Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

600 விருப்புப்புள்ளிகளை பெற்ற உண்மை தமிழன் இசைக்கலைஞனை வாழ்த்துவோம் ...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அன்பு... பண்பு.... பணிவு....பகிடி  இவைகளுக்கு கிடைத்த பச்சைகள்தான் இவை.

இவை வெறும் பச்சைகள் அல்ல ஓவரு மனிதருக்கும் இருக்க வேண்டிய இச்சைகள்.
 
ஒரு மனிதன் நல்லவனாகவும் கெட்டவனாகவும் இருக்கமுடியாது.
நல்லவனாக அல்லது கெட்டவனாகத்தான் இருக்க முடியும். என்ற முடிவை இயக்க மோதல்கள் உருவான போதே மிக சிறிய வயதிலேயே நான் கற்று கொண்டேன். 
இங்கே சிலர் முறிவதட்கு முன்  முறிந்த பின் என்று இரட்டை வேடம் போட்டு கருத்து வைப்பார்கள். அவர்களை அவ்வப்போது இனம் கண்டு வைத்து. தகுந்த இடத்தில் வைத்து   தகுந்த அடி கொடுக்கும் இசையின் தாக்குதல்கள்  அவருக்கும் என்னை போன்ற அதே சிந்தனை இருக்குமோ என்று சிந்திக்க தோன்றும்.
  • Replies 62
  • Views 4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

600 பச்சை புள்ளிகளை பெற்ற இசைக்கு வாழ்த்துக்கள்.அண்மையில் ஒரு கள உறவுடன் மிகவும் பொறுமையாக வாதாடியது என்னை மிக கவர்ந்தது. ஆத்திரப்பட்டு கருத்துக்களை எழுதுவோர் இவரிடம் இருந்து படிக்க வேண்டும்.

 

உண்மைதான்... நுணா. அந்த உரையாடல் நட‌க்கும் போது... நானும் பார்த்துக் கொண்டிருந்தேன். இடையில் பூந்து "அட்டாக்" பண்ணுவமோ... என்று, கை துறுதுறுத்துக் கொண்டிருந்த்தது. இசையின்... பதில்களால், ஆளே... மெல்ல நழுவி விட்டார். :D

  • கருத்துக்கள உறவுகள்

600 பச்சை புள்ளிகளை பெற்ற இசைக்கு வாழ்த்துக்கள்.அண்மையில் ஒரு கள உறவுடன் மிகவும் பொறுமையாக வாதாடியது என்னை மிக கவர்ந்தது. ஆத்திரப்பட்டு கருத்துக்களை எழுதுவோர் இவரிடம் இருந்து படிக்க வேண்டும்.

என்னை தானே அண்ணா சொல்லுறீங்கள்.ஹிஹிஹி  :D

  • கருத்துக்கள உறவுகள்

அகூதா அண்ணாவுக்கும் நெடுக்ஸ் அண்ணாவுக்கும் இசை அண்ணாவுக்கும் வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள் இசைக்கலைஞன்...

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் இசை :D

சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் இசைக்கலைஞனின் மென்மையான கருத்துக்களை இரசித்து வாசிக்கிறேன்.

வாழ்த்துக்கள்.

அகூதாவுக்கும். நெடுக்ஸூக்கும், இசைக்கும்  வாழ்த்துகள். :) 

வாழ்த்துக்கள் இசைக்கலைஞன் அண்ணா.    :)
 

வாழ்த்துக்கள் இசை

இசை அண்ணாவுக்கும், அகூதா அண்ணாவுக்கும், நெடுக்ஸ் அண்ணாவுக்கும், வாழ்த்துக்கள்.


 

 

  • கருத்துக்கள உறவுகள்

முதற்கண் வாழ்த்துக்களை ஆரம்பித்து வைத்த தமிழ்சூரியனுக்கு நன்றி..!  :D  இப்படியான திரிகள் வரும்போது எனக்கு சிறிது வெட்கம் ஏற்படுவது தவிர்க்க முடியாததாக இருக்கு.. :lol:

 

அகூதா, நெடுக்ஸ், நிழலி மற்றும் இன்னோரன்ன யாழ் உறவுகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்..!

 

தமிழ்சூரியன்: நேரில் சந்திக்காத உறவாக இருந்தாலும் பலநாட்கள் பழகிய ஒரு நண்பன்போல் மனக்கண்முன் தோன்றுபவர் எங்கள் தமிழ்சூரியன்..! இசையமைப்பு, வாத்திய இசை என்று பல புலமைகளைப் பெற்ற தமிழ்சூரியனுடன் நானும் யாழ்களத்தில் இணைந்திருந்தேன் என்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியும், பெருமையும். Tamilsooriyan என்று ஆங்கிலத்தில் பதிந்திருந்த காலமும் நினைவில் வந்து போகிறது..! மாறாத லட்சியம், நெகிழ்வான பாதை என்பதில் எங்கள் இருவருக்கும் பலத்த ஒற்றுமை உண்டு என்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி..!

 

வேண்டுகோள்: மாற்றுக்கருத்துக்காரரிட்ட கொஞ்சம் அடக்கி வாசிங்க சார்..! :lol:

 

நிழலி: நிழலியை ஒரு பன்முகத் திறமையாளராக யாழில்தான் அறிந்துகொண்டேன். பல வருடங்களின் பின் நேரில் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி..! யாழ் நின்றுபோகாமல் தொடர்ந்து ஓடிக்கொண்டிருப்பதில் குறிப்பிடத்தக்க பங்கு வகிப்பவர். வாழ்த்துக்களுக்கு நன்றி நிழலி..

 

வேண்டுகோள்: கொஞ்சம் அடிச்ச உடனேயே கண்ணு சொக்குது..! குறைச்சு வாசிங்க சார்..!! :lol:
 

தமிழரசு: செய்திகளை எப்படித்தான் ஓயாமல் இணைக்கிறாரோ என்று வியந்ததுண்டு..! :unsure: இதற்கு முன்னர் வேறு பெயரில் வந்தவர் என்று நினைக்கிறேன். (பொய் சொல்லக் கூடாது.. :lol: ) செய்தி இணைப்பினால் எத்தனை பேரை செய்தி உலகின் பக்கம் வைத்திருக்கிறார் என்பதை இவர் நினைத்துப் பார்ப்பாரோ தெரியாது..! ஆனால் அந்தச் சேவை அளப்பரியது..! நன்றி தமிழரசு..!!

 

வேண்டுகோள்: செய்தியை ஏற்கனவே இணைச்சிட்டாங்களான்னு பார்த்திட்டு இணைங்க சார்..!! :D

 

துளசி: ம்ம்ம்.. நான் என்னத்தை எண்டு சொல்லுறது.. :(:D  யாழில் ஒரு பெண் நெடுக்ஸ் என்றால் அது இப்போதைக்கு துளசிதான்..! :lol: விடாமல் சிலம்பம் ஆடுவார்..! பொறுமையும் கூடியுள்ளது..! அலையக்காவினால் விரும்பி விதானை பதவி அளிக்கப்பட்டவர்.. :lol:  நன்றி துளசி..!

 

வேண்டுகோள்: வேறை என்னத்தை கேக்கப் போறன்.. சீக்கிரம் கல்யாணத்தை கட்டுங்க..! :D

 

சுண்டல்: யப்பா.. சுண்டலைப் பற்றி என்னத்த சொல்லுறது? :D யாழ்களத்தை கலகலப்பா வச்சிருக்கிறது எப்படி என்றால் அது சுண்டலைக் கேட்டுத்தான்..! முன்பு அடிக்கடி மன்மத பாணங்களை "மேல்நோக்கி" :wub: விட்டுக்கொண்டிருந்தார்..! இப்ப பழம் புளித்துவிட்டது போல் இருக்கு..! :D நன்றி சுண்டல்..!!

 

வேண்டுகோள்: போடுற கடலையை சீரியசா போடுங்க சார்..! :D

 

திருத்திய காரணம்: எழுத்துப்பிழை

Edited by இசைக்கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

வேந்தன்: நீங்கள்தான் அந்த முத்தமிழ்வேந்தனா என்று அடிக்கடி குழம்புவது உண்டு..! :rolleyes: தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர் என நினைக்கிறேன்..! தமிழர் விடுதலைக்கான ஒருங்கிணைந்த சக்தியின் கூறாக உங்களைக் காண்கிறேன். தொடரட்டும் உங்கள் நற்பணி. நன்றி வாழ்த்துக்களுக்கு வேந்தன்.

 

வேண்டுகோள்: அடிக்கடி களத்துக்கு வாங்க சார்..! :D

 

தமிழ்31: இந்தத் தமிழும் ஒரு பழைய முகம் என்பதில் எனக்கு அசைக்குமுடியாத நம்பிக்கை உண்டு. :D அப்படி இல்லையென்றால் கோவிக்காதீங்கப்பா.. :unsure: அதிகம் எழுதுவதில்லை.. திண்ணையில் அடிக்கடி காணக்கிடைப்பார்..! :D வாழ்த்துக்களுக்கு நன்றி தமிழ்..! :D

 

வேண்டுகோள்: கொஞ்சம் உங்க கதையையும் அவிட்டு விடுங்க..! :D

 

தமிழ்சிறி: என்னன்னு சொல்லுவேன்.. என்னாத்தை சொல்லுவேன்.. எங்கை போய் சொல்லுவேன்.. :D இனிய அன்பர் தமிழ்சிறி களத்தின் ஒரு தூண் என்றால் மிகையாகாது..! :rolleyes: நாலு வசனம்தான்..! ஒன்றில் மக்கள் சிரிப்பார்கள்..! இல்லாவிட்டால் மட்டுக்கள் வெட்டிவிட்டு பெருமூச்சு விடுவார்கள்..! :lol: வாழ்த்துக்களுக்கு நன்றி சார்..!

 

வேண்டுகோள்: நீங்கள் கட்டாயம் வெள்ளிக்கிழமை விரதம் படம் பார்க்க வேணும்..! :icon_mrgreen:

 

அலைமகள்: அலையக்கா ஒரு மங்கையர் திலகம்.. மொன்றியல் மோனாலிசா.. :D முகநூல்வரையில் நட்பு உள்ளது..! நீங்கள் கருத்துக்கள் எழுதுவது குறைவு..! வேலைகள் இருக்கும்தானே..! :D இருந்தாலும் இன்னும் எழுதினால் கூடுதல் மகிழ்ச்சி.. :D வாழ்த்துக்களுக்கு நன்றி..!

 

வேண்டுகோள்: ஒன்றுமில்லை.. :( பிறகு Mind your own business சொல்லிடுவீங்கள்.. :( :D 

கிருபன்: நடமாடும் அறிவுக்களஞ்சியம்..! ஓடித்திரியும் வாசிகசாலை..! :D எப்பிடித்தான் புத்தகங்களைப் படிக்கிறாங்களோ என்று சந்தேகம் எனக்கு வருவதுண்டு.. (சின்ன வயதில் நாங்கள் சரியான புத்தகங்களை வாசிக்காமல் விட்டதுக்கு அவர் என செய்ய முடியும்? :D ) பொறுமையாகப் பதில் சொல்லக்கூடியவர்..! சிறிது மமதையும் உண்டு, கொண்ட அறிவின் காரணமாக..! :D வாழ்த்துக்களுக்கு நன்றி..!

 

வேண்டுகோள்: எனக்கு புத்த வாசிப்பு ஆர்வம் வாறமாதிரி ஒரு புத்தகத்தை பரிந்துரை செய்யுங்க..! :blink: (சரோஜாதேவி வேண்டாம்.. :D  )
 

திருத்திய காரணம்: எழுத்துப்பிழை

 

Edited by இசைக்கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

இசைக்கு எனது வாழத்துக்களும்.இசைக்கு நானும் விருப்பு வாக்களித்து இருக்கிறேன்.அவரின் நகைச்சுவை கருத்துக்கள் மட்டும்மல்ல என்னை வெகுவாக கவர்ந்த விடையம் அவர் வசன்ஙகளிற்கிடையில் எங்கு எந்த முக்குறியை போட வேண்டும் என்று தெரிவு செய்வதுதான்.அருமையான சகைச்சுவை உணர்வுள்ள  மனிதன்.மீன்டும் வாழ்த்துக்கள் :) .

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்  இசை  அறுநூறு பச்சைப்புள்ளி  உங்கள் எழுத்துக்கு  மிகவும் குறைவு , எல்லோரையும் கவர்ந்து இழுக்கும் 

நகைச்சுவை மிகுந்த எழுத்துக்கு சொந்தக்காரர் நீங்கள்   திரியோ   திண்ணையோ  உங்கள் பெயரைக் கண்டவுடன்  என்னுடைய எலி தானாக தேடிப்போய் நிற்கின்றது . ஏற்கனவே வாழ்த்தியிருந்தாலும் :D  இன்னுமொருமுறை  வாழ்த்துவதில்  சந்தோசம்  வாழ்க ,வளர்க உங்கள் எழுத்துப் பணி 

  • கருத்துக்கள உறவுகள்

அல்வாயன்: அல்வாயன் களத்தில் இணைந்து சில வருடங்களாகிவிட்டாலும் இப்போதுதான் அதிகமாக எழுதுகிறார்..! இனப்பற்றாளர்..! எடக்கு மடக்காகப் பேசுபவர்களை அப்பள வாயர் ஆக்கிவிடுவார்..! :D

 

வேண்டுகோள்: இன்னும் கொஞ்சம் நிறையவே எழுதுங்க..!  :D 

 

கறுப்பி: ஆஸ்தான செய்தி இணைப்பாளர் பல ஆண்டுகளாக..! :rolleyes: தொடர்க உங்கள் சேவை..! வாழ்த்துக்களுக்கு நன்றி..!

 

வேண்டுகோள்: அந்த டுபாய் மஞ்சள் பையை இன்னும் பத்திரமா வச்சிருக்கிறீங்களா..!? :unsure: :D

 

மல்லை: சிந்தனை வேகம் முயல் வேகம்..! அதை தட்டச்சு செய்ய கஷ்டப்படுபவர்..! :D இவரது கருத்துக்களை ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற யாழ்களத்தில் பலத்த போட்டி நிலவுகிறது..! :unsure::D நிலையான கொள்கைக்காரர். வாழ்க வழமுடன். நன்றி வாழ்த்துக்களுக்கு மல்லை.

 

வேண்டுகோள்: கோனார் நோட்ஸ் மாதிரி பொழிப்புரையும் கிடைக்குமா..!? :D 

 

அகூதா: இவரைப்பற்றி சொல்ல என்ன இருக்கு? :( இப்படியும் ஒருவர் செயற்படமுடியுமா என வியக்க வைப்பவர்..! மனச்சாட்சியை அடிக்கடி தட்டிக் கேட்பவர். :unsure: எங்கிருந்தாலும் வாழ்க. நன்றி வாழ்த்துக்களுக்கு சார்..! :D

 

வேண்டுகோள்: கலைஞரை பின்னுக்கு தள்ளிட்டீங்களா..?!  :rolleyes: :D 

 

விசுகு அண்ணா: என்னால் சந்திக்க முடிந்த ஒருசில உறவுகளுள் ஒருவர்..! நெஞ்சில் இருப்பது தொண்டை வரைக்கும் வந்தாலும் சொல்லமுடியாமல் தவிப்பவர்..! :rolleyes: காலம் கனியும்வரை காத்திருப்பவர்..! நல்லதே நடக்கும் ஐயா..! வாழ்க வளமுடன்.. வாழ்த்துக்களுக்கு நன்றி அண்ணா..

 

வேண்டுகோள்: பெரிதாக ஒன்றுமில்லை.. (காலம் ஒருநாள் மாறும்.. நம் கவலைகள் யாவும் தீரும்..!) :rolleyes: 

Edited by இசைக்கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

 கிருபன் அண்ணாவும் அதை அவதானித்துள்ளார் போலிருக்கு. அவர் கருத்துகளும் அதை தான் சுட்டிக்காட்டுகின்றன. :rolleyes:

 

 

இதுக்கு ஏன் முழுசுவான்? நேரம் கிடைக்காமல் யாழ் பக்கம் இப்ப வருவது குறைவு..  என்னதான் நடக்கின்றது என்று பார்த்தபோது இசைக்கலைஞன் திண்ணையில் எறிகணைப் பொழிவுக்குள் நின்றமாதிரி இருந்தது.  எனக்கு காதுமடல்கள் மடங்கி வாலைக் பின்னங்கால்களுக்குள் செருகிக்கொண்டு நின்ற நாய்க்குட்டிதான் நினைவுக்கு வந்தது. :lol:

 

 

கிருபன்: நடமாடும் அறிவுக்களஞ்சியம்..! ஓடித்திரியும் வாசிகசாலை..! :D எப்பிடித்தான் புத்தகங்களைப் படிக்கிறாங்களோ என்று சந்தேகம் எனக்கு வருவதுண்டு.. (சின்ன வயதில் நாங்கள் சரியான புத்தகங்களை வாசிக்காமல் விட்டதுக்கு அவர் என செய்ய முடியும்? :D ) பொறுமையாகப் பதில் சொல்லக்கூடியவர்..! சிறிது மமதையும் உண்டு, கொண்ட அறிவின் காரணமாக..! :D வாழ்த்துக்களுக்கு நன்றி..!

 

வேண்டுகோள்: எனக்கு புத்த வாசிப்பு ஆர்வம் வாறமாதிரி ஒரு புத்தகத்தை பரிந்துரை செய்யுங்க..! :blink: (சரோஜாதேவி வேண்டாம்.. :D )

 

எல்லாம் மில்க்வைற் தொழிலபதிர் கனகராசாவின் புண்ணியத்தில் "வாசிப்பதால் மனிதன் பூரணமடைகின்றான்" என்ற காந்தியின் வாசகங்களை வாசித்ததால் பூரணத்துவம் வேண்டும் என்ற வெறி சின்ன வயதிலேயே வந்துவிட்டது. வாசிக்காமல் விட்டால் பூரண மனிதன் என்று மற்றவர்கள் நினைத்துவிடுவார்கள் என்பதாப் தொடர்ந்தும் வாசிக்கின்றேன் :icon_mrgreen:

 

ஆணவம், செருக்கு, மமதை எல்லாம் அளவாக இருக்கு. எதையும் விலக்காமல் எல்லாவற்றிலும் அளவாக வைத்திருந்தால்தான் மனிதனாக இருக்கமுடியும். இல்லாவிட்டால் வாய் பேசாத பிள்ளைப் பூச்சியாக அல்லது கடித்துக் குதறும் கொடூர விலங்காகவல்லவா இருப்பேன்!

 

புத்தகம் வாசிக்க ஆர்வம் வரவேண்டும் என்றால் சரோஜாதேவியில் இருந்து ஆரம்பிப்பதில் தப்பில்லை. என்னமாக் கற்பனை பண்ணுகின்றார்கள் என்பதை விட அதை எப்படி எழுத்தில் வடிக்கின்றார்கள் என்ற வியப்பு வந்துவிடும் :wub:

வாழ்த்துக்கள் இசை.

ஸ்மைலியை தடை செய்த பின் உங்கள் எழுத்து வீச்சு அதிகரித்துள்ளது.  :D 
 

நேர்முகத் தேர்வு, இசை ஆய்வு, யாழில் களேபரம் போன்ற ஆக்க பூர்வமான ஆக்கங்களையும் அடிக்கடி தரவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் களேபரம் மூலம் பிரபல்யம் அடைந்த இசைக்கலைஞனுக்கு.. அதுக்கு முதல் டங்குவார் அற அற திரிஞ்சவருக்கு.. வாழ்த்துக்கள்..! :):lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இசைக்கலைஞனுக்கு அறுநூறு பச்சை! நல்லவிசயம்.....வாழ்த்துக்கள்! எண்டாலும் தம்பியருக்கு லேடீஸ் சயிற்றாலை பயங்கர சப்போர்ட் இருக்கெண்டு என்ரை மனதிலை படுது  :D

  • கருத்துக்கள உறவுகள்

அமசடக்காக  அறு நூறு பச்சை........வாழ்த்துக்கள். :D

  • கருத்துக்கள உறவுகள்

அமசடக்காக  அறு நூறு பச்சை........வாழ்த்துக்கள். :D

நானும் உங்களுக்கு வாழ்த்து சொல்லித் தான் ஆக்குவேன்..நீங்கள் சரியா 100 பச்சை எடுத்து விட்டீங்கள்...எல்லாரும் ஓடியந்து எங்கட நிலா அக்காவை வாழ்த்துங்கோ....

  • கருத்துக்கள உறவுகள்

ஒ...........இப்பொது தான் கவனித்தேன் நன்றி பையா........1000 வந்த பின் வாழ்த்துங்கோ.

இதுக்கு ஏன் முழுசுவான்? நேரம் கிடைக்காமல் யாழ் பக்கம் இப்ப வருவது குறைவு..  என்னதான் நடக்கின்றது என்று பார்த்தபோது இசைக்கலைஞன் திண்ணையில் எறிகணைப் பொழிவுக்குள் நின்றமாதிரி இருந்தது. எனக்கு காதுமடல்கள் மடங்கி வாலைக் பின்னங்கால்களுக்குள் செருகிக்கொண்டு நின்ற நாய்க்குட்டிதான் நினைவுக்கு வந்தது. :lol:

திண்ணையில் எறிகணைப்பொழிவுக்கு உள்ளாக முன்னமே ஒரு திரியில் அவருக்கெதிராக எறிகணைப்பொழிவு இடம்பெற்று அதை அவர் மலர்க்கணைகளாக ஏற்றுக்கொண்டார். :lol: நாங்கள் கண்டுகளித்த அவர்களுக்கிடையிலான பாசமலர் பிணைப்பை :wub::lol: மற்றவர்களும் கண்டுகளிக்க.....

http://www.yarl.com/forum3/index.php?showtopic=119085&p=876186 

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் இசை...உங்களை யாழில் சந்தித்த காலத்தில் இருந்தே நேரில் பழகிய நண்பருடன் பழகும் உணர்வுடனேயே பழகுகிறேன்.  நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை... அடுத்த முறை வரும்போதாவது பார்ப்போம்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.