Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை காப்பாற்ற அனைத்து மத வழிபாட்டு தலங்களும் தங்களின் தங்கம் உள்ளிட்ட செல்வங்களை திறைசேரிக்கு வழங்க வேண்டும்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

PicsArt_03-22-10.03.02_copy_909x863.jpg

தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து

நாட்டை காப்பாற்ற மத வழிபாட்டு தலங்கள் இந்த நேரத்தில் ஒன்றிணைய வேண்டும் என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார்.
 
 
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தேரர் மேலும் தெரிவிக்கையில்,
 
 
வழிபாட்டு தலங்களின் செல்வங்களை திறைசேரிக்கு வழங்கினால் எதிர்காலத்தில் மக்களுக்கு நன்மை பயக்கும். மாற்றத்தையும் காண முடியும்.
 
 
மேலும் உரையாற்றிய ஓமல்பே சோபித தேரர்
 
"நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறது. முக்கிய பிரச்சனை கருவூலம் காலியாக உள்ளது.
 
கருவூலம் காலியாகி உள்ளதால் ஏற்பட்டுள்ள விளைவை நாடு முழுவதும் காண முடியுமாக உள்ளது .
 
 
 
2007 ஆம் ஆண்டு தாய்லாந்து அரசாங்கம் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட வேளை துறவிகள் முன் வந்து, அவர்களின் விகாரை செல்வங்களை, குறிப்பாக அங்கு வைத்திருந்த தங்கத்தை, அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
 
 
"இந்த நேரத்தில் நாம் இந்த உதாரணத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நாங்கள் பரிந்துரைக்கிறோம்.
 
நாட்டுல நிறைய பௌத்த மற்றும் ஏனைய மத வழிபாட்டுத் தலங்கள் உள்ளன, அவற்றில் ஏராளமான செல்வங்கள் உள்ளன.
 
தற்போதுள்ள மத ஸ்தலங்களிலிருந்து ஏதேனும் நன்கொடைகள் வழங்கப்பட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.
 
 
அறநிலையத்துறை, சில பொருளாதார நெருக்கடிகளை போக்க சில நன்கொடைகள் வழங்கப்படும், குறிப்பாக தங்கம் போன்ற வளங்களை கருவூலத்தில் வைப்பது, இது குறித்து அனைத்து மத தலைவர்களும், அனைத்து மத தலைவர்களும் கவனம் செலுத்தினால் நல்லது என நாங்கள் கருதுகிறோம்.
 
 
குறிப்பாக சமய நிறுவனங்களின் நிதியுதவியால் , இந்த நேரத்தில் மக்களுக்கு நன்மை பயக்கும். அதேவேளை நாட்டில் ஒரு மாற்றத்தை நாம் காண முடியும் என மேலும் தெரிவித்தார்.
  • கருத்துக்கள உறவுகள்

தலதா மாளிகையில் புத்தரின் பல்லு, உள்ள தங்கப் பெட்டகத்தை…
விற்று… அதனை, அரச கஜானவில் சேர்த்து…. முன் மாதிரியாக, பிக்குகள் இருப்பார்கள்
என எதிர்பார்க்கின்றோம்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு ஊழியத்துக்குப் போகின்ற / இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு (அட்டு) ஊழியத்துக்குப் போகின்ற பாஸ்டர்மாரிடம் நல்லதொரு எமவுண்ட் கறந்து விடவேண்டும் என்பது எனது அவா!👀

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் ஒரு இனக்கலவரத்தை தூண்டி.. தமிழர்களிடமும் கோவில்களிடமும் கொள்ளையடிச்சால் கூட ஆச்சரியப்பட முடியாது போல் இருக்குது நிலைமை. மொட்டைகளின் போக்கு அப்படித்தான் போகுது. ஆனால்.. இம்முறை முஸ்லிம்களும்  தமிழர்களோடு சேர்த்து அடி வாங்கவே அதிக வாய்ப்புள்ளது. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, தமிழ் சிறி said:

தலதா மாளிகையில் புத்தரின் பல்லு, உள்ள தங்கப் பெட்டகத்தை…
விற்று… அதனை, அரச கஜானவில் சேர்த்து…. முன் மாதிரியாக, பிக்குகள் இருப்பார்கள்
என எதிர்பார்க்கின்றோம்.

சிறித்தம்பி! ஒரு காலத்தில் எந்த கட்சியானாலும் சிங்கள அரச பதவிகளில் தமிழர்கள் முக்கிய இடத்தில் இருந்தார்கள். ஏற்றுமதி இறக்குமதியிலும் எந்த தளம்பல்களும் இல்லாமல் இருக்க வழிவகை செய்தார்கள். பல தமிழர்கள் அரசியல் / பொருளாதார ஆலோசகர்களாக இருந்தார்கள். அதனால் சிங்கள அரசுகளுக்கு பல விடயங்களில் அருமை பெருமை கஷ்டங்கள் தெரியாமல் ஆட்சி செய்தார்கள். ஏன் குறிப்பாக சொல்லப்போனால் ஈழவிடுதலைப்போராட்டத்தை அழிக்க தமிழர்களே முன்னின்று உதவினார்கள்.

இது ஒரு புறமிருக்க.....

சிறிலங்கா இனவாத அரசுகள் அன்று தொடக்கம் உலக நலன்புரி அமைப்புகளாலும் பல நாடுகளாலும் கிடைக்கும் நிவாரண உதவிகளையும் வைத்தே சிவனேயென்று  ஆட்சி நடத்தினார்கள். அதிலும் புயல் சூறாவளிகள் சுனாமிகள் என்று வந்துவிட்டால் ஆகா ஓகோ என கல்லா நிரம்பிவிடும். கொஞ்ச காலமாக அதுவுமில்லை. அதை விட  உள்நாட்டு போரை  காரணம் காட்டி செய்த தண்டல்களும் கொஞ்ச நஞ்சமல்ல....

ஆனால் இப்போது போரை வெற்றிகரமாக முறியடித்து விட்டோம் என்ற கூவலோடு போர் அவலத்துக்கான சர்வதேச அனுதாப அலையும் நின்று விட்டது. இயற்கை அழிவுகளும் இல்லை. கொரோனாவை கட்டுக்குள் வைத்திருந்தவர் என்ற நல்ல பெயரும்  அனுதாப அலையை தரவில்லை.

டொலர்,ஈரோ,பவுண்ஸ் கொண்டு  செல்பவர்களின் வரத்தும் குறைந்து விட்டது.

போரை வெற்றிகரமாக முறியடித்தேன். தனிச்சிங்கள வாக்குகளால் வெற்றி பெற்றேன் என சவால் விட்டவருக்கும்....
வா வந்து மோதிப்பார் என சவால் விட்ட உக்ரேன் காரருக்கும் என்ன வித்தியாசம்?

அரசன் அன்றறுப்பான் தெய்வம் நின்று கொல்லும்.
 "அறநெறி முதற்றே அரசின் கொற்றம்"  

  • கருத்துக்கள உறவுகள்

மந்திரி மக்களிடம் கேட்கிறார்..பிக்கர் கோயில்களில்கேட்கிறார்....என்னப்பா..உங்கை நடக்குது..

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

சிறித்தம்பி! ஒரு காலத்தில் எந்த கட்சியானாலும் சிங்கள அரச பதவிகளில் தமிழர்கள் முக்கிய இடத்தில் இருந்தார்கள். ஏற்றுமதி இறக்குமதியிலும் எந்த தளம்பல்களும் இல்லாமல் இருக்க வழிவகை செய்தார்கள். பல தமிழர்கள் அரசியல் / பொருளாதார ஆலோசகர்களாக இருந்தார்கள். அதனால் சிங்கள அரசுகளுக்கு பல விடயங்களில் அருமை பெருமை கஷ்டங்கள் தெரியாமல் ஆட்சி செய்தார்கள். ஏன் குறிப்பாக சொல்லப்போனால் ஈழவிடுதலைப்போராட்டத்தை அழிக்க தமிழர்களே முன்னின்று உதவினார்கள்.

இது ஒரு புறமிருக்க.....

சிறிலங்கா இனவாத அரசுகள் அன்று தொடக்கம் உலக நலன்புரி அமைப்புகளாலும் பல நாடுகளாலும் கிடைக்கும் நிவாரண உதவிகளையும் வைத்தே சிவனேயென்று  ஆட்சி நடத்தினார்கள். அதிலும் புயல் சூறாவளிகள் சுனாமிகள் என்று வந்துவிட்டால் ஆகா ஓகோ என கல்லா நிரம்பிவிடும். கொஞ்ச காலமாக அதுவுமில்லை. அதை விட  உள்நாட்டு போரை  காரணம் காட்டி செய்த தண்டல்களும் கொஞ்ச நஞ்சமல்ல....

ஆனால் இப்போது போரை வெற்றிகரமாக முறியடித்து விட்டோம் என்ற கூவலோடு போர் அவலத்துக்கான சர்வதேச அனுதாப அலையும் நின்று விட்டது. இயற்கை அழிவுகளும் இல்லை. கொரோனாவை கட்டுக்குள் வைத்திருந்தவர் என்ற நல்ல பெயரும்  அனுதாப அலையை தரவில்லை.

டொலர்,ஈரோ,பவுண்ஸ் கொண்டு  செல்பவர்களின் வரத்தும் குறைந்து விட்டது.

போரை வெற்றிகரமாக முறியடித்தேன். தனிச்சிங்கள வாக்குகளால் வெற்றி பெற்றேன் என சவால் விட்டவருக்கும்....
வா வந்து மோதிப்பார் என சவால் விட்ட உக்ரேன் காரருக்கும் என்ன வித்தியாசம்?

அரசன் அன்றறுப்பான் தெய்வம் நின்று கொல்லும்.
 "அறநெறி முதற்றே அரசின் கொற்றம்"  

எங்களுடைய பெரும் பிரச்சினைகளுக்கு... 
தமிழனே காரணம், என்பதை நினைக்கும்  போது..
மிகுந்த கவலையாக உள்ளது.
இப்படிப் பட்ட... கேடு கெட்ட இனம், உலகில்  வேறு எங்கும் இராது.

கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை எல்லாம்... 
ஆயிரமாண்டு காலமாக.. தவற விட்டுக் கொண்டே வருகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

எங்களுடைய பெரும் பிரச்சினைகளுக்கு... 
தமிழனே காரணம், என்பதை நினைக்கும்  போது..
மிகுந்த கவலையாக உள்ளது.
இப்படிப் பட்ட... கேடு கெட்ட இனம், உலகில்  வேறு எங்கும் இராது.

கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை எல்லாம்... 
ஆயிரமாண்டு காலமாக.. தவற விட்டுக் கொண்டே வருகின்றது.

தவற விடேல்ல சிறியர் தட்டில வைச்சு குடுத்தவை, இன்னும் குடுத்துக்கொண்டே இருக்கினம்!

  • கருத்துக்கள உறவுகள்

பிக்கிகள் தங்கள் கிட்னிகளை விற்று அந்த பணத்தை அரச கருவூலத்தில் சேர்த்தும்  சிங்கள பௌத்த நாட்டை காப்பாற்றலாம் 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

எங்களுடைய பெரும் பிரச்சினைகளுக்கு... 
தமிழனே காரணம், என்பதை நினைக்கும்  போது..
மிகுந்த கவலையாக உள்ளது.
இப்படிப் பட்ட... கேடு கெட்ட இனம், உலகில்  வேறு எங்கும் இராது.

கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை எல்லாம்... 
ஆயிரமாண்டு காலமாக.. தவற விட்டுக் கொண்டே வருகின்றது.

தமிழன் என்றால் எல்லோரும் தமிழரல்ல. யார் தமிழன் இல்லை என்பதைத் தன்னை இழந்து அறியத் தந்துள்ளான் தலைவன் பிரபாகரன்.  

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, colomban said:
தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து

நாட்டை காப்பாற்ற மத வழிபாட்டு தலங்கள் இந்த நேரத்தில் ஒன்றிணைய வேண்டும் என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார்.

இது சிங்கள பவுத்த நாடு, பவுத்தத்துக்கே முன்னுரிமை, தமிழர் வந்தேறுகுடிகள், இருக்க விரும்பினால் இருக்கலாம், அரசியல் தீர்வெல்லாம் கேட்கமுடியாது இன்னும் பல. சொன்னது யாமல்ல நீங்கள். இப்போ உங்கள் நாட்டையும், மதத்தையும் காப்பது உங்கள் கடமை. எங்களை ஏதிலிகளாக்கியது நீங்கள். எதையும் எங்களுக்கென்று நீங்கள் மிச்சம் மீதி வைக்கவில்லை. உங்களுக்கு கொடுப்பதற்கு எங்களிடம் தற்போது ஒன்றுமில்லை. எங்களை ஒடுக்க உங்களுக்கு கைகொடுத்தவர்களிடம் கேட்டுப்பாருங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

ஸீசெல்லில் உள்ள சொத்துக்களை விற்றால் போதுமானது.

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, தமிழ் சிறி said:

தலதா மாளிகையில் புத்தரின் பல்லு, உள்ள தங்கப் பெட்டகத்தை…
விற்று… அதனை, அரச கஜானவில் சேர்த்து…. முன் மாதிரியாக, பிக்குகள் இருப்பார்கள்
என எதிர்பார்க்கின்றோம்.

அந்தப் பல்லு புத்தரின் பல்லுத்தானா என்பதை முரளீதரனிடம் கேட்டால் சொல்லுவார்.  😉

16 hours ago, nedukkalapoovan said:

மீண்டும் ஒரு இனக்கலவரத்தை தூண்டி.. தமிழர்களிடமும் கோவில்களிடமும் கொள்ளையடிச்சால் கூட ஆச்சரியப்பட முடியாது போல் இருக்குது நிலைமை. மொட்டைகளின் போக்கு அப்படித்தான் போகுது. ஆனால்.. இம்முறை முஸ்லிம்களும்  தமிழர்களோடு சேர்த்து அடி வாங்கவே அதிக வாய்ப்புள்ளது. 

கோவிலில் கைவைது முடித்தபின்னர், அடுத்ததாக எங்கே கை வைப்பர்...? 

எதற்கும் தமிழ்ப் பெண்கள் தங்கள் தாலிகளை (நகைகளை) வங்கி பெட்டகங்களில் வைக்காதிருத்தல் நன்று .😀

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, colomban said:
தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து

நாட்டை காப்பாற்ற மத வழிபாட்டு தலங்கள் இந்த நேரத்தில் ஒன்றிணைய வேண்டும் என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார்.

இந்த மோட்டு சிங்கள இனவாத கூட்டம் 2000காலில் படை அதிகரிப்பை மேற்கொள்ளும்போது பலரும் அதிர்ந்தார்கள் தேவையற்ற படை அதிகரிப்பு யுத்தம் முடியாமல் இழுப்பட்டால் அல்லது முடிந்தாலும் பெரும் சுமையாக மாறும் எதிர்காலத்தில் என்று சொல்லப்பட்ட போது அவர்கள் சொன்னார்கள் தேவையற்ற படையினரை ஐநா அமைதிப்படையில் சேர்த்து அந்நிய செலவாணியை பெற்றுகொள்வம்.அது அவர்களின் படைகளினால் செய்த வேலைகளால் தற்போது 8000பேர் மட்டும் ஐநா அமைதி படையில் அதிலும் பலர் திருப்பி விடப்படுகிறார்கள் அந்த கதையும் ஊத்திக்கொண்டது.   யுத்தம் முடிந்தால் என்ற கேள்விக்கு பிரபாகரனிடம் டன் கணக்கில் தங்கம் வன்னியில் உள்ளது அதை கைப்பற்றி சிலவை சாமளிப்பம் என்றார்கள் யுத்தம் முடிந்து 12 வருடங்கள் ஆன பின்னும் இன்னும் தேடிக்கொண்டு இருக்கிறார்கள் இப்ப கோவில் நகைகளில் கண் வைக்கிறார்கள். 

11 minutes ago, Kapithan said:

அந்தப் பல்லு புத்தரின் பல்லுத்தானா என்பதை முரளீதரனிடம் கேட்டால் சொல்லுவார்.

சுறாவின் பல்லு போல் ஒரு பெரிய பல்லை வைத்து இருக்கிறார்கள் ஏன் இப்படி என்று கேட்டால் பல்லு வளருகிறதாம் அப்ப சிங்கப்பூரில் உள்ள புத்த மடாலய புத்த  பல்லு  ஏன் வளருதில்லை?

பதில் ஒரு பவுத்தனிடமும் இல்லை . 

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, குமாரசாமி said:

சிறித்தம்பி! ஒரு காலத்தில் எந்த கட்சியானாலும் சிங்கள அரச பதவிகளில் தமிழர்கள் முக்கிய இடத்தில் இருந்தார்கள். ஏற்றுமதி இறக்குமதியிலும் எந்த தளம்பல்களும் இல்லாமல் இருக்க வழிவகை செய்தார்கள். பல தமிழர்கள் அரசியல் / பொருளாதார ஆலோசகர்களாக இருந்தார்கள். அதனால் சிங்கள அரசுகளுக்கு பல விடயங்களில் அருமை பெருமை கஷ்டங்கள் தெரியாமல் ஆட்சி செய்தார்கள். ஏன் குறிப்பாக சொல்லப்போனால் ஈழவிடுதலைப்போராட்டத்தை அழிக்க தமிழர்களே முன்னின்று உதவினார்கள்.

இது ஒரு புறமிருக்க.....

சிறிலங்கா இனவாத அரசுகள் அன்று தொடக்கம் உலக நலன்புரி அமைப்புகளாலும் பல நாடுகளாலும் கிடைக்கும் நிவாரண உதவிகளையும் வைத்தே சிவனேயென்று  ஆட்சி நடத்தினார்கள். அதிலும் புயல் சூறாவளிகள் சுனாமிகள் என்று வந்துவிட்டால் ஆகா ஓகோ என கல்லா நிரம்பிவிடும். கொஞ்ச காலமாக அதுவுமில்லை. அதை விட  உள்நாட்டு போரை  காரணம் காட்டி செய்த தண்டல்களும் கொஞ்ச நஞ்சமல்ல....

ஆனால் இப்போது போரை வெற்றிகரமாக முறியடித்து விட்டோம் என்ற கூவலோடு போர் அவலத்துக்கான சர்வதேச அனுதாப அலையும் நின்று விட்டது. இயற்கை அழிவுகளும் இல்லை. கொரோனாவை கட்டுக்குள் வைத்திருந்தவர் என்ற நல்ல பெயரும்  அனுதாப அலையை தரவில்லை.

டொலர்,ஈரோ,பவுண்ஸ் கொண்டு  செல்பவர்களின் வரத்தும் குறைந்து விட்டது.

போரை வெற்றிகரமாக முறியடித்தேன். தனிச்சிங்கள வாக்குகளால் வெற்றி பெற்றேன் என சவால் விட்டவருக்கும்....
வா வந்து மோதிப்பார் என சவால் விட்ட உக்ரேன் காரருக்கும் என்ன வித்தியாசம்?

அரசன் அன்றறுப்பான் தெய்வம் நின்று கொல்லும்.
 "அறநெறி முதற்றே அரசின் கொற்றம்"  

பிரேமதாசாவுக்கு பஞ்சலிங்கங்கள் (5லிங்கங்கள்)

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பெருமாள் said:

பிரபாகரனிடம் டன் கணக்கில் தங்கம் வன்னியில் உள்ளது அதை கைப்பற்றி சிலவை சாமளிப்பம் என்றார்கள் யுத்தம் முடிந்து 12 வருடங்கள் ஆன பின்னும் இன்னும் தேடிக்கொண்டு இருக்கிறார்கள் இப்ப கோவில் நகைகளில் கண் வைக்கிறார்கள். 

  மகிந்தவின் மாளிகையை தோண்டினால் கிடைக்கும். மகிந்தவின் விரல்களில் மின்னியதெல்லாம் மறைந்திருக்கும் இதைக்கேட்டவுடன்!

  • கருத்துக்கள உறவுகள்

உங்கட கதையைக்கேட்டு திறைசேரிக்கு அனுப்பினால் , உவங்கள் அதில் எத்தனையை ஆப்பமிடுவிங்களோ. 🤔

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கந்தப்பு said:

உங்கட கதையைக்கேட்டு திறைசேரிக்கு அனுப்பினால் , உவங்கள் அதில் எத்தனையை ஆப்பமிடுவிங்களோ. 🤔

ஏப்பம்?

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Kapithan said:

அந்தப் பல்லு புத்தரின் பல்லுத்தானா என்பதை முரளீதரனிடம் கேட்டால் சொல்லுவார்.  😉

முரளீதரனுக்கு... புத்தரின் பல்லை பற்றி எப்படி தெரியும். 😂
அவர்... தொல் பொருள் ஆராய்ச்சியாளாரா? 🤣

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, தமிழ் சிறி said:

முரளீதரனுக்கு... புத்தரின் பல்லை பற்றி எப்படி தெரியும். 😂
அவர்... தொல் பொருள் ஆராய்ச்சியாளாரா? 🤣

குண்டு வைச்ச அவருக்குத் தெரிந்திருக்குமே அந்தக் குண்டுவெடிப்பில் புத்தரின் பல் தப்பியதா இல்லையா என்று..😀

(அந்தப் பல்லு அழிந்துவிட்டது என்பதுதான் நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறியது.)

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Kapithan said:

குண்டு வைச்ச அவருக்குத் தெரிந்திருக்குமே அந்தக் குண்டுவெடிப்பில் புத்தரின் பல் தப்பியதா இல்லையா என்று..😀

(அந்தப் பல்லு அழிந்துவிட்டது என்பதுதான் நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறியது.)

கபிதன்.... வசந்தியை, பரப்பதேங்கோ... பாவம் சிங்களவன். 🤣

தலதா மாளிகையில்... குண்டு வைத்த போது... 
வாசல் பகுதிதான் சேதமானது என நினைக்கின்றேன்.  
புத்தரின் பல் என்று... ஒன்று இருந்திருந்தால்????
அது... சேதமாக சந்தர்ப்பம் குறைவு என்றுதான் நினைக்கின்றேன். 🙂

  • கருத்துக்கள உறவுகள்
On 23/3/2022 at 03:20, தமிழ் சிறி said:

தலதா மாளிகையில் புத்தரின் பல்லு, உள்ள தங்கப் பெட்டகத்தை…
விற்று… அதனை, அரச கஜானவில் சேர்த்து…. முன் மாதிரியாக, பிக்குகள் இருப்பார்கள்
என எதிர்பார்க்கின்றோம்.

செய்வார்களா😂

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, தமிழ் சிறி said:

கபிதன்.... வசந்தியை, பரப்பதேங்கோ... பாவம் சிங்களவன். 🤣

தலதா மாளிகையில்... குண்டு வைத்த போது... 
வாசல் பகுதிதான் சேதமானது என நினைக்கின்றேன்.  
புத்தரின் பல் என்று... ஒன்று இருந்திருந்தால்????
அது... சேதமாக சந்தர்ப்பம் குறைவு என்றுதான் நினைக்கின்றேன். 🙂

குண்டுவெடிப்பின் பின்னர் அந்த விடயத்துடன் தொடர்புபட்டவர்களது கூற்றுக்களை அடிப்படையாகக்கொண்டே இதனைக் கூறினேன். 

புத்தரின் பல்லு என்பது இலங்கையில் பெளத்த மதத்தின் பிரசன்னத்தைக் குறிக்கும். அந்தப் பல்லு இல்லாதுபோனால் பெளத்தம் இலங்கையில் அழிந்துவிடும் என்பது அவர்களின் நம்பிக்கை. அதனால்தான் பண்டைய யுத்தங்களின்போது அரசர்கள் இதனைக் காப்பார்றவோ/கைப்பற்றவோ/ மறைத்து வைக்கவோ முயன்றனர். 

 

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, கந்தப்பு said:

உங்கட கதையைக்கேட்டு திறைசேரிக்கு அனுப்பினால் , உவங்கள் அதில் எத்தனையை ஆப்பமிடுவிங்களோ. 🤔

கந்தப்பு உங்களை கன்டதில் மகிழ்ச்சி.

  • கருத்துக்கள உறவுகள்
On ‎24‎-‎03‎-‎2022 at 11:34, Kapithan said:

குண்டு வைச்ச அவருக்குத் தெரிந்திருக்குமே அந்தக் குண்டுவெடிப்பில் புத்தரின் பல் தப்பியதா இல்லையா என்று..😀

(அந்தப் பல்லு அழிந்துவிட்டது என்பதுதான் நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறியது.)

இந்த செய்தி அந்த நேரம் புலிகள் சார்பு ஊடகங்களில் வந்தது ...இப்படியான செய்திகளாலும் புலிகளுக்கு அரசியல் ரீதியான பின்னடைவு ஏற்பட்டது ...உண்மையான புத்தரின் பல்லாக இருந்தால் இப்படி கவலையீனமாக வைத்திருப்பார்களா? 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.