Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வேர்களை இழந்து வரும் விழுமியங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அது ஒரு கோடைகாலத்தின் மாலை நேரம். சூரியன் பகல் நேரத்துச் சந்திரனைப் போல வானத்தில் வெள்ளயாகத் தன்னை, அடையாளம் காட்ட எத்தனித்துக் கொண்டிருந்தது. கலங்கிய வண்டல் மண் கலந்து மஞ்சள் நிறத்துடன் 'தேம்ஸ் நதி' அமைதியாக ஓடிக்கொண்டிருந்தது. சந்திரன், அந்த நதிக்கரையின் ஓரத்தில் போடப்பட்டிருந்த ஒரு இரும்புக் கதிரையில் இருந்தவாறே, கலங்கியிருந்த நதியின் அசைவுகளை அவதானித்துக் கொண்டிருந்தான். அவனது முகத்தில், அடர்த்தியாகத் தாடி வளர்ந்திருந்தது. அவனருகில் ஒரு சிகரெட் பெட்டியோன்று, தனது வாயை அகலத் திறந்த படி, வானத்தைப் பார்த்துக் கொண்டிருக்கச் சுருள், சுருளாகப் புகை வளையங்கள், அவனது வாயாலும் மூக்காலும் வந்து கொண்டிருந்தன. அங்கு வந்த சில ஜப்பானியர்களுக்கு, அவனது இருப்பு ஒரு இடைஞ்சலாக இருந்தது. 'லண்டன் பிரிட்ஜை' படமெடுக்க, சரியான 'ஆங்கிள்'கிடைத்த போது, இடை நடுவில் நந்தியாக அமர்ந்திருந்த அவனது தோற்றம், லண்டனைப் பிரதி பலிக்கும் என்று அவர்கள் நினைக்கவில்லைப் போலும். .ஒரு முற்றுமுணர்ந்த ஞானியைப் போல, அவர்களது மனதில் உள்ளதை உணர்ந்தவனாகச் சற்று விலகி அமர்ந்தவன், படமெடுப்பு ஆராவாரம் அடங்கியதும் , திரும்பவும் தனது பழைய இடத்தில் வந்து அமர்ந்து கொண்டான்.

சந்திரன் நன்றாகப் படித்தவன். அவனது தந்தையார் ஒரு தமிழாசிரியர். 'அடுத்த சம்பளம் வரட்டும்' என்று தேவைகளைப் பிற்போடும் நிலையில் வாழ்ந்தாலும், கல்வியே மூலதனமென நினைக்கும் சராசரி யாழ்ப்பாணத்து தமிழாசிரியர் வகையைச் சேர்ந்தவர். ஒருவாறு, சந்திரனை நகரத்தில் உள்ள ஒரு பிரபலமான கல்லூரியில் சேர்த்து விட்டார்.ஆரம்பத்தில், விடுதி வாழ்க்கை சந்திரனுக்குப் பிடிக்கவில்லை. அங்கு தொங்கிய அந்தப் பழைய தண்டவாள மணியைப் பார்க்கும், ஒவ்வொரு தடவையும் ஏனோ அவனுக்குச் சிறைச்சாலையின் ஞாபகம் தான் வரும். இவ்வளவுக்கும் அவன் சிறைச்சாலையை ஒரு தடவை கூடப் பார்த்ததில்லை. நாளடைவில் விடுதி வாழ்க்கையின், நெளிவுசுளிவுகள் தெரிந்த போது, விடுதி வாழ்க்கை அவனுக்குப் பழகிப் போய் விட்டது மட்டுமல்ல, அது தந்த சுதந்திரமும் மிகவும் பிடித்துப் போய்விட்டது. அந்த விடுதியில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும், மாணவர்களை விடுதியிலிருந்து நல்லூர்க் கந்தசாமி கோவிலுக்குக் கூட்டிக் கொண்டு போவது வழக்கமாக இருந்தது. பனிக் குளிரிலும். காலையில் ஐந்து மணிக்கு எழுந்து, குளித்து வேட்டியையும் கட்டிக் கொண்டு வரிசையில் நடந்து செல்ல வேண்டும். உணர்ச்சிகள் மெல்ல, மெல்ல முகிழ் விடுகின்ற வயதில் அவன் அப்போது இருந்தான்.

இந்தக் காலத்தில் தான் அவனுக்குத் தேவகியின் பாதிப்பு ஏற்பட்டிருக்க வேண்டும். சில வெள்ளிக்கிழமைகளில், அந்த அழகிய தென்னம்பிள்ளை வீட்டின் வாசலில், அவளை அவன் கண்டிருக்கின்றான். ஆட்களைப் பிரமிக்க வைக்கும் அழகில்லை என்றாலும், அவளது முன் பற்கள், இரண்டுக்குமிடையில் இருந்த இடைவெளி அவனுக்குப் பேரழகாகத் தெரிந்திருக்க வேண்டும். கோவிலிலிருந்து திரும்பி வரும்போது, அவள் கல்லூரிக்குப் போவதற்கான, சீருடையுடன் நிற்பதையும் சந்திரன் அவதானித்திருக்கின்றான்.சில வேளைகளில், அவனுக்காகவே தேவகி காத்திருப்பது போல நினைத்தாலும், அப்படி ஒருநாளும் இருக்காது என்று அவனது ஏழாவது அறிவு அவனை எச்சரிக்கை செய்தது. சில வேளைகளில் தேவகி, தன்னைப்பார்த்துச் சிரித்தது போலவும் இருக்கும். அந்த நாட்களில், நல்லூர் முருகனும் அவனை மட்டும் பார்த்துச் சிரிப்பது போல அவனுக்குத் தெரியும். உயர் தரப் பரீட்சை, நெருங்கியபோது தனது கவனம் முழுவதையும் படிப்பிலேயே செலுத்தினான். கல்வி என்னும் வேள்வித்தீயில், தன்னை ஆகுதியாக்கினான் என்று கூடச் சொல்லலாம்.

பரீட்சை முடிவுகள் வந்த போது, மற்ற விடுதி வாசிகளைப் போல அதிகாலையிலேயே கல்லூரிக் காரியாலயத்தின் வாசற்படிகளில் காத்திருந்தான். கல்விக்குள் அரசியலைப் புகுத்திய அந்தத் தரப் படுத்தல் முறை அறிமுகப் படுத்தப் பட்டுச் சில வருடங்கள் தான் இருக்கும். பானையில் இருந்தது அப்படியே அகப்பையில் வந்திருந்தது. ஆனால் அவன் எதிர் பார்த்திருந்த பொறியியல் துறை அவனுக்குக் கிடைக்கவில்லை. அவனிலும் பார்க்க, அவனது திறமை மீது மற்றவர்கள் தான் அதிக எதிர்பார்ப்பை வைத்திருந்தார்கள். விஞ்ஞானத் துறையில் தான் அவனுக்கு இடம் கிடைத்திருந்தது. கோயில், குளமெல்லாம் ஒரு பக்கம் மூட்டை கட்டி வைத்து விட்டுப் பேராதனை நோக்கிய பயணத்தில் கவனத்தைச் செலுத்தினான்.

பேராதனைப் பல்கலைக் கழகத்தின் மார்க்கஸ் பெர்னாண்டோ மண்டபத்தில் தங்குமிடமும் கிடைத்தது. அந்தக் காலத்தில் தான் அவனுக்கு அந்த எதிர்பாராத சம்பவம் நடந்தது. ஒரு காலத்தில் அவனது கனவுக் கன்னியாகிய அதே தேவகி, தனது நண்பிகளுடன் நடந்து போவதைக் கண்டான் . கழுதைகள் கூட மினுமினுக்கும் அந்தக் இளமைக் காலத்தின் வயதில், தேவகி ஒரு தேவதையாக அவன் கண்களுக்குத் தெரிந்தாள். அருகில் வந்து, நினைவிருக்கின்றதா என்று கேட்டாள். அவனது வாயில் இருந்து வார்த்தைகள் வரவில்லை. வார்த்தைகளுக்குப் பதிலாகக் காற்றுத் தான் வெளியில் வந்தது. தலையை மட்டும் ஆட்டினான்.எனது பெயர் தேவகி என்றாள். தானாக வந்து அவள் அறிமுகம் செய்து கொண்ட விதம் நாகரீகத்தின் உச்சாணிக் கொம்பில், அவள் ஏறி நிற்பது போல அவனுக்குத் தெரிந்தது. நாக்குத் தடுமாற நா ...ன் சந்திரன் என்று உளறினான். அவ்வளவு தான், அவர்களுக்குள் நடந்த முதல் உரையாடல். சந்திரன் தனக்கு இறக்கைகள் முளைத்து விட்டதாக உணர்ந்தான், அதைத் தொடர்ந்து அவர்களின் சந்திப்புக்கள் அவ்வப்போது நடந்தன. இருவரும் ஒருவரையொருவர் விரும்பினாலும், வெளிப்படையாக அதை வெளிப்படுத்தத் தயங்கினார்கள்.

( இது ஒரு கற்றுக்குட்டியின் கிறுக்கல்! தொடர்வது அல்லது தூக்கியெறிவது, களத்தின் விருப்பத்தைப் பொறுத்தது!)

பருவவாசலின் வரைவிலக்கணம் < கழுதைகள் கூட மினுமினுக்கும் அந்தக் இளமைக் காலத்தின் வயதில் > புங்கை மொழியில் இப்படித்தானோ !!!!! அருமை .அருமை . தொடருங்கள் புங்கையூரான் . எல்லோருமே கிறுக்கல் என்றால் , கிறுக்கல் மன்னன் அடிக்கவருவார் . உங்கள் தேவகி என்ன சொல்கின்றா என்று பார்ப்போம் :) :) :) .

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையண்ணா...கதையுடன் வந்திருக்கிறீர்கள்..அருமை..அடுத்த பாகத்தை விரைவில் எழுதுங்கள்..பாராட்டுக்கள் அண்ணா..

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஆரம்பம் புங்கையூரன்.. மலரும் நினைவுகளை மீட்டாதோர் எவர்?

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் காதல் கதையா?...எழுத்து நடை நன்றாக இருக்கிறது அதிக இடைவெளி விடாமல் தொடருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் புங்கையூரான் யாழிற்கு இன்னொரு கிறுக்கல் காரன் கிடைத்திருக்கிறார். வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் விருப்பம் தொடர்க...முக்கியமான இடத்தில் நிறுத்தி விடீர்களே . :D .

வாசிக்க ...காத்திருகிறோம்

  • கருத்துக்கள உறவுகள்

புத்தனை அடுத்து புங்கையின் கிறுக்கல். ம் தொடருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பமே அசத்தல் தொடருங்கள் புங்கையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

புங்கை நன்றாக இருக்கிறது தொடருங்கள், கதை தொடரனும் என்கிறதிற்காக நெடுக்குவை குளிர வைக்கிறீங்க, பெண்களை கழுதையுடன் ஓப்பிட்டு, கழுதை கூட இளம் வயதில் மினுமினுக்கும், உங்கட மினுமினுப்பு சிலுசிலுப்பு கொஞ்ச காலம்தான்???

புங்கையூரான் தொடருங்கள்நல்லாயிருக்கு .யாழ்பாண காதல் கதை வாசிக்கும் போது நாமும் பதினாறுக்கு போய்விடுகின்றோம்.

தண்டவாள மணியும் ஏன் தென்னைமர வீடும் சிறிது ஞாபகத்தில் வருகின்றது .

  • கருத்துக்கள உறவுகள்

சரியாப் போச்சு உங்களுடைய முகநூலில் யாழ் பொயட் 70 களின் ரோமியோவா என்று கேட்டிருந்தார் அப்பவே நினைத்தேன் இப்படி ஏதாவது கிறுக்க ஆரம்பிப்பார் என்று.......

தொடருங்கள்...இடையில் கேள்வி கேட்டும் குழப்புவோம் பதில்களைத் தயாராக வைத்திருக்க வேண்டியது படைப்பாளியின் கடமை.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கதை. தொடர்ந்து எழுதுங்கள் புங்கையூரான் :) .

பலரின் கதைகளில், தேவகி என்னும் பெயரை ஏன் பயன் படுத்துகிறார்கள்? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கதை. தொடர்ந்து எழுதுங்கள் புங்கையூரான் :) .

பலரின் கதைகளில், தேவகி என்னும் பெயரை ஏன் பயன் படுத்துகிறார்கள்? :rolleyes:

இட் இஸ் எ நைஸ் நேம் யூ நோ அண்ணா :icon_mrgreen:.

நல்லாயிருக்கு புங்கை அண்ணா தொடருங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பருவவாசலின் வரைவிலக்கணம் < கழுதைகள் கூட மினுமினுக்கும் அந்தக் இளமைக் காலத்தின் வயதில் > புங்கை மொழியில் இப்படித்தானோ !!!!! அருமை .அருமை . தொடருங்கள் புங்கையூரான் . எல்லோருமே கிறுக்கல் என்றால் , கிறுக்கல் மன்னன் அடிக்கவருவார் . உங்கள் தேவகி என்ன சொல்கின்றா என்று பார்ப்போம் :) :) :) .

நன்றிகள், கோமகன்! தேவகி, என்னத்தைப் பெரிதாகச் சொல்லிவிடப் போகிறாள்? அவளிடம் கேட்டுச் சொல்கிறேன்! :D

புங்கையண்ணா...கதையுடன் வந்திருக்கிறீர்கள்..அருமை..அடுத்த பாகத்தை விரைவில் எழுதுங்கள்..பாராட்டுக்கள் அண்ணா..

உங்கள் 'அருமை; என்ற ஒரு வார்த்தையே போதும், சுபேஸ்! நன்றிகள்!!!

நல்ல ஆரம்பம் புங்கையூரன்.. மலரும் நினைவுகளை மீட்டாதோர் எவர்?

மீட்டும்போது தானே, நினைவுகள் இனிக்கின்றன, கிருபன்! நன்றிகள்!

உங்கள் காதல் கதையா?...எழுத்து நடை நன்றாக இருக்கிறது அதிக இடைவெளி விடாமல் தொடருங்கள்

ரதி, எனக்கா? காதலா? காதலென்பது மழைக்கு முன்னால வாற தூவானம் மாதிரி! நனையும் போது நல்லாத் தான் இருக்கும்! அது மழையாக மாறும் போது தான், பிரச்சனையே! நன்றிகள்!

தொடருங்கள் புங்கையூரான் யாழிற்கு இன்னொரு கிறுக்கல் காரன் கிடைத்திருக்கிறார். வாழ்த்துக்கள்

நன்றிகள், சாத்திரி! கிறுக்கல், ஓவியமாக மாறினால் முதுகில் தட்டிக் கொடுங்கள்! இல்லாவிட்டால்,பிடரியில்! :wub:

எங்கள் விருப்பம் தொடர்க...முக்கியமான இடத்தில் நிறுத்தி விடீர்களே . :D .

வாசிக்க ...காத்திருகிறோம்

நன்றிகள், நிலாமதி அக்கா! முக்கியமானதை முதலே சொல்லிவிட்டால், நீங்கள் கை விட்டு விடுவீர்களே! அது தான்!!!

புத்தனை அடுத்து புங்கையின் கிறுக்கல். ம் தொடருங்கள்.

நன்றிகள், நுணா! புத்தனுக்கு என்ன நடந்தது? அவரைக் காணாத படியால், நானும் கிறுக்கலாம் என்று!!!

ஆரம்பமே அசத்தல் தொடருங்கள் புங்கையூரான்

வாத்தியாரே சொல்லிவிட்டார், தொடருவோம்! நன்றிகள், வாத்தியார்!

புங்கை நன்றாக இருக்கிறது தொடருங்கள், கதை தொடரனும் என்கிறதிற்காக நெடுக்குவை குளிர வைக்கிறீங்க, பெண்களை கழுதையுடன் ஓப்பிட்டு, கழுதை கூட இளம் வயதில் மினுமினுக்கும், உங்கட மினுமினுப்பு சிலுசிலுப்பு கொஞ்ச காலம்தான்???

இது தானே வேண்டாங்கிறது, உடையார்! நான் எங்கே பெண்களைக் கழுதையுடன் ஒப்பிட்டேன்? கழுதை கூட அந்த வயதில் மினுங்கும் என்றேன், அவ்வளவு தான்! நன்றிகள், உடையார்! இப்பவும் மினுமினுக்கின்றது, உடையார்! ஆனால், பிடரிப்பக்கமாக! நன்றிகள்!

புங்கையூரான் தொடருங்கள்நல்லாயிருக்கு .யாழ்பாண காதல் கதை வாசிக்கும் போது நாமும் பதினாறுக்கு போய்விடுகின்றோம்.

தண்டவாள மணியும் ஏன் தென்னைமர வீடும் சிறிது ஞாபகத்தில் வருகின்றது .

அதே வீடு தான்! நன்றிகள், அர்ஜுன்!!!

சரியாப் போச்சு உங்களுடைய முகநூலில் யாழ் பொயட் 70 களின் ரோமியோவா என்று கேட்டிருந்தார் அப்பவே நினைத்தேன் இப்படி ஏதாவது கிறுக்க ஆரம்பிப்பார் என்று.......

தொடருங்கள்...இடையில் கேள்வி கேட்டும் குழப்புவோம் பதில்களைத் தயாராக வைத்திருக்க வேண்டியது படைப்பாளியின் கடமை.

போயட்டுக்கு, அறளை பெயர்ந்து விட்டது என்பதற்கான, முதலாவது அறிகுறி இது, சகோதரி! நன்றிகள்!!!

நல்ல கதை. தொடர்ந்து எழுதுங்கள் புங்கையூரான் :) .

பலரின் கதைகளில், தேவகி என்னும் பெயரை ஏன் பயன் படுத்துகிறார்கள்? :rolleyes:

நன்றிகள், தமிழ் சிறி!

தேவகி, வசுதேவரின் மனைவி! ஸ்ரீ கிருஷ்ண பகவானுக்குத் தாய்! அது தான்!!!

இட் இஸ் எ நைஸ் நேம் யூ நோ அண்ணா :icon_mrgreen:.

நல்லாயிருக்கு புங்கை அண்ணா தொடருங்கள்.

நன்றிகள், தும்பளையான்!

தேவகி, ஒரு அழகான பெயர் தான்!

கதை நன்றாக வருகிறது. தொடருங்கள்.

தொடருங்கள் புங்கையூரான்

புங்கையூரன்! கதையின் ஆரம்பத்திலேயே ஆர்வத்தினை தூண்டி விட்டீர்கள்!

அழகாகச் செல்கின்றது.... தொடருங்கள்! வாழ்த்துக்கள்! :)

அந்த கழுதை மினுமினுக்குற விஷயம்...... நல்லாத்தான் இருக்கு! :wub::lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கதை நன்றாக வருகிறது. தொடருங்கள்.

கருத்துக்கு நன்றிகள், தப்பிலி!

தொடருங்கள் புங்கையூரான்

நன்றிகள், குருவி! தொடர்கிறேன்!

புங்கையூரன்! கதையின் ஆரம்பத்திலேயே ஆர்வத்தினை தூண்டி விட்டீர்கள்!

அழகாகச் செல்கின்றது.... தொடருங்கள்! வாழ்த்துக்கள்! :)

அந்த கழுதை மினுமினுக்குற விஷயம்...... நல்லாத்தான் இருக்கு! :wub::lol:

நன்றிகள், கவிதை! நன்றிகள்!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.