Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்.உடுவிலில் வயோதிப தம்பதிகளை சித்திரவதை செய்த கொள்ளை கும்பல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.உடுவிலில் வயோதிப தம்பதிகளை சித்திரவதை செய்த கொள்ளை கும்பல்

யாழ்.உடுவில் அம்பலவாணர் வீதியில் வீடொன்றுக்குள் புகுந்த கொள்ளைக் கும்பல், வயோதிபத் தம்பதியைத் தாக்கிவிட்டு சுமார் 15 பவுண் தங்க நகைகள் மற்றும் 5 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளது.

 

வயோதிபத் தம்பதியைக் கட்டிவைத்துவிட்டு குடும்பத் தலைவரின் தலையில் கூரிய ஆயுதத்தால் குத்தி கொள்ளைக் கும்பல் சித்திரவதை செய்துள்ளது.

அதனால் படுகாயமடைந்த குடும்பத்தலைவர், தெல்லிப்பழை வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. வயோதிபத் தம்பதியின் 3 பிள்ளைகள் வெளிநாட்டில் வசிக்கின்றனர்.

வீட்டுக்குள் நுழைந்த 3 பேர் கொண்ட கொள்ளைக் கும்பல், எங்களைக் கட்டிவைத்தது. கணவரின் தலையில் கூரிய ஆயுதத்தால் குத்தியது. எனது கன்னத்தில் அறைந்தது. அதனால் நாம் நிலைகுலைந்தோம்.

சுமார் 3 மணிநேரம் சல்லடை போட்டு தேடுதல் நடத்தி, நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையிட்டு கும்பல் தப்பித்தது என்று குடும்பப் பெண் விசாரணையில் தெரிவித்தார்.

கொள்ளையர்கள் மூவரும் 20 தொடக்கம் 24 வயதுக்குட்பட்டவர்களா தான். அவர்களில் ஒருவன் கைகளில் கையுறை போட்டிருந்தான்.

வீட்டில் பிள்ளைகளின் நகைகளுடன் 15 பவுண் நகைகள் இருந்தன. 5 இலட்சம் ரூபா பணமும் இருந்தது. அவை கொள்ளையிடப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். மோப்ப நாய் அழைத்துவரப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது.

 

http://thinakkural.lk/article/40416

  • கருத்துக்கள உறவுகள்

5 இலட்சம் ரூபா பணமும் இருந்தது. ???? 🤔

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

5 இலட்சம் ரூபா பணமும் இருந்தது. ???? 🤔

நகையுமாம்

  • கருத்துக்கள உறவுகள்

அம்மை அப்பனை நீங்கள் இருக்கும் நாடுகளுக்கு  எடுத்தாவது விடுங்களடா ஊரில் தவிக்க விடாதீர்கள் கள்ளனுகள் ஒரு பக்கம் கண்ணூல எண்ணெய ஊத்திட்டு திரியுறானுகள் வெளிநாட்டு சனத்துகள்ட வீட்டில்

காசு நகைகள் வீட்டிலா வைத்திருந்தார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

5 இலட்சம் ரூபா பணமும் இருந்தது. ???? 🤔

 

54 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

காசு நகைகள் வீட்டிலா வைத்திருந்தார்கள் 

உடுவில் பகுதியில்.... மரக்கறி தோட்டம் செய்பவர்கள் அதிகம் இருக்கின்றார்கள்.

அவர்கள் தோட்டத்திற்கு தேவையான.. பசளை போன்ற   பொருட்களை அடுத்த நாள் வாங்க, 
வங்கியில் இருந்த பணத்தை எடுத்து...  வீட்டில் வைத்தோ...

அல்லது... விளைந்த பொருட்களை, விற்று வந்த பணத்தை... வீட்டில் வைத்திருந்ததை...
யாராவது... அவதானித்து, இந்தப் பணத்தை திருடியிருக்கலாம் என நினைக்கின்றேன். 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

கள்ளனுகள் ஒரு பக்கம் கண்ணூல எண்ணெய ஊத்திட்டு திரியுறானுகள்

'அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி'

பிரபாகரன் தமிழீழத்தில் அரசுசெய்த காாலத்தில் இந்தத் திருடனுகள் எல்லாம் எங்கேபோய் இருந்தார்கள்.???? 

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, தமிழ் சிறி said:

உடுவில் பகுதியில்.... மரக்கறி தோட்டம் செய்பவர்கள் அதிகம் இருக்கின்றார்கள்.

அவர்கள் தோட்டத்திற்கு தேவையான.. பசளை போன்ற   பொருட்களை அடுத்த நாள் வாங்க, 
வங்கியில் இருந்த பணத்தை எடுத்து...  வீட்டில் வைத்தோ...

அல்லது... விளைந்த பொருட்களை, விற்று வந்த பணத்தை... வீட்டில் வைத்திருந்ததை...
யாராவது... அவதானித்து, இந்தப் பணத்தை திருடியிருக்கலாம் என நினைக்கின்றேன். 

சரியாகச் சொன்னீர்கள். அதே நேரம் வங்கியில் காசுவைத்திருப்பது மோட்டுதனம்  சிங்கள அரசு சுருட்டி விடும் என்று பயமுறத்தும் தமிழர்கள் சிலரின் பேச்சை நம்பி அவர்கள் வீட்டில் பணத்தை வைத்திருந்தால் வேதனையானது.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

உடுவில் பகுதியில்.... மரக்கறி தோட்டம் செய்பவர்கள் அதிகம் இருக்கின்றார்கள்.

அவர்கள் தோட்டத்திற்கு தேவையான.. பசளை போன்ற   பொருட்களை அடுத்த நாள் வாங்க, 
வங்கியில் இருந்த பணத்தை எடுத்து...  வீட்டில் வைத்தோ...

அல்லது... விளைந்த பொருட்களை, விற்று வந்த பணத்தை... வீட்டில் வைத்திருந்ததை...
யாராவது... அவதானித்து, இந்தப் பணத்தை திருடியிருக்கலாம் என நினைக்கின்றேன். 

உடனடி தேவைக்கு பணம் வங்கிலிருந்து அட்டைகளில் இருந்து எடுப்பது நல்லம் ஆனால் வைத்திருப்பது இப்படியான நிகழ்வுகளுக்கு வழிசமைத்துவிடும்

 

7 hours ago, Paanch said:

'அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி'

பிரபாகரன் தமிழீழத்தில் அரசுசெய்த காாலத்தில் இந்தத் திருடனுகள் எல்லாம் எங்கேபோய் இருந்தார்கள்.???? 

திருடினார்கள்  ஆனால் தெரியவரும் போது தண்டனை வழங்கப்பட்டது தற்போது கைது நீதிமன்றம் வெளியில் எடுக்க சட்டதரணிகள் இருக்கிறார்கள்  அவ்வளவுதான்

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தனிக்காட்டு ராஜா said:

உடனடி தேவைக்கு பணம் வங்கிலிருந்து அட்டைகளில் இருந்து எடுப்பது நல்லம் ஆனால் வைத்திருப்பது இப்படியான நிகழ்வுகளுக்கு வழிசமைத்துவிடும்

 

திருடினார்கள்  ஆனால் தெரியவரும் போது தண்டனை வழங்கப்பட்டது தற்போது கைது நீதிமன்றம் வெளியில் எடுக்க சட்டதரணிகள் இருக்கிறார்கள்  அவ்வளவுதான்

திருட்டில் பாதி சட்டத்தரணிக்கு. துணிந்து அடுத்த தடவையும் திருடுவான்.

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அம்மை அப்பனை நீங்கள் இருக்கும் நாடுகளுக்கு  எடுத்தாவது விடுங்களடா ஊரில் தவிக்க விடாதீர்கள் கள்ளனுகள் ஒரு பக்கம் கண்ணூல எண்ணெய ஊத்திட்டு திரியுறானுகள் வெளிநாட்டு சனத்துகள்ட வீட்டில்

வயோதிப பெற்றோருக்கு வெளி நாடுகளிலும் திருடர்களிடமிருந்து பாதுகாப்பில்லை. லண்டனில் வசிக்கும் எனது நண்பரின் தாயார் வீட்டில் வேலைக்கு வந்த தமிழ் பெண் வயோதிப தாயின் வங்கியில் இருந்த சேமிப்பு பணத்தையும் வீட்டில் இருந்த நகைகளையும் கொஞ்சம் கொஞ்சமாக கொள்ளையடித்து ஊரில் வீடுகட்டிவிட்டாள். பொலிஸில் முறையிட்டும் ஒன்றும் நடக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, vanangaamudi said:

 லண்டனில் வசிக்கும் எனது நண்பரின் தாயார் வீட்டில் வேலைக்கு வந்த தமிழ் பெண் வயோதிப தாயின் வங்கியில் இருந்த சேமிப்பு பணத்தையும் வீட்டில் இருந்த நகைகளையும் கொஞ்சம் கொஞ்சமாக கொள்ளையடித்து ஊரில் வீடுகட்டிவிட்டாள். பொலிஸில் முறையிட்டும் ஒன்றும் நடக்கவில்லை.

வயோதிப தாய்க்கு அவ்வளவு பணம் அனுப்பினார்களா அவரரோட பிள்ளைகள்?

இல்ல , ஊரில் ஒரு வீடு கட்டுவதென்றால் குறைஞ்சது ஒரு கோடியாவது  வேண்டுமே, அதனால் கேட்டேன்.

12 minutes ago, valavan said:

இல்ல , ஊரில் ஒரு வீடு கட்டுவதென்றால் குறைஞ்சது ஒரு கோடியாவது  வேண்டுமே, அதனால் கேட்டேன்.

20 இல் இருந்து 40 லட்சம் போதுமே!

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Rajesh said:

20 இல் இருந்து 40 லட்சம் போதுமே!

ஒண்டும் விளங்கெல்லை  ராஜேஸ், அப்பிடி எண்டால்?

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, valavan said:

 லண்டனில் வசிக்கும் எனது நண்பரின் தாயார் வீட்டில் வேலைக்கு வந்த தமிழ் பெண் வயோதிப தாயின் வங்கியில் இருந்த சேமிப்பு பணத்தையும் வீட்டில் இருந்த நகைகளையும் கொஞ்சம் கொஞ்சமாக கொள்ளையடித்து ஊரில் வீடுகட்டிவிட்டாள். பொலிஸில் முறையிட்டும் ஒன்றும் நடக்கவில்லை.

இவரின் நண்பரின் தாயார் லண்டனில்தான் இருக்கிறார். என்று சொல்கிறார் என்று நினைக்கிறன். அவருக்கு வேலைக்கு வந்த பெண் லண்டனில் கொள்ளை அடித்த பணத்தை ஊருக்கு அனுப்பி அங்கே வீடு கட்டிவிட்டார் என்றே நான் விளங்கிக் கொள்கிறேன். அப்படித்தானே முடியாரே?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, vanangaamudi said:

வயோதிப பெற்றோருக்கு வெளி நாடுகளிலும் திருடர்களிடமிருந்து பாதுகாப்பில்லை. லண்டனில் வசிக்கும் எனது நண்பரின் தாயார் வீட்டில் வேலைக்கு வந்த தமிழ் பெண் வயோதிப தாயின் வங்கியில் இருந்த சேமிப்பு பணத்தையும் வீட்டில் இருந்த நகைகளையும் கொஞ்சம் கொஞ்சமாக கொள்ளையடித்து ஊரில் வீடுகட்டிவிட்டாள். பொலிஸில் முறையிட்டும் ஒன்றும் நடக்கவில்லை.

 

18 minutes ago, satan said:

இவரின் நண்பரின் தாயார் லண்டனில்தான் இருக்கிறார். என்று சொல்கிறார் என்று நினைக்கிறன். அவருக்கு வேலைக்கு வந்த பெண் லண்டனில் கொள்ளை அடித்த பணத்தை ஊருக்கு அனுப்பி அங்கே வீடு கட்டிவிட்டார் என்றே நான் விளங்கிக் கொள்கிறேன். அப்படித்தானே முடியாரே?

நண்பனின் தாயார் ஊரில இருக்கின்றார், அவரைப்பார்க்க வந்த வேலைகாரி காசடித்து வீடுகட்டிவிட்டார் என்றே நான் நினைக்கின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தாயாரின் வீட்டுக்கு தனது கஷ்டத்தின் விளைவாக வேலைக்கு வந்த ஒரு பெண் இந்தத் தாயாரின் பணத்தையும் பொன்னையும் செலவு செய்து தான் கௌரவமாக வாழ்வதற்கு ஒரு வீடு கட்டிக் கொண்டார் போல் இருக்கிறது.....!   👍

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, vanangaamudi said:

வயோதிப பெற்றோருக்கு வெளி நாடுகளிலும் திருடர்களிடமிருந்து பாதுகாப்பில்லை. லண்டனில் வசிக்கும் எனது நண்பரின் தாயார் வீட்டில் வேலைக்கு வந்த தமிழ் பெண் வயோதிப தாயின் வங்கியில் இருந்த சேமிப்பு பணத்தையும் வீட்டில் இருந்த நகைகளையும் கொஞ்சம் கொஞ்சமாக கொள்ளையடித்து ஊரில் வீடுகட்டிவிட்டாள். பொலிஸில் முறையிட்டும் ஒன்றும் நடக்கவில்லை.

இது போன்ற சம்பவம் ஒன்று எனது அம்மம்மாவுக்கு இலங்கையில் நடந்தது. 🤥

அம்மம்மாவுக்கு 95 வயது. அவரைக் நீராட்டுவதற்கு ஒன்றுவிட்ட ஒவ்வொரு நாளும் ஒரு பெண் வருவார். ஒருநாள் அவரை நீராட்டியபின் சென்றவர் திரும்பி வரவேயில்லை. ஏன் வரவில்லையென்று கேட்பதற்கு அவருக்கு அழைப்பை ஏற்படுத்தினால் பதிலில்லை. 🤔

சந்தேகத்தில் அம்மம்மாவின் அலுமாரியை கிளறியதில்,  அவரின் நல்ல நிறை கூடிய பழைய காலத்து  சங்கிலி மிஸ்ஸிங் 😂

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, உடையார் said:

 

நண்பனின் தாயார் ஊரில இருக்கின்றார், அவரைப்பார்க்க வந்த வேலைகாரி காசடித்து வீடுகட்டிவிட்டார் என்றே நான் நினைக்கின்றேன்

அப்படியென்றால் "வயோதிப பெற்றோருக்கு வெளி நாடுகளிலும் திருடர்களிடமிருந்து பாதுகாப்பில்லை" என்ற வசனம் தேவையில்லையே??

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமா கொள்ளைக்காரர்கள் பிடிபடவில்லை ?

 

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, satan said:

திருட்டில் பாதி சட்டத்தரணிக்கு. துணிந்து அடுத்த தடவையும் திருடுவான்.

 

On 5/5/2020 at 11:18, Paanch said:

'அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி'

பிரபாகரன் தமிழீழத்தில் அரசுசெய்த காாலத்தில் இந்தத் திருடனுகள் எல்லாம் எங்கேபோய் இருந்தார்கள்.???? 

பிரபாகரன் தமிழீழத்தில் ஆட்சியில் இருக்கும் போது இந்த திருடனுகள் எல்லாம் பாலர் வகுப்பு படித்து கொண்டிருந்தார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, tulpen said:

பிரபாகரன் தமிழீழத்தில் ஆட்சியில் இருக்கும் போது இந்த திருடனுகள் எல்லாம் பாலர் வகுப்பு படித்து கொண்டிருந்தார்கள். 

ஈழம் என்று கிளம்பின பாதிக்கூட்டம் கடைசியில் தம் இனத்திலே கொள்ளையடிக்கவும்  திருடவும் பழகின பழக்கம் இன்னும் வாரிசுகளை விட்டு போகவில்லை .

Edited by பெருமாள்

12 minutes ago, பெருமாள் said:

ஈழம் என்று கிளம்பின பாதிக்கூட்டம் கடைசியில் தம் இனத்திலே கொள்ளையடிக்கவும்  திருடவும் பழகின பழக்கம் இன்னும் வாரிசுகளை விட்டு போகவில்லை .

அந்த கூட்டத்தின் காட்டில தானே இப்ப மழை பெய்யுது. என்ன செய்ய.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
44 minutes ago, பெருமாள் said:

ஈழம் என்று கிளம்பின பாதிக்கூட்டம் கடைசியில் தம் இனத்திலே கொள்ளையடிக்கவும்  திருடவும் பழகின பழக்கம் இன்னும் வாரிசுகளை விட்டு போகவில்லை .

வந்து.......அரைகுறையிலை விட்டுட்டு ஓடின கூட்டங்களிலாலைதான் அப்பவும் பிரச்சனை இப்பவும் பிரச்சனை.
இதாலைதான் சில சமயங்களில் சிங்களம் நல்லவர்களாகவும் புத்திசாலிகளாகவும் தெரிகின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
On 5/5/2020 at 11:18, Paanch said:

'அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி'

பிரபாகரன் தமிழீழத்தில் அரசுசெய்த காாலத்தில் இந்தத் திருடனுகள் எல்லாம் எங்கேபோய் இருந்தார்கள்.???? 

த‌லைவ‌ர் வாழ்ந்த‌ கால‌த்தில் இப்ப‌டியான‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் ந‌ட‌ந்து நான் கேள்வி ப‌ட்ட‌து இல்லை , 

எங்க‌ட‌ ஊர் கோயிலுக்கு த‌ண்ணீர் மோட்ட‌ர‌ மாமா பூட்ட‌ இர‌வோடு இர‌வாய் அந்த‌ மோட்ட‌ர‌ க‌ள‌வு எடுத்துட்டு போட்டாங்க‌ , இப்ப‌ கோயிலுக்கு புது மோட்ட‌ர் பூட்டி இருக்கு /

2009ம் ஆண்டுக்கு பிற‌க்கு த‌மிழீழ‌ ம‌ண்ணில் ப‌ல‌ திருட‌ர்க‌ள் உருவாகி விட்டார்க‌ள் /

1996ம் ஆண்டுக்கு பிற‌க்கு பிற‌ந்த‌  ப‌ஸ்ச‌ங்க‌ தான் பெரிய‌ ர‌வுடிக‌ள் ஊரில் , 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.