Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கொரோனா தொற்றுக்கு காரணம் என்ன? விளக்கமளிக்கும் போதகர்

Featured Replies

சீனாவில் தொடங்கிய கொரோன வைரஸ் உலகையை ஸ்தம்பிதமடையச் செய்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கி உலகளவில் பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை 13 லட்சத்து 12 ஆயிரத்து 628 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை உலகளவில் 72 ஆயிரத்து 636 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்திவரும் நிலையில் அமெரிக்கா ஸ்பெயின் பிரான்ஸ் இத்தாலி போன்ற நாடுகள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

இதேவேளை ஸ்ரீலங்காவிலும் இந்த கொரோனா தொற்று தற்போது தனது வீரியத்தை காட்ட தொடங்கியுள்ளது.

அதிலும் குறிப்பாக யாழில் இந்த தொற்று ஏற்பட்டமைக்கு சுவிஸில் இருந்து வந்த மத போதகரே காரணம் என பல தரப்பினராலும் கூறப்பட்டுவருகின்றது.

இந்நிலையில்,

யாழ் கொரோனா தொற்றுக்கு காரணம் என்ன? போதகர் மீது திட்டமிட்டு குற்றஞ்சாட்டப்படுகிறதா?

தெளிவாக விளக்கமளிக்கும் பாஸ்டர்...

https://www.ibctamil.com/world/80/140699

  • கருத்துக்கள உறவுகள்

கேக்கிறவன் மடையன் என்றால், எருமை மாடும் ஏரோப்பிளேன் விடுமாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரி பத்தி எரியும் இல்லை தீயணைப்பு வீரர்கள் வந்து அனைத்து பூட்டு  போடுவினம் .

sk ராஜன் கேள்விகளை போட்டு வாங்கிறார் முக்கியமான கேள்வி உதயனில் வந்த விளம்பரம் பத்தி ஏன் கேட்க்க வில்லை ?

நான் இவ்வளவு நாளும் நினைத்தன்  அரியாலையில்தான் இந்த விசர் கூட்டம் விசர் ஆடியிருக்கெண்டு பிரான்சிலும் இந்த சாந்தன் பாஸ்ட்ட்டார் மூலம் தமிழ் சனம்  அவதிக்குள்ளாகி இருக்கு இதைவிட அந்த சாந்தன் என்ற கோமாளியே  கொரனோ  வைரஸ் தாக்கி இருக்கு முதலே சொல்லி இருந்தால் லண்டன் பக்கம் உள்ள வைத்தியசாலைகளில் ஆளை அட்மிட் பண்ணியிருக்கலாம் நேரே சொர்க்கம் தான் .😄

  • கருத்துக்கள உறவுகள்

அதி சிறந்தவர் வருவார் பாருங்க அதத்தான் புனை பெயரா வைத்து  இருக்கார் .

 

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா வந்ததும் வந்துது பாருங்கோ! எல்லோரையும் தனிமையாய் இருந்து புலம்ப வைச்சிட்டுது.

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, satan said:

கொரோனா வந்ததும் வந்துது பாருங்கோ! எல்லோரையும் தனிமையாய் இருந்து புலம்ப வைச்சிட்டுது.

தனியா இருந்து புலம்பினாலும் பரவாயில்லை கீழே உள்ளது போல் விளம்பரம் போட்டு மக்களை கொலை பண்ணாதீங்க .

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

2 hours ago, Maruthankerny said:

 

இவ்வாறான பித்தலாட்டங்களை நம்பும் அளவுக்கு எமது மக்கள் பலவீனர்களாக இருப்பது வேதனையான விடயம்.  மக்களுக்கு அறிவூட்டுவதே இப்படியான மத ஏமாற்ற கும்பல்களிடம் இருந்து காப்பாற்ற ஓரே வழி. மதங்கள் என்றால் என்ன  எப்படியெல்லாம் அவை மக்களை ஏமாற்றுகின்றன என்ற தெளிவு மக்களிடம் இருந்தால். இப்படியாக மோசடிக்கும்பல்களால் ஏமாற்றபட மாட்டார்கள்.  கண்மூடித்தனமான  கடவுள் பக்தி உள்ளவர்கள்  பெரும்பாலும் இப்படி மதம் மாறுபவர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Maruthankerny said:

 

நாம் எப்போது எமது நாகரீகத்தைவிட இன்னொரு நாகரீகம் சிறந்தது என்று கருதுகிறோமோ, எமது நிறத்தைவிட இன்னொரு நிறம் அழகானது என எண்ணுகிறோமோ, எனது மொழியைவிட இன்னொரு மொழி சிறந்தது எனக் கருதுகிறோமோ, எப்போது எமது மதத்தைவிட இன்னொரு மதம் எனது பிரச்சனையைத் தீர்க்கும் என நினைக்கிறோமோ அந்தக் கணமே நாம் / நான் எனது அடையாளத்தை இழக்கத் தொடங்குகிறோம். தனியே சமயங்களின் ஒரு பிரிவினரின் பிரச்சாரங்களை மட்டும் எதிர்ப்பதால் சைவ சமயம் காப்பாற்றப்பட்டுவிடுமா ? அல்லது சைவ சமயம் மட்டுமே தமிழரின் அடையாளமா ? இல்லையே. 

பண்பாட்டுப் படையெடுப்பு எனும்போது தனியே கிறீத்துவ மதக் குழுக்களை மட்டும் எதிர்ப்பது சரியானதா ? 

2009 க்குப் பின்னர் எத்தனை சமயப் பிரிவுகள் இந்தியாவிலிருந்து எம் மக்களிடையே ஊடுருவியுள்ளன ? 
கிறீத்துவ சபைகளின் ஊடுருவல் தொடர்பில் அதிருப்தியுறுவோர் ஏன் இவற்றை கவனத்திற் கொள்வதில்லை ? 🤔

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Kapithan said:

பண்பாட்டுப் படையெடுப்பு எனும்போது தனியே கிறீத்துவ மதக் குழுக்களை மட்டும் எதிர்ப்பது சரியானதா ? 

இங்கு நான் ஆதாரத்தை இணைத்து கிறிஸ்தவ மத குழு செய்த பித்தலாட்டத்தை சொல்லியுள்ளேன் .

உங்களால் முடிந்தால் இலங்கையின் வடகிழக்கில் மற்றவர்கள் செய்த ஒன்றை தகுந்த ஆதாரத்துடன் இணைக்கவும் இல்லாவிடில் அல்லோயாவுக்கு இங்கு யாழில் பாட்டு பாடுவதை நிப்பாட்டுவீர்கள் என்று நம்புறன் .

  • கருத்துக்கள உறவுகள்

large.1300968688_Screenshot2020-04-07at22_23_38.png.a7953481ef0f9ee3fac64ff60061e065.png

இப்ப மகிந்தவே பெரும் கடுப்பில் இருக்கிறார்'

இவர் திருப்பி போனால். ஸ்பெஷல் வெள்ளை வான் தான் வரும்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, பெருமாள் said:

இங்கு நான் ஆதாரத்தை இணைத்து கிறிஸ்தவ மத குழு செய்த பித்தலாட்டத்தை சொல்லியுள்ளேன் .

உங்களால் முடிந்தால் இலங்கையின் வடகிழக்கில் மற்றவர்கள் செய்த ஒன்றை தகுந்த ஆதாரத்துடன் இணைக்கவும் இல்லாவிடில் அல்லோயாவுக்கு இங்கு யாழில் பாட்டு பாடுவதை நிப்பாட்டுவீர்கள் என்று நம்புறன் .

இவ்வளவு காலமும் இங்கு இருந்ததும் வந்ததும் பித்தலாட்ட்திலும் விட பெரிய பித்தலாட்டம் 
என்பதுக்கு நீங்கள் இணைத்ததுதான் ஆதாரம் ...இதைவிட என்ன இணைக்க வேண்டும்?

இந்த அல்லேலூயா போன்ற அற்பத்தை பார்த்தே எதோ கடவுளை கண்டதுபோல ஆடுகிறார்கள் 
அப்போ இவளவு காலமும் இவர்கள் இருந்த இடம் எவ்வளவு பெரிய பித்தலாட்ட தளம் என்பதை 
உணர்ந்துகொள்ள முடிகிறது. 

இருளை இன்னொரு இருளால் காட்ட முடியாது 
நீங்கள் இணைக்கும் ஆதாரத்தை வைத்துதான் பார்க்க முடிகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, பெருமாள் said:

இங்கு நான் ஆதாரத்தை இணைத்து கிறிஸ்தவ மத குழு செய்த பித்தலாட்டத்தை சொல்லியுள்ளேன் .

உங்களால் முடிந்தால் இலங்கையின் வடகிழக்கில் மற்றவர்கள் செய்த ஒன்றை தகுந்த ஆதாரத்துடன் இணைக்கவும் இல்லாவிடில் அல்லோயாவுக்கு இங்கு யாழில் பாட்டு பாடுவதை நிப்பாட்டுவீர்கள் என்று நம்புறன் .

பெருமாள், 

ஆத்திரக் காறனுக்கு புத்தி மட்டு என்பதன் அர்த்தம் அவன் அவசரப்பட்டு எதையும் புரிந்து கொள்ளாமல், அவசரத்தில்  எடுக்கும் முடிவுகள் குறைபாடாகவும் தெளிவில்லாமலும்  இருக்கும் என்பதனாலாகும்.

தயவுசெய்து எனது எழுத்தை ஆறுதலாக வாசியுங்கள். எழுதியதன் அர்த்தம் புரியும். அதன் பின் பதிலெழுதுங்கள். 🙂 ஆறுதலாக.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் தமிழர்கள் கண்ணால் காணாத எதையும் தெய்வமாக வழிபட்டவர்கள் அல்ல.இப்பொழுது நாம் வழிபடும் இந்துமதமும் இந்துமத சாமிகளும் தமிழர்களுக்கு எந்த சம்பந்தமும் அற்றவை. காலத்துக்கு காலம் தமிழர் நிலத்தின் மீது நிகழ்த்தப்பட்ட படையெடுப்புகளின் மூலம் மதம்மாற்றப்பட்டு கடைசியில் இப்பொழுது இரவல் இந்துமதத்திலும் கிறிஸ்த்தவத்திலும் தொங்கிக்கொண்டு இருந்து கொண்டு மதச்சண்டை பிடிக்கிறோம்.??

உண்மையில் ஒரு ஜநூறு அறுநூறு ஆண்டுகளுக்கு முன் எம் முப்பாட்டான் பூரா புத்தமதத்தில்தான் இருந்திருப்பார்கள்.

கீழடியில் தமிழர்கள் மதவழிபாட்டுக்கான எந்த சான்றுகளும் கிடைக்கவில்லை. 

எங்கள் மூதாதையர்கள் சாமிகளாக கொண்டாடியவர்கள் எல்லாம் தம்முடன் வாழ்ந்து தமக்காக ஊருக்காக மடிந்தவர்களையே வணங்கினார்கள். அப்படி பார்க்கபோனால் அவர்களின் பேரன்கள் எம் தெய்வங்கள் மாவீரர்களாகத்தான் இருக்கமுடியும்.

ஒவ்வொரு கிராமத்தின் வாசலில் நின்று வரவேற்கவும்,நம்மை வழியனுப்பவும் வாழவைப்பதுமாக இருக்கும் கிராம தேவதைகள் என்று அழைக்கப்படும் கிராமங்களின் காப்புத் தெய்வங்களின் மூலம் என்ன?
அவை எப்படி தெய்வங்கள் ஆகின?
அவை எப்போது தெய்வங்கள் ஆக்கப்பட்டன..?

அவை கற்பனையான சாமிகள் அல்ல, கொஞ்ச காலத்திற்கு முன்னால் நம்மிடையே வாழ்ந்தவர்கள்தான் என்பதும், நம்முடைய மூதாதையரான அவர்கள், மரணத்தின் மூலமாக தெய்வமாக ஆக்கப்பட்டவர்கள் என்பதும் அவர்கள் பற்றிய பாட்டிமாரின் செவிவழிக்கதைகளையும் வரலாறையும் கூத்து வடிவங்களையும் ஆராய்ந்தால் புலனாகிறது..

இந்தச் சாமிகள் எல்லோருமே மனிதர்கள், ஊரார் கொடுமையால், வீட்டார் கொடுமையால், அல்லது நாட்டை ஆண்ட அரசனின் கொடுமையால் கொல்லப்பட்டவர்கள்; அல்லது கொடுமையின் காரணமாக தற்கொலை செய்து கொண்டு விட்டவர்கள்;ஊருக்காக உயிரை தியாகம் செய்த மாவீரர்கள்.

நம்மைப் போல கை-கால் உள்ள மனிதர்கள்- கொல்லப்பட்டதால்- இரக்கத்தின் பேரிலும், பயம் அல்லது பக்தியின் காரணமாகவும் கும்பிடப் பட்டவர்கள் என்பது இவர்களைப் பற்றிய கதைகளின் மூலமாக நமக்குத் தெரியவருகிறது.

கிராமத்து வழிபாட்டு வடிவங்கள் கூத்தும் பாட்டும் ஆடலுமாய் இலக்கியத்தோடும் கலைகளோடும் இணைந்திருக்கின்றன. வரலாற்று நிலவியலை மீட்டுருவாக்கம் செய்யும் இவ்வழிபாட்டு முறைகளில் பெண் தெய்வத்தின் ஆதிக்கம் அதீதமாகவே காணப்படுவதுடன், சமுதாய நோக்கில் பார்க்குமிடத்து கூட்டு வழிபாடாகவே அமைந்து இயற்கையில் ஏற்படும் பெருங்கேடுகளை தடுக்கும் அடிமன நம்பிக்கையை ஊட்டுகிறது. ஊர்திரண்ட உணர்வை வெளிப்படுத்தும் இவ்வழிபாடு வருடா வருடம் வந்து சேர்வதுடன், உழைக்குந் தொழிலாளர்களுக்கு ஓய்வையும் தருகிறது. ஒற்றுமை உணர்வின் வெளிப்பாடாக அமையும் இவ்வழிபாடு வாழ்வியலோடு ஒட்டியதொரு நிகழ்ச்சிபோக்கு மாத்திரமின்றி பண்பாட்டுக் கூறின் பக்குவமாகவும் பிரகாசிக்கின்றது. 

அண்ணமார்,நாச்சிமார்,நாச்சியார்,மாரியம்மா,வைரவர்,கருப்பர்,முருகன்,மாயோன் என்று எத்தனை. இவர்களெல்லாம் யார்.? கோவிலில் உண்டியல் காசுக்கும் சோற்றுக்கும் மணிஅடிக்கும் ஜயர் சொல்லும் எந்த வேதங்கள் இவர்களைப்பற்றி சொல்கின்றன.?

ஆனால் என் பாட்டியும் பூட்டியும் கும்பிட்ட தெய்வங்கள் மனிதராய் பிறந்து தம் செயல்களால் தெய்வமாய் மடிந்த எம் கிராம சாமிகள்தான்.

ஆண்டு முழுவதும் வெட்டவெளியில் மண்குவியலாகக் கிடந்து ஆண்டுக்கு ஒருமுறை உயிர்கொண்டு எழும் கிராம தெய்வங்களை ஆரியர்கூட்டம் இந்து மதம் என்னும் போர்வையில் அழித்தது; சுரண்டல் நிருவனங்களான கோவில்களை மக்கள் வழிபாட்டு தளம் என பொய்க்கூறி வணிக கோவில்களை மக்கள் மனதில் வழிபாட்டு தளங்கள் என வளர்த்துவிட்டது; கூடவே வர்ணாச்சிரமம் எனும் சாதிப்பிளவை அதனோடு சேர்த்து. எங்கள் தெய்வங்கள் சிறு தெய்வம் என அழைக்கப்பட்டு அழிக்கப்பட்டது..

சீமான் சொல்வதும் இதைத்தான்.. 

 

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

உண்மையில் தமிழர்கள் கண்ணால் காணாத எதையும் தெய்வமாக வழிபட்டவர்கள் அல்ல.இப்பொழுது நாம் வழிபடும் இந்துமதமும் இந்துமத சாமிகளும் தமிழர்களுக்கு எந்த சம்பந்தமும் அற்றவை. காலத்துக்கு காலம் தமிழர் நிலத்தின் மீது நிகழ்த்தப்பட்ட படையெடுப்புகளின் மூலம் மதம்மாற்றப்பட்டு கடைசியில் இப்பொழுது இரவல் இந்துமதத்திலும் கிறிஸ்த்தவத்திலும் தொங்கிக்கொண்டு இருந்து கொண்டு மதச்சண்டை பிடிக்கிறோம்.??

உண்மையில் ஒரு ஜநூறு அறுநூறு ஆண்டுகளுக்கு முன் எம் முப்பாட்டான் பூரா புத்தமதத்தில்தான் இருந்திருப்பார்கள்.

கீழடியில் தமிழர்கள் மதவழிபாட்டுக்கான எந்த சான்றுகளும் கிடைக்கவில்லை. 

எங்கள் மூதாதையர்கள் சாமிகளாக கொண்டாடியவர்கள் எல்லாம் தம்முடன் வாழ்ந்து தமக்காக ஊருக்காக மடிந்தவர்களையே வணங்கினார்கள். அப்படி பார்க்கபோனால் அவர்களின் பேரன்கள் எம் தெய்வங்கள் மாவீரர்களாகத்தான் இருக்கமுடியும்.

ஒவ்வொரு கிராமத்தின் வாசலில் நின்று வரவேற்கவும்,நம்மை வழியனுப்பவும் வாழவைப்பதுமாக இருக்கும் கிராம தேவதைகள் என்று அழைக்கப்படும் கிராமங்களின் காப்புத் தெய்வங்களின் மூலம் என்ன?
அவை எப்படி தெய்வங்கள் ஆகின?
அவை எப்போது தெய்வங்கள் ஆக்கப்பட்டன..?

அவை கற்பனையான சாமிகள் அல்ல, கொஞ்ச காலத்திற்கு முன்னால் நம்மிடையே வாழ்ந்தவர்கள்தான் என்பதும், நம்முடைய மூதாதையரான அவர்கள், மரணத்தின் மூலமாக தெய்வமாக ஆக்கப்பட்டவர்கள் என்பதும் அவர்கள் பற்றிய பாட்டிமாரின் செவிவழிக்கதைகளையும் வரலாறையும் கூத்து வடிவங்களையும் ஆராய்ந்தால் புலனாகிறது..

இந்தச் சாமிகள் எல்லோருமே மனிதர்கள், ஊரார் கொடுமையால், வீட்டார் கொடுமையால், அல்லது நாட்டை ஆண்ட அரசனின் கொடுமையால் கொல்லப்பட்டவர்கள்; அல்லது கொடுமையின் காரணமாக தற்கொலை செய்து கொண்டு விட்டவர்கள்;ஊருக்காக உயிரை தியாகம் செய்த மாவீரர்கள்.

நம்மைப் போல கை-கால் உள்ள மனிதர்கள்- கொல்லப்பட்டதால்- இரக்கத்தின் பேரிலும், பயம் அல்லது பக்தியின் காரணமாகவும் கும்பிடப் பட்டவர்கள் என்பது இவர்களைப் பற்றிய கதைகளின் மூலமாக நமக்குத் தெரியவருகிறது.

கிராமத்து வழிபாட்டு வடிவங்கள் கூத்தும் பாட்டும் ஆடலுமாய் இலக்கியத்தோடும் கலைகளோடும் இணைந்திருக்கின்றன. வரலாற்று நிலவியலை மீட்டுருவாக்கம் செய்யும் இவ்வழிபாட்டு முறைகளில் பெண் தெய்வத்தின் ஆதிக்கம் அதீதமாகவே காணப்படுவதுடன், சமுதாய நோக்கில் பார்க்குமிடத்து கூட்டு வழிபாடாகவே அமைந்து இயற்கையில் ஏற்படும் பெருங்கேடுகளை தடுக்கும் அடிமன நம்பிக்கையை ஊட்டுகிறது. ஊர்திரண்ட உணர்வை வெளிப்படுத்தும் இவ்வழிபாடு வருடா வருடம் வந்து சேர்வதுடன், உழைக்குந் தொழிலாளர்களுக்கு ஓய்வையும் தருகிறது. ஒற்றுமை உணர்வின் வெளிப்பாடாக அமையும் இவ்வழிபாடு வாழ்வியலோடு ஒட்டியதொரு நிகழ்ச்சிபோக்கு மாத்திரமின்றி பண்பாட்டுக் கூறின் பக்குவமாகவும் பிரகாசிக்கின்றது. 

அண்ணமார்,நாச்சிமார்,நாச்சியார்,மாரியம்மா,வைரவர்,கருப்பர்,முருகன்,மாயோன் என்று எத்தனை. இவர்களெல்லாம் யார்.? கோவிலில் உண்டியல் காசுக்கும் சோற்றுக்கும் மணிஅடிக்கும் ஜயர் சொல்லும் எந்த வேதங்கள் இவர்களைப்பற்றி சொல்கின்றன.?

ஆனால் என் பாட்டியும் பூட்டியும் கும்பிட்ட தெய்வங்கள் மனிதராய் பிறந்து தம் செயல்களால் தெய்வமாய் மடிந்த எம் கிராம சாமிகள்தான்.

ஆண்டு முழுவதும் வெட்டவெளியில் மண்குவியலாகக் கிடந்து ஆண்டுக்கு ஒருமுறை உயிர்கொண்டு எழும் கிராம தெய்வங்களை ஆரியர்கூட்டம் இந்து மதம் என்னும் போர்வையில் அழித்தது; சுரண்டல் நிருவனங்களான கோவில்களை மக்கள் வழிபாட்டு தளம் என பொய்க்கூறி வணிக கோவில்களை மக்கள் மனதில் வழிபாட்டு தளங்கள் என வளர்த்துவிட்டது; கூடவே வர்ணாச்சிரமம் எனும் சாதிப்பிளவை அதனோடு சேர்த்து. எங்கள் தெய்வங்கள் சிறு தெய்வம் என அழைக்கப்பட்டு அழிக்கப்பட்டது..

சீமான் சொல்வதும் இதைத்தான்.. 

 

கொஞ்சம் கிறீத்துவ போலிகளையும் இழுத்து விட்டிருந்தீர்களானால் எழுத்து சமப்பட்டிருக்கு (balance). 

தவறியபடியால் நீங்களும் இப்போ அல்லேலூயாக் கூட்டத்தின் ஓராளாகவும் சைவ சமயத்தின் எதிரியாகவும் அடையாளம் காணப்படும் அபாயத்திலிருக்கிறீர்கள். 😂😂

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, tulpen said:

கண்மூடித்தனமான  கடவுள் பக்தி உள்ளவர்கள்  பெரும்பாலும் இப்படி மதம் மாறுபவர்கள். 

💯

நான் நேரில் கண்ட உண்மை இது முன்பு கோவிலே கதி என்று திரிந்த எனக்கு தெரிந்த இருவர் இப்போது மதம் மாறியதுடன் யேசுபிரானிடம் வாருங்கள் என்று மற்றவர்களுக்கும் தொல்லை கொடுத்து கொண்டிருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 minutes ago, விளங்க நினைப்பவன் said:

💯

நான் நேரில் கண்ட உண்மை இது முன்பு கோவிலே கதி என்று திரிந்த எனக்கு தெரிந்த இருவர் இப்போது மதம் மாறியதுடன் யேசுபிரானிடம் வாருங்கள் என்று மற்றவர்களுக்கும் தொல்லை கொடுத்து கொண்டிருக்கிறார்கள்.

இதிலை என்ரை சொந்தங்களும் அடக்கம்.ஊரிலை இருக்கேக்கை உள்ள கோயில் குளமெல்லாம் உருண்டு பிரண்டு காவடி எடுத்ததுகள் எல்லாம் இஞ்சை வந்து கோட்டையும் சூட்டையும் போட்டுக்கொண்டு தாங்கள் கும்பிட்ட கடவுளையே சாத்தான் எண்டு சொல்லிக்கொண்டு திரியுதுகள்.
நான் இப்ப உதுகளின்ரை நல்லதுக்கும் இல்லை கெட்டதுக்கும் போறதில்லை.
உதுகளின்ரை சீர்கெட்ட வாழ்க்கையையும் எழுதோணும் போலை கிடக்கு. எழுதினால் எனக்கும் மரியாதை இல்லை எண்டுட்டு இதோடை விடுறன்.😡

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

பெருமாள், 

ஆத்திரக் காறனுக்கு புத்தி மட்டு என்பதன் அர்த்தம் அவன் அவசரப்பட்டு எதையும் புரிந்து கொள்ளாமல், அவசரத்தில்  எடுக்கும் முடிவுகள் குறைபாடாகவும் தெளிவில்லாமலும்  இருக்கும் என்பதனாலாகும்.

தயவுசெய்து எனது எழுத்தை ஆறுதலாக வாசியுங்கள். எழுதியதன் அர்த்தம் புரியும். அதன் பின் பதிலெழுதுங்கள். 🙂 ஆறுதலாக.

கோபமும் இல்லை டென்ஷனும் இல்லை இதே இந்து செய்து இருந்தாலும் என் நிலை அதுதான் . ஆனால் ஆரம்பம் முதலே பொய் சொல்லி மக்களை உள்வாங்குவது தெரிந்தும் அமைதியாக இருந்தம்  ஏனென்றால் வடக்கில் இருந்து வந்த எத்தனையோ முஸ்லீம் மன்னர்கள் பின் வழி வந்த ஒல்லாந்தர் தொடக்கம் ஆங்கிலேயர் வரை  சைவத்தை  அழிக்க  முடியவில்லை தமிழ்நாட்டில் அதே போல்தான் ஈழத்தின் வடகிழக்கிலும் .ஆனால் உங்கடை  ஆட்க்கள்  தமிழரின் உயிருடன் விளையாடுவதை எப்படி அனுமதிப்பது ?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இதிலை என்ரை சொந்தங்களும் அடக்கம்.ஊரிலை இருக்கேக்கை உள்ள கோயில் குளமெல்லாம் உருண்டு பிரண்டு காவடி எடுத்ததுகள் எல்லாம் இஞ்சை வந்து கோட்டையும் சூட்டையும் போட்டுக்கொண்டு தாங்கள் கும்பிட்ட கடவுளையே சாத்தான் எண்டு சொல்லிக்கொண்டு திரியுதுகள்.
நான் இப்ப உதுகளின்ரை நல்லதுக்கும் இல்லை கெட்டதுக்கும் போறதில்லை.
உதுகளின்ரை சீர்கெட்ட வாழ்க்கையையும் எழுதோணும் போலை கிடக்கு. எழுதினால் எனக்கும் மரியாதை இல்லை எண்டுட்டு இதோடை விடுறன்.😡

அவர்களின் பிதாக்கள் உங்களை அவர்களிடம் இருந்து பிரிக்கத்தான் 
கூடியனவரை முயற்சி செய்வார்கள் ... நீங்களாக ஒதுங்குவது அவ்வளவு நல்லதல்ல 
அவர்களிடம் ஒரு பலவீனம் இருக்கிறது அதை காலத்துக்கு ஏற்ப சிலர் பாவித்து கொள்கிறார்கள் 
என்ற உண்மை உங்களுக்கு தெரியும்போது ... அவர்கள் மேல் கோவம் கொள்வதில் தவறு.
எங்களிடமும் நிறைய தவறு இருக்கிறது ..அதுதான் அவர்களை பலவீனமாக ஆக்கி இருக்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, பெருமாள் said:

கோபமும் இல்லை டென்ஷனும் இல்லை இதே இந்து செய்து இருந்தாலும் என் நிலை அதுதான் . ஆனால் ஆரம்பம் முதலே பொய் சொல்லி மக்களை உள்வாங்குவது தெரிந்தும் அமைதியாக இருந்தம்  ஏனென்றால் வடக்கில் இருந்து வந்த எத்தனையோ முஸ்லீம் மன்னர்கள் பின் வழி வந்த ஒல்லாந்தர் தொடக்கம் ஆங்கிலேயர் வரை  சைவத்தை  அழிக்க  முடியவில்லை தமிழ்நாட்டில் அதே போல்தான் ஈழத்தின் வடகிழக்கிலும் .ஆனால் உங்கடை  ஆட்க்கள்  தமிழரின் உயிருடன் விளையாடுவதை எப்படி அனுமதிப்பது ?

நம்புங்கள் பெருமாள்,

சந்தர்ப்பங்கள் கிடைக்கும்போதெல்லாம் சைவக் கோவில்களுக்குச் சென்று (ஆட்களற்ற பொழுதுகளில்) அதன் நடுவிலமர்ந்து அதன் ஆழ்ந்த அமைதியில் திழைப்பவன் நான். ஊரிலும் அப்படித்தான் இங்கும் அப்படித்தான்.  எனது நண்பர்களில் 99% ஆனவர்கள் சைவ சமயத்தவரே. 

பிறப்பில் நான் கிறீத்துவன். ஆனால் எனக்கு சடங்குகளிலோ குறியீடுகளிலோ  நம்பிக்கையில்லை. அதன் அர்த்தம் சமயங்களை நான் வெறுப்பவன் என்றல்ல. 

ஆனால் சமயத்தைச்  சாட்டாக வைத்தோ சாதியை சாட்டாக வைத்தோ மனிதரை இழிவுபடுத்துவதை நான் முற்றாக வெறுக்கிறேன். 

எம்மினத்தின் வீழ்ச்சிக்கும் அழிவுக்கும் காரணம் எம் இனத்தினுள் உள்ள பிளவுகளே. 

அந்தப் பிளவுக்கான அடிப்படைக் காரணங்கள் சாதி, சமயம், பிரதேசவாதம்.

இவை மூன்றும் அநீதியானவை. தீங்கானவை. 

அந்த அடிப்படையிலேயே சக மனிதரை, அதுவும் எம் இனத்திலுள்ளேயே எழும் இழிவுபடுத்துதலை மிகத் தீவிரமாக எதிர்க்க முற்படுகிறேன். 🙂

குறிப்பு; உங்கட ஆட்கள் என்று குறிப்பிட்டிருந்தீர்கள். அது தவறு. நான் எப்போதுமே சுய அடையாளத்தை மெச்சுபவன் . பண்பாட்டு ஊடுருவல் எந்த வடிவிலிருந்தாலும் அதனை வரவேற்பவனல்ல. மற்றும் எனக்கு எந்த கிறீத்துவ சபைகளுடனும் தொடர்புகளில்லை.

👍

  • கருத்துக்கள உறவுகள்
On 7/4/2020 at 22:26, Nathamuni said:

large.1300968688_Screenshot2020-04-07at22_23_38.png.a7953481ef0f9ee3fac64ff60061e065.png

இப்ப மகிந்தவே பெரும் கடுப்பில் இருக்கிறார்'

இவர் திருப்பி போனால். ஸ்பெஷல் வெள்ளை வான் தான் வரும்.

 

 

வேறு என்ன எதிர்பார்க்கமுடியும்!


கர்த்தரின் கிருபையாலும், ஊழியக்காரர்களினதும் விசுவாசிகளினதும் ஜெபத்தினாலும் மீண்டும் உயிர்த்து ஒன்லைனில் தோன்றி பாவப்பட்டவர்களை இரட்சிக்க வந்திருக்கின்றார்.


தங்கள் உயிரையும் மதியாது உயிர்காக்க எடுத்துக்கொண்ட சத்தியப்பிரமாணத்திற்காக இவரது உயிரைக் காப்பாற்றிய சுவிஸ் மருத்துவர்களுக்கும் நவீன மருத்துவத்திற்கும் ஒரு சிறு நன்றிகூட இவரிடமிருந்து வராது என்று தெரியும். அப்படிச் சொன்னால் பிழைப்பு நாறிவிடும் அல்லவா!

யாழ்ப்பாணத்தில் இந்தப் போதகரது ஆராதனையில் கலந்துகொண்டதால்தான் கொரோனா தொற்று அங்கு பரவியது என்பது நிரூபணமாகியுள்ளது. கொரோனாத் தொற்றுக்கு அறியாமலேயே காரணமாக இருந்தாலும் ஒரு சிறு மன்னிப்பாவது கேட்டிருக்கலாம். ஆனால் கேட்கமாட்டார்😡

இந்தப் புலுடாப் போதகரின் பிரசங்கத்தைக் கேட்கும் ஊழியக்காரர்களுக்கும், விசுவாசிகளுக்கும் அவரைக் கேள்விக்குட்படுத்தும் அளவிற்கு அறிவார்ந்த சிந்தனை இல்லாமல் மூளை சலவை செய்யப்பட்டிருக்கும் அல்லது மழுங்கியிருக்கும்🙁

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, கிருபன் said:

 

 

வேறு என்ன எதிர்பார்க்கமுடியும்!


கர்த்தரின் கிருபையாலும், ஊழியக்காரர்களினதும் விசுவாசிகளினதும் ஜெபத்தினாலும் மீண்டும் உயிர்த்து ஒன்லைனில் தோன்றி பாவப்பட்டவர்களை இரட்சிக்க வந்திருக்கின்றார்.


தங்கள் உயிரையும் மதியாது உயிர்காக்க எடுத்துக்கொண்ட சத்தியப்பிரமாணத்திற்காக இவரது உயிரைக் காப்பாற்றிய சுவிஸ் மருத்துவர்களுக்கும் நவீன மருத்துவத்திற்கும் ஒரு சிறு நன்றிகூட இவரிடமிருந்து வராது என்று தெரியும். அப்படிச் சொன்னால் பிழைப்பு நாறிவிடும் அல்லவா!

யாழ்ப்பாணத்தில் இந்தப் போதகரது ஆராதனையில் கலந்துகொண்டதால்தான் கொரோனா தொற்று அங்கு பரவியது என்பது நிரூபணமாகியுள்ளது. கொரோனாத் தொற்றுக்கு அறியாமலேயே காரணமாக இருந்தாலும் ஒரு சிறு மன்னிப்பாவது கேட்டிருக்கலாம். ஆனால் கேட்கமாட்டார்😡

இந்தப் புலுடாப் போதகரின் பிரசங்கத்தைக் கேட்கும் ஊழியக்காரர்களுக்கும், விசுவாசிகளுக்கும் அவரைக் கேள்விக்குட்படுத்தும் அளவிற்கு அறிவார்ந்த சிந்தனை இல்லாமல் மூளை சலவை செய்யப்பட்டிருக்கும் அல்லது மழுங்கியிருக்கும்🙁

ஆசுப்பத்திரியில் கிடக்கேக்க விடியோ எடுத்திருக்கணும்

அவர்களின் அறிவு அவ்வளவு தான்

  • கருத்துக்கள உறவுகள்

இங்கை சனம் நல்ல கடுப்பில இருக்கினம் இவரில்.

  • கருத்துக்கள உறவுகள்

உயிர் தப்பியது வைத்தியர்கள் & தாதிகளினால்

 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

 

 

வேறு என்ன எதிர்பார்க்கமுடியும்!


கர்த்தரின் கிருபையாலும், ஊழியக்காரர்களினதும் விசுவாசிகளினதும் ஜெபத்தினாலும் மீண்டும் உயிர்த்து ஒன்லைனில் தோன்றி பாவப்பட்டவர்களை இரட்சிக்க வந்திருக்கின்றார்.


தங்கள் உயிரையும் மதியாது உயிர்காக்க எடுத்துக்கொண்ட சத்தியப்பிரமாணத்திற்காக இவரது உயிரைக் காப்பாற்றிய சுவிஸ் மருத்துவர்களுக்கும் நவீன மருத்துவத்திற்கும் ஒரு சிறு நன்றிகூட இவரிடமிருந்து வராது என்று தெரியும். அப்படிச் சொன்னால் பிழைப்பு நாறிவிடும் அல்லவா!

யாழ்ப்பாணத்தில் இந்தப் போதகரது ஆராதனையில் கலந்துகொண்டதால்தான் கொரோனா தொற்று அங்கு பரவியது என்பது நிரூபணமாகியுள்ளது. கொரோனாத் தொற்றுக்கு அறியாமலேயே காரணமாக இருந்தாலும் ஒரு சிறு மன்னிப்பாவது கேட்டிருக்கலாம். ஆனால் கேட்கமாட்டார்😡

இந்தப் புலுடாப் போதகரின் பிரசங்கத்தைக் கேட்கும் ஊழியக்காரர்களுக்கும், விசுவாசிகளுக்கும் அவரைக் கேள்விக்குட்படுத்தும் அளவிற்கு அறிவார்ந்த சிந்தனை இல்லாமல் மூளை சலவை செய்யப்பட்டிருக்கும் அல்லது மழுங்கியிருக்கும்🙁

நன்றி, மன்னிப்பு, அறிவார்ந்த சிந்தனை இவைகள் எம் இனத்திற்கு மிகவு அரிதான விடயங்கள்.🤥

இல்லாத ஒன்றை நீங்கள் தேடினால் அது யாரின் பிழை ? 😀

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.