Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒற்றை மரம்...

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

21031100_e262bd7ce8.jpg

அந்த ஒற்றை மரம்

பரந்துவிரிந்த கிளைகளுடன் விருட்சமாயிற்று

பலருக்கு பலவாறு பிரயோசனப் பட்டது

கூடுகட்டிக் குருவிகள் வசித்தது

மரம் முழுக்க மந்திகள் இருந்தது

மரங்கொத்தி பறவையும் மறைப்பில்

குருவிச்சை கூட குசியாய் இருந்தது

எமக்கோ இளைப்பாற நிழல் கொடுத்தது

உண்ணக் கனி கொடுத்தது

உறங்கப் பாய் கொடுத்தது

ஏன் பலசமயம் தன்னையே விறகாய் எரித்தது

ஆனால் சிலசமயம் கொப்புமுறிந்து

கொலை செய்யவும் துணிந்தது

கல்லடி பட்ட மரத்துக்கு தானே காயத்தின் வலிதெரியும்

சின்ன மரங்களுக்கெல்லாம் கோவம்

இந்த மரத்தை மட்டும் எத்தனை பேர் வழிபடுகிறார்கள் என்று

எட்டி நின்று வெட்டிப் பார்த்தன‌

காயம் வந்தது ஆனால் அது களைப்படையவில்லை

தனிய முடியாதெனக் கூட்டிச் சேர்ந்த சின்ன மரங்களுக்கு

காரணம் கிடைத்தது பெரிய மரம் உள்ள வளத்தையெல்லாம்

உறிஞ்சுது என உரைத்தது உலக மரங்களுக்கு

காலத்துயர் கடுங்காற்று சூறாவழியாய் சுழற்றி

பெரிய மரத்தைச் சாய்த்துவிட்டது

மரம் சாய்ந்ததும் மந்திகளுக்கு போக்கிடம் ஏது

மரநிழலில் படுத்தவன் கூட மரத்தை விமர்சிப்பது புது ட்ரெண்டு

ஆனால் மரமோ இன்னும் விறகாய் எரிந்துகொண்டிருக்கிறது

அதிலும் குளிர்காயச் சிலர்

அந்த மரம் மீண்டும் துளிர்க்காதா எனச் சிலர்

jeeva.

03.10.10

ஜீவா, ... மரம் வளர்ந்து விருட்சமாகியது ... சாய்ந்த போதுதான் தெரிந்தது .... ஆணிவேரற்ற மரமென்று!

  • கருத்துக்கள உறவுகள்

அட தம்பி ஜீவா கவிதை கூட எழுதுவாரா...பாராட்டுகள்...நானும் ஒரு ஒற்றை மரம் தான் :unsure:

வித்தியாசமாய் சிந்திச்சு எழுதியுள்ளீர்கள். நீண்டகாலத்திற்கு பின்னர் குருவிச்சை எனும் சொல்லை பார்த்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்

உருவகக் கவிதை அருமை

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவா, ... மரம் வளர்ந்து விருட்சமாகியது ... சாய்ந்த போதுதான் தெரிந்தது .... ஆணிவேரற்ற மரமென்று!

நெல்லையன் ஆணிவேரில்லாமல் பெருமரமா?

வீழ்ந்த பெருந்தருவின் ஆணிவேரை மொய்த்துக்கிடக்கும் கறையான்கள் அரிக்கின்றன. உற்றுப் பாருங்கள் ஒவ்வொரு கறையானும் எவ்வளவு தூரம் பருத்து அநியாயத்திற்கு வளர்ந்திருக்கின்றன. இவையெல்லாம் நண்டு வெடித்துச் சாவதுபோல் செத்தாலொழிய.. :rolleyes:

ஜீவா அருமையான கவிதை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜீவா, ... மரம் வளர்ந்து விருட்சமாகியது ... சாய்ந்த போதுதான் தெரிந்தது .... ஆணிவேரற்ற மரமென்று!

ஆணிவேர்கள் மாற்றான் தோட்டத்து மல்லிகையில் மயங்கி சோரம் போனால்....

மரம் என்ன செய்வது??????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பி ஜீவா!

மனதை நெகிழ வைத்துவிட்டாய் ராசா

எழுது இன்னும் எழுது

நாலு சனத்துக்கு உறைக்கிற மாதிரி எழுது

நல்ல ஒரு கவிதை ஜீவா

முழுவதும் உணர்ந்து எழுதப்பட்டுள்ளது

பாராட்டுக்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வித்தியாசமாய் சிந்திச்சு எழுதியுள்ளீர்கள். நீண்டகாலத்திற்கு பின்னர் குருவிச்சை எனும் சொல்லை பார்த்தேன்.

நன்றி கரும்பு அண்ணா.

குருவிச்சை என்பது ஒரு ஒட்டுண்ணி தாவரம் அதாவது மரத்திலிருந்து நீர்,கனியுப்பை பெற்று வாழும் தாவரம். அதனால் தான் இதில் குறிப்பிடவேண்டி வந்தது. இறுதியில் மரத்தின் அழிவுக்கும் காரணமாய் விடுவதால் குறிப்பிட்டேன்.

ஜீவா நன்றாக எழுதுகிறீர்கள்.

கடலை போட்டு மீதமுள்ள நேரங்களில் கவிதை எழுத செலவழித்தால் உங்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டு. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் ஜீவா. இப்படி உறைக்கும் கவிதைகள் வாசித்து நீண்ட காலம். உவமான உவமேயம் அருமை.தொடர்ந்து எழுதுங்கள்.

----------------------------------

30 வருடமாக ஆணிவேரில்லாமல் ஒரு மரம் நெல்லையனின் பத்தைக்குள் உள்ளதாக்கும் :lol::lol:

பல நாட்களின் பின் நல்ல சிலேடையான, உருவக கவிதை வாசித்த திருப்தி ஜீவா. நீங்கள் கவிதையும் எழுதுவீர்கள் என்பது இன்று தான் தெரிந்தது.

எந்த பெரிய விருட்சமும் வீழ்ந்து போவதுதான் சரித்திரம். ஆனால் அதன் வீழ்ச்சியை அதன் விழுதுகளே ஏற்படுத்திவிட்டன என்பது தான் பெரும் துயரம். ஆனாலும் வீழ்ந்த விருட்சத்தினை உரமாகி கொண்டு எழும் நாணல்கள் கூட பெரும் வீரியம் கொண்டு எழும் என்பதும், புயல்களைக் கூட தாங்கும் என்பது இயற்கை விதி

21031100_e262bd7ce8.jpg

அந்த ஒற்றை மரம்

பரந்துவிரிந்த கிளைகளுடன் விருட்சமாயிற்று

பலருக்கு பலவாறு பிரயோசனப் பட்டது

கூடுகட்டிக் குருவிகள் வசித்தது

மரம் முழுக்க மந்திகள் இருந்தது

மரங்கொத்தி பறவையும் மறைப்பில்

குருவிச்சை கூட குசியாய் இருந்தது

எமக்கோ இளைப்பாற நிழல் கொடுத்தது

உண்ணக் கனி கொடுத்தது

உறங்கப் பாய் கொடுத்தது

ஏன் பலசமயம் தன்னையே விறகாய் எரித்தது

ஆனால் சிலசமயம் கொப்புமுறிந்து

கொலை செய்யவும் துணிந்தது

கல்லடி பட்ட மரத்துக்கு தானே காயத்தின் வலிதெரியும்

சின்ன மரங்களுக்கெல்லாம் கோவம்

இந்த மரத்தை மட்டும் எத்தனை பேர் வழிபடுகிறார்கள் என்று

எட்டி நின்று வெட்டிப் பார்த்தன‌

காயம் வந்தது ஆனால் அது களைப்படையவில்லை

தனிய முடியாதெனக் கூட்டிச் சேர்ந்த சின்ன மரங்களுக்கு

காரணம் கிடைத்தது பெரிய மரம் உள்ள வளத்தையெல்லாம்

உறிஞ்சுது என உரைத்தது உலக மரங்களுக்கு

காலத்துயர் கடுங்காற்று சூறாவழியாய் சுழற்றி

பெரிய மரத்தைச் சாய்த்துவிட்டது

மரம் சாய்ந்ததும் மந்திகளுக்கு போக்கிடம் ஏது

மரநிழலில் படுத்தவன் கூட மரத்தை விமர்சிப்பது புது ட்ரெண்டு

ஆனால் மரமோ இன்னும் விறகாய் எரிந்துகொண்டிருக்கிறது

அதிலும் குளிர்காயச் சிலர்

அந்த மரம் மீண்டும் துளிர்க்காதா எனச் சிலர்

jeeva.

03.10.10

ஜீவா உங்கள் கவிதை மிக அருமையாக உள்ளது. green-plus.jpg

ஈழப் போராட்டத்திற்கு உதாரணமாகவும் எடுத்துக் கொள்ளலாம். அதே நேரம் ஒவ்வொருவரும் தமது வாழ்க்கை உதாரணமாகவும் எடுத்துக் கொள்ளலாம். கீழே உள்ள வரிகள் மிகவும் யதார்த்தமாக இருக்கிறது. பாராட்டுக்கள் ஜீவா, தொடர்ந்து எழுதுங்கள்! :)

--------

நுணாவின் கருத்தை படித்து சிரிப்பில் புரை ஏறி விட்டது :lol:<_<

Edited by குட்டி

ஜீவா,

இப்போது தான் இக்கவிதையினைப் பார்த்தேன். உங்கள் உள்மனதின் வலி நன்கு வெளிப்பட்டுள்ளது. குறிப்பாக, "குருவிச்சை கூட குசியாய் இருந்தது" என்ற வரி நிச்சயமாய் நீங்கள் இயற்கையை நன்கு இரசித்து வாழ்ந்துள்ளீர்கள் என்பதைக் காட்டுகிறது. உங்களது குருவிச்சை வரியை முதற்தடவை படித்த போது "...ருசியாய் இருந்தது" என்று தான் படித்தேன். ஒருவேளை "...ருசியாய்" இருந்தது என்று வருவது கவிதையை இன்னமும் சுவையாக்குமோ என்று படுகிறது.

எப்படியாயின், குருவிச்சை ஒரு ஒட்டுண்ணி. கொடி மிகவும் அழகாகச் செழிப்பாக இருக்கும். கனி அதை விட அழகாக இருக்கும். குருவிச்சைக் கனியைச் சுவைக்கும் தைரியம் இருந்தவர்கள் அக்கனிக்கும் சுவை இருப்பதனை அறிந்திருப்பார்கள். இப்போ, இக்கவிதையில் "...குருவிச்சையும் ருசியாய் இருந்தது" என்பது ஏன் எனக்கு மேலும் அழகாய்ப்பட்டது என்றால்:

1. ஒட்டுண்ணிக்கு அதன் சிறப்பை அது தங்கி வாழும் மரம் தான் கொடுத்தது.

2. பார்வைக்குக் குருவிச்சை மரத்தின் ஒரு பின்னிப் பிணைந்த அங்கமாகத் தென்பட்டு அது மரம் தான் என்று பலரும் கருதினும், அது ஒரு ஒட்டுண்ணி என்பதைக் கண்டு கொண்டவர்கள் தங்கள் கவனத்தைக் குருவிச்சை மீது குவித்து அதன் கனிகளைச் சுவைத்துப் பார்த்தார்கள்.

3. மரத்தின் தன்மையால் குருவிச்சைக் கனி குறிப்பிடும் படியாகச் சுiவாயாக இருந்தது (ருசி என்பது உணர்வை மட்டுமன்றி அதனால் அடைந்த அனைத்து இலாபத்தையும் சுட்டி நிற்க முடியும்).

வாழ்த்துக்கள் உங்கள் கவிதைக்கு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜீவா,

இப்போது தான் இக்கவிதையினைப் பார்த்தேன். உங்கள் உள்மனதின் வலி நன்கு வெளிப்பட்டுள்ளது. குறிப்பாக, "குருவிச்சை கூட குசியாய் இருந்தது" என்ற வரி நிச்சயமாய் நீங்கள் இயற்கையை நன்கு இரசித்து வாழ்ந்துள்ளீர்கள் என்பதைக் காட்டுகிறது. உங்களது குருவிச்சை வரியை முதற்தடவை படித்த போது "...ருசியாய் இருந்தது" என்று தான் படித்தேன். ஒருவேளை "...ருசியாய்" இருந்தது என்று வருவது கவிதையை இன்னமும் சுவையாக்குமோ என்று படுகிறது.

எப்படியாயின், குருவிச்சை ஒரு ஒட்டுண்ணி. கொடி மிகவும் அழகாகச் செழிப்பாக இருக்கும். கனி அதை விட அழகாக இருக்கும். குருவிச்சைக் கனியைச் சுவைக்கும் தைரியம் இருந்தவர்கள் அக்கனிக்கும் சுவை இருப்பதனை அறிந்திருப்பார்கள். இப்போ, இக்கவிதையில் "...குருவிச்சையும் ருசியாய் இருந்தது" என்பது ஏன் எனக்கு மேலும் அழகாய்ப்பட்டது என்றால்:

1. ஒட்டுண்ணிக்கு அதன் சிறப்பை அது தங்கி வாழும் மரம் தான் கொடுத்தது.

2. பார்வைக்குக் குருவிச்சை மரத்தின் ஒரு பின்னிப் பிணைந்த அங்கமாகத் தென்பட்டு அது மரம் தான் என்று பலரும் கருதினும், அது ஒரு ஒட்டுண்ணி என்பதைக் கண்டு கொண்டவர்கள் தங்கள் கவனத்தைக் குருவிச்சை மீது குவித்து அதன் கனிகளைச் சுவைத்துப் பார்த்தார்கள்.

3. மரத்தின் தன்மையால் குருவிச்சைக் கனி குறிப்பிடும் படியாகச் சுiவாயாக இருந்தது (ருசி என்பது உணர்வை மட்டுமன்றி அதனால் அடைந்த அனைத்து இலாபத்தையும் சுட்டி நிற்க முடியும்).

வாழ்த்துக்கள் உங்கள் கவிதைக்கு

நன்றி இன்னுமொருவன் அண்ணா உங்கள் கருத்துக்கு. நிச்சயம் உங்கள் கருத்துக்களையும் உள்வாங்கிக் கொள்கிறேன்.

இங்கு குருவிச்சையும்,மரமும் இலாபமடைந்தன என்பது உண்மை தான். குருவிச்சை மரத்திலிருந்து நீரையும்,கனியுப்பையும் பெற்று எப்படி தனது உயிர்ப்பை தக்க வைத்ததோ அதுபோல மரத்திற்கும் குரிவிச்சையால் தன் இருப்புக்கு அதாவது மகரந்தசேர்க்கைக்கும்,இனப்பரம்பலுக்கும் வண்டுகள்,குருவிகளைக் கவர இங்கு குருவிச்சை தேவைப்பட்டது. ஆனால் இங்கு நோக்க வேண்டிய முக்கிய விடயம் என்னவென்றால் குருவிச்சையின் அபரிமிதமான பரம்பல் அல்லது வளர்ச்சி மரத்தின் அழிவுக்கே காரணம் என்பதை மரத்தால் உணரவும் முடியவில்லை உணர்ந்தாலும் மரத்தால் அவற்றை ஒன்றும் செய்துவிடவும் முடியவில்லை அதனால் தான் "குருவிச்சை கூட குசியாய் இருந்தது" என்று எழுதவேண்டி வந்தது. :D

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவா.. என்ன சொல்வதென்று தெரியவில்லை.. இந்தக் கவிதை மனதைப் பாதித்தது மட்டும் உண்மை..! :D

வாழ்த்துக்கள்..!

இந்தக் கவிதையிலும் தர்மத்தின் பெயரில் என்ற உங்கள் கவிதையிலும் எழுதும் விதம் உணர்வை தொடும்வகையில் இருக்கின்றது. தொடருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

21031100_e262bd7ce8.jpg

-------

மரங்கொத்தி பறவையும் மறைப்பில்

குருவிச்சை கூட குசியாய் இருந்தது

எமக்கோ இளைப்பாற நிழல் கொடுத்தது

-------

jeeva.

03.10.10

மரம் இருக்குமட்டும்..... குருவிச்சையும், மரங்கொத்தியும்..... குசியாய் இருந்தது.

மரம் இல்லாவிட்டால் தங்களுக்கும் கஷ்டம் தான் என்பதை முன்பே உணராமல்.....

மரத்தை காயப்படுத்துவதிலேயே குறியாக நின்ற கேவலத்தை என்ன வென்பது....

நல்ல கவிதை ஜீவா.

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை நன்றாக இயல்பாக இருக்கின்றது.

மேலும் பல கவிதைகள் படைத்திட வாழ்த்துக்கள் ஜீவா

வாத்தியார்

*********

ஜீவா.....!

உங்களின் கவிதையை வரிக்குவரி படித்தேன்!

நன்றிகள்,பாராட்டுக்கள் என்று சொல்லி உங்களை அந்நியப்படுத்த விரும்பவில்லை.

வரிகளில் தெரிகின்றது உங்களின் வலி....ஜீவா! :)

ஒவ்வொரு உண்மையான தமிழனுக்குள்ளும்... இந்த வலியும் உணர்வும் இருந்துகொண்டேதான் இருக்கும் .... இறுதிவரைக்கும்!

தெளிவான சிந்தனையோடு மிகத் தெளிந்த பார்வையோடு அணுகியிருக்கின்றீர்கள்! இந்த விடயத்தினைப் பொறுத்தவரையில் எனக்கும் ஒரே கருத்துத்தான் - உங்களைப் போலவே! :)

தொடரட்டும் உங்கள் ஆக்கங்கள்! :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜீவா.. என்ன சொல்வதென்று தெரியவில்லை.. இந்தக் கவிதை மனதைப் பாதித்தது மட்டும் உண்மை..! :)

வாழ்த்துக்கள்..!

நன்றி மாமோய். :wub:

இப்படியாய் ஆயிரம் சோகங்கள்,வலிகள் எமக்குள் "தினமும் சிரிக்கின்றோம் அழுதபடியே"

இந்தக் கவிதையிலும் தர்மத்தின் பெயரில் என்ற உங்கள் கவிதையிலும் எழுதும் விதம் உணர்வை தொடும்வகையில் இருக்கின்றது. தொடருங்கள்.

ரொம்ப நன்றி சுகன் அண்ணா. :lol:

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

21031100_e262bd7ce8.jpg

அந்த ஒற்றை மரம்

பரந்துவிரிந்த கிளைகளுடன் விருட்சமாயிற்று

பலருக்கு பலவாறு பிரயோசனப் பட்டது

கூடுகட்டிக் குருவிகள் வசித்தது

மரம் முழுக்க மந்திகள் இருந்தது

மரங்கொத்தி பறவையும் மறைப்பில்

குருவிச்சை கூட குசியாய் இருந்தது

எமக்கோ இளைப்பாற நிழல் கொடுத்தது

உண்ணக் கனி கொடுத்தது

உறங்கப் பாய் கொடுத்தது

ஏன் பலசமயம் தன்னையே விறகாய் எரித்தது

ஆனால் சிலசமயம் கொப்புமுறிந்து

கொலை செய்யவும் துணிந்தது

கல்லடி பட்ட மரத்துக்கு தானே காயத்தின் வலிதெரியும்

சின்ன மரங்களுக்கெல்லாம் கோவம்

இந்த மரத்தை மட்டும் எத்தனை பேர் வழிபடுகிறார்கள் என்று

எட்டி நின்று வெட்டிப் பார்த்தன‌

காயம் வந்தது ஆனால் அது களைப்படையவில்லை

தனிய முடியாதெனக் கூட்டிச் சேர்ந்த சின்ன மரங்களுக்கு

காரணம் கிடைத்தது பெரிய மரம் உள்ள வளத்தையெல்லாம்

உறிஞ்சுது என உரைத்தது உலக மரங்களுக்கு

காலத்துயர் கடுங்காற்று சூறாவழியாய் சுழற்றி

பெரிய மரத்தைச் சாய்த்துவிட்டது

மரம் சாய்ந்ததும் மந்திகளுக்கு போக்கிடம் ஏது

மரநிழலில் படுத்தவன் கூட மரத்தை விமர்சிப்பது புது ட்ரெண்டு

ஆனால் மரமோ இன்னும் விறகாய் எரிந்துகொண்டிருக்கிறது

அதிலும் குளிர்காயச் சிலர்

அந்த மரம் மீண்டும் துளிர்க்காதா எனச் சிலர்

jeeva.

03.10.10

ஜீவா

உங்கள் கவிதையை கவிதை என்ற ரீதியில் ரசித்ததை விட எங்கள் கதை என்ற ரீதியில் படித்தபோது மனம் கனத்துவிட்டது, கண்களும் கலங்கிவிட்டது....

பலரின் மனதையும் பாதித்த கவிதை தந்த ஜீவாவுக்கு வாழ்த்துக்கள்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.