Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு உயிர் ஊட்டிய அழகிரிசாமிக்கு வீர வணக்கம் [படங்கள்]

Featured Replies

21.07.2013 இன்று தாய்த் தமிழகமாம் திண்டுக்கல் மாவட்டத்தில் M.R.F நகரில் வசிக்கும் தமிழீழ உணர்வாளர் திரு.அழகிரிசாமி அவர்களின் இறுதி நிகழ்வு அவரது இல்லத்தில் நடைபெற்றது.

அவரது உடலுக்கு உலகதமிழர் பேரமைப்பின் கொடி அணிவித்து பொதுமக்களின் இறுதி வணக்கத்திற்காக வைக்கப்பட்டிருந்தது. திரு.வை.கோ, திரு. பழ நெடுமாறன், திரு.சீமான், திரு. குமரேசன் போன்ற தமிழீழ, தமிழின உணர்வாளர்களும் , திரு சாலமன் பாப்பையா போன்ற தமிழ்மொழி ஆர்வளர்களும், தமிழ் நாட்டில் உள்ள அரசியல் கட்சியினரும் காலையில் இருந்து மதியம் வரை அன்னாரின் உடலுக்கு மலர்வளையம் வைத்தும் மாலை போட்டும் வணக்கம் செலுத்திவந்தனர் .

மதியம் 12:30 மணியளவில் அன்னாரின் உடல் அவரது தோட்டக் காணி உள்ள இடமான தவசிமேடை என்னும்  கிராமத்திற்கு பெரும் திரளான மக்கள் புடை சூழ கொண்டு சென்றனர். மாலை 3:00 மணிக்கு அவரது தோட்டக்காணியில் உலகதமிழர் பேரமைப்பின் துணை தலைவரான திரு.வீரப்பன் தலைமையில்  இறுதி வணக்க உரை தொடங்கியது.

இதில் ம.தி.மு.க அழகுசுந்தரம் , அ.தி.மு.க கண்ணன் , பெரியார் தொண்டன் வரதராசன் , கவிஞர் அறிவுமதி ,ஆகியோர் உரையாற்றினர். அமரர் அழகிரிசாமி அவர்களின் நீண்டகால நண்பரும் உலகதமிழர் பேரமைப்பின் தலைவருமான திரு.பழ நெடுமாறன் ஐயா அவர்கள் இறுதி வணக்க உரையின் போது "1957 ஆம் ஆண்டு அண்ணாமலை பல்கலைகழகத்தில் ஆரம்பமான எமது மாணவப்பருவ சந்திப்பானது 56 வருடங்களாக தொடர்ந்த எமது நட்பானது எனது வாழ்விலும், அரசியல் செயல்பாட்டிலும் , தமிழீழ விடுதலை களத்திலும், தமிழீழ

விடுதலைப் புலிகள் வளர்ச்சியிலும் எனக்கு பெரும் துணையாக நின்றார்.

எந்த அரசியல் போராட்டமாக இருந்தாலும் நான் எள் என்றால் அவர் எண்ணையாக அச்செயலை செய்து முடித்து வைக்கும் ஆற்றல் நிறைந்தவர் . அண்ணாமலை பல்கலைகழகத்தில் 1945 ஆம் ஆண்டுக்கு பிறகு அறிஞர் அண்ணாவை அழைத்து வந்து பேச வைத்தபெருமை இவரையே சாரும் ஆனால் தன்னை முன்னிலை படுத்தாமல் எக்காரியத்தையும் செய்து முடிப்பதில் வல்லவராக இருந்தார் .

பொடா சட்டத்தில் இவரது மகனான மருத்துவர் தாயப்பன்  அவர்கள்  பதினைந்து மாதமாக சிறையில் இருந்த பொழுது நான் தாயப்பனுக்காக வருத்தப்பட அவரோ எனக்காக கவலைப்பட்டார். மேலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் பயிற்சிக்காக இவரது சிறுமலை என்னும் கிராமத்தில் உள்ள காணியை கொடுத்து உதவினார். இதற்காக எந்தப்பிரச்சனை வந்தாலும் எதிர்கொள்ள தயாராகவே இருந்தார்.

இறுதியாக

   வீர வணக்கம்  வீர வணக்கம்

   தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு உயிர் ஊட்டிய

   அழகிரிசாமிக்கு வீர வணக்கம்

எனும் முழக்கத்துடன் அன்னாரின் வித்துடல் விதைகுழியில் விதைக்கப்பட்டது.

dindukkal-veeravanakkam_8.JPG

 dindukkal-veeravanakkam_10.JPGdindukkal-veeravanakkam_11.JPGdindukkal-veeravanakkam_1.JPGdindukkal-veeravanakkam_2.JPGdindukkal-veeravanakkam_3.JPGdindukkal-veeravanakkam_4.JPGdindukkal-veeravanakkam_5.JPGdindukkal-veeravanakkam_6.JPGdindukkal-veeravanakkam_7.JPGhttp://www.dinaithal.com/tamilnadu/17452-ltte-to-survive-and-feed-alakiricami-cart.html

  • கருத்துக்கள உறவுகள்

தமிழின உணர்வாளரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் உணர்வாளர் அழகிரிசாமிக்கு, கண்ணீர் அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழின உணர்வாளரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்..! 

ஆழ்ந்த இரங்கல்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப்பாதையில் என்றும் உறுதுணையாக இருந்த அழகிரிசாமி அவர்களுக்குக் கண்ணீர் அஞ்சலிகள் 

"ஈழத்துணை "தி. அழகிரிசாமி அவர்கள் , தமிழீழ விடுதலைப்புலிகள்

:
வெளியிடப்பட்ட தேதி 21.07.2013 13:06:33 

அன்று vennila

 
Azhagiri

புகைப்படம்    Anpu

 

          

 ltte%20logo-6.jpg

 

            ஈழத்துணை மதிப்பளிப்பு‘

           அமரர் திண்டுக்கல் தி. அழகிரிசாமி அவர்கள்

  • சிறிலங்கா அரசு தமிழினத்தின் மீது நடத்திவரும் இனஅழிப்பு நடவடிக்கைக்கு எதிரான தமிழ்த் தேசியப் பணியினை இந்தியாவிலும் புலம்பெயர்ந்த தேசத்திலும் செய்து வந்த அமரர் திண்டுக்கல் தி. அழகிரிசாமி அவர்களை நாம் இழந்துவிட்டோம்.
  • அமரர் திண்டுக்கல் தி. அழகிரிசாமி அவர்கள் இந்தியாவில் வாழ்ந்து வந்த போதிலும் தமிழீழ மண்மீது கொண்ட தீராப்பற்றின் காரணமாக தமிழீழ விடுதலைப்பயணத்தில் தானும் சேர்ந்து கொண்டு உறுதிதளராது உழைத்த ஒரு தேசப்பற்றாளராக திகழ்ந்தார்.
  • எமது மொழி , கலாச்சாரம் , பூர்வீக இருப்பிடம் என்பனவற்றை மீட்டெடுக்கும் எமது நீண்ட விடுதலைப்பாதையில் அமரர் திண்டுக்கல் தி. அழகிரிசாமி அவர்கள் ஆழமான நம்பிக்கையும் பற்றும்கொண்டு உழைத்து வந்துள்ளார்.
  • திரு. பழ. நெடுமாறன் அவர்களின் வகுப்புத் தோழரான இவரது அரசியல் வாழ்க்கை அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் திராவிட இயக்கத்தோடு தொடங்கியது. உலகத் தமிழர் பேரமைப்பிலும் முக்கிய பங்காற்றியவர். தீவிர தமிழீழ ஆதரவாளர். தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரனுடன் நெருக்கமாகவும், உறுதுணையாகவும் இருந்தவர். 1984ம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகளின் முதல் பயிற்சி முகாம் இவரது தோட்டத்திலேயே தொடங்கப்பட்டது. இப்பெருமைக்குரியவரை ‘ஈழத்துணை‘ என்ற மதிப்பை வழங்குவதையிட்டு நாம் பெருமை கொள்கின்றோம்.
  • அமரர் திண்டுக்கல் தி. அழகிரிசாமி அவர்களின் பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தினருக்கும் இந்தியாவாழ் தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர்களுக்கும் தமிழ் பேசும்மக்களோடு இணைந்து எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்

தமிழீழ விடுதலைப்புலிகள்

 

Edited by யாழ்அன்பு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கண்ணீர் அஞ்சலி.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழின உணர்வாளரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள்

itxs.jpg

rl12.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழின உணர்வாளரின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்....

  • கருத்துக்கள உறவுகள்

எமது போராட்டத்தின் வேர்கள் இவர்கள். வேர்கள் வெளியில் தெரிவதில்லை. வேர்கள் சாதித்து விட்டு மண்ணுக்குள் மெளனமாக இருந்து விடுங்கள். ஆனால்.. சருகுகள் போடுற சலசலப்பு.. தாங்க முடிவதில்லை.

 

வீரவணக்கம் ஐயா.

 கண்ணீர் அஞ்சலிகள்  

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் உணர்வாளர் அழகிரிசாமிக்கு, கண்ணீர் அஞ்சலிகள்.

 

(நெடுமாறன் ஐயாவையே  அழவைத்திருக்கின்றார்  என்றால் இவரது பங்களிப்பை  புரிந்து கொள்ளமுடிகிறது)

  • கருத்துக்கள உறவுகள்

வீரவணக்கம்!!!!!

கண்ணீர் அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்
 
கண்ணீர் அஞ்சலிகள்.
  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள் !!

  • கருத்துக்கள உறவுகள்

வீரவணக்கம்.

கண்ணீர் அஞ்சலிகள்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.