Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக மதுரையில் தீக்குளித்து இளைஞர் பலி - வைகோ அஞ்சலி.[படம்]

Featured Replies

மதுரையில் கோரிப்பாளையம் தேவர் சிலை
எதிரில் காங்கிரஸ் பிரமுகருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க்கில் மதுரை,
கோரிப்பாளையம் சந்திப்பில் உள்ள பெட்ரோல் பங்க்கில் இன்று இரவு 7 மணிக்கு,
பைக்கில் வந்த ஒரு வாலிபர் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். ‘தனி
ஈழம் மலரட்டும்... ராஜபக்ஷே ஒழிக!’ என்று கோஷமிட்டவாறு, கையில் வைத்திருந்த
பாட்டிலில் இருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். உடல்
முழுவதும் பற்றி எரிந்த நிலையில், பெட்ரோல் பங்கை நோக்கி ஓடினார். பணியில்
இருந்த ஊழியர் ஒருவர், எரிந்துகொண்டே ஓடிவந்த இளைஞரை கீழே தள்ளி, ஏற்பட
இருந்த பெரும் அபாயத்தைத் தடுத்து நிறுத்தினார். மற்ற ஊழியர்களும்
சுதாரித்து, தீயை அணைத்தனர். தீ வைத்துக்கொண்ட இளைஞர் அந்த இடத்திலேயே
கருகினார்.


 அவரது உடல் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.  தமிழ் உணர்வாளர்கள் மருத்துவமனை வாசலில் குவிந்து வருகின்றனர்.

தீக்குளித்து பலியானவர் யார்? எந்த ஊரைச்சேர்ந்தவர்? என்பது பற்றிய விவரம் தெரியவில்லை.

இந்நிலையில்,
தீக்குளித்து இறந்த இளைஞர் உடலுக்கு அஞ்சலி செலுத்த மதிமுக பொதுச்செயலாளர்
வைகோ விரைகிறார்.  தற்சமயம் ஈரோட்டில் தங்கியிருக்கும் அவர் மதுரை
விரைகிறார்.

படத்தில் இருப்பவர் பெட்ரோல் பங்க் ஊழியர் ஆரோக்கிய ராஜ்.


fire.JPG

http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13441:madurai-fire&catid=36:tamilnadu&Itemid=102
  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்..! இத்தகைய போராட்ட முறைகள் வேண்டவே வேண்டாம்..!

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக உறவுகளே... உங்கள் உயிரை, அநியாயமாக தீக்கு இரையாக்காதீர்கள்.
தயவு செய்து, உங்கள் எதிர்ப்பை வேறு வழிகளில் காட்டுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர்க் காணிக்கைகள்!

 

தமிழுணர்வாளர்கள் நீண்டகாலம் வாழவேண்டுமே தவிர தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ளக் கூடாது.

ஆழ்ந்த இரங்கல்கள்.

 

இவ்வாறான முடிவுகளை மக்கள் எடுப்பதற்கு அரசியல்வாதிகளும் காரணம்: அகிம்சை போராட்டங்களை, உணர்வுகளை அவர்கள் மதித்து நடக்காதமை.

  • கருத்துக்கள உறவுகள்

:( கண்ணீர் அஞ்சலிகள்... :(

 

 

601419_627121543980784_1083339947_n.jpg

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர்  காணிக்கை  எம் சார்பில்....

கண்ணீர் அஞ்சலிகள்..

கண்ணீர் அஞ்சலிகள்....

தமிழக உறவுகளே இனியும் தீக்குளிப்புகள் வேண்டாம். உயிருடன் இருந்து போராடுங்கள்.

தீக்குளித்து இறந்தவர் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த மாணவர் என்று ஒருவர் முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள்....

தமிழக உறவுகளே இனியும் தீக்குளிப்புகள் வேண்டாம். உயிருடன் இருந்து போராடுங்கள்.

தீக்குளித்து இறந்தவர் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த மாணவர் என்று ஒருவர் முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.

 

அவரின்..... பெயர், ஊரை இன்னும் கண்டு பிடிக்காதது கவலைக்குரியது.

அதுகும், மாணவர் என்னும் போது.... அவரின் பெற்றோர்... எவ்வளவு வேதனை அடைவார்கள்.

ஏன் தான்... அவசர முடிவை எடுக்கிறார்களோ... தெரியவில்லை.

இந்த மாணவர் போராட்டத்தில்... இவரின் இழப்பு, முதலும்... இறுதியுமாக இருக்கட்டும்.

உண்மையான உணர்வுள்ள சுயநலமில்லாத தமிழுணர்வாளர்களே! நீங்கள் வாழ வேண்டும். வாழ்ந்து கொண்டே போராட வேண்டும். வார்த்தைகளின்றித் தவிக்கிறேன். என்ன எழுதுவதென்றே தெரியவில்லை....

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.


 


இவ்வாறான முடிவுகளை மக்கள் எடுப்பதற்கு அரசியல்வாதிகளும் காரணம்: அகிம்சை போராட்டங்களை, உணர்வுகளை அவர்கள் மதித்து நடக்காதமை.

அவரது இறுதி நேர தாக்குதல் பாணியைப்பார்க்கும்  போது  அவர்கள் அகிம்சைமீது நம்பிக்கை  இழந்து அடுத்த கட்டத்துக்கு செல்ல முயன்றது தெரிகிறது

 

புரிந்து கொள்ளுமா காந்தி  தேசம்?????

அவரின்..... பெயர், ஊரை இன்னும் கண்டு பிடிக்காதது கவலைக்குரியது.

அதுகும், மாணவர் என்னும் போது.... அவரின் பெற்றோர்... எவ்வளவு வேதனை அடைவார்கள்.

ஏன் தான்... அவசர முடிவை எடுக்கிறார்களோ... தெரியவில்லை.

இந்த மாணவர் போராட்டத்தில்... இவரின் இழப்பு, முதலும்... இறுதியுமாக இருக்கட்டும்.

 

தீக்குளித்தவர் யார் என்றே அடையாளம் தெரியாத அளவுக்கு உடல் முழுதும் கருகி இறந்துள்ளார் என்று ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

 

முஸ்லிமாக இருக்கலாம் என்று இன்னொருவர் குறிப்பிட்டுள்ளார். பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். :rolleyes:

 

இறந்தவர் மனநிலை சரி இல்லாதவர் என வழக்கை மாற்ற காவல்துறை முயற்சிக்கிறதாம். :(

 

  • கருத்துக்கள உறவுகள்
ஆழ்ந்த இரங்கல்கள்.
 
தயவு செய்து உங்களை அழிக்கும் முயற்சிகளில் ஈடுபடாதீர்கள் சகோதரர்களே  
 
உங்களின் தமிழ் ஈழ ஆதரவை முடிந்தவரைக்கும் சாத்வீக வழிகளில் போராடுங்கள் என்று அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.
  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.தயவு செய்து இப்படி அனியாயமாக உங்கள் உயிர்களை வீணாக்காதீர்கள்.இன்றைய கால கட்டத்தில் ஒவ்வொரு தமிழ் உயிரும் மிகவும் பெறுமதி வாய்ந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

சரி ஏதும் செய்ய முடியல அவனால ... ஆற்றாமையில் தற்கொலை பண்னிக்கிறான்..


ஆக்கபூர்வமாக செயல்படணும்.. ஆக்கபூர்வமாக செயல்படுணும்.. அறிவுறைக்கு மட்டும் பஞ்சமே கிடையாது..  என்ன பண்னனும் என்று எதும் தெரியாது.. சும்மா எழுத வேண்டியது.. உண்ணாவிரதம்.. அல்லது கடையடைப்பு....?  ஓட்டில் காட்ட வேண்டும் வித்தையை..? இந்த லாஜிக்கு..?ம்ம் நாளையே ஓட்டு வாங்கினவன் மாறி போய்விட்டால்.. நீங்கள் ஓட்டு போட்டவனைத்தான் திட்டுவீர்கள்.. லாஜிக்கு வந்து ஒட்டு போட்டவணுக்க்

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள் 

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள்

  • கருத்துக்கள உறவுகள்


நீங்களும் கூடவா எங்களை அழவைக்கவேண்டும்? இன அழிப்பிற்காக நீதி வேண்டி உலகை
உலுக்கும் தருணத்தில் நீயே உனை அழித்தால் நீதி தேவதை என்ன மண்டியிட்டு
அமர்ந்தா கண்கள் பனிப்பாள்? வேண்டாம் பிள்ளைகளே....நாங்கள் எற்கனவே
நடைபிணங்களாய் நாதியற்றுக்கிடக்கிறோம். இப்போதுதானே நீங்கள் உள்ளீர்கள்
என்று முகம் நிமிர்த்தத் தொடங்கினோம் மீண்டும் எங்களை அழவைப்பதில்
உங்களுக்கு எப்படி விருப்பு வந்தது. எம் பிள்ளை தீ குளித்து கருகினாற்போல்
கும்பி கொதிதலருகிறது எங்கள் ஆன்மா வேண்டாம் பிள்ளைகளே இந்த விபரீத
முடிவுகள் இவ்வகையில் உங்கள் போராட்டம் உயிர் எரித்துத் தொடர்ந்தால் தாங்க
முடியாது. தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கண்ணீர் அஞ்சலிகள்.. :(


 

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.

 

உயிரைப் பலி கொடுக்காமல் அரசியல் போராட்டத்தில் செய்வதற்கு நிறைய இருக்கின்றது என்பதைப் புரிந்து செயற்படுங்கள் தமிழக சகோதரர்களே.

 

 

ஆழ்ந்த இரங்கல்கள்.

உயிரைப் பலி கொடுக்காமல் அரசியல் போராட்டத்தில் செய்வதற்கு நிறைய இருக்கின்றது என்பதைப் புரிந்து செயற்படுங்கள் தமிழக சகோதரர்களே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.