Jump to content

யாழ் கருத்துக்கள உறவுகளுடன் CarDriving.CA இணைந்து வழங்கும் யாழின் பொற்கிளி(ழி) எனக்குத்தான்! 2013 - காலாண்டு 01


Recommended Posts

அன்பர்களே,

 

யாழ் இணையத்தில் கடந்தவருடம் மாதாந்தம் பொற்கிளி(ழி) முயற்சியை எமது நிறுவனம் வழங்கியது. இவ்வருடம் நான்கு காலாண்டுகளிற்கு இம் முயற்சி மட்டுப்படுத்தப்படும் என நாம் அறிவித்தோம்.

 

முதல் காலாண்டிற்கான பொற்கிளி(ழி) முடிவை இங்கு, இப்போது உங்களுக்கு வழங்குவதில் பெருமிதம் அடைகிறோம்.

 

யாழ் கருத்துக்கள உறவுகளுடன் CarDriving.CA இணைந்து வழங்கும் யாழின் பொற்கிளி(ழி) எனக்குத்தான்! 2013 - காலாண்டு 01

 

விருப்பு வாக்குகளின் அடிப்படையில் கீழ்வரும் ஆக்கங்கள் கடந்த மூன்று, நான்கு மாதங்களில் யாழ் இணையத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

 

அப்பாவின் ஈர நினைவுகள்....: நிழலி [ ஆக்கம்: நிழலி ]

 

இளையறாஜா நிகழ்வால் வந்து ஒரு பதிவு [ ஆக்கம்: இன்னுமொருவன் ]

 

எங்கள் பாலனின் பாதத்தில் [ ஆக்கம்: வாத்தியார் ]

 

யாழ் இணையத்தின் பதினைந்தாம் அகவையை முன்னிட்டு சிறப்புப் பட்டிமன்றம் [ ஆக்கம்: யாழ் கருத்துக்கள உறவுகளின் கூட்டு முயற்சி ]

 

காமாட்சி [ ஆக்கம்: புங்கையூரன் ]

 

புலம் பெயர் அப்பனும் வெளிநாட்டு பிள்ளையும் [ ஆக்கம்: விசுகு ]

 

இவை தவிர, வெவ்வேறு கருப்பொருட்களில் பலவிதமான விடயங்கள் பற்றிய பலநூறு தலைப்புக்கள் வாசகர்களினதும், யாழ் உறுப்பினர்களினதும் கவனத்தை ஈர்த்தன.

 

யாழ் இணையத்தில் குறிப்பிட்ட ஆக்கங்களை படைத்த படைப்பாளிகள்/கருத்தாளர்களிற்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் உரித்தாகட்டும்.

 

மேற்கண்ட படைப்பாளிகள்/கருத்தாளர்களிற்கு பக்கபலமாக தமது பதில்கருத்துக்களை எழுதி, தமது எண்ணங்களையும் வெளிப்படுத்திய யாழ் கள உறவுகளுக்கும், விருப்பு வாக்குகளை வழங்கி ஊக்கம் நல்கிய யாழ் கள உறவுகளுக்கும் பாராட்டுக்கள் உரித்தாகட்டும்.

 

யாழ் இணையத்தில் வரும் ஆக்கங்களை ஆவலுடன் வாசிக்கின்ற வாசகர்களிற்கு நன்றி உரித்தாகட்டும்.

 

******

 

கைத்தொலைபேசிகள், கையடக்க உலவு கருவிகளே எதிர்காலத்தில் வலையுலகை கோலோச்சும் என்று பல இணையத்துறை விற்பன்னர்கள் எதிர்வு கூறியுள்ளனர். கைத்தொலைபேசிகளூடாய், ஏனைய கையடக்க உலவு கருவிகள் ஊடாக இணையத்தில் உலவும் மக்களின் தொகை நாளாந்தம் மில்லியன்களாக அதிகரித்து வருகிறது. எனவே, கையடக்கமான கருவிகள் ஊடாய் வலைத்தளங்களை பார்ப்பதற்கு ஏற்றவகையில் ஒவ்வொரு தளங்களும் தமது செயற்பாட்டு அமைப்புக்களில் புதிய உத்திகளை கையாள வேண்டியதன் முக்கியத்துவம் தற்போது உணரப்பட்டு வருகிறது.

 

இந்தவகையில், பலருக்கும் பயன்பாட்டிற்காய் யாழ் இணையத்தையும் முன்னேற்றும் வகையில் நல்லதோர் முயற்சியை மேற்கொண்ட கருத்தாளரிற்கு 2013 - காலாண்டு 01 இற்கான நினைவு பரிசு வழங்கப்படுகிறது.

 

யாழுக்கு ஒரு ஆன்ரொயிட்/அப்பிள் அப்ஸ் யார் செய்வீங்க..?! [ ஆக்கம்: நெடுக்காலபோவான் ]

 

2013 - காலாண்டு 01 பொற்கிளி(ழி)யை பெறும் நெடுக்காலபோவானிற்கு எமது பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.

"வரப்புயர நீர் உயரும்!

நீர் உயர நெல் உயரும்!

நெல் உயரக் குடி உயரும்!

குடி உயரக் கோல் உயரும்!

கோல் உயரக் கோன் உயர்வான்!"என்பதற்கிணங்க,

ஆக்கபூர்வமான முறைகளில் கருத்துக்களத்தை பயன்படுத்தி யாழ் இணையத்தின் உயர்ச்சி மூலம் நாம் அனைவரும் உயர்ந்துகொள்வோம்!

 

நன்றி!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2013 - முதலாவது காலாண்டுக்கான... பொற்கிளி(ழி)யை பெற்ற‌ நெடுக்காலபோவானிற்கும்,
பாராட்டுகளைப் பெற்ற மற்றைய, உறவுகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன்,
பல வேலைப்பழுவிற்கு மத்தியிலும்.... யாழ் களத்திற்காக, தனது நேரத்தை ஒதுக்கி... பரிசில்களை வழங்கிய CarDriving.CA நிறுவனத்திற்கு இதயம் கனிந்த நன்றிகள் உரித்தாகட்டும். :)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தம் புதிய ஆண்டின் முதலாவது காலாண்டுக்கான பொற்கிழியைப் பெற்றுக்கொண்ட, கள உறவான நெடுக்கருக்கும், பாராட்டுக்கள் பெற்ற பதிவிட்டவர்களான, நிழலி, இன்னுமொருவன், வாத்தியார், விசுகு,மற்றும் பட்டிமன்றத்தில் பங்கு கொண்ட அனைவருக்கும், எல்லாவற்றுக்கும் மேலாக இந்தக் கடினமான பொருளாதாரச் சூழலிலும், யாழ் களப் பொற்கிழி நிகழ்ச்சியைத் தொகுத்தளிக்கும், எனது அபிமானத்துக்கும், பெருமதிப்புக்குமுரிய போக்குவரத்து நிறுவனத்துக்கும், எனது வாழ்த்துக்களும் நன்றிகளும், உரித்தாகட்டும்!

Link to comment
Share on other sites

பொற்கிழி பெற்ற நெடுக்ஸ் அண்ணாக்கும் பாராட்டு பெற்ற ஏனைய கள உறவுகளுக்கும் வாழ்த்துகள். :)

பலவித பிரச்சனைகளை எதிர்கொள்ளும் இந்த நேரத்திலும் பொற்கிழி வழங்கி ஊக்குவிக்கும் போக்குவரத்து அவர்களுக்கு நன்றியும் பாராட்டுகளும் வாழ்த்துகளும். :)

 

பச்சை முடிந்து விட்டது. பின்னர் வந்து போடுகிறேன். :)

Link to comment
Share on other sites

பொற்கிளியையும் மற்றும் பாராட்டுகளைப் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் உரித்தாகுக!.

 

இன்றைய கணணித் தொழில்நுட்பத் துறையால் ஈர்க்கப்பட்டுள்ள இளைஞர்களை நெடுக்ஸ் அவர்களின் முயற்சியானது யாழ்களத்தை நோக்கித் திரும்பவைக்கும். இளைஞர்கள் வருகையால் யாழ் மேலும் வளர்ச்சியைப் பெறலாம்.

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2013 - முதலாவது காலாண்டுக்கான... பொற்கிளி(ழி)யை பெற்ற‌ நெடுக்காலபோவானிற்கும்,

பாராட்டுகளைப் பெற்ற மற்றைய, உறவுகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன்,

எனது பதிவையும் பாராட்டுக்குரியதாக்கிய  கள உறவுகளுக்கும்

அதற்கான பாராட்டைத்தந்த    போக்குவரத்து அவர்களுக்கும் மற்றும்

பல வேலைப்பழுவிற்கு மத்தியிலும்.... யாழ் களத்திற்காக, தனது நேரத்தை ஒதுக்கி... பரிசில்களை வழங்கிய CarDriving.CA நிறுவனத்திற்கு இதயம் கனிந்த நன்றிகள் உரித்தாகட்டும்.  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொற்கிளி(ழி) ஊக்குவிப்புத் தந்த போக்குவரத்துக்கு (CarDriving.CA) நன்றிகளோடு.. இதர பாராட்டுப் பெற்ற உறவுகளுக்கு வாழ்த்துக்களும்.. உரித்தாகட்டும். போக்குவரத்து சிரமமான நிதி நிலையின் கீழும் இதனை முன்னெடுத்துச் சொல்ல முனைவதற்கு விசேட நன்றிகளும் பாராட்டுக்களும்..! :icon_idea:

 

 

Link to comment
Share on other sites

சிரமங்கக்கிடையிலும் நிகழ்வைத் தொகுத்தளிக்கும் போக்குவரத்திற்கும் பரிசில் பெற்ற நெடுக்காலபோவானிற்கும் ஏனைய பாராட்டுக்களைப் பெற்ற ஆக்கங்களிற்கும் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமது சொந்த நிதி நெருக்கடியின் மத்தியிலும்.. நாம் பல தயக்கங்களை வெளிப்படுத்திய நிலையிலும் கூட.. நினைவுப் பரிசிலை தாமதங்கள் ஏதுமின்றி.. தந்துள்ள.. போக்குவரத்து..(CarDriving.CA).. க்கு எமது மனமார்ந்த நன்றிகள். யாழ் இணையக் களத்திற்கும் நன்றி.

 

Yarl_AWARD_CarDriving.CA.png

 

 

நட்புடன் நெடுக்ஸ்.

Link to comment
Share on other sites

வாழ்த்துக்களை தெரிவித்த ராஜவன்னியன்,  தமிழ் சிறி, புங்கையூரன், துளசி, Paanch, விசுகு, nedukkalapoovan, Manivasahan விருப்ப தெரிவை வழங்கியவர்களுக்கும் நன்றி.

 

"வரப்புயர (நேர்த்தியான கட்டமைப்பு) நீர் (ஊக்கம்) உயரும்!

நீர் (ஊக்கம்) உயர நெல் (தரமான கருத்துக்கள்) உயரும்!

நெல் (தரமான கருத்துக்கள்) உயரக் குடி (யாழ் வாசகர் வட்டம்) உயரும்!

குடி (யாழ் வாசகர் வட்டம்) உயரக் கோல் (யாழ் இணையத்தின் மதிப்பு) உயரும்!

கோல் (யாழ் இணையத்தின் மதிப்பு) உயரக் கோன் (கருத்தாளர்கள்) உயர்வான்!"என்பதற்கிணங்க,

ஆக்கபூர்வமான முறைகளில் கருத்துக்களத்தை பயன்படுத்தி யாழ் இணையத்தின் உயர்ச்சி மூலம் நாம் அனைவரும் உயர்ந்துகொள்வோம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொற்கிளி விருது 2013 இலும் தொட‌ர்வ‌து ப‌ற்றி போன‌ வார‌ம் தான் அறிந்தேன். பொற்கிளி பெற்ற‌ நெடுக்கிற்கு வாழ்த்துக‌ள். தொட‌ர்ந்து யாழோடு இணைந்திருக்கும் போக்குவ‌ர‌த்திற்கு ந‌ன்றிக‌ளும் பாராட்டுக‌ளும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொற்கிழி(ளி) பெற்ற நெடுக்கருக்கு என் வாழ்த்துக்கள். அத்துடன் பலசிரமங்களின் மத்தியிலும் இந்த நிகழ்வை முன்னெடுத்துச்செல்லும் போக்குவரத்திற்கு  உளமார்ந்த பாராட்டுக்கள்.

 

Link to comment
Share on other sites

பொற்கிளி பெற்ற நெடுக்குவிற்கும் பாராட்டு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.

 

மிகுந்த சிரமங்களுக்கு மத்தியிலும் தனது சேவையை தொடரும் போக்குவரத்துக்கு பாராட்டுகளும் நன்றிகளும்

 

Link to comment
Share on other sites

கருத்துக்களை வழங்கிய Justin, அலைமகள், குமாரசாமி, நந்தன், வந்தியதேவன், விருப்ப தெரிவை வழங்கியவர்களுக்கும் நன்றி. கடந்த வருடம் மாதாமாதம் உங்கள் அமோக ஆதரவுடனும், பங்களிப்புடனும் முன்னெடுக்கப்பட்ட பொற்கிளி(ழி) முயற்சி இந்தவருடமும் சிறிய அளவிலாயினும் தொடர்ந்தும் திருவினையானதற்கு நீங்களே முக்கிய காரணம். பொற்கிளி முயற்சிக்கு பங்களிக்கும் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதோடு காலாண்டு 01 - 2013 யாழ் நினைவு பரிசை பெற்ற நெடுக்காலபோவானுக்கும், சிறந்த ஆக்கங்களை/கருத்துக்களை வழங்கிய ஏனைய கருத்தாளர்களுக்கும் மீண்டுமொருமுறை பாராட்டுக்களை கூறுகின்றோம்.    

 

Link to comment
Share on other sites

வெற்றி பெற்ற நெடுக்ஸ் இற்கு வாழ்த்துக்கள், சிறந்த ஆக்கங்களை கொடுத்த ஏனையவருக்கும் பாராட்டுகள்.  இதை தொகுத்து வழங்கிய போக்குவரத்துக்கு நன்றிகள் 

 

Link to comment
Share on other sites

பொற்கிழி பெற்ற நெடுக்ஸ் அண்ணாக்கும் பாராட்டு பெற்ற ஏனைய கள உறவுகளுக்கும் வாழ்த்துகள்.

பலவித பிரச்சனைகளை எதிர்கொள்ளும் இந்த நேரத்திலும் பொற்கிழி வழங்கி ஊக்குவிக்கும் போக்குவரத்து அவர்களுக்கு நன்றியும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொற்கிழி பெற்ற நெடுக்ஸ்சிற்கு வாழ்த்துக்கள்,

அதுசரி இவர் எப்ப ஒரு பொற்கிளியைக் கைப்பிடிக்கப்போறார்.

 

நெடுக்கரின் இன்னும் சில ஆக்கங்களும் பொற்கிழிக்குத் தகுதியானவையே. :)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொற்கிழி பெற்றுக்கொண்ட நெடுக்ஸ்  அவர்களுக்கும் 

பாராட்டுக்களைப் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள் 

பல இடர்களுக்கு மத்தியிலும் சேவையாற்றும் போக்குவரத்திற்கு நன்றிகள்  

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

விருப்ப தெரிவுகளை வழங்கியவர்களுக்கும், கருத்துக்களையும் வழங்கிய பகலவன், SUNDHAL, யாழ்வாலி, வாத்தியாருக்கும், பொற்கிளி(ழி) முயற்சிக்கு ஆதரவும் பங்களிப்பும் வழங்கும் அனைவருக்கும் நன்றி. உங்கள் அமோக ஆதரவே கடந்த ஆண்டு 12 மாதங்களும் பொற்கிளி முயற்சி ஊக்கத்துடன் முன்னெடுக்கப்பட்டதற்கு காரணமாக அமைந்தது. உங்கள் தொடர்ந்த ஆதரவையும், பங்களிப்பையும் இந்த ஆண்டும் எதிர்பார்க்கிறோம். நன்றி

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வாண்டின் முதற் பொற்கிழி பெற்ற நெடுக்சுக்கும் வழங்கிய போக்குவரத்துக்கும் வாழ்த்துக்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட இண்டைக்கு தான் பார்த்தேன்.பொற்கிழியை வழங்கிய போக்குவரத்துக்கும் பெற்றுக்கொண்ட நெடுக்ஸ் அண்ணாவுக்கும் வாழ்த்துக்கள் 

Link to comment
Share on other sites

பொற்கிழியை வழங்கிய போக்குவரத்துக்கும் பெற்றுக்கொண்ட நெடுக்ஸ் அண்ணாவுக்கும் வாழ்த்துக்கள்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மட்டக்களப்பு எல்லையில் புதிதாக விகாரை அமைப்பு – திட்டமிட்ட சிங்கள மயமாக்கல் தீவிரம் May 23, 2024   மட்டக்களப்பை சிங்கள மயமாக்கலின் அடிப்படையில் எல்லைக் கிராமமான கிரான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வடமுனை கிராம சேவகர்பிரில் உள்ள நெலுகல் மலை எனப்படுகின்ற மலையில் எமது மாவட்டத்தின் இரு இராஜாங்க அமைச்சர்களின் ஆசீர்வாதத்துடன் நெலுகல்மலை கிறீன் விகாரை எனும் பெயரில் புதிதாக விகாரை கட்டும் பணி திருகோணமலை சோமவதி விகாரை விகாராதிபதி தலைமையில் இடம்பெற்று வருகின்றது என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தேசிய அமைப்பாளா் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார். மட்டக்களப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி காரியாலத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாள் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். திட்டமிட்ட அடிப்படையிலே கிழக்கு சிங்கள தேசத்துக்குள் படிப் படியாக கரைந்து கொண்டிருக்கின்றது அம்பாறை. திருகோணமலை மாவட்டம் முழுவதுமாக சிங்கள தேசத்தின் திட்டமிட்ட அபகரிப்பு உட்பட்டு தமிழ் மக்கள் கையில் இருந்து விடுவிக்கப்படுகின்ற மிகப் பெரிய ஆபத்தான நிலைக்கு போயிருக்கின்றது. அதன் அடுத்த கட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் இதில் எல்லைப்புற கிராமங்கள் சிங்கள தேசத்தினாலும் பெரும்பான்மை இனத்தவர்களால் குறிவைக்கப்பட்டு எல்லைக் கிராமங்கள் அபகரிக்கும் செயற்பாடுகள் படிபடியாக நடந்தேறிவருகின்றது. அதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரான் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள வடமுனை கிராமசேவகர் பிரிவிலுள்ள நெலுகல் மலையில் எனப்படுகின்ற குடும்பி மலையின் பின்பகுதியான இந்த மலையில் நெலுகல்மலை கிறீன் விகாரை எனும் பெயரில் விகாரை கட்டும் பணியை திருகோணமலை சோமவதி விகாரை விகாராதிபதி தலைமையில் இடம்பெற்று வருகின்றது. இந்த பகுதியில் பாரிய கட்டிடம் அமைக்கப்பட்டு அதில் இருந்துகொண்டு கட்டுமானப்பணியில் இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதன்நோக்கம் கிழக்கு மாகாணத்தை முற்றுமுழுதாக சிங்கள பௌத்த தேசத்துக்குள் கரைப்பதற்கான நடவடிக்கையபக பார்க்கின்றோம் வடக்கில் குருந்தூர்மலை வெடுக்குநாறி மலை, கையகப்படுத்தப்பட்டுள்ள இந்த வேளையிலே கிழக்கு மண் சத்தம் இல்லாமல் பறிபோய் கொண்டிருக்கின்றது. மயிலத்தமடு மேச்சல்தரையில் ரவுண்டப் எனும் புல்லுக்கு அடிக்கும் மருந்தையடித்து மேச்சல் புல்தரைகள் அழிக்கப்பட்டு 8 ஆயிரத்துக்கு மேற்பட்ட மேச்சல் தரை காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளது அதேவேளை மகாவலி ஏ வலயத்துக்குரிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு பெரும்பான்மை இனத்தவர்களை குடியேற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்தப் பண்ணையாளா்கள் தொடர்ந்து அச்சுறுத்தி அங்கிருந்து அவர்களை வெளியேற்றுகின்ற நடவடிக்கைகள் கச்சிதமாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றது இந்த நடவடிக்கைகளுக்கு யார் காரணம் என்பதை மக்கள் மிகத் தெளிவாக விளங்கிகொள்ள வேண்டும். இந்த மாவட்டத்தில் 2 இராஜாங்க அமைச்சர்கள் இருக்கின்றனர். இவர்களுடைய பணி சிங்கள தேசத்தினுடைய நிகழ்சி நிரலை அமுல்படுத்துவதுதான் இவர்களது நோக்கமாக இருக்கின்றதே தவிர மட்டக்களப்பு மாவட்ட மக்களை பாதுகாக்க எந்தவொரு முன்னேற்றகரவமான செயற்பாடுகளையும் செய்யவில்லை. குறிப்பாக மேச்சல்தரை பகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் போக முடியாத சூழ்நிலை காணப்பட்டது அதனை எமது கட்சி தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அந்த இடத்துக்கு சென்று அந்த பகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர் கூட செல்லமுடியாது என்பதை சர்வதேசத்துக்கு அம்பலப்படுயிருந்தார். இந்த நிலையில் கஜேந்திரகுமார் ஏன் இங்கு வரவேண்டும் என பிள்ளையான் நேற்ரூ முன்தினம் கூட்டத்தில் கேட்டிருந்தார். எனவே கஜேந்திரகுமார் இந்த இடத்துக்கு வரவேண்டியதாக இருந்தது. நீங்கள் ஒரு காட்டிக் கொடுப்பை செய்து தமிழ் மக்களை அழிக்கின்ற செயற்பாட்டில் நின்றதனால் அந்த மக்கள் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளை கூப்பிடவேண்டிய அபாய நிலைக்கு இட்டுச் சென்றீர்கள் எனவே அது ஒரு வெக்க கேடான விடயம். இவரின் செயற்பாடுகளை பார்த்தால் தெரியும் தங்களது பக்கற்றுக்களை நிரப்புகின்ற விதமாக தங்களின் அமைச்சுக்கு ஊடாககிடைக்கின்ற வீதிகளை அமைத்து அதில் 15 வீதம் தரகு பணம் பெற்றுக் கொண்டு அதற்கு வக்காளத்து வாங்குகின்ற ஒப்பந்தகாரர்களை பின்னால் வைத்துக்கொண்டு பேச ஒப்பந்தகாரர்கள் கையடிக்கின்ற செயற்பாட்டை மிகக் கச்சிதமாக பிள்ளையான் செய்துவருகின்றாா் என்றும் சுரேஷ் தெரிவித்தாா்.   https://www.ilakku.org/மட்டக்களப்பு-எல்லையில்-ப/
    • ஈரான் ஜனாதிபதியின் ஜனாசா நல்லடக்கம் இன்று sachinthaMay 23, 2024 ஹெலிகொப்டர் விபத்தில் கொல்லப்பட்ட ஈரான் ஜனாதிபதி, வெளியுறவு அமைச்சர் மற்றும் ஏனையவர்களுக்காக அந்நாட்டு உயர்மட்டத் தலைவர் ஆயதொல்லா அலி காமெய்னி நேற்று தொழுகை நடத்தினார். ஈரானிய கொடி போர்த்திய இறந்தவர்களின் உடல்கள் அடங்கிய பேழைகள் டெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டு பெரும் எண்ணிக்கையான மக்களுக்கு முன் உயர்மட்டத் தலைவர் ஜனாஸா தொழுகையை நடத்தினார். ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிர் அப்துல்லாஹியன் மற்றும் மேலும் ஆறு பேர் சென்ற ஹெலி கடந்த ஞாயிற்றுக்கிழமை அசர்பைஜான் நாட்டு எல்லைக்கு அருகில் விபத்துக்குள்ளாகியதில் ஒருவரும் உயிர் தப்பவில்லை. ‘இறைவனே நாம் அவரிடம் நன்மையைத் தவிர வேறு எதனையும் பார்க்கவில்லை’ என்று உயர்மட்டத் தலைவர் பிரார்த்தனையின்போது தெரிவித்தார். தொடர்ந்து அந்த பேழைகள் மக்களால் சுமந்து செல்லப்பட்டதோடு வெளியே ‘அமெரிக்கா ஒழிக’ என்ற கோசமும் எழுப்பப்பட்டது. இந்த இறுதிக் கிரியையில் பல வெளிநாட்டு தலைவர்களும் பங்கேற்றனர். ஈரான் ஜனாதிபதியின் இறுதிக் கிரியை கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அவரது உடல் தெற்கு கொராசன் மாகாணத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் அவரது சொந்த ஊரான மஷாத்துக்கு எடுத்து வரப்படவுள்ளது. இன்று (23) மாலை இறுதிச் சடங்குகளுக்குப் பின்னர் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.   https://www.thinakaran.lk/2024/05/23/world/62483/ஈரான்-ஜனாதிபதியின்-ஜனாச/
    • இதெல்லாம் ரணிலுக்கு வாக்கு போட சொல்லும் ஒரு யுக்தி , மொக்கு சிங்களவனுக்கு சொல்லும் செய்தி 
    • கூகா என என் கிளை கூடி அழப் போகா வகை, மெய்ப்பொருள் பேசியவா நாகாசல வேலவ நாலு கவித் தியாகா சுரலோக சிகாமணியே.    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.