Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்று மே 17 இறுதி யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கும் போராளிகளுக்கும் வீரவணக்கம்....

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இன்று மே 17

ஆம் தமிழர் மனங்களில் நிரந்தரமாக பதிவாகிவிட்ட மறக்க முடியாத நாள்......

சிங்கள தேசமும் சர்வதேசமும் இணைந்து தமிழர்களை கொன்றொழித்த நாள்......

துரோகங்களாலும்....காட்டிக்கொடுப்புகளாலும் சூழ்ச்சிகளாலும் தமிழர் தரப்பு தோல்வியை தழுவிய நாள்....

படை நடத்தி பகை வென்று போராடிய தமிழர் தரப்பின் அரணாக இருந்த வன்னி மண் இரத்தத்தில் தோய்ந்த நாள்

தமிழர்களின் செங்குருதி நந்தி கடலில் கலந்த நாள்

ஓவென்று கதறி அழுத தமிழ் இனத்தை உலகம் கைவிட்ட நாள்...

இந்த நாளில் அந்த மக்களுக்காவும் போராளிகளுக்காகவும்....ஒரு கணம் மௌனித்து குனிந்த எம் தலைகள்......

மீண்டும் இலட்சியை பாதையை நோக்கி நிமிர்ந்து செல்கின்றன.....

Edited by SUNDHAL

போராளிகளுக்கு வீர வணக்கங்களும்

 

பொது மக்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களும்.

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

போராளிகளுக்கு வீர வணக்கங்களும்

பொது மக்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களும்.

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் உலகத்தமிழினத்தின் நெருப்பு நாள்

இலங்கைத்தீவில் பன்னெடுகாலமாய் நடைபெறும் தமிழர்மீதான இனவழிப்பின் தொடர்ச்சியாகவும் அதன் உச்சக்கட்டமாகவும் கடந்த, 2009 மே பதினெட்டில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் படுகொலையின் நினைவுநாளை உலகெங்குமுள்ள தமிழினம் நினைவுகூர்கிறது. இதன் மூலம் இலங்கைத்தீவில் வாழும் தமிழர்களும் அங்கிருந்து புலம்பெயர்ந்து உலகமெல்லாம் வாழும் தமிழர்களும் ஒன்றிணைந்து, தமக்கென ஒரு நாடு அமைவதற்கான நியாயத்தை உலகசமுதாயத்தின் மத்தியில் உரக்கக்கூறி நிற்கிறார்கள்.

இலங்கைத்தீவு சுதந்திரமடைந்த நாட்களில் இருந்தே, அத்தீவில் சிறுபான்மையினராகிலும், மூத்தகுடிகளாகிய தமிழினத்தின் மீது பல்வேறுபட்ட அடக்குமுறைகள் மூலம் இனச்சுத்திகரிப்பு இயந்திரத்தை ஏவிவிட்ட சிங்கள இனம், கடந்துசென்ற முள்ளிவாக்கால் அவலம்மூலம், தனது கோரமுகத்தை உலகுக்குக் காட்டியுள்ளது. அதற்கான ஆதாரங்களில் ஒரு குறிப்பிட்டளவிலானவையே வெளிவந்து, உலகின் மனித உரிமையில் கரிசனையுள்ள நிறுவனங்களையும், தனிநபர்களையும் பல்வேறு நாடுகளையும், அதன் தலவர்களையும் அதிர்ச்சிகொள்ளவைத்திருக்கிறது மட்டுமன்றி, அதுக்கான பெறுபேறுகளை சம்பந்தப்பட்ட சிங்களம் பெற்றுக்கொள்ளல் வேண்டுமென்பதில் உறுதியுடனும் உள்ளனர்.

வரலாற்று ரீதியாக பல்வேறுபட்ட அடக்குமுறைகளயும், இனவழிப்பு நடவடிக்கைகளையும் சிங்களம் தமிழர்களுக்கு எதிராகக் காலம், காலமாக சாட்சியங்கள் இல்லாது மேற்கொண்டிருந்தாலும், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கான சர்வதேச நீதியாளர்களைக்கொண்ட ஒரு சுதந்திரமான விசாரனையே, தமிழர்மீது, சிங்களம் மேற்கொண்ட அனைத்து இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகளையும் விசாரணைக்கு முன்கொண்டுவருவதற்கான திறவுகோல் என்பதால், உலகெங்கும் வாழும் தமிழர்கள், சிங்களம்மீது காத்திரமான போர்க்குற்ற விசாரணையினை மேற்கொள்ளுமாறு உலகின் மனிதவுரிமையை மதிக்கும் அனைத்து நாடுகளின் அரசாங்கங்களையும் பொதுநிறுவனங்களையும் வேண்டிநிற்கிறோம்.

நீதிவேண்டிநிற்கும், உலகத்தமிழினத்துடன் கைபற்றிநிற்கும்,

பின்லாந்துவாழ் தமிழ்சமூகம்.

 

 

Edited by Elugnajiru

போராளிகளுக்கு வீர வணக்கங்களும் , பொது மக்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களும்.

 

 

 

எந்தனை சக்திகள் எதிர்த்து நின்றாலும் தமிழீழத் தேசியத் தலைவர் வழியில் நின்று தமிழீழ விடுதலைக்காக உறுதியுடன் போராடுவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

போராளிகளுக்கு வீர வணக்கங்களும்

பொது மக்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களும்.

போராளிகளுக்கு வீர வணக்கங்களும் பொது மக்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களும்.

  • கருத்துக்கள உறவுகள்

கனத்த மனத்துடன் போராளிகளுக்கு வீர வணக்கம் பொது மக்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.....

  • கருத்துக்கள உறவுகள்

 

animated_candle.gif

 

சர்வதேசம் பார்த்துக் கொண்டிருக்க, ஐ.நா. நித்திரை கொள்ள....
சிங்கள அரசால் கொல்லப்பட்ட பொதுமக்களுக்கும், போராளிகளுக்கும் வீரவணக்கங்களும்.... கண்ணீர் அஞ்சலிகளும்.
 

  • கருத்துக்கள உறவுகள்

வீழ்ந்து விதைகளான போராளிகளுக்கு வீரவணக்கங்கள்..! பறிக்கப்பட்ட ஆன்மாக்கள் அமைதி பெறட்டும்..! உறவினர், நண்பர்களை இழந்தோர்க்கு ஆழ்ந்த இரங்கல்கள்..!

 

நான்கு வருடங்கள் கடந்த நிலையில், சர்வதேசம் என்கிற போர்வையில், தற்கொலைதாரிகள், சிறுவர் போராளிகள் என்றெல்லாம் பேசி அன்று நடித்து வந்தவர்களை இன்று காணக்கிடைக்கவில்லை.. பொறுப்புக் கூற வேண்டியவர்கள் இவர்களும்தான்.. ஆனால் தமக்கு ஏதும் சம்பந்தமில்லாததுபோல் நடித்துக் கொண்டுள்ளார்கள்.

Edited by இசைக்கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

போராளிகளுக்கு வீர வணக்கங்களும்

 

பொது மக்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களும்.

 

  • கருத்துக்கள உறவுகள்

போராளிகளுக்கும் மக்களுக்கும் வீரவணக்கங்கள். வெள்ளை கொடியுடன் சரணடைந்த மக்களும் போராளிகளும் என்னை மன்னியுங்கள்.புலிகளை பயங்கரவாதிகளாக்கிய உலகை பார்த்து புளகாங்கிதம் அடைந்தவர்கள் இந்த 4 வருடத்தில் தமிழ் மக்களுக்கு தந்த தீர்வு தான் என்ன?? எங்கே உங்களின் நடுநிலை? உலகின் நடுநிலை?

 

  • கருத்துக்கள உறவுகள்
எனக்காக,எமக்காக,எங்கள் மண் எமக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக போராடி உயிர் நீத்த அனைத்து மாவீர‌ர்களுக்கும்,பொது மக்களுக்கும் அஞ்சலி செலுத்த கூட‌ தகுதியில்லாத ர‌தியின் வீர‌ வணக்கங்களும்,கண்ணீர் அஞ்ச‌லிகளும்
 

 

அனைவர‌தும் ஆத்மாவும் சாந்தியடையட்டும்

கண்ணீரஞ்சலிகள் கரிகாலன் வழிசென்ர காவியநாயகர்களுக்கு

  • கருத்துக்கள உறவுகள்

நான்கு வருடங்கள் ஆகியும் எங்கள் தேடல்கள் ஓயாமல் இருக்கிறது. ஆற்றுப்படுத்தமுடியாத வலி சூழ்ந்து உணர்வுகளில் கலந்து விழிகளைக் கசிய வைக்கிறது. என் இனத்து முகம் தெரிந்த, தெரியாத உறவுகளே இழப்பின் வதைகளில் நின்று எம்மை விட்டுச் சென்ற அனைத்து உறவுகளுக்குமாக ஆன்மா உருக உங்கள் ஆத்ம சாந்திக்காக பிரார்த்தனை செய்கிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

மரணித்த மாவீரர்களுக்கு வீர வணக்கங்களும், பலி கொள்ளப்பட்ட தமிழ் உறவுகளுக்கு, நினைவு நாள் வணக்கங்களும்!

  • கருத்துக்கள உறவுகள்

உலகம் வலிந்து.. விழி மூடிக் கொண்டதால்.. சிங்கள இனப்படுகொலையின் அரக்கத்தனத்திற்கு.. தம் உயிர் விடுத்து விழி மூடிக் கொண்ட அன்பார்ந்த எம் தமிழ் சொந்தங்களுக்கு.. வீரவணக்கம்..!

  • கருத்துக்கள உறவுகள்

இந்த உலகத்தினால் மனச்சாட்சியின்றி கொல்லப்பட்ட அனைத்து தமிழ் உறவுகளுக்கும் வீரவணக்கங்கள்.காலச் சக்கரம் எப்போழுதும் ஒரே மாதிரியாகச் சுழலாது. மாற்றம் என்பதில் மாற்றம் இல்லை.எங்களுக்கும் ஒருநாள் வரும். அந்த நாளை நோக்கி எமது பயணம் அமையட்டும். ஒருநாள் இந்த உலகம் தனது செய்கைகளுக்காக தமிழித்தினத்திடம் மன்னிப்பக் கேட்க வேண்டி வரும். அந்த நேரத்தில் எங்கள் பெருந்தன்மையை அவர்களுக்குக் காட்டுவோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எம்மை விட்டுச்சென்ற எல்லா ஆன்மாக்களின் சாந்திக்காக எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டி நிற்கின்றோம்.

போராளிகளுக்கு வீர வணக்கங்களும்

பொது மக்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களும்.

 

உயிரினும் மேலான தாய்நாடு - இன்று

உடலங்கள் எரிகின்ற பேய்வீடு

பயமின்றி நாம் வாழ்ந்த சிறுகூடு-இன்று

பாதகரால் சிதைந்த மண்மேடு

-புதுரை இரத்தினதுரை

 

மரணித்த அனைத்து மாவீரர்களுக்கும் மக்களுக்கும் வீர வணக்கம்

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

மரணித்த அனைத்து மாவீரர்களுக்கும் மக்களுக்கும் வீர வணக்கம்

 

இறுதி யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கும் போராளிகளுக்கும் வீரவணக்கம்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.