Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் பிறந்த நாள் தொட்டு பெற்றோரை, கணவனை, பிள்ளைகளை நம்பித்தான்  அல்லது சார்ந்துதான் வாழவேண்டுமா??? என்றால் இல்லை என்னும் பதில் பல ஆண்களிடம் இருந்து வரலாம். ஆனால் அவள் பிறப்புத் தொடக்கம் இறப்புவரை ஆண்களால் கட்டுப்படுத்தப்பட்டு தன் சுய விருப்பு வெறுப்புக்களை மென்று விழுங்கியபடி மற்றவருக்காக வாழவேண்டிய நிலைதான் எம் பெண்களுக்காக விதிக்கப்பட்டிருக்கிறது. தாயகத்தை விடுவோம். புலம் பெயர்ந்து  மற்றைய சமூகத்துடன் வாழும் எம்சந்ததிப் பெண்கள் அந்நாடுகளில் பல நிலைகளில் இருந்தாலும் இன்னும் ஆணுக்கு ஆணின் விருப்பு வெறுப்புகளுக்கு ஈடுகொடுக்க முடியாது வாழ்ந்து வருவது உங்களுக்குத் தெரியாததல்ல.

ஆண்கள் சிறுவர்களாக இருந்தபோதும் சரி வாலிபர்களானபின்னும்சரி மணமுடித்த பின்னும்கூட தம் நண்பர்களுடன் சுதந்திரமாக திரிவதும், விடுமுறைக்குச் செல்வதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட எம் சமூகத்தில் பெண்கள் தனியாக இன்னொரு பெண்ணுடன் சேர்ந்து விடுமுறைக்குச் செல்வது இலகுவாக ஏற்றுக்கொள்ளப் படுவதில்லை. இள வயதுப் பெண்கள் குழந்தைகளைத் தனியே விட்டுவிட்டுச் செல்வது முடியாதது. பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களானபின்னும் பெண்ணுக்கு கணவனுடன் மட்டுமே விடுமுறையைக் கழிக்க வேண்டிய கட்டாயம்.

ஏன் இரு பெண்களோ அல்லது அதற்கு மேற்பட்ட பெண்களோ சுதந்திரமாக ஓரிடத்துக்குச் சென்று கணவனோ பிள்ளைகளோ இன்றி ஒரு மாதம் இளைப்பாறி, விருப்பமானதை துணிவாகச் சுதந்திரமாகக் கதைத்துச் சிரித்துவிட்டு வருவதை எத்தனை கணவர்கள் மனதார அனுமதிக்கிறார்கள்???????

இன்னும் நான் எழுதிக்கொண்டே போகலாம். ஆனால் உங்கள் மனங்கள் என்ன சொல்கின்றன என்று பார்ப்போம் உறவுகளே. உங்கள் கருத்துக்களை மனம் திறந்து எழுதுங்கள்.

 

Link to comment
Share on other sites

  • Replies 85
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இன்னும் நான் எழுதிக்கொண்டே போகலாம். ஆனால் உங்கள் மனங்கள் என்ன சொல்கின்றன என்று பார்ப்போம் உறவுகளே. உங்கள் கருத்துக்களை மனம் திறந்து எழுதுங்கள்.

நிஞாயமான கேள்வி தான்.ஆனால் இன்னமும் மேலைத் தேச பெண்களுக்கே முழு சுதந்திரமும் விடைக்கவில்லை.அவர்களைப் பார்த்து தானே நமது சந்ததி வளர்ந்து கொண்டிருக்கிறது.உங்களுக்கில்லாவிட்டாலும் உங்கள் பிள்ளைகள் நீங்கள் நினைத்த மாதிரி வாழ்வார்கள்.

இப்போதே திருமணத்திற்கு முன்னர் பச்சுலர் பாட்டி என்று மணமகனின் நண்பர்கள் தனியாகவும் மணமகளின் நண்பிகள் தனியாகவும் வெவ்வேறு இடங்களுக்கு போய் 5 6 நாள் என்று நின்று குத்தாட்டம் போடுகிறார்கள்.

இதுக்காகத் தான் வேலை தவிர்ந்த வேறெங்கும் தனியே போவதில்லை.போனால் மனைவியுடன் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா ஏதோ பொம்புளையள் கஸ்டப்படுற மாதிரி கதையும் கட்டுரையும் பீலாக்களும்.....
நூற்றுக்கு தொண்ணூறு வீதமான பொம்புளையள் தாங்கள் நினைச்சதை செய்துகொண்டுதான் இருக்கினம்.....நேரத்துக்கு ஒரு சாறி...சட்டையள்....செருப்பு...நகை நட்டுகள் எண்டு சொல்லி வேலையில்லை.....ஆனால் நாங்கள் அண்டைக்கு வாங்கின சாரமும் கோட்டுச்சூட்டும்.....எப்பவும் எங்கையும்......

இந்த வேப்பங்காய் பள்ளிக்கூடத்து குத்தியாட்ட வீடியோவை  பாக்க அவையின்ர சுதந்திரம் வீட்டிலை எப்பிடியிருக்குமெண்டு தெரிய வேணுமெல்லோ...


 

Link to comment
Share on other sites

6 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஏன் இரு பெண்களோ அல்லது அதற்கு மேற்பட்ட பெண்களோ சுதந்திரமாக ஓரிடத்துக்குச் சென்று கணவனோ பிள்ளைகளோ இன்றி ஒரு மாதம் இளைப்பாறி, விருப்பமானதை துணிவாகச் சுதந்திரமாகக் கதைத்துச் சிரித்துவிட்டு வருவதை எத்தனை கணவர்கள் மனதார அனுமதிக்கிறார்கள்???????

அண்மையில் யாழ் பல்கலைக்கழகத்து மருத்துவ துறையில் கற்று வைத்தியராகி பல நாடுகளிலும் வாழும் பலர் ஒன்று கூடி இலங்கைக்கு போனார்கள். இவர்களில் பெண்களும் அடங்குவர். ஆண்கள் இவர்களின் கணவர்கள் அல்ல. இப்படி பல ஒன்று கூடல்களும் விடுமுறைகளும் இடம் பெறுகின்றன. இது வித்தியாசமான சமுக நிலையுடன், தொழில் துறையுடன் மற்றும் கல்வி நிலையுடன் சம்பந்தபட்டதாக தெரிகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிறையக் காலம் பின் தங்கி விட்டீர்கள் என்று நினைக்கிறேன். இந்தப் பக்கம் வேறை மாதிரி.  ஏனுங்க வீட்டில் பிரச்சினையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவேளை மேலை நாடுகளில் தனியாக போகலாம், ஓரளவிற்கு சமூக பாதுகாப்பு இருக்கும்..

ஆனால் ஆசிய நாடுகளில் 3 வயது பெண் குழந்தைகள் முதல் எழுபது வயது பாட்டிகளுக்குமே பாதுகாப்பு இல்லை.. இதில் தனியாக சுற்றினால்.. என்னாவது..?

சில சுய விருப்பு வெறுப்புகளுக்கு, திருமணமான பெண்களுக்கு முழுசுதந்திரம் இல்லை என்பது உண்மைதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்கள் கூட்டமாக வெளியே சென்றால் சந்தோஷமாக பார்க்கப்படுகிறது...பெண்கள் கூட்டமாக வெளியே சென்றால் சந்தேகமாக பார்க்கப்படுகிறது...

...இதை கல்யாணத்தின்போது தலையை குனிந்தபடி தாலியை நீயே கட்டு என்று கழுத்தை நீட்டியபோது,  நீ எதுக்கு தாலிகட்டி என்னை உன் பொறுப்பில் எடுக்கவேண்டும்?, நான்தான் தாலி கட்டுவேன் என்று புரட்சிகரமாக அப்போதே யோசித்திருக்கவேண்டும் ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ஈழப்பிரியன் said:

 

இப்போதே திருமணத்திற்கு முன்னர் பச்சுலர் பாட்டி என்று மணமகனின் நண்பர்கள் தனியாகவும் மணமகளின் நண்பிகள் தனியாகவும் வெவ்வேறு இடங்களுக்கு போய் 5 6 நாள் என்று நின்று குத்தாட்டம் போடுகிறார்கள்.

நான் எமக்கு அடுத்த சந்நிதி பற்றிக் கதைக்கவில்லை ஈழப்பிரியன்.

11 hours ago, குமாரசாமி said:

சும்மா ஏதோ பொம்புளையள் கஸ்டப்படுற மாதிரி கதையும் கட்டுரையும் பீலாக்களும்.....
நூற்றுக்கு தொண்ணூறு வீதமான பொம்புளையள் தாங்கள் நினைச்சதை செய்துகொண்டுதான் இருக்கினம்.....நேரத்துக்கு ஒரு சாறி...சட்டையள்....செருப்பு...நகை நட்டுகள் எண்டு சொல்லி வேலையில்லை.....ஆனால் நாங்கள் அண்டைக்கு வாங்கின சாரமும் கோட்டுச்சூட்டும்.....எப்பவும் எங்கையும்......

இந்த வேப்பங்காய் பள்ளிக்கூடத்து குத்தியாட்ட வீடியோவை  பாக்க அவையின்ர சுதந்திரம் வீட்டிலை எப்பிடியிருக்குமெண்டு தெரிய வேணுமெல்லோ...


 

நான் கேட்ட கேள்விக்கு நீங்கள் ஒழுங்காகப் பதில் சொல்லவில்லை. சீரை சட்டை உடுப்பதை விடுங்கள். உங்கள் மனைவி தன் நண்பிகளுடன் ஒருவாரம் விடுமுறையில் செல்ல விடுவீர்களா????

7 hours ago, Jude said:

அண்மையில் யாழ் பல்கலைக்கழகத்து மருத்துவ துறையில் கற்று வைத்தியராகி பல நாடுகளிலும் வாழும் பலர் ஒன்று கூடி இலங்கைக்கு போனார்கள். இவர்களில் பெண்களும் அடங்குவர். ஆண்கள் இவர்களின் கணவர்கள் அல்ல. இப்படி பல ஒன்று கூடல்களும் விடுமுறைகளும் இடம் பெறுகின்றன. இது வித்தியாசமான சமுக நிலையுடன், தொழில் துறையுடன் மற்றும் கல்வி நிலையுடன் சம்பந்தபட்டதாக தெரிகிறது.

இப்படித் துறைசார் காரணங்களுக்காகப் பல கணவர் அனுமதிப்பதுதான். ஆனால் தனியாக விடுமுறை என்றால்  சிக்கல்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kavi arunasalam said:

நிறையக் காலம் பின் தங்கி விட்டீர்கள் என்று நினைக்கிறேன். இந்தப் பக்கம் வேறை மாதிரி.  ஏனுங்க வீட்டில் பிரச்சினையா?

நான் ஒன்றும் பின்தங்கவில்லை. ஒருவீதம் நடப்பதைப்பற்றிப் பேசவும் இல்லை. தாயகத்துக்கு அல்லது இந்தியாவுக்கு உறவினரைப் பார்க்க தனியாகச் செல்வதையும்கூடக் குறிப்பிடவில்லை. 

ஏனுங்க உங்கவீட்டில் நடக்கிற பிரச்சனையைத் தான் நீங்கள் பொதுவெளியில் எழுதுவீர்களா????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாராளமாக பெண்கள் தனியாக போகலாம் வரலாம்.... அவர்கள் பத்திரமாக திரும்பி வருகின்றார்கள் அல்லது வருவதை சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளுமே தீர்மானிக்கின்றன....!ஆபத்துகள் ஆண்களால் மட்டும்தான் வரவேண்டும் என்பதில்லை. கூட பயணிக்கும் பெண்களாலும் கூட வரலாம். விவாதிக்க வேண்டிய விடயத்தை எடுத்திருக்கின்றிர்கள் சகோதரி.....!   tw_blush:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னக்கா அங்காலை வாகனம் பழுகினால் ஆண்கள் தான் தள்ளவேண்டும் என்று சொல்லுகிறீர்கள் பிறகு இங்காலை சம உரிமை பற்றி கதைக்கிறியள். ஏன் பழுதாகின வாகனத்தை நீங்கள் இறங்கி தள்ளியிருக்கலாம் தானே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, வாதவூரான் said:

என்னக்கா அங்காலை வாகனம் பழுகினால் ஆண்கள் தான் தள்ளவேண்டும் என்று சொல்லுகிறீர்கள் பிறகு இங்காலை சம உரிமை பற்றி கதைக்கிறியள். ஏன் பழுதாகின வாகனத்தை நீங்கள் இறங்கி தள்ளியிருக்கலாம் தானே?

நானும் சேர்ந்துதான் தள்ளினது கடைசியில கதிர்காமத்தில

 

4 hours ago, suvy said:

தாராளமாக பெண்கள் தனியாக போகலாம் வரலாம்.... அவர்கள் பத்திரமாக திரும்பி வருகின்றார்கள் அல்லது வருவதை சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளுமே தீர்மானிக்கின்றன....!ஆபத்துகள் ஆண்களால் மட்டும்தான் வரவேண்டும் என்பதில்லை. கூட பயணிக்கும் பெண்களாலும் கூட வரலாம். விவாதிக்க வேண்டிய விடயத்தை எடுத்திருக்கின்றிர்கள் சகோதரி.....!   tw_blush:

 

ஆனால் விவாத்துக்குத்தான் ஆரும் வருகினம் இல்லையே

9 hours ago, ராசவன்னியன் said:

ஒருவேளை மேலை நாடுகளில் தனியாக போகலாம், ஓரளவிற்கு சமூக பாதுகாப்பு இருக்கும்..

ஆனால் ஆசிய நாடுகளில் 3 வயது பெண் குழந்தைகள் முதல் எழுபது வயது பாட்டிகளுக்குமே பாதுகாப்பு இல்லை.. இதில் தனியாக சுற்றினால்.. என்னாவது..?

சில சுய விருப்பு வெறுப்புகளுக்கு, திருமணமான பெண்களுக்கு முழுசுதந்திரம் இல்லை என்பது உண்மைதான்.

நீங்களாவது ஒத்துக்கொண்டீர்களே அண்ணா முழு சுதந்நிரம் இல்லை என்று.

Link to comment
Share on other sites

வணக்கம் சுமே அக்கா.
போன வருடம் நானும் எனது நண்பிகளும் விடுமுறை போனோம். ஒவ்வொரு வருடமும் நண்பிகள் அவர்கள் கணவர்கள் பிள்ளைகள் என்று ஒன்றாக விடுமுறை போவோம். போன வருடம் ஒரு மாறுதலுக்காக 6 நண்பிகள் தனியாக போனோம். ( சில நண்பிகளுக்கு 4 வயதில் குழந்தை இருந்தது)  அனைவரது கணவர்களும் தமது குழந்தைகளை பார்த்துக்கொண்டு மனைவிமாரை அனுப்பிவைத்தார்கள்.
இரண்டு நாட்கள் தான் நின்றோம் ... நிறைய சிரித்தோம் நிறைய கதைத்தோம் ஆனால் என்ன ஒவ்வொருவரும் தனியாக போய்விட்டோமே தவிர உள்ளுக்குள் பிள்ளைகளை விட்டுவிட்டு போனதை நினைத்து கவலைப்பட்டோம்.........ஒழுங்காக சாப்பிட கூட முடியல. எமக்கு கணவர்கள் சுதந்திரம் தந்தாலும் எம்முள் இருகும் பாசப்பிணைப்பு எம்மை நிம்மதியாக இருக்கவிடல. இது தான் யதார்த்தம்.
நாம் என்ன தான் வெள்ளைகள் செய்கிறார்கள் என்று முயற்ச்சி செய்தாலும் நாம் நம் கலாச்சாரம் அன்பு பாசம் என்பது எம்மோடு கூடபிறந்தது. எம்மால் அவர்களை போல் குடும்பத்தை விட்டு விட்டு தனியா மகிழ்வாக இருக்க முடியல.
இனி போவதென்றால் பிள்ளைகள் 16 தாண்டியபின்பு தான் போவது என்று முடிவெடுத்து திரும்பிவந்தோம் :)

ஆனால் எனக்கு தெரிந்து பல வீடுகளில் பெண்கள் விரும்பினாலும் ஆண்கள் அனுமதிப்பதில்லை என்பது உண்மை. அதற்கு முதல் காரணம் எமது நாட்டு வளர்ப்பு முறை. சிறு வயதில் இருந்தே ஆண்களுக்கு கொடுக்கும் சுதந்திரம் பெண்களுக்கு கொடுத்து வளர்ப்பதில்லை அதைப்பார்த்து வளரும் ஆண்கள் அதையே தமது திருமணத்தின் பின்பும் பின்பற்றுகின்றார்கள். ( நான் எல்லா ஆண்களையும் குறிப்பிடவில்லை :) ).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேள்வி என்னமோ நியாமானது என்றாலும் ......
பதில் ஒரு வரியில் எழுத கூடியதில்லை.

எனக்கு பெண் சகோதரர்கள் இருக்கிறார்கள் 
ஒரு வீட்டிலேயே வளர்ந்தோம் ஒரே அப்பா ஒரே அம்மா 
நான் 15 வயதிலேயே வீட்டை  விட்டு வெளிக்கிட்டு விட்டேன் 
பின்பு வந்து வந்து போவது ..... போய் போய் வாறது 
என்ற மாதிரி இருக்கும்போது கூட என்னை அம்மாவோ அப்பாவோ 
எதுவும் கேட்பதில்லை.
பின்பு இந்திய இராணுவம் போர் தொடங்கியபின்பு ... நான் எங்காவது 
சென்றுவிட்டு திரும்பாது இருந்தால் ... அம்மா கொஞ்சம் பரபரப்பாக 
இருப்பதை அவதானிக்க தொடங்கினேன் ... அதன் பின்பு எங்கு போனாலும் 
இங்கு போகிறேன் எப்போது வருவேன் என்று சொல்லிவிட்டு போவதுண்டு.

இதே சுதந்திரம் எனது சகோதரர்களுக்கு இருந்ததா என்றால் இல்லை 
பள்ளி முடிந்து..... வந்தால் டியூசன்..... முடிந்து வந்தால் வீடு. இப்படித்தான் 
இருந்தார்கள். 

இரு வேறு பாரிய வேறுபாடு இருந்தது என்னவோ உண்மைதான்.
ஆனால் யாரை கை நீட்டுவது என்பதில்தான் பிரச்சனை.

பிள்ளைகளை வீட்டுக்குள் வைத்து பூட்டும் எண்ணம் பெற்றோரிடம் இருக்கவில்லை 
வெளியில் திரிய வேண்டும் எனும் எண்ணம் பெண் பிள்ளைகளிடமும் இருக்கவில்லை 
அப்படி திரிந்தால் ........... அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் சமூகத்திடம் இருக்கவில்லை.
அதையும் மீறி திரிய போய் .... போனவராக திரும்பிய பெண்கள் யாரையும் எனக்கு தெரியாது.
ஒன்று காணவில்லை என்று இன்றும் தேடிக்கொண்டு இருக்கிறார்கள் .... அல்லது அப்பாவை 
தெரியாத பிள்ளைகளுடன் அல்லல் படுகிறார்கள். 

யார்? ஏன் ? எங்கு ? எப்போது ?
என்பதுதுக்கான விடையை தேடுதல்தான் புரிந்துணர்வுக்கும் பக்குவத்துக்கும் 
உள்பட்ட்து. ஆண்கள் திரிகிறார்கள் என்றால்.........  
என்றுவிட்டு திரிய வெளிக்கிட்ட மேலை நாடுகளில்தான் இன்று மீ டூ ( )
அமைப்பு முழு வீச்சாக எழும்புகிறது? 

ஒரு பெண் தாய் ஆகும்போது அவளுக்கு ஒரு ஆன் பிள்ளை பிறக்கும்போது 
ஒரு வேளை ..... தனது முன்னை நாள் ஆச பாசங்கள் அடக்கு முறைகளை சொல்லி வளர்த்தால் 
பின்னாளில் ஆண்கள் பக்குவ படுவார்களோ தெரியாது ....... 
நடைமுறையில் .... ஆண் பிள்ளைக்காகவே காத்தருந்த மாதிரி நேர் எதிராகவே பெண்கள் 
செயல்படுகிறார்கள்   ..... சீதன கொடுமையில் ... இன்னொரு பெண் மறுபக்கத்தில் இருக்கிறாள் 
என்று எண்ணும் தாய்மாரை காண்பது அரிதிலும் அரிது. 

பலவிதமான தீர்வுகளை பெண்களும் தேடி பார்த்து இறுதியில் 
பெண்ணை பெண்ணே திருமணம் செய்யும் நிலையில் கூட அவர்கள் 
சுதந்திரமாக இருக்கிறார்களா? என்றால் இல்லை என்றுதான் கூற வேண்டும்.

ஆனால் எமக்கு தெரிந்து ஒவ்வையார் பல ஆயிரம் ஆண்டு முன்பு கோவில் கோவிலாக 
தன்பாட்டுக்கு திரிந்து இருக்கிறார் ....... ஆண்களும் பெருமைப்படுகிறார்கள் 
ஆட்டகாறி என்று ஒவ்வையாரை திட்டுபவர்களை நான் காணவில்லை.

இதைத்தான் நான் முன்பே குறிப்பிடடேன் ...
யார்? ஏன் ? எங்கு? எப்போது? என்று 
காரணம் நான்கும் ஒன்றோடு ஒன்று தொடர்பு உடையது.

விமான பணி பெண்கள் நாடு நாடாக திரிகிறார்கள் ....
இஸ்லாம் ... தொட்டு  பிராமண பெண்கள் வரை நாம் 
நாளும் விமானத்தில் சந்திக்கிறோம்தானே?  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது மீ டு அமைப்பின் இணையதளம் 
இவர்களுடன் நீங்கள் தொடர்பை பேணினால் 
சில விடைகள் புரிந்து உணர்வுகள் வரலாம் 

https://metoomvmt.org/

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரம் வரையான விடீயோக்கள் இருக்கும்போது 
இதை ஏன் இணைத்தேன் என்றால் .........
இவர்கள் ஆண்களுக்கு நிகராக யுத்த களத்தில் போராடுபவர்கள் 
மனோ வலிமை ... உடல் வலிமை என்று சாதாரண பெண்களை விட கொஞ்சம் 
உயர்வானவர்கள் ... இவர்கள் நிலைமையே இப்படித்தான் இருக்கிறது. 

கணவர் உங்கள் மேல் உள்ள காதலால் கூட 
உங்களுக்கு ஏதும் ஆகிவிட கூடாது என்பதாலும் தடுக்கலாம் 
ஆணாதிக்க எண்ணத்தில் இருந்தும் தடுக்கலாம்.
ஆணாதிக்க எண்ணத்திலும் கொஞ்சம் பெண் ஆதிக்கம் இருக்கிறது. 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முள் மீது சேலை வீழ்ந்தாலும் சேலைக்குத்தான் சேதம் சேலை மீது முள் விழுந்தாலும் சேலைக்குத்தான் சேதம் எங்கும் செல்லலாம் ஆனால் ஒரு கரப்பான் பூச்சிக்கு இருக்கும் பயம் வரும் பிரச்சினைகளையும் வென்று திரும்புவார்கள் என்றால் அவர்களுக்கு ஒரு சல்யூட் அடிக்கலாம் ஆனால் அப்படி நடப்பதில்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே பதில்..

அக்காவின் மகள் GCSE தாண்டினாப் பிறகு, நானோ இந்த மாதிரி கேள்வி கேட்டனான் எண்டப்போறியள்.

உங்கண்ட வளர்க்கப்பட்ட கதை வேற, இப்பத்தையான் பிள்ளவளர்புக்கதை வேற...

கண தாய்தகப்பன்மார் மெல்லவும் முடியாம, விழுங்கவும் முடியாம திரியினம்.

உங்க ஒரு தாய் மனிசி, மகளுக்கு சமரில கல்யாணம். கொலிடே புக் பண்ணிப் போடாதீங்க எண்டு சொல்லிக் கொண்டு இருந்தவ.

மகள், தானே அரேஞ்ச் பண்ணிப் போட்டு, உங்கண்ட இரண்டு குடும்பம், அப்பாட இரண்டு குடும்பம் மட்டும் தான் வரலாம் எண்டு சொல்லிட்டா.

பின்ன, பண்ணிப் பாருங்கோவன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

 

நீங்களாவது ஒத்துக்கொண்டீர்களே அண்ணா முழு சுதந்நிரம் இல்லை என்று.

நீங்கள் விரும்பும் முழு சுதந்திரம் தான் என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

தாயகத்தில் அல்லது தமிழகத்தில் அதிகளவு சுதந்திரம் இல்லாவிட்டாலும் வளர்ச்சியடைந்த நாடுகளில் வசிப்பர்களுக்கு கட்டற்ற சுதந்திரம் உண்டு.  எனவே தனியே என்றாலும் நண்பிகளோடும் விடுமுறையில் தாராளமாகச் செல்லலாம். பிள்ளைகள் இருந்தால் அவர்களைப் பொறுப்பாகப் பார்க்க கணவன்மார்கள் அல்லது உறவினர்களைக் கேட்கலாம்தானே.

ஆனால் பல பெண்கள் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள், என்ன கதைப்பார்கள் என்று தாங்களாகவே வேலிகளையும், விலங்குகளையும் தங்களுக்குப் போட்டு புழுங்கிக்கொண்டிருப்பார்கள்.  இந்த நிலையும் மாறிக்கொண்டுதான் வருகின்றது. 

ஏன் ஆண்களின் அனுமதி வேண்டும் என்று பெண்கள் நினைக்கின்றார்கள்? இந்த அடிமைப் புத்தியை  பெண்கள் முதலில் விட்டுத்தள்ளவேண்டும். ஏதாவது அறிவுரை, விளக்கம் வேண்டுமென்றால் நெடுக்ஸை தனிமடலில் அணுகவும்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் வசிக்கும் கனடாவில் இப்போது பெண்களுக்கு எந்தவிதத்தடையும் இல்லை அவரவர் சிந்தனைக்கு ஏற்ப தம்மை வடிவமைத்து வாழ்பவர்கள் பெண்களே. அதி உச்ச சுதந்திரத்தை இங்கு வாழ்பவர்களிடையே காணக்கூடியதாக இருக்கிறது. விலங்குகளாக பொறுப்புகளை மாட்டிக் கொண்டு இருப்பவர்கள் நாம்தான். சுமே ஆண்கள் கட்டுப்படுத்துகிறார்கள் அடக்குகிறார்கள் என்று பேசுவது என்னைப் பொறுத்தவரை நான் வாழும் கனடாவில் சுத்த முட்டாள்த்தனம். ஆண்களை முட்டாள்களாகவும், கோமாளிகளாகவும் கோபக்காரர்கள் ஆக்குவதும் தற்போதைய நிலவரத்தின்படி பெண்களாகவே உணர்கிறேன். கலாச்சாரம் பண்பாடுகளைக்கடந்த எல்லையற்ற சுதந்திரம் இன்று பல பெண்களைத் தனிமரமாகவும், போதைக்கு அடிமையானவர்களாகவும், மன அழுத்தம் நிறைந்தவர்களாகவும்,  அதி உச்ச விரக்தியுற்றவர்களாகவும் மாற்றிப்போட்டிருக்கிறது. இந்தத் தரவு உவகை மணமக்கள் இணைப்பின் வாயிலாக பெற்றவை. எல்லையற்ற சுதந்திரவெளியை அனுபவிக்கும் திறமை பெண்களிடம் கிடையாது. இத்தகைய சுதந்திரவெளியை நமது சமூகம் சார்ந்தவகையில் சில பெண்களாலேயே இயலும். எல்லையற்ற சுதந்திரம் என்பதும் துறவு என்பதும் ஒன்று. உறவுகளுக்குள் ஒட்டு இல்லாமல் பெண்களால் வாழ்க்கையை அனுபவிப்பது என்பது சாத்தியமற்றது. பெண்களுக்கு இயற்கை தந்த தாய்மை.,

அது மனிதர்களுக்கு மட்டுமல்ல விலங்குகள் பறவைகள் ஆகிய அனைத்திற்கும் பொருந்தும். தன்னுடைய சந்ததியை பாதுகாக்கும் பெரும் பொறுப்பை முதலில் தாயே ஏற்கிறாள். ஆக தாயிலிருந்தே பிள்ளைகளுக்கான கட்டுப்பாடுகள் ஆரம்பிக்கின்றன. தற்காலத்தில் சமூகவட்டம் சிதறிப்போயுள்ளது. யாரும் எப்படியும் வாழலாம் என்ற கோலம் பற்றற்ற வாழ்க்கையைத்தவிர எந்த ஒரு பெருமையையும் தரப்போவதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நான் கேட்ட கேள்விக்கு நீங்கள் ஒழுங்காகப் பதில் சொல்லவில்லை. சீரை சட்டை உடுப்பதை விடுங்கள். உங்கள் மனைவி தன் நண்பிகளுடன் ஒருவாரம் விடுமுறையில் செல்ல விடுவீர்களா????

 அவசியம் என வரும்போது பல தடவைகள் சென்று வந்துள்ளார்.

நானும் என் நண்பர்களுடன் சென்று வந்துள்ளேன்.

நான் நினைக்கின்றேன் நீங்கள் ஒரு குறுகிய வட்டத்திற்குள் நின்று கொண்டு சுழல்கின்றீர்கள். வெளியில் வந்து பாருங்கள் ஒரு அழகான சமூகம் சுதந்திரமாக சுற்றிக்கொண்டிருக்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, குமாரசாமி said:

 அவசியம் என வரும்போது பல தடவைகள் சென்று வந்துள்ளார்.

நானும் என் நண்பர்களுடன் சென்று வந்துள்ளேன்.

நான் நினைக்கின்றேன் நீங்கள் ஒரு குறுகிய வட்டத்திற்குள் நின்று கொண்டு சுழல்கின்றீர்கள். வெளியில் வந்து பாருங்கள் ஒரு அழகான சமூகம் சுதந்திரமாக சுற்றிக்கொண்டிருக்கின்றது.

ஊர்ல இருந்து அப்படியே கிரேனால, அப்படியே தூக்கி வைத்த மாதிரி கொஞ்சப்பேர் தம்மை முன்னேற்ற முனையாமல் வாழ்கின்றனர். 

குறைந்தது ஆங்கில அறிவைக் கூட வளர்க்காத தம்மை பற்றி எந்த வித சுஜ மதிப்பு இன்றி, தாழ்வு மனப்பான்மையோடு வாழும் அவர்கள் குறித்தே இந்த திரி விவாதிக்கிறது என்றே நினைக்கின்றேன்.

அவர்கள் தான், தீடீரென தமக்கு சுதந்திரம் இல்லை என்பார்கள். இரண்டு சாரியும், ஒரு படமும் காட்டியவுடன்.... பழைய குருடி கதவை திறடி
கதை தான்...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அதெல்லாம் இருக்கட்டும், குஜாரத்தில் தானே தீவைத்த இந்துக்களின் ரயிலுக்குப் பழிவாங்க ஆயிரமாயிரம் முஸ்லீம்களைப் படுகொலை செய்ததற்காக அமெரிக்காவே இவருக்கு தடை விதித்திருந்தது. இந்த லட்சணத்தில் இந்தியஅ மனிதநேயத்திற்குப் பாதுகாப்பான நாடாம். 
    • தமிழ்ப் பொதுவேட்பாளரை இறக்கி ரணில் ஐய்யாவுக்கு விழப்போற வாக்குகளைத் தடுத்துப்போடுவாங்கள் என்கிற கவலையில இருக்கிறம் உங்களுக்கு நக்கலாக் கிடக்கு என்ன?  ரணில் மாத்தையாட்ட, ஜயவேவா!
    • நீங்கள் அரசாங்கத்துடன் திம்புவில் பேசலாம், நான் இராணுவத்துடன் கிரிக்கெட் விளையாடினால் தவறோ? ‍- பரி யோவானின் ஆனந்தராஜனும், இந்தியர்களை அலைக்கழித்த இலங்கையும்   மறுநாளான ஆடி 24 ஆம் திகதி டிக் ஷிட் அவர்கள் நீலன் திருச்செல்வத்தைச் சந்தித்தார். தமிழர்களின் பிரச்சினையின் சிக்கல்களை பண்டாரி சரியாக உணர்ந்துகொள்ளத் தவறிவிட்டதாக டிக் ஷிட்டிடம் தெரிவித்தார் நீலன். மேலும் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வொன்றினைக் கண்டுபிடிக்குமாறு பண்டாரி  அழுத்தம்கொடுத்து வந்தமை, ஜெயாரிற்கு தமிழர்களுடன், தீர்வெதனையும் தராத, வெற்றுப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் வாய்ப்பினையும் ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாகவும் நீலன் கூறினார். சந்திரிக்காவின் ஆட்சியின்போது பிரபல சிங்கள இனவாதியான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸுடன் இணைந்து தீர்வுப்பொதியொன்றினைத் தயாரித்த நீலன் திருச்செல்வம் மேலும், டிக்ஷிட்டிடன் பேசும்போது தமிழரின் தாயகம் தொடர்பாகவும், அதனை திட்டமிட்ட அரச ஆதரவிலான சிங்களக் குடியேற்றங்கள் மூலம் இரு துண்டுகளாக உடைக்க சிங்களவர்கள் முயன்றுவருவது குறித்தும் விளக்கியதோடு, தமிழர்கள் தமது தாயகத்தில் சுயநிர்ணய உரிமைகொண்டவர்களாக வாழ்தலே எந்தவொரு தீர்விற்கும் அடிப்படையாக அமைதல் வேண்டுமென்றும் அழுத்தமாகக் கூறினார்.  இதற்குக் குறைவான எந்தத் தீர்வினையும் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதனையும் அவர் டிக்ஷிட்டிடம் தெரிவித்தார். நீலனுக்குப் பதிலளித்த டிக்ஷிட், இவ்விடயங்கள் குறித்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ரஜீவிடமும், பண்டாரியிடமும் தெளிவாகப் பேசவேண்டும் என்று கூறினார். "இனப்பிரச்சினையின் தீர்விற்கான அடிப்படை குறித்த ஆவணம் ஒன்றைத் தயாரித்து ஜெயாருக்கு அனுப்பிவைப்பதற்காக என்னை தில்லிக்கு அழைத்திருக்கிறார்கள். நான் நாளை பயணமாகிறேன். நீங்கள் என்னிடம் தற்போது கூறிய விடயங்களை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ஒரு ஆவணமாகத் தயாரித்து அனுப்பினால், நாம் ஜெயாருக்கு அனுப்பவிருக்கும் ஆவணத்தை அதன் அடிப்படியில் உருவாக்கிக்கொள்ளலாம்" என்று நீலனை நோக்கிக் கூறினார் டிக்ஷிட்.    அப்போது சென்னையில் தங்கியிருந்த அமிர்தலிங்கத்திடம் இவ்விடயங்கள் குறித்து நீலன் தெரிவித்தார். அதன் பின்னர் ஆடி 26 ஆம் திகதி தமது பேரம்பேசலின் நிலைப்பாடு குறித்த விளக்கமான கடிதம் ஒன்றினை அமிர்தலிங்கமும், சிவசிதம்பரமும் ரஜீவ் காந்திக்கு அனுப்பி வைத்தனர். அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த சில முக்கிய விடயங்கள் கீழே, "தமிழர் பிரச்சினைக்கான எந்தவொரு தீர்வின் அடிப்படையும் தமிழர்கள் தமது தாயகத்தில் தம்மைத்தாமே ஆளும் உரிமையினை உறுதிப்படுத்துவதாக இருக்க வேண்டும். பலஸ்த்தீனத்தில் இஸ்ரேல் செய்துவருகின்ற திட்டமிட்ட ஆக்கிரமிப்பிற்கு நிகரான ஆக்கிரமிப்பினை இலங்கையில் தொடர்ச்சியாக ஆட்சிக்கு வரும் சிங்கள அரசுகள் செய்துவருவதுடன்,  தமிழர் தாயகத்தின் ஒருமைப்பாட்டினைச் சிதைக்கும் நோக்குடன், தமிழர்களின் ஆட்சேபணைக்கு மத்தியிலும், அரச ஆதரவிலான திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை சுதந்திரக் காலத்திலிருந்து செய்து வருகின்றன". "தமிழர் தாயகத்தை இரண்டாகத் துண்டாக்குவதன் மூலம் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களை முற்றாக அழித்துவிட சிங்கள அரசுகள் முயன்று வருகின்றன. கிழக்கில் தமிழர்களை அப்புறப்படுத்துவதனூடாக தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வை வழங்கமுடியும் என்று ஜெயவர்த்தன கருதிவருகின்ற போதிலும், நீங்கள் அதனை ஒரு தீர்வாக ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறோம். தமது தாயகம் துண்டாடப்படுவதை தமிழர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை" என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.  புலிகளின் எச்சரிக்கைகளுக்கு மத்தியிலும் இலங்கை இராணுவத்துடன் துடுப்பாட்டப் போட்டியொன்றினை ஒழுங்குசெய்த பரி யோவான் கல்லூரி அதிபர் ஆனந்தராஜன்  ஆடி 27 ஆம் திகதி மாலை டிக்ஷிட் தில்லியை வந்தடைந்தார். அந்நாள் காலையிலேயே யாழ்ப்பாணம் புனித யோவான் கல்லூரியின் அதிபர் ஆனந்தராஜா கொல்லப்பட்டிருந்தார். பரி யோவான் கல்லூரியின் துடுப்பாட்ட அணிக்கும், இலங்கை இராணுவத்தின் துடுப்பாட்ட அணிக்கும் இடையிலான சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டியொன்றினை பரி யோவான் கல்லூரி மைதானத்தில் நடத்த முயன்றதனால் அவர் சுடப்பட்டார். போட்டியினை நடத்துவதற்கான முயற்சிகளில் அவர் இறங்கியபோது புலிகளால் பலதடவைகள் அவருக்கு அதனைச் செய்யவேண்டாம் என்று எச்சரிக்கைகள் விடப்பட்டு வந்தன. ஆனால், அவ்வெச்சரிக்கைகளை உதாசீனம் செய்த ஆனந்தராஜா, "நீங்கள் அரசாங்கத்துடன் திம்புவில் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்றால், இராணுவத்துடன் கிரிக்கெட் ஆட்டம் ஒன்றினை நான் ஒழுங்குசெய்வதில் என்ன தவறு இருக்க முடியும்?" என்று அவர் பதிலுக்கு தனது செயலை நியாயப்படுத்தி வந்தார்.  யாழ்ப்பாண மக்களின் மனங்களையும், இதயங்களையும் வென்று, அவர்களின் ஆதரவினைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் யாழில் இயங்கிவந்த சில பிரபல பாடசாலைகளுடன் சிநேகபூர்வமான துடுப்பாட்டம் மற்றும் கால்பந்தாட்டப் போட்டிகளை இலங்கை இராணுவம் ஒழுங்குசெய்யத் திட்டமிட்டு வந்தது. இலங்கை அரசாங்கத்திற்கெதிராக மக்களை அணிதிரட்டும் தமது முயற்சியை இராணுவத்தினரின் "யாழ் மக்களின் மனங்களையும், இதயங்களையும் வெல்லுதல்" முயற்சி பாதிக்கக் கூடும் என்று கருதிய போராளிகள், இராணுவத்தின் இந்த முயற்சிக்கு எவரும் ஆதரவளிக்கக் கூடாது என்று கூறி வந்தனர். இன்று மேற்கு நாடொன்றில் வசிக்கும் புலிகளின் முன்னாள்ப் போராளியொருவரே ஆனந்தராஜாவைச் சுட்டுக் கொன்றிருந்தார். ஆனந்தராஜாவைத் தாமே கொன்றதாக புலிகள் உரிமைகோரும் துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டனர். தாம் பலமுறை வழங்கிய எச்சரிக்கைகளையும் மீறி இராணுவத்துடன் துடுப்பாட்டப் போட்டியை நடத்துவதில் உறுதியாக நின்றமைக்காகவே அவருக்குத் தண்டனை வழங்கப்பட்டதாக புலிகளின் அறிவித்தல் கூறியது. ஆனந்தராஜா மீதான தாக்குதல் சொல்லவேண்டியவர்களுக்குத் தெளிவான செய்தியைச் சொல்லியது. இராணுவத்தினருடனான சகலவிதமான சிநேகபூர்வப் போட்டிகளும் யாழ்ப் பாடசாலைகளால்  கைவிடப்பட்டன. யாழ் மக்களின் மனங்களையும், இதயங்களையும் வெல்லும் இராணுவத்தின் முயற்சி பிசுபிசுத்துப் போனது. ஆனந்தராஜா மீதான தாக்குதலை அரசாங்கம் தனது பிரச்சாரத் தேவைக்காகப் பயன்படுத்திக்கொண்டது. இதனை கடுமையான யுத்தநிறுத்த மீறலாகக் காட்டிய அரசாங்கம், ஆனந்தராஜாவின் கொலையோடு சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பாகத் தகவல் வழங்குவோரு சன்மானமாக ஐந்து லட்சம் ரூபாய்களைத் தருவதாக அறிவித்தது. ஆனால், அரசால் தாக்குதலில் ஈடுபட்டவர்களை இறுதிவரை கண்டுபிடிக்க முடியவில்லை. தில்லியில் தான் தங்கியிருந்த நான்கு நாட்களில் டிக்ஷிட், ரஜீவ் காந்தி, ரஜீவால் பிந்தள்ளப்பட்டிருந்த பார்த்தசாரதி, ரோவின் சக்சேனா மற்றும் சில வெளியுறவுத்துறை அதிகாரிகள் ஆகியோரைச் சந்தித்தார். இச்சந்திப்புக்களின்போது, இலங்கையின் ஒற்றுமையினையும், பிராந்திய ஒருமைப்பாட்டினையும் பாதிக்காத வகையில், தமிழர்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்குச் சாதகமான வகையில் ஜெயார் முன்வைக்கக் கூடிய ஆலோசனைகளை அவர்கள் தயாரித்தனர். இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட, கடப்பாடுகள் எதுவும் அற்ற இந்த ஆவணத்தில் இலங்கையினால் முன்வைக்கப்பட்ட அதிகபட்ச அதிகாரப் பரவலாக்கல் அலகான மாவட்ட அபிவிருத்திச் சபையின் அதிகாரங்களை மேம்படுத்துவது தொடர்பாகவே பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. தமிழரின் கோரிக்கையான பூர்வீகத் தாயகத்திற்குப் பதிலாக மாகாண அலகினை இலங்கையரசு வழங்க முடியும் என்றும், வடக்கு மாகாணமும், கிழக்கு மாகாணமும் கருத்து ரீதியாக இணைக்கப்படலாம் என்றும் இந்தியா பரிந்துரை செய்திருந்தது. இவ்வாறு அமைக்கப்படும் மாகாணங்களுக்கான அதிகாரங்கள் குறித்துப் பேசும்போது, நிதி , காணியதிகாரம், சட்டம் ‍ ஒழுங்கினை நிலைநாட்டும் அதிகாரம் ஆகியவை மத்திய அரசினால் பகிர்ந்தளிக்கப்படலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. மேலும், இந்த இணைந்த மாகாணங்களில் தமிழ் உத்தியோகபூர்வ மொழியாகப் பாவிக்கப்படலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டது. ஜெயாருடன் பார்த்தசாரதி   இரண்டாம் சுற்றுப் பேச்சுக்கள் நடப்பதற்கு சற்று முன்னதாக இந்தியாவின் "கடப்பாடு அற்ற" பரிந்துரைகளின் நகல் ஒன்றினை நீலனிடம் கொடுத்த டிக்ஷிட், "இவை அனைத்தும்  பார்த்தசாரதியின் யோசனைகள் தான்" என்று கூறினார். "பண்டாரிக்கோ, சக்சேனாவுக்கோ இவைகுறித்த எந்தவிதமான அறிவும் இருக்கவில்லை" என்று நீலன் கூறினார்.  தாம் தயாரித்த "கடப்பாடற்ற" பரிந்துரைகளை ஜெயாரிடம் வழங்கி, அவற்றின் அடிப்படையில் தனது தீர்வினை ஜெயார் வரைந்துகொள்ளலாம் என்றும், பண்டாரியின் இரண்டாவது விஜயம் தொடர்பாக அவரை ஆயத்தமாக இருக்கும்படி  கூறுமாறும் டிக்ஷிட்டைப் பணித்தார் ரஜீவ் காந்தி. ஆவணி 2 ஆம் திகதி கொழும்பு வந்திறங்கிய பண்டாரி, அன்று மாலையே ஜெயாரை அவரது உத்தியோகபூர்வ வாசஸ்த்தலத்தில் சந்தித்தார். இச்சந்திப்பில் லலித் அதுலத் முதலியும் உடனிருந்தார். ஜெயாருடனான தனது சந்திப்புப் பற்றி கொழும்பு அசைன்மென்ட்டில் எழுதும் டிக்ஷிட், திம்புப் பேச்சுக்களின் தோல்வி குறித்த இந்தியாவின் அதிருப்தியை ஜெயாரிடம் தெரிவித்ததுடன், இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட பரிந்துரைகளை அவரிடம் தான் வழங்கியதாகவும் கூறுகிறார். இச்சந்திப்புக் குறித்து நீலனிடம் பேசும்போது, "நான் கொடுத்த பரிந்துரைகளை வாங்கிப் படித்துவிட்டு, சிறிய புன்னகையுடன் அதனை அருகில் நின்ற லலித்திடம் கையளித்தார் ஜெயார்" என்று கூறியிருக்கிறார்.   மேலும், ஜெயாருடன் பேசிய டிக்ஷிட், இலங்கை அரசால் முதலாம் கட்டப் பேச்சுக்களில் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள், தமிழ்ப் போராளிகள் தமது ஆயுதங்களைக் கைவிட்டு சமாதானப் பேச்சுக்களுக்குத் திரும்புவதற்குப் போதுமான சலுகைகளைக் கொண்டிருக்கவில்லை என்றும் கூறினார். இடையில் குறுக்கிட்ட லலித் அதுலது முதலி, மிகவும் காட்டமான முறையில் இதற்குப் பதிலளித்தார். "இந்தியா தம்மை ஆதரிக்கிறது என்பதற்காக, தமிழர்கள் தாந்தோன்றித்தனமான முறையில் முன்வைக்கும் நிபந்தனைகள் எல்லாவற்றையும் நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்கிற கட்டாயம் எமக்கு இல்லை" என்று கூறியதுடன், "நீங்கள் தமிழ்ப் பயங்கரவாதிகளுக்கு எவ்வாறான உதவிகளைச் செய்துவருகிறீர்கள் என்பது குறித்தும் நாம் அறிவோம்" என்று நீண்ட விளக்கம் றினையும்  வழ‌ங்கினார். பின்னர் பேசிய ஜெயார், "இலங்கை அரசின் சார்பாக இரண்டாம் கட்டப் பேச்சுக்களை ஹெக்டர் ஜெயவர்த்தனவே நடத்துவார் என்பதனால், அவரிடமே இந்தியாவின் பரிந்துரைகளைக் கையளிக்கிறேன்" என்று டிக்ஷிட்டிடம் கூறினார். மேலும், பண்டாரியின் வருகையினை நாம் வரவேற்கிறோம், அவர் கூறப்போவதைச் செவிமடுக்கவும் ஆயத்தமாக இருக்கிறோம் என்று ரஜீவிடம் கூறுங்கள் என்று கூறினார்.   ஆவணி 8 ஆம் திகதி கொழும்பு வந்தடைந்த பண்டாரி, ஜனாதிபதி ஜெயவர்த்தன, பிரதமர் பிரேமதாச, வெளியுறவு அமைச்சர் ஹமீது, பாதுகாப்பமைச்சர் லலித் அதுலத் முதலி, எதிர்க்கட்சித் தலைவர் சிறிமா ஆகியோரைச் சந்தித்தார்.   ஆனால், பண்டாரியின் ஜெயாருடனான சந்திப்பு பலனற்றுப் போயிற்று. தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல்த் தீர்வொன்றினைக் காண்பதற்கு இந்தியாவினால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளின் அடிப்படையிலான தீர்வொன்றினை இலங்கை முன்வைக்க வேண்டும் என்று பண்டாரி ஜெயாரிடம் கூறினார். இரண்டாம் கட்டப் பேச்சுக்கள் மிகவும் முக்கியமானவை என்று இந்தியா கருதுவதாகவும் அவர் ஜெயாரிடம் தெரிவித்தார். இப்பேச்சுக்களும் தோல்வியடையும் பட்சத்தில் இலங்கை கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரும் என்று  அவர் ஜெயாரை எச்சரித்தார். ஆனால் பண்டாரியின் அழுத்தங்களினால் ஜெயாரைப் பணியவைக்க முடியவில்லை. பண்டாரியுடன் தீர்க்கமான பேச்சுக்களில் ஈடுபடுவதையே ஜெயார் தவிர்த்தார். பண்டாரியைக் கையாளும் பணியினை தனது சகோதரர் ஹெக்டர் ஜெயவர்த்தனவிடமும், லலித் அதுலத் முதலியிடமும் கையளித்தார் ஜெயார். "எனது சகோதரரே இரண்டாம் கட்டப் பேச்சுக்களையும் எமசார்பில் நடத்தவிருப்பதால், நீங்கள் அவரிடமே உங்களின் விளக்கங்களைக் கூறுங்கள்" என்று பண்டாரியை நோக்கிக் கூறினார் ஜெயார். மேலும், "லலித் இதுகுறித்து உங்களுடன் விளக்கமாகப் பேசுவார்" என்றும் அவரிடம் கூறினார்.  பிரேமதாசவுடனான பண்டாரியின் பேச்சுக்கள் பொதுவானவையாக இருந்தன. வழ‌க்கம்போல் "மகாத்மா காந்தியில் நான் மதிப்பு வைத்திருக்கிறேன், இந்தியாவை நேசிக்கிறேன்" என்று பிரேமதாச பண்டாரியிடம் பேசத் தொடங்கினார். பின்னர், பயங்கரவாதத்தினை முற்றாக அழித்துவிட இந்தியா இலங்கைக்கு உதவேண்டும் என்றும் அவர் கோரினார். "தமிழ்ப் பயங்கரவாதம் இருக்கும்வரை, அரசியல்த் தீர்விற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவானவை. சிங்கள மக்களின் பெருமையும், கெளரவமும் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறன. இந்த நிலையில் அவர்கள் எந்த விட்டுக் கொடுப்பிற்கும் முன்வரப்போவதில்லை. இலங்கையில் சமாதானமும், உறுதிப்பாடும் நிலைநாட்டப்படுவதில் இந்தியாவிற்கு இருக்கும் அக்கறையினை சிங்கள மக்கள் அறிவார்கள், ஆனால் பேச்சுக்களில் மத்தியஸ்த்தம் வகிக்க இந்தியா எடுத்துவரும் முயற்சிகளை சிங்கள மக்கள் சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்க்கிறார்கள். நீங்கள் தமிழர்கள் சார்பாகவே செயற்படுவதாக அவர்கள் முற்றாக நம்புகிறார்கள்" என்று அவர் பண்டாரியிடம் தெரிவித்தார். சிறிமாவுடனான சந்திப்பின்போது, "நான் திம்புப் பேச்சுக்கள் தோல்வியிலேயே முடிவடையும் என்று எதிர்பார்த்திருந்தேன். அப்படியே நடந்தது. ஏனென்றால், ஜெயவர்த்தன இப்பேச்சுக்களில் இதய சுத்தியுடன் ஈடுபடவில்லை. இரண்டாம் கட்டப் பேச்சுக்களுக்கும் இதே நிலைதான் ஏற்படும்" என்று பண்டாரியிடம் தெரிவித்தார் சிறிமா.    இலங்கையின் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவரான ஹெக்டர் ஜெயவர்த்தனவுடன் பேசும்போது, "பழைய விடயங்களைத் திரும்பத் திரும்ப பேச்சுவார்த்தை மேசையில் பேசுவதைத் தவிருங்கள், எதிர்காலம் குறித்து மட்டுமே நாம் பேசலாம்" என்று கெஞ்சுவது போலக் கோரினார் பண்டாரி. இலங்கை தனது தீர்வினை எந்தெந்த இடங்களில் மேம்படுத்த முடியும் என்பது குறித்த பரிந்துரைகளை இந்தியாவின் "கடப்பாடு அற்ற" ஆவணம் கொண்டிருப்பதாக அவர் சுட்டிக் காட்டினார். இதற்குப் பதிலளித்த ஹெக்டர், "1978 ஆம் ஆண்டு யாப்பின் வரையறைகளை நான் சரியாக ஆராய்ந்து, எனது ஆலோசனைகளை அவற்றின் அடிப்படையில்  முன்வைக்கிறேன்" என்று கூறினார். லலித்துடனான பண்டாரியின் சந்திப்பு வித்தியாசகாம இருந்தது. "கடப்பாடு அற்ற" என்கிற தொனியில் இந்தியா முன்வைத்த அனைத்து பரிந்துரைகளையும் லலித் திட்டவட்டமாக நிராகரித்தார். வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் இந்தியாவின் யோசனையினை இலங்கை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று பண்டாரியிடம் கூறினார் லலித். கிழக்கு மாகாணத்தில் சிங்களவர்களும் முஸ்லீம்களும் இணைந்து பெரும்பான்மையினராக மாறியிருப்பதாகவும், தமிழர்கள் அங்கு சிறுபான்மையினர் என்றும் அவர் கூறினார். மேலும், 1977 ஆம் ஆண்டுத் தேர்தலில் தனிநாட்டிற்கான ஆணையினை கிழக்கு மாகாண மக்கள் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு வழங்கவில்லை என்றும் அவர் வாதிட்டார். 1982 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலும், சர்வஜன வாக்கெடுப்பும் கிழக்கு மாகாணம் அரசாங்கத்திற்கு ஆதரவாக நிற்பதையே நிரூபித்திருக்கின்றன என்று தனது வாதத்திற்கு மேலும் வலுச் சேர்த்தார் லலித்.  அடுத்ததாக, மாகாண சபைகளுக்கு வழங்கப்படும் அதிகாரங்களை மேம்படுத்தலாம் என்கிற இந்தியாவின் ஆலோசனைகளையும் லலித் புறக்கணித்தார். மாகாண சபைகளுக்கு நிதியதிகாரம், காணியதிகாரம், சட்டம் ஒழுங்கு ஆதிகாரம் ஆகியவற்றை வழங்குவதை சிங்கள மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று அவர் கூறினார். தனிச் சிங்களச் சட்டத்தில் மாற்றங்களைச் செய்யும் அதிகாரமோ, அல்லது 1972 மற்றும் 1978 ஆம் ஆண்டு யாப்புகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் நாட்டின் ஒருமைப்பாடு, ஒற்றையாட்சி ஆகியவற்றில் மாற்றங்களைக் கொண்டுவரும் அதிகாரமோ இலங்கையில் எந்த அரசிற்கும் கிடையாது என்றும் அவர் கூறினார். "இந்த விடயங்களில் இலங்கையின் அரசானாலும், எதிர்க்கட்சியானாலும் அவர்கள் அனைவரினதும் நிலைப்பாடு ஒன்றுதான்" என்று மிகுந்த நம்பிக்கையுடன் பண்டாரியைப் பார்த்துக் கூறினார் லலித். 
    • கைக்காப்பு, கைப்பற்று மற்றும் தொலைநோக்கி பூட்டப்பட்ட ஏ.கே. 103 துமுக்கியால் சுட்டுப் பார்க்கிறார் தலைவர் மாமா காலம்: நான்காம் ஈழப்போர்    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.