Jump to content

என் இரு பயணங்கள்: ஒரு சிறு வரைவு - நிழலி


Recommended Posts

On ‎3‎/‎17‎/‎2017 at 10:20 AM, ரதி said:

காக்கா இறைச்சி தேடிப் போயிருப்பார்.:unsure:

ரதி, ஒருக்கால் என்றாலும் ஊருக்கு போகும் நேரத்தில் நீர்க்காக்கா இறைச்சி சாப்பிட்டுப் பாருங்கள்.
பதின்ம வயதில் பாசையூர் நண்பனின் வீட்டில் சாப்பிட்டு விட்டு அம்மாவுக்கு அதைச் சொல்லாமல் ஒழித்து இருக்கின்றேன்.

On ‎3‎/‎17‎/‎2017 at 11:36 AM, வல்வை சகாறா said:

வெட்டுக்கிளி மகா ரசிகன் என்று தெரியும் காலம் ஆளை மாத்தியிருக்கும் என்று நினைத்தேன் ஊகூம் கொஞ்சமாவது திருந்தினதா தெரியேல்லை.... இந்தக் கவிதாப் பொண்ணுக்கு சரியாகக் கடிவாளம் போடத் தெரியலை<_<

மனைவி கவிதா என்னை விட மகா ரசிகை. :10_wink::10_wink:

15 hours ago, Thumpalayan said:

ஐயோ அங்க மட்டும் கேட்டிச்சா. நல்ல சைனீஸ், கொரியன் அயிட்டங்கள் வச்சிருப்பாங்களே (சாப்பாட்டை சொன்னனப்பா). 

மற்றது மூண்டு பிரண்டிப் போத்தலோட போனதால பாறுக்குப் போயிருக்க மாட்டியள் - சரியான குட்டி பார், விலையும் யானை விலை.

அந்த எயர் கொஸ்டசிண்ட  வெளிர் வயிறையும் திமிரும் மார்பயும் வாசிச்சுப்போட்டு பயபுள்ளைங்க மார்க்கமா அலையிறாங்க பாஸ். இன்னொரு இடைச்செருகல் போட்டால் குறைஞ்சே போவியள்?

ஓமோம்... அங்கு நிறைய சைனீஸ் கொரியன் ஐயிட்டங்கள் இருக்கு. ஆனால் எனக்கு இந்த வகையை கண்டாலே கொஞ்சம் அலர்ஜி ஆக இருக்கும்.  என் ரசனைக்குரிய வகைக்குள் இவை இல்லை. எனக்கு ஊர்ச்  சாயல் இருக்கும் சாப்பாடும் நாட்டுக் கோழியும் தான் பிடிக்கும் (சாப்பாட்டு ஐயிட்டங்களை சொல்றேனப்பா)

அங்குள்ள பாரிற்கு போகவில்லை. ஆனால் அங்க்கு சுற்றி பலர் சோடி சோடியாக அமர்ந்து பகல் நேரத்திலும் தண்ணி அடிச்சுக் கொண்டு இருந்திச்சினம்.

திரும்பி சென்னைக்கு போகும் போதும் அந்த இடைச்செருகலை சந்திக்க முடிஞ்சுது..அப்படி ஒரு ராசி எனக்கு

 

13 hours ago, MEERA said:

நிழலி தயவு செய்து மடியில் கனம் இல்லை என்று கூறாதீர்கள். உங்களுக்குரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து விட்டே பயணம் மேற்கொண்டிருக்கிறீர்கள். சிங்களத்தில் கதைப்பதும் சிறு உதவியே.

 

"Juliana hotel" ஒரு மார்க்கமான இடத்தில் தான் தங்கியிருக்கிறீர்கள். இப்பவும் "அப்படி" நடக்கிறதா? 

 

 

ஓம் மீரா...கனம் இல்லை என நினைச்சாலும் உள்ளூர பயம் இருக்கத்தான் செய்தது.  என்னுடன் சேர்த்து கனம் சுமந்தவர்களில் அனேகர் மகிந்தவுடன் கொஞ்சி குலாவி விட்டதால் அதை காலம் கரைத்து விட்டது.

 வில் வெளிப்படையாக இப்ப நடப்பதில்லை. ஆனால் மேல் மாடியில் ஒரு மசாஜ் கிளப் உள்ளது என்றும் அங்கு நடப்பதாகவும் அறிந்தேன். இவற்றுக்கு மேலாக 16 வயதளவை சேர்ந்த சிறுவன் / சிறுமிகளும் கூட இணைந்து வந்து ஹோட்டலில் ரூம் எடுப்பதை காண முடிந்தது. காலை வெளியே போய் இரவு படுக்க மட்டும் வரும் அளவுக்கு திட்டங்கள் / வேலைகள் இருக்கும் ஒருவருக்கு இது ஏற்ற விடுதி. குடும்பத்துடன் தங்க ஏற்ற விடுதி அல்ல. காசும் ஒரு நாளைக்கு 5000 தான். இதை விட நட்பான சேவை.

 

10 hours ago, புங்கையூரன் said:

அனுபவப் பகிர்வு நன்றாக உள்ளது...நிழலி!

நானும் பல தடவைகள் போய் வருகின்றேன்! போர் நடந்த காலங்களிலும்..கட்டாயமாகப் போயே ஆக வேண்டுமென்ற நிலையிலும் போய் வந்திருக்கிறேன்! ஆனால்..எப்போதும்.. பொம்பிளையள் உள்ள பக்கம் தான் போறது வழக்கம்! இப்படியான பிரச்சனைகள் வரவில்லை! ஒரே ஒரு முறை மட்டும் ஒரு ஆண் உத்தியோகத்தரிடம் போக வேண்டி ஏற்பட்டது! எனது கடவுச் சீட்டில் 'பிறந்த இடம்' மாத்தளை என்று பதியப்பட்டிருந்தது! நான் சிங்களவனா, தமிழனா என்று அனுமானிக்க முடியாமல் உள்ளதாக மேலதிகாரிக்குச் சிங்களத்தில் கூறுவது எனக்குப் புரிந்தது! மேலதிகாரியும்...சரி..சரி..ஆளை விடு..என்று கூறுவதும் கேட்டது! ஒரு கருவாட்டுப் பார்வையுடன் விசாவைக் குத்தித் தந்தார்கள்!

சில வேளைகளில் ..எந்த நாட்டுக் கடவுச் சீட்டு என்று பார்த்து அலுப்புக் குடுக்கிறார்களோ தெரியாது!
அனேகமாக..ஆங்கிலத்தில் தான் உரையாடலை முடித்துக் கொள்வதுண்டு!

சிங்களம் ஓரளவுக்குக் கதைக்கத் தெரியும் எனினும்...எவருடனும்க வலிந்து கதைக்க விரும்புவதில்லை!

வழக்கமாக நானும் பொம்பளையள் பக்கம் தான் தான் போவது உண்டு. ஆனால் என் நேரத்துக்கு அன்று ஒரு பெண் அதிகாரியும் இருக்கவில்லை (மற்றப்படி நிழலியாவது பெண்ணை புறக்கணித்து ஆணிடம் செல்வதாவது...ஹ்ம்)

ஒரு மொழியாக எனக்கு சிங்களம் மிகவும் பிடிக்கும். இங்கும் சிங்கள பாடல்களை கேட்பது தொடர்கின்றது.

9 hours ago, ஈழப்பிரியன் said:

நிழலி இப்போது கொழும்பில் ரைக்சி ஆட்டே பிடிப்பதை விட ஊபர் (UBER) பிடிப்பது லாபம் சேவையும் நன்று என்று கூறுகிறார்கள்.இதன் அனுபவம் ஏதாவது?

இல்லை, தனிப்பட்ட ரீதியில் எனக்கு ஊபர் (UBER) பிடிப்பதில்லை.

இலங்கையில் கொழும்புக்குள் பயணப்பட ஓட்டோவை தான் பயன்படுத்தினேன்.  என்று போட்டு வருபவை தூரத்துக்கு ஏற்றவாறு நியாயமாக கட்டணம் அறவிடுகின்றனர். மீற்றர் காட்டியதுக்கும் மேலாக கேட்பதும் இல்லை.  என்று வருபவற்றை தவிர்க்க சொல்லி நண்பர்கள் ஆலோசனை கொடுத்து இருந்தார்கள்

Link to comment
Share on other sites

  • Replies 139
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எனக்குத் தெரிஞ்சு கட்டுநாயக்கா எயார்போட்டில காசு மாத்தின முதல் தமிழ் ஆள் நிழலிதான்?

அங்குள்ள மணி எக்ஸ்சேஞ்ச் அப்பாவிகளாக வரும் ரூரிஸ்ட்டுக்களுக்கு மட்டும்தான்.

நான் அடிக்கடி போவதில்லை. போனபோதெல்லாம் உண்டியலூடாகவே அனுப்பிவிட்டுத்தான் போனேன். கரன்ஸியாகக் கனக்கக் கொண்டுபோவதும் இல்லை!

Link to comment
Share on other sites

5 hours ago, நிழலி said:

ஓமோம்... அங்கு நிறைய சைனீஸ் கொரியன் ஐயிட்டங்கள் இருக்கு. ஆனால் எனக்கு இந்த வகையை கண்டாலே கொஞ்சம் அலர்ஜி ஆக இருக்கும்.  என் ரசனைக்குரிய வகைக்குள் இவை இல்லை. எனக்கு ஊர்ச்  சாயல் இருக்கும் சாப்பாடும் நாட்டுக் கோழியும் தான் பிடிக்கும் (சாப்பாட்டு ஐயிட்டங்களை சொல்றேனப்பா)

அங்குள்ள பாரிற்கு போகவில்லை. ஆனால் அங்க்கு சுற்றி பலர் சோடி சோடியாக அமர்ந்து பகல் நேரத்திலும் தண்ணி அடிச்சுக் கொண்டு இருந்திச்சினம்.

திரும்பி சென்னைக்கு போகும் போதும் அந்த இடைச்செருகலை சந்திக்க முடிஞ்சுது..அப்படி ஒரு ராசி எனக்கு

எனக்கும் இவர்களில் ஆண்களையும் பெண்களையும் கஞ்சத்தனமாகவே பிரம்மன் படைத்துவிட்டான் என்றொரு கோவம் ஆதலால் "யெல்லோ வீவர்" இல்லை ஆனால் ஜப்பானுக்கு விதிவிலக்கு குடுக்கவேண்டியதாப் போச்சு.

"கம குக்குல" வேணுமெண்டால் தக்குண பத்த தான் போக வேண்டும். தாமரை இலையில சூதுரு சம்பா சோறு, ஆத்து மீன் அம்புல் தியால், கொட்டுக் கொல சம்பல், பொலொஸ் கறியுடன் தென்னங் கள்ளு. அனுபவிச்சாத் தான் தெரியும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎21‎/‎03‎/‎2017 at 7:29 PM, நிழலி said:

ரதி, ஒருக்கால் என்றாலும் ஊருக்கு போகும் நேரத்தில் நீர்க்காக்கா இறைச்சி சாப்பிட்டுப் பாருங்கள்.
பதின்ம வயதில் பாசையூர் நண்பனின் வீட்டில் சாப்பிட்டு விட்டு அம்மாவுக்கு அதைச் சொல்லாமல் ஒழித்து இருக்கின்றேன்.

மனைவி கவிதா என்னை விட மகா ரசிகை. :10_wink::10_wink:

ஓமோம்... அங்கு நிறைய சைனீஸ் கொரியன் ஐயிட்டங்கள் இருக்கு. ஆனால் எனக்கு இந்த வகையை கண்டாலே கொஞ்சம் அலர்ஜி ஆக இருக்கும்.  என் ரசனைக்குரிய வகைக்குள் இவை இல்லை. எனக்கு ஊர்ச்  சாயல் இருக்கும் சாப்பாடும் நாட்டுக் கோழியும் தான் பிடிக்கும் (சாப்பாட்டு ஐயிட்டங்களை சொல்றேனப்பா)

அங்குள்ள பாரிற்கு போகவில்லை. ஆனால் அங்க்கு சுற்றி பலர் சோடி சோடியாக அமர்ந்து பகல் நேரத்திலும் தண்ணி அடிச்சுக் கொண்டு இருந்திச்சினம்.

திரும்பி சென்னைக்கு போகும் போதும் அந்த இடைச்செருகலை சந்திக்க முடிஞ்சுது..அப்படி ஒரு ராசி எனக்கு

 

 

ஓம் மீரா...கனம் இல்லை என நினைச்சாலும் உள்ளூர பயம் இருக்கத்தான் செய்தது.  என்னுடன் சேர்த்து கனம் சுமந்தவர்களில் அனேகர் மகிந்தவுடன் கொஞ்சி குலாவி விட்டதால் அதை காலம் கரைத்து விட்டது.

 வில் வெளிப்படையாக இப்ப நடப்பதில்லை. ஆனால் மேல் மாடியில் ஒரு மசாஜ் கிளப் உள்ளது என்றும் அங்கு நடப்பதாகவும் அறிந்தேன். இவற்றுக்கு மேலாக 16 வயதளவை சேர்ந்த சிறுவன் / சிறுமிகளும் கூட இணைந்து வந்து ஹோட்டலில் ரூம் எடுப்பதை காண முடிந்தது. காலை வெளியே போய் இரவு படுக்க மட்டும் வரும் அளவுக்கு திட்டங்கள் / வேலைகள் இருக்கும் ஒருவருக்கு இது ஏற்ற விடுதி. குடும்பத்துடன் தங்க ஏற்ற விடுதி அல்ல. காசும் ஒரு நாளைக்கு 5000 தான். இதை விட நட்பான சேவை.

 

வழக்கமாக நானும் பொம்பளையள் பக்கம் தான் தான் போவது உண்டு. ஆனால் என் நேரத்துக்கு அன்று ஒரு பெண் அதிகாரியும் இருக்கவில்லை (மற்றப்படி நிழலியாவது பெண்ணை புறக்கணித்து ஆணிடம் செல்வதாவது...ஹ்ம்)

ஒரு மொழியாக எனக்கு சிங்களம் மிகவும் பிடிக்கும். இங்கும் சிங்கள பாடல்களை கேட்பது தொடர்கின்றது.

இல்லை, தனிப்பட்ட ரீதியில் எனக்கு ஊபர் (UBER) பிடிப்பதில்லை.

இலங்கையில் கொழும்புக்குள் பயணப்பட ஓட்டோவை தான் பயன்படுத்தினேன்.  என்று போட்டு வருபவை தூரத்துக்கு ஏற்றவாறு நியாயமாக கட்டணம் அறவிடுகின்றனர். மீற்றர் காட்டியதுக்கும் மேலாக கேட்பதும் இல்லை.  என்று வருபவற்றை தவிர்க்க சொல்லி நண்பர்கள் ஆலோசனை கொடுத்து இருந்தார்கள்

சீக்tw_astonished:(நீர்க் காக்கா? அப்படி ஒரு பறவை இருக்கா? உண்மையிலேயே தெரியவில்லை):unsure:

On ‎21‎/‎03‎/‎2017 at 7:48 PM, கிருபன் said:

எனக்குத் தெரிஞ்சு கட்டுநாயக்கா எயார்போட்டில காசு மாத்தின முதல் தமிழ் ஆள் நிழலிதான்?

அங்குள்ள மணி எக்ஸ்சேஞ்ச் அப்பாவிகளாக வரும் ரூரிஸ்ட்டுக்களுக்கு மட்டும்தான்.

நான் அடிக்கடி போவதில்லை. போனபோதெல்லாம் உண்டியலூடாகவே அனுப்பிவிட்டுத்தான் போனேன். கரன்ஸியாகக் கனக்கக் கொண்டுபோவதும் இல்லை!

 நானும் ஒரு தடவை அவசரத்திற்கு கொஞ்சம் மாத்தி இருக்கன்....ஆனால் எனக்கு மாத்த முதலே தெரியும் எப்படியும் குறைச்சுத் தான் கிடைக்கும் என்று:rolleyes:

Link to comment
Share on other sites

On 20/03/2017 at 10:39 PM, நிழலி said:

எப்ப இலங்கையை விட்டு வெளியேறினாய் -ஆங்கிலத்தில் கேட்கின்றார்

நான் சரியாக எப்ப வெளியேறினான் என்பதை திகதி / நேரம் வாரியாக சிங்களத்தில் பதில் சொல்கின்றேன்

ஏன் இடையில் ஒருக்காலும் வரவில்லை - சிங்களத்தில் அவர்

'இவ்வளவு நாளும் வர எனக்கு பிடிக்கவில்லை'

என் முகத்தை பார்த்து விட்டு 'கப்பலிலால போனாய்'  என நக்கலும் ஏளனமுமாக கேட்கின்றார்

அனுபவப் பகிர்வுக்கு நன்றி. எனக்கு சென்னை பரிட்சயமான இடம். ஆனால் எக்காலத்திலும் கொழும்புக்கு நான் சென்றதில்லை. என்னுமொரு பதிவில் புத்தன் எழுதியதும் சரி இதில் நடக்கும் சிறு விசாரணையும் சரி கொழும்பு ஊடாக பயணம் செய்யும் நோக்கத்தையே சிதைக்கின்றது. ஒருவிதமான மனத் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. பல இடங்களில்  அன்றாடம் நெருக்கடிகளைள சந்திக்கின்றோம் ஆனால் சிங்களவர்கள் இந்திய அதிகாரவர்க்கம் கொடுக்கும் உளவியல் நெருக்கடிகளை மனம் சகிப்பதில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15.3.2017 at 3:18 AM, நிழலி said:

ஒரு விருந்தாளியின் பார்வை -1

மனம் முழுசும் மகிழ்வும் நெகிழ்வும் குடி கொண்டு இருந்தன.

அக்காவை பெற்ற தம்பிகளுக்குத்தான் தெரியும் அக்கா என்பது இன்னொரு அம்மா மட்டுமல்ல நல்ல தோழி என்றும். அதே போன்று அக்காவின் கணவர் எனும் உறவு நட்புக்கும் சகோதரருக்கு இடைப்பட்ட மிக உன்னதமான உறவு. அத்தான்மார்களால் வாழ்வு பெற்ற பலர் எம் சமூகத்தில் இருக்கினம்.----

 

நிழலி.... உங்கள் அக்காவின் மேல் வைத்திருக்கும் பாசம்... எம்மை, மெய்சிலிர்க்க  வைக்கின்றது.
முதல் பிறந்தவர்களுக்கு.... பொறுப்பு அதிகம். 
எனக்கு.... அக்கா, அண்ணா.. இருந்து இருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று யோசிப்பதும் உண்டு.

Link to comment
Share on other sites

கொழும்பில் முதல் மூன்று நாட்கள்

விமான நிலையத்தில் இருந்து ஹோட்டலுக்கு வந்தவுடன் பசி வயிற்றைக் கிள்ளுகின்றது

ஜூலியானா ஹோட்டலுக்கு அருகில் கொஞ்சம் சுத்தமாக தோன்றும் ஒரு உணவு விடுதியைக் கண்டு உள்ளே செல்கின்றேன். அங்கு ஒரு தமிழர் தான் பொறுப்பாக இருக்கின்றார். அவரிடம் பின்னர் பேச்சுக் கொடுத்ததில் லண்டனில் நான்கு ஐந்து KFC வைத்து இருந்ததாகவும், மே 2009 இன் பின்னர் நான்கு நண்பர்களுடன் (3 பேர் தமிழர்கள் ஒருவர் முஸ்லிம்) இணைந்து இலங்கைக்கு ஏதோ பொருட்களை இறக்குமதி செய்யும் வியாபாரத்தில் இறங்க, தன்னுடன் கூட்டுச் சேர்ந்த நான்கு பேரும் ஏமாற்றி விட்டதாகவும், பெருத்த நஷ்டம் ஏற்பட்டு இப்ப கொழும்பில் வழக்கு போவதாகவும், வழக்கிற்காக அடிக்கடி  லண்டனில் இருந்து கொழும்பு வருவது கஷ்டம் என்பதால் இங்கேயே தங்கி ஒரு முஸ்லிம் நண்பருடன் இணைந்து இந்த ஹோட்டலை நடத்துவதாகவும் கவலைப்பட்டு சொன்னார்.

(ஜனவரியில் இரண்டாம் தடவை கொழும்புக்கு போன போது, அவருக்கு இதயம் தொடர்பான வருத்தம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் இருக்கின்றார் என அறிந்து கொண்டேன்)

"தம்பி ஆரோட பிசினஸ் செய்தாலும் எங்கட ஆக்களோட மட்டும் செய்திறாதையுங்கோ" என்று அங்கு போகும் ஓவ்வொரு தடவையும் கூறுவார். சாப்பாடு அங்கு பரவாயில்லை. பெரிய திறம் என்று இல்லாட்டியும் ஓரளவுக்கு சுவையானதாக இருந்தது. அவர்களின் Fried Rice சும் கோழிப் பொரியலும் நல்ல டேஸ்ட். மற்றக் கடைகளை விட விலை சற்று அதிகம்.

************************************************* *************************************************

நான் இலங்கைக்கு செல்ல விரும்பியதற்கு / செல்ல வேண்டியதுக்கு மூன்று காரணங்கள். ஒன்று என் EPF / ETF காசை இன்னும் எடுத்து இருக்கவில்லை. அது தொடர்பாக வேலை பார்க்க.

அடுத்தது பல ஆண்டுகளாக சந்திக்க முடியாமல் போன நெருங்கிய உறவுகளை சந்திப்பதற்கு.

இந்த 9 ஆண்டு கால இடைவெளியில் நெருங்கிய மூன்று உறவுகளை இழந்து இருக்கின்றேன். பலர் 70 இற்கு அருகிலும் அதைக் கடந்தும் செல்லத் தொடங்கி விட்டனர். எனக்கும் 40 + ஆகிவிட்டது. விரைவாக எல்லாரையும் சந்தி என்று மனம் சொல்லிக் கொண்டு இருந்தது.

நான் போன அன்றே இரவு இதயத்தில் அறுவை சிகிச்சை (Open heart surgery) செய்த மாமியையும், அவர் மகனையும், ஒன்று விட்ட தங்கையையும் அவரது சின்னஞ் சிறு குழந்தையையும் சந்தித்தேன்.

மூன்றாவது நல்லா இலங்கை சாப்பாடு சாப்பிட.

இரவு இரண்டு மச்சான் மாருடன் sapphire hotel லில் தலை சுற்றும் அளவுக்கு நல்ல தண்ணி அடி. கன நாளைக்கு பிறகு Extra special Arrack அடித்தேன்

xp4v95.jpg

அடுத்த நாள் காலையில் வெள்ளவத்தைக்கு சென்று மைசூர் கபே யில் இரண்டு போண்டா சாப்பிட்டு விட்டு எனக்குப் பிடிச்ச Light tea  வாங்கிக் குடிச்சேன். வெள்ளவத்தையில் இருக்கும் உணவு விடுதிகளில் எனக்கு எப்பவும் பிடிச்சது சந்தைக்கு முன் இருக்கும் மைசூர் கபே தான். இன்னு  அதே சுவை.. அதே interior

72rfiu.jpg

(Light Tea)

புதனும் வியாழனும் கொழும்பில் சொந்த வேலைகளை பார்க்க நேரம் போனது.

எல்லாரும் குறிப்பிடுவது போன்று விலைவாசி மிக மோசமாக ஏறி இருக்கு. சில பொருட்களை கனடிய டொலரில் மதிப்பிட்டு பின் என் வருமானத்தையும் கனடிய டொலரில் மதிப்பிட்டு, இங்குள்ளவர்களின் சராசரி வருமானத்தையும் சேர்த்து ஒப்பிடும் போது கொழும்பில் / இலங்கையில் பொருட்களின் விலை அதிகமாகவே தோன்றுகின்றது.  இதற்கு வெறுமனே யுத்தம் மட்டும் காரணமல்ல. மகிந்த அரசு வாங்கிய பல ஆயிரம் கோடி கடன்களும், இப்ப இருக்கும் அரசின் VAT வரியும் (15% ?), மோசமான நிதி மேலான்மையும் காரணங்கள் என்று ஓரளவுக்கு பொருளாதாரம் பற்றித் தெரிந்தவர்கள் கூறுகின்றனர்.

காலி வீதி கொழும்பை அண்மிக்கும் பகுதிகளில் இருந்து one way ஆக்கி இருந்தார்கள். இது தெரியாமல் ஒரு 10 நிமிடங்களுக்கும் மேல் பம்பலபிட்டியில் இருந்து வெள்ளவத்தைக்கு போக காலி வீதியில் bus இற்காக காத்து இருந்து ஏமாந்து போனேன்.

நான் சென்ற EPF / ETF  ஆகிய அரச அலுவலகங்களில் கொஞ்சம் மந்தமாக வேலைகள் நடப்பினும், நட்பாக பழகுகின்றனர். தமிழர் என்ற காரணத்துக்காக என்னை அலைக்கழிக்க வைக்கவில்லை. தமிழ் உத்தியோகத்தவர்களை காண்பது அரிதாக இருக்கு. ஆனால் நிறைய முஸ்லிம் அலுவலர்களை காண முடிந்தது.

Fashion விடயத்தில் அதிக முன்னேற்றத்தினை காண முடிகின்றது. அழகான பெண்கள், அழகான ஆடைகள், கவர்ச்சியான சிங்கள யுவதிகள்.

கணணி தொழில்நுட்ப விடயத்தில் முன்னேற்றம் நிறைய வந்திருக்கு . மென்பொருள் வர்த்தகத்தில் விரைவில் மேலும் பல மடங்கு முன்னேறுவார்கள்.

தனியார் துறையில் படித்த தமிழ் இளைஞர்களை காண முடிகின்றது. இலங்கைக்கான Oracle கிளையில் என் நண்பன் தான் மேலதிகாரியாக இருக்கின்றான். வங்கிகளிலும் பல உயர் மட்டங்களில் தமிழர்களை காண முடிகின்றது. JKCS இலும் தமிழர்கள் நல்ல நிலையில் வேலை செய்கின்றனர்.

வெள்ளவத்தை தமிழர்களின் கட்டிடக் காடாக காட்சியளிக்கின்றது. தடுக்கி விழுந்தால் ஒரு அபார்ட்மென்ட். இதில் deeds இனை வாங்கியவருக்கு கொடுக்காமல், அதை வைச்சு வங்கியில் இன்னும் கடன் வாங்கி சுத்து மாத்து செய்து கட்டிடம் கட்டும் நிறுவனங்களும் உள்ளன.

ஆசையாக சாப்பிடப் போன ரொலக்ஸ் ஹோட்டலின் உணவை இப்ப நினைச்சாலும் குமட்டுகின்றது.

மீற்றர் ரக்ஸி என்று போட்டு வரும் ஆட்டோக்கள் நியாயமாக நடந்து கொள்கின்றனர்.

பழைய ரயில்கள் புதிய ரயில்கள் என கதம்பமாக ரயில்கள் ஓடுகின்றன.

வெள்ளவைத்தைக் கடற்கரை பல பல பசுமையான நினைவுகளை அருட்டுகின்றது. பத்தைகளும் புதர்களும் சில நினைவுகளை மீட்டி புன்னகையை தருவிக்கின்றது.

இரவு விடுதிகள் அருமையாக உள்ளன.

பல வருடங்களாக வாழ்ந்த கொழும்பு நகரம் வந்திறங்கிய அந்த நொடிப் பொழுதில் இருந்து மீண்டும் மனசுக்குள் நெருக்கமாக வந்து குடி கொள்கின்றது

வெள்ளி இரவு யாழ்ப்பாணத்துக்கு புறப்படுகின்றேன்.

(மிச்சம் பிறகு)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

வெள்ளவைத்தைக் கடற்கரை பல பல பசுமையான நினைவுகளை அருட்டுகின்றது. பத்தைகளும் புதர்களும் சில நினைவுகளை மீட்டி புன்னகையை தருவிக்கின்றது.

அனுபவம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15/03/2017 at 1:52 PM, நிழலி said:

இடைச் செருகல்

இதுவரைக்கும் கிட்டத்தட்ட 45 முறையாவது விமானப்பயணம் மேற்கொண்டு இருக்கின்றேன். ஆனால் இது வரைக்கும்  Sri Lankan airlines இல் பயணித்தது இல்லை. நான் பயணித்த 45 தடவையும் 2009 முன்

இது 46 ஆவது முறை. Sri Lankan airlines  இல்

அந்த பெண்ணை ஏன் எனத் தெரியவில்லை... மீண்டும் மீண்டும் பார்க்க தோன்றுகின்றது. மிக அழகிய air hostessத

வெளிர் நிற வயிறும் அதற்கு மேலாக கண்களை செலுத்தும் போது இலங்கை விமான சேவைக்குரிய பிளவுசும் .....அதற்குள் அகப்பட மறுத்து திமிரும் மார்புகளும்.

ஒரு போதும் அவரை மீண்டும் சந்திக்க முடியாது என நான் நினைத்து இருந்தேன்

ஆனால் பின்னர் சந்திக்க முடிந்தது

இடைச் செருகல் இத்துடன் முடிவடையலாம்

 

இந்த விமர்சனம் என்னை மீண்டும் ஒருக்கா அப்பேரட்ட விமானசேவையில் ஏற தூண்டுது.....எங்கன்ட பெடிச்சியள் என்றபடியால்தான் .....திரும்ப திரும்ப பார்க்க தூண்டுதோ?:10_wink:உங்கள் அழகிய எழுத்து நடைக்கு ஒரு சலாம் ....தொடருங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

இது உன் தாய் நாடு அல்ல, எங்காவது ஓடிப் போ அல்லது செத்து போ என்று பெரும்பான்மை சிங்கள அரசு மூர்க்கமாக மோதித் தள்ளினாலும் இல்லை, இதற்குள் தான் என் தாய் நாடும் உள்ளது என நாமும் மூர்க்கமாக மோதிக் கொண்ட நாட்டில் காலடி வைக்கின்றேன்.

Quote

இங்க தான் நாங்கள் மீண்டும் எழுந்து நிற்கின்றோம்....83 ஆம் ஆண்டு கொழும்பில் ஏற்பட்ட அழிவுகளின் பின்பும் வெள்ளைவத்தை வெள்ளவத்தையாக ............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பைப் பற்றி பல உருப்படியான தகவல்களை அறிய முடிந்தது ! 

இரவு விடுதிகள் கொழும்பில் உள்ளனவா? இவை சட்ட ரீதியாக அஙுகு இயங்க முடியுமா?

இந்தத் தகவல் எனக்கு மிகவும் புதியது! அது தான் கேட்டேன்!

தொடருஙகோ நிழலி !

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் நிழலி , ரசனையாக எழுதிக் கொண்டு போகின்றிர்கள்....! tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

xp4v95.jpg

உதை என்னெண்டுதான் குடிச்சு இறக்கிறாங்களெண்டு எனக்கு தெரியேல்லை.....tw_astonished:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, நிழலி said:

மீற்றர் ரக்ஸி என்று போட்டு வரும் ஆட்டோக்கள் நியாயமாக நடந்து கொள்கின்றனர்.

கொழும்பில் ஊபர் (Uber)ஆட்டோவை விட மிக மலிவு என்கிறார்கள்.பாவிக்கலியோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, நிழலி said:

கொழும்பில் முதல் மூன்று நாட்கள்

விமான நிலையத்தில் இருந்து ஹோட்டலுக்கு வந்தவுடன் பசி வயிற்றைக் கிள்ளுகின்றது

ஜூலியானா ஹோட்டலுக்கு அருகில் கொஞ்சம் சுத்தமாக தோன்றும் ஒரு உணவு விடுதியைக் கண்டு உள்ளே செல்கின்றேன். அங்கு ஒரு தமிழர் தான் பொறுப்பாக இருக்கின்றார். அவரிடம் பின்னர் பேச்சுக் கொடுத்ததில் லண்டனில் நான்கு ஐந்து KFC வைத்து இருந்ததாகவும், மே 2009 இன் பின்னர் நான்கு நண்பர்களுடன் (3 பேர் தமிழர்கள் ஒருவர் முஸ்லிம்) இணைந்து இலங்கைக்கு ஏதோ பொருட்களை இறக்குமதி செய்யும் வியாபாரத்தில் இறங்க, தன்னுடன் கூட்டுச் சேர்ந்த நான்கு பேரும் ஏமாற்றி விட்டதாகவும், பெருத்த நஷ்டம் ஏற்பட்டு இப்ப கொழும்பில் வழக்கு போவதாகவும், வழக்கிற்காக அடிக்கடி  லண்டனில் இருந்து கொழும்பு வருவது கஷ்டம் என்பதால் இங்கேயே தங்கி ஒரு முஸ்லிம் நண்பருடன் இணைந்து இந்த ஹோட்டலை நடத்துவதாகவும் கவலைப்பட்டு சொன்னார்.

(ஜனவரியில் இரண்டாம் தடவை கொழும்புக்கு போன போது, அவருக்கு இதயம் தொடர்பான வருத்தம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் இருக்கின்றார் என அறிந்து கொண்டேன்)

"தம்பி ஆரோட பிசினஸ் செய்தாலும் எங்கட ஆக்களோட மட்டும் செய்திறாதையுங்கோ" என்று அங்கு போகும் ஓவ்வொரு தடவையும் கூறுவார். சாப்பாடு அங்கு பரவாயில்லை. பெரிய திறம் என்று இல்லாட்டியும் ஓரளவுக்கு சுவையானதாக இருந்தது. அவர்களின் Fried Rice சும் கோழிப் பொரியலும் நல்ல டேஸ்ட். மற்றக் கடைகளை விட விலை சற்று அதிகம்.

************************************************* *************************************************

தமிழர்களை நம்ப வேண்டாம் என்று சொல்பவர், மீண்டும் கூட்டு வியாபாரம் செய்யும் போது.... முஸ்லீம் நண்பரை சேர்த்து வைத்துள்ளார். அவ்வளவிற்கு மோசமானவர்களா நம்மவர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/24/2017 at 11:58 PM, ரதி said:

சீக்tw_astonished:(நீர்க் காக்கா? அப்படி ஒரு பறவை இருக்கா? உண்மையிலேயே தெரியவில்லை):unsure:

22fb6f7a1e79b361c0e6a4508d76aae6.jpg

செம ரேஸ்ட் 

பல வெளிநாட்டு பயணிகள் வருவது சில  இறைச்சி வகைகளை உண்ணத்தான்     

4 hours ago, குமாரசாமி said:

xp4v95.jpg

உதை என்னெண்டுதான் குடிச்சு இறக்கிறாங்களெண்டு எனக்கு தெரியேல்லை.....tw_astonished:

இலங்கையில் இந்த சப்பட்டை தான் பேமசு 

 

தொடரட்டும் நிழலி  

Link to comment
Share on other sites

On 2017-03-29 at 2:49 AM, MEERA said:

அனுபவம்?

சுய தணிக்க tw_blush:

 

On 2017-03-29 at 4:29 AM, putthan said:

இந்த விமர்சனம் என்னை மீண்டும் ஒருக்கா அப்பேரட்ட விமானசேவையில் ஏற தூண்டுது.....எங்கன்ட பெடிச்சியள் என்றபடியால்தான் .....திரும்ப திரும்ப பார்க்க தூண்டுதோ?:10_wink:உங்கள் அழகிய எழுத்து நடைக்கு ஒரு சலாம் ....தொடருங்கள்

எந்த  பரதேசம் போனாலும் எங்க பெடிச்சியளைக் கண்டால் ஒரு இனம்புரியாத கவர்ச்சி ஏற்படத்தான் செய்யுது. வருகைக்கு நன்றி புத்ஸ்

On 2017-03-29 at 5:11 AM, புங்கையூரன் said:

 

இரவு விடுதிகள் கொழும்பில் உள்ளனவா? இவை சட்ட ரீதியாக அஙுகு இயங்க முடியுமா?

இந்தத் தகவல் எனக்கு மிகவும் புதியது! அது தான் கேட்டேன்!

 

 

கொழும்பில் இரவு விடுதிகள் நிறைய இருக்கு புங்கை. அநேகமானவை லைசென்ஸ் பெற்று நடத்தப்படுவை. அரசியல்வாதிகள் தான் அதிகமானவற்றுக்கு உரிமையாளர்கள்.  இவை ஒவ்வொரு genre / type இல் இருக்கு. மேலைதேய நாடுகள் போல நிர்வாண நடனம் போன்றவை அங்கு இல்லை என்றாலும் ஆடிப்பாடி குதூகலிக்கவும் நண்பர்களுடன் அமர்ந்து லயிச்சு அனுபவிக்கவும் முடியும். கனடிய /அமெரிக்க இரவு விடுதிகளுடன் ஒப்பிடும் போது வன்முறை / ஆட்களை சுடுவது என்பன மிக மிக குறைவு (மகிந்தவின் புதல்வர்கள் முன்னர் அட்டகாசம் செய்தவர்கள் இங்கு)

அழகிய மேட்டுக்குடியை சேர்ந்த பாலியல் தொழிலாளர்களையும் இளம் யுவதிகளையும் Pickup பண்ணும் இடங்களும் இவைதான். ஆனால் நான் அச்சா பிள்ளை என்பதால் இவை பற்றி அனுபவம் இல்லை.

On 2017-03-29 at 5:17 AM, suvy said:

தொடருங்கள் நிழலி , ரசனையாக எழுதிக் கொண்டு போகின்றிர்கள்....! tw_blush:

நன்றி அண்ணா

On 2017-03-29 at 10:55 AM, ஈழப்பிரியன் said:

கொழும்பில் ஊபர் (Uber)ஆட்டோவை விட மிக மலிவு என்கிறார்கள்.பாவிக்கலியோ?

எனக்கு இது பற்றி தெரியவில்லை ஈழப்பிரியன். அத்துடன் Uber நிறுவனம் பற்றி எனக்கு நல்ல எண்ணம் இல்லை என்பதால் இங்கு கனடாவிலும் அதை ஆதரிப்பது இல்லை.

On 2017-03-29 at 8:48 AM, குமாரசாமி said:

xp4v95.jpg

உதை என்னெண்டுதான் குடிச்சு இறக்கிறாங்களெண்டு எனக்கு தெரியேல்லை.....tw_astonished:

கு.சா,

உத இங்க குளிர் நாட்டில் அடிச்சால்..'சப்' என்று இருக்கும். ஆனால் அங்க போய் இதை 'கங்கூன்' கீரையை taste ஆக சாப்பிட்டுக் கொண்டு அடிக்க அந்த மாதிரி இருக்கும். ஒருக்கா மாமா வரும் போது இதை கனடாவுக்கு கொண்டு வரச் சொல்லி அடிக்க, வெறுப்பாக இருந்தது. ஆனால் அங்கு அமிர்தம்!

On 2017-03-29 at 11:46 AM, தமிழ் சிறி said:

தமிழர்களை நம்ப வேண்டாம் என்று சொல்பவர், மீண்டும் கூட்டு வியாபாரம் செய்யும் போது.... முஸ்லீம் நண்பரை சேர்த்து வைத்துள்ளார். அவ்வளவிற்கு மோசமானவர்களா நம்மவர்கள்.

தெரியவில்லை தமிழ்சிறி. எனக்கும் இந்த கேள்வி மனசுக்குள் எழுந்ததாயினும், அவரிடம் கேட்கவில்லை

On 2017-03-29 at 1:44 PM, முனிவர் ஜீ said:

22fb6f7a1e79b361c0e6a4508d76aae6.jpg

செம ரேஸ்ட் 

பல வெளிநாட்டு பயணிகள் வருவது சில  இறைச்சி வகைகளை உண்ணத்தான்     

இலங்கையில் இந்த சப்பட்டை தான் பேமசு 

 

தொடரட்டும் நிழலி  

நன்றி முனி... நீர்க்காக்காவை கடந்த இரு முறையும் காணக் கிடைக்கவில்லை.

Link to comment
Share on other sites

கொழும்பு - யாழ்ப்பாண பேருந்து எனும் ‘வெருட்டல்’ சேவை.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு ‘யாழ் – கொழும்பு’ தனியார் சொகுசு (?) பேரூந்தில் செல்கின்றவர்கள் பலருக்கு பல விரும்பத்தகாத அனுபவங்கள் கிடைத்ததை அறிந்து இருந்தமையால்  அதை தவிர்த்து ரயிலில் செல்ல முதல் முடிவு செய்து இருந்தேன்.

ஆயினும் தனியப் போவது பம்பலாக இருக்காது என்பதால் மச்சானையும் இறுதி நேரத்தில் வரச் சொல்லிக் கேக்க, அவன் தனியாக வராமல் தன் மனைவியையும் இரு குட்டி வாண்டுகளையும் கூட்டிக் கொண்டு வர முடிவெடுக்க, ரயிலில் இனி இருக்கைகள முன்பதிவு செய்ய நேரம் போதாமையால் இறுதியில் தனியார் சொகுசு பேருந்தில் பயணம் செய்ய முடிவெடுத்தோம்.

யாழ் – கொழும்பு தனியார் சொகுசு (?) பஸ்களை சேவையில் ஈடுபடுகின்ற அநேக கம்பெனிகள் தமிழர்களின் கம்பெனிகள் தான். ஆனால் சாரதிகளாக சிங்களவர்களை தான் அதிகம் வைத்து உள்ளனர். இதன் காரணம் தமிழர்கள் சாரதிகளாக வர விரும்பான்மை அல்ல, வரும் பயணிகளிடம் சிங்களத்தில் கதைத்து தமிழ் பயணிகளை ‘வெருட்ட’. சில தமிழ் சாரதிகளும் சிங்களவர்களைப் போன்று தலை மயிரை கட்டையாக வெட்டி பயணிகளுடன் சிங்களத்தில் தான் கதைக்கின்றனர்.

யாழ் கொழும்பு மார்க்கத்தில் ஈடுபடும் பேருந்து சேவையில் ‘PPT’ எனும் பேரூந்து சேவை ஒரு மோசமான உதாரணம் எனக் கேள்விப்பட்டு இருந்தேன். பேரூந்து சில கிலோ மீற்றர் கடந்து நகரப் பகுதிகளை தாண்டியபின் Air condition னை நிப்பாட்டி விடுவார்கள் என்றும், யன்னல்கள் திறக்க முடியாத அந்த பஸ்ஸில் வேர்த்து களைச்சு தான் ஊர் போய்ச் சேர்வார்கள் என்றும் அறிந்து இருந்தேன்.  எதிர்த்துக் கேள்வி கேட்டால் சிங்களத்தில் முரட்டுத்தனமாக கதைச்சு  வெருட்டி  பயணிகளை கேவலமாக நடத்துவர் என்றும் கேள்விப்பட்டு இருந்தமையால் எக்காரணம் கொண்டும் அந்த பஸ்ஸில் இருக்கைகளை முன் பதிவு செய்யாதே என்று மச்சானுக்கு சொல்லி இருந்தேன்.

இரவு 7:30 இற்கு வெள்ளவத்தை இராமகிருஸ்ணன் வீதிக்கருகில் வரிசையாக பேரூந்துகள் யாழ் செல்ல நிற்கின்றன. நல்ல உயரமான சொகுசு பேரூந்துகளாக தெரிகின்றன.

மச்சான் ஒவ்வொரு பேரூந்தாக கடந்து இறுதியாக இதில் ஏறு எனச் சொல்லி ஒரு பேரூந்தைக் காட்டுகின்றான்.

அதன் பெயர்பலகையை பார்க்கின்றேன்.

அழகான எழுத்துகளுடன் ‘PPT’ என எழுதப்பட்டு இருக்கின்றது.

இதை ஏன் முன் பதிவு செய்தாய் என்று கேட்க, தான் அடிக்கடி பயணிப்பதாகவும் இது வரைக்கும் ஒரு நாள் கூட பிரச்சனை வரவில்லை என்றும் சொல்கின்றான் மச்சான் ("எல்லாம் இந்த மூதேவி வந்த ராசி" என அவன் மைன்ட் வொய்ஸ் சொல்லுவது கேட்கின்றது)
பேரூந்து புறப்படுகின்றது.

நல்ல A/C….சும்மா ஜில் என்று இருக்கு. மூன்றாவது சீட்டில் ஒரு இளம் பெண் குளிருது என்று இழுத்து போர்க்கின்றார்.

கொஞ்ச தூரம் தான் தாண்டி இருக்கும்…. A/C நின்று விட்டது. நான் மச்சானின் முகத்தை பார்க்கின்றேன். அவனுக்கு என்ன சொல்வது எனத் தெரியவில்லை.

சாரதியும் கிளீனரும் என்னவோ எல்லாம் செய்து பார்த்தும் A/C சரி வரவில்லை. பின் இன்னொரு பேரூந்தைக் கொண்டு வந்து எம்மை ஏற்றி இரவு 9 மணியளவில் யாழ் செல்ல  மீண்டும் தொடங்குகின்றனர்.

கும்மிருட்டில் பேரூந்து விரைகின்றது.

ஓமந்தையை தாண்டி செல்கின்றது.

புளியங்குளத்தை தாண்டுகின்றது

இதே புளியங்குளத்தில் தான் என்னை / எம்மை “போட்டு வாங்கோ அண்ணை’ என்று சொல்லி வழியனுப்பி வைத்த வீரப் புதல்விகளின் நினைவு வந்து செல்கின்றன.

பீரங்கி படையணியின் பொறுப்பாள நண்பனுடன் இறுதியாக கதைச்ச இடம் கடக்கின்றதா என கண்களை குறுக்கி வெளியே பார்க்கின்றேன்.

கும்மிருட்டில் எல்லாம் கடந்து போகின்றன.

பல்லாண்டுகளாக பல மணி நேரம் எடுத்து கடந்த பிரதேசங்கள், சில மணி நேரங்களில் கடந்து செல்கின்றன.

கண்ணீரும் செந்நீரும் பேராறாக ஓடிய கிராமங்கள் இருட்டில் அரவமற்று கிடக்கின்றன.

ஒவ்வொரு அங்குலத்திற்காகவும் ஆயிரக்கணக்கில் தம் உயிரை கொடுத்து காத்து, ஈற்றில் எதுவுமே இல்லாமல் போய்விட்ட  A9 சாலையில் பேரூந்து விரைகின்றது

பெருமூச்சு கூட வரண்டு போய் கிடந்தது எனக்கு.

ஒரு காலத்தில் இது என் தேசம் என மார்தட்டிய இடங்களில் ஒரு விருந்தினராக சென்று கொண்டு இருக்கின்றேன்.

விம்மி வெடிக்க வேண்டிய நெஞ்சம், வேறு வழி இல்லை என ஏற்று சமாதானம் கொள்கின்றது.

இந்தச் சமாதானம் கொள்ளும் மனம் இல்லாவிட்டால் இறங்கி நின்று போராட வேண்டும். ஆனால் இப்படி சாக்கு போக்கு சமாதானம் சொல்வது தான் ஈசியாக இருக்கு. தொடர்ந்து விருந்தினனாக வந்து போகவும் வசதியாக இருக்கும்.

***************************************************************

சரியாக அதிகாலை 4:00 இற்கு யாழ்ப்பாண நகரத்தில் உள்ள கச்சேரி அருகே எம்மை இறக்கி விடுகின்றனர்.

என் 73 வயது மாமா (அம்மாவின் அண்ணா) எமக்காக அந்த சாமத்திலும் தன் வெள்ளை நிற பழைய waxwagan car (beetle) இல் வந்து மாமியுடன் காத்து நிற்கின்றார்

நான் யாழ் சென்றடைந்தது September 24, 2016 சனிக்கிழமை.

‘எழுக தமிழ்’ யாழ்ப்பாணத்தில் நிகழும் அதே நாள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, நிழலி said:

-----

கும்மிருட்டில் பேரூந்து விரைகின்றது.

ஓமந்தையை தாண்டி செல்கின்றது.

புளியங்குளத்தை தாண்டுகின்றது

இதே புளியங்குளத்தில் தான் என்னை / எம்மை “போட்டு வாங்கோ அண்ணை’ என்று சொல்லி வழியனுப்பி வைத்த வீரப் புதல்விகளின் நினைவு வந்து செல்கின்றன.

பீரங்கி படையணியின் பொறுப்பாள நண்பனுடன் இறுதியாக கதைச்ச இடம் கடக்கின்றதா என கண்களை குறுக்கி வெளியே பார்க்கின்றேன்.

கும்மிருட்டில் எல்லாம் கடந்து போகின்றன.

பல்லாண்டுகளாக பல மணி நேரம் எடுத்து கடந்த பிரதேசங்கள், சில மணி நேரங்களில் கடந்து செல்கின்றன.

கண்ணீரும் செந்நீரும் பேராறாக ஓடிய கிராமங்கள் இருட்டில் அரவமற்று கிடக்கின்றன.

ஒவ்வொரு அங்குலத்திற்காகவும் ஆயிரக்கணக்கில் தம் உயிரை கொடுத்து காத்து, ஈற்றில் எதுவுமே இல்லாமல் போய்விட்ட  A9 சாலையில் பேரூந்து விரைகின்றது

பெருமூச்சு கூட வரண்டு போய் கிடந்தது எனக்கு.

ஒரு காலத்தில் இது என் தேசம் என மார்தட்டிய இடங்களில் ஒரு விருந்தினராக சென்று கொண்டு இருக்கின்றேன்.

விம்மி வெடிக்க வேண்டிய நெஞ்சம், வேறு வழி இல்லை என ஏற்று சமாதானம் கொள்கின்றது.

இந்தச் சமாதானம் கொள்ளும் மனம் இல்லாவிட்டால் இறங்கி நின்று போராட வேண்டும். ஆனால் இப்படி சாக்கு போக்கு சமாதானம் சொல்வது தான் ஈசியாக இருக்கு. தொடர்ந்து விருந்தினனாக வந்து போகவும் வசதியாக இருக்கும்.

நிழலி....  அந்நேரம் இருந்த, உங்கள் உணர்வுகளை...  எழுத்தில் வாசித்த போது,
எமக்கும் கண்கள் கலங்கி... பெருமூச்சுதான் வந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

கண்ணீரும் செந்நீரும் பேராறாக ஓடிய கிராமங்கள் இருட்டில் அரவமற்று கிடக்கின்றன.

ஒவ்வொரு அங்குலத்திற்காகவும் ஆயிரக்கணக்கில் தம் உயிரை கொடுத்து காத்து, ஈற்றில் எதுவுமே இல்லாமல் போய்விட்ட  A9 சாலையில் பேரூந்து விரைகின்றது

பெருமூச்சு கூட வரண்டு போய் கிடந்தது எனக்கு

நன்றி...நிழலி..!

எம்மில் பலரது உணர்வுகளை...உங்கள் எழுத்துக்களே பிரதி பலிக்கின்றன!

தொடருங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன இருந்தாலும் ஓமந்தை புளியங்குளத்தை நினைக்கையில் நெஞ்சு அடைக்குது....!

தொடருங்கள் நிழலி.....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நிழலி said:

நல்ல A/C….சும்மா ஜில் என்று இருக்கு. மூன்றாவது சீட்டில் ஒரு இளம் பெண் குளிருது என்று இழுத்து போர்க்கின்றார்

அந்த நேரம் உங்களின் ஜக்கற்றையாவது களற்றி கொடுக்க வேண்டும் போல இருந்திருக்குமே?உறவினர்கள் இருந்தது தடையாக போய்விட்டதோ?

8 hours ago, நிழலி said:

புளியங்குளத்தை தாண்டுகின்றது

இதே புளியங்குளத்தில் தான் என்னை / எம்மை “போட்டு வாங்கோ அண்ணை’ என்று சொல்லி வழியனுப்பி வைத்த வீரப் புதல்விகளின் நினைவு வந்து செல்கின்றன.

பீரங்கி படையணியின் பொறுப்பாள நண்பனுடன் இறுதியாக கதைச்ச இடம் கடக்கின்றதா என கண்களை குறுக்கி வெளியே பார்க்கின்றேன்.

கும்மிருட்டில் எல்லாம் கடந்து போகின்றன.

பல்லாண்டுகளாக பல மணி நேரம் எடுத்து கடந்த பிரதேசங்கள், சில மணி நேரங்களில் கடந்து செல்கின்றன.

கண்ணீரும் செந்நீரும் பேராறாக ஓடிய கிராமங்கள் இருட்டில் அரவமற்று கிடக்கின்றன.

இப்ப கூட அந்த இடங்களை தவழ்ந்து போக சொன்னால் கூட மனதுக்கு கஸ்டமாக இருக்காது.

ஆனால் ஒரு தோற்றுப் போன இனமாக போகும் போது மனதுக்கு மிகவும் கஸ்டமாக உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓமந்தை புளியங்குளம் சுகமான சுமை  வரிசை செக்கிங்  உற்றுப்பார்த்தல் கறுப்பு என்றால்  முறைத்துப்பார்த்தல் :unsure:

ஆனால் அதை தாண்டி செல்லும் போது தான் நானும் நினைத்தேன் இது அந்த இடம் தானா என்று:104_point_left:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நிழலி said:

சில தமிழ் சாரதிகளும் சிங்களவர்களைப் போன்று தலை மயிரை கட்டையாக வெட்டி பயணிகளுடன் சிங்களத்தில் தான் கதைக்கின்றனர்.

சிங்கள பகுதிகளில் வேலைசெய்யும் நம்மவர்கள் 77களின் பின் தலைமயிரை கட்டையாக வெட்டிம் மீசையை வழித்தும் உருவமாற்று தந்திரங்களை செய்து வாழ்ந்தார்கள்.அதே தந்திரம் இப்போது சனத்தை வெருட்ட பயன்படுத்துகின்றார்கள்.:grin:

சுவாரசியமான பயணக்கட்டுரை தொடரட்டும்.tw_thumbsup:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முடியுங்க ராசா

முழுவதுமாக வாசித்துவிட்டு கருத்து எழுதலாம்  என்று இருக்கிறேன்.

அடியேனை மன்னியுங்கள்

நேரம் ரொம்ப ரொம்ப இறுக்கமாக இருக்கு..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதுவரை போட்டியில் கலந்துகொண்டவர்கள்  1) goshan_che 2)பாலபத்ர ஓணாண்டி 3)புரட்சிகர தமிழ்த்தேசியன் 4)சுவி 5)நிழலி 6)கிருபன் 7)ஈழப்பிரியன் 8)தமிழ்சிறி 9)கந்தையா57 10)வாத்தியார்
    • பிற்சேர்க்கை III வெஸ்டேர்ன் மெடிசின் Vs வெதமாத்தையா  அடுத்த பாகத்தை கொடுக்க பிந்தியமைக்கு மன்னிக்கவும். படங்களை போட்டது திரியை எழுத்தில் இருந்து படங்கள் நோக்கி திருப்பி விட்டது. ————— இலங்கை போவதில் ஒரு வசதி - கொஞ்சம் காசை செலவழித்து ஒரு புல் மெடிக்கல் செக்கப் செய்துகொண்டு வரலாம். அதுவும் நவலோக்க, டேர்டன்ஸ், ஆசிரி, லங்கா ஹொஸ்பிட்டல் போன்ற முதல் தர வைத்தியசாலைகளிலேயே £230 க்குள் ஒரு டோட்டல் மெடிக்கல் செக்கப்பை செய்துகொள்ளலாம்.. முன்னர் ஒரு காலம் இருந்தது யூகே NHS என்றால் உலகிற்கே முன்மாதிரி, ஆனால் இப்போ அப்படி இல்லை. எல்லாம் 14 வருட வலதுசாரி மகாராசாக்களின் ஆட்சி தந்த “முன்னேற்றம்”. இப்போதெல்லாம் ஜீ பி யிடம் அப்பாயின்மெண்ட் வாங்குவதை விட நோயில் சாகலாம் என்ற நிலை. அப்படியே ஜி பி யை சந்திக்க முடிந்தாலும், அவர் refer பண்ணி ஒரு ஸ்கான் எடுப்பதற்குள் சித்திரகுப்தன் சீட்டை கிழிக்க ரெடியாகி விடுவார். அத்தோடு இலவசம் என்பதால் கண்ட மாதிரி speculative டெஸ்டுகளும் எடுக்க refer பண்ண மாட்டார்கள். முதலில் தண்ணீர் குடியுங்கள், ரெஸ்ட் எடுங்கள் என்றே சொல்லி அனுப்புவார்கள். ஆகவே உடனடி கவனிப்பு தேவை எனில், ஒன்றில் கணிசமான அளவு பணத்தை கட்டி யூகேயில் தனியார் ஹெல்த் இன்சூரன்ஸ் எடுத்து வைக்க வேண்டும்.  அல்லது….இலங்கை அல்லது இந்தியா (பல்லு கட்ட போலந்து, துருக்கி) போன்ற நாடுகளுக்கு போய் இப்படி ஒரு செக்கப்பை செய்து வரலாம். இந்த ரிப்போர்ட்டுகள் எல்லாம் எடுக்க ஒரு நாள் செலவாகும். பின்னர் இதை வைத்து ஒரு கன்சல்டண்டுடன் உங்களுக்கு அப்பாயின்மெண்ட்டும் தருவார்கள். இதில் நன்மை என்னவென்றால் - இந்த டெஸ்டுகளில் ஏதாவது கோளாறாக கட்டினால் - அதை நேரடியாக இங்கே ஜி பி யிடம் காட்டும் போது - நோயின் தார்பரியம் அறிந்து வேலை கட…. கட…. என நடக்கும். எனக்கு தெரிந்த சிலர் முன்பே இவ்வாறு செய்திருந்தாலும், இதுவரை நான் செய்ததில்லை. இந்த முறை வயதும் 45 இன் அடுத்த பக்கத்துக்கு போய் விட்டதாலும், கடந்த 3 வருடத்தில் ஜி பி க்கள் தந்த அனுபவத்தினாலும் - ஒரு டெஸ்டை செய்ய முடிவு செய்தேன். இந்தியா போல் அல்லாது, இலங்கையில் health tourism த்தின் பெறுமதி இன்னும் வடிவாக அறியப்படவில்லை. விலைகளும் உள்ளூர் ஆட்களை குறிவைத்தே உள்ளன (வடை, கொத்து, சிகிரியா டிரிக்ஸ் இன்னும் இங்கே வரவில்லை).  ஒவ்வொரு ஆஸ்பத்திரியும், பல வகை வகையான packages வைத்திருக்கிறார்கள்.  ஒன்றிற்கு மூன்றாக தெரிந்த வைத்தியர்களிடம் கதைத்து - ஒரு package ஐ நானும் ஒரு முண்ணனி வைத்தியசாலையில் தெரிந்து கொண்டேன். டெஸ்ட் எடுக்கும் நாள் அதிக நிகழ்வுகள் இன்றி கழிந்தது. ஒவ்வொரு உடல் பகுதிக்குமுரிய இடத்துக்கு அந்த டெஸ்டுக்காக போகும் போது, அவை உள்ளூர் வாசிகளால் நிரம்பியே இருந்தது. எந்த நாட்டிலும், எந்த நிலையிலும் உணவுக்கு அடுத்து நல்ல பிஸினஸ் மருத்துவம் என்பது புரிந்தது. எல்லாம் முடிந்து கன்சல்டேசன் போனால் -கன்சல்டன் - எடுத்த எடுப்பிலேயே எந்த நாடு என்று கேட்டார் - டாக்டரிடம் பொய் சொல்ல கூடாதாமே? ஆகவே எனது “யாழ்பாணம்/மாடகளப்பு/வன்னி/இந்தியா” உத்தியை கைவிட்டு யூகே என உண்மையை சொன்னேன். கண்ணாடிக்கு மேலால் ஒரு பார்வை பார்த்து விட்டு, நான் அங்கேதான் மேற்படிப்பு படித்தேன், “இப்படி ஒரு முழுமையான டெஸ்டை அங்கே உன்னால் செய்யவே முடியாது அல்லவா”, என அவருக்கு ஏலவே தெரிந்த விடயத்தை என்னிடம் உறுதி செய்தார். என்ன இருந்தாலும் என் குஞ்சல்லவா? விட்டு கொடுக்க முடியாதே? ஆம், ஆனால் இங்கும் அரச வைத்தியசாலையில் இப்படி ஒரு முழுமையான டெஸ்டை செய்யமாட்டீர்கள்தானே என்றேன். உனக்கு வாயில் கொலஸ்டிரோல் கூட என்பதை போல் ஒரு பார்வை பார்த்து விட்டு, ரிப்போர்ட்டுக்கான வியாக்கியானத்தை ஆரம்பித்த வைத்தியர். 40 நிமிட கன்சல்டேசனின் பின், ஏலவே தெரிந்த விடயங்களை தவிர வேறு ஏதும் கோளாறு இல்லை என்பது நிம்மதியாக இருந்தாலும்…. இவ்வளவு செலவழித்துள்ளேனே…ஒன்றும் இல்லையா என இன்னொரு மனம் மொக்குத்தனமாய் ஒரு கணம் சிந்திக்கவும் செய்தது🤣. கடைசியாக…எனி அதர் குவெஸ்சன்ஸ் க்கு வைத்தியர் வர, என் நெடுநாள் உபாதையான சயாடிக்கா கால் வலியை பற்றி சொன்னேன். அக்கம் பக்கம் பார்த்த வைத்தியர், மெல்லிய குரலில் “இதுக்கு இங்கே உள்ள வெதமாத்தையாதான் சரி” என கூற, யாரையாவது ரெக்கெமெண்ட் பண்ண முடியுமா என நான் அவரை விட மெல்லிய குரலில் கேட்டேன். கன்சல்டேசன் அறையை விட்டு கிளம்பும் போது எனது போனில் ஒரு பிரபல வெதமாத்தையாவின் தொடர்பிலக்கமும், விலாசமும் சேமிக்கப்பட்டிருந்தது. ———————- ஆவலோடு காத்திருங்கள்! பிற்சேர்க்கை IV வெதமாத்தையாவும் ஆவா குரூப்பும்
    • 1994 இல் மயிலாப்பூர் சட்டமன்றத்துக்கும் இன்னுமொரு சட்டமன்றத்துக்கும் இடைக்கால தேர்தல் நடைபெற்றது.  யாராவது MLA காலமானால் அல்லது வேறு சில காரணங்களுக்காக இடைக்கால தேர்தல் நடைபெறும். தமிழகம் முழுவதும் தேர்தல் நடைபெறாமல் ஒன்று இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறுவதினால் முக்கிய தலைவர்களை இத்தொகுதிகளில் அடிக்கடி காணலாம். நான் அடையார் , Besant நகர் பகுதியில் எனக்கு தெரிந்தவர்கள் வீடுகளுக்கு செல்வதுண்டு. அப்பொழுது பல தலைவர்களை பார்த்திருக்கிறேன். பாட்டாளி மக்கள் தலைவர் இராமதாஸ் சென்ற வாகனத்தில் மன்சூர் அலிகானை வந்திருந்தார். ‘ பிரபாகரன் கிரேட், இராவணன் கிரேட்’ என்று அவர் உரையாற்றினார்.  வைகோவுடன் எஸ் எஸ் சந்திரன் வந்திருந்தார்.  நடிகர் எஸ் எஸ் சந்திரன் மதிமுகவில் அப்பொழுது இருந்தார் கலைஞ்சர் கருணாநிதிஐக்கண்டதும் பல ஆதரவாளர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பெயர் சூட்ட சொன்னார்கள். ஒரு பிள்ளைக்கு ‘ கனிமொழி’ என்று பெயர் சூட்டினார். இன்னுமொரு பிள்ளைக்கு ‘இளவரசன்’ என்று பெயர் சூட்ட, ‘இவர் பெண் குழந்தை’ என்று குழந்தையின் தகப்பனார் சொல்ல ‘இளவரசி’,என்று கலைஞர் பெயர் சூட்டினார்.  ‘அவர்கள் லட்டினுள் மோதிரம் வைத்து குடுக்கிறார்கள் ( அதிமுக கட்சி) . வாங்குங்கள் . ஆனால் வாக்குகளை எமக்கு அளியுங்கள்’ என்றார். பெசன்ட் நகர் பேருந்து நிலையத்தருகில் துவிச்சக்கரவண்டியில் வரும்போது காவல்துறையினர் என்னையும் சேர்ந்து பலரை மறித்து நிறுத்தினார்கள். சில நிமிடங்களில் ‘அதோ அந்த பறவை போல’  பாடலை Band குழு ஒன்று இசை அமைக்க வாகனம் ஒன்று வந்தது. பின்னால் வந்த இன்னுமொரு வாகனத்தில் ஜெயலலிதா அவர்கள் துப்பாக்கிகள் ஏந்திய பாதுகாப்பு படைகளுடன் வந்து உரையாற்றினார். காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர் வாழப்பாடி ராமமூர்த்தியின் வீட்டின் அருகே செல்லும் போது எப்போதும்கண்டும் காணாமல் மாதிரி செல்வார்.  ஆனால் தேர்தல் என்றதினால் கை குப்பி என்னை பார்த்து வணங்கினார். தமிழக பத்திரிகைகளில் தேர்தல் செய்திகள் வாசிப்பதுண்டு. இதனால் ஓரளவு ஆர்வம்
    • "மாற்றம்" [யாழ்ப்பாணத்து மருத்துவ மாணவனின் கதை]   துடிப்பான நகரமான யாழ்ப்பாணத்தில், இலங்கையின் வடபகுதியில், பரபரப்பான தெருக்களுக்கும், யாழ்ப்பாணக் கடல் நீரேரியின் [கடற்காயல் அல்லது வாவி] அமைதியான கடற்கரைக்கும் நடுவே, குறளரசன் என்ற இறுதியாண்டு மருத்துவ மாணவர் வாழ்ந்து வந்தான். தீவின் வரலாற்றில் வேரூன்றிய நீண்ட பரம்பரையுடன் ஒரு தமிழ் குடும்பத்தில் பிறந்த குறளரசன், பல நூற்றாண்டுகளின் பாரம்பரியத்தின் எடையையும் 'மாற்றத்திற்காக' ஏங்கும் மக்களின் அபிலாஷைகளையும் [ஏக்கம் கலந்த எதிர்பார்ப்பையும்] தனக்குள் சுமந்தான். குறளரசன் மருத்துவம் படிக்கும் மாணவன் மட்டுமல்ல; அவன் தனது தமிழ் சமூகத்தின் உரிமைகள் மற்றும் அங்கீகாரத்திற்காக ஒரு தீவிர சமூக உழைப்பாளியாகவும் இருந்தான். தமிழரின் வாழ்வில் ஏற்பட்ட பின்னடைவுகள் மற்றும் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டத்தின் வரலாற்று கதைகளிலும் மற்றும் இன்று நடைபெறும் அரசியல் அழுத்தங்களிலும் வளர்க்கப்பட்ட அவன், ஒரு அரசியல் 'மாற்றம்' தேவை என்பதை விரும்பியது  மட்டுமல்ல, தனது மக்களின் வாழ்வு மற்றும் செழிப்புக்கு அது இன்றியமையாதது என்றும்  நம்பினான். குறளரசன் மருத்துவப் படிப்பைத் தொடர்ந்த யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம், இலங்கை வாழ் தமிழ் இளைஞர்களின், சமூகத்தின்  நம்பிக்கையின் விளக்காக நின்றது. இங்குதான் சிங்கள வம்சாவளியைச் சேர்ந்த, அனுராதபுரத்தை பிறப்பிடமாகக் கொண்ட,  முதலாம் ஆண்டு மருத்துவ மாணவியான ருவனிக்காவை [Ruwanika] அவன் முதல் முதல் சந்தித்தான். அவர்களின் நட்பு இனம் மற்றும் மொழியின் தடைகளைத் தாண்டி ஆழமான ஒன்றாக மலர்ந்தது. ஆனால் அவர்களின் பாசத்தின் அரவணைப்பில் கூட, குறளரசனால் அவர்களது சமூகத்தை ஆட்கொண்ட ஆழமான வேரூன்றிய பிளவுகளின் நிழலை மறக்க  முடியவில்லை. அவன் அதில் உறுதியாக நின்றான்.  குறளரசன் தனது படிப்பில் ஆழமாக இருந்தாலும், தன் இலங்கை மக்களின் வரலாற்றை சரியாக அறிவதிலும் முழுமையாக தன் கவனத்தை செலுத்தினான். தமிழ் சிறுபான்மை யினருக்கும் சிங்கள பெரும்பான்மை அரசாங்கத்திற்கும் இடையிலான உறவில், அரசாங்க தலைவர்களால் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளையும், பின் அவ்வாற்றில் முக்கியமான ஒன்றையேனும் நிறைவேற்றாமல் உடைக்கப்பட்டு கிடங்கில் போட்டத்தையும் மற்றும் ஒவ்வொரு முறையும் தமிழர்களின் சுதந்திரம், கல்வி, உரிமைகள், காணிகள், வழிபாடுகள் மேலும் மேலும் பறிக்கப்படத்தையும், மறுக்கப்படத்தையும் அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் தொல்லைகளையும்  சிதைந்த கனவுகளையும் பற்றி அவன் அடிக்கடி சிந்தித்தான். 1957 பண்டாரநாயக்கா - செல்வநாயகம் உடன்படிக்கையில் இருந்து தொடர்ந்து பல தசாப்தங்களில் அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கான தோல்வியுற்ற முயற்சிகள் வரை, குறளரசன் காட்டிக்கொடுப்பு மற்றும் ஏமாற்றங்களின் தொடர்ச்சிகளைக் கண்டான்.  ஆனாலும், விரக்தியின் மத்தியில், புத்தரின் உண்மையான போதனைகளில் குறளரசன் ஆறுதல் கண்டான். ஞானம் பெற்றவர் போதித்த இரக்கம், சகிப்புத்தன்மை, புரிதல் ஆகிய கொள்கைகளை அவன் நம்பினான். இனம் மற்றும் மதத்தின் தடைகளைத் தாண்டி, இந்த விழுமியங்களை மக்கள் ஏற்றுக் கொள்ளும் ஒரு சமூகத்திற்காக அவன் ஏங்கினான். நீண்ட காலமாக தனது மக்களை ஒடுக்கிய ஒரு மகாவம்சம் என்ற புராண கதையின் கனத்துடனும் போராடினான். குறிப்பாக புத்த சமயத்தை போதிக்கும் துறவிகள், உண்மையில் இலங்கையில் முறையாக பின்பற்றுகிறார்களா என்று தனக்குத் தானே கேள்வி கேட்டான்?   மகாவம்சம், பாளி மொழியில் எழுதிய, புத்தமதத்தை முன்னிலைப்படுத்திய வரலாற்றின் புராணக் கதையாகும். மகாவிஹரா துறவிகள் கி பி 5ம் அல்லது கி பி 6ம் நூற்றாண்டில், புத்த மதத்தை பின்பற்றும் அரசனின் ஆதரவுடன், புத்த மதத்தை பின்பற்றும் வெவேறு இனக்குழுக்களை ஒருங்கிணைத்து ஒரு இனமாக, புராண விஜயனை பின்பற்றுபவர்களாக, சிங்கத்தின் வழித்தோன்றலாக, உருவாக்க முன், இலங்கையில் ஒரு சிங்கள இனம் என்று ஒன்றும் இருக்கவில்லை என்பது வரலாற்று உண்மையாகும். அதனை  முதல் வில்ஹெய்ம் கெய்கர் பாளி மொழியில் இருந்து ஜெர்மன் மொழிக்கும் பின்னர், 1912ல் ஆங்கிலத்திற்கும் மொழிப்பெயர்ப்பு செய்தனர், அதன் பின்பு தான் சிங்கள மொழிபெயர்ப்பு வந்தது, அதுவரை இலங்கையில் சிங்கள - தமிழ் வேறுபாடுகிடையாது, அதன் பின் தமிழருக்கு எதிரான கருத்துக்கள் தீவின் மீது நீண்ட நிழலைப் போட்டு இன்றைய நிலைக்கு இட்டுச் சென்றது. எனவேதான் குறளரசன் மற்றும் தமிழ் சமூகத்திற்கு, மகாவம்சம் ஒரு வரலாற்று புராண நூல் மட்டுமல்ல; அது ஒடுக்கு முறைக்கான ஒரு கருவி, ஓரங்கட்டப்படுதல் மற்றும் பாகுபாடுகளை நியாயப்படுத்த பயன்படுத்தப் பட்ட ஆயுதம் ஆக அது தென்பட்டது, அதனால் தான் பொய்யான புராண கதையில் இருந்து உண்மையான தொல்பொருள் மற்றும் வரலாறுச் சான்றுகள் கூடிய இலங்கை வரலாறு 'மாற்றம்' காணவேண்டும், உண்மையின் அடிப்படையில், இரண்டாயிரம் ஆண்டுகளாக தமிழ் பேசி வாழும் இலக்கை தமிழர்களின் மேல் அரசு கொண்டு இருக்கும் நிலையில் 'மாற்றம்' வேண்டும், எல்லாவற்றுக்கும் மேலாக புத்தரின் போதனைகளை போதிப்பவர்கள், அவர் வழியில் தங்கள் வாழ்க்கையை அமைக்கும்  'மாற்றம்' தேவைப்படுகிறது. இந்த மூன்று மாற்றங்களையும் தான் குறளரசன் காணத் துடித்தான்.   சிறுவயதிலிருந்தே, மகாவம்சத்தின் உண்மைத் தன்மையை கேள்விக்குள்ளாக்கும் பல வரலாற்று உண்மைகளை கற்றுக் கொண்டான், உண்மையை மறைக்கும் கட்டுக்கதைகள் மற்றும் பிரச்சாரத்தின் அடுக்குகளையும் அது முன்வைக்கும் ஆபத்தான முறையில் தவறாக வழிநடத்தும், வெறும் பக்கச்சார்பான விவரிப்புகளையும் அறிந்தான். இது சிங்கள புத்த  தலைமுறைகளின் மனதை விஷமாக்கும் பொய்கள் என்பதை அவன் உண்மையான சான்றுகளுடன் அறிந்தான். அதனால்த் தான் 'மாற்றம்' உடனடியாகத் தேவை என்கிறான்!  ஆனால் மகாவம்சத்தின் வஞ்சகத்தால் பாதிக்கப்பட்டது தமிழர்கள் மட்டும் அல்ல. இந்த வரலாற்று சூழ்ச்சிக்கு சிங்கள சாமானிய மக்களும் எப்படி பலியாகினர் என்பதை குறளரசன் இலங்கையின் இன்றைய நிகழ்வுகளில் நேரில் கண்டான். மற்ற சமூகங்களின் பங்களிப்புகள் மற்றும் இருப்பை அழிக்கும் அரசியல் மற்றும் மத தலைவர்களின் செயல்களில்! அது தான் 'மாற்றத்துக்காக' ஏங்குகிறான்!  புத்தர், ஞானம் பெற்றவர், இரக்கம் மற்றும் அகிம்சையின் செய்தியைப் போதித்தார், ஆனால் அவரது போதனைகள் அதிகாரத்தில் இருப்பவர்களின் நிகழ்ச்சி நிரல்களுக்கு சேவை செய்ய திரிக்கப்பட்டன. உலகளாவிய அன்பு மற்றும் புரிதல் கொள்கைகளின் அடிப்படையில் உருவாக்கப் பட்ட ஒரு மதம், மற்றவர்களை ஒதுக்கி வைப்பதையும் ஒடுக்குவதையும் நியாயப்படுத்த எப்படி இன்று ஒத்துழைக்கப்பட்டது என்று குறளரசனால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. குறளரசனும் ருவனிக்காவும்  தங்களின் உறவின் சிக்கல்களை சிலவேளை எதிர் கொள்ளவேண்டி இருந்தது. அவர்கள் தங்களைச் சுற்றியுள்ள தப்பெண்ணங்கள் மற்றும் பாரபட்சங்களை அடிக்கடி எதிர்கொண்டனர். கடந்த காலத்தின் பாவங்கள் ஒப்புக்கொள்ளப்பட்டு, திருத்தப்பட்டு, மன்னிப்பு கேட்டு, அனைத்து சமூகங்களும் நல்லிணக்கத்துடனும், பரஸ்பர மரியாதையுடனும் இணைந்து வாழக்கூடிய எதிர்காலத்தை, இவ்வாறான அதி முக்கிய 'மாற்றத்தை' இருவரும் எதிர் பார்த்தனர்.  "இருஇனம் வாழும் ஒரு நாட்டில்  இருக்கையை பிடுங்கி எடுத்து தனதாக்கி இறுமாப்புடன் வரலாற்றையும் திருத்தி எழுதி இதயமற்று நசுக்குவது பெருமை அல்ல? "  "இச்சை படுத்துவதை உணர்ந்து நிறுத்தி  இணக்கம் கண்டு இதயம் பரிமாறி  இன்று நேற்று செய்த அநியாயங்களுக்கு  இனியாவது மன்னிப்பு கேள் நாடுமுன்னேறும்! " இந்த 'மாற்றம்' தான் அவன் சுருக்கமாக எதிர்பார்ப்பது. எது எப்படியானாலும்,  அவர்களின் காதல் ஒரு இணக்கமான சகவாழ்வு சாத்தியம் என்பதற்கு ஒரு சான்றாக இருந்தது, கருத்து வேறுபாடு இலங்கையில் நிலவினாலும், அவர்களின் வாழ்க்கை என்ற கடலில், நம்பிக்கை கலங்கரை விளக்காக இருந்தது. வருடாந்த ஜெனிவா தலையீடுகள் குறளரசனுக்கும் அவரது சமூகத்திற்கும் ஒரு நம்பிக்கையை அளித்தன. இலங்கையில் ஏற்பட்டுள்ள மனித உரிமை மீறல்கள் மற்றும் அமைப்பு ரீதியான அநீதிகளுக்கு தீர்வு காண சர்வதேச சமூகம் இங்குதான் கூடுகிறது. குறளரசன் அர்த்த முள்ள 'மாற்றத்திற்காகவும்', தனது கடமைகளை மதிக்கும் மற்றும் அனைத்து குடிமக்களின் கண்ணியத்தை நிலைநிறுத்தும் ஒரு அரசாங்கத்திற்காகவும் உருக்கமாக பிரார்த்தனை செய்தான். அவனுடன் அவனின் காதலி ருவனிக்காவும்  இணைந்து கொண்டாள். என்றாலும் குறளரசனும் ருவனிக்காவும் பாவத்தில் இருந்து இலங்கையை மீட்பதற்கான பாதை தடைகள் நிறைந்தது என்பதை உணர்ந்தனர். மேலும் 'மாற்றம்' எளிதில் வராது என்பது  குறளரசக்குத் தெரியும். அறியாமை மற்றும் தப்பெண்ணத்தின் தூக்கத்திலிருந்து ஒரு நாள் முழு சமூகமும் விழித்து, கடந்த கால தவறுகளை உணர்ந்து, நல்லிணக்கம் மற்றும் நீதியை நோக்கி ஒரு புதிய பாதையை உருவாக்குமா? அல்லது அனைத்து குடிமக்களின் உரிமைகளையும் கண்ணியத்தையும் அங்கீகரிக்கும் அதிகாரங்களை கட்டாயப்படுத்த சர்வதேச சமூகத்தின் இடைவிடாத அழுத்தம் தேவைப்படுமா?. அவன் மனம் அலை பாய்ந்தது. இந்த கவலையிலும், மற்றும் படிப்பாலும், அவன் சிலவேளை தனிமையை விரும்பினான். இதனால் அவன் ருவனிக்காவை சந்திப்பதும் குறையத் தொடங்கியது. இது அவளுக்கு ஒரு தவிப்பைக் கொடுத்தது.  ஒரு நாள் அவள், அவனின் காதில் விழக்கூடியதாக தன் தவிப்பை ஒரு சிங்கள பாடலை முணுமுணுத்து எடுத்துக் காட்டினாள். 'සිහිනෙන් වගේ ඇවිදින් ආයෙත් සැගවී හිටියේ කොහෙදෝ? මදකින්  පෙනී නොපෙනී ගියේ මේ ආදරේ හැටිදෝ  ?' 'නෙත සනසනා නුඹගේ සිනා මා රැය පුරා එය සිහි කලා නිදි දෙවු දුවත් අද නෑ ඇවිත් ඈතින් ඉදන් සරදම් කලා.'. 'නෙතු වෙහෙසිලා  දහවල  පුරා නුඹ සොය සොයා සිත දුර ගියා  මදකින්  පෙනී නොපෙනී ගියේ මෙ ආදරේ හැටිදෝ  ?'   குறளரசன் மௌனமாக கண்ணீர் சிந்தி, அதே பாடலை தமிழில் முணுமுணுத்தான். "மீண்டும் வருவாயோ கனவில் அணைப்பாயோ? எங்கே மறைந்தாய் ? எந்தத் தொலைவில் ? திடீரெனத் தோன்றுவாய்? சடுதியாக மறைவாய்? உண்மைக் காதலா?, வெறும் நாடகமா?" "சோர்ந்த கண்களுக்கு புன்னகை தைலம் இரவின் மடியில் முகத்தைக் காண்கிறேன்  இரவுதேவதை என்னைத் தழுவ மறுக்கிறாள்?  தூர விலகி கிண்டல் செய்கிறாள்?." "பகலில் கண்கள் சோர்வு அடையுதே  இதயம் அலைந்து உன்னைத் தேடுதே!  கண்ணுக்குள் அகப்படாதா காதலா இது? கணப்பொழுதில் கடக்கும் கனவின் மகிழ்ச்சியா ?" குறளரசன் தனது மருத்துவப் பயிற்சியின் இறுதி நாட்களை நெருங்கிக் கொண்டிருந்தபோது, அவன் நம்பிக்கைக்கும் விரக்திக்கும் இடையே கிழிந்துக் கொண்டு இருந்தான். முன்னோக்கி, செல்லும் நேரிய பாதை சவால்கள் நிறைந்ததாக இருந்தது, ஆனால் அவன் ஒரு சிறந்த நாளைய கனவுகளை என்றும் கைவிட மறுத்துவிட்டான். கல்வி, சுறுசுறுப்பு மற்றும் அன்பு ஆகியவற்றின் சக்தியை அவன் நம்பினான். பிளவு மற்றும் அவநம்பிக்கையால் பிளவுபட்ட சமூகத்தின் குழப்பங்களுக்கு மத்தியில் அவர்களின் காதல் மலர்ந்தது. யாழ்ப்பாண பல்கலைக்கழக முற்றங்களில் மற்றும் மாலை நேர உலாக்களில் அவர்கள் ஒருவருக்கொருவர் கைகளில் ஆறுதலைக் கண்டார்கள், அவர்களின் காதல் வெளியில் வீசும் புயல்களிலிருந்து ஒரு தற்காலிக அடைக்கலமாக இருந்தது.  "மாலை நேர தென்றல் என்ன பாடுதோ என் மன்னன் எங்கே எங்கே என்று தேடுதோ மஞ்சள் வண்ண வெய்யில் என்று தோணுதோ என் மங்கை மேனி தங்கம் என்று நாணுதோ?" "பூ விரிந்த சோலை என்ன எண்ணுதோ இந்த பூவைப்போல மென்மை இல்லை என்றதோ தங்க நிற கலசம் எடுத்து நடக்கும் தேரோடு பக்கம் வந்து மெதுவாய் பதமாய் இதமாய் உறவாடு?" ஒரு சிங்கள குடும்பத்தின் மகளான ருவனிக்காவுக்கு, குறளரசனை நேசிப்பது என்பது பிறப்பிலிருந்தே அவளிடம் சூழ்நிலை காரணமாக வேரூன்றியிருந்த தப்பெண்ணங்கள் மற்றும் பக்கசார்புககளின் தாக்கங்களை கலையத் தொடங்கியது. குறளரசனின் தமிழ் மக்கள் சமூகத்தின் விளிம்புநிலையில் நலிந்தபோது, எழுபத்தி ஆறு ஆண்டுகளாக, சலுகை மற்றும் அதிகாரத்தால் பயனடைந்த ஒரு சமூகத்தைச் தான் சேர்ந்தவர் என்ற குற்ற உணர்வுடன் அவள் சிலவேளை மல்யுத்தம் செய்தாள். ஆனால் குறளரசனிடம், அவள் ஒரு காதலியாக மட்டுமல்ல, நீதி மற்றும் சமத்துவத்திற்கான போராட்டத்தில் ஒரு பங்காளியாகவும் இருந்தாள். ஒன்றாக, காதல் இனம் மற்றும் மொழியின் தடைகளைத் தாண்டிய எதிர்காலத்தை கற்பனை செய்யத் துணிந்தனர், அங்கு கடந்த கால பாவங்கள் ஒப்புக் கொள்ளப்பட்டு பரிகாரம் செய்யப்பட்டன. அவர்கள் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தின் வாசலில் நிற்கும் போது, குறளரசனும் ருவனிக்காவும் ஒருவரையொருவர் ஒட்டிக்கொண்டனர், அவர்களின் காதல் இருள் கடலில் நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக இருந்தது. ஏனென்றால், அவர்களின் கூட்டணியில், மகாவம்சத்தின் எதிரொலிகள் மௌனமாகி, ஒற்றுமை, சமத்துவம் மற்றும் புரிந்துணர்விற்காக அழைப்பு விடுக்கும் குரல்களின் சேர்ந்திசையால் [கோரஸால்] பதிலீடு செய்யப்பட்ட எதிர்காலம் பற்றிய வாக்குறுதி இருந்தது. யாழ்ப்பாணத்தின் மையப்பகுதியில், குழப்பமான கடந்த காலத்தின் எதிரொலிகள் மற்றும் நிச்சயமற்ற எதிர்காலத்தின் கிசுகிசுக்களின் மத்தியில், குறளரசன் தனது மக்களுக்கு நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக உயர்ந்து நின்றான். மாற்றத்திற்கான சாத்தியக்கூறுகள் பற்றிய அவனது அசைக்க முடியாத நம்பிக்கையில், ஒரு நாள், தமிழர்களின் குரல்கள் கேட்கப்படும், அவர்களின் கனவுகள் நனவாகும், 'மாற்றம்' கட்டாயம் நிகழும் என்ற நம்பிக்கை, மற்றும் இரவீந்தரநாத் தாகூரின் கீதாஞ்சலி பாடல் [“Where the mind is without fear and the head is held high; Where knowledge is free;] அவனின் போராட்டத்தைத் தொடர ஊக்கம் & கொடுத்தது.  வலிமையைக் கொடுத்தது. "இதயம் எங்கே அச்சமின்றி உள்ளதோ, எங்கே தலை நிமிர்ந்து நிற்கிறதோ, அறிவு வளர்ச்சிக்கு எங்கே பூரண விடுதலை உள்ளதோ, குடும்பத்தின் குறுகிய தடைப்பாடுகளால் வெளி உலகின் ஒருமைப்பாடு எங்கே  உடைபட்டுத் துண்டுகளாய்ப் போய்விட படவில்லையோ, வாய்ச் சொற்கள் எங்கே மெய்நெறிகளின் அடிப்படையிலிருந்து வெளிப்படையாய் வருகின்றனவோ, விடாமுயற்சி எங்கே தளர்ச்சி யின்றி பூரணத்துவம் நோக்கி தனது கரங்களை நீட்டுகிறதோ, அடிப்படை தேடிச் செல்லும் தெளிந்த அறிவோட்டம்  எங்கே பாழடைந்த பழக்கம் என்னும் பாலை மணலில் வழி தவறிப் போய்விட வில்லையோ, நோக்கம் விரியவும், ஆக்கவினை புரியவும் இதயத்தை எங்கே வழிநடத்திச் செல்கிறாயோ,  அந்த விடுதலைச் சுவர்க்க பூமியில் எந்தன் பிதாவே! விழித்தெழுக என் தேசம்!" [கீதாஞ்சலி / தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா] நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]        
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.