Jump to content

பள்ளிக்கூடப் பேருந்து


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்



எங்கள் ஊரை ஊடறுத்து காங்கேசன் துறை  வீதி செல்கிறது. அப்பாதையில்  தெல்லிப்பளையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி 769 ம் இலக்கப் பேருந்தும் , காங்கேசன்துறையிலிருந்து யாழ் செல்லும் 768 ம் இலக்கப் பேருந்தும் செல்கிறது. அந்த பேருந்துக்கள் யாழ்ப்பாணம் தாண்டியும் செல்கிறதா அல்லது யாழ்ப்பாணத்துடன் நின்றுவிடுகிறதா என்பது பற்றி எனக்கு இதுவரை தெரியவில்லை.

இக்காலத்தில எப்படியோ தெரியவில்லை. நான் படித்த காலத்தில் பள்ளிக்குச்
செல்வதற்கு ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித் தனிப் பேருந்துகள் உண்டு.
எங்களுக்கு அது பெருங் கவலைதான் என்றாலும், பெண்களுக்கும் ஆண்களுக்கும் ஒரே பேருந்தை விடும்படி யாரையும் கேட்கும் நிலையிலா நாம் இருந்தோம். அத்தோடு அதில் ஆபத்தும் இருக்கும் என்பதையும் மறுக்க முடியாது தானே.

எமது ஊரில் பேருந்து வந்து நிற்கும்போது எல்லா இருக்கைகளும் நிறைந்துபோய்
இருக்கும். அதனால் பள்ளிக்குச் செல்லும்போது ஒருநாள்க் கூட இருந்து
சென்றதில்லை. அனால் பள்ளி முடிந்து வரும் வேளை, ஆகச் சுண்டுக்குளிப்
பெண்களும் கொன்வென்ற் பெண்களும் குறைந்தளவானவர்களே இருப்பதனால் அதிக இருக்கைகள் வெற்றிடமாக இருக்கும். ஆனாலும் வேம்படியில் அதிகமானவர்கள் ஏறுவதால் முண்டியடித்துக் கொண்டு ஏறினால் விரும்பிய இருக்கையில் இருக்கலாம். அல்லது நிக்க வேண்டியதுதான்.

எனக்கு பேருந்தின் பின்பக்கம் உள்ள உயரமான இருக்கைதான் பிடித்தமானது. அதில் இருப்பதற்காக எப்படியாவது இடித்துப்பிடித்துக் கொண்டு ஏறிவிடுவேன். எனக்குப் போட்டியாக நான்கு பேர் இருந்தார்கள் தான். நாங்கள் நான்கு பேரும் பக்கத்தில்
பக்கத்தில் பேருந்து வரும் நேரம், தடகள வீரர்கள் ஓடுவதற்குத் தயாராக
நிற்பதுபோல் நிற்போம்.  எனது அதிஷ்டம் என்றுதான் கூற வேண்டும்.
ஒவ்வொருமுறையும் நானே வெற்றிக்கொடி நாட்டுபவளாக அந்த உயரமான இருக்கையைப் பிடித்திருப்பேன்.

இந்த அதிஷ்டம் நான் ஒ/எல் படிக்கும் வரை தொடர்ந்தது. அதன்பின் வேறு விடயங்கள் மனதை ஈர்த்ததால் இடம் பிடிக்க ஓடுவது குறைந்துவிட்டது.

ஒருநாள் எனக்கொரு விபரீத ஆசை ஏற்பட்டுவிட்டது. இன்று கடைசியாக் நின்று பேருந்தில் ஏறினால் என்ன என்று. நண்பிகளிடமும் கூறினேன். அவர்களும் சரிஎன,  எல்லோரும் ஏறும் வரை நாங்கள் காத்திருந்தோம். இன்னும் ஏற இனது ஆறு பேர்தான் பேருந்து நகரத் தொடங்கியது.

 

எல்லோரும் பயந்துபோய் தள்ளிக் கொண்டு ஏற முயல  நான் தான் கடைசி ஆள். பேருந்து வேகமெடுக்கத் தொடங்கிவிட்டது. கடைசிப் படிவரை என் நண்பிகள் நிற்கிறார்கள். நான் கால் வைக்க இடமே இல்லை. எறடி எறடி என்கிறார்களே தவிர நான் ஏற இடம் விட எண்ணவில்லை. அவர்களுக்கும் பதட்டம். நான் கொஞ்சநேரம் கைபிடியைப் பிடித்தபடி ஓடினேன் இடம் கிடைக்குமென்று. அதன்பின் தொங்கிக் கொண்டு வரும் பழக்கம் இல்லாததால் கையை விட்டுவிட்டேன்.

பேருந்து தன்பாட்டில் போய்க்கொண்டு இருக்கு. எனக்கோ அவமானம் ஒருபுறம் ஏமாற்றம் ஒருபுறம். இனி என்ன செய்வது. யாழ் தரிப்புவரை தனியே  நடந்ததை 
இன்றுவரை மறக்க முடியவில்லை. ஆனாலும் மனதுக்கு ஆறுதல் தந்த விடயம், நான் யாழ் தரிப்பிடத்தை அடைந்தபோது, எனக்காக நண்பிகள் நால்வரும் பேருந்தை விட்டு இறங்கி, எனக்காகக் காத்திருந்ததுதான்.

இப்படி எத்தனையோ நினைவுகள் மீட்டிப் பார்க்கும் போது இன்பத்தையும் துன்பத்தையும் 
தருவன எம்முள்ளே உள்ளன.

 

Link to comment
Share on other sites

ம்ம்........ தொடருங்கோ உங்கள் சாதனைகளை நண்பி!



உங்கட காதல் கதையையும் மறந்திடாமல் எழுதுங்கோ :lol:

Link to comment
Share on other sites

பள்ளிக்கூடக்காலம் திரும்ப வராத காலம். சுமேயக்கா நீங்கள் பஸ்சில பயணிச்சிருங்கிறீங்கள். நாங்கள் சயிக்கிளிலை பயணிச்ச இனிய அனுபவங்கள் நிழலாடுது உங்கள் அனுபவத்தை வாசிக்க. நாங்கள் சுற்றிய கோவில் திருவிழாக்கள் , கொண்டாட்டங்கள், நட்புக்களின் வீட்டு நல்ல , துயர காரியங்கள் இப்படி நினைவுகள் கனக்க....

என்னுடைய பள்ளிக்கூட காலத்தில ஒரு பதிவு இது:-http://www.yarl.com/forum3/index.php?showtopic=46974&st=0&p=461245


பிற்குறிப்பு :- இந்த எனது அனுபவப்பதிவில் வருகிறவர்கள் யாராவது இதனை வாசிக்க நேர்ந்தால் தொடர்பு கொள்ளுங்கோ.



ம்ம்........ தொடருங்கோ உங்கள் சாதனைகளை நண்பி!



உங்கட காதல் கதையையும் மறந்திடாமல் எழுதுங்கோ :lol:

 


மச்சி கதையோடை கதையாய் உங்கடை காதலையும் எழுதீடுங்கோ. வாசிக்க ஆவலாயுள்ளோம். :lol:
 

Link to comment
Share on other sites

பள்ளிக்கூடக்காலம் திரும்ப வராத காலம். சுமேயக்கா நீங்கள் பஸ்சில பயணிச்சிருங்கிறீங்கள். நாங்கள் சயிக்கிளிலை பயணிச்ச இனிய அனுபவங்கள் நிழலாடுது உங்கள் அனுபவத்தை வாசிக்க. நாங்கள் சுற்றிய கோவில் திருவிழாக்கள் , கொண்டாட்டங்கள், நட்புக்களின் வீட்டு நல்ல , துயர காரியங்கள் இப்படி நினைவுகள் கனக்க....

என்னுடைய பள்ளிக்கூட காலத்தில ஒரு பதிவு இது:-http://www.yarl.com/forum3/index.php?showtopic=46974&st=0&p=461245

பிற்குறிப்பு :- இந்த எனது அனுபவப்பதிவில் வருகிறவர்கள் யாராவது இதனை வாசிக்க நேர்ந்தால் தொடர்பு கொள்ளுங்கோ.

 

மச்சி கதையோடை கதையாய் உங்கடை காதலையும் எழுதீடுங்கோ. வாசிக்க ஆவலாயுள்ளோம். :lol:

 

 

 

காதலா :o எனக்கு அப்படி ஒண்டும் வரேலையப்பா :D அப்ப சாந்தி மச்சி உங்கட காதல் கதையை எடுத்துவிடுங்கோ நாங்கள் கேட்பமல்லோ :lol:

வரேலை எண்டா நம்பிவியளோ வரப் பார்த்தது தான் ஆனால் சரிவரேலை :lol:

Link to comment
Share on other sites

இந்த அதிஷ்டம் நான் ஒ/எல் படிக்கும் வரை தொடர்ந்தது. அதன்பின் வேறு விடயங்கள் மனதை ஈர்த்ததால் இடம் பிடிக்க ஓடுவது குறைந்துவிட்டது.

 

அக்கா அந்த வேறு விடயங்கள் என்ன என்று விளக்கமா சொன்னீங்கள் எண்டா நல்லா இருக்கும் கேக்க ஆவலா இருக்கிறம். :D

 

Link to comment
Share on other sites

பல பழைய நினைவுகளை மீட்டியதற்கு நன்றி .

ஆண்களுக்கு பெண்களுக்கு என பள்ளிகூட பஸ் முதலில் 764 யாழ்பாணம் -பலாலி லைனில் தான் தொடங்கியது என நினைக்கின்றேன் .

வேம்படி மாணவிகள் தமது யாழ் இந்து மகளிர் நண்பிகளுக்கு சீட் பிடித்துக்கொண்டுவர அதே தரிப்பிடத்தில் ஏறிய யாழ் இந்துமாணவர்கள் வேம்படி மாணவிகளுடன் ஏற்பட்ட வாய்த்தர்க்தால் இரண்டு தனி தனி பஸ்கள் விடவேண்டிவந்தது என கேள்விப்பட்டேன் .உரும்பிராய் சிவகுமார் ஒரு மாணவியின் கன்னத்தையும் பதம் பார்த்ததாக ஒரு கதையும் உண்டு

Link to comment
Share on other sites

சுமே பஸ்சுக்கு ஓடிவாறதை நினைச்சன் சிரிப்புத்தான் வந்திது :lol: :lol: . கதை மொக்கையாய் இருந்தாலும் நல்லாய் இருக்கு  :D  .வாழ்த்துக்கள் சுமே :) :) .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை வாசிக்க கொழும்பு கோட்டடையில் கோனர் சீற் பிடிக்க ஓடுப்பட்ட ஞாபகம் தான் வந்ததது.நன்றி பகிர்வுக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட உறவுகளுக்கு நன்றி.



காதலா :o எனக்கு அப்படி ஒண்டும் வரேலையப்பா :D அப்ப சாந்தி மச்சி உங்கட காதல் கதையை எடுத்துவிடுங்கோ நாங்கள் கேட்பமல்லோ :lol:



வரேலை எண்டா நம்பிவியளோ வரப் பார்த்தது தான் ஆனால் சரிவரேலை :lol:

 


அதுக்கும் ஒரு துணிவு வேணும் அலை.சும்மா வாய்தான். :lol:



அக்கா அந்த வேறு விடயங்கள் என்ன என்று விளக்கமா சொன்னீங்கள் எண்டா நல்லா இருக்கும் கேக்க ஆவலா இருக்கிறம். :D
 

 


நீங்கள் சின்னப் பெடியள். உங்களுக்கெல்லாம் சொல்ல ஏலாது மயூரன். :D



பல பழைய நினைவுகளை மீட்டியதற்கு நன்றி .

ஆண்களுக்கு பெண்களுக்கு என பள்ளிகூட பஸ் முதலில் 764 யாழ்பாணம் -பலாலி லைனில் தான் தொடங்கியது என நினைக்கின்றேன் .

 .உரும்பிராய் சிவகுமார் ஒரு மாணவியின் கன்னத்தையும் பதம் பார்த்ததாக ஒரு கதையும் உண்டு

 


இப்பிடி ஒரு கதை நான் கேள்விப் பட்டதே இல்லை.



சுமே பஸ்சுக்கு ஓடிவாறதை நினைச்சன் சிரிப்புத்தான் வந்திது :lol: :lol: . கதை மொக்கையாய் இருந்தாலும் நல்லாய் இருக்கு  :D  .வாழ்த்துக்கள் சுமே :) :) .

 



மொக்கை எண்டால் என்ன?? எனக்கு விளக்கம் வேணும். ரதியும் அடிக்கடி இந்த வார்த்தையைச் சொல்கிறவர்.

Link to comment
Share on other sites

மொக்கை என்றால் கூர் மழுங்கியது என்று அர்த்தம்.. :D ஊரில் கத்தி மொட்டையா இருக்கு என்று சொல்வதை தமிழகத்தில் மொக்கையா இருக்கு என்பார்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மொக்கை என்றால் கூர் மழுங்கியது என்று அர்த்தம்.. :D ஊரில் கத்தி மொட்டையா இருக்கு என்று சொல்வதை தமிழகத்தில் மொக்கையா இருக்கு என்பார்கள்..!

தகவலுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டிக் களிச்சுப் பாத்தா என்னையும் என் அனுபவக் கதையையும் மொக்கு என்று சொல்வதில் கனபேர் சந்தோசப்படுறியள் போல கிடக்கு.சரி சந்தோசப்பட்டுக் கொள்ளுங்கோ எனக்கொன்றுமில்லை. :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு அனுபவப் பகிர்வு சுமோ.
நான்... சின்னனாக இருக்கும் போது... ஊரில் இரட்டைதட்டு பஸ், பலாலி வீதியால் ஒடும்.
தம்பி, தங்கச்சி, எல்லாரும்... பான்ஞ்சு விழுந்து, மேல் தட்டில் முன்பக்கம் போயிருப்போம்.
இனிமையான.... இளமைக் காலங்கள், மீண்டும் வராதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருக்கா... நாங்கள் பள்ளிக்கூடத்தால திரும்பி வர, ஒரு சிவப்பு டபிள் டேக்கர் சந்தியிலை..... கவிண்டு கிடக்குது.
எனக்கு... அதைப் பார்க்க கவலையாய்ப் போச்சுது.(அதற்குள் இருந்த சனம், செத்ததைப் பற்றி கவலைப் படாத வயது)
இங்கிலாந்துக்குப் போனால்.... இப்பவும் மேல் மாடி, பஸ்ஸில்... முன் பக்கம் இருக்க விருப்பம்.
நாம் பள்ளிக்கூடந்துக்கு, நடந்து போனாலும், சைக்கிளில், போனாலும்.... பஸ்சில் போக முடியவில்லையே... என்று ஏக்கம் இருந்த காலமது.

Link to comment
Share on other sites

நல்லதொரு அனுபவ பகிர்வு சுமோ,


நாங்களும் பாடசாலை பஸ்ஸில் தான் போய்வாறது, அப்படி போய் வரும்போது செய்யும் அட்டகாசம் தாங்கமுடியாது,

 

பஸ்சாரதி சிலவேளைகளில் எம்மை பாடசாலைகளில் இறக்காது நேராக பஸ்யை  யாழ் போலீஸ் நிலையத்துக்கு கொண்டுபோனதும் இருக்கு.

 

அல்லது பாடசாலை முடிந்து வீடு திரும்பும்போது செய்யும் குழப்படிகளால் பஸ்சாரதி பஸ்யை கோண்டாவில் பஸ்டிப்போக்குள் கொண்டு போய் விட்டிட்டு தனது

 

மேல்அதிகாரிகளிடம் முறையிட்ட சந்தர்ப்பங்கள் இருக்கு. அது ஒரு  காலம். :D

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருக்கா... நாங்கள் பள்ளிக்கூடத்தால திரும்பி வர, ஒரு சிவப்பு டபிள் டேக்கர் சந்தியிலை..... கவிண்டு கிடக்குது.

எனக்கு... அதைப் பார்க்க கவலையாய்ப் போச்சுது.(அதற்குள் இருந்த சனம், செத்ததைப் பற்றி கவலைப் படாத வயது)

இங்கிலாந்துக்குப் போனால்.... இப்பவும் மேல் மாடி, பஸ்ஸில்... முன் பக்கம் இருக்க விருப்பம்.

நாம் பள்ளிக்கூடந்துக்கு, நடந்து போனாலும், சைக்கிளில், போனாலும்.... பஸ்சில் போக முடியவில்லையே... என்று ஏக்கம் இருந்த காலமது.

 

நான் லண்டன் வந்து ஒரே ஒருமுறை தான் பஸ்சின் மேல் மாடியில் போய் இருந்திருக்கிறேன். நன்றி சிறி.

 

நல்லதொரு அனுபவ பகிர்வு சுமோ,

நாங்களும் பாடசாலை பஸ்ஸில் தான் போய்வாறது, அப்படி போய் வரும்போது செய்யும் அட்டகாசம் தாங்கமுடியாது,

 

பஸ்சாரதி சிலவேளைகளில் எம்மை பாடசாலைகளில் இறக்காது நேராக பஸ்யை  யாழ் போலீஸ் நிலையத்துக்கு கொண்டுபோனதும் இருக்கு.

 

அல்லது பாடசாலை முடிந்து வீடு திரும்பும்போது செய்யும் குழப்படிகளால் பஸ்சாரதி பஸ்யை கோண்டாவில் பஸ்டிப்போக்குள் கொண்டு போய் விட்டிட்டு தனது

 

மேல்அதிகாரிகளிடம் முறையிட்ட சந்தர்ப்பங்கள் இருக்கு. அது ஒரு  காலம். :D

 

பள்ளிக்கூட நினைவுகள் மகிழ்வும், வேதனையும் கொள்ள வைக்கும் நினைவுகள்.நன்றி  நவீனன்.

 

Link to comment
Share on other sites

நான் பள்ளிகூட பேருந்தில் ஏறியதில்லை, ஆனால் அந்த பேருந்தில் வரும் பிகர்களுக்காக தரிப்பிடத்தில் காத்திருந்திருக்கிறேன்.

764, 769, 808 நான் காத்திருந்த பேருந்து இலக்கங்கள். அப்புறம் கச்சேரி-யாழ்ப்பாணம் ஓடும் தட்டி வான்கள்.

 

சுமே அக்கா, பொன்னம்பலம், ஜெயபாலன் டீச்சர் ஆட்கள் வேம்படியில் படிப்பிற்கும் போது நீங்கள் அங்கெ இருந்தீர்களா. ( வயதை அறியும் நோக்கமில்லை :D  )

Link to comment
Share on other sites

யாழில் மொக்கை (மழுங்கல்) பிரிவு என்று தனியாக  ஒரு  பிரிவை இந்தப் பகுதியில் தொடங்கினால் நன்றாக இருக்கும் என்று யாழ் நிருவாகத்திற்கு பரிந்துரை செய்கிறேன். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் பள்ளிகூட பேருந்தில் ஏறியதில்லை, ஆனால் அந்த பேருந்தில் வரும் பிகர்களுக்காக தரிப்பிடத்தில் காத்திருந்திருக்கிறேன்.

764, 769, 808 நான் காத்திருந்த பேருந்து இலக்கங்கள். அப்புறம் கச்சேரி-யாழ்ப்பாணம் ஓடும் தட்டி வான்கள்.

 

சுமே அக்கா, பொன்னம்பலம், ஜெயபாலன் டீச்சர் ஆட்கள் வேம்படியில் படிப்பிற்கும் போது நீங்கள் அங்கெ இருந்தீர்களா. ( வயதை அறியும் நோக்கமில்லை :D  )

 

எனக்கு நினைவில்லைப் பகலவன். அதில் உங்கள் அம்மாவும் அடக்கமா?? வயதை மறைக்கும் நோக்கமில்லை. :lol:

யாழில் மொக்கை (மழுங்கல்) பிரிவு என்று தனியாக  ஒரு  பிரிவை இந்தப் பகுதியில் தொடங்கினால் நன்றாக இருக்கும் என்று யாழ் நிருவாகத்திற்கு பரிந்துரை செய்கிறேன். :lol:

 

அதற்குள் உங்கள் கவிதையும் அடங்கும் சாத்திரி. :lol:

Link to comment
Share on other sites

எனக்கு நினைவில்லைப் பகலவன். அதில் உங்கள் அம்மாவும் அடக்கமா?? வயதை மறைக்கும் நோக்கமில்லை. :lol:

 

அதற்குள் உங்கள் கவிதையும் அடங்கும் சாத்திரி. :lol:

 

அது கவிதை இல்லை புதுக் கவிதை :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் வந்து ஆரம்பத்திலை கரிக்கோச்சியிலைதான் பள்ளிக்கூடம் போய்வந்தனான்....அதுக்குப்பிறகு களிசான் பருவம் போய் ரவுசர் பருவம் வந்தவுடனை பளையிலையிருந்து வெளிக்கிட்டு வாற சிரிபி கலவன் ஸ்கூல் பஸ் :wub:  :wub:  அதிலை பெடிபெட்டையள் உரஞ்சுப்பட்டு இழுபறிப்பட்டு இரண்டொரு கைகலப்பு வர..... பெட்டையளின்ரை பெருசுகள் பெரிய இடங்களோடை கொன்ராக் வைச்சு....தனிய பெட்டையளுக்கு மட்டும் வசு :( ....அதுக்கு சுத்த தமிழிலை சொல்லுறதெண்டால் "மகளிர்சேவை" அதிலை பகிடியென்னெண்டால் றைவரும் ஆம்பிளை கொன்ரைக்டரும் ஆம்பிளை...சரி விடுவம்........ :D

ஏழேகாலுக்கு மகளிர் சேவை வரும்.......அதிலை கனவுக்கன்னியள் எல்லாரும் கிலுகிலுவெண்டு சிரிச்சுக்கொண்டு அந்தமாதிரி சொகுசாய் போவினம் :huh: .....அதுக்கை போய்ஸ் இல்லாத வசுவும் ஒரு வசுவே எண்டு சினந்த லேடீஸ் கனபேர் :wub: ...சரி கிடக்கட்டும்.....

மகளிர் சேவை போய் ஒரு பத்து நிமிசம் கழிய கண்டாவளையிலையிருந்து ஒரு வசு காட்டரைக் வந்தவன் மாதிரி ஒருபக்கம் இழுத்துக்கொண்டுவரும்...அதிலை கட்டாயம் ஏறோணும்......இல்லாட்டில் அடுத்த வசு...அதிலை போனால் அரைமணித்தியாலம் பிந்திடும்..... பிறின்சிபல் வரிசையிலை நிக்கவிட்டு கனக்ககேள்வி கேப்பார்....அடியும் விழும் விழாமலும் விடும்.....அது அவர்ரை அண்டையான் மூட் எப்பிடியோ......ரீச்சருக்குத்தான் வெளிச்சம் :icon_mrgreen:........சரி வசுவுக்கு வருவம்...

அதுக்கை வெங்காய்ச்சாக்கு,தேக்காய்ச்சாக்கு,பச்சைமிளகாய்ச்சாக்கு எண்டு 60பேர் இருக்கிற வசுவுக்கை ஒரு  சந்தையையே கொண்டுவருவாங்கள் :o ....அதுக்குள்ளை நானும் ரொபின்நீலம் போட்டு தோய்ச்ச வெள்ளைச்சேட்டோடை இடிபட்டுநெருக்குப்பட்டு....அதுக்கையும் அம்சமான நாட்டுக்கட்டையள் வந்தால்....சட்டை  கசங்கினாலும் பரவாயில்லை எண்டு போட்டு......

சரி அதை விடுவம் என்ரைவாயும் சும்மாயிருக்காது....

Link to comment
Share on other sites

நான் வந்து ஆரம்பத்திலை கரிக்கோச்சியிலைதான் பள்ளிக்கூடம் போய்வந்தனான்....அதுக்குப்பிறகு களிசான் பருவம் போய் ரவுசர் பருவம் வந்தவுடனை பளையிலையிருந்து வெளிக்கிட்டு வாற சிரிபி கலவன் ஸ்கூல் பஸ் :wub:  :wub:  அதிலை பெடிபெட்டையள் உரஞ்சுப்பட்டு இழுபறிப்பட்டு இரண்டொரு கைகலப்பு வர..... பெட்டையளின்ரை பெருசுகள் பெரிய இடங்களோடை கொன்ராக் வைச்சு....தனிய பெட்டையளுக்கு மட்டும் வசு :( ....அதுக்கு சுத்த தமிழிலை சொல்லுறதெண்டால் "மகளிர்சேவை" அதிலை பகிடியென்னெண்டால் றைவரும் ஆம்பிளை கொன்ரைக்டரும் ஆம்பிளை...சரி விடுவம்........ :D

ஏழேகாலுக்கு மகளிர் சேவை வரும்.......அதிலை கனவுக்கன்னியள் எல்லாரும் கிலுகிலுவெண்டு சிரிச்சுக்கொண்டு அந்தமாதிரி சொகுசாய் போவினம் :huh: .....அதுக்கை போய்ஸ் இல்லாத வசுவும் ஒரு வசுவே எண்டு சினந்த லேடீஸ் கனபேர் :wub: ...சரி கிடக்கட்டும்.....

மகளிர் சேவை போய் ஒரு பத்து நிமிசம் கழிய கண்டாவளையிலையிருந்து ஒரு வசு காட்டரைக் வந்தவன் மாதிரி ஒருபக்கம் இழுத்துக்கொண்டுவரும்...அதிலை கட்டாயம் ஏறோணும்......இல்லாட்டில் அடுத்த வசு...அதிலை போனால் அரைமணித்தியாலம் பிந்திடும்..... பிறின்சிபல் வரிசையிலை நிக்கவிட்டு கனக்ககேள்வி கேப்பார்....அடியும் விழும் விழாமலும் விடும்.....அது அவர்ரை அண்டையான் மூட் எப்பிடியோ......ரீச்சருக்குத்தான் வெளிச்சம் :icon_mrgreen:........சரி வசுவுக்கு வருவம்...

அதுக்கை வெங்காய்ச்சாக்கு,தேக்காய்ச்சாக்கு,பச்சைமிளகாய்ச்சாக்கு எண்டு 60பேர் இருக்கிற வசுவுக்கை ஒரு  சந்தையையே கொண்டுவருவாங்கள் :o ....அதுக்குள்ளை நானும் ரொபின்நீலம் போட்டு தோய்ச்ச வெள்ளைச்சேட்டோடை இடிபட்டுநெருக்குப்பட்டு....அதுக்கையும் அம்சமான நாட்டுக்கட்டையள் வந்தால்....சட்டை  கசங்கினாலும் பரவாயில்லை எண்டு போட்டு......

சரி அதை விடுவம் என்ரைவாயும் சும்மாயிருக்காது....

 

நீங்கள் சாவச்சேரி சந்தைக்கு  போன தேங்காய்களோடு  பயணம் செய்திருக்கிறீங்கள். எண்டு தெரியிது. ஆனா  கத்தரிக்காய்தான்  பாவம்  நசிஞ்சிருக்கும்.

:lol:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் வந்து ஆரம்பத்திலை கரிக்கோச்சியிலைதான் பள்ளிக்கூடம் போய்வந்தனான்....அதுக்குப்பிறகு களிசான் பருவம் போய் ரவுசர் பருவம் வந்தவுடனை பளையிலையிருந்து வெளிக்கிட்டு வாற சிரிபி கலவன் ஸ்கூல் பஸ் :wub:  :wub:  அதிலை பெடிபெட்டையள் உரஞ்சுப்பட்டு இழுபறிப்பட்டு இரண்டொரு கைகலப்பு வர..... பெட்டையளின்ரை பெருசுகள் பெரிய இடங்களோடை கொன்ராக் வைச்சு....தனிய பெட்டையளுக்கு மட்டும் வசு :( ....அதுக்கு சுத்த தமிழிலை சொல்லுறதெண்டால் "மகளிர்சேவை" அதிலை பகிடியென்னெண்டால் றைவரும் ஆம்பிளை கொன்ரைக்டரும் ஆம்பிளை...சரி விடுவம்........ :D

ஏழேகாலுக்கு மகளிர் சேவை வரும்.......அதிலை கனவுக்கன்னியள் எல்லாரும் கிலுகிலுவெண்டு சிரிச்சுக்கொண்டு அந்தமாதிரி சொகுசாய் போவினம் :huh: .....அதுக்கை போய்ஸ் இல்லாத வசுவும் ஒரு வசுவே எண்டு சினந்த லேடீஸ் கனபேர் :wub: ...சரி கிடக்கட்டும்.....

மகளிர் சேவை போய் ஒரு பத்து நிமிசம் கழிய கண்டாவளையிலையிருந்து ஒரு வசு காட்டரைக் வந்தவன் மாதிரி ஒருபக்கம் இழுத்துக்கொண்டுவரும்...அதிலை கட்டாயம் ஏறோணும்......இல்லாட்டில் அடுத்த வசு...அதிலை போனால் அரைமணித்தியாலம் பிந்திடும்..... பிறின்சிபல் வரிசையிலை நிக்கவிட்டு கனக்ககேள்வி கேப்பார்....அடியும் விழும் விழாமலும் விடும்.....அது அவர்ரை அண்டையான் மூட் எப்பிடியோ......ரீச்சருக்குத்தான் வெளிச்சம் :icon_mrgreen:........சரி வசுவுக்கு வருவம்...

அதுக்கை வெங்காய்ச்சாக்கு,தேக்காய்ச்சாக்கு,பச்சைமிளகாய்ச்சாக்கு எண்டு 60பேர் இருக்கிற வசுவுக்கை ஒரு  சந்தையையே கொண்டுவருவாங்கள் :o ....அதுக்குள்ளை நானும் ரொபின்நீலம் போட்டு தோய்ச்ச வெள்ளைச்சேட்டோடை இடிபட்டுநெருக்குப்பட்டு....அதுக்கையும் அம்சமான நாட்டுக்கட்டையள் வந்தால்....சட்டை  கசங்கினாலும் பரவாயில்லை எண்டு போட்டு......

சரி அதை விடுவம் என்ரைவாயும் சும்மாயிருக்காது....

 

குமாரசாமி அண்ணா,

உங்கள் எழுத்தை பாத்தாலே உங்கட குழப்படியள்  விளங்கும் எ ங்களுக்கு.நீங்கள் மிச்சம் சொல்லாட்டியும் நாங்கள் கெஸ்பண்ணுவம் :lol:

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கையரசாங்கம் முன்வைத்த தீர்வுத்திட்டத்தினை முற்றாக நிராகரித்து, நான்கு அம்சக் கோரிக்கையின் அடிப்படையிலான தீர்வினை கோரிய தமிழ்த் தரப்பு   நான்காம் நாள் பேச்சுக்கள் பெரும் குழப்பத்திற்குள் நுழைந்தன. ஜெயவர்த்தன இன்னொரு சதியைத் திட்டமிட்டு அரங்கேற்றினார். பொலீஸாரைக் கொண்டு அரங்கேற்றப்பட்ட இச்சதியில் கொழும்பில் குண்டுத்தாக்குதலில் ஈடுபட வந்திருந்த ஈரோஸ் அமைப்பின் உறுப்பினர்களைத் தாம் கைதுசெய்திருப்பதாக ஜெயார் தெரிவித்தார். ஜனாதிபதி மாளிகைக்கு அண்மையாக சுற்றித்திருந்த இரு இளைஞர்களைக் கைதுசெய்து விசாரித்தவேளை அவர்கள் ஜனாதிபதியைக் கொல்வதற்காக ஈரோஸ் தலைமைப் பீடத்தால் அனுப்பிவைக்கப்பட்டிருப்பதை ஒத்துக்கொண்டதாக பொலீஸார் அறிவித்தனர். ஜெயாரின் திட்டத்தின்படி, கொழும்பு ஊடகங்களும் இச்செய்தியை பெரும் எடுப்பில் வெளியிட்டிருந்தன. இதனைச் செய்தியாக்கும்போது டெயிலி நியுஸ் காரியாலயத்தில் இருந்த உற்சாககத்தினை நேரடியாக நாண் கண்டேன். மறுநாள் ஆசிரியர்த் தலையங்கம் "முறியடிக்கப்பட்ட ஜனாதிபதி மீதான படுகொலை முயற்சி" என்று வெளியாகியிருந்தது. தன்மீதான இந்தப் பழியை சோடிக்கப்பட்ட புரளி என்று ஈரோஸ் தலைமைப்பீடம் அறிவித்தது. பொதுத் தபாலகத்திற்குச் சென்றுகொண்டிருந்த இரு அப்பாவிகளைக் கைதுசெய்து, கடுமையான சித்திரவதைகளின் பின்னர் பொய்யான வாக்குமூலம் ஒன்றினை கொடுக்க வைத்தே பொலீஸார் இந்த நாடகத்தினை ஆடுகிறார்கள் என்று ஈரோஸ் அமைப்பு விளக்கியிருந்தது.  நான்காம் நாள் பேச்சுக்கள் ஆரம்பமாகிய வேளை, அரசாங்கத்தின் பொய்யான வதந்திகுறித்து ஈரோஸ் அமைப்பினரும் ஏனைய தமிழ்ப் பிரதிநிதிகளும் தமது ஆட்சேபணையைத் தெரிவித்தார்கள். "இது ஜெயாரின் புரளி" என்றும் அதனை அழைத்தார்கள். அன்றைய நாளின் பெரும்பகுதி யுத்தநிறுத்த மீறல்கள் குறித்து ஒருவரையொருவர் சாடுவதிலேயே கழிந்தது. யுத்தநிறுத்த மீறல்கள் குறித்த வாக்குவாதங்கள் முடிவடைந்த பின்னர் பேசிய ஹெக்டர் ஜெயவர்த்தன தான் முன்வைத்துள்ள யோசனைகளை அதிகாரப் பரவலாக்கத்திற்கான அடிப்படையாக வைத்து செயற்பட முடியும் என்று கூறினார். அதற்குப் பதிலளித்த தமிழ்த் தரப்பு, அதிகாரங்கள், அதிகாரப் பரவலாக்கத்திற்கான அலகு, அரசாங்கத்தின் கட்டமைப்பு என்பன குறித்த சிக்கல்கள் தீர்க்கப்பட வேண்டும் என்றும், தமிழர்கள் எதிர்பார்க்கும் அதிகாரங்களுக்கும், அரசால் முன்வைக்கப்படும் அதிகாரங்களுக்கும் இடையே பாரியளவு இடைவெளி காணப்படுவதாகவும் விமர்சித்தனர்.  பேச்சுக்கள் முறிவடைவதைத் தவிர்ப்பதற்காக இந்திய அரசாங்கம் தனது வெளிநாட்டமைச்சர் ரொமேஷ் பண்டாரியை திம்புவிற்கு அனுப்பியது. இரு தரப்பினருடனும் ரொமேஷ் பண்டாரி ஒன்றன் பின் ஒன்றாக பல சந்திப்புக்களை நடத்தினார்.தமிழர் தரப்புடன் பேசிய பண்டாரி, அரசாங்கம் முன்வைத்திருக்கும் தீர்வு ஆலோசனையினை நிராகரிப்பதாகவும், ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்களின் அபிலாஷைகளை தீர்க்கக்கூடிய புதியதொரு தீர்வுத்திட்டத்துடன் அரசு வரவேண்டும் என்கிற கோரிக்கையினையும் முன்வைத்து அறிக்கையொன்றினை வெளியிடுமாறு கேட்டுக்கொண்டார். இதன்மூலம் அன்று முறிவடைய‌ இருந்த பேச்சுக்களை அவரால் நீட்டிக்க முடிந்தது. பேச்சுவார்த்தையின் ஐந்தாம் நாளான ஆடி 12 ஆம் திகதி தமிழ்ப் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து அரசு முன்வைத்திருக்கும் தீர்வுக்கான ஆலோசனைகளை நிராகரிப்பதாக அறிக்கையொன்றினை வெளியிட்டனர். அறிக்கை வெளியிடப்பட முன்னர் தமிழ் மக்களைஅவமானப்படுத்தும் விதமாக இலங்கைஅயரசாங்கம் தனது தீர்வு யோசனையினை முன்வைத்திருப்பதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர். அமிர்தலிங்கம் ஒருபடி மேலே சென்று, அரசு முன்வைத்திருக்கும் யோசனைகளை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று கூறினார்.  தமிழ்ப் பிரதிநிதிகள் சார்பாக டெலோ அமைப்பின் சார்ள்ஸ் அறிக்கையினை சமர்ப்பித்தார். தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்த சிங்கள அரசாங்கங்களுக்கு தமிழரின் அபிலாஷைகள் குறித்த எமது கோரிக்கைகளை ஜனநாயக வழியில் புரியப்படுத்த முடியாமையினாலேயே நாம் ஆயுதம் தூக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம். மேலும், எமது தேசியம் மீதான சிங்கள அரசுகளின் ஒடுக்குமுறையும், எம் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கும் அரச பயங்கரவாதமும், எம் மக்கள் மீதான இனவழிப்பும் அடக்குமுறைக்குள்ளாக்கப்பட்டிருக்கும் எம் மக்களுக்கான தர்க்கரீதியான ஒரே தீர்வு தனிநாடுதான் என்கிற நிலைமைக்கு எம்மைக் கொண்டுவந்து விட்டிருக்கிறது. இதன் தர்க்கரீதியான வெளிப்பாடே ஆயுதப்போராட்டம் என்றால் அது மிகையில்லை. ஆனாலும், இலங்கையரசாங்கம் நியாயமான, ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றினை முன்வைக்கும் பட்சத்தில் அமைதியான அத்தீர்வினை பரிசீலிக்க தமிழ் மக்கள் தயாராகவே இருக்கிறார்கள். ஏனென்றால், தமிழ் மக்கள் அமைதியினை விரும்பும் ஒரு மக்கள் கூட்டமாகும். சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டிருக்கும் தீர்வு ஆலோசனைகள் எந்தவிதத்திலும் நேர்மையானதாகவோ, அமைதியை ஏற்படுத்தும் முகாந்திரங்களையோ கொண்டிருக்கவில்லை என்பதை எம்மால் உணர்ந்துகொள்ளமுடிகிறது. முதலாவதாக, சிறிலங்கா அரச பிரதிநிதிகள் குழுவின் தலைவர் தனது உரையில், இந்தத் தீர்வு ஆலோசனைகள் கடந்த வருடம் நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டில் இலங்கையரசாங்கத்தால் தீர்மானிக்கப்பட்ட ஆலோசனைகள் என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார். ஆனால், பின்வரும் காரணங்களுக்காக சர்வகட்சி மாநாட்டினை நாம் முற்றாக நிராகரித்திருக்கிறோம், முதலாவதாக, சர்வகட்சி மாநாட்டில் பங்குகொண்ட தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, சர்வகட்சி மாநாடு குழப்பகரமான நிலையில் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டவுடன் வெளியிட்ட அறிக்கையில் அதிகாரம் மிக்க பிராந்தியம் எனும் அடிப்படையில் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்விற்கு அருகில்க் கூட சர்வக‌ட்சி மாநாட்டில் அரசால் முன்வைக்கப்பட்ட தீர்வு வரவில்லை என்பதைத் தெளிவாகக் கூறியிருந்தது. இரண்டாவதாக, ஒரு விடுதலைப் போராட்ட அமைப்பு என்கிற வகையில், நவ பாஸிஸ இலங்கையரசு, தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு இராணுவ ரீதியில் தீர்வினை வழங்கவே சர்வகட்சி மாநாட்டினை போர்வையாகப் பாவித்தது என்பதனை ஐயம் திரிபுற  நம்புகிறோம். மேலும், ஈழத்திற்கான தேசியப் பிரச்சினையினை இலங்கையரசாங்கம் இதுவரையில் புரிந்துகொள்ளவில்லை என்பதையே அது இங்கு முன்வைத்திருக்கும் தீர்வு சுட்டிக் காட்டுகிறது. அதற்கான காரணங்களை நாம் முன்வைக்கிறோம்,   1. அரசாங்கம் முன்வைத்திருக்கும் தீர்வில் தமிழ் மக்கள் ஒரு தேசமாக அங்கீகரிக்கப்படவில்லை. ஆனால், தமிழ் மக்களால் எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத மாவட்ட ரீதியிலான அதிகாரப் பரவலாக்க அலகினை அரசு முன்வைத்திருக்கிறது. 2. அரசு முனைத்திருக்கும் தீர்வு, தமிழ் மக்களினதோ அல்லது சிங்கள மக்களினதோ சுயநிர்ணய உரிமையினை புறக்கணித்திருப்பதுடன், சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றின்மூலமாகவோ அல்லது அதையொத்த இன்னொரு வாக்கெடுப்பு ஒன்றின்மூலமாகவோ தீர்வினை மக்கள் முன் கொண்டுசெல்லும் வழிவகையினைக் கொண்டிருக்கவில்லை. மக்களின் விருப்பினை நிராகரித்திருக்கும் அரசாங்கம், பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினைக் கொண்டு அரசியல் சட்டத்தில் திருத்தத்தினைச் செய்யலாம் என்று கூறுகிறது.இப்படிச் செய்வதனூடாக மக்கள் மீது அரசியல் யாப்பின் அடைப்படையில் உருவாக்கப்படவிருக்கும் சர்வாதிகாரத்தைத் திணிக்க முயல்கிறது.  ஆகவே, இந்த நிலையில் மேற்கொண்டு பேச்சுக்களில் ஈடுபடுவதில் பயனில்லை என்கிற நிலைப்பாட்டிற்கு நாம் வந்திருப்பதுடன், நாடு இன்றிருக்கும் இக்கட்டான நிலைக்குக் காரணமாகியிருக்கும் அரசாங்கமே தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய நேர்மையானதும், அவர்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக்கூடியதுமான தீர்வினை முன்வைக்க வேண்டும் என்றும் கோருகிறோம்.    நிரந்தர சமாதானத்தினைக் கருத்தில்க் கொண்டு, தமிழ் மக்களால் பரிசீலித்துப் பார்க்கக் கூடிய தீர்வொன்றுடன் மீண்டும் இலங்கையரச பிரதிநிதிகள் குழு பேச்சுவார்த்தைகளுக்குத் திரும்பவேண்டும் என்கிற தீர்க்கமான கோரிக்கையினை நாம் முன்வைக்கிறோம். ஜனாதிபதி ஜெயாரைப் படுகொலை செய்ய எத்தனித்ததாக தம்மீது முன்வைக்கப்பட்ட அரசின் குற்றச்சட்டிற்கெதிரான தனது அதிருப்தியினை ஈரோஸ் அமைப்பு எழுத்துமூல அறிக்கையொன்றின் ஊடாக வெளியிட்டது. இந்தியாவின் ரொமேஷ் பண்டாரி பேச்சுவார்த்தைக்குழுக்களுக்கான விருந்துபசராம் ஒன்றினை வழங்கினார். பேச்சுவார்த்தையின் இறுதிநாளான ஆடி 13 ஆம் திகதி அரச தரப்புப் பிரதிநிதிகளுடன் பேசிய தமிழ்த் தரப்பு தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய புதிய‌ தீர்வொன்றுடன் அடுத்த கட்டப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்ததுடன் தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய தீர்வு அமையவேண்டிய அடிப்படைகள் குறித்து தனது நிலைப்பாட்டினையும் முன்வைத்தது.   பேச்சுவார்த்தைக் குழுக்கள் இணைந்து வெளியிட்ட சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த திம்புப் பிரகடணம் இவ்வாறு அமைந்திருந்தது, தமிழ்த் தரப்பு முன்வைத்த பிரகடணம்,   தமிழ்த் தேசிய பிரச்சினைக்கான அரத்தபுஷ்ட்டியான தீர்வு பின்வரும் நான்கு அடிப்படை விடயங்களை உள்ளடக்கியதாக இருக்கவேண்டும் என்று நாம் கருதுகிறோம்,   1. இலங்கைத் தமிழர்களைத் தனியான தேசமாக அங்கீகரிப்பது 2. இலங்கையில் தமிழருக்கென்று தனியான தாயகம் இருப்பதை அடையாளம் காண்பதும் அதனை அங்கீகரிப்பதும் 3. தமிழ்த் தேசத்தின் சுயநிர்ணய உரிமையினை அங்கீகரிப்பது 4. இலங்கையில் வாழும் அனைத்துத் தமிழர்களினதும் குடியுரிமை மற்றும் அடிப்படை உரிமைகளை அங்கீகரிப்பது   பல்வேறு நாடுகள் தமக்கு உகந்த செயற்திட்டங்கள் ஊடாக இந்த அடிப்படைகள் ஏற்றுக்கொள்ளப்படுவதனை உறுதிப்படுத்தியிருக்கின்றன. தமிழ் மக்களுக்கான அடிப்படை உரிமைகள் நிராகரிக்கப்பட்டமையினாலேயே அதற்குத் தீர்வாக தனிநாட்டினை முன்வைத்துப் போராடி வருகிறோம். தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைக்கான தீர்வாக இலங்கையரசாங்கம் முன்வைத்திருக்கும் தீர்வினை எம்மால் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை திட்டவட்டமாகக் கூறிக்கொள்கிறோம். ஆகவே, 1985 ஆம் ஆண்டு ஆடி மாதம் 12 ஆம் திகதி நாம் வெளியிட்ட அறிக்கையின்படி இலங்கையரசாங்கம் இங்கு முன்வைத்திருக்கும் தீர்வு யோசனைகளை நாம் முற்றாக நிராகரிக்கிறோம். ஆனாலும், அமைதிக்கான வழிகளைத் தேடும் மக்கள் கூட்டம் எனும் அடிப்படையில், நாம் மேலே குறிப்பிட்ட நான்கு அடிப்படை அம்சங்களை உள்ளடக்கிய புதிய தீர்வு யோசனைகளை இலங்கையரசாங்கம் முன்வைக்கும் பட்சத்தில் அவற்றைப் பரிசீலிர்த்துப் பார்க்கத் தயாராக இருப்பதையும் இங்கு கூறிக்கொள்கிறோம்.  
    • இந்த விடயத்தை நான் பலமுறை அவதானித்துள்ளேன்.  வயிற்றில் சமிபாட்டுப்(?) பிரச்சனை இருப்பதால் அவை அவ்வாறு செய்கின்றன என நான் நம்புகிறேன். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.