Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிவகாசி பட்டாசு ஆலையில் தீ விபத்து: 31 பேர் பலி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிவகாசி: சிவகாசி அருகே உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 31 தொழிலாளர்கள் பலியாகினர்; 25 பேர் காயமடைந்தனர்.

மேலும் சுமார் 100 பேர் சிக்கி தவிக்கும் நிலையில்,அவர்களை மீட்க கடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள முதலிப்பட்டியில் ஓம் சக்தி பட்டாசு தொழிற்சாலை உள்ளது.தீபாவளி பண்டிகை நெருங்குவதையொட்டி பட்டாசு தயாரிக்கும் பணியில் 184 தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர்.40-க்கும் மேற்பட்ட அறையில் பட்டாசு தயாரிப்பு நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இன்று மதியம் 12 மணி அளவில் ஒரு அறையில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் திடீரென வெடித்தது.இதில் அருகில் இருந்த அனைத்து அறைகளுக்கும் தீ பரவியது.அங்கு இருந்த அனைத்து பட்டாசுகளும் வெடிக்க தொடங்கியது. இதனால் அந்த பகுதியில் புகை மண்டலமாக இருந்தது. இதில் அங்கு வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளர்கள் வெளியேற முடியாமல் சிக்கி தவித்தனர்.

இது குறித்த தகவல் அறிந்ததும் 10 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த 60 தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

45 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் உள்ள 45 அறைகளில் பட்டாசுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.அந்த அறைகள் முழுவதுமே தீப்பிடித்து எரிந்த நிலையில், பட்டாசு மற்றும் பட்டாசு தயாரிப்பதற்கான வெடிமருந்துகள் வெடித்து சிதறிக்கொண்டே இருந்ததால்,தீயணைப்பு வீரர்கள் உள்ளே நெருங்க முடியாமல் தவித்தனர்.இதனால் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டது.

ஆனாலும் கடும் சிரமத்துடன் அவர்கள் தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து உள்ளே வெடிசத்தம் கேட்டு கொண்டு இருப்பதால் வேலை பார்த்து கொண்டிருந்த 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் கதி என்ன என்று தெரியவில்லை.

இந்த விபத்தில் மேலும் பலர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.25 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.மீட்பு பணி தொடர்ந்து நடைபெறுகிறது.

பட்டாசுகள் நாசம்

இந்த தீ விபத்தில் தீபாவளி பண்டிகைக்காக தயாரித்து வைக்கப்பட்டிருந்த கோடி கணக்கான ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் தீயில் எரிந்து நாசமானது.

வேடிக்கை பார்த்த 50 பேர் மயக்கம்

மேலும் தீ விபத்தை வேடிக்கை பார்க்க வந்த சுமார் 50 பேர் மயங்கி விழுந்ததால் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இவர்களில் 20 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

விகடன் செய்திகள்

  • கருத்துக்கள உறவுகள்

சிக்கியிருப்பவர்கள் மீட்கப்பட வேண்டும்..! உயிரிழந்தவர் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்..!

தீவிபத்து ஏற்படும்போது ஊழியர்கள்/மக்கள் பாதுகாப்பாக வெளியேறும்விதமாக (Emergency egress) கட்டடங்களை வடிவமைக்க வேண்டும். இந்திய யூனியன் இதற்கான சட்டங்களைக் கொண்டுவரும் என எதிர்பார்க்க முடியாது. தமிழ்நாடு அரசு இந்த வரைமுறைகளைக் கொண்டுவரவேண்டும். ஏற்கனவே கட்டப்பட்டுவிட்ட கட்டடங்களையும் மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.

[size=1]

[size=4]குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். [/size][/size]

[size=4]தமிழக அரசு கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும். [/size]

சிவகாசி பட்டாசு ஆலை விபத்து : 33 பேர் பலி

[size=2]சிவகாசி அருகே முதலிப்பட்டியில் உள்ள ஓம் சக்தி பயர் ஒர்க்ஸ் ஆலையில் தீ விபத்து நிகழ்ந்தது. ஒரு பட்டாசு அறையில் பிடித்த தீ 45 அறைகளுக்கும் அடுத்தடுத்து பரவியது. [/size]

[size=2]இதில் பட்டாசுகள் ஆங்காங்கே வெடிக்க ஆரம்பித்தன. இதில் 40 க்கும் மேற்பட்ட அறைகள் வெடித்து தரைமட் டமானது. இந்த விபத்தில் 33 பேர் பலியாகியுள்ளனர்.[/size]

[size=2]

[size=2]விபத்தில் பலியான 19 பேர் உடல் சிவகாசி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.

விபத்தில் இறந்தவர்களில் 13 தொழிலாளர்உடல் சாந்தூர் மருத்துவமனையில் வைக்கப் பட்டுள்ளன. மேலும் படுகாயமடைந்த 11 பேர் மருத்துவ மனையில் கவலைக்கிடமாக உள்ளனர்.[/size]

[/size][size=2]

[size=2]அமைச்சர்கள் ஓ.பி.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், முனுசாமி, ராஜேந்திரபாலாஜி, ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு, பாதிக்கப்படோருக்கு ஆறுதல் கூற சென்றனர்.[/size][/size]

[size=2]

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=82035[/size]

  • கருத்துக்கள உறவுகள்

பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

சிக்கியிருப்பவர்கள் மீட்கப்பட வேண்டும்..! உயிரிழந்தவர் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்

சிக்கியிருப்பவர்கள் மீட்கப்பட வேண்டும்..! உயிரிழந்தவர் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்..!

தமிழக உறவுகளுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

முன் பாதுகாப்பிலாத ஏழைகளின் உயிர்ப்பலி . இறந்தவர்கள் குடும்பத்துக்கு ஆவன செய்யப்பட வேண்டும். பட்டாசு தொழிற் சாலையின் கட்டிட நிர்மாணம் மீளாய்வு செய்யப்பட வேண்டும். மற்றவர் மகிழ்வுக்காக வெடி தயாரிப்பில் ஈடுபட்டு வெடித்துப்போன உயிர்களுக்கு என ஆழ்ந்த் அஞ்சலிகள். .

  • கருத்துக்கள உறவுகள்

பட்டாசு விபத்துக்கான காரணங்களை கண்டறிந்து மேலும் இவை நடைபெரமாலும் இறந்த குடும்பத்தினருக்கு நஷ்ட ஈடு வழங்க்கவும் முதல்வரும் தமிழ் நாட்டு அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்..... ஆழ்ந்த இரங்கல்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்

ஆழ்ந்த அனுதாபங்கள்......! :( இப்படியான விபத்துக்கள் மேலும் நடைபெறாமல் இருக்க தகுந்த பாதுகாப்புகள் இனியாவது செய்து கொடுக்கப்படுமா?

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது... எந்தப் பண்டிகையும், இல்லாத நிலையில்... தயாரித்த பட்டாசுகளை 45 அறைகளில், தொழிலாளர் வேலை செய்யும் இடத்தில் சேமித்து வைக்காமலிருந்திருந்தால்... உயிர்ச்சேதம் குறைவாக இருந்திருக்கும். லஞ்சமும், ஊழலும்... உள்ள அதிகாரிகளால்... உயிரை இழந்தது அப்பாவி மக்களே....

இனியாவது பட்டாசு தொழிற்சாலை தீ விபத்து, பாடசாலை தீ விபத்து ஏற்படாமலிருக்க தீவிரமாக கண்காணியுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பட்டாசு வெடி விபத்தில் பாதிக்கபட்ட அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள், விபத்தில் காயமடைந்தோ விரைவாக குணமடைய பிராத்திர்கின்றோம்

  • கருத்துக்கள உறவுகள்

கலியாண மண்டபத்தில் தீ.. பட்டாசு ஆலையில் தீ.. பாலம் இடிந்து வீழ்ந்து மக்கள் பலி.. வாகன விபத்தில் பலி.. ரெயில் பெட்டியில் தீ.. கடைத் தொகுதியில் தீ.. மழையில்.. குடிசைகள் இடிந்து வீழ்ந்து மக்கள் பலி.. குடிசைகள் தீயில் கருகி மக்கள் சாவு.. பள்ளிச் சிறுமி பஸ்ஸின் தூவரத்தூடு விழுந்து பலி.. ஆட்டோவில் இருந்து பயணி தவறி விழுந்து பலி... இவை போன்ற இன்னோரென்ன.. அநாவசிய பலிகளுக்கும் காரணம்.. தகுந்த பாதுகாப்பின்மையும்.. கவனம் இன்மையும்.. அரசுகளின் ஊழியர்களின் முதலாளிகளின் மெத்தனப் போக்கும் சட்டம் விதிகள் சரியான வகையில் அமுல்படுத்தப்படாமையும் ஆகும்.

தமிழகத்தை உருப்படியான ஒரு தமிழன் ஆளும் வரை இந்த நிலை தொடரும்..! எனி முதல்வர் நிவாரண நிதியில் இருந்து இறந்தவர்களுக்கு 5 இலட்சமும்.. காயமுற்றவர்களுக்கு ஒரு இலட்சமோ.. 50,000 கொடுத்து சரிக்கட்டி விட்டு.. அடுத்த விபத்துக்கு எதிர்பார்த்திருப்பார் முதலமைச்சர்..! எதிர்கட்சிகளோ.. இரண்டு நாள் கூச்சலிட்டிட்டு 3 நாள் தாங்கள் அதில காசு பிடுங்க போயிடுங்கள்..!

என்னவோ பாவம் அப்பாவி ஏழை மக்கள் தான்.. அநியாயமாக இங்கு வாழ்வை இழக்கிறார்கள். இவற்றிற்கு முடிவு தான் எப்போ..???!

அநியாயமாய் இறந்து போன உறவுகளுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணம் பெற எல்லோருக்கும் பொதுவான கடவுளை பிரார்த்திக்கிறோம். மனிசனை நம்பிறதிலும்.. கடவுளை நம்பலாம் போல இருக்குது..! :icon_idea::(

Blaze at India fireworks factory 'kills 34'

_62703787_015878292.jpg

http://www.bbc.co.uk/news/world-asia-india-19486175

  • கருத்துக்கள உறவுகள்

:(

557388_351770291578571_1491827480_n.jpg

ஆழ்ந்த அனுதாபங்கள். நாட்டை திருடி அரசியல் நடத்தியாயிற்று. பொதுமக்கள் இப்படி அனுபவிக்க வேண்டியதாயிற்று. தமிழகத்தின் செல்வம் மிக்க குடும்பம் தான் தேடிய சொத்திலிருந்து ஏழை தொழிலாளிகள் குடும்பங்களுக்கு உதவ முன் வேண்டும். வெடித்தொழில் கம்பனி் தனது தொழிலாளிகளுக்கு முறையான காப்புறுதி தன்னும் வைத்திருந்ததோ தெரியாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இறந்தவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.சிவகாசியில் மட்டும் 700க்கும் அதிகமான பட்டாசு தொழிற்சாலைகள் இருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சிலகாலங்களுக்கு முன் நெதர்லாந்திலும் இதேபோன்ற சம்பவம் நடந்ததும் அநேகருக்கு தெரிந்திருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

விருதுநகர்: சிவகாசி அருகே, பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில், ஏழு அறைகள் தரைமட்டமாகின. பணியிலிருந்தவர்களை காப்பாற்ற முயன்ற, 35 பேர் பலியாகினர். பலி எண்ணிக்கை, 150 பேருக்கு மேல் உயரலாம் என அஞ்சப்படுகிறது. விருதுநகர் அருகே, சாத்தூர் சாலையில் உள்ளது, கன்னிச்சேரி; இதனருகே உள்ளது, முதலிப்பட்டி. இங்கு விருதுநகர் ஒன்றிய அ.தி.மு.க., கவுன்சிலரான முருகேசனுக்குச் சொந்தமான, ஓம்சக்தி பயர் ஒர்க்ஸ் உள்ளது. இதை, திருத்தங்கலை சேர்ந்த பால்பாண்டி, குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார். இங்கு, கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் முதலிப்பட்டி, சுற்று கிராமத்தை சேர்ந்த, 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். வெளிநாடுகள், வெளி மாநிலங்களுக்கு பட்டாசு ஏற்றுமதி செய்யும் இந்த ஆலை, சில மாதங்களாக, தீபாவளிக்கான பட்டாசுகளைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தது. நேற்று மதியம், 12.10 மணிக்கு, நவீன ரக பட்டாசு தயாரிப்பதற்காக, மணி மருந்தை செலுத்திய போது, உராய்வு ஏற்பட்டு, வெடி விபத்து ஏற்பட்டது. ஆலையில் உள்ள, ஏழு அறைகளும் தரைமட்டமாகின; 30 அறைகள் சேதமடைந்தன. விபத்தை அறிந்து, தியாகராஜபுரம், முதலிப்பட்டி, வச்சக்காரபட்டி கிராமத்தை சேர்ந்த ஏராளமானோர், விபத்தில் சிக்கிய உறவினர்களை காப்பாற்ற, ஓடி வந்தனர். உள்ளே யாரும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால், அவர்களை உள்ளே விடாது, வச்சக்காரபட்டி இன்ஸ்பெக்டர் ராஜா தடுத்தார். ஆனால் கிராமத்தினர், இன்ஸ்பெக்டரை தாக்கியபடி, ஆவேசமாக உள்ளே நுழைந்தனர். அப்போது, அங்கிருந்த ரசாயன குடோனும் வெடித்தது. காப்பாற்ற முயன்றவர்கள் அனைவரும், காயமடைந்தனர். இவர்கள், விருதுநகர், சிவகாசி, சாத்தூர் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மாலை, 3.20 மணி தகவல்படி, 35 பேர் இறந்ததாகக் கூறப்பட்டது.

வெடிச் சத்தம், மாலை, 3.20 மணி வரை நீடித்தது. அரை கிலோ மீட்டர் சுற்றளவிற்கு, வெடிச்சத்தம் கேட்டது. சாத்தூர், விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து, தீயணைப்பு வண்டிகள், ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டன. தொடர்ந்து வெடித்ததால், மாலை, 3.20 மணி வரை, ஆலைக்குள் செல்ல முடியவில்லை. வெடிச்சத்தம் குறையத் துவங்கியதும், மாலை 3.20 மணிக்கு, தீயணைப்பு வீரர்கள் உள்ளே சென்று, மீட்பு பணியில் ஈடுபட்டனர்

Dinamalar

* பட்டாசு தயாரிக்கும் அறையின் தரைப் பகுதியில், "தீப்பிடிக்காத மேட்' விரிக்கப்படவில்லை.

* ஊழியர்களும் பருத்தி ஆடைகளை அணியவில்லை.

* பாதுகாப்பற்ற அறையில், சக்தி வாய்ந்த வெடிபொருட்கள் வைத்திருந்ததால், இதுவே பெரும் விபத்துக்கு காரணமாக அமைந்து விட்டது.

* வெடி விபத்து நடந்த ஆலையில், ஏற்றுமதி தரம் வாய்ந்த பட்டாசுகள் அனைத்தும், பாதுகாப்பற்ற அறைகளில் வைக்கப்பட்டுள்ளன.

* நேற்று நடந்த விபத்தில், பட்டாசுகள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் தீ பரவியிருந்தால், வாடி, முதலிப்பட்டி கிராமங்கள் அழிந்திருக்கும் என, அப்பகுதி மக்கள் பீதியுடன் தெரிவித்தனர்.

தடைக்கு பிறகும் இயங்கிய ஆலை:

விபத்து நடந்த ஆலையில், துணை தலைமை வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை அலுவலர் ரெங்கசாமி, கடந்த, 28ம் தேதி ஆய்வு செய்துள்ளார். அப்போது ஆலையில், அளவுக்கு அதிகமான வெடிபொருட்கள் இருந்ததைக் கண்டுபிடித்தார். விதி மீறியதாகக் கூறி, இந்த ஆலை தொடர்ந்து செயல்பட, தற்காலிக தடை விதித்துள்ளார். ஆனால் இதை, அதிகாரிகள் முறையாக கண்காணிக்காததால், ஆலையும் தொடர்ந்து செயல்பட்டு வந்துள்ளது. இந்த முறைகேட்டால், தற்போது இந்த கொடூர விபத்து நிகழ்ந்துள்ளது.

Dinamalar

அ.தி.மு.க நேரம் அ.தி.மு.க , தி.மு.க. நேரம் தி.மு.க. இதை ஒழுங்கு படுத்தவே முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

உடனடியாகவே ஸ்போட் க்கு போய் மக்களை தடுத்து அதனால் காயமாடைந்த அந்த இன்ஸ்பெக்டர் க்கு என்னோட சலூட்.

  • கருத்துக்கள உறவுகள்

[size=4] உறவுகளுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் !!![/size]

உறவுகளுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் !!!

  • கருத்துக்கள உறவுகள்

அரசு தகுந்த பாதுகாப்பு நடவடிக்கை எடுக்காததால் இவ்வளவு மக்கள் இறந்துள்ளார்கள். ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

உறவுகளுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.