Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாதவிடாய் சுழற்சி நின்ற பெண்ணை பலாத்காரம் செய்தாலும் அது பலாத்காரம் இல்லை: ஹைகோர்ட்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

டெல்லி: மாதவிடாய் சுழற்சி நின்று போன வயது முதிர்ந்த பெண்களை பலாத்காரம் செய்தாலும், அது பலாத்காரமாக கருதப்படமாட்டாது என்று டெல்லி ஹைகோர்ட் வழங்கியுள்ள தீர்ப்பு சட்டத்துறை வட்டாரங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

04-law-court-600-jpg.jpg

 

டெல்லி மஞ்னுகா-திலா என்ற பகுதியில் வசித்த 65 வயது பெண்மணி அந்த வீட்டில் வேலை பார்த்த, அச்சேலால் என்ற நபரால் 2010ம் ஆண்டில் கொலை செய்யப்பட்டார். பிரேத பரிசோதனையின்போது பெண் பிறப்புறுப்பில் காயம் இருந்தது தெரியவந்தது. எனவே கொலை மற்றும் பலாத்காரம் ஆகிய இரு பிரிவுகளிலும் போலீசார் வழக்கு பதிவு செய்து அச்சேலாலை கைது செய்தனர்.

 

இந்த வழக்கில் அச்சேலாலுக்கு 10 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், டெல்லி ஹைகோர்ட்டில் மேல்முறையீடு விசாரணை நடந்தது. இதில் தீர்ப்பளித்த பிரதீப் நந்திரஜோக், முக்தா குப்தா ஆகிய நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச், 65 வயது பெண்மணி பலாத்காரம் செய்யப்பட்டதற்கு உரிய ஆதாரம் இல்லை என்று கூறிவிட்டது.

 

பிறப்புறுப்பில் மட்டுமே காயமுள்ளதையும், உடலின் பிற பகுதிகளில் காயமில்லாததையும் சுட்டிக்காண்பித்த நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பளித்தது. மேலும், மாதவிடாய் சுழற்சி முடிந்த பெண்ணிடம் அவரது சம்மதம் இன்றி உடலுறவு வைத்துக் கொண்டாலும், அது பலாத்காரமாக கருதப்படமாட்டாது என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இதுகுறித்து வக்கீல் கொலீன் கொன்சல்வஸ் கூறுகையில், பலாத்காரம் நடைபெறவில்லை என்று கூற கோர்ட்டுக்கு முழு உரிமை உள்ளது. ஆனால், மாதவிடாய் குறித்த கருத்து இந்த வழக்கில் தேவையில்லாதது, துரதிருஷ்டவசமானது என்றார். இந்த தீர்ப்பு, பலாத்கார சட்டம் குறித்த பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.

 
 
 

இந்த தீர்ப்பு உண்மையானால் இந்த நீதிபதி ஒரு வடிகட்டிய முட்டாள்கள் இருக்கவேண்டும். அல்லது கிறிமினல்கள் மீது அன்பு கொண்டவராக இருக்கவேண்டும்.

இந்த தீர்ப்பு உண்மையானால் இந்த நீதிபதி ஒரு வடிகட்டிய முட்டாள்கள் இருக்கவேண்டும். அல்லது கிறிமினல்கள் மீது அன்பு கொண்டவராக இருக்கவேண்டும்.

 

நீதிபதியே பக்கா கிரிமினலாக இருக்க முடியும். மிகவும் பிற்போக்கான ஒரு தீர்ப்பு.

  • கருத்துக்கள உறவுகள்

நீதிபதி பக்கா மென்டலாகவே இருப்பார். :wub:

Perverted guy.

  • கருத்துக்கள உறவுகள்

ஆறறிவுக் கொழுந்துகள்

உண்மையில் பாலியல் வன்முறை/வன்புணர்வு என்றால் என்ன என்ற வரையறை வேணும்.

இந்த அரைகுறைகளுக்கு எல்லாம் வரையறை என்ன என்றே தெரியவில்லை.

கெடுத்தால் மட்டும் தான் பாலியல் வன்முறை என்று நினைக்குதுகள். நாளைக்கு மாதவிடாய் தொடங்காத (வயதுக்கு வராத) பெண்களையும் பாலியல் வனுணர்வு செய்யலாம் என்று தீர்ப்பு சொன்னாலும் சொல்லுங்கள்.

இந்திய உருப்பட இன்னும் நிறைய தூரம் இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்தின் நாடுகளின் வரிசையிலிருந்து 'இந்தியா' தூக்கப்பட வேண்டும்!

 

மூன்று நீதிபதிகளின் கருத்தானது...சில தனிமனிதர்களின் கருத்தாக அல்லாது... ஒரு சமுதாயத்தின் கருத்தாகவே நோக்கப்படவேண்டும்!

 

முதலாவதாக.. ஐக்கிய நாடுகள் சபையிலிருந்து 'ஒதுக்கலை' ஆரம்பிக்கலாம்! :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் பாலியல் வன்முறை/வன்புணர்வு என்றால் என்ன என்ற வரையறை வேணும்.

இந்த அரைகுறைகளுக்கு எல்லாம் வரையறை என்ன என்றே தெரியவில்லை.

கெடுத்தால் மட்டும் தான் பாலியல் வன்முறை என்று நினைக்குதுகள். நாளைக்கு மாதவிடாய் தொடங்காத (வயதுக்கு வராத) பெண்களையும் பாலியல் வனுணர்வு செய்யலாம் என்று தீர்ப்பு சொன்னாலும் சொல்லுங்கள்.

இந்திய உருப்பட இன்னும் நிறைய தூரம் இருக்கு.

அதில வேற வல்லரசு கனவு .... :D

  • கருத்துக்கள உறவுகள்

அந்த நீதிபதி மனைவியோ மகளோ தாயோ இல்லாத அநாதை போல் இருக்கு. உறவுகள் இருப்பவனால் இப்படி ஒரு தீர்ப்பைக் கூற முடியாது. கேடுகெட்டவன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
திரைப்பட பாடல்களும் திரை நட்சத்திர வரலாறுகளும் பள்ளிப்பாடங்களாகும் போது நீதியின் தீர்ப்பும் அதற்கமையவே வரும். :icon_idea:
 
பானையில் இருந்ததுதான் அகப்பையிலும் வந்தது. :lol:  :D
  • கருத்துக்கள உறவுகள்

மிகவும்..... கண்டிக்கப் பட வேண்டிய தீர்ப்பு.
முதலில், அந்த மூன்று நீதிபதிகளையும் பதவியையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே இந்திய மாதர் சங்கங்கள்? சுஹாசினி இன்னும் நித்திரையா?

வடிகட்டின முட்டாள் நீதிபதிகள்

  • கருத்துக்கள உறவுகள்

"தைகீ","ம்யணரா" போன்ற நீதி நூல்களில் சொல்லியிருக்கோ தெரியவில்லை......

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்

யாரைய்யா இவங்களை  இப்படியான பதவியில் அமர்த்தியது....முதல்ல இவங்கள் சொன்ன தீர்ப்பு குற்றமானது என்று இவங்களுக்கு யாராவது தண்டனை கொடுங்க....

இந்தியாவின் அதி வேக வளர்ச்சியை காட்டி நிற்குது . :icon_idea:
 
கறுமம் கறுமம் .....................என்ன கோதாரியடா இது :lol:  :D  

ஒருவேளை நித்தியானந்த்தா சீடனா இருப்பார் போல நீதவான் .. :D

  • கருத்துக்கள உறவுகள்

இந்த செய்தி உண்மைதான? அல்லது தட்ஸ்தமிழ் தானே வீட்ல செய்ததா?

வேறு ஒரு ஆங்கில தமிழ் பத்திரிகையிலும் இதை பற்றி இல்லை.

மாதர் சங்கங்கள் வேறு சும்மா இருக்கிறன.

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களிடமிருந்து இப்படியான தீர்ப்புகள் வராதுவிட்டாலே நாம் கவலைப்படவேண்டும்.

 

இந்திய இராணுவம் ஈழத்தில் நிலைகொண்டுள்ளபோது அவர்கள் செய்த கொடுமைகள் இப்படியான தீர்ப்புகளின்மூலம் மீண்டும் மீண்டும் நினைவுறுத்தப்படுகின்றது.

 

என்றோ ஒரு நாள் தான் ஆக்கிரமித்த பிரதேசத்தின் மக்களின்மேல் நடாத்திய வன்முறைத்தாண்டவம் மற்றும் கழிசடைத்தனத்துக்கு சட்டரீதியான அங்கீகாரத்தை மிகவும் நாசுக்காகத் திட்டமிட்டுச் நிறைவேற்றமுயல்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம் .... மீண்டும் ஒருமுறை தவறான தலைப்புக்கு ஆக்கபூர்வமான + உணர்வுபூர்வமான கருத்துக்கள் எழுதப்பட்டுள்ளன போல தெரிகிறதே. :rolleyes:

ஒன்னு மட்டும் தெரியுது... மீடியாவில் என்ன செய்தி வந்தாலும் அப்படியே நம்பினா இப்படித்தான் கருத்தெழுத வேண்டி வரும்.
 
ஈசன் உங்களது இணைப்பிற்கு நன்றி.
 
இணைப்பில் போய் படிக்க சோம்பேறித்தனம் கொண்டவர்களுக்காக.....
 
"அந்தப் பெண்ணின் உடலில்  பிறப்புறுப்பிற்கு அருகே மட்டுமே காயம் உள்ளது. வேறு உடலின் எந்தப் பாகத்திலும் காயம் இல்லை அதாவது அந்தப் பெண் இந்த உறவை எதிர்த்தர்க்கான எந்த அடையாளமும் இல்லை. மேலும் இருவருமே சம்பவத்திற்கு முன்பு மது அருந்தியுள்ளனர். மாதவிடாய் நின்ற பின்பு உடலுறவு செய்ய முற்படும்போது அல்லது வலுக்கட்டாயமாக உள்ளே செலுத்த முற்படும்போது பிறப்புறுப்பில் காயம் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறு அதிகம். வேறு எந்த ஆதாரங்களும் இது வல்லுறவு என்ற குற்றத்தை நிருபிக்க போதுமானதாக இல்லாததால் குற்றவாளி விடுவிக்கப்படுகிறார்." இதுதான் அந்த தீர்ப்பின் சாராம்சம்.
 
ஒருவர் குற்றவாளி என்பதை சதேகத்திற்கு இடமில்லாமல் நிருபிக்கவேண்டும். அப்படி சந்தேகம் இருப்பின் தீர்ப்பு குற்றம் சாட்டப்பட்டவருக்கு சாதகமாக வழங்கப்படும். இதுதான் நீதி பரிபாலனை.
 
  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைச்சேன்.

நன்றி ஈசன்.

நம்மாளுங்களும் இந்தியா மேலுள்ள கோபத்தை சகட்டு மேனிக்கு காட்டீடாங்க :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.