Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இதற்குப் பெயர் பக்தியா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

67893616_502485330506305_618697783673828

  • Replies 186
  • Views 17.8k
  • Created
  • Last Reply

வளர்ந்த மேலைத்தேய நாடுகள் உட்பட உலகத்தின் பெரும்பான்மையான நாடுகளில் பெற்றோர்கள் தான் பிள்ளைகள் ( 16 இல்லை 18 வயது வரை) விடயத்தில் முடிவு எடுக்கும் உரிமை கொண்டவர்கள். அந்தந்த நாடுகளின் சட்டத்தை மீறினால் மட்டுமே அரச சட்டங்கள் நடவடிக்கை எடுக்கலாம். 

பெற்றோரை செருப்பால் அடித்தால், அடித்தவர் மீது அநேகமான நாடுகளில் சட்டம் பாயலாம். 

எங்களுக்கு (இந்த படத்தில் உள்ள) பெற்றோர்கள் செய்வது பிழையாக தெரிந்தால், அது பற்றி உள்ளூர் சட்ட ஒழுங்கை கவனிக்கும் துறைசார் வல்லுநர்களுக்கு தெரிவிப்பதே சமூக சாராளம்.     

ஆனால் இப்போதய காலத்திலும் இப்படிப்பட்ட பக்தி  எற்ற பெயரில் நடத்தப்படும் அநாகரீக செயல்களுக்கு வக்காலத்து வாங்குபவர்கள் உள்ளார்கள் என்பது கவலைக்குரிய விடயம். 

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, வல்வை சகாறா said:

67893616_502485330506305_618697783673828

ஏன் ஜேசுவையோ சிலுவையையோ அடிக்க வேண்டும் என்று யாரும் சொல்வதில்லை?
எப்போ பார்த்தாலும் உங்கள் எல்லோருக்கும் 
எங்கள் தேசிக்கயும்  குத்த்து ஊசிகளும்தான் கண்ணுக்கு தெரிகிறதா? 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப்  படத்தில் உள்ளவர்கள்... பெண் குழந்தைகள் போல் உள்ளது?
பெண்.... சிசுக் கொலையை விட, பக்தி அவ்வளவு மோசமாக போய் விடவில்லை.

பிறந்த பெண் குழந்ததைக்கு...  கள்ளிப்  பால் ஊற்றி,
கொலை செய்வது... தமிழ் நாட்டில், சென்ற பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை, 
பரவலாக... இருந்ததை நான் அறிவேன்.

இப்போதும்...   அரசல், புரசலாக... கிராமப் பகுதிகளில்  நடக்கின்றது  என்ற செய்திகளும் வருகின்றது.

இந்தச்  செயலை செய்த... பெற்றோர்  தண்டனைக்கு உரியவர்கள் என்பதில், மாற்றுக் கருத்து இல்லை. 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 8/10/2019 at 2:50 PM, வல்வை சகாறா said:

67893616_502485330506305_618697783673828

இப்படியான சிறுபிள்ளை வழிபாடுகள் தேவையற்றவை.கண்டிக்கப்பட வேண்டியவை.

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு தவறான செயல் ,ஒரு தவறான உணர்வு (False consciences ).
ஒரு வழியில் குழந்தைகளை கொடுமை படுத்தும் செயல் .சட்ட ரீதியாக இப்படியான செயல்கள் தடை செய்யப்பட வேண்டும் .குழந்தைகள் பய உணர்வினால் உளவியல் ரீதியாக பாதிப்படையலாம் .பல insitution போலவே சமயமும் ஒரு சமூகத்தின் அங்கம் தான் ஆனால் இப்படியான மூட நம்பிக்கைகள் களையப்பட வெண்டும் .

  • கருத்துக்கள உறவுகள்
On 8/10/2019 at 2:50 PM, வல்வை சகாறா said:

67893616_502485330506305_618697783673828

கண்டஇடத்தில்  பழைய செருப்பால்  அடியுங்கள்

நானும்  வருகின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்

பெற்றவர்களின் நேர்த்திக்கு பலியாவது .. பிள்ளைகள் .

.அவர்களது அழுகையும்   வேதனையும் சகிக்க  முடியவில்லை 

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்
On 8/10/2019 at 6:20 PM, வல்வை சகாறா said:

67893616_502485330506305_618697783673828

வேறு எந்த மதத்திலும் மூட நம்பிக்கை இல்லையா  என நான் கேட்கிறேன் உங்களிடம் ?

ஒரு பாதருக்கு சபையில் இணைக்கப்படும் சகோதரிகள் , சகோதரர்கள் அவர்களிடம் கேட்டா அவர்களை அந்த பெற்றோர்கள் சபைகளில் இணைத்து விடுகிறார்கள் இல்லையே அந்த பிள்ளைகளின் விருப்பங்களை கேட்டறிந்துதானே சபையிடம் கொடுக்க வேண்டும் 

அடுத்த பிக்குகளாக கொடுக்கப்படும் ஆண்கள் வாழ்க்கையில்  சகலத்தையும் துறந்து செல்கிறார்கள் சிலர் துறக்க முடியாமல் தவிக்கிறார்கள் இதையெல்லாம் நீங்கள் ஆராய்ச்சி பண்ணணும் 

மார்க்கம் என்று சொல்கிறவர்களால் பிறந்து சில நாட்களே ஆன குழந்தைக்கு சின்னத்து வைக்கிறார்கள் மதத்தில் வந்தது என்று சொல்லி இப்படி நிறைய இருக்கு எல்லா மதங்களிலும் இதையெல்லாம் ஆராய வேண்டும் மற்ற தங்கள் மதம் அல்லாதவரை காபீர்கள் என்றும் அவர்களை கொல்ல வேண்டும் என்று சொல்கின்றவர்களையெல்லாம் என்ன செய்யலாம்  

அது போக இலங்கையில் மதத்தின் பெயரால் உயிர்த்த ஞாயிறில் கொல்லப்பட்ட சிறுவர்களுக்கு என்ன சொல்லலாம் இவர்களாவது நேர்த்தி முடிந்த பிறகு கழட்டி விடுவார்கள் கொல்லப்பட்ட அந்த குழந்தைக்களுக்கு என்ன செய்யலாம் 

எப்ப பாரு காவடி எடுக்கிறதும் அலகு குத்துவதிலையும் குற்றம் கண்டு பிடிப்பது அப்படி பார்த்தால் குழந்தைகளுக்கு காது குத்துவது கூட குற்றம் தான்  பெண் குழந்தைகளுக்கு 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, uthayakumar said:

இது ஒரு தவறான செயல் ,ஒரு தவறான உணர்வு (False consciences ).
ஒரு வழியில் குழந்தைகளை கொடுமை படுத்தும் செயல் .சட்ட ரீதியாக இப்படியான செயல்கள் தடை செய்யப்பட வேண்டும் .குழந்தைகள் பய உணர்வினால் உளவியல் ரீதியாக பாதிப்படையலாம் .பல insitution போலவே சமயமும் ஒரு சமூகத்தின் அங்கம் தான் ஆனால் இப்படியான மூட நம்பிக்கைகள் களையப்பட வெண்டும் .

அங்கபிரதட்சணம் செய்வது சைவ வழிபாட்டு முறையில் ஒன்று.அதையெல்லாம் மூட நம்பிக்கை என்று கருதமுடியாது.

Bildergebnis für à®à®à¯à®à®ªà®¿à®°à®¤à®à¯à®à®£à®®à¯

1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

வேறு எந்த மதத்திலும் மூட நம்பிக்கை இல்லையா  என நான் கேட்கிறேன் உங்களிடம் ?

இந்த கேள்வி அடிக்கடி கேட்கப்படுகிறது. இதன் அர்ததம்  என்னவென்றால் அடுத்தவன்  பைத்தியகாரனாக இருக்கினான் தானே நான் அவனை விட கொஞ்சம் அதிகமாக பைத்தியக் காரனாக இருந்தால்  இருந்தால் என்ன என்பதே.  

தாங்கள் வாழ்வது மனிதர்கள்  civilization ஆகிய காலகட்டத்தில் என்பதை மறக்க வேண்டாம்.  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

வேறு எந்த மதத்திலும் மூட நம்பிக்கை இல்லையா  என நான் கேட்கிறேன் உங்களிடம் ?

ஒரு பாதருக்கு சபையில் இணைக்கப்படும் சகோதரிகள் , சகோதரர்கள் அவர்களிடம் கேட்டா அவர்களை அந்த பெற்றோர்கள் சபைகளில் இணைத்து விடுகிறார்கள் இல்லையே அந்த பிள்ளைகளின் விருப்பங்களை கேட்டறிந்துதானே சபையிடம் கொடுக்க வேண்டும் 

அடுத்த பிக்குகளாக கொடுக்கப்படும் ஆண்கள் வாழ்க்கையில்  சகலத்தையும் துறந்து செல்கிறார்கள் சிலர் துறக்க முடியாமல் தவிக்கிறார்கள் இதையெல்லாம் நீங்கள் ஆராய்ச்சி பண்ணணும் 

மார்க்கம் என்று சொல்கிறவர்களால் பிறந்து சில நாட்களே ஆன குழந்தைக்கு சின்னத்து வைக்கிறார்கள் மதத்தில் வந்தது என்று சொல்லி இப்படி நிறைய இருக்கு எல்லா மதங்களிலும் இதையெல்லாம் ஆராய வேண்டும் மற்ற தங்கள் மதம் அல்லாதவரை காபீர்கள் என்றும் அவர்களை கொல்ல வேண்டும் என்று சொல்கின்றவர்களையெல்லாம் என்ன செய்யலாம்  

அது போக இலங்கையில் மதத்தின் பெயரால் உயிர்த்த ஞாயிறில் கொல்லப்பட்ட சிறுவர்களுக்கு என்ன சொல்லலாம் இவர்களாவது நேர்த்தி முடிந்த பிறகு கழட்டி விடுவார்கள் கொல்லப்பட்ட அந்த குழந்தைக்களுக்கு என்ன செய்யலாம் 

எப்ப பாரு காவடி எடுக்கிறதும் அலகு குத்துவதிலையும் குற்றம் கண்டு பிடிப்பது அப்படி பார்த்தால் குழந்தைகளுக்கு காது குத்துவது கூட குற்றம் தான்  பெண் குழந்தைகளுக்கு 

இப்படி எந்த சபைக்கு சிறு பிள்ளைகள் பெற்றோரால் வழங்கபடுவதாகக் கண்டீர்கள்? பிரம்மச்சரியம் பேணவேண்டிய கத்தோலிக்க மதத்திலேயே உயர்தரம் முடித்த பிரகு தான் எடுக்கிறார்கள் உள்ளே. இது எங்கே நடக்கிறது?

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
30 minutes ago, Justin said:

இப்படி எந்த சபைக்கு சிறு பிள்ளைகள் பெற்றோரால் வழங்கபடுவதாகக் கண்டீர்கள்? பிரம்மச்சரியம் பேணவேண்டிய கத்தோலிக்க மதத்திலேயே உயர்தரம் முடித்த பிரகு தான் எடுக்கிறார்கள் உள்ளே. இது எங்கே நடக்கிறது?

 

தனிக்காட்டு ராஜா இன்னும் இரு விடயங்களை குறிப்பிட்டு இருக்கின்றாரே? அதற்கு ஏன் நீங்கள் பதிலளிக்கவில்லை? ஏன் இந்த ஓரவஞ்சகம்?

இந்த திரியை தாமதமாகவே எமது கண்களில் பட்டுள்ளது.

எல்லாவற்றுக்கும் மேலாக இவ்வாறு இரு சிறு பிள்ளைகளின் படங்களை ஒரு சிறு உருவ மறைப்பும் இல்லாமல் பகிரங்கமாக பிரசுரித்தது சரியான செயலாக எனக்கு தெரியவில்லை. அவர்களின்  தனியுரிமையை (privacy சியை) மீறிய படங்களாகவே எனக்கு தெரிகின்றது. அவர்கள் மீதான bullying இற்கும் இவை துணை போகக் கூடிய சந்தர்ப்பங்களும் உள்ளன.

 

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

தனிக்காட்டு ராஜா இன்னும் இரு விடயங்களை குறிப்பிட்டு இருக்கின்றாரே? அதற்கு ஏன் நீங்கள் பதிலளிக்கவில்லை? ஏன் இந்த ஓரவஞ்சகம்?

பிக்குகள் சிறுவர்களாக சேர்க்கப் படுவதும், குழந்தைகள் சுன்னத் செய்யப்படுவதும் நடப்பவை, அதனால் கேட்க வேண்டிய தேவை இல்லை! கிறிஸ்தவ சபைகள் எதிலும் பிள்ளைகளை கொண்டு போய் சிறுவயதிலேயே பாதிரியாக விடுவதில்லை என்பது கிறிஸ்தவ மதத்தை அறிந்தோருக்குத் தெரியும். உங்களுக்கோ தனிக்கோ தெரியாது என்று எங்களுக்குத் தெரியும்!  ஒருவர் ஒன்றை விமர்சிக்க முதல் அது உண்மையா என்று உறுதி செய்ய வேண்டும்!  இது போன்ற என்ன மதம் எந்த ஆலயம் என்றே தெரியாமல் நீங்களும் கடந்த காலங்களில் சில விடயங்களைச் சொல்லி நான் விபரம் கேட்ட பின்னர் பேசாமல் இருந்து விட்டீர்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
40 minutes ago, Justin said:

பிக்குகள் சிறுவர்களாக சேர்க்கப் படுவதும், குழந்தைகள் சுன்னத் செய்யப்படுவதும் நடப்பவை, அதனால் கேட்க வேண்டிய தேவை இல்லை! கிறிஸ்தவ சபைகள் எதிலும் பிள்ளைகளை கொண்டு போய் சிறுவயதிலேயே பாதிரியாக விடுவதில்லை என்பது கிறிஸ்தவ மதத்தை அறிந்தோருக்குத் தெரியும். உங்களுக்கோ தனிக்கோ தெரியாது என்று எங்களுக்குத் தெரியும்!  ஒருவர் ஒன்றை விமர்சிக்க முதல் அது உண்மையா என்று உறுதி செய்ய வேண்டும்!  இது போன்ற என்ன மதம் எந்த ஆலயம் என்றே தெரியாமல் நீங்களும் கடந்த காலங்களில் சில விடயங்களைச் சொல்லி நான் விபரம் கேட்ட பின்னர் பேசாமல் இருந்து விட்டீர்கள்.

ஓ....அதுவா? தனிப்பட்ட நபர் விடயம் என்பதான் நான் அதை தொடர விரும்பவில்லை.அதுதான் முக்கிய காரணம்.
கிறிஸ்தவ மதகுருவும் கன்னியாஸ்திரிகளும் திருமணம் செய்யாமல் இருப்பதற்கு காரணம் ஏதும் இருக்கின்றதா? உண்மையாகவே தெரியாதபடியால் கேட்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கும் பக்திக்கும் இந்தத் தொடர்பும் இல்லை
இதுவும் குழந்தைகள் மீதான ஒரு வன்முறைதான் .
விபரம் தெரிந்து அவர்களால் செய்யும் ஒரு விடையத்தில் காரண காரியமும் அதன் பலனும் அதனால் ஏற்படும் பாதிப்புக்கள் தாக்கங்கள் என பலதையும் உணர்ந்து செய்வது வேறு.

இது வேறு

 

2 hours ago, Justin said:

இப்படி எந்த சபைக்கு சிறு பிள்ளைகள் பெற்றோரால் வழங்கபடுவதாகக் கண்டீர்கள்? பிரம்மச்சரியம் பேணவேண்டிய கத்தோலிக்க மதத்திலேயே உயர்தரம் முடித்த பிரகு தான் எடுக்கிறார்கள் உள்ளே. இது எங்கே நடக்கிறது? 

 

என்னது மதகுருவாக வருவதற்கு வயது எல்லை உள்ளதா ? உயர்தரம் படித்த பின்னரே .....அதுவும் 18   வயதிற்கு மேலே .....
அது எங்கே எழுதப்பட்டுள்ளது என்று உங்களால் காட்ட முடியுமா ?

4 hours ago, குமாரசாமி said:

அங்கபிரதட்சணம் செய்வது சைவ வழிபாட்டு முறையில் ஒன்று.அதையெல்லாம் மூட நம்பிக்கை என்று கருதமுடியாது.

Bildergebnis für à®à®à¯à®à®ªà®¿à®°à®¤à®à¯à®à®£à®®à¯

ஏன் என்று விளக்க முடியுமா ? :grin:

3 hours ago, Justin said:

கிறிஸ்தவ சபைகள் எதிலும் பிள்ளைகளை கொண்டு போய் சிறுவயதிலேயே பாதிரியாக விடுவதில்லை என்பது கிறிஸ்தவ மதத்தை அறிந்தோருக்குத் தெரியும். 

இதற்கும் பெயர் பக்தி தானா, ஜஸ்ரின்??? இவ்வாறான செய்திகள் உங்கள் கண்ணின் தென்படுவதில்லை என நினைக்கிறேன். ➡️

George Pell's conviction of child sex crimes sparks 'unprecedented' crisis for Vatican

https://www.google.com/amp/amp.abc.net.au/article/10846434

உங்களுக்காக மேலும் சில செய்திகள்:

He Says a Priest Abused Him. 50 Years Later, He Can Now Sue:

https://www.google.com/amp/s/www.nytimes.com/2019/08/13/nyregion/child-victims-act-lawsuit.amp.html

Roman Catholic Church Sex Abuse Cases:

https://www.nytimes.com/topic/organization/roman-catholic-church-sex-abuse-cases

முதலில் உங்கள் நாட்டில், மதத்தில் உள்ள அழுக்குகளைக் கழுவி விட்டு வாருங்கள். எங்கள் மதத்தை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். வெளயாரின் அநாவசிய தலையீடு தேவையில்லை. 

 

Edited by மல்லிகை வாசம்

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, tulpen said:

இந்த கேள்வி அடிக்கடி கேட்கப்படுகிறது. இதன் அர்ததம்  என்னவென்றால் அடுத்தவன்  பைத்தியகாரனாக இருக்கினான் தானே நான் அவனை விட கொஞ்சம் அதிகமாக பைத்தியக் காரனாக இருந்தால்  இருந்தால் என்ன என்பதே.  

தாங்கள் வாழ்வது மனிதர்கள்  civilization ஆகிய காலகட்டத்தில் என்பதை மறக்க வேண்டாம்.  

ஒட்டு மொத்த உலகத்திலும் மக்கள் அறிவாளிகளாக இருந்தால் இவ்வுலகம் எங்கயோ சென்றிருக்கும் ஆனால் முட்டாள்கள் எல்லா மதங்களிலும் இருக்கிறார்கள் தானே.

எந்தக்காலமாக இருந்தாலும் மனிதர்களைக் கொல்லும் முட்டாள்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்  அதற்கு தாங்களின் பதில் என்ன அவர்கள் மட்டும் எந்தக்காலத்தில் வாழ்ந்து வருகிறார்கள்

 

5 hours ago, Justin said:

 பிரம்மச்சரியம் பேணவேண்டிய கத்தோலிக்க மதத்திலேயே உயர்தரம் முடித்த பிரகு தான் எடுக்கிறார்கள் உள்ளே. இது எங்கே நடக்கிறது?

 

இதுக்குள்ள பிறகு 'பிரம்மச்சரியம்' என்ற புழுகுமூட்டை வேறு! உங்கள் ஊரில் இதையெல்லாம் வைத்துக்கொள்ளுங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Justin said:

இப்படி எந்த சபைக்கு சிறு பிள்ளைகள் பெற்றோரால் வழங்கபடுவதாகக் கண்டீர்கள்? பிரம்மச்சரியம் பேணவேண்டிய கத்தோலிக்க மதத்திலேயே உயர்தரம் முடித்த பிரகு தான் எடுக்கிறார்கள் உள்ளே. இது எங்கே நடக்கிறது?

 

ஹாஹா என்ன இன்னும் சின்ன பிள்ளைகளாக  அவர்களை உயர்தரம் படிப்பிப்பது சொந்த செலவில் (சபை) அதுக்காகத்தானே ஒருவர் விலகி வந்தார் பெயர் வேண்டுமானாலும் சொல்லலாம் ஆனால் தவிர்க்கிறேன் காரணம் குடும்ப சூழ்நிலை என்று சொன்னார் தன் குடும்ப வறுமையால் தன்னை சபையிடம் கொடுத்ததாகவும் ஆனால்  அதைகடைப்பிடிக்க முடியவில்லையெனவும் கூறினார் ஆக ஒரு குழந்தையின் விருப்பத்துக்கு மாறாக பெற்றோர்கள் செயற்பட்டு இருக்கிறார்கள் அப்படி பார்த்தால் அங்கே பெற்றோர்கள் தான் குற்றவாளிகள்

5 hours ago, குமாரசாமி said:

தனிக்காட்டு ராஜா இன்னும் இரு விடயங்களை குறிப்பிட்டு இருக்கின்றாரே? அதற்கு ஏன் நீங்கள் பதிலளிக்கவில்லை? ஏன் இந்த ஓரவஞ்சகம்?

சொல்லமாட்டார்களே

  • கருத்துக்கள உறவுகள்

குறிப்பு எனக்கு கிறிஸ்த்தவ மக்கள் மீதோ முஸ்லீம்கள் மீதோ எந்த கோபமும் இல்லை 

ஆனால் இந்த உலகை திருத்தும் வெள்ளைவான் கும்பல்கள் ஏன் பிற மதங்களை ஆராயக்கூடாது அவர்களுக்கும் இது மூட நம்பிக்கை முட்டாள் தனமானது என கூற முடியவதில்லை இதற்கு பதில் சொல்லுங்கோ உடனே வந்து உன்னை திருத்து உலகம் திருந்தும் என்று சொல்லக்கூடாது 

உலகம் என்பது உருண்டை என்று சொன்னால் ஏற்றுக்கொள்ளக்கூடிய சமுதாயம் இப்ப வரைக்கும் இருக்கு 

எங்கயோ வாசித்த ஞாபகம் ஒன்று உலகம் சுத்துவதாக இருந்தால் விமானம் ஏன் பல மணிநேரம் பறக்க வேண்டும்  ? இப்படி கேள்வி கேட்ட ஆட்களும் உண்டு 

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா நாட்டிலும் சண்டை நடக்கிறது 
எல்லா சன்டை நடந்த நாட்டிலும் வறுமையில் மக்கள் வாடுகிறார்கள் 
பசி பட்டினி எல்லா நாட்டிலும் உண்டு 

ஏன் இங்கு ஈழத்தை பற்றியும் தமிழ் அரசியல்வாதிகள் பற்றியும் பேசுகிறார்கள்?
ஈழத்தில் மட்டும்தான் மக்கள் வீடு இன்றி இருக்கிறார்களா? 

ஒண்ணுமே புரியுதில்லையே?
எங்கிருந்து வந்தான் .... எங்கு போனான் என்னு ஒன்னும் புரியல 
இழவுவீடு மாதிரி இருக்கு. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.