Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேவதையை இழந்த வேதனையில் என் தோழி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தன் பிள்ளையாய் வளர்த்துவந்த சகாராவின் தேவதை (நன்றியுள்ள பிள்ளை) இன்று காலமானார். இவரது பிரிவால் மன வேதனையுடன் இருக்கும் சகாராவிற்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

என் ஆழ்ந்த அனுதாபங்களும் கண்ணீர் அஞ்சலிகளும் அக்கா....நீங்கள் நேசித்த அந்த உறவின் இழப்பில் இருந்து விரைவில் மீண்டுவருங்கள் அக்கா...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆழ்ந்த இரங்கல்கள் அக்கா.

  • கருத்துக்கள உறவுகள்

இன்னொரு தேவதையை, விரைவில், தத்து எடுத்துக் கொள்ளுங்கள்!

கவலை பாதியாகக் குறையும்! அனுபவத்தில் கண்டது!

தங்கள் துயரில் பங்கு கொள்கிறேன்!

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த  அனுதாபங்கள் சகாரா.

  • கருத்துக்கள உறவுகள்

சகாறாக்கா வளர்த்த பிள்ளையா?...நன்றியுள்ள பிள்ளை என கண்மனி அக்கா எழுதியிருப்பதை பார்த்தால் சகாறா அக்காவின் வளர்ப்பு நாயோ எதுவும் பிழை என்டால் மன்னிக்கவும்...எது எப்படியிருந்தாலும் பிரிவுத் துயரால் வருந்தும் அக்காவுக்கு எனது அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி காவலூர் கண்மணி, சுபேசு, யீவா, புங்கையீரான் , நுணா, ரதி யாயி ஒரு அதிர்வான இழப்புதான் உங்கள் அனைவரின் அனுதாபங்களுக்கும் நான் கடமைப்பட்டுள்ளேன்.

 

 

தூரப்பறந்துவிட்ட என் வீட்டின் தூங்காத கண்மணி

 

 

img5649d.jpg

 

 

  • கருத்துக்கள உறவுகள்

தங்கள் துயரில் பங்கு கொள்கிறேன்!


 

confused-face-smiley-emoticon.gif     t2319.gif

Edited by ஆதித்ய இளம்பிறையன்

சகாறாவிடம் எத்தனை பிள்ளைகள் என்று கேட்டால் 6 என்பார் (அதில் அவரின் கணவரும் அடக்கம்).  பிள்ளைகள் இல்லாதவர்கள் தான் செல்லப் பிராணிகளை தம் பிள்ளை போன்று வளர்ப்பர். ஆனால் சகாறா 4 பிள்ளைகள் இருந்தும் செல்லப் பிராணியையும் தன் பிள்ளையாக கருதி வந்தது சிறப்பானது.

 

செவ்வாய் இரவு தொலைபேசியில் என்ன நடந்தது என்று கேட்கும் போது, குரல் எல்லாம் அடைத்து அழுகின்ற விதமாக கதைத்தார். எனக்கு உண்மையில் கொஞ்சம் ஆச்சரியமாகவும் இருந்தது.

 

ஆழ்ந்த கவலைகள்.

  • கருத்துக்கள உறவுகள்

தங்கள் துயரில் பங்கு கொள்கிறேன்!

  • கருத்துக்கள உறவுகள்

தங்கள் துயரில் பங்கு கொள்கிறேன் வளப்பு நாய் என்றாலும் அந்த நாய் குட்டியோடை இருந்து பொழுதை கழிச்ச ஆக்களுக்கு தான் தெரியும் அதின் வலி..கொஞ்ச நாளுக்கு ஒரு மாரித் தான் இருக்கும் அக்கா காலப் போக்கில் எல்லாம் சரி வரும்..டொன் வெறி

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான இழப்பின் அருமை எனக்கு நல்லாய் தெரியும்.கொஞ்சநாள் போக இன்னொருவரை வாங்குங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் நாடுகளில் நாய்க்குட்டியும் ஒரு குழந்தையைப் போலத்தான் அன்புடனும் அக்கறையுடனும் வளர்க்கப்படுகின்றன. சகாறா அக்காவின் துயரில் நானும் பங்கு கொள்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
புலம்பெயர் நாடுகளில் நாய்க்குட்டியும் ஒரு குழந்தையைப் போலத்தான் அன்புடனும் அக்கறையுடனும் வளர்க்கப்படுகின்றன. சகாறா அக்காவின் துயரில் நானும் பங்கு கொள்கின்றேன்.

 

இல்ல கிருபன் அண்ணா. ஊரிலும் நாய்களை கவனமாகப் பராமரித்து வளர்ப்போர் பலர் உளர். நீங்கள் அவதானிக்கவில்லைப் போலும்.

 

இதே கலரில் எங்களிடமும் இதே வகை நாய் ஊரில் இருந்தது. அது கடுவன். இப்பவும் அதன் நினைவுகள் கண் முன்னால நிழலாடுகின்றன..! அதனைப் பற்றிய ஒரு பதிவை இங்கும் யாழில் எழுதியும் இருக்கிறேன்.

 

1995 இடம்பெயர்வின் போது.. அதிக மழை.. குளிர் தாங்கேலாமல்.. இறந்து விட்டது. அந்த வேதனை இப்போதும் எனக்குள் இருக்கிறது.  அதற்கு முன்னர் டைகர் என்ற ஒரு சாதாரண நாயும் இருந்தது. அதுவும் எனக்கு மிக விருப்பான ஒன்றாக இருந்தது. அது பற்றியும் எழுதி இருக்கிறேன். அது விபத்தில் இறந்துவிட்டது. :(

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
78907049.jpg


அப்பா மன்னாரில் இருந்த தன் வேலையிடத்தில் இருந்து ஒரு வார கால லீவோட யாழ்ப்பாணத்தில் இருந்த.. எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார். வரும் போது.. வழமை போலவே.. இந்த முறை.. கருவாடு.. பாலைப்பழம்.. இதரை வாழைப்பழம்.. அப்பிள்.. ஜாம்.. பிஸ்கட்.. என்று எல்லாம் வாங்கி வந்திருந்தாரு. அதோட ஒரு சுமாரான அளவு காட்போட் பெட்டி.. அங்கும் இங்கும்.. சில தூவரங்களோட..!

அப்பா.. இதென்ன கோழிக்குஞ்சா.. சத்தமே வரேல்ல...??! நான்.. பெட்டியின் தோற்றத்தை பார்த்திட்டு.. கேட்டன்..

திறந்து பார்... அப்பா கட்டளையிட..

ஆவலோடு.. பெட்டியை திறக்க முயன்றன். ஆனால் முடியல்ல.....

விடு நானே திறந்து விடுறன். பெட்டியை திறக்க முடியாமல் நான் திணறுவதை பார்த்திட்டு அப்பாவே வந்த களைப்பு தீர முதல்.. திறந்துவிட்டார்.

பெட்டிக்குள் எட்டிப்பார்த்த எனக்கு.. ரெம்ப ஆச்சரியம்... அதுக்குள்ள ஒரு கியூட் பப்பி..! எப்படிப்பா.. இதைக் கொண்டு வந்தீங்க.. பெட்டியை திறந்ததும்.. அதுவும்.. பெட்டியை விட்டு துள்ளிப் பாய்ந்து வெளிய வர துடித்தது. நான் பெட்டியை சரிச்சு விட்டதும்.. அது வெளியே வந்து..சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு.. உடம்பை நீட்டி.. முறிவெடுத்தெட்டு.. ஏதோ ரெம்பப் பழகிய இடம்போல.. ஓடித் திரிந்திட்டு.. சுச்சா போயிட்டு.. என்னோட விளையாட ஆரம்பிச்சுது.

நானும்.. பதிலுக்கு அதுக்கு விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தன்.. அதன் துடிப்பான விளையாட்டில்.. அதன் களைப்பு.. தெரிந்தது.

அதுக்கு கொஞ்சம் தண்ணி வை. வாற வழியில.. பிஸ்கட்டும் தண்ணியும் கொடுத்தனான் தான்.. இருந்தாலும்... இந்த வெக்கைக்கு.. களைச்சுப் போயிருக்கும்.... அப்பா கூறி முடிப்பதற்குள்ளேயே..

தண்ணியோடு வந்து நின்றன்.

அதுவும் தண்ணியை நக்கி குடிச்சிட்டு.. புது தெம்பு வந்தவராக.. ஓடி.. தூரம் போய்.. மறுபடி ஓடி வந்து என் பாதம் தொட்டு.. திரும்ப ஓடி.. தூரம் போய்.. இப்படி திரும்ப திரும்ப செய்து.. தன் மகிழ்ச்சியை இனங்காட்டிக் கொண்டிருந்தது.

இடையில ஏதோ ஒரு சிந்தனை எழ.. அப்பா.. எனி.. இது அதுன்ர தாயட்ட எப்படிப் போகும்..??!

அதுக்கு அவர்... அது அதின்ர தாய் நாயை விட்டு கன நாளைக்கு முன்னமே பிரிஞ்சிட்டுது. அது இப்ப தானே சாப்பிடும்... பால் வைச்சா குடிக்கும்.. நீ.. அதுக்காக கவலைப்படாத...

குட்டி நாய்க்கும் குழந்தைப் பிள்ளைக்கும் இடம் கொடுக்கக் கூடாது. போய் கை கால் முகம் கழுவிட்டு வந்து சாப்பிடடா. ஸ்கூல் தொடங்கப் போகுது... அவனுக்கு நாய்க்குட்டி வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தா.. அவன் எப்படிப் படிப்பான். ஏற்கனவே கோழிக்குஞ்சு.. கன்றுக்குட்டி.. ஆட்டுக்குட்டி என்று தூக்கிக் கொஞ்சிக்கிட்டு திரியுறான்..! புத்தகம் கையில எடுக்கிறான் இல்ல. அதுபோக.. போளும் கிரிக்கெட் பற்றும் தான்...
அப்பா இல்லாத நேரம்.. நான் செய்த குழப்படிகள் எல்லாத்தையும் ஒட்டுமொத்தமா சேர்த்து.. அம்மா முறையா பத்த வைச்சுக் கொண்டிருந்தா.

அப்பா.. நான்.. இந்த முறை முதலாம் பிள்ளை. கூட்டுத்தொகை 710 எட்டுப் பாடங்களுக்கு. இப்ப லீவு தானேப்பா.. இப்ப விளையாடாமல் எப்ப விளையாடுறது.. நான் பதிலுக்கு எந்தரப்பு நியாயத்தை முன் வைக்க..

அப்பா இடையில்... துணைவிக்கும்.. மகனுக்கும் இடையில்.. மாட்டிக் கொண்டாலும்.... சாதுரியமா என்னைக் கூப்பிட்டு அணைத்தபடி.. பதில் அளித்தார். அவன் முதலாம் பிள்ளையா வந்திருக்கிறான் தானே.. விளையாடுற வயசில விளையாடத்தானே வேணும். அதுக்காக ஒரே விளையாட்டா இருக்கப்படாது.. லீவு தாறது.. அடுத்த தவணைக்கு தயார்ப்படுத்திறத்துக்கும் தான். ஒவ்வொரு நாளும் காலையும் மாலையும் இரண்டு மணி நேரம் படிக்கனும்.. சரியே..!

ஓம்.. அப்பா... அப்பாவின் கன்னங்களில்.. முத்தம் தந்துவிட்டு.. அவரின் அன்பின் பிணைப்பில் இருந்து வெளிவந்த நான்.. மீண்டும் நாய்க்குட்டியோடு..

அழகான பிறவுண் கலர் நாய்க்குட்டி. வாலின் நுனியிலும்.. கால் பாதங்களிலும்.. கழுத்தின் கீழும் வெள்ளை நிறம். காதின் நுனியில்.. கறுப்பு. எனக்கு ரெம்பவே அதைப் பிடிச்சிருந்தது. அப்பா அப்பா.. இதுக்கு என்ன பெயர் வைக்கலாம்....

நீயே ஒன்றைச் சொல்லன் பார்ப்பம்..

ஜிம்மி....

அது இங்க எல்லா இடமும் வைக்கிற பெயர் தானே. அது வேண்டாம்... வேற...

நீங்களே சொல்லுங்கப்பா...

டைகர்.. என்று வை...!

அப்ப எல்லாம் டைகர் (Tiger) என்று சொல்லுறதே பெருமைக்குரிய விசயமாக இருந்திச்சு. ஏன்னா விடுதலைப்புலிகள் அமைப்பின் கட்டுக்கோப்பும்.. அவங்க மக்களோட பழகிற முறையில் இருந்த டிசிப்பிளினும் தான். நாங்க அங்க இருக்கும் வரை.. கடைசி வரை.. அவங்க அந்தப் பெயரை காத்திருந்தாங்க.. பல அவதூறுகளும்.. திட்டமிட்ட பழிப்புக்களுக்கும்.. பழி சுமத்தல்களுக்கும் மத்தியில..!

என் ரைகரும்.. வளர்ந்து 6 மாதம் இருக்கும்.. வீதியைக் கடக்க முயலேக்க.. ஒரு தனியார் பஸ் அடிச்சு இறந்திட்டுது..! மிகவும் கவலையாக கழிந்தன சில நாட்கள். அடிச்ச அந்த பஸ்ஸைக் காணும் போதெல்லாம்.. எமன் வருகுது என்று தான் அழைப்பேன்.

இறந்து போன டைகரை..எலும்மிச்சைக்க புதைக்கனும் என்று அம்மம்மா சொன்னாங்க.. நான் விடாமல்.. அதுக்கென்று ஞாபகம் வைக்கக் கூடிய ஒரு இடத்தில் புதைக்கச் சொன்னன்..

இறுதில... அப்பா என்ர விருப்பத்திற்கு.. புதைச்சு.. அந்த இடத்தில நாய் உருவம் பொதிச்ச கல்லும் வைச்சவர்.

அப்புறம்.. நாங்க இருந்த வீட்டையும்.... சிங்கள ஆக்கிரமிப்பில.. ஆமிக்காரங்கள்.. தங்கட தற்காலிக மினி முகாமிற்கு பாதுக்காப்பு வேணும் என்று.... 1995 இல் குண்டு வைச்சு தகர்த்திட்டாங்க. அதில சில வீடுகள் காட்டிக் கொடுக்கப்பட்டு தெரிஞ்சு உடைக்கப்பட்டிருந்தன. அப்படி உடைச்ச வீடுகளின் உடைஞ்ச கல்லுகளைக் கூட.. விற்று காசாக்கிட்டாங்க.. ஈபிடிபி ஆட்கள்..! என் ரைகருக்கு வைச்ச கல்லும்.. அதில விற்கப்பட்டிருக்குமோ.. என்னமோ..???! ஆனால் அம்மம்மா வைச்ச எலுமிச்சை மட்டும் இப்பவும்.. ஆக்கிரமிப்புக்கள்.. காட்டிக்கொடுப்புகள்.. குண்டுகள்.. கொள்ளையடிப்புக்களை எல்லாம் தாங்கி நிற்குதாம்..! அது இப்பவும் டைகரை நினைவு கூற வைக்குது..!

(இது ஒரு உண்மையின் தளவாடி விம்பம்..!)

நன்றி: யாழில் நெடுக்காலபோவான்.

 


http://kundumani.blogspot.co.uk/2012/04/tiger.html

 

  • கருத்துக்கள உறவுகள்
இல்ல கிருபன் அண்ணா. ஊரிலும் நாய்களை கவனமாகப் பராமரித்து வளர்ப்போர் பலர் உளர். நீங்கள் அவதானிக்கவில்லைப் போலும்.

 

இதே கலரில் எங்களிடமும் இதே வகை நாய் ஊரில் இருந்தது. அது கடுவன். இப்பவும் அதன் நினைவுகள் கண் முன்னால நிழலாடுகின்றன..! அதனைப் பற்றிய ஒரு பதிவை இங்கும் யாழில் எழுதியும் இருக்கிறேன்.

 

1995 இடம்பெயர்வின் போது.. அதிக மழை.. குளிர் தாங்கேலாமல்.. இறந்து விட்டது. அந்த வேதனை இப்போதும் எனக்குள் இருக்கிறது.  அதற்கு முன்னர் டைகர் என்ற ஒரு சாதாரண நாயும் இருந்தது. அதுவும் எனக்கு மிக விருப்பான ஒன்றாக இருந்தது. அது பற்றியும் எழுதி இருக்கிறேன். அது விபத்தில் இறந்துவிட்டது. :(

 

நானும் ஊரில் நாய்க்குட்டிகள் வளர்த்திருக்கின்றேன். நேரம் கிடைக்கும்போது பதிவாக எழுதக்கூடிய கதையும் இருக்கின்றது.

 

இங்கு போல அதிக நேரம் ஊரில் நாய்க்குட்டிகளோடு செலவழிக்க வேண்டியதில்லை. குளிரோ, மழையோ நாய்க்குட்டிகளை நடக்க அழைத்துப் போகவேண்டும், விளையாட நேரம் ஒதுக்க வேண்டும். அவசர உலகில் இதுக்கெல்லாம் நேரம் இல்லை. இருந்தால் ஒன்றுக்கு இரண்டு வைத்திருப்பேன்!

ஆழ்ந்த அனுதாபங்கள் சகாறா அக்கா. உங்கள் குடும்பத்தினருடன் நானும் துயரில் பங்குகொள்கின்றேன். நான் உங்கள் இல்லத்திற்கு வருகைதந்த ஒவ்வோர் தடவையும் இவரின் சினேகபூர்வமான உபசரிப்பையும், நெகிழ்வுத்தன்மையையும், அவரின் அழகிய கண்களின் பார்வையையும் மறக்கமுடியாது. இவர்களின் ஆயுள் குறுகியது என்னும் பிரதான காரணத்தினாலேயே நான் எமது இல்லத்தில் இணைவதற்கு இன்றுவரை இவர்களில் ஒருவரை பெற்றுக்கொள்வதற்கு முயற்சிக்கவில்லை. நன்கு பழகிவிட்டு இழப்புவரும்போது தாங்கிக்கொள்வது எனக்கு கடினமானது.

  • கருத்துக்கள உறவுகள்

எனது ஆழ்ந்த இரங்கல்கள்..!

 

நாய் வளர்ப்பது நல்லது. ஆனால் பராமரிப்புக்கு கனக்க மினக்கட வேண்டும்.. :unsure:

 

எனது நண்பர் ஒருவரின் வீட்டில் செம்மறி ஆட்டின் அளவில் ஒரு நாய் உள்ளது. 13 வயது. நல்ல அமைதியான நாய்..

  • கருத்துக்கள உறவுகள்

இழப்பின் வலி  இழந்தவர்களுக்குத் தான்புரியும். ஊரில செல்லப் பிராணி என்பர் .

 

.ஆ னால் புலத்தில் அன்பைக் கொட்டி வளர்த்த பிள்ளை.  உங்கள் துயரில் நானும். பங்கு கொள்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா, இளம்பிறையன், நிழலி, உடையார், பையன்26, சயீவன் , கிருபன், நெடுக்காலபோவான், கலைஞன், இசைக்கலைஞன், மற்றும் நிலாமதிஅக்கா அனைவரின் இரங்கல்களுக்கும் நன்றி.யும் கடமையும்கொண்டுள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு உயிரின் இழப்பு   அந்த உயிரை நேசித்தவர்களாலேயெ மிகவும் அதிகமாக  உணரப்படும்

 

அந்தவகையில் உங்கள் கவலையில் நாங்களும் பங்கெடுத்துக் கொள்கின்றோம் சகோதரி   

உங்கள் கவலையில் நானும் பங்கெடுத்துக்கொள்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

என் ஆழ்ந்த அனுதாபங்களும் கண்ணீர் அஞ்சலிகளும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.