Jump to content

நோர்வே தமிழரின் நிதியுதவியில் வாகனேரியில் புதிய மருத்துவமனை


Recommended Posts

நோர்வே தமிழரின் நிதியுதவியில் வாகனேரியில் புதிய மருத்துவமனை

 

vakaneri-hospital-1-300x200.jpgமருத்துவ வசதிகள் இன்றி நெருக்கடிகளை எதிர்கொள்ளும் மட்டக்களப்பின் வாகனேரி கிராம மக்களின் அடிப்படை மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்குடன் மருத்துவ நிலையம் ஒன்று பெரும் பொருட்செலவில் அமைக்கப்பட்டுள்ளது.

நோர்வே தமிழரான ‘ஏஞ்சல்’ மண்டப சேவை நிறுவனத்தின் உரிமையாளர் சுதர்சன் பத்மநாதன் அவர்களின் நிதியுதவியுடன் தமிழ் நோர்வே வள ஒன்றியம் (TNRA), மற்றும் தாயகத்திலுள்ள அஹிம்சா சமூக நிறுவனத்தின் கூட்டு அனுசரணையுடன் இந்த மருத்துவ நிலையக் கட்டடம் நிறுவப்பட்டுள்ளது.

இந்த மருத்துவ நிலையம் புதன்கிழமை 20.03.19 இலங்கைக்கான நோர்வே தூதுவர் Thorbjørn Gaustedsæter அவர்களினால் வைபவ ரீதியாகத் திறந்து வைக்கப்பட்டது.

மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான திறப்பு விழாவில் சுதர்சனின் பெற்றோர் மருத்துவமனையின் பெயர்ப்பலகையினைத் திரைநீக்கம் செய்து வைத்தனர். அஹிம்சா சமூக நிறுவனத்தின் உபதலைவர் இராஜ்மோகன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

எதிர்காலம் நோக்கிய இணைந்த செயற்பாடுகள் பற்றி தமிழ் நோர்வே வள ஒன்றிய இணைப்பாளர் மருத்துவக் கலாநிதி ச.விமலநாதன் , இலங்கையின் அபிவிருத்தியில் புலம்பெயர் தமிழர்களின் பங்கு குறித்து இலங்கைக்கான நோர்வே தூதுவர் தூர்பியொர்ன் ஹவுஸ்ட்சாதர் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

நோர்வே தூதுவர் தனது உரையில், புலம்பெயர் தமிழர்கள் தாய்நாட்டிற்கு அனுப்பும் பணத்தில் கைத்தொலைபேசி கொள்வனவு செய்தல், கல்யாண மண்டபங்கள் கட்டி ஆடம்பர செலவுகள் செய்வதற்கு பதிலாக தமிழ்ப் பகுதிகளின் அபிவிருத்தியை முன்னெடுக்கும் வகையிலான முதலீடுகளைச் செய்வது அவசியமென வலியுறுத்தினார்.

அத்துடன் அபிவிருத்திப் பணிகளுக்காக மட்டக்களப்பு மாவட்டத்தையும் குறிப்பாக வாகனேரி போன்ற கிராமத்தை தெரிவு செய்ததற்காக தமிழ் நோர்வே வள ஒன்றியத்திற்கு தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட வண.பிதா ஜோசப் பொன்னையா ஆசியுரை வழங்கினார். மாவட்டச் செயலாளர் ராஜ்பாபு, வைத்தியர் சுகுணன் ஆகியோர் மட்டக்களப்பு மாவட்டத்தின் தேவைகள் குறித்து கருத்துகளைப் பகிர்ந்திருந்தனர்.

vakaneri-hospital-1.jpgvakaneri-hospital-2.jpgvakaneri-hospital-3.jpgvakaneri-hospital-4.jpgvakaneri-hospital-5.jpgvakaneri-hospital-6.jpgvakaneri-hospital-7.jpg

தாயக மக்களின் மருத்துவத் தேவையினை உணர்ந்து இப்பாரிய பணிக்குரிய நிதியுதவியை வழங்கிய சுதர்சனின் மனிதநேயச் சிந்தனைக்கும் கொடை உணர்வுக்கும் இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக தமிழ் நோர்வே வள ஒன்றியத்தினர் கூறியுள்ளனர்.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில், 489 குடும்பங்களை உள்ளடக்கிய வாகனேரி கிராம மக்கள் மருத்துவ வசதிகள் எதுவுமின்றி மிகவும் இன்னல்களை அனுபவித்து வந்தனர். நிரந்தர கட்டிடவசதிகளற்ற நிலையில் நடமாடும் மருத்துவ சேவை மூலம் மரநிழலிலும், கூடாரங்களிலும் அவர்களுக்கான மருத்துவதேவைகள் அவ்வப்போது வழங்கப்பட்டு வந்தது.

தமிழ் நோர்வே வள ஒன்றியம் இக் கிராமத்து மக்களின் அவலங்களை அஹிம்சா சமூக நிறுவனத்தின் உதவியுடன் வெளிக்கொணர்ந்தது.

இக்கிராமத்து மக்களின் அவலங்களை தீர்க்கும் முகமாக ஆரம்ப சுகாதார நிலையம், சிகிச்சைப்பிரிவு, பரிசோதனைப் பிரிவு என பல்வேறு பாகங்களை உள்ளடக்கிய கட்டடத்தொகுதிக்கான அடிக்கல் கடந்த ஆண்டு பங்குனி மாதம் நாட்டப்பட்டது. கட்டிட வேலைகள் துரிதகதியில் நடைபெற்று, இம்மாதம் கட்டிடவேலைகள் நிறைவு பெற்றன.

புலம்பெயர்ந்து வாழும் மருத்துவதுறைசார் ஊழியர்கள், மாணவர்கள் இந்த மக்களுக்கு சேவை செய்யவிரும்புமிடத்து தமிழ் நோர்வே வள ஒன்றியம் அதற்கான ஏற்பாடுகளைச் செய்துதரக் காத்திருக்கின்றது.

ஜேர்மன், பிரான்ஸ், நோர்வே நாடுகளில் மருத்துவதுறைசார் எமது இரண்டாம் தலைமுறையினர் அடுத்த கோடை விடுமுறையின் போது அங்கு பணிபுரிய தயாராகி வருகிறார்கள். இவ்வாறு சேவையாற்ற விரும்புவோர் எம்முடன் தொடர்பு கொள்ளுமிடத்து அதற்கான ஒழுங்குகளைச் செய்து சேவையை சீரமைக்க இலகுவாக இருக்கும் எனவும் தமிழ் நோர்வே வள ஒன்றியம் தெரிவித்துள்ளது.

தமிழர் தாயகத்தில் போருக்குப் பின்னரான சூழ்நிலையில் வாழ்வாதார, மருத்துவ, கல்வி மேம்பாட்டுச் செயற்பாடுகளில் தமிழ் நோர்வே வள ஒன்றியம் ஈடுபட்டுவருகின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தை மையப்படுத்திய செயற்பாடுகளில் மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள மைலந்தனை கிராமத்தினை முன்மாதிரிக் கிராமமாகத் தத்தெடுத்து அபிவிருத்தி செய்யும் பணிகளில் தமிழ் நோர்வே வள ஒன்றியம் கவனம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://www.puthinappalakai.net/2019/03/23/news/37029

Link to comment
Share on other sites

வரவேற்கப்பட வேண்டிய அபிவிருதித்திப் பணிகள்.

இந்தப் பணிகள் ஒருபுறம் நடைபெற மறுபுறம் அபிவிருத்தி அடையும் தமிழர் இடங்கள் பறிபோகாது பாதுகாப்பதற்குரிய வேலிகளும் அமைக்கப்படல் வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு  முயற்சியும்  செயலும்

தொடரணும்

Link to comment
Share on other sites

வைத்திய கலாநிதி நிமால் மற்றும் அவருக்கு துணை நின்றவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும். இங்கு விமலநாதன் என்று பதியபட்டிருக்கும் அவரின் உண்மையான பெயர் வைத்திய கலாநிதி நிமலநாதன்(இருதய சத்திரசிகிச்சை நிபுணர்).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவு ஒரு அருமையான முயற்சி . நன்றிகளும் வாழ்த்துக்களும்  .

Empowering  is  the need  of  the  hour  

 

இது தொடர்ந்து செயட்படுவதற்கான நிதியுதவிகள் பற்றியும் அவதானம் செலுத்தியிருப்பார்கள் என நம்புகிறேன்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தப் பட்டவர்களுக்கு நன்றிகளும் பாராட்டுகளும் உரித்தாகட்டும் ......அவர்களின் சேவைகள் தொடரட்டும்......!  😁

Link to comment
Share on other sites

5 hours ago, பகலவன் said:

வைத்திய கலாநிதி நிமால் மற்றும் அவருக்கு துணை நின்றவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும். இங்கு விமலநாதன் என்று பதியபட்டிருக்கும் அவரின் உண்மையான பெயர் வைத்திய கலாநிதி நிமலநாதன்(இருதய சத்திரசிகிச்சை நிபுணர்).

தவறு 

அவரது உண்மையான பெயர் சண்முகநாதன் லிமலநாதன் 

இவரை அனைவரும் லிமால் என்றே அழைப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வரவேற்ற தக்க முயற்சி...அங்கிருக்கும் வைத்தியர்களும் இலவசமாய் போய் சேவை செய்ய வேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு அரசு தனது மக்களுக்கு செய்ய வேண்டியதை அந்த மக்களிலிருந்தே செய்ய வேண்டி உள்ளது.

இதில் பங்கு கொண்டவர்களுக்கு நன்றியும் பாராட்டுக்களும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு  முயற்சி . நன்றிகளும் வாழ்த்துக்களும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சந்தோசமான செய்தி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

ஒரு அரசு தனது மக்களுக்கு செய்ய வேண்டியதை அந்த மக்களிலிருந்தே செய்ய வேண்டி உள்ளது.

இதில் பங்கு கொண்டவர்களுக்கு நன்றியும் பாராட்டுக்களும்.

பிச்சைக்காரன் தனது புண்ணைக்காட்டிப் பிச்சையெடுப்பது போலவே.....சிங்களம்...தமிழனைக்காட்டிக் காட்டிப் பிச்சை எடுத்துத் தன்னை வளர்த்தது தானே....சுனாமி...காலம் தொடக்கம் நடக்குது!🙄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, புங்கையூரன் said:

பிச்சைக்காரன் தனது புண்ணைக்காட்டிப் பிச்சையெடுப்பது போலவே.....சிங்களம்...தமிழனைக்காட்டிக் காட்டிப் பிச்சை எடுத்துத் தன்னை வளர்த்தது தானே....சுனாமி...காலம் தொடக்கம் நடக்குது!🙄

இந்த கருத்தை பார்க்க எனக்கு பொறாமை வந்து விட்டது. அழகான அமைதியான கருத்து.👋

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புங்கையூரன் said:

பிச்சைக்காரன் தனது புண்ணைக்காட்டிப் பிச்சையெடுப்பது போலவே.....சிங்களம்...தமிழனைக்காட்டிக் காட்டிப் பிச்சை எடுத்துத் தன்னை வளர்த்தது தானே....சுனாமி...காலம் தொடக்கம் நடக்குது!🙄

உண்மை தான் புங்கை சிங்கள பகுதிகளில் போட்டிருக்கிற அதிவேக நெடுஞ்சாலைகளைப் பார்க்கவே மிகவும் வருத்தமாக உள்ளது.திட்டமிட்டு புறக்கணிப்பது அப்பட்டமாக தெரிகிறது.
சுருங்கச் சொல்லி விளங்க வைத்துள்ளீர்கள்.நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ரதி said:

வரவேற்ற தக்க முயற்சி...அங்கிருக்கும் வைத்தியர்களும் இலவசமாய் போய் சேவை செய்ய வேண்டும்

ஒன்று இரண்டு நல்ல சேவை மனப்பாங்கு இருந்தாலும் சில வைத்தியர்கள் காசுதான் மெயினா இருக்கு 
அதற்கு உதாரணம் பல தனியார் வைத்திய சாலைகள் உருவாகிறது தற்போது தொழில் கூட மனிதன் தான் நோய் கூட காசு பார்ர்கிறது 

 அவருக்கு வாழ்த்துக்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஒன்று இரண்டு நல்ல சேவை மனப்பாங்கு இருந்தாலும் சில வைத்தியர்கள் காசுதான் மெயினா இருக்கு 
அதற்கு உதாரணம் பல தனியார் வைத்திய சாலைகள் உருவாகிறது தற்போது தொழில் கூட மனிதன் தான் நோய் கூட காசு பார்ர்கிறது 

 அவருக்கு வாழ்த்துக்கள் 

மட்டக்கிளப்பு வைத்திய சேவையை பலர் குறை கூறி வருகிறார்கள்...தனியார் வைத்தியசாலைகள் தொடங்கி காசுக்குத் தான் வைத்தியர்கள் மதிப்பு கொடுக்கிறார்கள் எனக் கேள்விப் பட்டேன்...உண்மையா?

Link to comment
Share on other sites

மிகவும் பாராட்டத்தக்க முயற்சி!

 

On 3/24/2019 at 9:31 AM, nunavilan said:

நோர்வே தூதுவர் தனது உரையில், புலம்பெயர் தமிழர்கள் தாய்நாட்டிற்கு அனுப்பும் பணத்தில் கைத்தொலைபேசி கொள்வனவு செய்தல், கல்யாண மண்டபங்கள் கட்டி ஆடம்பர செலவுகள் செய்வதற்கு பதிலாக தமிழ்ப் பகுதிகளின் அபிவிருத்தியை முன்னெடுக்கும் வகையிலான முதலீடுகளைச் செய்வது அவசியமென வலியுறுத்தினார்.

பலரும் கவனிக்க, கருத்தில் எடுக்க மறந்த மிகமிக முக்கியமான, நல்ல கருத்து!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/28/2019 at 1:07 AM, ரதி said:

மட்டக்கிளப்பு வைத்திய சேவையை பலர் குறை கூறி வருகிறார்கள்...தனியார் வைத்தியசாலைகள் தொடங்கி காசுக்குத் தான் வைத்தியர்கள் மதிப்பு கொடுக்கிறார்கள் எனக் கேள்விப் பட்டேன்...உண்மையா?

பல சம்பவங்கள் நடந்துவிட்டது வைத்தியர்களின் கவலையீனமா அல்லது ஆஸ்பத்திரிக்கு அவ்வப்பெயர ஏற்படுத்த சில சக்திகள் செயற்படுதா என்ற கேள்விக்குறியும் இருக்கிறது 

விசாரிக்க வேண்டும் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • atacms ஏவுகணைகள்  (ஒவ்வொன்றும் $1.5 மில்லியன்) அனுப்பியன் காரணம் இப்பொது தெரிகிறது, அமெரிக்கா gsldb வேலைசெய்யாதபடியால்    (ருசியா சமிக்ஞை தடுப்பும், சேறும் காரணமாக சொல்லப்படுகிறது ).  அனால் gsldb  இன் idea ஐ  ருசியா முதல் செய்தது, இப்போது தூரமும், சக்தியும் கூட்டி  உள்ளது    
    • த‌லைவ‌ரே உங்க‌ளுக்கு அறிவோ அறிவு.................எப்ப‌டி க‌ண்டு பிடிச்சிங்க‌ள் ஆம் சுவி அண்ணா கைபேசியில் இருந்து வேக‌மாக‌ எழுதும் போது சில‌ எழுத்துக்க‌ள் ச‌ரியா ரைப் ப‌ண்ணு ப‌டுதில்லை கார‌ண‌ம் கை நிக‌ம் வ‌ள‌ந்தால்   இன்னொரு எழுத்தையும் கூட‌ ப‌தியுது நிதான‌மாய் எழுதினால் ஒரு பிர‌ச்ச‌னையும் இல்லை சுவி அண்ணா....................... கிட்ட‌ த‌ட்ட‌ 9வ‌ருட‌மாய் கைபேசியில் இருந்து தான் எழுதுகிறேன்🙏🥰..................................................................
    • இந்த நிதி ஒதுக்கீட்டின் விபரம் அலசப்படுகிறது. சின்ஹா அலசலின் படி, ஏறத்தாழ 10 பில்லியன் ஆயுதங்களே உக்கிரனுக்கு வழங்கப்பட போகிறது. மிகுதி, முன்பு வழங்கியவைக்கு, வழங்க திட்டமிட்டு இப்போதும் நிலுவையில் (உற்பத்தி செய்யப்பட வேண்டியவை) உள்ள ஆயுதங்களுக்கு (கிட்டத்தட்ட 10 பில்லியன்), பகுது ஆலோசனைகளுக்கு (consultancy, வழமையாக கடன் கொடுக்கும் பொது மேற்கு செய்வது), உக்கிரைன் அரச சேவை சம்பளம்  போன்றவைக்கு  கட்டணம் ஆக செலுத்தப்படுகிறது. ஆகவே மொத்த ஆயுத தொகை 20 -25 பில்லியன், அனால் அதிலும், வேறு எதாவது செலவுகள் (பயிற்சி போன்றவை) உள்ளடக்கப்பட்டு இருக்கிறதோ தெரியவில்லை.   https://jackrasmus.com/2024/04/23/ukraine-war-funding-failed-russian-sanctions-print/   This past weekend, April 20, 2024 the US House of Representatives passed a bill to provide Ukraine with another $61 billion in aid. The measure will quickly pass the Senate and be signed into law by Biden within days. The funds, however, will make little difference to the outcome of the war on the ground as it appears most of the military hardware funded by the $61 billion has already been produced and much of it already shipped. Perhaps no more than $10 billion in additional new weapons and equipment will result from the latest $61 billion passed by Congress. Subject to revision, initial reports of the composition of the $61 billion indicate $23.2 billion of it will go to pay US arms producers for weapons that have already been produced and delivered to Ukraine. Another $13.8 billion is earmarked to replace weapons from US military stocks that have been produced and are in the process of being shipped—but haven’t as yet—or are additional weapons still to be produced. The breakdown of this latter $13.8 amount is not yet clear in the initial reports. One might generously guess perhaps $10 billion at most represents weapons not yet produced, while $25-$30 billion represents weapons already shipped to Ukraine or in the current shipment pipeline.   ....
    • உந்த‌ இஸ்கோர‌ பார்த்து  ஆர‌ம்ப‌த்தில் நினைத்து இருப்பின‌ம் ப‌ஞ்சாப் தோக்க‌ போகுது என்று ஆனால் மாறி ந‌ட‌ந்து விட்டது   கே கே ஆர் ப‌ந்து வீச்சு இன்று ப‌ட‌ வில்லை......................................... ஜ‌பில் வ‌ர‌லாற்றில் ஒரு போட்டியில் அதிக‌ சிக்ஸ்ச‌ர் அடிச்ச‌து என்றால் இன்று ந‌ட‌ந்த‌ போட்டியில் தான் என்று நினைக்கிறேன் 10வ‌ருட‌த்துக்கு முத‌ல் உந்த‌ மைதான‌த்தில் 168 அடிச்சாலே போதும் வெற்றிய‌ உறுதிய‌ செய்ய‌ ஆனால் இப்ப‌ 261 ர‌ன்ஸ் அடிச்சும் எதிர் அணி அடிச்சாடி வெல்லுகின‌ம் என்றால் பிச்ச‌ கால‌ப் போக்கில் மாற்றி விட்டின‌ம் ம‌ட்டைக்கு சாத‌க‌மாக‌.......................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.