Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புங்குடுதீவில் மாணவி கடத்தப்பட்டு சடலமாக மீட்பு

Featured Replies

யாழ்ப்பாணம் - புங்குடுதீவில் கடத்தப்பட்ட மாணவி ஒருவர் இன்று வியாழக்கிழமை காலை பாழடைந்த வீடு ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். இவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பின்னர் கொன்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
 
புங்குடுதீவு 4 வட்டாரம் - கண்ணகி அம்மன் கோயில் பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் புங்குடுதீவு மகா வித்தியாலயத்தில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். நேற்றுப் புதன்கிழமை பாடசாலை விட்டதும் வீடு திரும்பிய மாணவி வீட்டுக்கு வராத நிலையில் அவரின் பெற்றோர் மாணவியைத் தேடியுள்ளனர். எங்கு தேடியும் மாணவி கிடைக்கவில்லை. இந் நிலையில் கண்ணகி அம்மன் கோயில் பகுதியில் உள்ள பாழடைந்த வீட்டில் மாணவியின் சடலத்தை பொதுமக்கள் கண்டுள்ளனர். அவர்கள் ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு அளித்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
 
alarum.com
  • Replies 169
  • Views 17k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கண்ணகி அம்மன் கோவில் பத்தாம் வட்டாரத்தில் உள்ளது!

 

ஒரு வேளை மாணவி நாலாம் வட்டாரத்தைச் சேர்ந்தவர் என்பதை இவ்வாறு செய்தியாளர் எழுதியுள்ளாரோ தெரியாது!

  • கருத்துக்கள உறவுகள்

(PHOTOS)யாழ் புங்குடுதீவில் உள்ள பாழடைந்த வீட்டில் பாடசாலை மாணவியின் சடலம்!!

 

Written on 14 May, 2015

 

 

unnamed-362-640x360.jpgயாழ்.புங்குடுதீவு ஆலடி சந்திபகுதியில் யாடசாலை மாணவி ஒருவர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

புங்குடுதீவு 9ம் வட்டாரத்தை சேர்ந்த சி.வித்தியா(வயது18) நேற்றய தினம் பாடசாலைக்குச் சென்ற பிள்ளை வீடு திரும்பாத நிலையில் பெற்றோர் ஊர்காவற்துறை பொலிஸில் முறைப்பாடு கொடுத்துள்ளனர்.

இதன் பின்னர் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தேடிய நிலையில் இன்றைய தினம் குறித்த மாணவியின் சடலம் கைஇகால்கள் மரக்கட்டைகளால் இழுத்து கட்டப்பட்ட நிலையில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் புங்குடுதீவு மகா வித்தியாலயத்திற்கு முன்பாக வீதி மறியல் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

unnamed-302-640x360.jpg

unnamed-312-640x360.jpg

unnamed-322-640x360.jpg

unnamed-332-640x360.jpg

unnamed-342-640x360.jpg

unnamed-352-640x360.jpg

- See more at: http://www.swisspungudutivu.com/?p=59273#sthash.LL7vqfFP.dpuf

 

unnamed-302-640x360.jpg

 

 

unnamed-312-640x360.jpg

 

 

unnamed-322-640x360.jpg

 

 

 

unnamed-332-640x360.jpg

 

unnamed-342-640x360.jpg

 

 

unnamed-352-640x360.jpg

 

http://www.swisspungudutivu.com/?p=59273

 

 

http://lankasee.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95/

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.அஞ்சரனது உறவினர் பிள்ளை என அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது.

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

புங்குடுதீவில் பாடசாலை மாணவி வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கொலை! - மாணவர்கள் ஆர்ப்பாட்டம். photo.png

[Thursday 2015-05-14 20:00]
vithya-murder-140515-250-seithy.jpg

புங்குடுதீவில் பாடசாலை மாணவி ஒருவர் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. புங்குடுதீவு 8 ஆம் வட்டாரத்தினைச் சேர்ந்த சிவலோகநாதன் வித்தியா (17 வயது) என்ற பாடசாலை மாணவியே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த மாணவி நேற்று பாடசாலைக்கு சென்றவர் மாலைவரை வீடு திரும்பவில்லை.

  

 

பாடசாலை சென்ற மகளை காணவில்லை என பெற்றோர் பாடசாலையில் சென்று பார்த்துடன், அயல் முழுவதிலும் விசாரித்துள்ளனர். இரவு வரை பிள்ளை வீட்டிற்கு வரவில்லை என்று ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ய சென்ற போது, பிள்ளை காதலித்த நபருடன் சென்றிருக்கலாம். பின்னர் வீட்டிற்கு வருவார் என பொலிஸார் பொறுப்பற்ற விதமாக பதிலளித்துள்ளனர்.

 

பிள்ளையை காணாது பெற்றோர் பல இடங்களில் தேடிய போதும் இன்று காலை பாடசாலைக்கு செல்லும் வழியில் உள்ள காட்டு பக்கத்தில் செருப்பு இருப்பதாக வீதியால் சென்றவர்கள் கண்டு பெற்றோருக்கு தெரியப்படுத்திய பின்னர் பிள்ளையின் பெற்றோர் அந்த பகுதிக்கு சென்று பார்வையிட்ட போது, கால்கள் இரண்டும் அலரி மரத்தில் கட்டப்பட்ட நிலையில் சடலம் பனை ஓலையினால் மூடப்பட்டு காணப்பட்டுள்ளது. சடலத்தினை கண்ட பெற்றோர் ஊர்காவற்துறை பொலிஸாருக்கு தெரியப்படுத்திய பின்னர் ஊர்காவற்துறை பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

அதன்போது, ஊர்காவற்துறை நீதவான் சடலத்தினை பார்வையிட்ட பின்னர் குறித்த யுவதி 3 ற்கும் மேற்பட்ட நபர்களினால் துஸ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் உடம்பில் வெட்டுக் காயங்கள் காணப்படுவதாகவும் கூறி சடலத்தினை யாழ். போதனா வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

 

மாணவியின் கொலைச் சம்பவத்தினை கண்டித்து பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் இணைந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டனர். அதன்போது, அந்த பகுதியில் உள்ள 3 பேர் வருகை தரவில்லை என்றும் அந்த மூவரின் மீது சந்தேகம் இருப்பதாகவும் ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

http://www.seithy.com/breifNews.php?newsID=132081&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்
அந்நியனிடம் எமது மண்ணின் பாதுகாப்பு இருக்குவரை இது நடந்து கொண்டே இருக்கும்....
 
(இது எனது சொந்த அனுபவமும் படிப்பும்) 
ஒரு தனிமனித வாழ்கையில் கூட ....
ஒரு 5-10 வருட காலம் கனவில் கூட எதிர்பார்த்திருக்க முடியாத 
ஒரு உயர்நிலையை எட்டும் 
இந்த கால பகுதியில் 
நான் எங்கிருந்து வந்தேன் 
என்னை இந்த நிலைக்கு உயர்த்தியவர்கள் யார் 
(கடவுளை நம்புவர்கள் என்னை இப்படி உயர்த்திய கடவுளின் எதிர்பார்ப்பு என்ன ?)
நனமைகளை விதைத்தல் எவளவு அறுவடை வருகிறது 
 
போன்றவற்றை மறந்தவர்கள் 
அப்படியே கீழ் இறங்கி கொண்டே போவார்கள் 
பின்பு எக்காலத்திலும் மீளுவதை நான் கண்டதில்லை.
 
20 ஆயிரம் வரையான இளைஞரும் யுவதிகளும் 
தமது இளமையை உயிரை கொடுத்து கட்டிய வேலியை பற்றியும் 
அவர்களது அற்பணிப்பு பற்றியும் 
எண்ண 15 வருடங்கள் முன்பு தமிழன் மறந்துவிட்டான். 
 
அதற்கான வினையை 
இனி இப்படிதான் அறுவடை செய்ய முடியும். 
 
(இதை ஊரில் இருக்கும் நாலு காவாலிகள் கூட செய்திருக்கலாம் இந்த எண்ணமும் சிந்தனயும் 
அவர்களுக்கு எங்கிருந்து வந்தது எப்போது வந்தது என்று தேடுவதும் முக்கியம்)
 
ஒரு இளைய உயிர் 
இப்படி சின்ன பின்னாமாகி கிடக்கையில் நெஞ்சு பொறுக்கவில்லை 
தமிழனின் நிலை கண்டு கலங்க துளியளவும் நெஞ்சில் ஈரம் இல்லை 
எப்போதோ எல்லாம் காய்ந்து விட்டது. 
 
அவருடைய ஆத்மா என்றாலும் சாந்தி அடையட்டும். 
  • கருத்துக்கள உறவுகள்

இனப்படுகொலை சிங்கள இராணுவமும்.. அதனோடு ஒட்டித்திரிந்த.. ஒட்டுக்குழுக்களும் எந்தத் தண்டனைகளும் இன்றி சுதந்திரமாக உலாவர விடப்பட்டுள்ள.. சூழலில்... இவ்வாறான துஸ்பிரயோகங்கள் தொடரவே செய்யும். இவற்றோடு போதைவஸ்தும்.

 

இங்கு சிலர் இவற்றை ஜனநாயகத்தின் நல்லாட்சியின் அம்சமாக விபரிச்சாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

 

அந்த மாணவிக்கு கண்ணீரஞ்சலி.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அஞ்சலிகள்!

 

போர் .. மென்று துப்பிய எமது மண்... எவ்வளவு காலத்துக்கு இப்படியான துர்ப்பாக்கியமான சம்பவங்களைத் தாங்க வேண்டியிருக்குமோ என்று தெரியாது!

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்

இரங்கல்கள்!

இத்தகைய கொடூரத்தின் மூலம் கொல்லப்பட்ட சகோதரி எங்கள் கள உறவு அஞ்சரனின் சகோதரி என்று அறியும் போது, வற்றிப் போய் வரண்ட நிலமாகிவிடுகின்றது மனசு.

 

தன் இன்னுயிர் உறவை இழந்து தவிக்கும் என் சக உறவுக்கு ஆறுதல் சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லவே இல்லை...

  • கருத்துக்கள உறவுகள்

பாடசாலை சென்ற 17 வயது மாணவி, கடத்தப் பட்டு கொலை என்னும்... போது,
பட்டப் பகலில்.... மக்கள் நடமாட்டம் உள்ள நேரத்தில்... கடத்தும் துணிவு  எப்படி வந்தது.
சமூக விரோதிகளின் செயலை, நினைக்கவே.... பயங்கரமாக உள்ளது.

 

எப்படி... அஞ்சரனுக்கு, ஆறுதல் கூறுவது என்று தெரியவில்லை.
கண்ணீர் அஞ்சலிகள் சகோதரி.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்..! 

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரிக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். இவற்றுக்கு முடிவே இல்லையா? குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.சகோதரன் அஞ்சரனுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.

  • தொடங்கியவர்
ஆழ்ந்த இரங்கல்கள் ,
 
அஞ்சரன் என்னிடம் வார்த்தைகள் இல்லை , கடவுள் உங்களுக்கு அணைத்து சக்தியையும் தரட்டும்.
  • கருத்துக்கள உறவுகள்

நேற்று செய்தி வாயிலாக அறிந்து கொண்டேன் ஆழ்ந்த இரங்கல்கள் யோகு

என்ன இங்க இது மாதிரியான நிகழ்வுகள்தான் அதிகம் நடக்கிறது நம்ம காவாலிகளும் தான் வெறும் வெள்ளை தோலுக்கு அலையும் நாய்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள், அஞ்சரனுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

(பிந்திய செய்தி) புங்குடுதீவைச் சேர்ந்த இளம்பெண், கொலையின் சந்தேகநபர்கள் கைது..!!

புங்குடுதீவு 9ம் வட்டாரத்தை சேர்ந்த செல்வி சிவலோகநாதன் வித்யா என்பவர், இனம்தெரியாத நபர்களினால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்று நம்பப்படுகிறது. இவர் புங்குடுதீவு மகா வித்தியாலயத்தில் உயர்தரக்கல்வி கற்கும் மாணவி ஆவார். இவர் நேற்றுக்காலை வல்லனில் உள்ள தனது வீட்டில் இருந்து, பாடசாலைக்கு துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த போதே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

இதேவேளை இச்சம்பவத்தின் கொலை சந்தேகநபர்களான புங்குடுதீவு வல்லனை சேர்ந்த பூபாலன் சரோசா தம்பதிகளின் பிள்ளைகளான “பத்தாயிரம் ரூபாவுக்கு கொலை செய்யும்” கூட்டத்தை சேர்ந்த ரவி, மற்றும் அவரது சகோதரரான கொழும்பில் தொழில் புரியும் செந்தில், மற்றும் இவர்களது இன்னொரு சகோதரரான சின்னாம்பி என்பவரும், மற்றும் ரவியின் கூட்டாளியான “பத்தாயிரம் ரூபாவுக்கு கொலை செய்யும்” கூட்டத்தை சேர்ந்த கிருபா என்பவரும் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முதலில் பொலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பூபாலன் சரோசா தம்பதிகளின் பிள்ளையான “பத்தாயிரம் ரூபாவுக்கு கொலை செய்யும்” கூட்டத்தை சேர்ந்த ரவி, கைது செய்யப்பட்டு அவனை “விசாரிக்க வேண்டிய முறையில்” பொலிசார் விசாரித்ததுடன், அவர்களின் வீட்டையும் சோதனையிட்ட போது அங்கு இரத்தத்துடன் இருந்த சேட் ஒன்றையும் கைப்பற்றி, அதன் சூத்திரதாரியான அவனது தம்பியான கொழும்பில் தொழில் புரியும் செந்தில் என்பவரும் கைது செய்யப்பட்டு, அதன் எதிரொலியாக மற்றவர்களும் கைதுசெய்யப்பட்டு உள்ளனர்.

http://www.athirady.com/

நியானி: தவிர்க்கப்டவேண்டிய பதம் திருத்தப்பட்டுள்ளது.

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்

பால் வடியும் உங்கள் தங்கையின் முகத்தைப் பார்க்க என்னாலேயே தாங்க முடியவில்லை, அஞ்சரன்!

 

உங்களுக்கு எப்படி இருக்கும் என என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை!

 

இதற்குக் காரணமானவர்களைச் சமூகத்திலிருந்து உரித்தெடுத்தலே... இனிமேலும் இவ்வாறான சம்பவங்கள் நடை பெறாதிருக்க வழி வகுக்கும்!

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்..

 

காட்டான்களின் பிடியிலிருந்து என்று மீளுமோ இப்பூமி?

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரனுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.

யாராவது அஞ்சரனின் தொடர்பிலக்கம் இருந்தால் தனிமடல் இடுங்கள்.

மிகுந்த வேதனை அளிக்ககூடிய விடயம். அஞ்சரன் அண்ணனும் அவரது குடும்பத்தார்களும் எப்படி இந்த மீளாத்துயரை தாங்கி கொள்வார்கள் என்று நினைக்க முடியவில்லை. :(

ஆழ்ந்த இரங்கல்கள்..! :(

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த  இரங்கல்கள்..

உன்னைக்காக்கமுடியாத என்னை மன்னித்துவிடு தாயே...

 

இவரது பாடசாலைக்கான பாதுகாப்பை அண்மையில் தான் செய்து முடித்திருந்தோம்...

ஆள் நடமாட்டமற்ற பாதைகளால் இவர்   போன்றவர்கள் பயணிப்பது எமது கவனத்துக்கு கொண்டுவரப்பட்டிருந்தபோதும்..

என்ன செய்வது நாலு பேர் தான் எல்லாவற்றையும் செய்யணும் என்ற நிலை தான் இன்றைய தமிழரின் தலைவிதிக்கே காரணம்..

இனியாவது புலம் பெயர் சமூகம் ஒன்றிணைந்து செயற்பட்டும்

பாதுகாப்பை உறுதிப்படுத்தட்டும்

இதுவே இவருக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்கணும்..

 

சகோதரனுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.

யாராவது அஞ்சரனின் தொடர்பிலக்கம் இருந்தால் தனிமடல் இடுங்கள்.

 

DOC150515_15052015084513_Page_1.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.