Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

துமிலன் செல்வகுமாரன் ஈழத்தில் இருந்து தனது நான்காவது வயதில் யேர்மனிக்கு இடம் பெயர்ந்தவர். கணினித்துறையில் தனது தொழில்சார் கல்வியை முடித்திருந்தாலும், எழுதுவதில் உள்ள ஆர்வத்தால் பத்திரிகைத் துறைக்குள் நுழைந்து நிருபராக, புகைப்படக் கலைஞராக ஆரம்பித்து இன்று ஒரு பத்திரிகையின் ஆசிரியராகவும், எழுத்தாளராகவும்  செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்.

 

வெளிநாட்டவர்களுக்கு எதிராகச் செயற்படும் NSU என்ற திரைமறைவு அமைப்பின் கொலைகள் மற்றும் செயற்பாடுகளைப் பற்றிய    Geheimsache NSU என்ற புத்தகத்தை இவர் ஒன்பது எழுத்தாளர்களுடன் இணைந்து யேர்மனிய மொழியில்  எழுதி இருக்கின்றார்.  

thuminsubuch

2023இல் யேர்மனி-ஸ்வேபிஸ் ஹால் நகரில் நடந்த நான்கு விதவைகளின் தொடர் கொலைகளை ஆராய்ந்து பொலீஸாரின் கவனக்குறைவையும், அசட்டையீனத்தையும்  பத்திரிகையில் எழுதி, துமிலன் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

அதனுடைய சாராம்சம் கீழே இருக்கிறது.

வீட்டின் வரவேற்பறையின் நடைபாதையில்,  நிலவிரிப்பின் கீழ் பெரிய அளவில் உறைந்திருந்த இரத்தத்தின் அடையாளம், அறுந்து தொங்கிக் கொண்டிருந்த  தொலைபேசியின் வயர், வரவேற்பறையை ஒட்டி இருந்த சமையலறையில் தலையில் காயத்துடன்  இறந்த படி 86 வயதான எடித் லாங்கி என்ற மூதாட்டி  தரையில் கிடந்த  விதம் என்பன அங்கே ஒரு வன்முறை நிகழ்ந்திருந்தது  என்பதைத் துல்லியமாகக் காட்டின. அத்தோடு எடித் லாங்கியின் கைப்பை மற்றும் பணப்பை இரண்டும் திறந்தபடி வெறுமையாகக் காணப்பட்டன. ஆனால் காவல்துறையினரோ அதை ஒரு விபத்து மரணம் என்று அறிவித்து விட்டு அடுத்த வேலைக்குப் போய்விட்டார்கள். பொதுமக்களும் அந்த மரணத்தை பெரிதாகக் கண்டு கொள்ளவில் லை . Suedwest Presse-ஐச் சேர்ந்த நிருபரான துமிலன்  இதைப்பற்றி ஆய்வு செய்து பத்திரிகையில் எழுதிய பின்னரே எடித் லாங்கி என்ற மூதாட்டியின் மரணம், கொலை என்றும் அது தொடர்பான விபரங்களும் வெளிச்சத்துக்கு வந்தன. அதன்பின்னரே காவல்துறைத் தலைவர் தங்கள் தவறுக்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

3335f5c9-9a34-4bff-8a34-61abbc53a9b7

ஸ்வேபிஸ் ஹாலின் விதவை கொலைகள்" பற்றிய துமிலனது எழுத்துக்களை பிரதிநிதித்துவப்படுத்தும்,  "குருடாகப்  பறந்து கொண்டிருக்கும் அரசு ஊழியர்கள்" என்ற கட்டுரைக்கு ஜெர்மனியின் மிகவும் மதிப்புமிக்க பத்திரிகை பரிசுகளில் ஒன்றான Stern Award     12.06.2024, புதன்கிழமை மாலை Hamburg நகரில் அவருக்கு வழங்கப்பட்டது. மேலும்  தைரியமாக ஆராய்ந்து மேற்கொண்ட  அவரது செயற்பாடுகளுக்காக நடுவர் மன்றம் அவரைப் பாராட்டியும் இருக்கிறது.

Stern Award ஐப் பெற்றுக் கொண்ட துமிலன் செல்வகுமாரன், "நான் பொலிஸ் துறையின்  மேல் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன், இருப்பினும் ஸ்வேபிஸ் ஹாலில்நடந்த தொடர் கொலைகளை பொலீஸ் புலனாய்வாளர்கள் சரியான முறையில் கையாளவில்லைஎன்ற வருத்தத்தையும் விழா மேடையில் தெரிவித்தார்

116a1350-4e04-4891-a516-53e2e4d66116

நூறு ஊடகங்களிடம் இருந்து கிடைக்கப் பெற்ற 460 ஆக்கங்கள் Stern Awardக்காக ஆய்வு செய்யப்பட்டன. 48 பேர் கொண்ட நடுவர் குழு விருது குறித்து முடிவை எடுத்திருந்தது.

Stern சஞ்சிகை  இப்போது RTL Deutschland நிறுவனத்துக்கு சொந்தமானதாகும்.

 

துமிலன் செல்வகுமாரன் தந்த படங்கள், தகவல்களை வைத்தேபுதனும் புதிரும்என்று அந்தத் தொடர் கொலைகள் பற்றிய விபரங்களை யாழ் இணையத்தின்  26 அகவை சுய ஆக்கங்கள் பகுதியில்  நான் எழுதியிருந்தேன்.

 

-கவி அருணாசலம்

 

 

Edited by Kavi arunasalam
சில வரிகள் சேர்க்கப்பட்டன

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Kavi arunasalam said:

துமிலன் செல்வகுமாரன் ஈழத்தில் இருந்து தனது நான்காவது வயதில் யேர்மனிக்கு இடம் பெயர்ந்தவர். கணினித்துறையில் தனது தொழில்சார் கல்வியை முடித்திருந்தாலும், எழுதுவதில் உள்ள ஆர்வத்தால் பத்திரிகைத் துறைக்குள் நுழைந்து நிருபராக, புகைப்படக் கலைஞராக ஆரம்பித்து இன்று ஒரு பத்திரிகையின் ஆசிரியராகவும், எழுத்தாளராகவும்  செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்.

thuminsubuch

2023இல் யேர்மனி-ஸ்வேபிஸ் ஹால் நகரில் நடந்த நான்கு விதவைகளின் தொடர் கொலைகளை ஆராய்ந்து பொலீஸாரின் கவனக்குறைவையும், அசட்டையீனத்தையும்  பத்திரிகையில் எழுதி, துமிலன் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

அதனுடைய சாராம்சம் கீழே இருக்கிறது.

வீட்டின் வரவேற்பறையின் நடைபாதையில்,  நிலவிரிப்பின் கீழ் பெரிய அளவில் உறைந்திருந்த இரத்தத்தின் அடையாளம், அறுந்து தொங்கிக் கொண்டிருந்த  தொலைபேசியின் வயர், வரவேற்பறையை ஒட்டி இருந்த சமையலறையில் தலையில் காயத்துடன்  இறந்த படி 86 வயதான எடித் லாங்கி என்ற மூதாட்டி  தரையில் கிடந்த  விதம் என்பன அங்கே ஒரு வன்முறை நிகழ்ந்திருந்தது  என்பதைத் துல்லியமாகக் காட்டின. அத்தோடு எடித் லாங்கியின் கைப்பை மற்றும் பணப்பை இரண்டும் திறந்தபடி வெறுமையாகக் காணப்பட்டன. ஆனால் காவல்துறையினரோ அதை ஒரு விபத்து மரணம் என்று அறிவித்து விட்டு அடுத்த வேலைக்குப் போய்விட்டார்கள். பொதுமக்களும் அந்த மரணத்தை பெரிதாகக் கண்டு கொள்ளவில் லை . Suedwest Presse-ஐச் சேர்ந்த நிருபரான துமிலன்  இதைப்பற்றி ஆய்வு செய்து பத்திரிகையில் எழுதிய பின்னரே எடித் லாங்கி என்ற மூதாட்டியின் மரணம், கொலை என்றும் அது தொடர்பான விபரங்களும் வெளிச்சத்துக்கு வந்தன. அதன்பின்னரே காவல்துறைத் தலைவர் தங்கள் தவறுக்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

3335f5c9-9a34-4bff-8a34-61abbc53a9b7

ஸ்வேபிஸ் ஹாலின் விதவை கொலைகள்" பற்றிய துமிலனது எழுத்துக்களை பிரதிநிதித்துவப்படுத்தும்,  "குருடாகப்  பறந்து கொண்டிருக்கும் அரசு ஊழியர்கள்" என்ற கட்டுரைக்கு ஜெர்மனியின் மிகவும் மதிப்புமிக்க பத்திரிகை பரிசுகளில் ஒன்றான Stern Award     12.06.2024, புதன்கிழமை மாலை Hamburg நகரில் அவருக்கு வழங்கப்பட்டது. மேலும்  தைரியமாக ஆராய்ந்து மேற்கொண்ட  அவரது செயற்பாடுகளுக்காக நடுவர் மன்றம் அவரைப் பாராட்டியும் இருக்கிறது.

Stern Award ஐப் பெற்றுக் கொண்ட துமிலன் செல்வகுமாரன், "நான் பொலிஸ் துறையின்  மேல் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன், இருப்பினும் ஸ்வேபிஸ் ஹாலில்நடந்த தொடர் கொலைகளை பொலீஸ் புலனாய்வாளர்கள் சரியான முறையில் கையாளவில்லைஎன்ற வருத்தத்தையும் விழா மேடையில் தெரிவித்தார்

116a1350-4e04-4891-a516-53e2e4d66116

நூறு ஊடகங்களிடம் இருந்து கிடைக்கப் பெற்ற 460 ஆக்கங்கள் Stern Awardக்காக ஆய்வு செய்யப்பட்டன. 48 பேர் கொண்ட நடுவர் குழு விருது குறித்து முடிவை எடுத்திருந்தது.

Stern சஞ்சிகை  இப்போது RTL Deutschland நிறுவனத்துக்கு சொந்தமானதாகும்.

 

துமிலன் செல்வகுமாரன் தந்த படங்கள், தகவல்களை வைத்தேபுதனும் புதிரும்என்று அந்தத் தொடர் கொலைகள் பற்றிய விபரங்களை யாழ் இணையத்தின்  26 அகவை சுய ஆக்கங்கள் பகுதியில்  நான் எழுதியிருந்தேன்.

 

-கவி அருணாசலம்

 

 

தகவல்களுக்கு நன்றிகள் பல.  ஜேர்மனியில் ஒரு தமிழனின் திறமையை  பார்த்து மகிழ்ச்சியடைகிறேன். வாழ்த்துக்கள் 🙏

  • கருத்துக்கள உறவுகள்

துமிலனின் தைரியத்தை மிகவும் போற்றுகின்றேன் ..........!  👍

நன்றி கவி அவர்களே.......!  

  • கருத்துக்கள உறவுகள்

மூனா அண்ணாவின் மகன் துமிலனுக்கு Stern Award விருது கிடைத்ததில் நாங்களும் பெருமைப்படுகின்றோம்🙌

துணிச்சல் மிக்க துமிலனுக்கு பாராட்டுக்கள்👏👏👏

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்

நல்வாழ்த்துக்கள் துமிலனுக்கு. 

all-the-best.jpg

துமிலனுக்கும் அவரது அப்பா மூனா வுக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்!

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தந்தை.

  • கருத்துக்கள உறவுகள்

வழ்த்துகளும் பாராட்டுகளும் துமிலனுக்கு!!

  • கருத்துக்கள உறவுகள்

துமிலன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்  Stern Award விருது கிடைத்ததில் நாங்களும் பெருமைப்படுகின்றோம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

துமிலனுக்கும் அவர் பெற்றோருக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
சாதனைகள் படைக்க வாழ்த்துகள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kavi arunasalam said:

வீட்டின் வரவேற்பறையின் நடைபாதையில்,  நிலவிரிப்பின் கீழ் பெரிய அளவில் உறைந்திருந்த இரத்தத்தின் அடையாளம், அறுந்து தொங்கிக் கொண்டிருந்த  தொலைபேசியின் வயர், வரவேற்பறையை ஒட்டி இருந்த சமையலறையில் தலையில் காயத்துடன்  இறந்த படி 86 வயதான எடித் லாங்கி என்ற மூதாட்டி  தரையில் கிடந்த  விதம் என்பன அங்கே ஒரு வன்முறை நிகழ்ந்திருந்தது  என்பதைத் துல்லியமாகக் காட்டின. அத்தோடு எடித் லாங்கியின் கைப்பை மற்றும் பணப்பை இரண்டும் திறந்தபடி வெறுமையாகக் காணப்பட்டன. ஆனால் காவல்துறையினரோ அதை ஒரு விபத்து மரணம் என்று அறிவித்து விட்டு அடுத்த வேலைக்குப் போய்விட்டார்கள். பொதுமக்களும் அந்த மரணத்தை பெரிதாகக் கண்டு கொள்ளவில் லை . Suedwest Presse-ஐச் சேர்ந்த நிருபரான துமிலன்  இதைப்பற்றி ஆய்வு செய்து பத்திரிகையில் எழுதிய பின்னரே எடித் லாங்கி என்ற மூதாட்டியின் மரணம், கொலை என்றும் அது தொடர்பான விபரங்களும் வெளிச்சத்துக்கு வந்தன. அதன்பின்னரே காவல்துறைத் தலைவர் தங்கள் தவறுக்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

இத்தனையும் நீங்களும் எழுதியிருந்தீர்களே.

துமிலனுக்கு பாராட்டுக்கள்.

மேலும் சாதனை படைக்க வேண்டுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

துமிலனுக்குப் பாராட்டுகள்👏👏

4 hours ago, Kavi arunasalam said:

தனது தொழில்சார் கல்வியை முடித்திருந்தாலும், எழுதுவதில் உள்ள ஆர்வத்தால் பத்திரிகைத் துறைக்குள் நுழைந்து நிருபராக, புகைப்படக் கலைஞராக ஆரம்பித்து இன்று ஒரு பத்திரிகையின் ஆசிரியராகவும், எழுத்தாளராகவும்  செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்

அவரது ஆர்வத்தை தடுக்காமல் ஊக்குவித்த பெற்றோர்களுக்கும் பாராட்டுகள்.. 

  • கருத்துக்கள உறவுகள்

துமிலன் செல்வகுமாரனுக்கு பாராட்டுக்கள்.
ஊடகத்துறையில் அதுகும் பெருமை மிக்க “Stern Award“ பெறுவது சாதனையான விடயம். 👍🏽
பத்திரிகை ஆசிரியர் + எழுத்தாளர் துமிலனுக்கும் அவரது பெற்றோருக்கும் வாழ்த்துக்கள். 💐

  • கருத்துக்கள உறவுகள்

துமிலன் செல்வகுமாரனுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

  • கருத்துக்கள உறவுகள்

துமிலனுக்கும் ,அவரைப் பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்…!

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள் துமிலன் செல்வகுமாரன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி,

உங்கள் அனைவரது வாழ்த்துகளையும், பாராட்டுதல்களையும் துமிலனுக்கும் தெரியப்படுத்துகிறேன்🙏

  • கருத்துக்கள உறவுகள்

துமிலன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

எழுத்தாளர் துமிலனுக்கு பாராட்டுகளைத் தெரிவிக்கிறேன்.  தொடர்க அவர் பணி.

  • கருத்துக்கள உறவுகள்

எழுத்தாளர் துமிலனுக்கும், பெருமைக்குரிய அவர் பெற்றோருக்கும் வாழ்த்துக்கள்!

ஆசியப் பெற்றோர் வெளிநாடுகளில் "மருத்துவர், பொறியியலாளர், முதலீட்டு வங்கியாளர்" என்ற தடங்களில் மட்டும் தங்கள் குழந்தைகளைத் தள்ளி விட்டுக் கொண்டிருக்கும் நிலையில், பத்திரிகைத் துறையில் பிள்ளையை அனுமதித்து, பிரகாசிக்க விட்டிருக்கிறீர்கள். எழுத்தாளர் முத்துலிங்கத்தின் மகன், ஒரு National Geographic ஒளிப் படக்கலைஞராக ஒளிர்கிறார் என்று அவரது தந்தையின் ஒரு கட்டுரையில் அறிந்தேன். எல்லாத் துறைகளிலும் எங்கள் ஆட்கள் கொடி நாட்ட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

புலிக்குப் பிறந்தது பூனையாகுமா….? அதுவும் தந்தை ஆண்புலி, தாய் பெண்புலி, இருவருமே எழுத்துலகிலும் கால்பதித்துப் பாராட்டுப் பெற்றவர்கள். குட்டி 16அடி பாய்ந்து அதுவும் Stern Award பெற்றதில் வியப்பேதும் இல்லை. குட்டி துமிலனை மனசார வாழ்த்துகிறோம்.🙌

நெஞ்சில் நின்றவை’ என்ற தொகுப்பில் தாயகத்தின் நினைவுகளை மூனா என்ற புனைப்பெயரில் பதிந்திருந்த துமிலனின் தந்தை செல்வகுமாரன் அவர்கள், ‘மறக்க மறுக்கும் மனசு’ தொகுப்பில் புலத்தின் வாழ்வையும் பதிந்துள்ளார். அவரது சித்திரங்கள், கேலிச்சித்திரங்களை யாழ்களமே வியந்து பாராட்டியுள்ளது சொல்லித் தெரியவேண்டியதில்லை. 

தாய் சந்திரவதனா செல்வகுமாரன் அவர்களின் எழுத்துக்களை ஐபிசி தமிழ் வானொலி உற்சாகமாக வரவேற்றுக் கொண்டுள்ளது. அவரது கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், ஆய்வுகள், விமர்சனங்கள் எனப் பலதரப்பட்டவைகள் வானொலிகள், பத்திரிகைகள், சஞ்சிகைகள், இணையத்தளங்கள் எனப் பலவற்றிலும் பரவி நிற்கின்றன.

தன் குடும்பத்திற்கு  மேலும் பெருமை சேர்த்த துமிலனுக்கு மீண்டும் ஒருமுறை பாராட்டுகளைத் தெரிவிப்பதில் மகிழ்வடைகிறோம்.😀

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்ப் பெற்றோர் பெரியளவில் ஆர்வம்காட்டாத மற்றும் ஊக்குவிக்காத துறையான ஊடகத்துறையிலே யேர்மனியில் துணிச்சலான ஒரு ஊடகவியலாளராகச் சாதனைபடைத்திருப்பதோடு, பெற்றோருக்கு மட்டுமல்லத் தமிழனத்துக்கே பெருமை சேர்த்துள்ள  துமிலன் செல்வக்குமரன் அவர்களைப் பாராட்டி வாழ்த்துகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள் துமிலன் செல்வகுமாரன்🌹.உங்கள் பணி மேலும் தொடரட்டும்.🌺

 
  • கருத்துக்கள உறவுகள்

துமிலன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 

எம்பிள்ளைகள் அனத்துத்துறைகளிலிலும் சிகரம் தொட வேண்டும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.