
  • Like 5
Link to comment
Share on other sites

  • Replies 60
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

கதை நன்றாகத்தான் இருக்கிறது. முதலில் உண்மையான பாம்பின் கதைதான்
கூறப்போகிறீர்கள் என்று பயந்துவிட்டேன். எனக்கு பாம்பு என்றாலே பயம்.
மனிதரிலும் பாம்பு பரவாயில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை நன்றாகத்தான் இருக்கிறது. முதலில் உண்மையான பாம்பின் கதைதான்

கூறப்போகிறீர்கள் என்று பயந்துவிட்டேன். எனக்கு பாம்பு என்றாலே பயம்.

மனிதரிலும் பாம்பு பரவாயில்லை.

 

பாம்புக்கதைகள் என்றால் எனக்கு கேட்க ஆசை. அதற்காகவே சின்ன வயதில் காளிங்கன் கதையை அடிக்கடி பேரனிடம் கேட்பேன் எத்தனை தடவை சொல்லியிருப்பாரோ தெரியவில்லை. நீங்கள் வித்தியாசமாக இருக்கிறீர்கள்.

 

வருகைக்கும் பதிவுக்கும் நன்றி சுமேரியர். :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்

 

விசுகு அண்ணா "ம்ம்ம்" என்று இழுத்திருக்கிறீங்கள். ஏன் வார்த்தைகள் வரவில்லையோ? :mellow:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா "ம்ம்ம்" என்று இழுத்திருக்கிறீங்கள். ஏன் வார்த்தைகள் வரவில்லையோ? :mellow:

 

 

கோபம் வருகுதில்ல.............

 

சகாரா படம்(பாம்பு) என்று  பார்க்க ஓடிவந்த எனக்கு எவ்வளவு கடுப்பு வரும்(நாலு வரி கதையைப்படித்ததும்.) :D

Link to comment
Share on other sites

லைட் அணைந்தால்   அனேக ஆண்கள் பாம்புகள் தான் ,
அதற்கு இடம் பொருள் காலம் இல்லை .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோபம் வருகுதில்ல.............

 

சகாரா படம்(பாம்பு) என்று  பார்க்க ஓடிவந்த எனக்கு எவ்வளவு கடுப்பு வரும்(நாலு வரி கதையைப்படித்ததும்.) :D

 

நாங்கள் பாம்புப்படமும் போடுவமெல்லோ..... :icon_mrgreen:

 

Link to comment
Share on other sites

நாக பாம்பா, நல்ல பாம்பா, தண்ணிப்  பாம்பா

எல்லாவற்றிற்கும் கொத்துவதுதான் குணம்.

Link to comment
Share on other sites

தரமான உருவகக் கதைக்குப் பாராட்டுக்கள் . பாம்புகள் என்றும் , எதிலும் , எங்கேயும் நீக்கமற நிறைந்திருக்கும் . நாம்தான் இந்தப் பாம்புகளில் இருந்து  அவதானமாக எம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் . என்னவாக இருந்தாலும் பாம்புக்குப் பால் ஊற்றுவது எமது பிழை தானே ???  அத்திபூத்த உருவகக் கதைக்குப் பாராட்டுக்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாக பாம்பா, நல்ல பாம்பா, தண்ணிப்  பாம்பா

எல்லாவற்றிற்கும் கொத்துவதுதான் குணம்.

நான் நினைக்கிறேன் இந்தப்பாம்புக்கு பொத்துறது தான் குணம் போல :D

Link to comment
Share on other sites

இது ஏதோ ஈவ்டீசிங் கதை போல் உள்ளது.. :D அண்மையில் கமல் படம் வெளிவந்த பாதிப்பில் குழப்பமாக எழுதியுள்ளார் கதாசிரியர்..! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெறும் வரட்டுக் கவுரவங்களுக்கும், எழுதப் படாத சமூக விதிகளுக்கும், பழக்கப் பட்டுப் போன பாம்பு போல இருக்கு! :o

 

இந்த வகையான பாம்புகள், அடிக்கடி செட்டையை மாற்றிக்கொள்ளும் தன்மை கொண்டவையாக இருக்கும்!  :D

 

இது என்ன தொடரா, வல்வை? :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதையில் உள்ள படத்திற்கும் கதைக்கும் சம்பந்தமில்லை. அழகியைப் பாம்பு இறுக்கி அணைப்பது போன்று படத்தைப் போட்டுவிட்டு பாம்பை அடிக்க சிலாகையை தூக்குவது மாதிரிக் கதை போவது சரியா?

Link to comment
Share on other sites

சகாறா அக்கா, இடப்பெயர்வின் போது காடுகளுக்கூடான பயணங்களின் போது பாம்புகள் இருக்கலாம் என்ற அச்சம் இருந்தாலும் இதில் அந்த பெண் மேல் ஊர்ந்த பாம்பு என்று கூறியது ஆண் ஒருவரை தானே. :D

இது தொடருமா? அல்லது முடித்து விட்டீர்களா? :rolleyes:

Link to comment
Share on other sites

சகாறா அக்கா, இடப்பெயர்வின் போது காடுகளுக்கூடான பயணங்களின் போது பாம்புகள் இருக்கலாம் என்ற அச்சம் இருந்தாலும் இதில் அந்த பெண் மேல் ஊர்ந்த பாம்பு என்று கூறியது ஆண் ஒருவரை தானே. :D

 

இதுவரி நீங்கள் வில்லங்கமாக புகுந்து கேட்டவற்றில் அல்லது ஆலோசனை சொன்னவற்றில் சரியாக சொல்லி இருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள் அக்கா. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாயகத்தில் இ.போ.ச. பஸ்சிற்குள்ளும் தனியார் போக்குவரத்து வாகனங்களுள்ளும் எத்தனையோ பாம்புகள் படமெடுப்பதை பார்த்திருக்கிறேன். நல்லதொரு கதையை நறுக்கென்று சொன்ன சகாராவுக்கு பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

கதை நன்றாக இருக்கின்றது. பாராட்டுக்கள். கதையின் முகப்பில் வந்த சித்திரமும் முடிவில் வந்த சிலாகையும்  ஒரு குறும்படம் பார்த்த உணர்வைத் தந்தன.

 
பாம்பு, பாம்பாட்டி, மகுடி,கூடை, பார்வையாளர்கள் என்ற சீன் எப்போதுமே அகவெளியியில் உணர்வுகளின் cocktailலினைத் தோற்றுவிப்பன தான். பாம்பிற்கு மனிதனைப் போன்று உணர்வுகளை வெளிப்படுத்தும் முகம் இல்லை, அல்லது பாம்பு வெளிப்படுத்தும் உணர்வுகளை மனிதனால் முற்றாகப் புரிய முடிவதில்லை. ஆனால் பாம்பாட்டிக்கு முகமுண்டு. பார்வையாளர்கள், பாம்பைப் பார்க்கும் அளவிற்குப் பாம்பாட்டியினையும் பார்ப்பார்கள். பாம்பின் விசம் அகற்றப்பட்டுவிட்டது என்று உறுதியளிக்கப்படினும் கூட எங்கே அந்தப் பாம்பு தன்னைத் கொத்திவிடுமோ என்ற தோரணையில், முதன்முதலாக வெடிகொழுத்தும் சிறுவனைப் போல, பாம்பாட்டி ஊதிக்கொண்டிருப்பதாய்ப் பார்ப்பவர்களிற்குத் தெரியும். மேலும், வயிற்றுப் பிளைப்பிற்காகப் பாம்பாட்டி ஊதிக்கொண்டிருக்கையிலும், மகுடி ஊதுவது தொழிலிற்கு அப்பால் பாம்பாட்டிக்குப் பிடித்ததொன்றோ என்றும் தோன்றும். அது போல, பாம்பு ஆடுவது மகுடி இசை அதற்குப் பிடித்ததால் நிகழ்கிறதா, அல்லது அதன் சக்தியினை மேவி அந்த இசை அதனை அவ்வாறு ஆட்டுவிக்கின்றதா என்றும் தோன்றும். மொத்தத்தில் பாம்பு, அது சிறைவைக்கப்பட்டிருக்கும் ஓலைப் பெட்டி, பாம்பாட்டி, மகுடி என்பனவெல்லாம் கட்டுப்பாடுகளாகவும், அத்துமீறல்களாகவும், இயல்பிற்கு அப்பாற்பட்டனவாகவும் பார்வையாளரிற்குத் தெரிகின்ற அதே நேரத்தில்; ஆபத்தான, இயல்பிற்குப் புறம்பான,அத்துமீறப்படும் அந்தத் தருணங்களைப் பாம்பாட்டியும் பாம்பும் ரசிக்கிறார்கள் என்றும் பார்வையாளர்களிற்கு எண்ணத்தோன்றும். மேற்படி காட்சி சார்ந்த பார்வையாளர்களின் இந்த அகவெளி முரண், சில்லறைகளைப் பெட்டிக்குள் விளச்செய்கின்றது. இருப்பினும், பார்வையாளர்களின் மனதிற்குள் வாழ்கின்ற ஒழுங்கு சார்ந்த ஏதோ ஒரு எதிர்பார்ப்பு, மகுடி நிறுத்தப்படின் அந்தப் பாம்பு அந்தப் பாப்பாட்டியினைக் கொத்தும், அப்படி அது கொத்தினால் பாம்பாட்டி சாவான் என்று அவர்களை நம்பச் செய்கின்றது. பாம்பு பாம்பாட்டியின் வாசிப்பை ரசிப்பது போல் தெரியினும், உண்மையில் அது கொத்துவதற்கான தருணம் பாத்துத் தான் ஆடுகிறது என்றும் பார்வையாளர் நம்புவர். ஆனால், இதெல்லாம் பாம்பிற்கும் பாப்பாட்டிக்கும் முற்றிலும் அப்பாற்பட்ட பார்வையாளரின் மனவெளி வாசிப்புக்குள் மட்டும் தான்.
 
உங்கள் கதையின் முகப்பில் வந்த அழகியினைச் சுத்திய பாம்பின் சித்திரமும், முடிவில் வந்த சிலாகையும் குறித்த காட்சி சார்ந்த பார்வையளாரின் அகவெளியினைக் காட்டிநிற்கின்றனவோ என்று தோன்றுகின்றது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதையில் உள்ள படத்திற்கும் கதைக்கும் சம்பந்தமில்லை. அழகியைப் பாம்பு இறுக்கி அணைப்பது போன்று படத்தைப் போட்டுவிட்டு பாம்பை அடிக்க சிலாகையை தூக்குவது மாதிரிக் கதை போவது சரியா?

 

ஐக் அடிக்கும் கதையை எழுதுவதற்கு தெரிவு செய்த இடம் சரியில்லை

Link to comment
Share on other sites

இப்பொழுதெல்லாம் இப்படியான பாம்புகளிற்கு இன்னும் வாய்பளிக்கும் வண்ணம் எமது மண்ணின்  கலாச்சாரம் மழுங்கடிக்கப்பட்டுள்ளது சகாரா . உலகெங்கும் இப்படியான பாம்புகள் உலவுகின்றன. .. பெண்கள் தான் உஷாராக வேண்டும். 

நடப்பை நகர்த்திய விதம் மிக நன்று... 
Link to comment
Share on other sites

உலகில் தைரியமற்ற பாம்புகள் தான் ஒருவரின் சூழ்நிலையை தனக்குச் சாதகமாக்கி படர நினைக்கும். இது ஒரு கோழைப் பாம்பு.

 

இங்கு பாம்புகள் எவ்வளவு அதிகமோ அதே போன்று பற்றிப் படர்ந்து தன் வலைக்குள் சிக்க வைக்கும் சிலந்திகளும் அதிகம். பாம்புகளும் சிலந்திகளும் கொண்டது தான் இந்த சமூகம்.

 

இக் கதையில் கையாளப்பாட்ட சொற்களில் தனித்து ஒட்டாமல் நிற்கும் ஒரு சொல்லாக 'தனம்' என்று சொல்லு இருக்கு.

 

Link to comment
Share on other sites

பாம்பிற்கு போட்டியாக ஒரு சிலந்தி கதை எழுதினால் போச்சு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லைட் அணைந்தால்   அனேக ஆண்கள் பாம்புகள் தான் ,

அதற்கு இடம் பொருள் காலம் இல்லை .

 

இடம் பொருள் காலம் இல்லை என்றால் லைட் அணைத்தாலும் ஒன்றுதான் விட்டாலும் ஒன்றுதான் அர்யூன். :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தரமான உருவகக் கதைக்குப் பாராட்டுக்கள் . பாம்புகள் என்றும் , எதிலும் , எங்கேயும் நீக்கமற நிறைந்திருக்கும் . நாம்தான் இந்தப் பாம்புகளில் இருந்து  அவதானமாக எம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் . என்னவாக இருந்தாலும் பாம்புக்குப் பால் ஊற்றுவது எமது பிழை தானே ???  அத்திபூத்த உருவகக் கதைக்குப் பாராட்டுக்கள் .

 

நன்றி கோமகன்.

சூழலை சாதகமாகப் பயன்படுத்தி விழுங்கும்  பாம்புகளிடம் அவ்வளவு சீக்கிரம் தப்பித்துவிடமுடியாது. இக்கருத்தின் மூலம் எதிர்பாலரிடம் தவறு இருக்கிறது என்று நிறுவ முயல்கிறீர்கள். இலகுவாக குற்றச்சாட்டுகள் வைத்து இரு பாலரும் வாதிடலாம். கட்டற்ற சுதந்திரம், எதனையும் எவரும் எப்படியும் ஆளலாம் என்னும் பயமற்ற தன்மையும் இப்படியான நிகழ்வுகளைத் தோற்றுவிக்கும் அதற்கு ஆண் பெண் இரு பாலரும் விதிவிலக்கல்ல. :rolleyes:

 

நாக பாம்பா, நல்ல பாம்பா, தண்ணிப்  பாம்பா

எல்லாவற்றிற்கும் கொத்துவதுதான் குணம்.

 

அப்ப கொத்தாத பாம்பே இல்லை தப்பிலி? :D

 

Edited by வல்வை சகாறா
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் கொஞ்சம் சந்தேகமாய் உள்ளது.விரைவில் யாழ்களமாடும் தேர்தல் வருமோ என்ற கேள்வியுமுண்டு.

:rolleyes:

 

ஏன் மறுபடியும் என்னை பாம்புக்குரூப்பிற்கு தலைவியாக்கத் திட்டமா? நடக்காது நீலப்பறவை :icon_mrgreen:

நான் நினைக்கிறேன் இந்தப்பாம்புக்கு பொத்துறது தான் குணம் போல :D

 

கொத்துறதா? பொத்துறதா? :blink::unsure:

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" / பகுதி: 15     எமது முன்னோர்கள் நல்ல மருந்து ஒன்றைக் கண்டு பிடித்து அதை உடல் நலியும் நேரத்தில் உண்மையாகக் கடைப்பிடித்து ஒழுங்காக நடை முறைப்படுத்தி நலத்துடன் வாழ்ந்து சென்றனர். அந்த அற்புத மருந்துக்கு பெயர் தான் உண்ணாவிரதம் ஆகும். மிருகங்கள் பொதுவாக தமது உடம்பு நோய்வாய் படும் பொழுது சாப்பிடுவதை நிறுத்தி விடுகிற உணர்வைப் பெற்று சும்மா இருந்து அதன் மூலம் அது குணமடைவதாக ஒரு குறிப்பு உண்டு.   எனவே மிருகத்தில் இருந்து பரிணமித்த மனிதனுக்கு அது தெரிந்து இருக்க அதிக வாய்ப்புண்டு. உதாரணமாக உண்ணாவிரதம் மூலம் தேகத்தில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தியானது அதிக வலிமையடைதலும், அதனால் நீண்ட நாட்கள் நலமுடன் வாழுதல் ஆகும். அது மட்டும் அல்ல, இந்த உண்ணாவிரதம் குழப்பமில்லாத, பத்தியம் என்று கடுமையான விதி முறைகள் இல்லாத, மிகவும் பத்திரமான மருந்து எனலாம். மேலும் உண்ணா விரதத்தால், உடல் இலேசாக மாறுகிறது. தூய்மையடைகிறது. மூளை வளம் அதிகரிக்கிறது.   இன்று உண்ணாவிரதம் இருப்பது கணிசமான இதய ஆரோக்கியத்துக்கு வழி வகுத்து இருப்பதாக ஆய்வு மூலமாகவும் தகவல் வெளியிடப் பட்டுள்ளது.   "நோயிலே படுப்பதென்ன பெருமானே நீ நோன்பிலே உயிர்ப்பதென்ன பெருமானே"   என்று பாரதியும் பாடுகிறான். அதாவது ”நோய் வந்த போது நீ சோர்ந்து படுத்துக் கொள்கிறாய். ஆனால் நோன்பிருக்கும் போது உண்ணாதிருந்தும் மிகத்தெம்புடன் உற்சாகமாய் காணப்படுவதன் காரணம் என்ன” என்று வியக்கிறான் பாரதி.   உண்மையில் உண்ணா நோன்பு இருக்கும் போது உயிராற்றல் உடலில் உள்ள கழிவுப் பொருள்களை எவ்வளவுக்கு முடியுமோ அவ்வளவுக்கு வெளியேற்றி விடுகிறது. இதனால் உடலின் உறுப்புகள் தூய்மையடைகின்றன. மனமும் தூய்மை யடைகிறது. உண்மையாக உயிர்த்தெழ முடிகிறது என்று பாரதி சுட்டிக் காட்டுகிறான். நோன்பு அல்லது பசித்திரு என்றால் பட்டினி கிடப்பது அல்ல. வயிற்றைக் காயப்போடுதல் ஆகும். இதை சித்த ஆயுர் வேத மருத்துவர்கள் மிகச்சிறந்த மருந்து என்பார்கள். இல்லாமையால் பட்டினி கிடப்பதற்கும், எல்லாம் இருந்தும் உண்ணாமல் நோன்பு இருப்பதற்கும் நிறைய வேறுபாடு உண்டு. இது உடலுடன் நேரடியாக சம்பந்தப் பட்டது அல்ல, மனித உணர்வுடனும் அவனது ஆளுமையின் ஆற்றலுடனும் தொடர்புடையது. அவனுக்கு எல்லா வசதியும் இருந்தும், அவன் தன் புலன் அடக்க, உணர்ச்சி அடக்கி அதன் மூலம் அவனது உணர்வு விழிக்க, உயிர் ஒங்க, அவன் கடை பிடிக்கும் ஒரு ஒழுக்கம் அல்லது ஒரு செயல் முறை தான் இந்த விரதம் என்பது ஆகும்.   சுருக்கமாக விரதம் என்பது மனதை ஒரு முகப் படுத்தல் அல்லது புலன்களை அடக்குதல் என நாம் கூறலாம். மனிதரை நெறிப்படுத்துவதற்கும் முறைப்படுத்துவதற்கும் தோன்றிய நெறிகளில் ஒன்று இந்த விரதம் என்றும் கூறலாம். மேலும் இந்த நோன்பிற்கு சிறந்த அடையாளம் என்ன என்பதை பார்த்தால் அது கட்டாயம் அவனின் ஒழுக்கமாகத்தான் இருக்கும்.   பழமையான கலாச்சாரங்களில் [In primitive cultures], ஒரு போருக்கு போகும் முன்பு ஒரு ஒழுக்கத்தை பேண, மனதை ஒரு முகப் படுத்த, நோன்பு இருக்கும் படி பெரும்பாலும் கோரப்பட்டனர். அதே போல பூப்படைதல் சடங்கில் ஒரு பகுதியாகவும் நோன்பு இருந்ததும் குறிப்பிடத் தக்கது. ஒழுக்கத்தாலே எல்லாரும் மேம்பாட்டை அடைவராவர் அதனின்று தவறுதலால், அடையக் கூடாத பொருந்தாப் பழியை அடைவர் என்று திருவள்ளுவர் தனது குறள் 137 இல்   "ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி"   என்று கூறியது போல உயர்ந்தோர் என்பவர் ஒழுக்கத்திற்கு சிறந்தோர் என்பதையும் அதுவே தமிழர் பண்பு என்பதையும் நாம் மேலும் அறிகிறோம். இன்று நம்மில் பலர் விரதம் இருந்து வருவதாக கூறிவதை நாம் அன்றாட வாழ்க்கையில் கேட்க்கிறோம். ஆனால் எல்லோரும் தமது மனதை ஒரு முகப் படுத்துகிறார்களா அல்லது புலன்களை அடக்கு கிறார்களா விரத்தின் உயரிய அடையாளமான ஒழுக்கம் – நேர்மை அங்கு எல்லோரிடமும் இருக்கிறதா என்பது ஒரு கேள்விக்குறியே?   பொதுவாக விரதம் என்பது ‘மனவலிமை கொள்ளுதல் ‘ அல்லது ‘துன்பத்தினைத் தாங்குதல் ‘ என்றும் பொருள் கொள்ளலாம். தாமே துன்பத்தினை தாங்கிக் கொண்டு, தங்களை நெறிப்படுத்திக் கொள்ளும் நெறி இதுவாகும். இது ஒரு குறிக்கோளைக் கொண்டும் உள்ளடக்கியது.   உதாரணமாக அன்று சேர மன்னன் பெருஞ்சேரல் இரும்பொறைக்கும், சோழ அரசன் கரிகாலனுக்கும் சண்டை வந்தது. அந்தச் சண்டையில் பெருஞ்சேரலுக்கு முதுகில் அம்பு தைத்து காயம் ஏற்பட்டது. அதனால் அவர் நோன்பு இருந்து [வடக்கிருந்து] உயிர் துறந்தார். அன்று பெண்கள் தாம் விரும்பும் ஆடவனைக் கணவனாகப் பெறுவதற்காகத் தை நோன்பு நோற்று நீராடுவார்கள். அதன் வழியில் திருமாலை கணவனாக அடைய வேண்டி ஆண்டாளும் பாவை நோன்பு இருந்தாள்.   மேலும் உடலுக்கு நலம் விளைவிப்பதற்காக உண்ணாவிரதம் பொதுவாக இருந்தாலும், உலகின் பார்வையை தம்பக்கம் கவர்ந்திழுக்க, எதிரிகளைத் தங்கள் பக்கம் வசப்படுத்த, பல நிபந்தனைகளை பிறர் மேல் அல்லது நிறுவனங்கள் மேல் அல்லது அரசின் மேல் விதித்து வெற்றி பெற, உண்ணா விரத்ததைக் கடைபிடிப்பவர்களும் பலர் உண்டு. உதாரணமாக, இன்று மகாத்மாக காந்தி, ரொபேர்ட் ஜெரார்ட் சான்ட்ஸ் (Robert Gerard Sands, அல்லது பொதுவாக பொபி சாண்ட்ஸ் (Bobby Sands], திலீபன் என சிலர் தமது நாட்டின், இனத்தின் விடுதலைக்காக நோன்பு இருந்தனர், அதில் பொபி சாண்ட்ஸ், திலீபன் சாகும் வரை உண்ணா விரதம் இருந்து, தாம் கடைபிடித்த ஒழுக்கம்,நோக்கம் ஆகியவற்றில் இருந்து எள்ளளவும் விலகாமல் தம் விலை மதிப்பற்ற உயிரை அங்கு தியாகம் செய்தவர்கள் ஆவார்கள்.   ஒரு வேளை, ஒரு நாள் உண்ணாவிரதம் என்கிற போது, உடல் உறுப்புக்கள் ஓய்வு பெறுகின்றன. உல்லாசம் அடைகின்றன. பல நாட்கள் பட்டினி என்றால் உடல் என்ன செய்யும்? எவ்வாறு அந்த வறட்சியை சந்திக்கும்? அத்தகைய நிலைமைக்கு ஆளானவர்கள் இவர்கள் ஆவார்கள். ஆகவே நோன்பில் ஒரு ஒழுக்கம் ஒரு நோக்கம் காண்கிறோம்.   பொதுவாக இன்று மத நம்பிக்கை கலந்த ஒரு பண்பாடாக, மரபாக பல இனங்களால் பின்பற்றப் படும் ஒன்றாக நோன்பு அல்லது விரதம் காணப்படுகிறது. உதாரணமாக இஸ்லாமிய மக்கள் ‘ரம்ஜான்’ என்று ஒரு மாதம் நோன்பிருப்பதும், கிறித்தவர்களும் ‘லென்ட்’ (Lent is a time of repentance, fasting and preparation for the coming of Easter) என்று நோன்பு இருப்பதும், இந்துக்கள்,சைவர்கள் சிவராத்திரி, நவராத்திரி, கந்த சஷ்டி, தைப்பூசம் என பலதரப் பட்ட விரதம் இருப்பதும் ஆகும். நம் அலைபேசியோ அல்லது கணினியோ சற்று மெதுவாக வேலை செய்தால், நாம் அதை முற்றிலுமாக அணைத்து விட்டு, மீண்டும் மறுபடி அதை துவக்குவம் அல்லவா, அது போலத்தான் நம் உடலில் ஜீரண கோளாறு, இப்படி பல உபாதைகளுக்கு, நாம் முதலில் செய்ய வேண்டியது, உணவைத் தவிர்த்து அல்லது குறைத்து ஒரு ஒழுங்கை கடைபிடிப்பது ஆகும். இப்படி செய்வதால், உடலிலுள்ள தேவையற்ற கொழுப்புகளை விரட்டி, ஆரோக்கியமான உடலை எளிதில் பெறலாம் என்பதும் குறிப்பிடத் தக்கது.     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   பகுதி: 16 தொடரும்         
    • அப்ப  இனி அடிக்கடி ரெய்டு எனும் பெயரில் மோடி  கொள்ளை நடக்கும் .
    • தமிழகம் பாண்டிச்சேரியில் திமுக கூட்டணி 40/40 தொகுதிகளையும் கைப்பற்றி  க்ளீன் ஸ்வீப் செய்தது!
    • அப்ப‌ பெரிய‌ ஜ‌யா சின்ன‌ ஜ‌யாவுக்கு ஆப்பு    அன்பு ம‌ணியின் ம‌னைவி தானே வெற்றி அதிக‌ வாக்கு வித்தியாச‌த்தில் முன் நிலையில் நின்றா😮
    • "முதலில் அவர் எங்கு உள்ளார் என்று அறிய ஆவல் ?" நான் என் பெயரை, யாழ் மத்திய கல்லூரியில் சாதாரண, மற்றும் உயர் வகுப்பு கற்கும் பொழுது 'அகதி' என்றே என் புத்தகத்தில் குறிப்பேன்  அப்பொழுது இந்த 'அகதி' க்கு ஒரு பொருள் இருப்பது தெரியாது  அப்பொழுது இந்த 'அகதி' 'அ' த்தியடி 'க' ந்தையா 'தி' ல்லைவிநாயகலிங்கம் மட்டுமே! இன்று யாதும் ஊரே, யாவரும் கேளிர், மூன்று பிள்ளைகளிடமும் மூன்று நாட்டுக்கு ஓடித் திரிகிறேன்!   "ஈசன் ஒரு நம்பிக்கைக்கு மட்டுமே  ஈனப்புத்தி தவிர்த்து தரமாக வாழ்!  ஈடிகை எடுத்து எதோ எழுதுகிறேன்  ஈமஅழல் வானுறஓங்கி எரியும் வரை!!"    அன்று    "குழந்தைப் பருவம் சுமாராய்ப் போச்சு     வாலிபப் பருவம் முரடாய்ப் போச்சு  படிப்பு கொஞ்சம் திமிராய்ப் போச்சு  பழக்க வழக்கம் கரடாய்ப் போச்சு!" பின்  "நாற்பது வயது தொப்பை விழுகுது  கருத்த முடி நரை விழுகுது  ஐம்பது வயது ஆட்டிப் படைக்குது  குடைச்சலும் வலியும் எட்டிப் பார்க்குது சோர்வான உடல் எதோ கேட்குது  ஐம்பதில் ஏறியதில் மகிழ்ச்சி அடையுது!" "ஆடிப் பாடுது துள்ளிக் குதிக்குது    அறுபதை தாண்டி அலைக்கழிப்பு தருகுது    வேடிக்கை வாழ்வை நினைவு ஊட்டுது    மருத்துவம் படிக்க புத்தகம் தருகுது   தலைமுதல் கால் விரல்கள் வரை படிக்காத பாடங்களை தேடச் சொல்லுது!" "கேட்காத வியாதிகளை அவிழ்த்து விடுகுது   பச்சைக் காய்கறி பழக் கலவையை [சாலட்] பகலும் இரவும் சாப்பிட வைக்குது   விரலை குத்தி சீனி பார்க்குது   நடையும் பயிற்சியும் வாழ்வாய் போகுது  கொஞ்சம் தவறினால் நீரிழிவு கொல்லுது!" "சிரித்த முகத்துடன் கட்டிப் பிடிக்குது கோலம் மாறும் காலம் அதுவென  அறுபத்தி ஐந்து ஓய்வைச் சொல்லுது  பேரப் பிள்ளை தோளில் ஏறுது எழுபது  தாண்டி எண்பது வருமோ?    ஞானம் பிறந்து சவக்குழி தேடுமோ!"   பொறுத்திருந்து பார்க்கிறேன் !!!   எல்லோருக்கும் எனது நன்றிகள்   
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.