Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முதல்பதிவு

Featured Replies

அப்பாவுக்கு கொழும்பில் சுங்கத்திணைக்களத்தில் வேலை. சம்பளத்துக்கு மேல் வருமானமும் நல்ல வசதிகளோடும் கூடிய அரசாங்க தொழில். அப்போது நாங்கள் கொழும்பின் புறநகர் பகுதியான ஹுனுப்பிட்டியில் குடியிருந்தோம். நான் பிறந்ததும் என் சின்ன வயது பள்ளிப்படிப்பும் அங்கேயே அமைந்தது. எங்களைப் போலவே வேலையின் நிமித்தம் கொழும்புக்கு குடிபெயர்ந்த நிறைய தமிழ்க்குடும்பங்கள் ஹுனுப்பிட்டியில் குடியிருந்தார்கள்.
பள்ளிக்கூட விடுமுறைக்கு பருத்தித்துறையில் இருந்த எங்கள் வீட்டுக்கு போய் வருவது வழக்கம்.

77 கலவரத்தில் ஒரே நாளில் எல்லாவற்றையும் இழந்து வெறும் கையோடு பருத்தித்துறைக்கு நிரந்தரமாக போக நேர்ந்தபோது மூன்றாம் வகுப்பில் இருந்தேன்.

சில ஆண்டுகளில் எதிர்பாராமல் அப்பா இல்லாமல் போக எல்லா சுமைகளும் அம்மாவின் தலைக்கு ஒரேநாளில் இடம் மாறியது. அப்போது மூத்த அண்ணனும் அக்காவும் பல்கலைக்கழகத்திலும் நானும் மற்ற அண்ணனும் தம்பியும் பள்ளிப் படிப்போடும் இருந்தோம். அப்பாவின் பென்சனில் ஐந்துபேரின் படிப்பையும் செலவையும் சமாளிக்க சிரமப்பட வேண்டிஇருந்தது. ஒருவருடைய படிப்பையாவது நிறுத்தி வெளிநாட்டுக்கு அனுப்பும்படி அக்கம்பக்கத்தில் சொன்னார்கள். பிள்ளைகளின் படிப்பை பாதியில் நிறுத்தி சிக்கலை கடப்பதில் அம்மாவுக்கு பெரிதாக நாட்டம் இருக்கவில்லை. செலவுகளின் துண்டு விழும் தொகையை சமாளிக்க அம்மாவின் ஒவ்வொரு நகையாக அடவு கடைக்கு போனது.

அண்ணா படிப்பை முடித்து வேலைக்கும் அக்கா மேல்படிப்புக்கு அமெரிக்காவுக்கும் போகிறபோது ஏறத்தாள அம்மாவின் எல்லா நகைகளும் அடவு கடைக்கோ அல்லது விற்பனைக்கோ போயிருந்தது. ஆயினும் அம்மா விரும்பியதை போலவே ஐந்து பேரும் இலங்கையிலேயே பல்கலைக்கழக படிப்பை பூர்த்திசெய்ய முடிந்தது.

பிறகு மீண்டும் வசதிகளும் வாய்ப்புகளும் வந்து சேர்ந்தபோது அம்மாவுக்கு நகைகளை போட்டு மகிழ்கிற வயது கடந்து போயிருந்தது.

இப்படித்தானே அம்மாக்களின் அர்ப்பணிப்புகளிலும் நம்பிக்கைகளிலும் துளிர்த்த குடும்பங்கள் ஊர் முழுக்க நிரம்பிக்கிடக்கிறது. அரைவயிரோடும கால்வயிரோடும் பிள்ளைகள் பற்றிய கனவுகளோடு வாழ்ந்த வாழ்கிற எல்லா அம்மாக்களுக்கும் இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் பிரி (யா)...உங்கள் அனுபவப்பகிர்வு நன்று . அதிலும் அன்னையர் தினத்துக்கு அம்மாவை கெளரவிக்க  எழுதி உள்ளீர்கள். பாராட்டுக்கள் ...முதலில் உங்களை அறிமுகம் செய்து தொடருங்கள். இது கதைப்பகுதியில் வந்தால் நன்றாக இருக்கும்  நிர்வாகத்தை மாற்றிவிடும்படி கேளுங்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் !வாங்கோ !! வாழ்த்துக்கள் !!!

முதல்பதிவே கனதியாக இருக்கு..... தொடர்ந்து எழுதுங்கள் .....!   

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கண் கலங்க வைக்கும் முதல் பதிவுடன் வந்திருக்கின்றீர்கள். வருக வருக என வரவேற்கின்றோம்.💐

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வணக்கம் வாங்கோ.

தமிழன் என்றாலே எதிர்நீச்சல் போட்டால்த் தான் தமிழன்.

  • தொடங்கியவர்
5 hours ago, நிலாமதி said:

வணக்கம் பிரி (யா)...உங்கள் அனுபவப்பகிர்வு நன்று . அதிலும் அன்னையர் தினத்துக்கு அம்மாவை கெளரவிக்க  எழுதி உள்ளீர்கள். பாராட்டுக்கள் ...முதலில் உங்களை அறிமுகம் செய்து தொடருங்கள். இது கதைப்பகுதியில் வந்தால் நன்றாக இருக்கும்  நிர்வாகத்தை மாற்றிவிடும்படி கேளுங்கள் 

ஆலோசனைக்கு நன்றி .

நீண்ட நாட்களாக அடிக்கடி மேச்சலிடுகிற இடம் .
 ஏதோ ஒரு அசட்டு துணிவில் முகநூலில் எழுதியதை  இங்கும் இறக்கி விட்டேன் .

4 hours ago, suvy said:

வணக்கம் !வாங்கோ !! வாழ்த்துக்கள் !!!

முதல்பதிவே கனதியாக இருக்கு..... தொடர்ந்து எழுதுங்கள் .....!   

நன்றி .

  • தொடங்கியவர்
2 hours ago, குமாரசாமி said:

கண் கலங்க வைக்கும் முதல் பதிவுடன் வந்திருக்கின்றீர்கள். வருக வருக என வரவேற்கின்றோம்.💐

நன்றி .

2 hours ago, ஈழப்பிரியன் said:

வணக்கம் வணக்கம் வாங்கோ.

தமிழன் என்றாலே எதிர்நீச்சல் போட்டால்த் தான் தமிழன்.

நன்றி .

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டுக்கு வீடு வாசல் படி தானே!

கொஞ்சம் மனதைப் பாதித்த பகிர்வு!

வணக்கம் ....வாருங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்.... உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.
உங்கள் அம்மா தன்னந்தனியாக.... ஐந்து பிள்ளைகளையும், 
இலங்கையிலேயே பல்கலைக்கழகம் வரை கற்பிக்க வைத்த,
தன்னம்பிக்கைக்கும், வைராக்கியத்துக்கும்... தலை வணங்குகின்றேன்.

  • தொடங்கியவர்

வரவேற்று ஊக்கப்படுத்திய எல்லா நண்பர்களுக்கும் நன்றியும் வணக்கமும் .

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம், வாருங்கள், உங்கள் அம்மாவின் முயற்சி கண்கலங்க வைக்குது 

வணக்கம், வாருங்கள். கண்கலங்க வைக்கும் பதிவு.

  • கருத்துக்கள உறவுகள்

நான்கு பிள்ளைகளும் இலங்கையில் பல்கலைக்கழகம் செல்வது இலகுவான காரியமல்ல.

உங்கள் தந்தையாரின் ஆசிகள், தாயாரின் அர்ப்பணிப்பு... 

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Nathamuni said:

நான்கு பிள்ளைகளும் இலங்கையில் பல்கலைக்கழகம் செல்வது இலகுவான காரியமல்ல.

உங்கள் தந்தையாரின் ஆசிகள், தாயாரின் அர்ப்பணிப்பு... 

நாதம்ஸ் அவங்க 5 என்கிறாங்க நீங்க 4 என்கிறீங்க?????

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, MEERA said:

நாதம்ஸ் அவங்க 5 என்கிறாங்க நீங்க 4 என்கிறீங்க?????

🤦‍♂️

On 6/1/2019 at 11:15 PM, pri said:

அப்போது மூத்த அண்ணனும் அக்காவும் பல்கலைக்கழகத்திலும் நானும் மற்ற அண்ணனும் தம்பியும் பள்ளிப் படிப்போடும் இருந்தோம்.

5 பேர் தான்!

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பிரி ,

யாழ் திண்ணைக்கு நல்வரவுகள்.

ஹுனுப்பிட்டி , சுங்கத் திணைக்களம் , 77 ம் ஆண்டு   கலவரம்,  ஐந்து பிள்ளைகள் , பருத்தித்துறை.  மிகவும் பழகிய குடும்பமொன்றினை ஞாபகப் படுத்துகின்றது. ஆயினும் வித்தியாசங்கள் அவர்கள் ஐவரும் ஆண் பிள்ளைகள் , தந்தையார் நெடுங்காலம் அவர்களுடன் இருந்தார் .

அவர்களில் இரண்டாமவன் மிகுந்த அழகும் துடி துடிப்பும் கொண்டவன் ,  கலவரத்தை தொடர்ந்து ஊருக்கு வந்து என்னை கண்டதும் கேட்ட முதல் கேள்வி " அண்ணா , எங்கே போக வேண்டும் சேர்வதற்கு " என்பது தான். முதலில் எனக்கு புரியவில்லை;  பின்பு அவனை  சற்று நிதானமாக இருக்கும் படி சொன்னேன்.

இயக்கங்களில் ஒன்றில் சேர்ந்து நிலை உயர்ந்து வந்தான் - உள்வீட்டு குத்துச் சண்டைகளில் நியாயம் கேட்கப் போனவன் திரும்பி வரவில்லை.  அந்த ஏக்கமும் தந்தையாரை கொண்டு போய் சேர்க்க காரணமாக இருந்தது.

 

உங்களின் கதை பழைய ஞாபகங்களை சற்றே தட்டி விட்டு விட்டது.      

  • தொடங்கியவர்
On 6/17/2019 at 10:06 PM, சாமானியன் said:

பிரி ,

யாழ் திண்ணைக்கு நல்வரவுகள்.

ஹுனுப்பிட்டி , சுங்கத் திணைக்களம் , 77 ம் ஆண்டு   கலவரம்,  ஐந்து பிள்ளைகள் , பருத்தித்துறை.  மிகவும் பழகிய குடும்பமொன்றினை ஞாபகப் படுத்துகின்றது. ஆயினும் வித்தியாசங்கள் அவர்கள் ஐவரும் ஆண் பிள்ளைகள் , தந்தையார் நெடுங்காலம் அவர்களுடன் இருந்தார் .

அவர்களில் இரண்டாமவன் மிகுந்த அழகும் துடி துடிப்பும் கொண்டவன் ,  கலவரத்தை தொடர்ந்து ஊருக்கு வந்து என்னை கண்டதும் கேட்ட முதல் கேள்வி " அண்ணா , எங்கே போக வேண்டும் சேர்வதற்கு " என்பது தான். முதலில் எனக்கு புரியவில்லை;  பின்பு அவனை  சற்று நிதானமாக இருக்கும் படி சொன்னேன்.

இயக்கங்களில் ஒன்றில் சேர்ந்து நிலை உயர்ந்து வந்தான் - உள்வீட்டு குத்துச் சண்டைகளில் நியாயம் கேட்கப் போனவன் திரும்பி வரவில்லை.  அந்த ஏக்கமும் தந்தையாரை கொண்டு போய் சேர்க்க காரணமாக இருந்தது.

 

உங்களின் கதை பழைய ஞாபகங்களை சற்றே தட்டி விட்டு விட்டது.      

நன்றி சாமானியன் .

நீங்கள் குறிப்பிட்ட தகவலோடு ஒத்துப்போகிற குடும்பம் ஒன்றை நானும் அறிவேன் .
அவர்களுடைய  கடைசி மகனோடு கொழும்பிலும் பின்னர் ஹாட்லியிழும்   ஒன்றாக  படித்திருக்கிறேன் .

அவனுடைய அப்பா வருமான வரி திணைக்களத்தில் வேலை செய்ததாக ஞாபகம் . சுங்க திணைக்களத்தில் அல்ல .
 

  • கருத்துக்கள உறவுகள்

வாங்கோ  பிரி

அம்மாக்களின் வலிகளோடு  வந்திருக்கின்றீர்கள்

தொடருங்கள்

கதைப்பகுதி  இருக்கிறது

அங்கே  பதியுங்கள்

  • 1 month later...

வணக்கம் பிரி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.