Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோயில் மடப்பள்ளிக்குள் வைத்து சிறுமியை சீரழித்த பூசகர்: வல்வெட்டித்துறையில் அதிர்ச்சி சம்பவம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாடசாலை மாணவி ஒருவருக்கு கைத்தொலைபேசி, இனிப்புக்கள் வாங்கி கொடுத்து, அவரை மயக்கி கோயில் மடப்பள்ளியில் வைத்து தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்ததாக குற்றம்சாட்டப்பட்டு ஆலய பூசகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த அதிர்ச்சி சம்பவம் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் நடந்தது.

தந்தையற்ற தரம் 4ல் கல்வி கற்கும் மாணவியே சீரழிக்கப்பட்டுள்ளார். மாணவி பாடசாலைக்கு கைத்தொலைபேசி கொண்டு சென்றபோது, அவருக்கு எவ்வாறு கைத்தொலைபேசி கிடைத்தது என சந்தேகமடைந்த பாடசாலை ஆசிரியர்கள் விசாரணை செய்ததில் விடயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாடசாலை நிர்வாகம் உடனடியாக சம்பவத்தை பருத்தித்துறை பிரதேச செயலக சிறுவர் பிரிவுக்கு அறிவித்துள்ளனர்.

பருத்தித்துறை பிரதேச செயலக சிறுவர் பிரிவு அதிகாரிகள் மேலதிக புலன் விசாரணை மேற்கொண்டதையடுத்து வல்வெட்டித்துறை பொலிஸில் முறைப்பாடு செய்தனர். மாணவியிடம் கைப்பற்றிய தொலைபேசியை சான்று பொருளாக ஒப்படைக்கப்பட்டது.

சிறுமியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அம்மன் கோவில் பூசகர் அந்த தொலைபேசியை தந்ததாக குறிப்பிட்டார். அத்துடன், பூசகர் காசு மற்றும் உணவு பொருட்களை கொடுத்து சிறுமியை நயவஞ்சகமாக கோயில் மடப்பள்ளிக்குள் அழைத்து தொடர்ச்சியாக பல மாதங்கள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக குற்றம்சுமத்தப்படுகிறது.

பொலிஸார் மேற்கொண்ட மேலதிக விசாரணையில் மாணவியின் சித்தப்பாவும் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததை கண்டறிந்து உள்ளனர். பூசகரால் துஷ்பிரயோகம் செய்யப்படுவதற்கு அவரும் உடந்தையாக இருந்ததாக குறிப்பிடப்படுகிறது

பூசகர் மற்றும் சித்தப்பா ஆகிய இருவரையும் சிறுமிக்கு தொடர்ச்சியாக பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக கைது செய்து நேற்று முன்தினம் (28) பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர். சந்தேக நபர்கள் இருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கவும், சிறுமியை மருத்துவ பரிசோதனை செய்யவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

http://www.pagetamil.com/90758/?fbclid=IwAR2XJlVr5wEQok0hjUsHNLj3_np0DY5S3dZLsjqFW1sJ4a4QFfGL2EvA5P4

  • கருத்துக்கள உறவுகள்

சிறையில் இருக்கும் இவர்களை உள்ளிருக்கும் கைதிகள் நன்றாக கவனிப்பார்கள் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன் சிறைக்காவலர்களை விட கைதிகள் உள்ள வச்சி நல்லா செய்வார்கள் 

காசால் வெளியில் கூட்டி வர வக்கீல்கள் இருக்கும் வரைக்க்கும் சம்பவங்கள் தொடரத்தான் செய்யும்  இந்தியாவில் ஓர் வைத்திய பெண்ணை கூட்டு பாலியல் செய்து எரித்து கொன்றிருக்கிறார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பிழம்பு said:

பூசகர் மற்றும் சித்தப்பா ஆகிய இருவரையும் சிறுமிக்கு தொடர்ச்சியாக பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக கைது செய்து நேற்று முன்தினம் (28) பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர். சந்தேக நபர்கள் இருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கவும், சிறுமியை மருத்துவ பரிசோதனை செய்யவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இலங்கை அரசு போட்ட விதைகள் இப்போ தமிழர்களிடத்தில் நல்ல விளைச்சலைப் பெறுகிறது.

1 hour ago, ஈழப்பிரியன் said:

இலங்கை அரசு போட்ட விதைகள் இப்போ தமிழர்களிடத்தில் நல்ல விளைச்சலைப் பெறுகிறது.

எவ்வளவு காலத்திற்கு எம் சமூகத்தில் நிகழும் இத்தகைய பிறழ்வான செயல்களுக்கு இலங்கை அரசை மட்டும் குற்றம்சாட்டிக் கொண்டு இருக்க போறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, நிழலி said:

எவ்வளவு காலத்திற்கு எம் சமூகத்தில் நிகழும் இத்தகைய பிறழ்வான செயல்களுக்கு இலங்கை அரசை மட்டும் குற்றம்சாட்டிக் கொண்டு இருக்க போறீர்கள்?

நிழலி இது நல்லதொரு கேள்வி.

ஆனாலும் விடை தெரியவில்லை.வெகுவிரைவில் விடை கிடைக்காது என்பது மட்டும் தெரிகிறது.

தலைவர் பிரபாகரன் மாதிரியான ஒரு தலைவனைத் தேடுகிறேன்.அதுக்காக ஆயுதப் போராட்டம் என்றில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

 

1952இல் பராசக்தி திரைப்படத்துக்கு கலைஞர் எழுதிய வரிகள் இவை

“பணம் பறிக்கும் கொள்ளைக் கூட்டத்தை வளரவிட்டது யார் குற்றம் ? பஞ்சத்தின் குற்றமா ? அல்லது பஞ்சத்தை மஞ்சத்திற்கு வரவழைக்கும் வஞ்சகர்களின் குற்றமா ? கடவுள் பெயரால் காம லீலைகள் நடத்தும் போலிப் பூசாரிகளை நாட்டிலே நடமாட விட்டது யார் குற்றம் ? கடவுளின் குற்றமா ? அல்லது கடவுளின் பெயரைச் சொல்லி காலட்சேபம் நடத்தும் கயவர்களின் குற்றமா ?”

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பிழம்பு said:

பாடசாலை மாணவி ஒருவருக்கு கைத்தொலைபேசி, இனிப்புக்கள் வாங்கி கொடுத்து, அவரை மயக்கி கோயில் மடப்பள்ளியில் வைத்து தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்ததாக குற்றம்சாட்டப்பட்டு ஆலய பூசகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த அதிர்ச்சி சம்பவம் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் நடந்தது.

 

2 hours ago, ஈழப்பிரியன் said:

இலங்கை அரசு போட்ட விதைகள் இப்போ தமிழர்களிடத்தில் நல்ல விளைச்சலைப் பெறுகிறது.

 

3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இந்தியாவில் ஓர் வைத்திய பெண்ணை கூட்டு பாலியல் செய்து எரித்து கொன்றிருக்கிறார்கள் 

இதுவும் இலங்கை அரசு போட்ட விதைகளோ?

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இந்தியாவில் ஓர் வைத்திய பெண்ணை கூட்டு பாலியல் செய்து எரித்து கொன்றிருக்கிறார்கள் 

3 hours ago, ஈழப்பிரியன் said:

இலங்கை அரசு போட்ட விதைகள் இப்போ தமிழர்களிடத்தில் நல்ல விளைச்சலைப் பெறுகிறது.

1 hour ago, விளங்க நினைப்பவன் said:

இதுவும் இலங்கை அரசு போட்ட விதைகளோ?

இதென்ன நீங்கள் இப்படி கேட்கிறீர்கள்? இப்படி எவ்வளவு வன்கொடுமைகளை இலங்கை அரசு செய்திருக்கிறது? அவற்றை செய்திகளில் படித்த இந்தியர்கள், தாமும் இப்படியான வன்கொடுமைகளை செய்யும் போது, “இலங்கை அரசு போட்ட விதைகள்” என்று சொல்வது பொருத்தமானது, இல்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

6-ACBF4-D6-F1-C9-46-D2-93-F1-F30-A21-D19

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 11/30/2019 at 6:38 PM, பிழம்பு said:

பாடசாலை மாணவி ஒருவருக்கு கைத்தொலைபேசி, இனிப்புக்கள் வாங்கி கொடுத்து, அவரை மயக்கி கோயில் மடப்பள்ளியில் வைத்து தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்ததாக குற்றம்சாட்டப்பட்டு ஆலய பூசகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த அதிர்ச்சி சம்பவம் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் நடந்தது.

ஒரு காலத்தில் அதிலும் இயக்கங்கள் ஆரம்பிக்க முதல் வல்வெட்டித்துறை பகுதியில் இப்படியான சம்பவம் நடக்க வாய்ப்பே இல்லை. ஏனெனில்  ஒரு பெண்ணை நிமிர்ந்து பார்த்தாலே தலையை  கொய்து விடுவார்கள். அவ்வளவிற்கு பயபக்தி இருந்தது.
இன்று.....
 மாணவிக்கு இனிப்புகளை காட்டி காம வேட்டை!!! அதிலும் ஒரு பூசாரி.......
இதே விடயத்தை 50வருடங்கள் பின்னோக்கி பார்க்கின்றேன்.
டேய் பூசாரி  காடாத்த  உன் சாம்பல் கூட இருக்காதடா...

தூக்கின கத்தியை கீழே வைத்தால்......... இதுவும் நடக்கும் இன்னமும் நடக்கும்.

On 12/1/2019 at 12:36 AM, தனிக்காட்டு ராஜா said:

சிறையில் இருக்கும் இவர்களை உள்ளிருக்கும் கைதிகள் நன்றாக கவனிப்பார்கள் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன் சிறைக்காவலர்களை விட கைதிகள் உள்ள வச்சி நல்லா செய்வார்கள் 

காசால் வெளியில் கூட்டி வர வக்கீல்கள் இருக்கும் வரைக்க்கும் சம்பவங்கள் தொடரத்தான் செய்யும்  இந்தியாவில் ஓர் வைத்திய பெண்ணை கூட்டு பாலியல் செய்து எரித்து கொன்றிருக்கிறார்கள் 

இவர்கள் அந்த பரதேசி, புறம்போக்கு நித்தியானந்தாவின் சீடர்களோ தெரியவில்லை ।

இந்தியாவில் வைத்தியரை பாலியல் வன்மைக்கு உட்படுத்தி எரித்து கொலை செய்தவர்களுக்கு நேற்று மண்டையில் போட்டு விடடார்கள்।

இந்த பரதேசிகள் கொலை செய்யாதபடியால் கடுங்காவல் தண்டனை கொடுக்கலாம்। மணடயில் போடத்தேவையில்லை। 

6 hours ago, குமாரசாமி said:

தூக்கின கத்தியை கீழே வைத்தால்......... இதுவும் நடக்கும் இன்னமும் நடக்கும்.

கத்தி தொடர்ந்து உரியவர்கள் கைகளில் சுழன்றால் தான் நீதி தாண்டவமாடும்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Vankalayan said:

இவர்கள் அந்த பரதேசி, புறம்போக்கு நித்தியானந்தாவின் சீடர்களோ தெரியவில்லை ।

இந்தியாவில் வைத்தியரை பாலியல் வன்மைக்கு உட்படுத்தி எரித்து கொலை செய்தவர்களுக்கு நேற்று மண்டையில் போட்டு விடடார்கள்।

இந்த பரதேசிகள் கொலை செய்யாதபடியால் கடுங்காவல் தண்டனை கொடுக்கலாம்। மணடயில் போடத்தேவையில்லை। 

நித்தியின் சீடர்கள் செய்தாலும் சரி அவர்களை மண்டையிலதான் போடணும் அப்பதான் நாளைக்கு மற்ற பெண்பிள்ளைகளை தொடமாட்டானுகள் 

அரசியல் வாதிகளை கொஞ்சம் நோண்டினால் பல பேரை போட வேண்டி வரும் 

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பெண்பிள்ளையை கடத்த உதவி செய்து அப்பிள்ளை கொலையாக காரணமாக அமைந்து குற்றஞ்சாட்டப்பட்டு பணப்பட்டுவாடாவால் நீதி வழுவ விடுதலை செய்யப்பட்ட ஒருவரை 83 காலப்பகுதியில் வல்வெட்டித்துறைச் சந்தியில் நின்ற அரசமரத்தில் அக்குற்றவாளியைக்கொண்டே கயிற்றைக் கட்டி அக்குற்றவாளியின் இரு கால்களிலும் தடம்போட்டு "v" போல கால்களை இழுத்துக்கட்டி தலைகீழாகத் தொங்கவிட்டு மக்கள் பார்க்க மரணதண்டனை கொடுக்கப்பட்டது ஒரு காலம். அது விடுதலைப்புலிகளால் மட்டுமே சாத்தியம். இப்போது தண்டிக்க ஆட்கள் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வல்வை சகாறா said:

ஒரு பெண்பிள்ளையை கடத்த உதவி செய்து அப்பிள்ளை கொலையாக காரணமாக அமைந்து குற்றஞ்சாட்டப்பட்டு பணப்பட்டுவாடாவால் நீதி வழுவ விடுதலை செய்யப்பட்ட ஒருவரை 83 காலப்பகுதியில் வல்வெட்டித்துறைச் சந்தியில் நின்ற அரசமரத்தில் அக்குற்றவாளியைக்கொண்டே கயிற்றைக் கட்டி அக்குற்றவாளியின் இரு கால்களிலும் தடம்போட்டு "v" போல கால்களை இழுத்துக்கட்டி தலைகீழாகத் தொங்கவிட்டு மக்கள் பார்க்க மரணதண்டனை கொடுக்கப்பட்டது ஒரு காலம். அது விடுதலைப்புலிகளால் மட்டுமே சாத்தியம். இப்போது தண்டிக்க ஆட்கள் இல்லை.

நீதி வழுவி, நீதியை நிலைநாட்டலும் அநீதியே!

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, வல்வை சகாறா said:

ஒரு பெண்பிள்ளையை கடத்த உதவி செய்து அப்பிள்ளை கொலையாக காரணமாக அமைந்து குற்றஞ்சாட்டப்பட்டு பணப்பட்டுவாடாவால் நீதி வழுவ விடுதலை செய்யப்பட்ட ஒருவரை 83 காலப்பகுதியில் வல்வெட்டித்துறைச் சந்தியில் நின்ற அரசமரத்தில் அக்குற்றவாளியைக்கொண்டே கயிற்றைக் கட்டி அக்குற்றவாளியின் இரு கால்களிலும் தடம்போட்டு "v" போல கால்களை இழுத்துக்கட்டி தலைகீழாகத் தொங்கவிட்டு மக்கள் பார்க்க மரணதண்டனை கொடுக்கப்பட்டது ஒரு காலம். அது விடுதலைப்புலிகளால் மட்டுமே சாத்தியம். இப்போது தண்டிக்க ஆட்கள் இல்லை.

உண்மைதான் அந்த பாதகர்களின் கொடூரச் செயல் 1979 ம் ஆண்டு நடந்தேறியது. சமூகத்தில் எல்லோரையும் உலுக்கிய கொலை (அந்த பிள்ளை 1-5 வகுப்பு வரை என்னுடன் படித்தது). வழக்கு பருத்தித்துறை நீதி மன்றில் நடந்தது. நீதிபதி கையூட்டு வாங்கி அந்த குற்றவாளிகள் தப்பிக்க விட்டார் என்று அறிந்தோம். முதல் குற்றவாளி (பணக்காரன்) வெளி நாட்டுக்கு தப்பி ஓடி விட்டான். இப்பவும் உலகில் எங்கேயோ ஒரு மூலையில் வாழ்ந்து கொண்டு இருப்பான். 40 வருடங்கள் கடந்தும் அவனுக்கு இன்னும் தண்டனை இல்லை.

6 hours ago, Ahasthiyan said:

நீதிபதி கையூட்டு வாங்கி அந்த குற்றவாளிகள் தப்பிக்க விட்டார்

நீதிபதிக்கா தண்டனை வழங்கப்பட்டது?

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Rajesh said:

நீதிபதிக்கா தண்டனை வழங்கப்பட்டது?

இல்லை, பிள்ளையை கடத்திக் கொண்டு போக உதவியவருக்கு

 சமூக குற்றங்களை தடுக்க விசாரணை இன்றி  என்கவுண்டர்,  மண்டையில் போடுதல் போன்ற கடுமையான வழிமுறைகளை பின்பற்ற வேண்டிய தேவை உண்டு என்றால் சாதாரண சட்டங்களில் கீழ் வாழும் மனித பண்பாடு நம் நாட்டில் தொலைந்து விட்டதா? 

23 minutes ago, tulpen said:

 சமூக குற்றங்களை தடுக்க விசாரணை இன்றி  என்கவுண்டர்,  மண்டையில் போடுதல் போன்ற கடுமையான வழிமுறைகளை பின்பற்ற வேண்டிய தேவை உண்டு என்றால் சாதாரண சட்டங்களில் கீழ் வாழும் மனித பண்பாடு நம் நாட்டில் தொலைந்து விட்டதா? 

சொறிலங்கா, ஹிந்தியா போன்ற நாடுகளில் சட்டம், நீதி எல்லாம் அந்தமாதிரி கொடிகட்டி பறக்கேக்க எதுக்கு என்கவுண்டர் என்டு கேக்கிறியள்? அப்பிடித்தானே. கிழிஞ்சுது லம்பாடி லுங்கி!

44 minutes ago, Rajesh said:

சொறிலங்கா, ஹிந்தியா போன்ற நாடுகளில் சட்டம், நீதி எல்லாம் அந்தமாதிரி கொடிகட்டி பறக்கேக்க எதுக்கு என்கவுண்டர் என்டு கேக்கிறியள்? அப்பிடித்தானே. கிழிஞ்சுது லம்பாடி லுங்கி!

சட்டம், நீதித்துறை ஆகியவற்றை தவறாக நடத்துபவர்கள் தானே என்கவுண்டரையும் செய்கிறார்கள். சட்டதை தவறாக நடைமுறைப்படுதுபவர்கள் என்கவுண்டரை மட்டும் நியாயமாக சரியாக நடத்துவார்கள் என்று எப்படி எதிர்பார்ககிறீர்கள். குற்றவாளிகளை காப்பாற்ற அப்பாவிகளைப் போட்டுத்தள்ளும் என்கவுண்டரை செய்ய வாய்பபு உள்ளதல்லவா?  

  • கருத்துக்கள உறவுகள்

கோவில்கள்.. தேவாலயங்கள்.. பள்ளிவாசல்கள்.. புத்த விகாரைகள்.. பெளத்த பிக்குகள் தங்கும் இடங்கள்.. பாடசாலைகள்.. விடுதிகள்.. பொதுமக்கள் கூடும் இடங்களில் உள்ள மறைவிடங்கள்.. உட்பட.. பாழடைந்த பகுதிகள் எங்கும் தானியங்கி கண்காணிப்புக் கமராக்கள் பொருத்தப்படுவது கட்டாயமாக்கப்பட வேண்டும். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
On 12/6/2019 at 11:03 AM, goshan_che said:

நீதி வழுவி, நீதியை நிலைநாட்டலும் அநீதியே!

புரியவில்லை 

On 12/8/2019 at 2:12 PM, nedukkalapoovan said:

கோவில்கள்.. தேவாலயங்கள்.. பள்ளிவாசல்கள்.. புத்த விகாரைகள்.. பெளத்த பிக்குகள் தங்கும் இடங்கள்.. பாடசாலைகள்.. விடுதிகள்.. பொதுமக்கள் கூடும் இடங்களில் உள்ள மறைவிடங்கள்.. உட்பட.. பாழடைந்த பகுதிகள் எங்கும் தானியங்கி கண்காணிப்புக் கமராக்கள் பொருத்தப்படுவது கட்டாயமாக்கப்பட வேண்டும். 

நீங்கள் கூறிய இடங்களில் எல்லாம் இருக்கும் அந்த  “எல்லாம் வல்ல” , “ மக்களுக்கு அருள் பாலிக்கின்ற”, “மக்களை காத்தருளுகின்ற” என்று கூறப்படுபவரை நம்பாமல்  தானியங்கி கண்காணிப்பு கமராவை நம்புவது மிகவும்  பாராட்டுக்குரியது.   

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Maruthankerny said:

புரியவில்லை 

கோட் மூலம் தண்டனை கொடுக்காமல் புலிகள் தண்டனை கொடுத்தது சரியில்லை என்று சொல்கிறார் என்று நினைக்கிறேன் .

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.