Jump to content

கணவனோ,மனைவியோ எப்படி இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பு உங்களி டம் இருந்ததா...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துகளத்தில் எழுதும் அனைவரும் எனக்கு கல்யாணம் கட்டி வைக்காமல் ஓய மாட்டார்கள் என நினைக்கிறேன் முக்கியமாக விசுகு அண்ணா...ஆனால் எனக்கு வரப் போகும் கணவர் எப்படி இருக்க வேண்டும் என சில எதிர்பார்ப்புகள் எனக்கு உண்டு தானே எனது எதிர்பார்ப்புகளை எழுதுகிறேன்;

என்னிலும் பார்க்க அழகாய் இருக்க கூடாது[அதற்காக நான் பெரிய அழகு என்று இல்லை...என்னுடைய கண் சிறிதாக இருக்கிறது என சொல்லி ஒருவர் என்னை ரிஜக்ட் பண்ணினார்.] :lol:

என்னிலும் பார்க்க குறைந்தது 2 வயதாவது கூட இருக்க வேண்டும்.

அதிகம் படித்திருக்க கூடாது[முக்கியமாக விஞ்ஞான துறையை சேர்ந்தவராக இருக்க கூடாது]...மெத்தப் படித்த எம் ஆட்களுக்கு கர்வம் அதிகம் என நான் நினைக்கிறேன்.

அன்பு,பாசம் மிக்கவராகவும் என்னை உள்ளங்கையில் வைத்து தாங்குபவராகவும் இருக்க வேண்டும்[அதற்காக நான் சொன்னதெல்லாம் சரி என ஆமாம் சாமி போடக் கூடாது]

சுயமாக முடிவு எடுக்க கூடியவராக இருக்க வேண்டும்[என்னையும் கலந்து ஆலோசிக்க வேண்டும்]

சோம்பல் அற்ற உழைப்பாளியாக இருக்க வேண்டும்.

கொஞ்சம் பணம் வைத்திருக்க வேண்டும்.

எனக்கு கடவுள் பக்தி அதிகம்...என்னோடு கோயிலுக்கு கட்டாயம் வர வேண்டும்.

இது எனது ஆசை எனது கணவர் எப்படி இருக்க வேண்டும் என...உங்களுடைய கணவன்/மனைவி எப்படி இருக்க வேண்டும் என நினைத்தீர்கள்...உங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ற மாதிரி இருந்தார்களா...எங்கே எதிர்பார்ப்புகளை நீங்களும் எழுதுங்கள் பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

  • Replies 58
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

.

மனைவி நிச்சயம் படித்திருக்க வேண்டும்.

கணவனின் உதவியை எதிர்பார்க்காது அலுவலக வேலைகலை தனியே செய்யத் தெரிய வேண்டும்.

பிள்ளைகளுக்கு பாடங்கள் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

அதிக அலங்காரம் கூடாது.

நகைச்சுவை உணர்வு இருக்க வேண்டும்.

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கட எதிர்பார்ப்புக்கு ஏற்றமாதிரிஆள் பிடிப்பது வெகு சுலபம்.சுருக்கமாக சொன்னால் 3 வேலைக்கு போக வேனும்.அது சரி கண் சின்னன் என்டதுக்காகவா ரிஜட் :lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கணவன் அன்பான்வனாய் இருக்க வேண்டும்..........ஆனால் இடையிடை கோபம் ( கொதி.... சத்தம்)எட்டிபார்கிறது.

அது மனித இயல்பு தானே.

Link to comment
Share on other sites

.

நல்ல அழகாய் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். இது தான் நாம் உனக்குப் பார்த்திருக்கும் பெண் என்றார்கள்.படத்தைப் பார்த்ததுமே பிடித்துக் கொண்டது. அவர்கள் காட்டிய முதலும் கடைசியுமான படம்.

இன்று...

அழகு மாத்திரம் போதாது என்று உணர்கிறேன். வாழ்க்கை சவால்கள் நிறைந்தது. குறிப்பாக பிள்ளைகள் பிறந்ததும் வாழ்க்கைச் சக்கரம் மிகவும் விரைவாகச் சுழலத் தொடங்கும். இக்கட்டத்தில் ஆண் தன் தோள் மீதுள்ள சுமையின் ஒரு பங்கையாவது பெண் ஏற்கவேண்டும் என்று எதிர்பார்ப்பான்.

நன்பர்களின் மனைவிமார்களில் சிலர் அழகாகவும் நல்ல‌ திறமைசாலிகளாகவும் இருக்கிறார்கள். இவர்களைப் பார்க்கும் போது நாம் பின்தங்கி விட்டோமோ என்ற எண்ணம் ஏற்படும்.

எல்லாம் சரிவர அமையாது என்று சமாதானப் படுத்திக் கொள்ள வேண்டியது தான். வேற வழி ? :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதிகமான எதிர்பார்ப்புக்களுடன் ஆழமான கிணற்றுக்குள் வீழ்ந்து தத்தளிப்பதை விட கிடைத்த வாழ்க்கையை மெருகூட்டி சில விட்டுக் கொடுப்புக்களுடன் ஒருவரை ஒருவர் புரிந்து நடந்து கொண்டால் எல்லோர் வாழ்க்கையும் இனிக்கும்.

சந்தர்ப்ப சூழ் நிலையால் நல்லவன் கெட்டவனாகலாம்.

உழைப்பாளி ஊதாரியாகலாம்.

படித்தவன் அறிவிழந்து கொலைகாரனாகலாம்

அந்த நேரத்திலும் ஒருவருக்கொருவர் புரிந்துணர்வுடன் நடந்து கொண்டால் மீண்டும் வாழ்க்கை இனிக்கும்

நினப்பதெல்லாம் நடந்து விட்டால்..........

வாத்தியார்

*********

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கட எதிர்பார்ப்புக்கு ஏற்றமாதிரிஆள் பிடிப்பது வெகு சுலபம்.சுருக்கமாக சொன்னால் 3 வேலைக்கு போக வேனும்.அது சரி கண் சின்னன் என்டதுக்காகவா ரிஜட் :blink::lol:

மெத்தப் படித்தவராக இருக்க கூடாது என எழுதினானே தவிர ஒன்றுமே படிக்காதவராய் இருக்க கூடாது என எழுதவில்லை.

கருத்துகளை எழுதியவர்களுக்கு நன்றி...குறிப்பாக ஈசனுக்கு நன்றி...தனது வாழ்க்கையை துணிந்து எழுதியுள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் நெடுக்சை சீண்டத்தான் எழுதினேன்

தங்களை அது பாதித்து தாங்கள் இந்த வில்லங்கமான விளம்பரத்துக்கு தள்ளப்பட்டிருந்தால்....

மன்னிக்கவும்

இனி தங்களது கேள்விகளுக்கு பதில் எழுதமாட்டேன்

நன்றி மகளே...

Link to comment
Share on other sites

... என்னை உள்ளங்கையில் வைத்து தாங்குபவராகவும் இருக்க வேண்டும்...

ரதி தெரியாமல் தான் கேட்கிறேன், நீங்கள் என்ன எலுமிச்சைப் பழ சைசிலையா இருகிறீங்கள், உங்களை உள்ளங்கையில் வைத்துத் தாங்குவதற்கு?? :D :D :D:blink::lol: இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரிய இல்லையா???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கட எதிர்பார்ப்புக்கு ஏற்றமாதிரிஆள் பிடிப்பது வெகு சுலபம்.சுருக்கமாக சொன்னால் 3 வேலைக்கு போக வேனும்.அது சரி கண் சின்னன் என்டதுக்காகவா ரிஜட் :blink::lol:

ஐஸ்வர்யா ராய் மாதிரி கண் இருக்கவேண்டுமென்று விரும்பியிருக்கலாம். தப்பில்லைத்தானே :D

Link to comment
Share on other sites

கெமிஸ்ட்ரியின் அடிப்படையில் (இருபக்கமும்) கல்யாணம் கட்டினால்தான் சரிவர வாய்ப்பு அதிகம். அது வேணும் இதுவேணும் எண்டு கணக்குப் பார்த்துக் கட்டினால் களபுளதான்..! :blink:

Link to comment
Share on other sites

நான் முந்தி நல்ல நிறமான பொம்பிளை வேணும் எண்டு சொல்லும் போது அம்மா சொல்லுவா "அழகெல்லாம் சதை ஆழம்" எண்டு. அது எவ்வளவு உண்மை எண்டுறது, இப்ப எனக்கு புரியுது. நீ யாரை விரும்புகிறாய் எண்டுறதை விட உன்னை விரும்புகிறவனை/வளை கட்டினால் வாழ்க்கை இனிக்கும் எண்டுறது என்னுடைய கருத்து :blink: . அதுக்காக சும்மா எல்லாரையும் கட்ட ஏலாது, மற்றது சிலருக்கு இது பொருந்தாது. ன்ன வாழ்க்கையிலேயே ஒரே ஒரு பெண்ணையே விரும்பினேன், இன்று அவளையே கட்டும் நிலைக்கும் வந்துள்ளேன். இடையில் எத்தனையோ சண்டைகள் கோபங்கள் வந்திருக்கும் ஆனாலும் நான் மிக மிக பொறுமையாக இருந்துள்ளேன். (கலியாணம் கட்டின ஆக்களுக்கு விளங்கும் :D , பொம்பிளையல் தேவையில்லாத பல விடயங்களுக்காக சண்டை பிடிப்பினம் ஆனாலும் உள் மனதில எப்பவும் அன்பு இருக்கும்) :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரி! அந்த பிரமனே வந்து உங்களிடம் நீங்கள் விரும்பியபடி ஒரு ஆளை அழகு, குணத்துடன் படைத்து கட்டிக்கொள் என்று சொன்னாலும் அதுவும் சில நாளில் அலுத்துப் போகும். ஏனெனில் மனமானது அப்படிப் பட்டது. அதை விட இயல்பாக ஒருத்தரை மணந்து ஒருத்தருக் கொருத்தர் சில பல விடயங்களை விட்டுக்கொடுத்து அனுசரித்து அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பின்றி வாழ்த்தால் அது ஆயுள் வரை நீடிக்கும்!

(கலியாணம் கட்டின ஆக்களுக்கு விளங்கும் , பொம்பிளையல் தேவையில்லாத பல விடயங்களுக்காக சண்டை பிடிப்பினம் ஆனாலும் உள் மனதில எப்பவும் அன்பு இருக்கும்)

அது ....... . அதப் புரிந்து கொண்டால் சரி! :blink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் நெடுக்சை சீண்டத்தான் எழுதினேன்

தங்களை அது பாதித்து தாங்கள் இந்த வில்லங்கமான விளம்பரத்துக்கு தள்ளப்பட்டிருந்தால்....

மன்னிக்கவும்

இனி தங்களது கேள்விகளுக்கு பதில் எழுதமாட்டேன்

நன்றி மகளே...

விசுகு அண்ணா நீங்கள் என்ன சின்னப் பிள்ளையா...எதுக்கு இந்த கோபம்...கோபத்தை எல்லாம் விட்டு விட்டு விடுங்கள்...என்னை உங்கள் சகோதரியாக நினைத்தால் உடனே வந்து உங்கள் கருத்தை எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

(கலியாணம் கட்டின ஆக்களுக்கு விளங்கும் , பொம்பிளையல் தேவையில்லாத பல விடயங்களுக்காக சண்டை பிடிப்பினம் ஆனாலும் உள் மனதில எப்பவும் அன்பு இருக்கும்)

அது ....... . அதப் புரிந்து கொண்டால் சரி! :D

எனக்கு நிறைய எதிர்பார்ப்புண்டு. அதையெல்லாம் சொல்லி பிரயோசனம் இல்ல. ஏன்னா அத்தனை தகுதிகளோடும் உள்ளவையை கண்டுபிடிக்கிறது மகா கஸ்டம்..! ஏன் சும்மா எழுதி நேரத்தை வேஸ்ட் பண்ணுவான். :blink::D

உள் மனதில அன்பை வைச்சிருந்து என்னத்தப் பண்ணுறது. வெளியில காட்டாத அன்பும்.. வெளில புழங்காத பணமும் பெறுமதியற்றவை. கறுப்பானவை. (எப்படி இருக்கு நம்ம தத்துவம்).

நாங்க எப்படித்தான் அன்பா இருந்தாலும் சண்டை பிடிப்பினமா...??! அப்படியான விளக்கம் கெட்டதுகளோட வேணாம் வாழ்க்கையில சகவாசம். தனிய வாழ்வது கூடிய சுதந்திரம் என்று நினைக்கிறன். :lol:

Link to comment
Share on other sites

வாத்தியார், இசைக்கலைஞன், சுவி ஆகியோரின் கருத்துக்கள் நிதர்சனமானவை. அப்படி அனுபவப்பட்டவர்களின் கருத்துக்களை கவனத்தில் எடுங்கள். ஆரம்பத்திலேயே ஒருவரை ஒருவர் அறிந்து, புரிந்துகொண்டு நடப்பதே நல்லது. தொடக்கத்திலேயே நிறைய 'பில்ட் அப்' கொடுத்தால், அதை தொடர்வது கஷ்டமாகிவிடும். திருமணம் என்பது வாழ்க்கைத்துணை ஒன்றை தேடிக்கொள்வதாகும்.

உங்களுக்கு நல்ல ஒரு வாழ்க்கைத்துணை அமைய வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா நீங்கள் என்ன சின்னப் பிள்ளையா...எதுக்கு இந்த கோபம்...கோபத்தை எல்லாம் விட்டு விட்டு விடுங்கள்...என்னை உங்கள் சகோதரியாக நினைத்தால் உடனே வந்து உங்கள் கருத்தை எழுதுங்கள்.

எங்கிருந்தாலும் அந்த இடத்தை கலகலப்பாக வைத்திருப்பது எனது சுபாவம்

அது எல்லை மீறினால் நிறுத்திவிடுவேன்

நன்றி சகோதரி

நேரம் இருக்கும்போது...

தங்களது கேள்விக்கு பதில் எழுதுகின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது அனுபவங்கள் சிலவேளை தங்களுக்கு உதவக்கூடும்

சிறு வயதிலிருந்தே

நடக்கக்கூடியவையையே நினைப்பது எனது பழக்கம்

போட்டியான எந்த பொருளுக்கும் ஆசைப்பட மாட்டேன்

போட்டியில் அது எனக்கு கிடைப்பது கூட எனக்கு ஒவ்வாதது

ஏனெனில் அதுவும்யார் யாரிடமிருந்து எல்லாம்தப்பி வந்திருக்கிறது

இனியும் இது போன்ற போட்டி வரும்

அதிலிருந்தும் நான் ஜெயிக்கவேண்டும் என்பது எனக்கு தெரியும்

உண்மையில் இதை நாம்உணரவேண்டும்

அத்துடன் எமது பெருமைகளையும் திறமைகளையும்அறிந்திருப்பதற்கு அப்பால்

எமது இயலாமைகளையும் குறைகளையும் நாம் அறிந்திருக்கவேண்டும்

சிலர் என்னிடம் சொல்வார்கள்

சுண்டினால் சிவக்கும் பெண் வேண்டும் என்று

நான் அவர்களுக்கு சொல்வேன்

உனது முகத்தை கண்ணாடியில் பார்த்துக்கொண்டு இதைச்சொல் என்று.

உனக்கிருக்கும் ஆசைகளைப்போல்தான் எமக்கு வருபவருக்கும்இருக்கும் என்பதை மறப்பவர்கள் ஒரு நாளும் நிம்மதியாக வாழமுடியாது. அவர்கள் அந்தக்காலத்தில் போல

தமக்கு வருபவர்களை வீட்டில் பூட்டி வைக்கும்மனப்பக்குவத்துடனேயே வாழ்க்கையை தொடங்குகின்றனர்.

ஆனால் காலப்போக்கில் பொருளாதார சிக்கல்களில் மூழ்கி இரண்டும் கெட்டானாகி எல்லாவற்றையும் தொலைத்துவிடுகின்றனர்.

எனது பருவ வயதில் நான் சில விடயங்களில் மிகவும் கண்ணும் கருத்துமாக இருந்தேன்

யாரைக்கட்டவேண்டும்

அதனால் எனக்கு ஏற்படும் சாதக பாதக பலன்களை துல்லியமாகவும் ஆற அமரவும் எடைபோடும் நேரமும் காலமும் என்னிடமிருந்தது

அதேநேரம்

எனது வாழ்க்கையின் அடுத்த கட்டமான திருமணம் என்பது

எனது வாழ்க்கைக்கு ஒரு படிக்கட்டாக இருக்கவேண்டுமே தவிர

இறங்குமுகமாக இருக்கக்கூடாது என்று தெளிவாக இருந்தேன்

அழகான பெண்களை நான் ரசித்தேன் அவர்களுடன் நட்பாக பழகினேன்

காதல் என்று அவர்கள் சொல்லுமுன் விலகிவிடுவேன்

அதனால் அவர்களில் பலர் இன்றும் எனக்கு மிகவும்கண்ணியமாக பழகும் நண்பர்களாக இருக்கிறார்கள்.

பாடசாலையில் முதலாவதாக இருந்ததனாலும்

இருக்கும் இடத்தை சந்தோசமாக வைத்திருந்ததனாலும்

கொழும்பில் படித்துக்கொண்டு விடுமுறைக்கு ஊருக்கு வருவதனாலும் எல்லோருக்கும் என்னைப்பிடித்திருந்தது

ஆனால் இது சிறு வயதில்வரும் ஒரு ஈர்ப்பு

இதனை தவறாக பயன்படுத்தக்கூடாது என்று தெளிவாக இருந்தேன்

இவ்வளவையும் தாண்டி

தூர இருந்து என்னை விரும்பிய பெண்ணை நான் கட்டிக்கொண்டுள்ளேன்

அதனால் தான் ராஜா போல் இருக்கின்றேன் வீட்டில்.

ஏனெனில் எனது அபிலாசைகளே முக்கியம் அவளுக்கு.

அதுவும்அவளைப்பார்த்தல்ல

அவளது அம்மாவின் வளர்ப்பை பார்த்து.

இன்று எனது மாமியாரும் இங்குதான் இருக்கின்றா

அவாவுக்கு நேரவே நான் சொல்வேன்

தாயைப்பார்த்துத்தான் நான் பெண் எடுத்தேன் என.

அதுதானே உண்மை.

அவாவும் சொல்வார்

தன்னையும் எனது மாமனார்(முன்னைநாள்அதிபர்) வேலியால் எட்டிப்பார்த்து

தான்(பருத்தித்துறையில்);வீட்டில் மாவிடித்துக்கொண்டிருந்ததை பார்த்தபின்தான் கட்ட சம்மதித்தாராம் என்று.

எனவே நீங்கள் எப்படி இருக்கின்றீர்களே

அதற்கு ஏற்ப ஆளைத்தேடுங்கள்

அதையே மற்றவரும்தேடினால் இருவருக்கும் பொருத்தம் ஏற்படும்

இதில் இருவரில் எவரது தராதரத்துக்கான தேடல் பிழைக்குமாயின்...

இருவரது வாழ்க்கையும் அழிவைச்சந்திக்கும்.

Link to comment
Share on other sites

நான் ஒரு அழகான பெண்ணைப் பார்த்து கட்டித் தரும் படி அம்மாவிடம் சொன்ன போது, "எதற்கும் உன் மூஞ்சியை ஒருக்கா கண்ணாடியில் பார்த்துவிட்டு சொல்லு" என்றா..... அதற்கு பிறகு "நீங்கள் யாரைக் காட்டினாலும் சரி" என்று சரணடைந்து விட்டேன். ஏதோ ஏழைக்கு ஏற்ற எள்ளுண்டை என்ற கணக்கில் மனைவி வாய்த்தார்.. கிடைத்ததை வைத்து பெரு வாழ்வு வாழ்வது தான் சரி என்றுவிட்டு நானும் இருக்கின்றன்

அன்பு காட்டுவதற்கும், மனம் ஒத்துப் போவாதட்கும் "இன்ன இன்ன தகுதிகள்" இருக்க வேண்டும் என்றெல்லாம் இல்லை... ஒருவர் மீது மற்றவர் மதிப்பு வைத்தாலே மிச்சம் எல்லாம் சரி வந்து விடும். கொஞ்சம் வெளிப்படையாகச் சொன்னால் கணவனுக்கும் மனைவிக்கும் இடையிலான பாலியல் உறவில் தான் மிச்சம் மீதி எல்லாம் தங்கி இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல தொரு பதிவு ...வயசுல பெரியவா எல்லாம் சிறியவாவுக்கு அட்வைசுகளை அள்ளி வீசுங்கோ... :)

Link to comment
Share on other sites

காதலிக்கும்போது நிறைய எதிர்பார்ப்புக்கள் இருந்திச்சிது. நான் விரும்பியவர் வாழ்க்கைத்துணையாக வரமுடியாமல் போனபட்சத்தில் எதிர்பார்ப்புக்கள் எதுவும் எனக்கு இல்லை. திருமணம் செய்கின்ற நோக்கமும் எனக்கு இல்லை. தனியாளாக எனது வாழ்க்கையை மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் கொண்டு செல்கின்றேன். ஒருவேளை கஸ்டகாலத்திற்கு திருமணம் செய்தாலும் எனது ஆர்வங்கள், பழக்க வழக்கங்கள், தனித்தன்மையுடன் ஒத்துப் போகக்கூடிய வில்லங்கம் இல்லாத ஒன்று சோடியாய் கிடைச்சால் போதும் என்பதுவே எனது நிலைப்பாடு.

+++

நிழலி, ஏழைக்கு ஏற்ற எள்ளுருண்டை என்று சொல்லத்தேவையில்லை. உங்கள் குடும்பம் அழகானது, உங்களுக்கு நல்ல வாழ்க்கைத்துணை, மக்கள், அழகிய வாழ்க்கை கிடைத்து உள்ளது, நீங்கள் பெருவாழ்வை வாழ்ந்து தள்ளிவிட வேண்டியதுதான் மிச்சம்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

தெய்வத்துள் வைக்கப்படும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கல்யாணம் கட்டுவதற்கு அழகு தேவையில்லை என இங்கு கருத்து எழுதிய பலர் எழுதியிருந்தார்கள்...என்னுடைய கேள்வி என்னவென்டால் இங்கு கருத்தெழுதிய பலரும் பல் வேறுப்பட்ட தகுதியுடன் இருக்கிறீர்கள்...ஒவ்வொருவரும் தங்களது தகுதிக்கேற்ப மணமகள் இருக்க வேண்டும் என[அதாவது அழகாக]தானே நினைப்பார்கள்...வெளியில் கூட்டி செல்லும் போது இது என்னுடைய மனைவி என அறிமுகப்படுத்துவதற்கு ஏற்ற மாதிரி இருக்க வேண்டும் அல்லவா...இது என்னுடைய சந்தேகம் தயவு செய்து அழகு தேவையில்லை என சொன்னவர்கள் இதற்கு பதிலளிக்கவும்.

நிழலியின் அம்மா மாதிரி எல்லா அம்மாக்களும் இருந்தால் எப்படி இருக்கும்...உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி தப்பிலி.

எனக்கு நிறைய எதிர்பார்ப்புண்டு. அதையெல்லாம் சொல்லி பிரயோசனம் இல்ல. ஏன்னா அத்தனை தகுதிகளோடும் உள்ளவையை கண்டுபிடிக்கிறது மகா கஸ்டம்..! ஏன் சும்மா எழுதி நேரத்தை வேஸ்ட் பண்ணுவான். :):D

உள் மனதில அன்பை வைச்சிருந்து என்னத்தப் பண்ணுறது. வெளியில காட்டாத அன்பும்.. வெளில புழங்காத பணமும் பெறுமதியற்றவை. கறுப்பானவை. (எப்படி இருக்கு நம்ம தத்துவம்).

நாங்க எப்படித்தான் அன்பா இருந்தாலும் சண்டை பிடிப்பினமா...??! அப்படியான விளக்கம் கெட்டதுகளோட வேணாம் வாழ்க்கையில சகவாசம். தனிய வாழ்வது கூடிய சுதந்திரம் என்று நினைக்கிறன். :lol:

ஏன் தம்பி எப்ப பார்த்தாலும் அன்பை காட்டுகிறார்கள் இல்லை என எழுதுகிறீர்கள்...யாரையாவது ஒரு பெண்ணை தெரிவு செய்து அவர் மீது அன்பை நீங்கள் காட்டுங்கள்...காலப் போக்கில் அவரும் உங்களைப் புரிந்து கொண்டு அன்பு காட்டுவார்...விரைவாக திருமணம் செய்யுங்கள் நீங்கள் ஆசைப்படுகிறீர்களோ இல்லையோ இங்கு யாழில் கணபேர் ஆசைப்படுகிறார்கள். :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞன் நீங்கள் விரும்பினவர் கிடைக்காவிட்டால் அப் பெண்ணுக்கு உங்களோடு வாழ கொடுப்பினை இல்லை என நினைத்து விட்டு உங்களை விரும்பின பெண்ணாய் பார்த்து மணம் முடியுங்கள்...இப்போது உங்களால் தனிய வாழ இயலும் காலம் போகப்,போக தனிய வாழ்வது கஸ்டம் என நினைக்கிறேன்...இது என் கருத்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அழகு வேண்டாம் என்று யாரும் அடம் பிடிப்பதில்லை.ஆனால் கற்பனைகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் நிஜத்துக்கும் இடையே நிறைய வேறுபாடுகள் உண்டு.தோலைப்பாத்து மாடு பிடித்தால் தொழிலுக்கு உதவாது என்டு தெரியும் போது காலம் கடந்து விட்டிருக்கும்.மற்றும் ஒருவரை விட மற்றவர் அழகாகவோ அல்லது வேறு திறைமைகள் இருந்தாலு அதுவும் பிரச்சனைதான்.தமது குறைகளை மறைக்க மற்றவர் மீது எதாவது குறைகளை தேடிக்கொண்டே இருப்பார்கள்.(எல்லோரும் இல்லை)ஆக ஒரே விருப்பு உள்ளவர்கள் என்றால் பிரச்சனைகள் குறைவு. :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் தம்பி எப்ப பார்த்தாலும் அன்பை காட்டுகிறார்கள் இல்லை என எழுதுகிறீர்கள்...யாரையாவது ஒரு பெண்ணை தெரிவு செய்து அவர் மீது அன்பை நீங்கள் காட்டுங்கள்...காலப் போக்கில் அவரும் உங்களைப் புரிந்து கொண்டு அன்பு காட்டுவார்...விரைவாக திருமணம் செய்யுங்கள் நீங்கள் ஆசைப்படுகிறீர்களோ இல்லையோ இங்கு யாழில் கணபேர் ஆசைப்படுகிறார்கள். :(

அக்கா.. காட்டிற அன்பையே பரிசோதிக்கின்ற... சந்தேகின்ற பெண் ஜென்மங்களும் இந்த உலகில் இருக்கினம். அதுவும் இல்லாம அன்பு மட்டுமே போதும் என்ற நிலைக்கு அப்பால் அன்பை விட இன்னொன்று கவர்ச்சியாக அல்லது அவசியமாக தென்பட்டுவிட்டால் அன்பை உதறித்தள்ளிவிட்டு ஓடிவிடும் நிலையில் இருக்கின்றனர் பலர். இந்த நிலையில்.. ஒருவரை தேர்வு செய்து அவர் மீது அன்பு காட்டி.. அவரும் அன்பு காட்டிற மாதிரி காட்டிட்டு.. சந்தர்ப்பம் சூழ்நிலை தனக்கு இன்னும் இன்னும் சாதகமா அமைய உன்னுடைய அன்பு போதும்.. நான் இன்னொருத்தர் கிட்ட காட்டிக்கிறன்.. அல்லது பெற்றுக்கிறேன்.. என்று கழரும் நிலைதான் இன்று உலகில் செல்வாக்குச் செய்து கொண்டிருக்கையில்.. இது விடயமாக ஒரு உறுதியான நம்பிக்கையோடு ஒருவர் மீது அன்பு செலுத்தவே அச்சப்படும் சூழல் தான் இருக்கிறது.

நாங்க காட்டிற அன்பு எங்களுக்கே திருப்பிக் கிடைக்குமோ என்ற உத்தரவாதம் கூட இல்லாத ஒரு சூழலில்.. எப்படி ஒருவரை எழுந்தமானமாக தேர்வு செய்து அவர் மீது அன்பு காட்டிறது. எனக்கென்றால்.. இதெல்லாம் வேலைக்காகாத காரியங்களாகவே படுகின்றன. ஏதோ எங்கள் அன்பு எங்களோடே இருக்கட்டும்.. நாங்கள் எங்கள் வழியில் எமக்குப் பிடித்த வகையில் வாழ்ந்துவிட்டுப் போகலாம்... என்ற நினைக்குத்தான் எம்மை இன்றைய உலகம் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது.

இது யார் தவறு.. எனதா. அல்லது எனது அன்பை இனங்காணத் தவறும் இந்த உலகா.. சொல்லுங்கோ அக்கா. சும்மா அன்பு அன்பு என்று காலத்தை நேரத்தை வீணடிச்சு ஒருவர் பின்னாடி அலைஞ்சுகிட்டு இருக்கிறதுல எனக்கு அவ்வளவு ஈடுபாடில்ல. அலைஞ்சு போட்டு அவரும்... சேர்ந்து கூத்தடிச்சிட்டு.. இறுதியில் ரா ரா.. பாய் பாய் எண்டுவினம்.. அதுக்குப் பிறகு தனிய இருந்து புலம்பிக் கொண்டிருந்து என்ன பயன். எதையும் வருமுன் காப்பது சிறந்தது என்று நினைக்கிறேன். அதனால்.. இந்த குறிப்பாக பெண்கள் இடத்தில் அன்பு காட்டிறதில் எழுந்தமானப் போக்கை விட நிதானப் போக்கு அதிகம் பாதுகாப்பானது என்று நினைக்கிறேன். மற்றும்படி எதிர்பார்ப்பில்லா அன்பை எவரிடமும் ஏன் இந்த இயற்கை மீது கூடக் காட்டலாம்.. என்பது எனது நிலைப்பாடு. அது மனிதத் தன்மை என்று நினைக்கிறேன். :(

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • 'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 28     புத்தமதம் விஜயன் வந்து கிட்ட தட்ட 240 ஆண்டுகளின் பின் இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்டதுடன், சிங்கள மொழி, விஜயன் வந்து ஆயிரம் ஆண்டுகளிற்குப் பின்பு தான், அதிகமாக 6ஆம் 7ஆம் நூறாண்டில் தான் ஓரளவு வளர்ச்சி அடைந்த மொழியாக தோற்றம் பெற்றது. இலங்கையில் விஜயன் வரும் முன்பே நாகர்கள் அங்கு இருந்தார்கள் என்றும் அதனால் அதை நாக நாடு அல்லது நாக தீபம் [‘Naga Land’ and ‘Naga Deep’] என்று பண்டைய காலத்தில் அழைத்தனர் எனவும் அறிகிறோம். தீபவம்சம், மகாவம்சம் கதையின் படி, புத்தர் [Lord Buddha] தனது இரண்டாவது வருகையாக கி மு 528 ஆண்டில் இலங்கையின் இரு வெவ்வேறு வட பகுதில் ஆட்சி செய்த இரு இரத்த உறவு கொண்ட நாக அரசர்களின் இடையில் ஏற்பட்ட சர்ச்சைகளை தீர்த்து வைத்தார் என்கிறது.   ஆனால் அதே கதையை தமிழ் மணிமேகலையிலும் காண்கிறோம். ஐம்பெரும் தமிழ் காப்பியங்களுள் ஒன்றான, சிலப்பதிகாரத்திற்கு அடுத்ததாக இலக்கிய அழகில் பெருமைவாய்ந்த, அதிகமாக மஹாயான பௌத்த காப்பியமான, சாத்தனாரின் மணிமேகலையும், அதற்கு முந்திய இளங்கோவின் சிலப்பதிகாரமும், கி. பி. 150-250 கால இடைவெளியில் தோன்றியவை என்று பொதுவாக கருதினாலும் இக் கதையை கி பி 2ஆம் நூற்றாண்டிற்கும் 6ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்டது என்றே பலர் வாதாடுகின்றனர். ஆனால் வியப்பான விடயம் என்னவென்றால் மகாவம்சம் கூறும் விஜயனின் வருகை குறித்த எந்தக் கதையும் மணிமேகலையிலோ, அல்லது இதர இந்திய பௌத்த நூல்களிலோ காணப்பட வில்லை. மணிமேகலை 8 [மணிபல்லவத்துத் துயர் உற்ற காதை] , வரி 54 - 63 இல் :     "கீழ்நில மருங்கின் நாகநாடு ஆளும் இருவர் மன்னவர் ஒருவழித் தோன்றி 55 எமதுஈது என்றே எடுக்கல் ஆற்றார் தம்பெரும் பற்று நீங்கலும் நீங்கார் செங்கண் சிவந்து நெஞ்சுபுகை உயிர்த்துத் தம்பெருஞ் சேனையொடு வெஞ்சமம் புரிநாள் இருஞ்செரு ஒழிமின் எமதுஈது என்றே 60 பெருந்தவ முனிவன் இருந்துஅறம் உரைக்கும் பொருஅறு சிறப்பில் புரையோர் ஏத்தும் தரும பீடிகை தோன்றியது ஆங்கு என்."     அதாவது, நாக நாட்டை ஆளும் இரு வேறு மன்னர்கள் "இது என்னுடையது" என்று சொல்லிக்கொண்டு அந்தப் பீடிகைக்கு உரிமை கொண்டாடினர். அவர்களால் அதனை எடுக்க முடியவில்லை. தம் படைகளைத் திரட்டிக்கொண்டு வந்து உரிமைக்காக ஒருவரை ஒருவர் எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்தனர். அப்போது பெருந் தவமுனிவன் தோன்றி இது என்னுடையது என்று சொல்லி அதன்மீது ஏறி அமர்ந்துகொண்டு "போரைக் கைவிடுக" என்று அறநெறி உரைத்தான், மேன்மக்கள் போற்றும் அந்தப் பீடிகை [பீடம் / seat, stool] மணிமேகலை முன் தோன்றியது என்கிறது.   ஒரே ஒரு வித்தியாசம் தான், இங்கு புத்தரிற்குப் பதிலாக, துறவி ("பெருந்தவ முனிவன்") என கூறப் பட்டுள்ளது. அவ்வளவுதான்.   மணிமேகலையில், இலங்கைத் தீவின் வடகோடியில் இருந்த மணிபல்லவம் என்னும் துறைமுகப் பட்டினம் கூறப்படுகிறது. பாலி மொழியில் எழுதப் பட்டுள்ள மகாவம்சம் / பத்தொன்பதாவது அத்தியாயம் போதி விருட்சம் வருகையில், 'மகா தேரருடைய சக்தியால் அரசன் தன் பரிவாரங்களுடனும், இதர தேவர்களுடனும் போதி மரம் கொண்டு அதே தினத்தில் ஜம்பு கோலத்துக்கு வந்து சேர்ந்தான் என்றும் கூறப்படுகிறது. இன்று மணிபல்லவமும் ஜம்பு கோல் பட்டினமும் ஒரே இடம் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள். இலங்கைத் தீவின் வடபகுதி பல சிறு தீவுகளைக் கொண்டது. இத்தீவுகள் ஒன்றிலே தான் இந்த மணிபல்லவம் அல்லது ஜம்புகோல் பட்டினம் இருந்ததாகிறது. "தென்றிசை மருங்கிலோர் தீவு' (மணி. 9-வது காதை), 'மணிபல்லவம் என்னும் தீவகம்" (மணி. 21- ஆம் காதை) என்று மணிமேகலை இதை கூறுகிறது. இது நாக நாட்டைச் சேர்ந்தது என்றும் மணிமேகலை 8 ஆம் காதை கூறுகிறது. நாக நாடு என்பது இலங்கைத் தீவின் வட பகுதிக்கு பண்டைக் காலத்தில் வழங்கப்பட்ட பெயர் ஆகும். மகாவம்சமும், இந்தப் பகுதியை நாக தீபம் என்று கூறுகிறது.   சிலப்பதிகாரத்திம், புகார் நகரை , நாக நாட்டில் உள்ள நீண்ட நாக பட்டணத்துடன் ஒப்பிடுகிறது. உதாரணமாக   "அதனால், நாகநீள் நகரொடு நாகநாடு அதனொடு போகம் நீள்புகழ்மன்னும் புகார் நகர் அதுதன்னில்" இதன் கருத்து, அதனால் போகம் துய்க்கும் புகழுடன் புகார் நகரம் விளங்கியது. அது நாக மரங்கள் ஓங்கியிருந்த நகருடன் கூடிய நாகநாடு வரையில் விரிந்திருந்தது என்கிறது. இலங்கை காப்பியம் அவர்களை மனித இனத்திற்குக் கீழ்ப்பட்ட அல்லது அரைவாசி பாம்பு, அரைவாசி மனித உயிரினம் என்கிறது.     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]   பகுதி: 29 தொடரும்      
    • ஏன் இந்த‌ ச‌ந்தேக‌ம் 😁 போட்டி தொட‌ங்க‌ முத‌ல் நான் எழுதின‌து ந‌ட‌ந்து விட்ட‌து அண்ணா தென் ஆபிரிக்க‌ வெல்ல‌ அதிக‌ வாய்ப்பு என்று எழுதினேன்  அதோட‌ இல‌ங்கை தொட‌க்க‌ வீர‌ர்க‌ள் தொட‌ர்ந்து சுத‌ப்பின‌ம் என்று சொன்னேன் அதும் ச‌ரி இல‌ங்கை ப‌ந்து வீச்சு ப‌ல‌ம் என்று சொன்னேன் அதும் ச‌ரி குறைந்த‌ ஸ்கோர் அடிச்சும் தென் ஆபிரிக்காவுக்கு இல‌ங்கை ப‌ந்து வீச்சாள‌ர்க‌ள் சிர‌ம‌த்தை கொடுத்தவை இலங்கை இன்னொரு விளையாட்டில் தோத்தா இவ‌ர்க‌ள் வெளிய‌ யாழில் ப‌ல‌ர் இல‌ங்கையால் புள்ளிக‌ளை இழ‌க்க‌ கூடும் எல்லா குருப்பிலும் முத‌ல் இர‌ண்டு இட‌ங்க‌ளை பிடிக்கும் அணி என்ற‌ கேள்விக்கு க‌ண்டிப்பாய் அந்த‌ குருப்பில் தென் ஆபிரிக்காவை ம‌ற்றும் இல‌ங்கையை தான் தெரிவு செய்து இருப்பின‌ம்.............................. இல‌ங்கை குருப் 8க்கை வ‌ந்தாலும் க‌ட‌சி இட‌த்துக்கு தான் வ‌ர‌க் கூடும்......................................... 2014க்கு பிற‌க்கு ந‌ட‌ந்த‌ அனைத்து உல‌க‌ கோப்பையிலும் இல‌ங்கை அணியின் விளையாட்டு ப‌டு கேவ‌ல‌ம்.......................................
    • ஓமோம் கந்தையர்! நீங்கள் இருக்கிற இடங்களிலை ஒரு ஜேர்மன்காரரை காணேலாது....எல்லாம் துருக்கி மற்றும் அரபு வசந்தக்காரர்கள் எல்லோ......அவையள் வேலை வெட்டிக்கு போகமாட்டினம். சாப்பிடுறதை தவிர வேறை வேலையும் இல்லை.....எனவே😛
    • எனக்கு கீழ வாறதில பிரச்சனை இல்லை. ஆனால் குத்தியன். @குமாரசாமி  க்கு கீழ வரக் கூடாது.
    • "தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?]" / பகுதி: 06        [1] குமரிக் கண்டம் :        தெற்கே அவுஸ்திரேலியா, மேற்கே ஆபிரிக்கா, வடக்கே தற்போது உள்ள இந்தியா முதலியவற்றை தொட்டுக் கொண்டு இலங்கையையும் உள்ளடக்கிக் கிடந்தது குமரிக்கண்டம் என்று வாதாடுபவர்கள் இன்னும் சிலர் உள்ளனர்.  இதுவே உலக நாகரிகத்தின் தொட்டில்; கன்னித் தமிழ் முன்னோரின் இருப்பிடம் என்று அதற்கு ஒரு மதிப்பும் கொடுக்கிறார்கள். எப்படி பூம்புகார் நகரம் கடலில் மூழ்கியதோ, அப்படி, இதுவும், ஆனால் மாபெரும் அனர்த்தத்தால் மூழ்கியிருக்கலாம் என நம்புகிறார்கள்??       ஸ்பென்சர் வேல்ஸ் [Spencer Wells] இனதும் பிச்சப்பன் [Pitchappan] இனதும் இந்த ஆய்வு மட்டும் கல்விமான்களின் கவனத்தை இந்திய [குறிப்பாக தமிழ் நாடு] பக்கம் திருப்பவில்லை. பிரித்தானிய கடல் துறை தொல் பொருள் ஆய்வாளர் கிரகம்ஹன்கொக் [Graham Hancock]  பூம்புகாரின் கடற்கரையிலிருந்து 3கி.மீ. தூரத்தில் 75 அடி ஆழத்தில் 2012ல் ஆய்வு மேற்கொண்டார். அங்கு, ஆய்வின் பொழுது, கடலடியில்  நகரம் ஒன்றைக் கண்டார். அது 9500 ஆண்டுகள் முதல் 11,500 ஆண்டுகள் வரை பழமையானது என்று கருதப் படுகிறது. அவருடைய கருத்தை டர்காம் பல்கலைக்கழகப் பேராசிரியர் கிளன் மில்னே [Dr.Glen Milne  / The Durham geologists] உறுதி செய்துள்ளார். எனவே, பூம்புகார் நாகரிகம் இக்கால ஈராக்கில் இருந்த சுமேரியா நாகரிகத்தை விடவும்  சிந்துவெளி நாகரிகத்தை விடவும், அதாவது அரப்பா, மொகஞ்சதரோ நாகரிகங்களை விடவும் பழமையானவை ஆகும் என்று மேலும் கருத்து கூறினார். முன்பு பனி யுகம் [ICE AGE  / பனி உருக்கு காலம்] எனப்படும் பனி உருகி கடல் மட்டம் உயர்வது நடந்து உள்ளதாக வரலாறு கூறும். அதாவது வடதுருவப் பனி உருகி பல நாடுகளின் பகுதிகள் கடலில் மூழ்கின என அறிகிறோம். அவ்வாறே, கடைசி பனி உருகும் காலத்தில், அதாவது 17000 இற்கும் 7000 ஆண்டிற்கும் இடையில் பூம்புகாரின் நாகரிகம் கடலடியில் முழ்கியுள்ளது என்கிறார்.     தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகம் என்ற நிறுவனம் 1980 ஆம் ஆண்டு தொடக்கம் வரலாற்றுப் புகழ் பெற்ற பூம்புகார் நகரக் கடற்பகுதியில் ஆய்வுகள் மேற்கொண்டது. அப்பொழுது அங்கே கண்டு பிடிக்கப் பட்டவை, கிரகம்ஹன்கொக்கின் கொள்கையை மேலும் வலுவூட்டியது. ஆய்வின் போது, பூம்புகார் கடற் பகுதியிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவிற்குள் பல வட்ட வடிவமான கிணறுகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இந்தக் கிணறுகள் பூம்புகார் முதல் தரங்கம்பாடி வரையிலான கடற்பகுதியில் பரவியிருப்பது கண்டறியப்பட்டது. இது தவிர குதிரை குளம்பு வடிவில் அமைந்த கட்டட பகுதியும்  கண்டறியப் பட்டன [படம்: 01]. இவை அனைத்தும் பூம்புகார் கடற் பகுதியில் ஒரு பெரிய நகரம் மூழ்கி இருக்கக் கூடும் என்பதை உறுதிப்படுத்தும் விதத்தில் அமைந்திருகிறது. சங்க காலத்தைச் சேர்ந்தது என கருதப்படும் சுட்ட செங்கற்களால்லான  கட்டிட அமைப்பு கடல்வற்றும் போது வானகிரி போன்ற பகுதிகளில் இன்னும் காணக் கூடியதாக உள்ளது.      இங்கு புதைந்து கிடப்பது ஒரு பட்டினம் மட்டுமல்ல. தமிழர்களின் பண்பாட்டு வரலாற்றின் தொன்மையும் கூட என நாம் கருத இடம் உண்டு. பூம்புகாருக்கு அருகில் உள்ள மேலப் பெரும்பள்ளத்தில் ஒரு முதுமக்கள் தாழியும் கிடைத்துள்ளது. 2700-2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த புறநானூறு 228, 256 முதுமக்கள் தாழி [burial urn] பற்றிய குறிப்பைத் தருகிறது.     "கலம் செய்கோவே கலம் செய்கோவே அச்சுடைச் சாகாட்டு ஆரம் பொருந்திய சிறு வெண் பல்லி போலத் தன்னொடு சுரம் பல வந்த எமக்கும் அருளி வியன் மலர் அகன் பொழில் ஈமத் தாழி அகலிது ஆக வனைமோ நனந்தலை மூதூர்க் கலம் செய்கோவே."    [புறநானூறு 256]     ஒருபெண் தன் கணவனுடன் சென்று கொண்டிருந்தாள். அவர்கள் சென்று கொண்டிருந்த வழியில், போரில் அவள் கணவன் இறந்தான். கணவனை இழந்த அப்பெண், இறந்தாரை அடக்கம் செய்யும் தாழி செய்யும் குயவனை நோக்கி, “தாழி செய்யும் குயவனே! நான் வண்டியின் உருளையில் உள்ள ஆர்க்காலைப் [ஆரம் = ஆர்க்கால்] பற்றிக்கொண்டு வந்த பல்லிபோல் என் கணவனுடன் இங்கு வந்தேன். வந்த இவ்விடத்தில் அவன் போரில் இறந்தான். அவனை அடக்கம் செய்வதற்குத் தாழி ஒன்று தேவைப் படுகிறது. நீ அவனை அடக்கம் செய்வதற்குத் தாழி செய்யும் பொழுது, நானும் அவனுடன் உறையும் அளவுக்குப் பெரிய தாழியை எனக்காக அருள் கூர்ந்து செய்வாயாக” என்று அவள் வேண்டுவதாக இப்பாடலில் புலவர் கூறுகிறார்.     குமரிக்கண்டம் என்பது பண்டைத் தமிழ் இலக்கிய நூற்களில் கூறப்பட்ட கடலில் மூழ்கிப்போன ஒரு கண்டம் அல்லது பெரு நிலப்பரப்பாகும். இது இந்தியா கடலில், இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தெற்கே, ஆஸ்திரேலியாவையும் தென்னாப்பிரிக் காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டிருந்த பெரும் நிலப்பரப்பு என நம்பப்படுகிறது. இது பின் மூழ்கிப் போனதாக கருதப்படுகிறது. இந்த நிகழ்விற்கான சொல் அவர்களிடம் இருந்துள்ளது. அது தான் கடற் கோள் ஆகும் . இதன் கருத்து கடல் நிலத்தை விரைவாக விழுங்குதல் ஆகும்.     தேசிய கடலாராய்ச்சி நிறுவனம் மார்ச் 7, 1991ல் தரங்கம்பாடிக்கும் பூம்புகாருக்கும் இடையே உள்ள பகுதியில் கடல் ஆய்வு செய்தது. சோனோகிராப் [Sonography] எனப்படும் கருவியை இதற்குப் பயன்படுத்தினர். இந்தக் கருவி கடலில் மிதக்கும் போது, கடலுக்கடியில் கட்டடமிருந்தால் ஒலி எழுப்பக் கூடியது. அப்போது 23 மீ. ஆழத்தில் ஆங்கில எழுத்தான U வடிவத்தில் [குதிரைலாட  வடிவத்தில்] கட்டுமானம் ஒன்றைக் கண்டுபிடித்தனர். அதன் இரண்டு முனைகளுக்கும் மிடையில் 20 மீட்டர் தூரம் இருக்கும். அது கோயிலாகவோ அல்லது கோட்டை மதில் சுவராகவோ இருக்கலாம்?  இந்த கட்டுமானம் கிறிஸ்துக்கு முன் 9000 ஆண்டளவில் மூழ்கியிருக்கலாம் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதாவது கிட்டத்தட்ட 11000 வருடங்களுக்கு முன் ஆகும். ஆகவே இந்த கட்டுமானம் மெசொப்பொத்தாமியா கட்டமைப்பை விட 5000 - 5500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த தொல்பொருள், புவியியல் சான்றுகள், முதலாவது தமிழ் சங்க காலத்தில், தமிழ் நாகரிகம் ஒரு உச்ச கட்டத்தில் இருந்ததை உறுதி படுத்துகின்றது. அப்பொழுது இலங்கை, தென் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்துள்ளது. சில ஆராய்ச்சி யாளர்கள் கிறிஸ்துக்கு முன் 6000 க்கும் 3000 க்கும் இடைபட்ட காலத்தில் இவை பிரிந்து இருக்கலாம் என முடிவு செய்துள்ளார்கள். அதன் பின் தற்போதைய பாக்கு நீரினை தோன்றியிருக்கலாம் என்கின்றனர். ஒரு காலத்தில் சோழர்களின் தலைநகரமாகவும் கோவலன், கண்ணகி வாழ்ந்த நகரமாகவும் விளங்கிய பூம்புகார் பல்வேறு சிறப்புகளைக் கொண்டதென இலக்கியத்தில் படித்திருக்கிறோம். சோழப் பேரரசின் தலைநகராக இருந்த பூம்புகார் ஊருக்கு காவிரிப்பூம் பட்டினம் என்றும் இன்னொரு பெயர் உண்டு. அப்படிப்பட்ட இந்த  நகரத்தை முழுமையாக அறிந்துகொள்ள பூம்புகார் குறித்த ஆய்வு மேலும் தீவிரப்பட வேண்டும் என்று எண்கிறேன்.     பாளி புத்த காப்பியம் 'மகாவம்சம்', புத்தர் காலத்தில் இலங்கையில் மனித இனத்திற்குக் கீழ்ப்பட்ட உயிரினமே [sub-human beings] இருந்ததாக குறிப்பிட்டு இருந்தாலும், உண்மையில் அங்கு மனிதர்கள் வாழ்ந்ததாக தொல் பொருள் ஆய்வு உறுதிப்படுத்தி உள்ளது. இலங்கையின் பாகியன் குகையில் (Fa Hien Cave), மேற்கொண்ட ஆய்வுகளில் அகழ்ந்தெடுக்கப்பட்ட ஆதி மனிதயெலும்புகள், அப்பெரிய குகையில் 37 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் துவங்கி 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்வரை, தொடர்ச்சியாகப் பல தலைமுறையினர் வாழ்ந்தனர் என்பது காணப்பட்டுள்ளது. மேலும் சில குகைகளிலும் இப்படி காணப்பட்டுள்ளன. அத்துடன் புதிய கற்காலத்தைச் சேர்ந்த கற்கருவிகளும் அங்கு அவர்களின் சமூக வாழ்வை உறுதிப் படுத்து கின்றன. இவர்களை பலாங்கொடை மனிதன் (Homo sapiens balangodensis, Balangoda Man) என்று அழைக்கிறார்கள். இந்த பலாங்கொடை மனிதன் 174 செ.மீ. (ஐந்து அடி எட்டு அரை அங்குலம்) உயரம் உடையவனாகவும் காணப்படுகிறது. திரு R. பிரேமாதிலகே [Mr. R. Premathilake recorded in his paper presented at the seminar on ‘First Farmers in Global Perspective’] தனது 'உலகளாவிய பார்வையில் முதலாவது விவசாயிகள்' என்ற ஆய்வு கட்டுரையில், ஆரம்ப இரும்பு  காலத்தில், கி மு 900 ஆண்டில், குதிரை வளர்ப்பு, இரும்பு உற்பத்தி, மற்றும் நெல் சாகுபடி அனுராதபுரத்தில் காணப்பட்டதாகவும்,  கி மு 15,500 ஆண்டு அளவில் அங்கு பார்லி / வாற்கோதுமை மற்றும் ஓட்ஸின் / காடைக்கண்ணியின் [barley and oats] தொடக்க மேலாண்மை இருந்ததாகவும் கூறுகிறார் . அதே போல,   பேராசிரியர் T. W. விக்ரமநாயகே [Prof T. W. Wikramanayake] தனது 'வியயனின் வருகைக்கு முன் இலங்கையில் விவசாயம்' [‘Pre-Vijayan Agriculture in Sri Lanka’] என்ற புத்தகத்தில், வரலாற்றுக்கு முந்தைய குடியேற்றங்கள் இலங்கையில் 40,000 ஆண்டுகளுக்கு முன்பே இருந்தது என்றும், ஹோமோ சேபியன்ஸ் [Homo sapiens] தென் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் உலவி இருப்பார்கள் என்றும், இலங்கையும் தென் இந்தியாவும் துண்டிக்கப் பட்ட பின்பும் கூட, அவைகளுக்கு இடையில், கடல் மட்டம் வீழ்ச்சியடைந்த போதெல்லாம், நில பாலங்கள் [land bridges] உண்டாகி இருக்கும் என்றும், எனவே தங்கு  தடை இன்றி, மரபணு ஓட்டம் அல்லது பரம்பரையலகு ஓட்டம் [gene flow] நடை பெற்று இருக்கும் என்றும், எனவே கட்டாயம் அங்கு தென் இந்தியருக்கும் இலங்கையருக்கும் ஒரு இனக் கலப்பு [complex patterns of miscegenation, between the pre-historical people of South India and Sri Lanka] நடை பெற்று இருக்கும் என்று வாதாடுகிறார்.  இவை எல்லாம், தென் இந்தியாவும் இலங்கையும் ஒரு நிலப்பரப்பாக இருந்ததையும், ஒரே மொழி பேசும் இன மக்கள் [ திராவிடம் அல்லது தமிழ்] இரு இடமும் உலாவியதையும், புத்தர் காலத்துக்கு முன்பே இலங்கையில் நாகரிக மக்கள் இருந்ததையும் எடுத்து காட்டுகிறது.      [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]     பகுதி :07 தொடரும்       பி கு : படம் 02 : பூம்புகாரில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழி / burial urn found at Poompuhar         
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.