Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நெல்சன் மண்டேலா காலமானார் South Africa's Nelson Mandela dies

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

_51606573_fa1d16c0-9c6c-4f82-b0b8-ab66dd

South Africa's first black president and anti-apartheid icon Nelson Mandela has died, South Africa's president says.

Mr Mandela, 95, led South Africa's transition from white-minority rule in the 1990s, after 27 years in prison.

He had been receiving intense home-based medical care for a lung infection after three months in hospital.

In a statement on South African national TV, Mr Zuma said Mr Mandela had "departed" and was at peace.

 

http://www.bbc.co.uk/news/world-africa-25249520

  • Replies 51
  • Views 3.3k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

South Africa's Nelson Mandela dies,

 

_71564617_70118206.jpg

South Africa's first black president and anti-apartheid icon Nelson Mandela has died, South Africa's president says.

Mr Mandela, 95, led South Africa's transition from white-minority rule in the 1990s, after 27 years in prison.

He had been receiving intense home-based medical care for a lung infection after three months in hospital.

In a statement on South African national TV, Mr Zuma said Mr Mandela had "departed" and was at peace.

"Our nation has lost its greatest son," Mr Zuma said.

The Nobel Peace Prize laureate was one of the world's most revered statesmen after preaching reconciliation despite being imprisoned for 27 years.

He had rarely been seen in public since officially retiring in 2004.

"What made Nelson Mandela great was precisely what made him human. We saw in him what we seek in ourselves," Mr Zuma said.

"Fellow South Africans, Nelson Mandela brought us together and it is together that we will bid him farewell."

Earlier, the BBC's Mike Wooldridge, outside Mr Mandela's home in the Johannesburg suburb of Houghton, said there appeared to have been an unusually large family gathering.

Among those attending was family elder Bantu Holomisa,

A number of government vehicles were there during the evening as well, our correspondent says.

Since he was released from hospital, the South African presidency repeatedly described Mr Mandela's condition as critical but stable.

He was awarded the Nobel Peace Prize in 1993 and was elected South Africa's first black president in 1994. He stepped down after five years in office.

 

http://www.bbc.co.uk/news/world-africa-25249520

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

131204172433_nelson_mandela__512x288_afp

காலமானார் நெல்சன் மண்டேலா

நெல்சன் மண்டேலா மரணமடைந்துவிட்டார்.

அவருக்கு வயது 95.

 

மண்டேலா அமைதியாக இறந்தார் என்று தற்போதைய தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஸூமா கூறியிருக்கிறார்.

மண்டேலா ஜோஹனஸ்பெர்க்கில் உள்ள அவரது இல்லத்தில் இறந்தார்.

அவரது குடும்ப உறுப்பினர்கள் அவரது இல்லத்தில் அவர் இறக்கும் தருவாயில் இருந்தனர்.

இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் அவரது மகள் மகஸிவே மண்டேலா, நெல்சன் மண்டேலா அவரது மரணப்படுக்கையில் மிகவும் தைரியமான ஒரு போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறார் என்று கூறியிருந்தார்.

மண்டேலா மருத்துவமனையில் இருந்து செப்டம்பர் மாதம் வீடு திரும்பியதிலிருந்து ,அவரது இல்லத்திலேயே மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக்கொண்டிருந்தார்.

 

http://www.bbc.co.uk/tamil/global/2013/12/131205_mandeladies.shtml

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

131204172433_nelson_mandela__512x288_afp

காலமானார் நெல்சன் மண்டேலா

நெல்சன் மண்டேலா மரணமடைந்துவிட்டார்.

அவருக்கு வயது 95.

 

மண்டேலா அமைதியாக இறந்தார் என்று தற்போதைய தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஸூமா கூறியிருக்கிறார்.

மண்டேலா ஜோஹனஸ்பெர்க்கில் உள்ள அவரது இல்லத்தில் இறந்தார்.

அவரது குடும்ப உறுப்பினர்கள் அவரது இல்லத்தில் அவர் இறக்கும் தருவாயில் இருந்தனர்.

இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் அவரது மகள் மகஸிவே மண்டேலா, நெல்சன் மண்டேலா அவரது மரணப்படுக்கையில் மிகவும் தைரியமான ஒரு போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறார் என்று கூறியிருந்தார்.

மண்டேலா மருத்துவமனையில் இருந்து செப்டம்பர் மாதம் வீடு திரும்பியதிலிருந்து ,அவரது இல்லத்திலேயே மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக்கொண்டிருந்தார்.

 

http://www.bbc.co.uk/tamil/global/2013/12/131205_mandeladies.shtml

  • கருத்துக்கள உறவுகள்

தென்னாபிரிக்க கறுப்பின மக்களின் உரிமைகளை வென்றெடுக்க தனது வாழ்வின் பெரும்பகுதியைச் சிறையில் கழித்தும் வெள்ளையர்களோடு இணைந்து புதிய தென்னாபிரிக்க நாட்டை உருவாக்கிய அப்பழுக்கற்ற மனிதர் நெல்சன் மண்டேலாவுக்கு எனது அஞ்சலிகள்.

சென்று வாருங்கள் நெல்சன் மண்டேலா.

 

விடுதலை அவாவி நிற்கும் அனைத்து ஒடுக்கப்பட்ட இன மக்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக இருந்த மனித நேயமுள்ள மகத்தான தலைவர்!

 

விடுதலை வீரர்கள் மரிப்பதும் இல்லை, வரலாறு அவர்களை மறப்பதும் இல்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெல்சன் மண்டேலாவுக்கு எனது அஞ்சலிகள். 

 

''விடுதலை வீரர்கள் மரிப்பதும் இல்லை, வரலாறு அவர்களை மறப்பதும் இல்லை.''

சென்று வாருங்கள் நெல்சன் மண்டேலா.

விடுதலை அவாவி நிற்கும் அனைத்து ஒடுக்கப்பட்ட இன மக்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக இருந்த மனித நேயமுள்ள மகத்தான தலைவர்!

விடுதலை வீரர்கள் மரிப்பதும் இல்லை, வரலாறு அவர்களை மறப்பதும் இல்லை.

சிரம்தாழ்த்தி வணங்குகின்றேன்,

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சலிகள்

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்..!

இருண்ட கண்டத்தின் விடிவெள்ளி..

கறுப்பின மக்களின் கலங்கரை விளக்கம்…

ஒளிர மறுத்து அணைந்துவிட்டது.

ஆம்..அழுவதும், தொழுவதும், அடிமைகளாய் அடங்கிக்கிடப்பதும் விதி என்று வீழ்ந்து கிடந்த தென்னாபிரிக்க கறுப்பின மக்களை, எழுவதும், எதிர்த்து நிற்பதும்,தடைகளை தகர்த்து விடுதலை பெறுவதும் காலம் அவர்களுக்கிட்ட கட்டளை என்பதை உணர்த்தி அவர்களின் அடிமை விலங்குடைத்து சுதந்திரக்காற்றை சுவாசிக்க வைத்த நெல்சன் மணே;டேலா என்ற மாபெரும் போரளி, மாபெரும் தலைவர் மறைந்துவிட்டார்.

அந்த மாபெரும் தலைவனின் மறைவையிட்டு தென்னாபிரிக்க மக்கள் மட்டமல்லால், உலக கறுப்பின மக்கள் மட்டுமல்லாமல் உலகில் விடுதலையை நேசிக்கும் அனைத்து இன மக்களும் கலங்கி நிற்கின்றனர்.

1918 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18 ஆம் திகதி தென்னாப்பிரிக்காவில் உள்ள குலு கிராமத்தில் பிறந்த நெல்சன் மண்டேலாவின் முழுப்பெயர் ‘நெல்சன் ரோபிசலா மண்டேலா’. 13 குழந்தைகள் கொண்ட

குடும்பத்திலிருந்து முதன் முதலாக பாடசாலைக்குச் சென்ற மண்டேலா, இளம் வயதில் ஆடு, மாடு மேய்த்துக்கொண்டே படித்து வந்தார். கல்வியறிவைப் பெறுவதில் பெரிதும் நாட்டம் கொண்ட மண்டேலா, தென்னாபிரிக்கா மற்றும் லண்டன் பல்கலைக்கழகங்களிலும் பட்டப்படிப்பை மேற்கொண்டார். 1941-ஆம் ஆண்டு ஜோகானஸ்பேர்க் சென்று பகுதி நேரத்தில் சட்டக்கல்வி படித்தார். ஒரு தங்கச் சுரங்க பாதுகாப்பு அதிகாரியாகவும், தோட்ட முகவராகவும் பணியாற்றி வந்தார்.

கறப்பின மக்கள் பெரும்பான்மையாக வாழும் தென்னாபிரிக்காவை மிகச் சிறுபான்மையாக உள்ள வெள்ளையின நிறவெறி அதிகார வாக்கம் அடக்கியாண்டதை எதிர்த்து நெல்சன் மண்டேலா தனது 21 வது வயதில் போர்கொடி தூக்கினார்;.தன்னுடைய வயதையுடைய கறுப்பின இளைஞர்களை திரட்டி தென்னாபிரிக்காவின் மண்ணின் மைந்தர்களான கறுப்பின மக்களுக்கு ஆக்கிரமிப்பாளராக வந்து குடியேறிய வெள்ளை இனவாதிகள் செய்யும் கொடுமைகளை எதிர்த்துப் போராட வேண்டிய தேவையை உணர்த்தினார்.அடக்குமுறையாளர்களுக்கு அடிபணிந்து வாழ்வதால் மாற்றம் வந்துவிடாதென்பதையும், எதேச்சாதிகாரத்துக்கு அடிபணியாது துணிவுடன் எதிர்த்து நின்று போராடுவதன் மூலம் தான் விடிவை பெற்றுக்கொள்ள முடியும் என்பதையும் அவர் புரியவைத்தார். 

1948 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவின் ஆட்சிப் பொறுப்பேற்ற புதிய வெள்ளை இனவாதஅரசாங்கம் கறுப்பின மக்களுக்கெதிராக முன்பிருந்த அரசாங்கங்களை விட அதிகளவுக்கு அடக்குமுறையை திணித்தது. மண்டேலா அவரின் பல்கலைக்கழகத் தோழனாகிய ஒலிவர் ரம்போவும் இணைந்து அந்த அரசாங்கத்தின இனஒதுக்கலுக்குள்ளாகிய கறுப்பின மக்களுக்காக சட்ட ஆலோசனைகளை வழங்கினார்.

ஆனால் நிறவெறியும் ஒடுக்குமுறையும் எல்லைமீறிச் செல்வதை கண்டு சீற்றம் கொண்ட மண்டேலா முழுநேரமாக அரசியலுக்குள் புகுந்தார். விரைவிலேயே கறுப்பின மக்களின் நலனை பாதுகாப்பதற்காக உருவான ‘ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரானார்.

அதுவரை மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை மட்டுமே மேற்கொண்டுவந்த ஆப்பிரிக்க தேசிய காங்கிரசை நெல்சன் மண்டேலா தலைமையேற்றதும் வெள்ளை நிறவெறி ஆட்சியை எதிர்த்து அறவழி போராட்டங்களை நடத்தும் போராட்ட அமைப்பாக மாற்றினார். அவரது வன்முறையற்ற போராட்டம் வளர்ச்சியடைவதையும் மகக்ள் மத்தியல் விழிப்புணர்வை ஏற்படுத்தவதையும் கண்ட வெள்ளை நிறவெறி; அரசாங்கம் 1956 இல், அரசுக்கு எதிராக புரட்சி செய்தார் என்று குற்றம் சாட்டி நெல்சன் மண்டேலாவையும் 150 க்கும் மேற்பட்ட அவரது தோழர்களையும் கைது செய்தது. நீண்ட சட்ட போராட்டத்திற்கும் சர்வதேச அழுதங்களுக்கும் பின்பு 1961ல் அனைவரும் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.சிறையில் இருந்து வெளிவந்த மண்டேலா தீவிரமாகச் செயற்பட்டார். இதன் காரணமாக 1960 களில் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் வேகமாக வளர்ச்சியடைந்தது. 1960 ம் ஆண்டு; கறுப்பின மக்களுக்கு தனியான கடவுச்சீட்டு வழங்குவதற்கு எதிராக மண்டேலா ளூயசிநஎடைடந சார்பெவில் நகரில் ஊர்வலம் ஒன்றை; நடாத்தினர். இந்த ஊர்வலத்தை கலைப்புதற்கு காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 69 பேர் கொல்லப்பட்டனர். 

இந்தச் சம்பவம் தென்னாபிரிக்காவில் பெரும் கொந்தழிப்பை ஏற்படுத்திய மட்டுமல்லாமல் நெல்சன் மண்டேலாவின் சிந்தனைப் போக்கிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது

ஆம் உரிமைகளை யாசித்துப் பெறமுடியாது பேராடித்தான் பெற வேண்டும் என்பதை அவர் உணர்ந்து கொண்டார்

அது வரை மென்போக்கு அரசில் கட்சியாக இருந்த ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் ஆயுதப் போராட்ட விடுதலை அமைப்பாக மாறியது.

ஏற்கனவே லத்தீன் அமெரிக்காவில் சேகுவராவால் நடத்தப்பட்ட அரசுக்கு எதிரான கெரில்லா போர் முறையை ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் தேர்ந்தெடுத்தது

1961ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி இனவெறிக்கு எதிரான முதலாவது தாக்குதல் மண்டேலா தலைமையில் நடத்தப்பட்டது.அதன் பின் தொடர்ச்சியாக வெள்ளை நிறவெறி அரசாங்கப் படைகள் மீதும் அதன் நிர்வாக கட்டமைப்புகள் மீதும் நடத்தப்பட்ட பல வெற்றிகரமான தாக்குதல்களால் தென்பிரிக்க நிறவெறி அரசு ஆட்டங்கண்டது.1961ல் நெல்சன் மண்டேலாவுக்கு எதிராக பிடியாணையை பிறப்பித்தது.

ஆனாலும் அவர் தலைமை மறைவாக இருந்து விடதலைப் பேரை வெற்றிகரமாக நடத்தினார்.மண்டேலாவின் எழுச்சி ஆபிரிக்காவை தாண்டி அமெரிக்க ஐரொப்பா மற்றும் ஆசிய கண்டங்களிலும் எதிரொலித்தது..அவரது பேராட்டத்துக்கான ஆதரவுத்தளம் விரிந்தது.

ஆடக்குமுறைக்கு உள்ளான மக்களுக்கும் தங்களின் விடுதலைக்காக பேராடும் மக்களுக்கு எந்த உதவியும் செய்யாத அமெரிக்கா வழக்கப்போல தென்பிரிக்காவில் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் மனிதஉரிமை மீறலில் ஈடுபடுகிறது என்றும் அது ஒரு பயங்கரவாத அமைப்பு என்றும் நெல்சன் மண்டேலா ஒரு பயங்கரவாதி என்றும் பிரகடனப்படுத்தியது.அதேரிக்காவின் நேச நாடுகளும் அதை பின்பற்றின. ஆனால் அவற்றைவிட அதிகமான நாடுகளும் பெரும்பாலான உலக மக்களும் அவரை ஒரு விடுதலைப் போராளியாகவே பார்த்தனர்.

1962ம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 05 ஆம் திகதி மண்டேலா தங்கியிருந்த பகுதிக்குள் மாறு வேடமணிந்து புகுந்த காவல்துறையினர் அவரையும் அவரது 10 முக்கிய தோழர்களையும் சுற்றிவளைத்து கைதுகைது செய்தனர். அரசுக்கு எதிராகப் புரட்சி செய்தது அரசைக் கவிழ்க்க முயன்றது அமைதியைக் குலைத்தது, கலகத்தை உருவாக்கியது ஆகிய குற்றச்சாட்டுக்கள் அவர்கள் மீது முன்வைக்கப்பட்டன. 1964-ஆம் ஆண்டு ஜுன் மாதம் 12-ம் திகதி மண்டேலாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது அவருக்கு 46 வயது. அன்று ஆரம்பித்த அவரின் சிறை வாசம் 27 ஆண்டுகளாகத் தொடர்ந்தது.

;உலக வரலாற்றிலேயே மண்டேலாவை போல இவ்வளவு நீண்ட காலம் சிறையில் வாடிய தலைவர்கள் கிடையாது.

பல ஆண்டுகள் அவரைத் தனிமைச்சிறையில் அடைத்து கொடுமைப்படுத்தப்பட்டார். 1988-ஆம் ஆண்டு கடுமையான காச நோய் ஏற்பட்டு, மரணத்தின் எல்லைக்கே அவர் சென்றதால் வீட்டுச்சிறைக்கு மாற்றப்பட்டார்.

மண்டேலாவை கைது செய்ததால் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் போராட்டம் ஒய்ந்துவிடவில்லை.

அவரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை உலகம் முழுவதும் எழுந்தது. ஆனால் தென்னாப்பிரிக்க நிறவெறி ஆட்சியின் தலைவராக இருந்த போந்தா, மண்டேலாவை விடுதலை செய்ய மறுத்து வந்தார். மண்டேலாவை விடுதலை செய்யும்படி வற்புறுத்தி மண்டேலாவின் முன்னாள் மனைவி வின்னியின் தலைமையில் ஆர்ப்பாட்டங்களும், ஊர்வலங்களும் தொடர்ந்து நடந்து வந்தன.

‘மன்னிப்பு கேட்டால் விடுதலை செய்கிறோம்’ என்று தென்னாப்பிரிக்கா அரசு ஆசை காட்டியது. ஆனால் மண்டேலா மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார். தென்னாப்பிரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய அரசுத்தலைவராக பதவிக்கு வந்த டெக்ளார்க் மண்டேலாவை விடுதலை செய்ய முன்வந்தார்.

11.2.1990 அன்று அப்போதைய தென்னாப்பிரிக்கா அரசுத் தலைவரான பிரெட்ரிக் வில்லியம் டெக்ளார்க் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் மீதான தடையை நீக்கி, மண்டேலா விடுதலை செய்யப்படுவார் என்று அதிகாரப் பூர்வமாக அறிவித்தார்.அதன்படியே 11.2.1990 அன்று மாலையில் மண்டேலா விடுதலை செய்யப்பட்டார்..அப்போது அவருக்கு வயது 71. இந்நிகழ்வு உலகம் முழுவதும் நேரடியாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டதுமண்டேலாவின் விடுதலையை வரவேற்க உலகம் முழுவதும் ஏற்பாடுகள் நடந்தன.

1994ம் ஆண்டு மே 10 ந் திகதி அவர் தென்னாப்பிரிக்காவின் முதன் முதல் கறுப்பின அரசுத்தலைவர் ஆனார்.1999 இல் பதவியை விட்டு விலகிய அவர் 2வது முறை அரசுத்தலைவர் பதவிக்கு போட்டியட மறுத்துவிட்டார்.

உலக அமைதிக்கான நோபல் பரிசு இந்தியாவின் ‘நேரு சமாதான விருது’ ‘பாரத ரத்னா’ விருது மகாத்மா காந்தி சர்வதேச விருது உட்பல பல சர்வதேச விருகளைப்பெற்ற நெல்சன் மண்டேலாவின் பிறந்த நாளான ஜூலை 18ம் திகதியை சர்வதேச நெல்சன் மண்டேலா தினமாக ஐ.நா அறிவித்துள்ளது.

இன்று நெல்சன் மண்டேலா என்ற மனிதர் மறைந்துவிட்டார்.அவரது உயிர் மூச்சு ஓடங்கிவிட்டது.ஆணால் எழுப்;பிய விடுதலைக்குரல் ஓய்ந்துவிடவில்லை புரட்சித்தீ அணைந்துவிடவில்லை.

ஏனென்றால ;உலகில் இன்னமும் நிறவெறியும் இனவெறியும் ஒழிந்துவிடவில்லை.பாரபட்சமும் பிறப்பைக் கொண்டும் நிறத்தைக் கொண்டும் மனிதனை மனிதம் இழிவுசெய்து கெடுமையும் மறைந்துவிட வில்லை.

11.2.1990ல் நெல்சன் மண்டேலே சிறையிலிருந்து வெளியே வந்த போது ‘இனவெறி நிறவெறி ஆட்சியை தனிமைப்படுத்த சர்வதேச சமுதாயம் தொடர்ந்து பிரசாரம் செய்ய வேண்டும் என்றும் தன்னுடைய விடுதலை மட்டும் பேச்சுவார்த்தைக்குத் தேவையான அடித்தளம் ஆகாது என்றும் கறுப்பர்களுக்குச் சம உரிமை கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்று தெரிவித்த வார்த்தைகள் இன்னும் அர்த்த முள்ளவையாக தென்னாபிரிக்க மக்களினது மட்டுமல்லாமல் விடுதலை வேண்டி நிற்கும் உலகிலுள்ள அனைத்து மக்களினதும் குரலாக அது என்றும் ஒலித்துக்கொண்டே இருக்கும்.

நெல்சன் மண்டேலா என்ற மாமனிதனுக்கு விடுதலைiயும் சமத்துவத்தையும் மாநிடத்தையும் நேசிக்கும் உலக மக்களுடன் கைகோர்த்து நாமும் எமது வீர வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.

http://sivasinnapodi.wordpress.com/2013/12/05/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0/

 

துயர் கலந்த பிரியாவிடை.

இன்னமும் அடிமைப்பட்ட இனங்கள் இவ்வுலகில் இருக்கின்றன. நீங்கள் திரும்பவும் வந்து பிறக்க வேண்டும்.

அடிமைத்தழையை உடைத்தெறியும் சம்மட்டியாக.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலை வீரர்கள் மரிப்பதும் இல்லை, வரலாறு அவர்களை மறப்பதும் இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுதலையின் விடிவெள்ளியே கண்ணீருடன் உங்களிடமிருந்து விடைபெறுகின்றோம்.

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்புச் சிங்கமே! கைகளை நீட்டு குலுக்கிக் கொள்ளுவோம்! - விடுதலைப் புலிகள் சார்பில் புதுவை இரத்தினதுரை அன்று வடித்த கவிதை!

 

 

இருண்ட கண்டத்தில் விரிந்த மலரே! 
வாழ்த்துக்கள். 
இரும்புத்திரையை உடைத்தெழுந்த கதிரே! 
மேகங்களிடம் ‘முத்தங்களும்’ 
காற்றிடம் ‘மலர்ச்செண்டும்’ அனுப்பியுள்ளோம். 
பெற்றுக்கொள்.
 
‘இதரைவாழைக்கன்றுகள்’ இரண்டை 
இனிவரும் கடலலைகளிடம் கொடுத்து விடுகின்றோம். 
கொடிமரத்துக்கருகில் பாத்தி கட்டி நாட்டிவிடு. 
அடிபெருகி எங்கள் அன்புக்குக் குலைதள்ளட்டும். 
நேற்றுவரை தென்னாபிரிக்கா என்றே 
உன்னை அழைத்தோம். 
இன்று ‘என் ஆபிரிக்கா’ என்றே 
இங்கே ஒவ்வொருவரும் உச்சரித்துக் கொள்கின்றோம்.
 
‘வாஸ்கொடாமா’வுக்கு மட்டும்தான் 
நீ ‘நம்பிக்கைமுனை’யாக இருக்கவில்லை 
போராடும் எங்களுக்கும் அப்படித்தான் புலப்படுகின்றாய் 
நெல்சன் மண்டேலா! 
கறுப்புச் சிங்கமே! கையை நீட்டு. 
குலுக்கிக் கொள்ளுவோம்.
 
உன்னைக் கட்டித்தழுவத் துடிக்கின்றோம். 
என்ன செய்வது நீ எட்ட இருக்கின்றாய். 
அன்று நீ ‘சிம்மாசனம்’ ஏறியபோது 
எமக்கேன் அழைப்பனுப்பவில்லை? 
சிறீலங்காவுக்கு நீ எந்தவழி உறவு? 
விஜேதுங்காவை விருந்துக்கழைத்தபோது 
தமிழீழம் உன் கண்களுக்கு ஏன் தட்டுப்படவில்லை? 
இது விருந்து கிட்டவில்லையென்ற விசனமல்ல... 
போராடும் பூமியொன்றை 
புறமொதுக்கிவிட்டாய் என்ற ஆதங்கம் மட்டுமே. 
போகட்டும் இதனால் கோபமேதுமில்லை. 
இனிமேலாவது நண்பர்களை இனம் கண்டுகொள். 
நன்மை உனக்குத்தான்.
 
ஆபிரிக்காவின் ‘காப்பிரி’ மக்களே! 
சூரியனை வழிமறித்து 
தொட்டுப் பேசும் வல்லமையின் வடிவே! 
காற்றுக்கொதுங்கிய வெள்ளையன் 
நேற்றுவரை உன் முதுகில்தான் இருந்தான்.
 
கறுப்பனென்று உன்னை அழைத்தபோது 
வெள்ளை உதடுகள் வேதனைப்படவில்லை. 
மலத்தைக்கூட 
தன்வீட்டில் அறைகட்டிக் குடியிருத்தியவன் 
உன்னை வீதியில் உலாவவிடவில்லை. 
படுக்கை அறைக்குள்ளும் நாயை அழைத்தவன், 
அடுப்படிக்குள்ளே கோழியை அனுமதித்தவன், 
கறுப்பனைத்தொடும் காற்றைக்கூட 
வெறுத்து விரட்டினான். 
அழகான உன் கரிய மேனியும் 
உரமேறிய தசைநார்களும் 
அவனுக்கு அச்சத்தைத் தரவில்லை. 
 
அருவருப்பாகவே இருந்தது. 
நீ பேசாமல் இருக்கவில்லை 
போராடினாய். 
வெற்றிக்கம்பத்தைத்தான் 
உன்னால் தொட்டுவிடமுடியவில்லை. 
உங்கு வேர்கொண்ட மரங்களெதுவும் 
நீர்குடித்து வளரவில்லை. 
கறுப்பனின் குருதி குடித்தே தளிர்த்தன. 
உலகெங்கும் தார்பூசியே வீதி கறுப்பானது. 
உன் நாட்டில் மட்டும்தான் 
கறுப்பனின் வியர்வை பட்டு வீதி கறுப்பானது. 
வெள்ளைச் சீமாட்டிகளின் விருந்துக்குப் பிறகு 
வீசியெறியும் எச்சில் இலைக்காக 
உன்பரம்பரை தாழ்வாரத்தில் தவமிருந்தது. 
வந்தவன் ஆள நீ வயலில் மாடானாய். 
வெள்ளைக்காரன் 
மாட்டுத்தொழுவத்தில் கறுப்பியின் முலைதொடுவான். 
கறுப்பனுக்கு மட்டும் காயடிப்பான். 
 
நீ புயலாகிப் போராடியவன்தான். 
என்ன செய்வது? 
அம்பும் வில்லும்தான் உனக்கு அகப்பட்டது. 
அவனிடம் துப்பாக்கியல்லவா இருந்தது! 
காலங்கள் கழிந்தனவே தவிர 
உன் துன்பங்கள் கழிய வழிவந்து சேரவில்லை. 
நீண்ட காலத்தின் பின் 
‘நெல்சன் மண்டேலா’ வந்து பிறந்தபோதுதான் 
நெஞ்சு நிமிர்த்தினாய். 
எப்படியோ 
சுற்றிய இரும்புவேலிச் சுவர்கள் இடிந்தன. 
இன்று ஆபிரிக்காவுக்கு சிறகுமுளைத்துவிட்டது. 
புதிதாகப் பிறந்த கறுப்புதேசமே! 
விடுதலைக்கு நீ கொடுத்த விலையிலும் 
அதிகவிலை நாங்கள் கொடுக்கின்றோம். 
நீங்கள் போராடும் விதமே வித்தியாசமானது. 
உனக்குப் பக்கத்து நாடுகள் பால்வார்த்தன. 
எமக்கு அண்டை நாடொன்று நஞ்சையே தந்தது. 
நின்றும், நடந்தும், குனிந்தும், நிமிர்ந்தும் 
நீ வசதிக்குத் தக்கபடி வழிமாறியுள்ளாய். 
நாங்கள் பாதை மாற்றும் பரம்பரை இல்லையே! 
 
விடுதலையைப் பேசிப்பெறும் எண்ணம் எமக்கில்லை. 
போராடிப்பெறுவதென்றே முடிவு. 
பிரபாகரனைப் பார்க்காவிட்டாலும், கேட்டிருப்பாய். 
தொட்டுத் தோழமையை வளர்த்துக் கொள். 
கண்டங்கள் கடந்து வாழ்ந்தாலும் 
நாங்கள் உணர்வால் ஒன்றுபட்டவர்கள். 
நிறத்தால் வேறுபட்டாலும் 
நீங்கள் விடுதலை பெறவேண்டுமென்று 
அதிகம் விரும்பியது நாங்கள்தான். 
ஏன் தெரியுமா? 
வெள்ளைக்காரன் உன்னை மட்டுமா அடக்கினான்? 
இல்லை. 
எம்மை அடக்கவும் எதிரிக்குத் துணைபோனான். 
இங்கே கண்ணிவெடியில் சிதறும் 
‘பவள்’ கவச வண்டியை எதிரிக்கு அனுப்பியதே 
வெள்ளைத்தோல் வெறியன்தான். 
இனி இது நடக்காது. 
நாங்கள் நம்புகின்றோம். 
போராடிப் பெற்ற சுதந்திரத்தின் 
பெறுமதி புரிந்தவர்கள் நீங்கள். 
விடுதலையின் முகவரி தெரிந்தவர்களே! 
எங்கள் சுதந்திரத்துக்கு முத்திரை ஒட்டுங்கள் 
நம்பிக்கைமுனை நாடே! 
எங்களின் நம்பிக்கையை 
நாசமாக்கி விடாதே; 
கறுப்புச் சிங்கமே நெல்சன் மண்டேலா. 
ஒரு கேள்வி பதில் வேண்டும். 
சில இடங்களில் சேற்றிலேன் காலைப்புதைத்தாய்? 
சமாதானத்துக்கான நோபல் பரிசை 
வேடனும் புறாவும் எப்படிப் பங்கிட முடியும்? 
குருதிபடிந்த வெள்ளைக் கொலைக்கரமும் 
சிறையில் வாடிய உன் கரிய திருக்கரமும் 
குலுக்கிக்கொண்டபோது 
அந்த விருதை எப்படி விளங்கிக்கொண்டாய்? 
பரிசு வாங்கியபோது 
உன் பரம்பரை சிந்திய குருதியை 
எப்படி மறந்து கைகளை நீட்டினாய்? 
என்றாலும் உன்மீது கோபம் வரவில்லை. 
கறுப்புச் சிங்கமே! கைகளை நீட்டு. 
குலுக்கிக் கொள்ளுவோம். 
 
- கவிஞர் புதுவை இரத்தினதுரை

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

தென்னாபிரிக்காவின் சிறைக்கூடுகளில்,

கறுப்பர்களுக்கு மட்டும்,

அரைக்காற் சட்டைகள்!

 

இந்தியன் கூட,

வெள்ளைக்காரனாகி நின்ற காலம்!

காந்தி திரும்பியும் பார்க்கவில்லை!

 

சுண்ணாம்புக் கற்கள்,

சிந்திய தூசுத் துணிக்கைகள்,

உனது கண்ணீர்த் துவாரங்களைத்,

தூர்ந்து போக வைத்தன!

ஆனாலும் கவலைப்படாதே!

உனக்காகவும் சேர்த்து உலகமே,

கண்ணீர் சிந்துகின்றது!

 

 

 

ஆழ்ந்த அஞ்சலிகள்!

 

 

 

 

மனவுறுதி படைத்த மாவீரனுக்கு கண்ணீரஞ்சலிகள்......

இவரும் காந்தி, மார்டின் லூதர் கிங் வரிசையில் மிளிர்வார்

  • கருத்துக்கள உறவுகள்

போய் வா விடுதலை வீரனே...

 அஞ்சலிகள்.


1452079_434525203337273_1858816380_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

nelson-mandela-10-01-12.jpg

 

இளமைக்காலத்தின் பெரும் பகுதியை... தனது மக்களின் விடுதலைக்காக சிறையில் கழித்த,
நெல்சன் மண்டலோ அவர்களின், மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வீரவணக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

நெல்சன் மண்டேலாவுக்கு எனது அஞ்சலிகள். 

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.அவரின் அரசியல் எதிரிகள் கூட அவரை பாராட்டுவது தான் ஏனைய தலைவர்களில் இருந்து அவர் தனித்துவமானவர் என காட்டுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

நெல்சன் மண்டேலாவுக்கு எனது அஞ்சலிகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.