Jump to content

கணவனோ,மனைவியோ எப்படி இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பு உங்களி டம் இருந்ததா...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துகளத்தில் எழுதும் அனைவரும் எனக்கு கல்யாணம் கட்டி வைக்காமல் ஓய மாட்டார்கள் என நினைக்கிறேன் முக்கியமாக விசுகு அண்ணா...ஆனால் எனக்கு வரப் போகும் கணவர் எப்படி இருக்க வேண்டும் என சில எதிர்பார்ப்புகள் எனக்கு உண்டு தானே எனது எதிர்பார்ப்புகளை எழுதுகிறேன்;

என்னிலும் பார்க்க அழகாய் இருக்க கூடாது[அதற்காக நான் பெரிய அழகு என்று இல்லை...என்னுடைய கண் சிறிதாக இருக்கிறது என சொல்லி ஒருவர் என்னை ரிஜக்ட் பண்ணினார்.] :lol:

என்னிலும் பார்க்க குறைந்தது 2 வயதாவது கூட இருக்க வேண்டும்.

அதிகம் படித்திருக்க கூடாது[முக்கியமாக விஞ்ஞான துறையை சேர்ந்தவராக இருக்க கூடாது]...மெத்தப் படித்த எம் ஆட்களுக்கு கர்வம் அதிகம் என நான் நினைக்கிறேன்.

அன்பு,பாசம் மிக்கவராகவும் என்னை உள்ளங்கையில் வைத்து தாங்குபவராகவும் இருக்க வேண்டும்[அதற்காக நான் சொன்னதெல்லாம் சரி என ஆமாம் சாமி போடக் கூடாது]

சுயமாக முடிவு எடுக்க கூடியவராக இருக்க வேண்டும்[என்னையும் கலந்து ஆலோசிக்க வேண்டும்]

சோம்பல் அற்ற உழைப்பாளியாக இருக்க வேண்டும்.

கொஞ்சம் பணம் வைத்திருக்க வேண்டும்.

எனக்கு கடவுள் பக்தி அதிகம்...என்னோடு கோயிலுக்கு கட்டாயம் வர வேண்டும்.

இது எனது ஆசை எனது கணவர் எப்படி இருக்க வேண்டும் என...உங்களுடைய கணவன்/மனைவி எப்படி இருக்க வேண்டும் என நினைத்தீர்கள்...உங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ற மாதிரி இருந்தார்களா...எங்கே எதிர்பார்ப்புகளை நீங்களும் எழுதுங்கள் பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

  • Replies 58
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

.

மனைவி நிச்சயம் படித்திருக்க வேண்டும்.

கணவனின் உதவியை எதிர்பார்க்காது அலுவலக வேலைகலை தனியே செய்யத் தெரிய வேண்டும்.

பிள்ளைகளுக்கு பாடங்கள் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

அதிக அலங்காரம் கூடாது.

நகைச்சுவை உணர்வு இருக்க வேண்டும்.

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கட எதிர்பார்ப்புக்கு ஏற்றமாதிரிஆள் பிடிப்பது வெகு சுலபம்.சுருக்கமாக சொன்னால் 3 வேலைக்கு போக வேனும்.அது சரி கண் சின்னன் என்டதுக்காகவா ரிஜட் :lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கணவன் அன்பான்வனாய் இருக்க வேண்டும்..........ஆனால் இடையிடை கோபம் ( கொதி.... சத்தம்)எட்டிபார்கிறது.

அது மனித இயல்பு தானே.

Link to comment
Share on other sites

.

நல்ல அழகாய் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். இது தான் நாம் உனக்குப் பார்த்திருக்கும் பெண் என்றார்கள்.படத்தைப் பார்த்ததுமே பிடித்துக் கொண்டது. அவர்கள் காட்டிய முதலும் கடைசியுமான படம்.

இன்று...

அழகு மாத்திரம் போதாது என்று உணர்கிறேன். வாழ்க்கை சவால்கள் நிறைந்தது. குறிப்பாக பிள்ளைகள் பிறந்ததும் வாழ்க்கைச் சக்கரம் மிகவும் விரைவாகச் சுழலத் தொடங்கும். இக்கட்டத்தில் ஆண் தன் தோள் மீதுள்ள சுமையின் ஒரு பங்கையாவது பெண் ஏற்கவேண்டும் என்று எதிர்பார்ப்பான்.

நன்பர்களின் மனைவிமார்களில் சிலர் அழகாகவும் நல்ல‌ திறமைசாலிகளாகவும் இருக்கிறார்கள். இவர்களைப் பார்க்கும் போது நாம் பின்தங்கி விட்டோமோ என்ற எண்ணம் ஏற்படும்.

எல்லாம் சரிவர அமையாது என்று சமாதானப் படுத்திக் கொள்ள வேண்டியது தான். வேற வழி ? :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதிகமான எதிர்பார்ப்புக்களுடன் ஆழமான கிணற்றுக்குள் வீழ்ந்து தத்தளிப்பதை விட கிடைத்த வாழ்க்கையை மெருகூட்டி சில விட்டுக் கொடுப்புக்களுடன் ஒருவரை ஒருவர் புரிந்து நடந்து கொண்டால் எல்லோர் வாழ்க்கையும் இனிக்கும்.

சந்தர்ப்ப சூழ் நிலையால் நல்லவன் கெட்டவனாகலாம்.

உழைப்பாளி ஊதாரியாகலாம்.

படித்தவன் அறிவிழந்து கொலைகாரனாகலாம்

அந்த நேரத்திலும் ஒருவருக்கொருவர் புரிந்துணர்வுடன் நடந்து கொண்டால் மீண்டும் வாழ்க்கை இனிக்கும்

நினப்பதெல்லாம் நடந்து விட்டால்..........

வாத்தியார்

*********

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கட எதிர்பார்ப்புக்கு ஏற்றமாதிரிஆள் பிடிப்பது வெகு சுலபம்.சுருக்கமாக சொன்னால் 3 வேலைக்கு போக வேனும்.அது சரி கண் சின்னன் என்டதுக்காகவா ரிஜட் :blink::lol:

மெத்தப் படித்தவராக இருக்க கூடாது என எழுதினானே தவிர ஒன்றுமே படிக்காதவராய் இருக்க கூடாது என எழுதவில்லை.

கருத்துகளை எழுதியவர்களுக்கு நன்றி...குறிப்பாக ஈசனுக்கு நன்றி...தனது வாழ்க்கையை துணிந்து எழுதியுள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் நெடுக்சை சீண்டத்தான் எழுதினேன்

தங்களை அது பாதித்து தாங்கள் இந்த வில்லங்கமான விளம்பரத்துக்கு தள்ளப்பட்டிருந்தால்....

மன்னிக்கவும்

இனி தங்களது கேள்விகளுக்கு பதில் எழுதமாட்டேன்

நன்றி மகளே...

Link to comment
Share on other sites

... என்னை உள்ளங்கையில் வைத்து தாங்குபவராகவும் இருக்க வேண்டும்...

ரதி தெரியாமல் தான் கேட்கிறேன், நீங்கள் என்ன எலுமிச்சைப் பழ சைசிலையா இருகிறீங்கள், உங்களை உள்ளங்கையில் வைத்துத் தாங்குவதற்கு?? :D :D :D:blink::lol: இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரிய இல்லையா???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கட எதிர்பார்ப்புக்கு ஏற்றமாதிரிஆள் பிடிப்பது வெகு சுலபம்.சுருக்கமாக சொன்னால் 3 வேலைக்கு போக வேனும்.அது சரி கண் சின்னன் என்டதுக்காகவா ரிஜட் :blink::lol:

ஐஸ்வர்யா ராய் மாதிரி கண் இருக்கவேண்டுமென்று விரும்பியிருக்கலாம். தப்பில்லைத்தானே :D

Link to comment
Share on other sites

கெமிஸ்ட்ரியின் அடிப்படையில் (இருபக்கமும்) கல்யாணம் கட்டினால்தான் சரிவர வாய்ப்பு அதிகம். அது வேணும் இதுவேணும் எண்டு கணக்குப் பார்த்துக் கட்டினால் களபுளதான்..! :blink:

Link to comment
Share on other sites

நான் முந்தி நல்ல நிறமான பொம்பிளை வேணும் எண்டு சொல்லும் போது அம்மா சொல்லுவா "அழகெல்லாம் சதை ஆழம்" எண்டு. அது எவ்வளவு உண்மை எண்டுறது, இப்ப எனக்கு புரியுது. நீ யாரை விரும்புகிறாய் எண்டுறதை விட உன்னை விரும்புகிறவனை/வளை கட்டினால் வாழ்க்கை இனிக்கும் எண்டுறது என்னுடைய கருத்து :blink: . அதுக்காக சும்மா எல்லாரையும் கட்ட ஏலாது, மற்றது சிலருக்கு இது பொருந்தாது. ன்ன வாழ்க்கையிலேயே ஒரே ஒரு பெண்ணையே விரும்பினேன், இன்று அவளையே கட்டும் நிலைக்கும் வந்துள்ளேன். இடையில் எத்தனையோ சண்டைகள் கோபங்கள் வந்திருக்கும் ஆனாலும் நான் மிக மிக பொறுமையாக இருந்துள்ளேன். (கலியாணம் கட்டின ஆக்களுக்கு விளங்கும் :D , பொம்பிளையல் தேவையில்லாத பல விடயங்களுக்காக சண்டை பிடிப்பினம் ஆனாலும் உள் மனதில எப்பவும் அன்பு இருக்கும்) :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரி! அந்த பிரமனே வந்து உங்களிடம் நீங்கள் விரும்பியபடி ஒரு ஆளை அழகு, குணத்துடன் படைத்து கட்டிக்கொள் என்று சொன்னாலும் அதுவும் சில நாளில் அலுத்துப் போகும். ஏனெனில் மனமானது அப்படிப் பட்டது. அதை விட இயல்பாக ஒருத்தரை மணந்து ஒருத்தருக் கொருத்தர் சில பல விடயங்களை விட்டுக்கொடுத்து அனுசரித்து அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பின்றி வாழ்த்தால் அது ஆயுள் வரை நீடிக்கும்!

(கலியாணம் கட்டின ஆக்களுக்கு விளங்கும் , பொம்பிளையல் தேவையில்லாத பல விடயங்களுக்காக சண்டை பிடிப்பினம் ஆனாலும் உள் மனதில எப்பவும் அன்பு இருக்கும்)

அது ....... . அதப் புரிந்து கொண்டால் சரி! :blink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் நெடுக்சை சீண்டத்தான் எழுதினேன்

தங்களை அது பாதித்து தாங்கள் இந்த வில்லங்கமான விளம்பரத்துக்கு தள்ளப்பட்டிருந்தால்....

மன்னிக்கவும்

இனி தங்களது கேள்விகளுக்கு பதில் எழுதமாட்டேன்

நன்றி மகளே...

விசுகு அண்ணா நீங்கள் என்ன சின்னப் பிள்ளையா...எதுக்கு இந்த கோபம்...கோபத்தை எல்லாம் விட்டு விட்டு விடுங்கள்...என்னை உங்கள் சகோதரியாக நினைத்தால் உடனே வந்து உங்கள் கருத்தை எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

(கலியாணம் கட்டின ஆக்களுக்கு விளங்கும் , பொம்பிளையல் தேவையில்லாத பல விடயங்களுக்காக சண்டை பிடிப்பினம் ஆனாலும் உள் மனதில எப்பவும் அன்பு இருக்கும்)

அது ....... . அதப் புரிந்து கொண்டால் சரி! :D

எனக்கு நிறைய எதிர்பார்ப்புண்டு. அதையெல்லாம் சொல்லி பிரயோசனம் இல்ல. ஏன்னா அத்தனை தகுதிகளோடும் உள்ளவையை கண்டுபிடிக்கிறது மகா கஸ்டம்..! ஏன் சும்மா எழுதி நேரத்தை வேஸ்ட் பண்ணுவான். :blink::D

உள் மனதில அன்பை வைச்சிருந்து என்னத்தப் பண்ணுறது. வெளியில காட்டாத அன்பும்.. வெளில புழங்காத பணமும் பெறுமதியற்றவை. கறுப்பானவை. (எப்படி இருக்கு நம்ம தத்துவம்).

நாங்க எப்படித்தான் அன்பா இருந்தாலும் சண்டை பிடிப்பினமா...??! அப்படியான விளக்கம் கெட்டதுகளோட வேணாம் வாழ்க்கையில சகவாசம். தனிய வாழ்வது கூடிய சுதந்திரம் என்று நினைக்கிறன். :lol:

Link to comment
Share on other sites

வாத்தியார், இசைக்கலைஞன், சுவி ஆகியோரின் கருத்துக்கள் நிதர்சனமானவை. அப்படி அனுபவப்பட்டவர்களின் கருத்துக்களை கவனத்தில் எடுங்கள். ஆரம்பத்திலேயே ஒருவரை ஒருவர் அறிந்து, புரிந்துகொண்டு நடப்பதே நல்லது. தொடக்கத்திலேயே நிறைய 'பில்ட் அப்' கொடுத்தால், அதை தொடர்வது கஷ்டமாகிவிடும். திருமணம் என்பது வாழ்க்கைத்துணை ஒன்றை தேடிக்கொள்வதாகும்.

உங்களுக்கு நல்ல ஒரு வாழ்க்கைத்துணை அமைய வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா நீங்கள் என்ன சின்னப் பிள்ளையா...எதுக்கு இந்த கோபம்...கோபத்தை எல்லாம் விட்டு விட்டு விடுங்கள்...என்னை உங்கள் சகோதரியாக நினைத்தால் உடனே வந்து உங்கள் கருத்தை எழுதுங்கள்.

எங்கிருந்தாலும் அந்த இடத்தை கலகலப்பாக வைத்திருப்பது எனது சுபாவம்

அது எல்லை மீறினால் நிறுத்திவிடுவேன்

நன்றி சகோதரி

நேரம் இருக்கும்போது...

தங்களது கேள்விக்கு பதில் எழுதுகின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது அனுபவங்கள் சிலவேளை தங்களுக்கு உதவக்கூடும்

சிறு வயதிலிருந்தே

நடக்கக்கூடியவையையே நினைப்பது எனது பழக்கம்

போட்டியான எந்த பொருளுக்கும் ஆசைப்பட மாட்டேன்

போட்டியில் அது எனக்கு கிடைப்பது கூட எனக்கு ஒவ்வாதது

ஏனெனில் அதுவும்யார் யாரிடமிருந்து எல்லாம்தப்பி வந்திருக்கிறது

இனியும் இது போன்ற போட்டி வரும்

அதிலிருந்தும் நான் ஜெயிக்கவேண்டும் என்பது எனக்கு தெரியும்

உண்மையில் இதை நாம்உணரவேண்டும்

அத்துடன் எமது பெருமைகளையும் திறமைகளையும்அறிந்திருப்பதற்கு அப்பால்

எமது இயலாமைகளையும் குறைகளையும் நாம் அறிந்திருக்கவேண்டும்

சிலர் என்னிடம் சொல்வார்கள்

சுண்டினால் சிவக்கும் பெண் வேண்டும் என்று

நான் அவர்களுக்கு சொல்வேன்

உனது முகத்தை கண்ணாடியில் பார்த்துக்கொண்டு இதைச்சொல் என்று.

உனக்கிருக்கும் ஆசைகளைப்போல்தான் எமக்கு வருபவருக்கும்இருக்கும் என்பதை மறப்பவர்கள் ஒரு நாளும் நிம்மதியாக வாழமுடியாது. அவர்கள் அந்தக்காலத்தில் போல

தமக்கு வருபவர்களை வீட்டில் பூட்டி வைக்கும்மனப்பக்குவத்துடனேயே வாழ்க்கையை தொடங்குகின்றனர்.

ஆனால் காலப்போக்கில் பொருளாதார சிக்கல்களில் மூழ்கி இரண்டும் கெட்டானாகி எல்லாவற்றையும் தொலைத்துவிடுகின்றனர்.

எனது பருவ வயதில் நான் சில விடயங்களில் மிகவும் கண்ணும் கருத்துமாக இருந்தேன்

யாரைக்கட்டவேண்டும்

அதனால் எனக்கு ஏற்படும் சாதக பாதக பலன்களை துல்லியமாகவும் ஆற அமரவும் எடைபோடும் நேரமும் காலமும் என்னிடமிருந்தது

அதேநேரம்

எனது வாழ்க்கையின் அடுத்த கட்டமான திருமணம் என்பது

எனது வாழ்க்கைக்கு ஒரு படிக்கட்டாக இருக்கவேண்டுமே தவிர

இறங்குமுகமாக இருக்கக்கூடாது என்று தெளிவாக இருந்தேன்

அழகான பெண்களை நான் ரசித்தேன் அவர்களுடன் நட்பாக பழகினேன்

காதல் என்று அவர்கள் சொல்லுமுன் விலகிவிடுவேன்

அதனால் அவர்களில் பலர் இன்றும் எனக்கு மிகவும்கண்ணியமாக பழகும் நண்பர்களாக இருக்கிறார்கள்.

பாடசாலையில் முதலாவதாக இருந்ததனாலும்

இருக்கும் இடத்தை சந்தோசமாக வைத்திருந்ததனாலும்

கொழும்பில் படித்துக்கொண்டு விடுமுறைக்கு ஊருக்கு வருவதனாலும் எல்லோருக்கும் என்னைப்பிடித்திருந்தது

ஆனால் இது சிறு வயதில்வரும் ஒரு ஈர்ப்பு

இதனை தவறாக பயன்படுத்தக்கூடாது என்று தெளிவாக இருந்தேன்

இவ்வளவையும் தாண்டி

தூர இருந்து என்னை விரும்பிய பெண்ணை நான் கட்டிக்கொண்டுள்ளேன்

அதனால் தான் ராஜா போல் இருக்கின்றேன் வீட்டில்.

ஏனெனில் எனது அபிலாசைகளே முக்கியம் அவளுக்கு.

அதுவும்அவளைப்பார்த்தல்ல

அவளது அம்மாவின் வளர்ப்பை பார்த்து.

இன்று எனது மாமியாரும் இங்குதான் இருக்கின்றா

அவாவுக்கு நேரவே நான் சொல்வேன்

தாயைப்பார்த்துத்தான் நான் பெண் எடுத்தேன் என.

அதுதானே உண்மை.

அவாவும் சொல்வார்

தன்னையும் எனது மாமனார்(முன்னைநாள்அதிபர்) வேலியால் எட்டிப்பார்த்து

தான்(பருத்தித்துறையில்);வீட்டில் மாவிடித்துக்கொண்டிருந்ததை பார்த்தபின்தான் கட்ட சம்மதித்தாராம் என்று.

எனவே நீங்கள் எப்படி இருக்கின்றீர்களே

அதற்கு ஏற்ப ஆளைத்தேடுங்கள்

அதையே மற்றவரும்தேடினால் இருவருக்கும் பொருத்தம் ஏற்படும்

இதில் இருவரில் எவரது தராதரத்துக்கான தேடல் பிழைக்குமாயின்...

இருவரது வாழ்க்கையும் அழிவைச்சந்திக்கும்.

Link to comment
Share on other sites

நான் ஒரு அழகான பெண்ணைப் பார்த்து கட்டித் தரும் படி அம்மாவிடம் சொன்ன போது, "எதற்கும் உன் மூஞ்சியை ஒருக்கா கண்ணாடியில் பார்த்துவிட்டு சொல்லு" என்றா..... அதற்கு பிறகு "நீங்கள் யாரைக் காட்டினாலும் சரி" என்று சரணடைந்து விட்டேன். ஏதோ ஏழைக்கு ஏற்ற எள்ளுண்டை என்ற கணக்கில் மனைவி வாய்த்தார்.. கிடைத்ததை வைத்து பெரு வாழ்வு வாழ்வது தான் சரி என்றுவிட்டு நானும் இருக்கின்றன்

அன்பு காட்டுவதற்கும், மனம் ஒத்துப் போவாதட்கும் "இன்ன இன்ன தகுதிகள்" இருக்க வேண்டும் என்றெல்லாம் இல்லை... ஒருவர் மீது மற்றவர் மதிப்பு வைத்தாலே மிச்சம் எல்லாம் சரி வந்து விடும். கொஞ்சம் வெளிப்படையாகச் சொன்னால் கணவனுக்கும் மனைவிக்கும் இடையிலான பாலியல் உறவில் தான் மிச்சம் மீதி எல்லாம் தங்கி இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல தொரு பதிவு ...வயசுல பெரியவா எல்லாம் சிறியவாவுக்கு அட்வைசுகளை அள்ளி வீசுங்கோ... :)

Link to comment
Share on other sites

காதலிக்கும்போது நிறைய எதிர்பார்ப்புக்கள் இருந்திச்சிது. நான் விரும்பியவர் வாழ்க்கைத்துணையாக வரமுடியாமல் போனபட்சத்தில் எதிர்பார்ப்புக்கள் எதுவும் எனக்கு இல்லை. திருமணம் செய்கின்ற நோக்கமும் எனக்கு இல்லை. தனியாளாக எனது வாழ்க்கையை மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் கொண்டு செல்கின்றேன். ஒருவேளை கஸ்டகாலத்திற்கு திருமணம் செய்தாலும் எனது ஆர்வங்கள், பழக்க வழக்கங்கள், தனித்தன்மையுடன் ஒத்துப் போகக்கூடிய வில்லங்கம் இல்லாத ஒன்று சோடியாய் கிடைச்சால் போதும் என்பதுவே எனது நிலைப்பாடு.

+++

நிழலி, ஏழைக்கு ஏற்ற எள்ளுருண்டை என்று சொல்லத்தேவையில்லை. உங்கள் குடும்பம் அழகானது, உங்களுக்கு நல்ல வாழ்க்கைத்துணை, மக்கள், அழகிய வாழ்க்கை கிடைத்து உள்ளது, நீங்கள் பெருவாழ்வை வாழ்ந்து தள்ளிவிட வேண்டியதுதான் மிச்சம்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

தெய்வத்துள் வைக்கப்படும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கல்யாணம் கட்டுவதற்கு அழகு தேவையில்லை என இங்கு கருத்து எழுதிய பலர் எழுதியிருந்தார்கள்...என்னுடைய கேள்வி என்னவென்டால் இங்கு கருத்தெழுதிய பலரும் பல் வேறுப்பட்ட தகுதியுடன் இருக்கிறீர்கள்...ஒவ்வொருவரும் தங்களது தகுதிக்கேற்ப மணமகள் இருக்க வேண்டும் என[அதாவது அழகாக]தானே நினைப்பார்கள்...வெளியில் கூட்டி செல்லும் போது இது என்னுடைய மனைவி என அறிமுகப்படுத்துவதற்கு ஏற்ற மாதிரி இருக்க வேண்டும் அல்லவா...இது என்னுடைய சந்தேகம் தயவு செய்து அழகு தேவையில்லை என சொன்னவர்கள் இதற்கு பதிலளிக்கவும்.

நிழலியின் அம்மா மாதிரி எல்லா அம்மாக்களும் இருந்தால் எப்படி இருக்கும்...உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி தப்பிலி.

எனக்கு நிறைய எதிர்பார்ப்புண்டு. அதையெல்லாம் சொல்லி பிரயோசனம் இல்ல. ஏன்னா அத்தனை தகுதிகளோடும் உள்ளவையை கண்டுபிடிக்கிறது மகா கஸ்டம்..! ஏன் சும்மா எழுதி நேரத்தை வேஸ்ட் பண்ணுவான். :):D

உள் மனதில அன்பை வைச்சிருந்து என்னத்தப் பண்ணுறது. வெளியில காட்டாத அன்பும்.. வெளில புழங்காத பணமும் பெறுமதியற்றவை. கறுப்பானவை. (எப்படி இருக்கு நம்ம தத்துவம்).

நாங்க எப்படித்தான் அன்பா இருந்தாலும் சண்டை பிடிப்பினமா...??! அப்படியான விளக்கம் கெட்டதுகளோட வேணாம் வாழ்க்கையில சகவாசம். தனிய வாழ்வது கூடிய சுதந்திரம் என்று நினைக்கிறன். :lol:

ஏன் தம்பி எப்ப பார்த்தாலும் அன்பை காட்டுகிறார்கள் இல்லை என எழுதுகிறீர்கள்...யாரையாவது ஒரு பெண்ணை தெரிவு செய்து அவர் மீது அன்பை நீங்கள் காட்டுங்கள்...காலப் போக்கில் அவரும் உங்களைப் புரிந்து கொண்டு அன்பு காட்டுவார்...விரைவாக திருமணம் செய்யுங்கள் நீங்கள் ஆசைப்படுகிறீர்களோ இல்லையோ இங்கு யாழில் கணபேர் ஆசைப்படுகிறார்கள். :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞன் நீங்கள் விரும்பினவர் கிடைக்காவிட்டால் அப் பெண்ணுக்கு உங்களோடு வாழ கொடுப்பினை இல்லை என நினைத்து விட்டு உங்களை விரும்பின பெண்ணாய் பார்த்து மணம் முடியுங்கள்...இப்போது உங்களால் தனிய வாழ இயலும் காலம் போகப்,போக தனிய வாழ்வது கஸ்டம் என நினைக்கிறேன்...இது என் கருத்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அழகு வேண்டாம் என்று யாரும் அடம் பிடிப்பதில்லை.ஆனால் கற்பனைகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் நிஜத்துக்கும் இடையே நிறைய வேறுபாடுகள் உண்டு.தோலைப்பாத்து மாடு பிடித்தால் தொழிலுக்கு உதவாது என்டு தெரியும் போது காலம் கடந்து விட்டிருக்கும்.மற்றும் ஒருவரை விட மற்றவர் அழகாகவோ அல்லது வேறு திறைமைகள் இருந்தாலு அதுவும் பிரச்சனைதான்.தமது குறைகளை மறைக்க மற்றவர் மீது எதாவது குறைகளை தேடிக்கொண்டே இருப்பார்கள்.(எல்லோரும் இல்லை)ஆக ஒரே விருப்பு உள்ளவர்கள் என்றால் பிரச்சனைகள் குறைவு. :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் தம்பி எப்ப பார்த்தாலும் அன்பை காட்டுகிறார்கள் இல்லை என எழுதுகிறீர்கள்...யாரையாவது ஒரு பெண்ணை தெரிவு செய்து அவர் மீது அன்பை நீங்கள் காட்டுங்கள்...காலப் போக்கில் அவரும் உங்களைப் புரிந்து கொண்டு அன்பு காட்டுவார்...விரைவாக திருமணம் செய்யுங்கள் நீங்கள் ஆசைப்படுகிறீர்களோ இல்லையோ இங்கு யாழில் கணபேர் ஆசைப்படுகிறார்கள். :(

அக்கா.. காட்டிற அன்பையே பரிசோதிக்கின்ற... சந்தேகின்ற பெண் ஜென்மங்களும் இந்த உலகில் இருக்கினம். அதுவும் இல்லாம அன்பு மட்டுமே போதும் என்ற நிலைக்கு அப்பால் அன்பை விட இன்னொன்று கவர்ச்சியாக அல்லது அவசியமாக தென்பட்டுவிட்டால் அன்பை உதறித்தள்ளிவிட்டு ஓடிவிடும் நிலையில் இருக்கின்றனர் பலர். இந்த நிலையில்.. ஒருவரை தேர்வு செய்து அவர் மீது அன்பு காட்டி.. அவரும் அன்பு காட்டிற மாதிரி காட்டிட்டு.. சந்தர்ப்பம் சூழ்நிலை தனக்கு இன்னும் இன்னும் சாதகமா அமைய உன்னுடைய அன்பு போதும்.. நான் இன்னொருத்தர் கிட்ட காட்டிக்கிறன்.. அல்லது பெற்றுக்கிறேன்.. என்று கழரும் நிலைதான் இன்று உலகில் செல்வாக்குச் செய்து கொண்டிருக்கையில்.. இது விடயமாக ஒரு உறுதியான நம்பிக்கையோடு ஒருவர் மீது அன்பு செலுத்தவே அச்சப்படும் சூழல் தான் இருக்கிறது.

நாங்க காட்டிற அன்பு எங்களுக்கே திருப்பிக் கிடைக்குமோ என்ற உத்தரவாதம் கூட இல்லாத ஒரு சூழலில்.. எப்படி ஒருவரை எழுந்தமானமாக தேர்வு செய்து அவர் மீது அன்பு காட்டிறது. எனக்கென்றால்.. இதெல்லாம் வேலைக்காகாத காரியங்களாகவே படுகின்றன. ஏதோ எங்கள் அன்பு எங்களோடே இருக்கட்டும்.. நாங்கள் எங்கள் வழியில் எமக்குப் பிடித்த வகையில் வாழ்ந்துவிட்டுப் போகலாம்... என்ற நினைக்குத்தான் எம்மை இன்றைய உலகம் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது.

இது யார் தவறு.. எனதா. அல்லது எனது அன்பை இனங்காணத் தவறும் இந்த உலகா.. சொல்லுங்கோ அக்கா. சும்மா அன்பு அன்பு என்று காலத்தை நேரத்தை வீணடிச்சு ஒருவர் பின்னாடி அலைஞ்சுகிட்டு இருக்கிறதுல எனக்கு அவ்வளவு ஈடுபாடில்ல. அலைஞ்சு போட்டு அவரும்... சேர்ந்து கூத்தடிச்சிட்டு.. இறுதியில் ரா ரா.. பாய் பாய் எண்டுவினம்.. அதுக்குப் பிறகு தனிய இருந்து புலம்பிக் கொண்டிருந்து என்ன பயன். எதையும் வருமுன் காப்பது சிறந்தது என்று நினைக்கிறேன். அதனால்.. இந்த குறிப்பாக பெண்கள் இடத்தில் அன்பு காட்டிறதில் எழுந்தமானப் போக்கை விட நிதானப் போக்கு அதிகம் பாதுகாப்பானது என்று நினைக்கிறேன். மற்றும்படி எதிர்பார்ப்பில்லா அன்பை எவரிடமும் ஏன் இந்த இயற்கை மீது கூடக் காட்டலாம்.. என்பது எனது நிலைப்பாடு. அது மனிதத் தன்மை என்று நினைக்கிறேன். :(

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மட்டக்களப்பு எல்லையில் புதிதாக விகாரை அமைப்பு – திட்டமிட்ட சிங்கள மயமாக்கல் தீவிரம் May 23, 2024   மட்டக்களப்பை சிங்கள மயமாக்கலின் அடிப்படையில் எல்லைக் கிராமமான கிரான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வடமுனை கிராம சேவகர்பிரில் உள்ள நெலுகல் மலை எனப்படுகின்ற மலையில் எமது மாவட்டத்தின் இரு இராஜாங்க அமைச்சர்களின் ஆசீர்வாதத்துடன் நெலுகல்மலை கிறீன் விகாரை எனும் பெயரில் புதிதாக விகாரை கட்டும் பணி திருகோணமலை சோமவதி விகாரை விகாராதிபதி தலைமையில் இடம்பெற்று வருகின்றது என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தேசிய அமைப்பாளா் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார். மட்டக்களப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி காரியாலத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாள் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். திட்டமிட்ட அடிப்படையிலே கிழக்கு சிங்கள தேசத்துக்குள் படிப் படியாக கரைந்து கொண்டிருக்கின்றது அம்பாறை. திருகோணமலை மாவட்டம் முழுவதுமாக சிங்கள தேசத்தின் திட்டமிட்ட அபகரிப்பு உட்பட்டு தமிழ் மக்கள் கையில் இருந்து விடுவிக்கப்படுகின்ற மிகப் பெரிய ஆபத்தான நிலைக்கு போயிருக்கின்றது. அதன் அடுத்த கட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் இதில் எல்லைப்புற கிராமங்கள் சிங்கள தேசத்தினாலும் பெரும்பான்மை இனத்தவர்களால் குறிவைக்கப்பட்டு எல்லைக் கிராமங்கள் அபகரிக்கும் செயற்பாடுகள் படிபடியாக நடந்தேறிவருகின்றது. அதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரான் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள வடமுனை கிராமசேவகர் பிரிவிலுள்ள நெலுகல் மலையில் எனப்படுகின்ற குடும்பி மலையின் பின்பகுதியான இந்த மலையில் நெலுகல்மலை கிறீன் விகாரை எனும் பெயரில் விகாரை கட்டும் பணியை திருகோணமலை சோமவதி விகாரை விகாராதிபதி தலைமையில் இடம்பெற்று வருகின்றது. இந்த பகுதியில் பாரிய கட்டிடம் அமைக்கப்பட்டு அதில் இருந்துகொண்டு கட்டுமானப்பணியில் இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதன்நோக்கம் கிழக்கு மாகாணத்தை முற்றுமுழுதாக சிங்கள பௌத்த தேசத்துக்குள் கரைப்பதற்கான நடவடிக்கையபக பார்க்கின்றோம் வடக்கில் குருந்தூர்மலை வெடுக்குநாறி மலை, கையகப்படுத்தப்பட்டுள்ள இந்த வேளையிலே கிழக்கு மண் சத்தம் இல்லாமல் பறிபோய் கொண்டிருக்கின்றது. மயிலத்தமடு மேச்சல்தரையில் ரவுண்டப் எனும் புல்லுக்கு அடிக்கும் மருந்தையடித்து மேச்சல் புல்தரைகள் அழிக்கப்பட்டு 8 ஆயிரத்துக்கு மேற்பட்ட மேச்சல் தரை காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளது அதேவேளை மகாவலி ஏ வலயத்துக்குரிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு பெரும்பான்மை இனத்தவர்களை குடியேற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்தப் பண்ணையாளா்கள் தொடர்ந்து அச்சுறுத்தி அங்கிருந்து அவர்களை வெளியேற்றுகின்ற நடவடிக்கைகள் கச்சிதமாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றது இந்த நடவடிக்கைகளுக்கு யார் காரணம் என்பதை மக்கள் மிகத் தெளிவாக விளங்கிகொள்ள வேண்டும். இந்த மாவட்டத்தில் 2 இராஜாங்க அமைச்சர்கள் இருக்கின்றனர். இவர்களுடைய பணி சிங்கள தேசத்தினுடைய நிகழ்சி நிரலை அமுல்படுத்துவதுதான் இவர்களது நோக்கமாக இருக்கின்றதே தவிர மட்டக்களப்பு மாவட்ட மக்களை பாதுகாக்க எந்தவொரு முன்னேற்றகரவமான செயற்பாடுகளையும் செய்யவில்லை. குறிப்பாக மேச்சல்தரை பகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் போக முடியாத சூழ்நிலை காணப்பட்டது அதனை எமது கட்சி தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அந்த இடத்துக்கு சென்று அந்த பகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர் கூட செல்லமுடியாது என்பதை சர்வதேசத்துக்கு அம்பலப்படுயிருந்தார். இந்த நிலையில் கஜேந்திரகுமார் ஏன் இங்கு வரவேண்டும் என பிள்ளையான் நேற்ரூ முன்தினம் கூட்டத்தில் கேட்டிருந்தார். எனவே கஜேந்திரகுமார் இந்த இடத்துக்கு வரவேண்டியதாக இருந்தது. நீங்கள் ஒரு காட்டிக் கொடுப்பை செய்து தமிழ் மக்களை அழிக்கின்ற செயற்பாட்டில் நின்றதனால் அந்த மக்கள் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளை கூப்பிடவேண்டிய அபாய நிலைக்கு இட்டுச் சென்றீர்கள் எனவே அது ஒரு வெக்க கேடான விடயம். இவரின் செயற்பாடுகளை பார்த்தால் தெரியும் தங்களது பக்கற்றுக்களை நிரப்புகின்ற விதமாக தங்களின் அமைச்சுக்கு ஊடாககிடைக்கின்ற வீதிகளை அமைத்து அதில் 15 வீதம் தரகு பணம் பெற்றுக் கொண்டு அதற்கு வக்காளத்து வாங்குகின்ற ஒப்பந்தகாரர்களை பின்னால் வைத்துக்கொண்டு பேச ஒப்பந்தகாரர்கள் கையடிக்கின்ற செயற்பாட்டை மிகக் கச்சிதமாக பிள்ளையான் செய்துவருகின்றாா் என்றும் சுரேஷ் தெரிவித்தாா்.   https://www.ilakku.org/மட்டக்களப்பு-எல்லையில்-ப/
    • ஈரான் ஜனாதிபதியின் ஜனாசா நல்லடக்கம் இன்று sachinthaMay 23, 2024 ஹெலிகொப்டர் விபத்தில் கொல்லப்பட்ட ஈரான் ஜனாதிபதி, வெளியுறவு அமைச்சர் மற்றும் ஏனையவர்களுக்காக அந்நாட்டு உயர்மட்டத் தலைவர் ஆயதொல்லா அலி காமெய்னி நேற்று தொழுகை நடத்தினார். ஈரானிய கொடி போர்த்திய இறந்தவர்களின் உடல்கள் அடங்கிய பேழைகள் டெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டு பெரும் எண்ணிக்கையான மக்களுக்கு முன் உயர்மட்டத் தலைவர் ஜனாஸா தொழுகையை நடத்தினார். ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிர் அப்துல்லாஹியன் மற்றும் மேலும் ஆறு பேர் சென்ற ஹெலி கடந்த ஞாயிற்றுக்கிழமை அசர்பைஜான் நாட்டு எல்லைக்கு அருகில் விபத்துக்குள்ளாகியதில் ஒருவரும் உயிர் தப்பவில்லை. ‘இறைவனே நாம் அவரிடம் நன்மையைத் தவிர வேறு எதனையும் பார்க்கவில்லை’ என்று உயர்மட்டத் தலைவர் பிரார்த்தனையின்போது தெரிவித்தார். தொடர்ந்து அந்த பேழைகள் மக்களால் சுமந்து செல்லப்பட்டதோடு வெளியே ‘அமெரிக்கா ஒழிக’ என்ற கோசமும் எழுப்பப்பட்டது. இந்த இறுதிக் கிரியையில் பல வெளிநாட்டு தலைவர்களும் பங்கேற்றனர். ஈரான் ஜனாதிபதியின் இறுதிக் கிரியை கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அவரது உடல் தெற்கு கொராசன் மாகாணத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் அவரது சொந்த ஊரான மஷாத்துக்கு எடுத்து வரப்படவுள்ளது. இன்று (23) மாலை இறுதிச் சடங்குகளுக்குப் பின்னர் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.   https://www.thinakaran.lk/2024/05/23/world/62483/ஈரான்-ஜனாதிபதியின்-ஜனாச/
    • இதெல்லாம் ரணிலுக்கு வாக்கு போட சொல்லும் ஒரு யுக்தி , மொக்கு சிங்களவனுக்கு சொல்லும் செய்தி 
    • கூகா என என் கிளை கூடி அழப் போகா வகை, மெய்ப்பொருள் பேசியவா நாகாசல வேலவ நாலு கவித் தியாகா சுரலோக சிகாமணியே.    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.