Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்தானியா மேஜர் சிட்டு அரங்கில் சாந்தி வவுனியனின் கவிதை நூல் வெளியீடு.(படங்கள்)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size=6]http://ttnnews.com/35481.html[/size]

பிரித்தானியா மேஜர் சிட்டு அரங்கில் சாந்தி வவுனியனின் கவிதை நூல் வெளியீடு.(படங்கள்)

IMG_4271.jpg

பிரித்தானியாவில் சாந்தி வவுனியனின் ‘கண்கள் எழுதிய கவிதையின் கடைசிச்சொட்டு’ கவிதைநூல் அறிமுகவிழா இடம் பெற்றது.

மேஜர் சிட்டுவின் 15ம் ஆண்டு நினைவை முன்னிட்டு மேஜர் சிட்டுவுக்கு சமர்ப்பணமாக இக்கவிதைநூல் 04.08.2012 அன்று வெளிவந்துள்ளது.

போரில் உயிரிழந்த மக்களுக்கும் வீரச்சாவடைந்த மாவீரர்களுக்கும் மௌன அஞ்சலியுடன் நிகழ்வு ஆரம்பமானது. லெப்.கேணல் ராதா அவர்களின் தந்தையார் கனகசபாபதி அவர்கள் விளக்கேற்றி வைக்க மேஜர் சிட்டுவின் திருவுருவப்படத்திற்குத் தீபமேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

சிறந்த பாடகனாகவும் சிறந்த கலைஞனாகவும் வாழ்ந்த போராளி சிட்டுவின் நினைவுகளைத் தாங்கிய நிகழ்வில் நிகழ்வை தலைமையேற்று சிறப்புரையாற்றி நிகழ்வைத் தொகுத்து வழங்கிய சந்திரிக்கா சிட்டுவைப்பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.

சிட்டுவுடன் ஒன்றாகப் பயிற்சி முடித்து ஒன்றாக அரசியல் பணி செய்த காலங்களை சந்திரிக்கா தனதுரையில் நினைவு கூர்ந்தார். தொடர்ந்து நூலாசிரியர் பற்றிய அறிமுக உரையினை ஜெயக்குமார் மகாதேவன் ஆற்றினார்.

கவிதைநூலின் முதல் பிரதியை லெப்.செல்லக்கிளியம்மானின் சகோதரரும் தொழிலதிபருமான சூரி அவர்கள் வெளியிட்டு வைக்க தொழிலதிபர் கண்ணன் அவர்கள் பிரதியைப் பெற்றுக் கொண்டார்.

சிறப்புப்பிரதிகளை ரமேஷ் வவுனியன் வழங்க மூத்த பெண் போராளிகளில் ஒருவரான சீதா ஜீவன், சுதாஜினி றவி, எல்லாளன் திரைப்பட இயக்குனர் சந்தோஸ், வல்வை நண்பர்கள் சார்பில் உதயணன் ,லெப்.கேணல்.ராதாவின் சகோதரி சகிலா,மானுடவியல் ஆய்வாளர் விசாகன் , மூத்த பெண் போராளி சந்திரிக்கா, தமிழ்த்தகவல்நடுவம் நிறுவனர் வரதகுமார், மற்றும் கணேஸ், திருமலை பாலா ஆகியோர் பெற்றுக் கொண்டனர். நூல் மதிப்பீட்டுரையினை நவஜோதி யோகரட்ணம் அவர்கள் வழங்கினார்.

நிகழ்வின் நிறைவாக நூலாசிரியரின் பதிலுரையுடன் நேசக்கரம் மனிதாபிமானப் பணிகள் பற்றிய அறிமுகத்தோடும் தொடர்ந்த தாயக மக்களுக்கான பணிகள் பற்றிய விபரங்களும் பகிரப்பட்டு நிகழ்வு நிறைவடைந்தது.

IMG_4236.jpg

IMG_4245.jpg

IMG_4223.jpg

IMG_4248.jpg

IMG_4278.jpg

[size=6]http://ttnnews.com/35481.html[/size]

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் அக்கா. :)

  • கருத்துக்கள உறவுகள்

ஒதுங்கி அல்லது ஒதுக்கப்பட்டு இருந்த அனைத்து தமிழ் உணர்வாளர்களையம் ஒருங்கிணைத்து நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறீர்கள் பாராட்டுக்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் அக்கா. :)

நன்றிகள் நெடுக்கு.

ஒதுங்கி அல்லது ஒதுக்கப்பட்டு இருந்த அனைத்து தமிழ் உணர்வாளர்களையம் ஒருங்கிணைத்து நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறீர்கள் பாராட்டுக்கள்

மாற்றம் என்பது என்னிலிருந்து தொடங்க வேண்டும்.

ஆக்கபூர்வமான பணியை ஆரவாரம் , வெற்றுவேட்டுகள் , தாரைதப்பட்டைகள் இல்லது நடத்திய உங்கள் தன்னடக்கம் பாராட்டப்படவேண்டியதே . தொடருங்கள் உங்கள் பணியை சாந்தி .

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தி அக்கா புத்தக வெளீயிடு இனிதே நடந்ததையிட்டு மகிழ்ச்சி...சாத்திரி சொன்ன மாதிரி அனைத்து தமிழ் உணர்வாளர்களையம் ஒருங்கிணைத்து நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறீர்கள் ஆனாலும் சில நெருடல்கள்;

பார்வையாளர்களை அரங்கில் காணவில்லையே?

அழைப்பிதழில் தயானந்தா நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என போட்டு இருந்தது எங்கே அவரைக் காணவில்லை?

மேஜர் சிட்டு அரங்கம் லண்டனில் எங்கு உள்ளது?

உங்கள் இந்த நூலை இணையத்திலோ அல்லது லண்டனில் எங்கு வாங்கலாம்?

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சாந்தி.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள், சாந்தி!

விசாகனை, விசாரித்ததாகச் சொல்லுங்கள்! :D

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் அக்கா..

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சாந்தி அக்கா....

பாராட்டுக்கள் சாந்தி அக்கா அனைத்தும் சிறப்புற இனிப்புற நடைபெற

வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள் சாந்தி அக்கா. :)

([size=2]எப்படி கல்லா கட்டிச்சுதோ????[/size] :rolleyes:)

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]வாழ்த்துக்கள் சாந்தி ..[/size]

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்திட்ட நெடுக்ஸ், சாத்திரி , கோமகன் , ரதி ,தமிழ்சிறி , புங்கையூரான் , சைக்கலைஞன், சுபேஸ், தமிழ்சூரியன், ஜீவா, தமிழரசு அனைவருக்கும் மிக்க நன்றிகள். புத்தகத்தை பெற்றுக் கொள்ள விரும்புவோர் தொடர்ப கொள்ளுங்கள். ஒரு புத்தகத்தின் விலை 5€. பிரித்தானியாவிலிருந்து புத்தகத்தை பெற விரும்புவோருக்கு பிரித்தானியாவிலிருந்து அனுப்பி வைக்கப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தி அக்கா புத்தக வெளீயிடு இனிதே நடந்ததையிட்டு மகிழ்ச்சி...சாத்திரி சொன்ன மாதிரி அனைத்து தமிழ் உணர்வாளர்களையம் ஒருங்கிணைத்து நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறீர்கள் ஆனாலும் சில நெருடல்கள்;

பார்வையாளர்களை அரங்கில் காணவில்லையே?

அழைப்பிதழில் தயானந்தா நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என போட்டு இருந்தது எங்கே அவரைக் காணவில்லை?

மேஜர் சிட்டு அரங்கம் லண்டனில் எங்கு உள்ளது?

உங்கள் இந்த நூலை இணையத்திலோ அல்லது லண்டனில் எங்கு வாங்கலாம்?

சாந்தி அக்காவின் முயற்சி மிகவும் பாராட்டுதலுக்கு உரியது..அதந்த வைகயில் அவருக்கு என் நன்றிகள் எப்போதும் இருக்கும்..எனக்கும் உங்களைப் போல் இதே ஆதங்கம் இருந்தது ரதி..நான் நினைத்து கொண்டு இருந்தது புத்தக வெளியீடு என்றால் ஓரளவுக்கு தன்னும் மக்கள் வந்திருப்பார்கள்,ஆதரவு இருந்திருக்கும் என்று நினைத்தேன்..படங்களை பார்த்துட்டு இவ்வளவு பேர் தானா லண்டன் வாழ் மக்கள் என்று நினைக் தோன்றியது..ஆனாலும் வீட்டில் சும்மா நின்றாலும் எங்களுக்கு நேரம் இல்லை என்று சொல்லி பல நல்ல விடையங்களுக்கு போவதை தவிர்க்கப் பழகிக் கொண்டவர்கள் எங்கள் மக்கன்..யாரை நாம் நோக முடியும்...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாந்தி அக்கா புத்தக வெளீயிடு இனிதே நடந்ததையிட்டு மகிழ்ச்சி...சாத்திரி சொன்ன மாதிரி அனைத்து தமிழ் உணர்வாளர்களையம் ஒருங்கிணைத்து நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறீர்கள் ஆனாலும் சில நெருடல்கள்;

பார்வையாளர்களை அரங்கில் காணவில்லையே?

அழைப்பிதழில் தயானந்தா நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என போட்டு இருந்தது எங்கே அவரைக் காணவில்லை?

மேஜர் சிட்டு அரங்கம் லண்டனில் எங்கு உள்ளது?

உங்கள் இந்த நூலை இணையத்திலோ அல்லது லண்டனில் எங்கு வாங்கலாம்?

பார்வையாளர்களை எடுத்த கமராக்களில் தெளிவான படங்கள் இல்லை. அதனால் அவற்றை சேர்க்க முடியாபோய்விட்டது.

லண்டனில் உள்ள தோழியொருவர் தனது கமராவில் எடுத்திருந்த படங்களில் சபையோரின் படங்கள் தெளிவாக வந்திருப்பதாக சொன்னாள். ஆயினும் உரிய நேரத்தில் படங்கள் வந்து கிடைக்காமையால் செய்தியில் இணைக்க முடியாது போய்விட்டது.

தயானந்தா அவர்களுக்கு நிகழ்வு நேரத்துக்கு தயானந்தாவால் வரமுடியாதென தெரிவித்திருந்தார். வேலையிடத்தில் கட்டாயம் அன்று பணியில் இருக்க வேண்டியிருந்தமையால் தயானந்தா குறித்த நேரத்துக்க வருகைதரமுடியாது போனது.

ஆயினும் சந்திரிக்கா தலைமையேற்றது நிகழ்வுக்கு பொருத்தமாகவும் அமைந்திருந்தது.

புத்தகத்தை வடலியில் வாங்கலாம். அல்லது பிரித்தானியாவில் தமிழ்த்தகவல்நடுவத்தில் பெற்றுக் கொள்ளலாம்.அல்லது தபாலில் அனுப்பிவைக்க முடியும்.

மேஜர் சிட்டு அரங்கம் லண்டனில் எங்கு உள்ளது?

நிகழ்வு நடக்கும் அரங்கத்தை ஒவ்வொருவரரின் பெயரில் நடத்த முடியும். அந்த வகையில் இந்தக் கவிதைநூல் மேஜர் சிட்டுவிற்கு சமர்ப்பணமாக அவரது 15ம் ஆண்டு நினைவு ஆண்டில் வெளியிட்டமையால் நிகழ்வு அரங்கத்தை சிட்டு அரங்கமாக்கி நிகழ்வை நடாத்தினோம். மற்றும்படி யாராவது பிரித்தானியாவில் அப்படியொரு அரங்கத்தை வைத்திருக்கிறார்களா என்ற விபரம் எனக்குத் தெரியாது ரதி. இந்த அரங்கம் தொடர்பான விளக்கத்தை யாராவது அறிஞர்கள் தான் விளக்க வேண்டும்.

Edited by shanthy

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை எழுதத் திறமை இருந்தாலும் அதற்கு நேரம் கிடைக்க வேண்டும்.

அப்படி எழுதிய கவிதைகளைத் தொகுத்து ஒரு நூலாக்குவது இன்னும் கடினம்.

அதையும் சாதித்து அந்த நூலை வெளியீடு செய்த சாந்தி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுக்களும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள்..

படம் எல்லாம் போட்டு இருக்கிறீர்கள், சந்தோசம்.

ஜெர்மனியில் ஹாய் சாந்தி! என்று ஒரு குரல் கேட்டால் அது என்னுடையதாகவும் இருக்கலாம் :D ஜெர்மனிக்கு வந்தால் :icon_idea:

வாழ்த்துக்கள் சாந்தி. உங்கள் பணி தொடர வேண்டுகிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வடலியில் கண்கள் எழுதிய கவிதையின் கடைசிச்சொட்டு கவிதை நூலை பெற்றுக்கொள்ள கீழ் வரும் இணைப்பில் அழுத்துங்கள்.

[size=6]http://vadaly.com/shop/?page_id=231&category=36&product_id=175[/size]

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சாந்தியக்கா நீங்கள் ஊர் வந்த்தவுடன் தொடர்பு கொள்கிறேன் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]வாழ்த்துக்கள் சாந்தி. [/size]

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நூலை வெளியீடு செய்த சாந்தி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுக்களும்.

நன்றிகள் வாத்தியார்.

வாழ்த்துக்கள்..

படம் எல்லாம் போட்டு இருக்கிறீர்கள், சந்தோசம்.

ஜெர்மனியில் ஹாய் சாந்தி! என்று ஒரு குரல் கேட்டால் அது என்னுடையதாகவும் இருக்கலாம் :D ஜெர்மனிக்கு வந்தால் :icon_idea:

யேர்மனி உங்களை வரவேற்கிறது. வாங்கோVolcano.

வாழ்த்துக்கள் சாந்தி. உங்கள் பணி தொடர வேண்டுகிறேன்.

மிக்க நன்றிகள் பகலவன்.

வாழ்த்துக்கள் சாந்தியக்கா நீங்கள் ஊர் வந்த்தவுடன் தொடர்பு கொள்கிறேன் .

மிக்க நன்றிகள். ஊருக்கு வந்திட்டம்.

வாழ்த்துக்கள்.

மிக்க நன்றிகள் குமாரசாமி.

[size=4]வாழ்த்துக்கள் சாந்தி. [/size]

மிக்க நன்றிகள் கறுப்பி.

வாழ்த்துக்கள் சாந்தி.

புத்தகம் வாங்குவதற்கான இணைப்பையும் தரவும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.