Jump to content

நேரத்தையும், உழைப்பையும் சுரண்டும் "கிச்சன்" என்னும் வீட்டுச் சிறை.! பெண்களை மீட்பது எப்படி.?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நேரத்தையும், உழைப்பையும் சுரண்டும் "கிச்சன்" என்னும் வீட்டுச் சிறை.! பெண்களை மீட்பது எப்படி.?

1587566505751.jpg

சென்னை: "உன்னோட கைப்பக்குவம் மாதிரி யாருக்கும் வராது.." இந்த ஒற்றை வார்த்தையை நம்பி இந்திய பெண்களில் பெரும்பான்மை விழுக்காடு சமையல்கட்டில் முடங்கிப் போய்விட்டது.

ஆண்களுக்கு அது ஒரு பெரிய விஷயமாக தெரிவதே கிடையாது.. ஆனால் உன்னிப்பாக பார்த்தால் மிகப்பெரிய மனித உழைப்பை நாம் சுரண்டி கொண்டிருக்கிறோம்.. மிகப்பெரிய மனித உரிமை மீறலை, நமது இல்லங்களில் நாம் சத்தமேயில்லாமல், நடத்திக் கொண்டிருக்கிறோம்.

ஒரு நேர சமையல்.. இருநாட்கள் சாப்பாடு என்பதெல்லாம் நம்ம ஊரில் கிடையாது. காலையில் டிபன், மதியம் சாப்பாடு, இரவு டிபன் என எந்த நேரமும் சமையலறையில் சிறை வைத்து பழக்கிவிட்டோம் பெண்களை.

mqdefault.jpg

கொஞ்சம் வானம் இருட்டி விட்டால்.. சூடாக பஜ்ஜியை கொடு, வடையை போடு என்ற "செல்ல சுரண்டல்கள்" தனிக்கதை.

சமையல் செய்வதோடு முடியப்போவது கிடையாது பணி. சாப்பிட்ட பாத்திரங்களை கழுவி வைப்பதில் ஆரம்பித்து, சிந்தியிருக்கும் பருக்கைகளை எடுத்து, சாப்பிட்ட இடத்தை துடைத்து வைப்பது என்று.. அது சார்ந்த விஷயங்கள் நீண்டுகொண்டே செல்லும்.

சற்று உன்னிப்பாக கவனித்து பாருங்கள்.. ஞாயிற்றுக்கிழமைகள் விடுமுறையை, மகிழ்ச்சியாக, அனுபவிக்க படைக்கப்பட்டவை.. பண்டிகை தினங்கள், ஒரே மாதிரியான வாழ்க்கையிலிருந்து விடுபட்டு உற்சாகமடைய உருவாக்கப்பட்டவை. ஆனால் இது ஆண்களுக்கு மட்டுமே..

woman_multitask.jpg

நாம் குறிப்பிடும் இந்த தினங்களில்தான் பெண்களுக்கு வழக்கத்தை விடவும் அதிக நேரம் கிச்சனில், முடங்கிக்கிடக்க வழி ஏற்படுத்தி கொடுக்கிறோம். மற்ற நாட்களில் தோசைக்கு சட்னி மட்டுமே என்றால், விடுமுறை தினங்களில் அத்தோடு சேர்த்து, வடை, சாம்பார் என்று பல சுவை கேட்கிறது நமது நாவு.

தீபாவளியில் ஆண்கள் பட்டாசு வெடித்து உற்சாகமாக இருப்பார்கள், பெண்கள் பலகாரம் சுட்டு அடுப்படியில் இருப்பார்கள். பொங்கல் 3 நாள் விழா என்றால் அவர்களுக்கு 3 நாளும் கூடுதல் வேலை என்று அர்த்தம். இப்படி எந்த ஒரு பண்டிகை அல்லது உற்சாக நாள் என்றாலும் அதை சமையலோடும்.. சமையலை பெண்களோடும் பழக்கப்படுத்தி வைத்திருக்கிறது நமது சமூகம்.

"ரசித்துதானே இதைச் செய்கிறார்கள் பெண்கள்.." என்று நீங்கள் கேட்கலாம்.. பல தலைமுறைகளாக பழக்கப்படுத்தி வைத்ததால் வேறு வழியில்லாமல் போலியாக ரசிக்க கற்றுக் கொண்டு விட்டனர் என்பது தான் எதார்த்தம். "உன்னோட கைப்பக்குவம் மாதிரி யாருக்கும் வராது.." என்பது போன்ற வார்த்தைகள் பெண்களை அடுப்பங்கறையில் கட்டி வைக்க ஆண்கள் பயன்படுத்தும் மாயக்கயிறுதானே!

"சமையலறை பெண்களுக்கு மட்டுமே" என்ற கற்பிதத்தை உடைப்பதுதான் இந்த கட்டுடைப்பை சாத்தியப்படுத்தும் என்கிறார்கள் சமூகவியல் நிபுணர்கள். ஆண்களும் சமையலறையில் பாதி வேலையை பகிர்ந்து கொள்ளும்போது அது பெண்களின் பழுவை குறைக்கும், ஆண்களும் அந்த வேலையின் கஷ்டம் புரிந்து மாற்று வழியை யோசிக்க தொடங்குவார்கள். சொல்லப்போனால் காலப்போக்கில் வீட்டில் சமையலறை என்ற ஒன்று இல்லாமல் போகவும் வழியேற்படக்கூடும்.

இந்த "கட்டுடைப்பு" போன தலைமுறை வரை யோசித்துப் பார்க்க முடியாதது. ஆனால் இந்த தலைமுறை அப்படியில்லை. பெண்களும் வேலைக்குச் செல்ல ஆரம்பித்ததிலிருந்து இந்த மாற்றம் உருவாகி விட்டது. இப்போது 40 வயதுக்கு மேலே உள்ள எந்த ஆண்களாவது வீட்டு வேலையை மனைவியோடு சேர்ந்து செய்து பார்த்திருக்கிறீர்களா? ஆனால் இப்போது வளரும் இளம் தலைமுறையினர் தனது சகோதரியுடன் வீட்டு வேலையைப் பகிர்ந்து கொள்ள பழக்கப்படுத்தப்படுகிறார்கள். இந்த தலைமுறையினருக்கு திருமணம் ஆகும்போது தங்களது வாழ்க்கைத் துணையிடம், "இது பெண்களுக்கான வேலை" என்று சொல்வதற்கு நாக்கு எழாது.

நகர்ப்புற பகுதிகளில் இந்த மாற்றம் வேகமாக நடந்து வருகிறது. கிராமங்களில் கோவில் திருவிழாவிற்கு செல்லும் போது அங்கும் வீடுகளில், பெண்கள் சமையல் செய்து கொண்டிருந்த காலம் மாறிவிட்டது. மூன்று நாட்கள் திருவிழா என்றால் மொத்தமாக சமையல் செய்து, தினமும் 3 வேளைகளிலும் கோவில் அருகே பந்தி பரிமாறப்படுவதை பார்க்க முடிகிறது. திருவிழா நடைபெறும் 3 நாட்களில் பெண்கள் முழு விடுதலையடைவதை அவர்கள் முகத்தை பார்த்தே புரிந்து கொள்ள முடியும்.

இந்த மறுமலர்ச்சியை வாழ்க்கை முழுக்க பார்க்க வேண்டும் என்று ஆண்கள் நினைக்க வேண்டாமா? நமது சக பாலினத்தை சேர்ந்த ஒரு ஜீவன் சமையலறைக்குள் முடக்கப்பட்டு அதுவே அவர்களது வாழ்க்கை என்று முடிவு கட்டிவிட்டது நவீன தீண்டாமை என்று உணர வேண்டாமா?

இப்போதுள்ள தலைமுறையின் மனதில் இந்த கேள்விகள் எழ ஆரம்பித்துள்ளன. எனவேதான், சமயலறையிலிருந்து பெண்களை விடுதலை செய்யவேண்டும் என்ற வாதங்களும் அதிகரித்துவிட்டன.

202008201652576459_Chennai-Swiggy-delive

சமையலறையிலிருந்து பெண்களை விடுவிக்க இப்போது உள்ள ஒரே ஆப்ஷன், ரெஸ்டாரண்ட் செல்வதோ, அல்லது ஸ்விகி போன்ற ஆன்லைன் தளங்கள் மூலமாக  உணவை வீட்டுக்கே வர வைத்து சாப்பிடுவதோதான். ஆனால் தினமும் இதைச் செய்ய முடியுமா? உணவக விலையை ஒப்பிட்டால் வீட்டில் குறைவான செலவில் அதிக உணவு சாப்பிட முடியும் என்ற இந்திய மனநிலையும், யதார்த்தமும் வந்து எட்டிப் பார்க்குமே..? இங்குதான் வருகிறது கம்யூனிட்டி கிச்சன்.

குறைந்தபட்சம் அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து இதை ஆரம்பிக்கலாம். அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் ஒரே இடத்தில் சமையல்காரர்கள் வைத்து சமைக்கலாம். ஒரு நாளைக்கு 500 ரூபாய் செலவில் நான்கு பேர் கொண்ட குடும்பம் 3 நேரம் சாப்பிட முடியும் என்ற நிலை உருவானால், வீடுகளில் கிச்சன் இருக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விடுமே என்கிறார்கள் உணவுத் துறை சார்ந்த நிபுணர்கள்.

இதே நடைமுறையை, பிறகு ஒரு ஏரியா முழுக்க விரிவாக்கம் செய்யலாம். பிறகு அதை ஊர் முழுக்க விரிவாக்கம் செய்ய முடியும். இப்படித்தான் பெண்களுக்கு சுதந்திரக் காற்றை சுவாசிக்க வழி ஏற்படுத்திக் கொடுக்க முடியும். தினந்தோறும் ஒவ்வொரு வீட்டிலும் மனித உழைப்பு பல மணி நேரம் வீணாவதை தவிர்க்க முடியும்.

சேலத்தில் உள்ள குகை என்ற பகுதியில் கிட்டத்தட்ட இந்த ஐடியா செயல்படுகிறது. கொலுசு உள்ளிட்ட வெள்ளி ஆபரணங்கள் செய்யும் தொழில்கள் அந்த பகுதியில் பிரபலம். எனவே அங்கே பணியாற்றும் தொழிலாளர்கள் சமையல் செய்து அதை கொண்டு வருவதற்கான நேரம் கிடைப்பதில்லை. சோறு பொங்கி எடுத்து வந்து விட்டால் போதும், வகைவகையான குழம்புகளை விற்பனை செய்வதற்கு சுமார் 400க்கும் மேற்பட்ட கடைகள் அங்கே இருக்கின்றன. குழம்பை வாங்கி சாப்பாட்டுடன் கலந்து சாப்பிட்டுக் கொள்ளலாம். இதனால் ஏகப்பட்ட நேரம் மிச்சம் ஆகிறது என்கிறார்கள் அந்த பகுதி மக்களும், தொழிலாளர்களும்.

பெண்கள்தான் குழம்பு வைக்க வேண்டும் என்ற வாதம் அங்கே அடிபட்டு போவதற்கு காரணம், அதற்கான தேவை எழுந்துள்ளது என்பது தான். தேவை ஏற்படும் போது பெண்களுக்கு விடுதலை தரும் ஆண்கள், அவர்களின் மனது மற்றும் உடல் ஆரோக்கியத்தையும் மனதில் வைத்து கம்யூனிட்டி கிச்சன் கலாச்சாரத்துக்கு மாற வேண்டியது காலத்தின் கட்டாயம்.

ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் பெண்கள் மூன்று வேளைகளிலும் வீட்டில் சமையல் செய்து கொண்டு இருப்பது கிடையாது தெற்காசிய நாடுகள் பலவற்றிலும் இந்த கலாசாரம் வந்துவிட்டது ஆனால் நமது நாட்டில் தான் உணவு தயாரிப்பதை பெண்களோடு தொடர்புபடுத்தி மனரீதியாக அடிமைப்பட்டு கிடக்கிறோம்.

நூடுல்ஸ் போன்ற உணவு வகைகளின் சமையல் நேரத்தை கணிசமாக குறைக்கின்றன. ஆனால் அது ஆரோக்கியமற்றது என்று நமக்கு நாமே குற்றம் சொல்லிக் கொண்டு பழையபடி அரிசி சோறு தான் வேண்டும் என்று அடம் பிடிக்கிறோம். கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள அரசி சோறு, நமது முன்னோர்களுக்கு அவசியம். அதற்கான உடல் உழைப்பு அவர்களிடமிருந்தது. வயலில் வேலை செய்வோருக்கு சக்தி இழப்பை ஈடு செய்ய அவை பயன்பட்டன. கம்ப்யூட்டரில் வேலை பார்க்கும் நாம் நமது உணவு கலாச்சாரத்தை மாற்றிக் கொள்ள வேண்டாமா? பெண் விடுதலை என்பதற்காக மட்டுமல்ல, நமது ஆரோக்கியத்திற்கும் அதுதான் நல்லது.

karaikudi_wedding.jpg

வெளிநாடுகளில் மிகப்பெரிய விருந்து நிகழ்ச்சிகளில் கூட பர்கர், ரொட்டி, அதனுடன் இறைச்சி துண்டுகள், கூல்டிரிங்ஸ் என விருந்து நிறைவு பெறுகிறது. ஆனால் நமது நாட்டில் ஒரு திருமண வீட்டில் கூட 30 வகை பதார்த்தங்கள் வைக்கப்பட்டது என்பது பந்தாவாக பேசப்படுகிறது. உணவுக்கும் கவுரவத்திற்கும் ஒரு தொடர்பை ஏற்படுத்தி, அந்த கயிற்றை பெண்களின் கால்களிலும் நைசாக கட்டி வைத்துள்ளோமே. குறைந்தபட்சம் வட இந்தியர்கள் போல ரொட்டி துண்டுகளை மட்டும் சுவைக்கவாவது நாம் கற்றுக்கொள்ள வேண்டும். இட்லிக்கு நாலு வகை சட்னி, சோற்றில் 7 வகை என கார்போஹைட்ரேட் பின்னால் ஓடி வாழ்க்கையை வீணாக்குவதை நிறுத்த வேண்டும்.

உதாரணத்திற்கு, ஒரு பிளேட் சோற்றை விட, அல்லது 4 சப்பாத்தியை விட, ஒரு பிளேட் மேகி நூடுல்ஸ் பாதி அளவு கார்போஹைட்ரேட்தான் கொண்டுள்ளது. ஆனால் நாம் சோறுதான் ஆரோக்கியம் எனச் சொல்வோம். சப்பாத்திக்கு வாரம் ஒரு வகை, கிரேவி கேட்டு சமைக்கச் சொல்லி சாப்பிடுவோம்.

கம்யூனிட்டி கிச்சன்கள், குழம்பு கடைகள் போன்றவை, சமையலறையிலிருந்து முழுமையாக பெண்களை மீட்டெடுக்குமா என்றால், அங்கும் சில சவால்களை நாம் எதிர்கொள்ள தேவையுள்ளது. ஹோட்டல்களில் தினமும் நமது மக்கள் சாப்பிடாமல், மனைவி கையால் சமைத்து சாப்பிட காரணம், அவற்றின் தரம் குறித்த சந்தேகம் தான். இதை முதலில் உடைத்தெறிய வேண்டும். பொது இடங்களில் சமையல் என்று ஒரு காலகட்டம் வரும் போது அங்கு முழுக்க முழுக்க தரம் பராமரிக்கப்படுகிறதா என்பதை அரசு மற்றும் உள்ளாட்சி நிர்வாகங்கள் கண்டிப்பாக உறுதி செய்ய வேண்டும்.

வளர்ந்த நாடுகளில் ரெஸ்டாரண்டில் அடிக்கடி சாப்பிடுவது வாடிக்கையாக இருக்கிறது. அவர்களுக்கு வயிற்று வலி வருவதில்லை. ஆரோக்கியமாக இருக்கிறார்கள். ஆனால் நம்ம ஊரில் ஒரு வருடம் சேர்ந்தாற்போல ஹோட்டல்களில் சாப்பிட்டால் அத்தனை உடல்நல பிரச்சனைகளும் ஏற்படுகிறது. இங்கு தான் தரம் முக்கிய பங்காற்றுகிறது.

சமையலறை பெண்களுக்கு மட்டுமே ஆனது என்ற ஒரு பொது புத்தியை உடைத்து எறிய வேண்டிய தேவை அடுத்த சவாலாக இருக்கிறது. "இந்த சவாலில் கிட்டத்தட்ட பாதி கிணறை நாம் தாண்டி விட்டோம் என்பதால் பெரிதாக அலட்டிக்கொள்ள தேவை கிடையாது" என்கிறார்கள் நாம், தொடர்பு கொண்டு பேசிய, பெண்கள் அமைப்பைச் சேர்ந்த சிலர்.

"தி கிரேட் இந்தியன் கிச்சன்" போன்ற திரைப்படங்கள், அப்படியே, ஆண்கள் முகத்தில் அறைந்து உண்மைகளை பேச ஆரம்பித்துள்ளன. பொது வெளியில், இப்போதுதான் நாம் இதைப் பற்றி பேசவே ஆரம்பித்துள்ளோம். கட்டுடைப்புக்கான, மனத் தடையை நொறுக்குவதற்கான நல்ல அறிகுறிகள் தென்பட ஆரம்பித்துள்ளன.

இதுவரை இல்லாத வகையில், குடும்ப உறவுகளில் இந்த இந்திய தலைமுறை பல்வேறு மாற்றங்களை பார்த்து வருகிறது. தனிக்குடித்தனம் சாதாரணமாகிவிட்டது, பெண்களும் வேலைக்கு போவது அடிப்படை தேவையாகிவிட்டது, பெண் பிள்ளைகளுக்கு என்று தனி வேலை கொடுக்காமல் ஆண் குழந்தைகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்படுகிறது. எனவே, அடுத்த தலைமுறை, சமூக கிச்சன் நோக்கி செல்லும் சமுதாயமாக உருவாவதற்கான வாய்ப்புகள் மறுப்பதற்கு இல்லை என்று உறுதியாகச் சொல்கிறார்கள் அவர்கள்.

https://tamil.oneindia.com/how-indian-women-can-comes-out-from-kitchen-and-preparing-food-as-it-consumes-more-time-cs-425951.html

டிஸ்கி :

இந்த தலைப்பு பெண்ணியம் சார்ந்ததா.?  ரெல் மீ .. !

---- இணைக்கபட்டுள்ளது---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/7/2021 at 15:46, புரட்சிகர தமிழ்தேசியன் said:

 

“கம்யூனிடி கிச்சன்” கேட்பதற்கு மட்டுமே அழகாகவும் பொருத்தமானதாகவும் உள்ளது.. அவ்வளவுதான்.. நடைமுறையில் எப்படி சரிவரும் என்பது கேள்விக்குறி..

குடும்ப உறுப்பினர்களை ஒன்றினைப்பது சாப்பாட்டு அறையே.. ஒரு தரமாவது குடும்பத்தவர்கள் சேர்ந்து உணவு உண்பது அந்த குடும்பத்தின் பிணைப்பை அதிகரிக்கும், குடும்ப உறுப்பினர்கள் சேர்ந்து இரவு உணவை சமைப்பதோ, அல்லது வார இறுதி நாட்களில் ஒருவருக்கொருவர் உதவி செய்து வீட்டுவேலைகள், உணவு சமைப்பதோ, அந்த குடும்பத்தின் பிணைப்பை அதிகரிக்கும்.. 

அதே நேரம்,மேலே கட்டுரையில் கூறியது போல, தற்பொழுது ஆண்பிள்ளைகளுக்கும் தனிசலுகைகள் கொடுத்து வளர்க்காமல் அவர்களுக்கும் வேலைகளை கொடுத்து, இது பெண்களுக்குரியது மட்டுமல்ல, என கூறி வளர்க்கப்படும் பொழுது இயல்பாகவே தனக்கென ஒரு வாழ்க்கை(அது தனித்தோ, சேர்ந்தோ) வரும் பொழுது வேலைகளை பகிர்ந்துகொள்கிறார்கள்.. இல்லை தனித்து இருந்தாலும் தங்கள் வாழ்க்கையை கொண்டு நடத்தவும் தெரிகிறது..

சமூக கிச்சன் - பொதுநிகழ்வுகளுக்கு மட்டுமே.. 

Link to comment
Share on other sites

இக் கட்டுரையில் சொல்லப்பட்டு இருக்கும் அனேகமான விடயங்கள் புலம்பெயர் தமிழர்களுக்கு மட்டுமல்ல ஊரில் உள்ள எம் மக்களுக்கும் பொருந்தாது. மூன்று நேரம் சமைப்பதும் இடையில் சிற்றுண்டி சமைப்பதும் இப்ப எம் வாழ்வில் வழக்கொழிந்து வரும் நல்ல விடயங்கள். ஆணும் பெண்ணும் இணைந்து சமைப்பது, சமைக்கும் விடயங்களில் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்புக் கொடுப்பது வழமையாக மாறிக்கொண்டு வருகின்றது.

கனடாவில் ஆண் திமிர் அதிகமாக கொள்ளாத பல எம்மவர் குடும்பங்களை காண முடிகின்றது. இங்கு வந்து படித்து பின் குடும்பமாக உள்ளவர்களிற்கு இடையில் "பெண் தான் அடுப்படியில் நிற்கவேண்டும்" என்ற மன-நிலை அருகிக் கொண்டு வருகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களை வீட்டுச்சிறையிலிருந்து மீட்பது என்பதை ஓரம் கட்டிவிட்டு முதலில் வீட்டில் சமைத்து உண்ண பழகுங்கள். அதிலும் எமது பாரம்பரிய உணவு கெடுதல் எதுவும் இல்லாதது.
இந்த கம்பேக்கர் கலாச்சாரம்,பிட்சா கலாச்சாரம் கொக்கோகோலா கலாச்சாரம் மனித இனத்திற்கே ஒவ்வாதது.
அதிலும் இந்த பெண்ணடிமை என்ற சொல்லை கேட்டாலே கெட்ட கோபம்தான் வருகின்றது. மன்னிக்கவும் இது எனக்கு மட்டும் தானா? 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

பெண்களை வீட்டுச்சிறையிலிருந்து மீட்பது என்பதை ஓரம் கட்டிவிட்டு முதலில் வீட்டில் சமைத்து உண்ண பழகுங்கள். அதிலும் எமது பாரம்பரிய உணவு கெடுதல் எதுவும் இல்லாதது.
இந்த கம்பேக்கர் கலாச்சாரம்,பிட்சா கலாச்சாரம் கொக்கோகோலா கலாச்சாரம் மனித இனத்திற்கே ஒவ்வாதது.
அதிலும் இந்த பெண்ணடிமை என்ற சொல்லை கேட்டாலே கெட்ட கோபம்தான் வருகின்றது. மன்னிக்கவும் இது எனக்கு மட்டும் தானா? 😁

உண்மை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

பெண்களை வீட்டுச்சிறையிலிருந்து மீட்பது என்பதை ஓரம் கட்டிவிட்டு முதலில் வீட்டில் சமைத்து உண்ண பழகுங்கள். அதிலும் எமது பாரம்பரிய உணவு கெடுதல் எதுவும் இல்லாதது.
இந்த கம்பேக்கர் கலாச்சாரம்,பிட்சா கலாச்சாரம் கொக்கோகோலா கலாச்சாரம் மனித இனத்திற்கே ஒவ்வாதது.
அதிலும் இந்த பெண்ணடிமை என்ற சொல்லை கேட்டாலே கெட்ட கோபம்தான் வருகின்றது. மன்னிக்கவும் இது எனக்கு மட்டும் தானா? 😁

உங்க வந்து பார்த்தியல் எண்டால், வெள்ளி, சனி, ஞாயிறு எங்கண்ட பொம்பிளையல் தான், தமிழ் டேக் எவே கடையில் வழிய நிண்டு, இடியப்பம், சொதி, சம்பல்... அப்படியே அத்தாருக்கும் போனை போட்டு, உங்களுக்கு வெள்ளை பிட்டோ, சிவப்பு புட்டோ என்று கேட்டு போட்டு.....

பஞ்சி... கேட்டுப்பாருங்கோ... பிள்ளையளை டியூஷன் ஏத்தி இறக்கிறதே, குசினிகில நிண்டு சமைக்கிறேதே முக்கியம் எண்டு சொல்லிக்கொண்டே போவினம்.

உந்த மாவை குலைத்து, பிழிந்து.... இடியாப்பதை அவிக்க....வேற வேலை ... இல்லையே எண்டுவினம்....  🤗

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Nathamuni said:

உங்க வந்து பார்த்தியல் எண்டால், வெள்ளி, சனி, ஞாயிறு எங்கண்ட பொம்பிளையல் தான், தமிழ் டேக் எவே கடையில் வழிய நிண்டு, இடியப்பம், சொதி, சம்பல்... அப்படியே அத்தாருக்கும் போனை போட்டு, உங்களுக்கு வெள்ளை பிட்டோ, சிவப்பு புட்டோ என்று கேட்டு போட்டு.....

பஞ்சி... கேட்டுப்பாருங்கோ... பிள்ளையளை டியூஷன் ஏத்தி இறக்கிறதே, குசினிகில நிண்டு சமைக்கிறேதே முக்கியம் எண்டு சொல்லிக்கொண்டே போவினம்.

உந்த மாவை குலைத்து, பிழிந்து.... இடியாப்பதை அவிக்க....வேற வேலை ... இல்லையே எண்டுவினம்....  🤗

நாடகம் பார்க்கிறதை மறந்திட்டியள் … முனி. 🤣 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, தமிழ் சிறி said:

நாடகம் பார்க்கிறதை மறந்திட்டியள் … முனி. 🤣🤣

நமக்கேன் பொல்லாப்பு.....

இங்க, கணக்கு வாயை திறந்தால்.... போட்டு தாக்க... ஓடி வருவினம் அக்காமார்..... அதாலை எஸ்கேப்... 😁 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/7/2021 at 07:46, புரட்சிகர தமிழ்தேசியன் said:

ஆண்களுக்கு அது ஒரு பெரிய விஷயமாக தெரிவதே கிடையாது.. ஆனால் உன்னிப்பாக பார்த்தால் மிகப்பெரிய மனித உழைப்பை நாம் சுரண்டி கொண்டிருக்கிறோம்.. மிகப்பெரிய மனித உரிமை மீறலை, நமது இல்லங்களில் நாம் சத்தமேயில்லாமல், நடத்திக் கொண்டிருக்கிறோம்

வெங்காயம் உரிப்பதற்கும் தேங்காய் திருவுவதற்கும் ஏவல் வேலை செய்வதற்கு........ அதற்கும் திட்டு வாங்கி.......

உள்ள கோவத்தை எல்லாம் குசினிக்குள்ளேயே வைத்து தீர்க்கலாம் என நினைக்கும் பெண்களுடன் சேர்ந்து சமைப்பவர்களுக்குத் தான் தெரியும் அவர்கள்  படும்பாடு🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

நாடகம் பார்க்கிறதை மறந்திட்டியள் … முனி. 🤣🤣

உத பற்றி எழுதுறதெண்டால் இஞ்சை யாழ்களத்திலையும் 250 பக்கங்களை தாண்டும்.
என்ன சிறித்தம்பியர்  திரி ஒண்டு துவங்குவமே?:cool:

"கண்மணிகளும் கன்றாவி  நாடகங்களும்"

 யாழ்கள கூட்டுகளிடமிருந்து தரமான தலையங்கம் எதிர்பார்க்கப்படுகின்றது 😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/7/2021 at 17:20, நிழலி said:

இக் கட்டுரையில் சொல்லப்பட்டு இருக்கும் அனேகமான விடயங்கள் புலம்பெயர் தமிழர்களுக்கு மட்டுமல்ல ஊரில் உள்ள எம் மக்களுக்கும் பொருந்தாது. மூன்று நேரம் சமைப்பதும் இடையில் சிற்றுண்டி சமைப்பதும் இப்ப எம் வாழ்வில் வழக்கொழிந்து வரும் நல்ல விடயங்கள். ஆணும் பெண்ணும் இணைந்து சமைப்பது, சமைக்கும் விடயங்களில் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்புக் கொடுப்பது வழமையாக மாறிக்கொண்டு வருகின்றது.

கனடாவில் ஆண் திமிர் அதிகமாக கொள்ளாத பல எம்மவர் குடும்பங்களை காண முடிகின்றது. இங்கு வந்து படித்து பின் குடும்பமாக உள்ளவர்களிற்கு இடையில் "பெண் தான் அடுப்படியில் நிற்கவேண்டும்" என்ற மன-நிலை அருகிக் கொண்டு வருகின்றது.

கனடாவில் 5 டொலருக்கு 50 இடியப்பம் சொதி சம்பலுடன்

8 டொலருக்கு ஒரு  சாப்பாடு எடுத்தா இரண்டு பேரும்  நன்றாக சாப்பிடலாம் என்றால்..

எதுக்கு  சமைக்கணும்???🤣

எப்படி  சமையல்  பிரச்சினை  வரும்???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Nathamuni said:

உங்க வந்து பார்த்தியல் எண்டால், வெள்ளி, சனி, ஞாயிறு எங்கண்ட பொம்பிளையல் தான், தமிழ் டேக் எவே கடையில் வழிய நிண்டு, இடியப்பம், சொதி, சம்பல்... அப்படியே அத்தாருக்கும் போனை போட்டு, உங்களுக்கு வெள்ளை பிட்டோ, சிவப்பு புட்டோ என்று கேட்டு போட்டு.....

பஞ்சி... கேட்டுப்பாருங்கோ... பிள்ளையளை டியூஷன் ஏத்தி இறக்கிறதே, குசினிகில நிண்டு சமைக்கிறேதே முக்கியம் எண்டு சொல்லிக்கொண்டே போவினம்.

உந்த மாவை குலைத்து, பிழிந்து.... இடியாப்பதை அவிக்க....வேற வேலை ... இல்லையே எண்டுவினம்....  🤗

 

மெயின் சாப்பாடுகளையும்,சிற்றுண்டிகளையும் கடையிலை வாங்கி சாப்பிடுறது. பிறகு வயுத்துக்கை குத்துது குடையுது எண்டு டாக்குத்தரிட்டை ஓடுறது.

எண்ணைச்சாப்பாடும் சுவையூட்டி உப்புகளுமே எங்கடை உடம்புக்கு வில்லன்கள். கடையள்ளை பொரிக்கிற எண்ணைய பார்த்தால் தார் ரேஞ்சிலை இருக்கும்.உப்பு நோர்மலாயே வில்லங்கம். அதிலையும் உந்த சுவையூட்டி உப்பு உலகத்திலை உள்ள எல்லா வருத்தையும் கொண்டுவரும்.

எத்தனையோ வீடுகளிலை ஆண்கள் தான் சமைக்கின்றார்கள்.இருந்தாலும் அம்மாவின் சமையலைத்தான் பிள்ளைகள் அநேகம் விரும்புகின்றார்கள். அப்பிடியிருக்க அம்மாவே கடையிலை சாப்பாடு வாங்கி குடுத்தால்......

அம்மாமார் சமைச்சு குடுத்தால் என்னவாம்? இதுக்கை போய் சமையல் நேரத்தையும் உழைப்பையும் சுரண்டுதாம் 😂🤣😃😄😅😆😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

House wife என்பது ஒரு உத்தியோகம்.

Link to comment
Share on other sites

3 hours ago, விசுகு said:

கனடாவில் 5 டொலருக்கு 50 இடியப்பம் சொதி சம்பலுடன்

8 டொலருக்கு ஒரு  சாப்பாடு எடுத்தா இரண்டு பேரும்  நன்றாக சாப்பிடலாம் என்றால்..

எதுக்கு  சமைக்கணும்???🤣

எப்படி  சமையல்  பிரச்சினை  வரும்???

அதுக்காக எல்லா நாட்களிலும் எல்லாரும் எட்டு டொலருக்கு சாப்பாடு எடுத்து சாப்பிடுவதில்லை. இடியப்பம் வாங்குகின்றவர்கள் கூட அதனுடன் வரும் சொதியை நம்பி வாங்குவதும் இல்லை. வீட்டில் கறி ஏதும் அதனுடன் சாப்பிட கட்டாயம் இருக்கும்.

வேலைக்கு போகும் பெண்கள் வீட்டுக்கு வந்த பின்னும் அவர்கள் மட்டுமே சமையலில் ஈடுபடவேண்டும் எண்ணம் எம் படித்த பண்பான தலைமுறை இடம் அருகி வருகின்றது. 

நாம். நான், நீங்கள் என எல்லோரும் எம் பெண் பிள்ளைகளை நன்கு படிப்பிப்பது அவர்கள் சமூகத்தில் நல்ல நிலைக்கு, நல்ல தொழிலுக்கு வர வேண்டும் என்ற நோக்கத்தில். அந்த நோக்கத்துக்கு சமையலும் சமையலறையும் முட்டுக் கட்டை போடுகின்றது எனில், அல்லது முன்னேற்றத்தினை தடுக்கின்றது எனில், அதனை மாற்றி அமைக்க வேண்டியது அவசியமாகின்றது. அங்கு ஆணும் பெண்ணும் சமமாக வேலைகளை பகிரிடும் போது இந்த மாற்றம் நிகழ்கின்றது.

இப்பவே முன்னர் இருந்த குசினியை விட இப்போதுள்ள குசினியின் அளவு குறைந்துள்ளது.  ஆணும் பெண்ணும் வேலையால் களைத்து வந்தால், கடையில் உணவு வாங்க வேண்டிய நிலை வருகின்றது. இது தவிர்க்க முடியாது. இது இன்னும் இன்னும் அதிகரிக்கும். தரமான உணவு விற்கும் இடங்களின் தேவையும் அதிகரிக்கும். எதிர்காலத்தில் சமையலறைகள் மிகக் குறுகியதாக மாறும்.

அப்பவும் அரதப் பழசான, பூஞ்சனம் பிடித்த கொள்கைகளை விட்டு அகல விரும்பாத சிலர் அதை பார்த்து புறுபுறுத்துக் கொண்டு தான் இருப்பர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, karu said:

House wife என்பது ஒரு உத்தியோகம்.

நீங்கள் சொல்வது முற்றிலும் சரி

ஒரு குடும்பத்தில் ஆணும் பெண்ணும் வேலைக்கு போக வேண்டிய அவசியம் எதனால் வருகின்றது?

ஒரு சாண் வயிற்றில் இன்னும் மாற்றங்கள் வரவில்லை. அது இருந்த படியே இருக்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"குடும்பம் என்கின்ற அழகான மிகப் பாதுகாப்பான அமைப்பொன்றை  எப்படி இல்லாதொழிக்கலாம்" என்பதை இந்தக் கட்டுரை மிக நாசூக்காகச் சொல்கிறது. 

☹️

2 hours ago, karu said:

House wife என்பது ஒரு உத்தியோகம்.

அது உத்தியோகம் அல்ல, பொறுப்பு(Responsibility, Discipline) அதச் சரியான முறையில் புரிந்து கொண்டால்(முக்கியமாக ஆண்கள்) அடுப்படி☹️சமையல் 🤥என்கின்ற பிரச்சனை எழப்போவதில்லை. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு எதுவும் செய்ய கூடாது என்ற எண்ணம் இல்லை 
ஒரு தேநீர் கூட நான் போடுவதை விட  ...... பெண்கள் போடுவது மிகவும் சுவையாக இருக்கிறது.
அதே அளவில் நானும் முயற்சி செய்கிறேன் அது ஏனோ சிக்க மாட்டேன் என்கிறது 
ஆனால் சில ஆண்கள் பெண்களை விட நல்ல ருசியாக சமைப்பதை பார்த்து இருக்கிறேன் என்று எழுதுவது அபத்தம் ..... ருசியான உணவு சமைக்கும் ரெஸ்டூரண்ட் குக் 95% ஆண்கள்தான். 

சுவையாக சமைக்க தெரிந்தவர்கள் சமைத்தால் அதுதானே நன்று !
அதை ஏன் குளறுபடி பண்ணுவான்? 

5 hours ago, Kapithan said:

"குடும்பம் என்கின்ற அழகான மிகப் பாதுகாப்பான அமைப்பொன்றை  எப்படி இல்லாதொழிக்கலாம்" என்பதை இந்தக் கட்டுரை மிக நாசூக்காகச் சொல்கிறது. 

☹️

கொஞ்சம் ஜாக்கிரதையாத்தான் இருக்கவேண்டும் .....
மாதர் சங்கம் அது இது என்று வருபவர்கள் குடும்பத்தை பிரிப்பதுபோல 
பெண்களுக்கு சோப்பு போடுவதாக இவர்கள் பிரச்சனையை கிளறியும் விடுவார்கள்.

ஆனால் உண்மையில் பெண்கள் மிகுதியான நேரத்தை செலவழிக்கிறார்கள் 
அதுக்கு ஏதும் ஒரு வழியை கண்டுபிடிப்பது நன்று என்றே எண்ணுகிறேன். 

Link to comment
Share on other sites

அழகாக எழுதப்பட்ட அர்த்பூர்வமான கட்டுரை. உலகில் வளர்ச்சியடைந்த கிழக்கு ஆசியா மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளின் குடும்ப வாழ்க்கையில் அடுப்பறை நேரம் ஒழுங்குக்கு கொண்டுவரப்பட்டதும் அவர்களின் வளர்ச்சிக்கு காரணம் என்பது கண்கூடு. நம்மவர்களும் அவ்வாறு சிந்தித்து செயல்படுது முன்னேற்றத்திற்கான படியே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொழில் முறையில் நான் ஒரு பொறியியலாளன்.
 வீட்டில் அம்மாவிற்கு உதவி செய்யும் நேரங்களில்
 சமையல் நுணுக்கங்கள் சில கற்றுக் கொண்டேன்.
 திருமணத்தின் போது  
மனைவிக்கு பெரிதாக சமையல் தெரியாது.
 திருமணத்தின் பின் இருவரும் 
வெளிநாடு வந்து விட்டோம்  
இருவரும் அவரவர்  துறையில் வேலை
 மனைவி ஒரு ஆசிரியர்
 பிள்ளைகள் ஓரளவு வளர்ந்ததும்
 மனைவி வேலை செல்வதை நிறுத்தி விட்டார்.
 பிள்ளைகளுக்கு முழுநேர ஆதரவு 
வீட்டில் அவசியம் என்று .
நாங்கள் பொதுவாக 
வெளி கடைகளில் சாப்பிடுவதில்லை
 முன்பென்றாலோ  இப்போதென்றாலோ  
சமையலில் இருவருமே பங்கு கொள்கிறோம் .
எனக்கு மனைவியின் சமையல் பிடிக்கும், 
பிள்ளைகளுக்கு என் சமையல் பிடிக்கும்.
 மனைவிக்கும் அப்பிடித் தான் என நினைக்கிறேன்
 ஆனால் அவர் சொல்வதில்லை
மகளும் கணவரும் ஒரே துறையில் வேலை 
சமையலை இருவருமே சேர்ந்து தான் செய்கிறார்கள் 
புரிந்துணர்வுகள் இருக்கும் போது 
பெண் விடுதலை ஆண் விடுதலை 
என்பன கருத்திழந்து போகின்றன……

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, நிழலி said:

அதுக்காக எல்லா நாட்களிலும் எல்லாரும் எட்டு டொலருக்கு சாப்பாடு எடுத்து சாப்பிடுவதில்லை. இடியப்பம் வாங்குகின்றவர்கள் கூட அதனுடன் வரும் சொதியை நம்பி வாங்குவதும் இல்லை. வீட்டில் கறி ஏதும் அதனுடன் சாப்பிட கட்டாயம் இருக்கும்.

வேலைக்கு போகும் பெண்கள் வீட்டுக்கு வந்த பின்னும் அவர்கள் மட்டுமே சமையலில் ஈடுபடவேண்டும் எண்ணம் எம் படித்த பண்பான தலைமுறை இடம் அருகி வருகின்றது. 

நாம். நான், நீங்கள் என எல்லோரும் எம் பெண் பிள்ளைகளை நன்கு படிப்பிப்பது அவர்கள் சமூகத்தில் நல்ல நிலைக்கு, நல்ல தொழிலுக்கு வர வேண்டும் என்ற நோக்கத்தில். அந்த நோக்கத்துக்கு சமையலும் சமையலறையும் முட்டுக் கட்டை போடுகின்றது எனில், அல்லது முன்னேற்றத்தினை தடுக்கின்றது எனில், அதனை மாற்றி அமைக்க வேண்டியது அவசியமாகின்றது. அங்கு ஆணும் பெண்ணும் சமமாக வேலைகளை பகிரிடும் போது இந்த மாற்றம் நிகழ்கின்றது.

இப்பவே முன்னர் இருந்த குசினியை விட இப்போதுள்ள குசினியின் அளவு குறைந்துள்ளது.  ஆணும் பெண்ணும் வேலையால் களைத்து வந்தால், கடையில் உணவு வாங்க வேண்டிய நிலை வருகின்றது. இது தவிர்க்க முடியாது. இது இன்னும் இன்னும் அதிகரிக்கும். தரமான உணவு விற்கும் இடங்களின் தேவையும் அதிகரிக்கும். எதிர்காலத்தில் சமையலறைகள் மிகக் குறுகியதாக மாறும்.

அப்பவும் அரதப் பழசான, பூஞ்சனம் பிடித்த கொள்கைகளை விட்டு அகல விரும்பாத சிலர் அதை பார்த்து புறுபுறுத்துக் கொண்டு தான் இருப்பர்.

யாரோ🚲♥ on Twitter: "Ivan than Da samathiya engayo vangi irukan 😂… "

அதுக்காக, சமையல் உதவி செய்யிறன் எண்டு கிச்சனுகிலை பூந்து, மீனை எறிந்து போட்டு,  மீன் செதில் வறை சமைத்து போட்டால்,  கிச்சனுல் இருந்து திருத்தி அடிக்கப்பட்டு, கிச்சன் பக்கமே போக தேவையில்லை என்ற அதிரடி ஐடியாவை நாங்கள் பின்பற்றுகிறோம்.... 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

*House wife என்பது ஒரு உத்தியோகம்.*

எனது அதிஷ்டம்.  சாமிகளில் மிக பெரியவர் உடான்ஸ் சாமியார் என்னை ஆணாக படைத்தவிட்டார் House wife உத்தியோகத்திற்கு போகாமல் தப்பிவிட்டேன்.

 

On 4/7/2021 at 07:46, புரட்சிகர தமிழ்தேசியன் said:

வளர்ந்த நாடுகளில் ரெஸ்டாரண்டில் அடிக்கடி சாப்பிடுவது வாடிக்கையாக இருக்கிறது. அவர்களுக்கு வயிற்று வலி வருவதில்லை. ஆரோக்கியமாக இருக்கிறார்கள். ஆனால் நம்ம ஊரில் ஒரு வருடம் சேர்ந்தாற்போல ஹோட்டல்களில் சாப்பிட்டால் அத்தனை உடல்நல பிரச்சனைகளும் ஏற்படுகிறது. இங்கு தான் தரம் முக்கிய பங்காற்றுகிறது.

 

👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விளங்க நினைப்பவன் said:

 

எனது அதிஷ்டம்.  சாமிகளில் மிக பெரியவர் உடான்ஸ் சாமியார் என்னை ஆணாக படைத்தவிட்டார் House wife உத்தியோகத்திற்கு போகாமல் தப்பிவிட்டேன்

எனது ஒரு உயரதிகாரி பெண், அவரது கணவர் House Husband.. வீட்டிலிருந்து 3 பிள்ளைகளையும் வீட்டையும் கவனிக்கிறார்.. மேலும்.. இது அவரவர் குடும்ப நிலையையும், கணவன் மனைவிக்குமிடையிலான பரஸ்பர புரிந்துணர்வையும் அடிப்படையாக கொண்டதே..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, நிழலி said:

அதுக்காக எல்லா நாட்களிலும் எல்லாரும் எட்டு டொலருக்கு சாப்பாடு எடுத்து சாப்பிடுவதில்லை. இடியப்பம் வாங்குகின்றவர்கள் கூட அதனுடன் வரும் சொதியை நம்பி வாங்குவதும் இல்லை. வீட்டில் கறி ஏதும் அதனுடன் சாப்பிட கட்டாயம் இருக்கும்.

வேலைக்கு போகும் பெண்கள் வீட்டுக்கு வந்த பின்னும் அவர்கள் மட்டுமே சமையலில் ஈடுபடவேண்டும் எண்ணம் எம் படித்த பண்பான தலைமுறை இடம் அருகி வருகின்றது. 

நாம். நான், நீங்கள் என எல்லோரும் எம் பெண் பிள்ளைகளை நன்கு படிப்பிப்பது அவர்கள் சமூகத்தில் நல்ல நிலைக்கு, நல்ல தொழிலுக்கு வர வேண்டும் என்ற நோக்கத்தில். அந்த நோக்கத்துக்கு சமையலும் சமையலறையும் முட்டுக் கட்டை போடுகின்றது எனில், அல்லது முன்னேற்றத்தினை தடுக்கின்றது எனில், அதனை மாற்றி அமைக்க வேண்டியது அவசியமாகின்றது. அங்கு ஆணும் பெண்ணும் சமமாக வேலைகளை பகிரிடும் போது இந்த மாற்றம் நிகழ்கின்றது.

இப்பவே முன்னர் இருந்த குசினியை விட இப்போதுள்ள குசினியின் அளவு குறைந்துள்ளது.  ஆணும் பெண்ணும் வேலையால் களைத்து வந்தால், கடையில் உணவு வாங்க வேண்டிய நிலை வருகின்றது. இது தவிர்க்க முடியாது. இது இன்னும் இன்னும் அதிகரிக்கும். தரமான உணவு விற்கும் இடங்களின் தேவையும் அதிகரிக்கும். எதிர்காலத்தில் சமையலறைகள் மிகக் குறுகியதாக மாறும்.

அப்பவும் அரதப் பழசான, பூஞ்சனம் பிடித்த கொள்கைகளை விட்டு அகல விரும்பாத சிலர் அதை பார்த்து புறுபுறுத்துக் கொண்டு தான் இருப்பர்.

 

நான்  எப்பொழுதும்  என்னை  புடம்போட பின் நின்றதில்லை

எனது  மகளின் வீட்டு வேலை  நிர்வாகங்களை  பார்த்த  எனது  மனைவி

அவரும்  வேலைக்கு போய் களைத்து வருவார்  பார்த்து  நடந்துக்கோ என்பதற்கு 

எனது  மகளின் பதில்:

எங்க  அப்பரை பழுதாக்கிய   மாதிரி 🤣 என் புருசனையும்  பழுதாக்காதீர்கள்

5 இல்  வளையாதது  50இல்  வளையாது என்பது...🤣

 

Link to comment
Share on other sites

42 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

எனது ஒரு உயரதிகாரி பெண், அவரது கணவர் House Husband.. வீட்டிலிருந்து 3 பிள்ளைகளையும் வீட்டையும் கவனிக்கிறார்.. மேலும்.. இது அவரவர் குடும்ப நிலையையும், கணவன் மனைவிக்குமிடையிலான பரஸ்பர புரிந்துணர்வையும் அடிப்படையாக கொண்டதே..

எங்கள் சமூகத்தில் இப்படி ஒரு நிலை வந்து அவர்கள் சந்தோசமாக வாழ்ந்ததை நான் காணவில்லை. ஒன்று ஆண் தன்னை விட மனைவி நல்லா உழைக்கின்றார் எனும் பொறாமையில் மற்றும் இயலாமையில் பிரச்சனை கொடுப்பார். அல்லது மனைவி கணவனை "கையாலாகதவன்" என்ற ரீதியில் அணுகி (தன் சுற்றங்களுக்கும் ஓயாமல் சொல்லிக் காட்டி) பிரச்சனை ஏற்படுத்துவார்.
 
அண்மையிலும் இப்படி காரணத்தினால் என் நண்பரின் குடும்பம் பிரிந்து போனது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் மிக பெரிய IT கொம்பனியில் ஒன்று HCL. $5பில்லியன் கம்பெனி.

இதன் ceo (ஓனர் தமிழர்: சிவ நாடார்) ஒரு முறை சொன்னார்.

தனது stress குறைப்பு வேலை, சமையல் செய்வது என்று. 

கிச்சினுள் புகுந்து, விதம், விதமா சமைத்துக்கொண்டே, ஐடியா போடவும், பிரச்னைகளுக்கு தீர்வு குறித்து யோசிக்கவும், புதிய யுக்திகள் குறித்து சிந்திக்கவும் முடிகிறது என்றார்.     

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கூகா என என் கிளை கூடி அழப் போகா வகை, மெய்ப்பொருள் பேசியவா நாகாசல வேலவ நாலு கவித் தியாகா சுரலோக சிகாமணியே.    
    • அதெல்லாம் இருக்கட்டும், குஜாரத்தில் தானே தீவைத்த இந்துக்களின் ரயிலுக்குப் பழிவாங்க ஆயிரமாயிரம் முஸ்லீம்களைப் படுகொலை செய்ததற்காக அமெரிக்காவே இவருக்கு தடை விதித்திருந்தது. இந்த லட்சணத்தில் இந்தியஅ மனிதநேயத்திற்குப் பாதுகாப்பான நாடாம். 
    • தமிழ்ப் பொதுவேட்பாளரை இறக்கி ரணில் ஐய்யாவுக்கு விழப்போற வாக்குகளைத் தடுத்துப்போடுவாங்கள் என்கிற கவலையில இருக்கிறம் உங்களுக்கு நக்கலாக் கிடக்கு என்ன?  ரணில் மாத்தையாட்ட, ஜயவேவா!
    • நீங்கள் அரசாங்கத்துடன் திம்புவில் பேசலாம், நான் இராணுவத்துடன் கிரிக்கெட் விளையாடினால் தவறோ? ‍- பரி யோவானின் ஆனந்தராஜனும், இந்தியர்களை அலைக்கழித்த இலங்கையும்   மறுநாளான ஆடி 24 ஆம் திகதி டிக் ஷிட் அவர்கள் நீலன் திருச்செல்வத்தைச் சந்தித்தார். தமிழர்களின் பிரச்சினையின் சிக்கல்களை பண்டாரி சரியாக உணர்ந்துகொள்ளத் தவறிவிட்டதாக டிக் ஷிட்டிடம் தெரிவித்தார் நீலன். மேலும் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வொன்றினைக் கண்டுபிடிக்குமாறு பண்டாரி  அழுத்தம்கொடுத்து வந்தமை, ஜெயாரிற்கு தமிழர்களுடன், தீர்வெதனையும் தராத, வெற்றுப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் வாய்ப்பினையும் ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாகவும் நீலன் கூறினார். சந்திரிக்காவின் ஆட்சியின்போது பிரபல சிங்கள இனவாதியான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸுடன் இணைந்து தீர்வுப்பொதியொன்றினைத் தயாரித்த நீலன் திருச்செல்வம் மேலும், டிக்ஷிட்டிடன் பேசும்போது தமிழரின் தாயகம் தொடர்பாகவும், அதனை திட்டமிட்ட அரச ஆதரவிலான சிங்களக் குடியேற்றங்கள் மூலம் இரு துண்டுகளாக உடைக்க சிங்களவர்கள் முயன்றுவருவது குறித்தும் விளக்கியதோடு, தமிழர்கள் தமது தாயகத்தில் சுயநிர்ணய உரிமைகொண்டவர்களாக வாழ்தலே எந்தவொரு தீர்விற்கும் அடிப்படையாக அமைதல் வேண்டுமென்றும் அழுத்தமாகக் கூறினார்.  இதற்குக் குறைவான எந்தத் தீர்வினையும் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதனையும் அவர் டிக்ஷிட்டிடம் தெரிவித்தார். நீலனுக்குப் பதிலளித்த டிக்ஷிட், இவ்விடயங்கள் குறித்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ரஜீவிடமும், பண்டாரியிடமும் தெளிவாகப் பேசவேண்டும் என்று கூறினார். "இனப்பிரச்சினையின் தீர்விற்கான அடிப்படை குறித்த ஆவணம் ஒன்றைத் தயாரித்து ஜெயாருக்கு அனுப்பிவைப்பதற்காக என்னை தில்லிக்கு அழைத்திருக்கிறார்கள். நான் நாளை பயணமாகிறேன். நீங்கள் என்னிடம் தற்போது கூறிய விடயங்களை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ஒரு ஆவணமாகத் தயாரித்து அனுப்பினால், நாம் ஜெயாருக்கு அனுப்பவிருக்கும் ஆவணத்தை அதன் அடிப்படியில் உருவாக்கிக்கொள்ளலாம்" என்று நீலனை நோக்கிக் கூறினார் டிக்ஷிட்.    அப்போது சென்னையில் தங்கியிருந்த அமிர்தலிங்கத்திடம் இவ்விடயங்கள் குறித்து நீலன் தெரிவித்தார். அதன் பின்னர் ஆடி 26 ஆம் திகதி தமது பேரம்பேசலின் நிலைப்பாடு குறித்த விளக்கமான கடிதம் ஒன்றினை அமிர்தலிங்கமும், சிவசிதம்பரமும் ரஜீவ் காந்திக்கு அனுப்பி வைத்தனர். அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த சில முக்கிய விடயங்கள் கீழே, "தமிழர் பிரச்சினைக்கான எந்தவொரு தீர்வின் அடிப்படையும் தமிழர்கள் தமது தாயகத்தில் தம்மைத்தாமே ஆளும் உரிமையினை உறுதிப்படுத்துவதாக இருக்க வேண்டும். பலஸ்த்தீனத்தில் இஸ்ரேல் செய்துவருகின்ற திட்டமிட்ட ஆக்கிரமிப்பிற்கு நிகரான ஆக்கிரமிப்பினை இலங்கையில் தொடர்ச்சியாக ஆட்சிக்கு வரும் சிங்கள அரசுகள் செய்துவருவதுடன்,  தமிழர் தாயகத்தின் ஒருமைப்பாட்டினைச் சிதைக்கும் நோக்குடன், தமிழர்களின் ஆட்சேபணைக்கு மத்தியிலும், அரச ஆதரவிலான திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை சுதந்திரக் காலத்திலிருந்து செய்து வருகின்றன". "தமிழர் தாயகத்தை இரண்டாகத் துண்டாக்குவதன் மூலம் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களை முற்றாக அழித்துவிட சிங்கள அரசுகள் முயன்று வருகின்றன. கிழக்கில் தமிழர்களை அப்புறப்படுத்துவதனூடாக தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வை வழங்கமுடியும் என்று ஜெயவர்த்தன கருதிவருகின்ற போதிலும், நீங்கள் அதனை ஒரு தீர்வாக ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறோம். தமது தாயகம் துண்டாடப்படுவதை தமிழர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை" என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.  புலிகளின் எச்சரிக்கைகளுக்கு மத்தியிலும் இலங்கை இராணுவத்துடன் துடுப்பாட்டப் போட்டியொன்றினை ஒழுங்குசெய்த பரி யோவான் கல்லூரி அதிபர் ஆனந்தராஜன்  ஆடி 27 ஆம் திகதி மாலை டிக்ஷிட் தில்லியை வந்தடைந்தார். அந்நாள் காலையிலேயே யாழ்ப்பாணம் புனித யோவான் கல்லூரியின் அதிபர் ஆனந்தராஜா கொல்லப்பட்டிருந்தார். பரி யோவான் கல்லூரியின் துடுப்பாட்ட அணிக்கும், இலங்கை இராணுவத்தின் துடுப்பாட்ட அணிக்கும் இடையிலான சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டியொன்றினை பரி யோவான் கல்லூரி மைதானத்தில் நடத்த முயன்றதனால் அவர் சுடப்பட்டார். போட்டியினை நடத்துவதற்கான முயற்சிகளில் அவர் இறங்கியபோது புலிகளால் பலதடவைகள் அவருக்கு அதனைச் செய்யவேண்டாம் என்று எச்சரிக்கைகள் விடப்பட்டு வந்தன. ஆனால், அவ்வெச்சரிக்கைகளை உதாசீனம் செய்த ஆனந்தராஜா, "நீங்கள் அரசாங்கத்துடன் திம்புவில் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்றால், இராணுவத்துடன் கிரிக்கெட் ஆட்டம் ஒன்றினை நான் ஒழுங்குசெய்வதில் என்ன தவறு இருக்க முடியும்?" என்று அவர் பதிலுக்கு தனது செயலை நியாயப்படுத்தி வந்தார்.  யாழ்ப்பாண மக்களின் மனங்களையும், இதயங்களையும் வென்று, அவர்களின் ஆதரவினைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் யாழில் இயங்கிவந்த சில பிரபல பாடசாலைகளுடன் சிநேகபூர்வமான துடுப்பாட்டம் மற்றும் கால்பந்தாட்டப் போட்டிகளை இலங்கை இராணுவம் ஒழுங்குசெய்யத் திட்டமிட்டு வந்தது. இலங்கை அரசாங்கத்திற்கெதிராக மக்களை அணிதிரட்டும் தமது முயற்சியை இராணுவத்தினரின் "யாழ் மக்களின் மனங்களையும், இதயங்களையும் வெல்லுதல்" முயற்சி பாதிக்கக் கூடும் என்று கருதிய போராளிகள், இராணுவத்தின் இந்த முயற்சிக்கு எவரும் ஆதரவளிக்கக் கூடாது என்று கூறி வந்தனர். இன்று மேற்கு நாடொன்றில் வசிக்கும் புலிகளின் முன்னாள்ப் போராளியொருவரே ஆனந்தராஜாவைச் சுட்டுக் கொன்றிருந்தார். ஆனந்தராஜாவைத் தாமே கொன்றதாக புலிகள் உரிமைகோரும் துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டனர். தாம் பலமுறை வழங்கிய எச்சரிக்கைகளையும் மீறி இராணுவத்துடன் துடுப்பாட்டப் போட்டியை நடத்துவதில் உறுதியாக நின்றமைக்காகவே அவருக்குத் தண்டனை வழங்கப்பட்டதாக புலிகளின் அறிவித்தல் கூறியது. ஆனந்தராஜா மீதான தாக்குதல் சொல்லவேண்டியவர்களுக்குத் தெளிவான செய்தியைச் சொல்லியது. இராணுவத்தினருடனான சகலவிதமான சிநேகபூர்வப் போட்டிகளும் யாழ்ப் பாடசாலைகளால்  கைவிடப்பட்டன. யாழ் மக்களின் மனங்களையும், இதயங்களையும் வெல்லும் இராணுவத்தின் முயற்சி பிசுபிசுத்துப் போனது. ஆனந்தராஜா மீதான தாக்குதலை அரசாங்கம் தனது பிரச்சாரத் தேவைக்காகப் பயன்படுத்திக்கொண்டது. இதனை கடுமையான யுத்தநிறுத்த மீறலாகக் காட்டிய அரசாங்கம், ஆனந்தராஜாவின் கொலையோடு சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பாகத் தகவல் வழங்குவோரு சன்மானமாக ஐந்து லட்சம் ரூபாய்களைத் தருவதாக அறிவித்தது. ஆனால், அரசால் தாக்குதலில் ஈடுபட்டவர்களை இறுதிவரை கண்டுபிடிக்க முடியவில்லை. தில்லியில் தான் தங்கியிருந்த நான்கு நாட்களில் டிக்ஷிட், ரஜீவ் காந்தி, ரஜீவால் பிந்தள்ளப்பட்டிருந்த பார்த்தசாரதி, ரோவின் சக்சேனா மற்றும் சில வெளியுறவுத்துறை அதிகாரிகள் ஆகியோரைச் சந்தித்தார். இச்சந்திப்புக்களின்போது, இலங்கையின் ஒற்றுமையினையும், பிராந்திய ஒருமைப்பாட்டினையும் பாதிக்காத வகையில், தமிழர்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்குச் சாதகமான வகையில் ஜெயார் முன்வைக்கக் கூடிய ஆலோசனைகளை அவர்கள் தயாரித்தனர். இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட, கடப்பாடுகள் எதுவும் அற்ற இந்த ஆவணத்தில் இலங்கையினால் முன்வைக்கப்பட்ட அதிகபட்ச அதிகாரப் பரவலாக்கல் அலகான மாவட்ட அபிவிருத்திச் சபையின் அதிகாரங்களை மேம்படுத்துவது தொடர்பாகவே பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. தமிழரின் கோரிக்கையான பூர்வீகத் தாயகத்திற்குப் பதிலாக மாகாண அலகினை இலங்கையரசு வழங்க முடியும் என்றும், வடக்கு மாகாணமும், கிழக்கு மாகாணமும் கருத்து ரீதியாக இணைக்கப்படலாம் என்றும் இந்தியா பரிந்துரை செய்திருந்தது. இவ்வாறு அமைக்கப்படும் மாகாணங்களுக்கான அதிகாரங்கள் குறித்துப் பேசும்போது, நிதி , காணியதிகாரம், சட்டம் ‍ ஒழுங்கினை நிலைநாட்டும் அதிகாரம் ஆகியவை மத்திய அரசினால் பகிர்ந்தளிக்கப்படலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. மேலும், இந்த இணைந்த மாகாணங்களில் தமிழ் உத்தியோகபூர்வ மொழியாகப் பாவிக்கப்படலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டது. ஜெயாருடன் பார்த்தசாரதி   இரண்டாம் சுற்றுப் பேச்சுக்கள் நடப்பதற்கு சற்று முன்னதாக இந்தியாவின் "கடப்பாடு அற்ற" பரிந்துரைகளின் நகல் ஒன்றினை நீலனிடம் கொடுத்த டிக்ஷிட், "இவை அனைத்தும்  பார்த்தசாரதியின் யோசனைகள் தான்" என்று கூறினார். "பண்டாரிக்கோ, சக்சேனாவுக்கோ இவைகுறித்த எந்தவிதமான அறிவும் இருக்கவில்லை" என்று நீலன் கூறினார்.  தாம் தயாரித்த "கடப்பாடற்ற" பரிந்துரைகளை ஜெயாரிடம் வழங்கி, அவற்றின் அடிப்படையில் தனது தீர்வினை ஜெயார் வரைந்துகொள்ளலாம் என்றும், பண்டாரியின் இரண்டாவது விஜயம் தொடர்பாக அவரை ஆயத்தமாக இருக்கும்படி  கூறுமாறும் டிக்ஷிட்டைப் பணித்தார் ரஜீவ் காந்தி. ஆவணி 2 ஆம் திகதி கொழும்பு வந்திறங்கிய பண்டாரி, அன்று மாலையே ஜெயாரை அவரது உத்தியோகபூர்வ வாசஸ்த்தலத்தில் சந்தித்தார். இச்சந்திப்பில் லலித் அதுலத் முதலியும் உடனிருந்தார். ஜெயாருடனான தனது சந்திப்புப் பற்றி கொழும்பு அசைன்மென்ட்டில் எழுதும் டிக்ஷிட், திம்புப் பேச்சுக்களின் தோல்வி குறித்த இந்தியாவின் அதிருப்தியை ஜெயாரிடம் தெரிவித்ததுடன், இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட பரிந்துரைகளை அவரிடம் தான் வழங்கியதாகவும் கூறுகிறார். இச்சந்திப்புக் குறித்து நீலனிடம் பேசும்போது, "நான் கொடுத்த பரிந்துரைகளை வாங்கிப் படித்துவிட்டு, சிறிய புன்னகையுடன் அதனை அருகில் நின்ற லலித்திடம் கையளித்தார் ஜெயார்" என்று கூறியிருக்கிறார்.   மேலும், ஜெயாருடன் பேசிய டிக்ஷிட், இலங்கை அரசால் முதலாம் கட்டப் பேச்சுக்களில் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள், தமிழ்ப் போராளிகள் தமது ஆயுதங்களைக் கைவிட்டு சமாதானப் பேச்சுக்களுக்குத் திரும்புவதற்குப் போதுமான சலுகைகளைக் கொண்டிருக்கவில்லை என்றும் கூறினார். இடையில் குறுக்கிட்ட லலித் அதுலது முதலி, மிகவும் காட்டமான முறையில் இதற்குப் பதிலளித்தார். "இந்தியா தம்மை ஆதரிக்கிறது என்பதற்காக, தமிழர்கள் தாந்தோன்றித்தனமான முறையில் முன்வைக்கும் நிபந்தனைகள் எல்லாவற்றையும் நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்கிற கட்டாயம் எமக்கு இல்லை" என்று கூறியதுடன், "நீங்கள் தமிழ்ப் பயங்கரவாதிகளுக்கு எவ்வாறான உதவிகளைச் செய்துவருகிறீர்கள் என்பது குறித்தும் நாம் அறிவோம்" என்று நீண்ட விளக்கம் றினையும்  வழ‌ங்கினார். பின்னர் பேசிய ஜெயார், "இலங்கை அரசின் சார்பாக இரண்டாம் கட்டப் பேச்சுக்களை ஹெக்டர் ஜெயவர்த்தனவே நடத்துவார் என்பதனால், அவரிடமே இந்தியாவின் பரிந்துரைகளைக் கையளிக்கிறேன்" என்று டிக்ஷிட்டிடம் கூறினார். மேலும், பண்டாரியின் வருகையினை நாம் வரவேற்கிறோம், அவர் கூறப்போவதைச் செவிமடுக்கவும் ஆயத்தமாக இருக்கிறோம் என்று ரஜீவிடம் கூறுங்கள் என்று கூறினார்.   ஆவணி 8 ஆம் திகதி கொழும்பு வந்தடைந்த பண்டாரி, ஜனாதிபதி ஜெயவர்த்தன, பிரதமர் பிரேமதாச, வெளியுறவு அமைச்சர் ஹமீது, பாதுகாப்பமைச்சர் லலித் அதுலத் முதலி, எதிர்க்கட்சித் தலைவர் சிறிமா ஆகியோரைச் சந்தித்தார்.   ஆனால், பண்டாரியின் ஜெயாருடனான சந்திப்பு பலனற்றுப் போயிற்று. தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல்த் தீர்வொன்றினைக் காண்பதற்கு இந்தியாவினால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளின் அடிப்படையிலான தீர்வொன்றினை இலங்கை முன்வைக்க வேண்டும் என்று பண்டாரி ஜெயாரிடம் கூறினார். இரண்டாம் கட்டப் பேச்சுக்கள் மிகவும் முக்கியமானவை என்று இந்தியா கருதுவதாகவும் அவர் ஜெயாரிடம் தெரிவித்தார். இப்பேச்சுக்களும் தோல்வியடையும் பட்சத்தில் இலங்கை கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரும் என்று  அவர் ஜெயாரை எச்சரித்தார். ஆனால் பண்டாரியின் அழுத்தங்களினால் ஜெயாரைப் பணியவைக்க முடியவில்லை. பண்டாரியுடன் தீர்க்கமான பேச்சுக்களில் ஈடுபடுவதையே ஜெயார் தவிர்த்தார். பண்டாரியைக் கையாளும் பணியினை தனது சகோதரர் ஹெக்டர் ஜெயவர்த்தனவிடமும், லலித் அதுலத் முதலியிடமும் கையளித்தார் ஜெயார். "எனது சகோதரரே இரண்டாம் கட்டப் பேச்சுக்களையும் எமசார்பில் நடத்தவிருப்பதால், நீங்கள் அவரிடமே உங்களின் விளக்கங்களைக் கூறுங்கள்" என்று பண்டாரியை நோக்கிக் கூறினார் ஜெயார். மேலும், "லலித் இதுகுறித்து உங்களுடன் விளக்கமாகப் பேசுவார்" என்றும் அவரிடம் கூறினார்.  பிரேமதாசவுடனான பண்டாரியின் பேச்சுக்கள் பொதுவானவையாக இருந்தன. வழ‌க்கம்போல் "மகாத்மா காந்தியில் நான் மதிப்பு வைத்திருக்கிறேன், இந்தியாவை நேசிக்கிறேன்" என்று பிரேமதாச பண்டாரியிடம் பேசத் தொடங்கினார். பின்னர், பயங்கரவாதத்தினை முற்றாக அழித்துவிட இந்தியா இலங்கைக்கு உதவேண்டும் என்றும் அவர் கோரினார். "தமிழ்ப் பயங்கரவாதம் இருக்கும்வரை, அரசியல்த் தீர்விற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவானவை. சிங்கள மக்களின் பெருமையும், கெளரவமும் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறன. இந்த நிலையில் அவர்கள் எந்த விட்டுக் கொடுப்பிற்கும் முன்வரப்போவதில்லை. இலங்கையில் சமாதானமும், உறுதிப்பாடும் நிலைநாட்டப்படுவதில் இந்தியாவிற்கு இருக்கும் அக்கறையினை சிங்கள மக்கள் அறிவார்கள், ஆனால் பேச்சுக்களில் மத்தியஸ்த்தம் வகிக்க இந்தியா எடுத்துவரும் முயற்சிகளை சிங்கள மக்கள் சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்க்கிறார்கள். நீங்கள் தமிழர்கள் சார்பாகவே செயற்படுவதாக அவர்கள் முற்றாக நம்புகிறார்கள்" என்று அவர் பண்டாரியிடம் தெரிவித்தார். சிறிமாவுடனான சந்திப்பின்போது, "நான் திம்புப் பேச்சுக்கள் தோல்வியிலேயே முடிவடையும் என்று எதிர்பார்த்திருந்தேன். அப்படியே நடந்தது. ஏனென்றால், ஜெயவர்த்தன இப்பேச்சுக்களில் இதய சுத்தியுடன் ஈடுபடவில்லை. இரண்டாம் கட்டப் பேச்சுக்களுக்கும் இதே நிலைதான் ஏற்படும்" என்று பண்டாரியிடம் தெரிவித்தார் சிறிமா.    இலங்கையின் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவரான ஹெக்டர் ஜெயவர்த்தனவுடன் பேசும்போது, "பழைய விடயங்களைத் திரும்பத் திரும்ப பேச்சுவார்த்தை மேசையில் பேசுவதைத் தவிருங்கள், எதிர்காலம் குறித்து மட்டுமே நாம் பேசலாம்" என்று கெஞ்சுவது போலக் கோரினார் பண்டாரி. இலங்கை தனது தீர்வினை எந்தெந்த இடங்களில் மேம்படுத்த முடியும் என்பது குறித்த பரிந்துரைகளை இந்தியாவின் "கடப்பாடு அற்ற" ஆவணம் கொண்டிருப்பதாக அவர் சுட்டிக் காட்டினார். இதற்குப் பதிலளித்த ஹெக்டர், "1978 ஆம் ஆண்டு யாப்பின் வரையறைகளை நான் சரியாக ஆராய்ந்து, எனது ஆலோசனைகளை அவற்றின் அடிப்படையில்  முன்வைக்கிறேன்" என்று கூறினார். லலித்துடனான பண்டாரியின் சந்திப்பு வித்தியாசகாம இருந்தது. "கடப்பாடு அற்ற" என்கிற தொனியில் இந்தியா முன்வைத்த அனைத்து பரிந்துரைகளையும் லலித் திட்டவட்டமாக நிராகரித்தார். வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் இந்தியாவின் யோசனையினை இலங்கை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று பண்டாரியிடம் கூறினார் லலித். கிழக்கு மாகாணத்தில் சிங்களவர்களும் முஸ்லீம்களும் இணைந்து பெரும்பான்மையினராக மாறியிருப்பதாகவும், தமிழர்கள் அங்கு சிறுபான்மையினர் என்றும் அவர் கூறினார். மேலும், 1977 ஆம் ஆண்டுத் தேர்தலில் தனிநாட்டிற்கான ஆணையினை கிழக்கு மாகாண மக்கள் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு வழங்கவில்லை என்றும் அவர் வாதிட்டார். 1982 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலும், சர்வஜன வாக்கெடுப்பும் கிழக்கு மாகாணம் அரசாங்கத்திற்கு ஆதரவாக நிற்பதையே நிரூபித்திருக்கின்றன என்று தனது வாதத்திற்கு மேலும் வலுச் சேர்த்தார் லலித்.  அடுத்ததாக, மாகாண சபைகளுக்கு வழங்கப்படும் அதிகாரங்களை மேம்படுத்தலாம் என்கிற இந்தியாவின் ஆலோசனைகளையும் லலித் புறக்கணித்தார். மாகாண சபைகளுக்கு நிதியதிகாரம், காணியதிகாரம், சட்டம் ஒழுங்கு ஆதிகாரம் ஆகியவற்றை வழங்குவதை சிங்கள மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று அவர் கூறினார். தனிச் சிங்களச் சட்டத்தில் மாற்றங்களைச் செய்யும் அதிகாரமோ, அல்லது 1972 மற்றும் 1978 ஆம் ஆண்டு யாப்புகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் நாட்டின் ஒருமைப்பாடு, ஒற்றையாட்சி ஆகியவற்றில் மாற்றங்களைக் கொண்டுவரும் அதிகாரமோ இலங்கையில் எந்த அரசிற்கும் கிடையாது என்றும் அவர் கூறினார். "இந்த விடயங்களில் இலங்கையின் அரசானாலும், எதிர்க்கட்சியானாலும் அவர்கள் அனைவரினதும் நிலைப்பாடு ஒன்றுதான்" என்று மிகுந்த நம்பிக்கையுடன் பண்டாரியைப் பார்த்துக் கூறினார் லலித். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.