Jump to content

வசம்பு மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்


Recommended Posts

  • Replies 144
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அதிர்ச்சி. மரணச்செய்தி கேட்டு ஒருவினாடி ஸ்தம்பித்து போனேன்.

சிறந்த கருத்தாளர். தனிமடலில் தொடர்பு கொண்டவர்களில் இவரும் ஒருவர்.

வானொலி நிகழ்சிகளில் இவரின் குரலை கேட்டிருக்கிறேன்.

வசம்புவின் மறைவினால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

துணிச்சலாகவும் நிதானமாகவும் கருத்துக்களை எழுதுபவர். கண்ணீர் அஞ்சலிகள். அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தாருக்கும் , உறவுகளுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள உறவும் அக்களத்தின் காரசாரமான கருத்தாளரமாகிய வசம்பு அவர்களது அமரத்துவம் அறிந்து மிகவும் அதிர்ச்சியுடன்கூடிய வேதனையடைகிறேன். யாழ்களம் தமிழுணர்வுடையோரை அரவணைக்கும் ஒரு களமாகும், அக்களத்தில் காத்திரமானதும், பிறரை விசாலமானரீதில் சிந்திப்பதற்குமான கருத்துக்களைத் தரவிளைந்த ஒரு அருமையான சகோதரனை இழந்துவிட்டது. அவரது பிரிவுத் துயரில் யாழ்கள அன்பர்கள் அனைவரும் பங்குகொள்ளும் அதேவேளையில். ஒரு நல்ல குடும்பத்தலைவனை இழந்து தவிக்கும் அவரது உறவுகட்கு ஆழ்ந்த இரங்கலை; தெரிவிக்கு அதேவேளை அத்துன்பச்சுழலில் இருந்து மீண்டுவர, எல்லாம்வல்ல இயற்கை துணைபுரியவேண்டுமென இறைவனை வேண்டுகிறேன்.

Link to comment
Share on other sites

துயரளித்த செய்தி. குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். யாழ் கருத்துக்களம் ஊடாக கருத்தாடிய உறவு ஒருவரை இழந்துவிட்டோம். கருத்துக்களில் முரண்பட்ட போதும் - நேர்மையாகவும் பண்பாகவும் கருத்தாடியவர். :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

41rqn-39JNL._SL500_AA280_.jpg

எங்களுடன் இணைந்து கருத்துக்கள் எழுதிய வசம்பு அவர்கள் காலமான செய்தி கேள்விப் பட்ட போது....... மிகவும் கவலை அடைந்தேன்.

தான் கூறிய கருத்துக்களுக்காக இறுதி வரை, நிதானமாக வாதாடுபவர்களில் வசம்புவும் ஒருவர்.

அவரின் பல கருத்துக்களுடன் எனக்கு ஒத்துப் போகாவிட்டாலும், அவரின் கருத்தாடும் நேர்மை பிடிக்கும்.

மே 19ற்குப் பின் பலர் முகம் மாறிய போதும்... இவர் ஆரம்ப காலத்திலிருந்தே..... ஒரே, முகத்துடன் இருந்து வந்தவர்.

இந்த வருடம் இவர் யாழில் கருத்துக்கள் எழுதவில்லை என்று நினைக்கின்றேன்.

இவரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர்க்கு ஆழ்ந்த அனுதாபங்களும், வசம்பு அவர்களின் ஆத்மசாந்திக்கு இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நினைவுப்பூக்களைக் காணிக்கையாக்குகிறேன். கொள்கை முரண்பாடுகள் இருந்தாலும் அவர் தன்னுடைய கருத்துக்களை எழுதும்பொழுது ஏற்றுக்கொள்ளக் கூடிய பல நியாயங்கள் இருக்கும் நல்ல கருத்தாளர். திறமையுள்ள பலரை ஏனோ இளவயதிலேயே இயற்கை அணைத்துக்கொள்கிறது.அன்னாரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமரர் வசம்பு அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலிகள்

அவரின் பிரிவால் வாடும் அவர் உறவுகளுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

வாத்தியார்

*********

Link to comment
Share on other sites

வசம்பு அண்ணாவின் மரணச் செய்தி அதிர்ச்சியை தருகிறது. யாழ்களத்தில் கருத்துகளை நேர்மையான முறையிலும், தனக்கு சரியெனப் பட்டத்தை வெளிப்படையாக கூறும் தைரியம் மிக்கவர். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

கண்ணீர் அஞ்சலிகள்

வசம்புவின் மறைவினால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

நல்லதொரு கருத்தாளன்.வசம்பு அவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.குடும்பத்தாரின் துயரில் நானும் பங்கு கொள்கிறேன்.

vasambu.jpg

அவருக்கு ஜேசுதாசின் பாடல்கள் நல்ல விருப்பம் என எங்கோ தெரிவித்து இருந்தார். அவருக்காக ஒரு பாடல்

http://freecomicbooks.org//mytamilmp3.com/jesudas1/NEEYUM_BOMMAI.mp3

Link to comment
Share on other sites

யாழில் உள்ள உறவை பற்றி முதன் முதலில் துயர் பகிர்வோம் பிரிவில் கருத்தாடல் செய்ய வைத்து விட்டு நிம்மதியாய் உறங்கும் வசம்புவே....

என்னை யாழுக்கு வரவேற்ற முதல் உறவு அமரர் வசம்பு அவர்கள், எனது கற்பனை கதைகளில் அவரை தவறவிடுவதில்லை, அவரை எந்த பாத்திரத்திலும் குறிப்பிட்டு எழுதினாலும் கோவப்படாமல் எனது கதைகளை பாராட்டும் நண்பர்,

வசம்பு அண்ணாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கிறேன்..அன்னாரின் பிரிவில் துயருரும் அவரின் குடும்பத்தின் பிரிவில் நானும் பங்கு கொள்கிறேன்...

Link to comment
Share on other sites

வசம்பு அண்ணா அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும், எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது மதிப்புக்குரிய அண்ணா

நான் யாழுக்கு வரும் நேரமெல்லாம் உன்னை நினக்காத நாளே இல்லை.

அண்மையில் காணவில்லை பகுதியிலும் உன்னை தேடினேன் நீ வரவில்லை

ஆனால் என்றாவது ஒருநாள் வருவாய் அதிரடியாக வருவாய் என எதிர்பார்த்தேன்

என் எதிர் பார்ப்புக்கு கிடைத்தது உன் மரணச்செய்திதான்

உனது பிரிவால் துயருபவர்களில் நானுமொருவன்

உன்னை நினைத்து அழுகின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வசம்புவின் இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு

எனது குடும்பத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=42226 :icon_idea:

நான் எழுத்து பிழை விட்டு எழுதின கவிதையை.. பிழையை திறுத்தி மறுபடியும் எனக்கு அந்த கவிதையை தனி மடலில் அனுப்பி இணைக்க வைச்சவர்..!!

தமிழிழ் பிழை விடாமல் எழுத முயற்ச்சி பன்ன சொன்னவர். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

kirubananthanvaisi01.jpg

யாழ்கள வசம்பு அவர்களின் மரணத்துக்கு கண்ணீர் அஞ்சலிகள். யாழில் என்னுடன் அதிகளவில் கருத்துக்களில் முரண்பட்டிருக்கிறார். எனினும் தான் கொண்ட கருத்தை தயங்காமல் வெளிப்படையாகச் சொல்பவர். சிறந்த வாதத்திறமை மிக்கவர். யாழில் அடிக்கடி காணாமல் போய்விடுவார். சில நாட்களாக அவரைக் காணவில்லை. வேறு பெயரில் வருவார் என்று நான் நினைத்தேன். ஒரே ஒரு முறை தனிமடலில் பொங்கல் வாழ்த்து சொல்லியிருக்கிறேன். அவரும் எனக்கு வாழ்த்துகள் சொல்லியிருந்தார். அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

-----------------------------------------------------

வசம்பு பற்றி முன்பு யாழ் கருத்தாளர்கள் சொன்ன பதிவுகள்

தூயா -

யாழில் இணைந்தது: 17-ஓcடொபெர் 04

வேறு பெயர்கள்: வசம்பர்: அழைக்கத் தொடங்கியது சின்னப்பு

குசும்பர்: அழைக்கத் தொடங்கியது முகத்தார்.

வேறு ஐடி: தெரியலை

நண்பர்கள்: சியாம், சின்னப்பு, முகத்தார்

அதிகம் எழுதியது: உலக நடப்பு

அது என்ன சியாம் அண்ணா காலத்து சகோதரன் என கேட்பீர்களே!! சியாம் அண்ணா யாழில் இணைந்தது ஆடிமாதத்தில், வசம்புண்ணா இணைந்தது ஐப்பசியில். மூன்றே மூன்று மாத வித்தியாசங்கள் தான். இது தான் காரணம். அத்தோடு, நான் இணைந்த நேரத்தில் எனக்கு யாழில் நடைபழக்கியவர்களில் இவரும் ஒருவர்.

வசம்பு அண்ணாவோடு யாழில் என் உறவு சற்றே வித்தியாசமானது. அதிகம் பேசிக்கொண்டதேயில்லை. யாழ் தொடர்பான தேவைகள் தோன்றும் போது மட்டும் தனிமடலில் தொடர்புகொண்டுள்ளோம். களத்திலும் ஒருவருடைய பதில்களுக்கெல்லாம் அடுத்தவர் வாதம் செய்ததேயில்லை. தேடி தேடி பதிலும் எழுதியதில்லை. ஆனால் என்னுடைய ஒவ்வொரு படைப்பிற்கும் வசம்பண்ணாவிடம் இருந்து உண்மையான விமர்சனம் கிடைக்கும். ஊக்கம் நிச்சயம் கிடைக்கும்.

வசம்பு அண்ணா எப்போதாவது தான் பதிவுகளை ஆரம்பிப்பார். ஆனால் அவை நிச்சயம் சுவாரசியமாக, விவாதத்தை தூண்டுவதாக இருக்கும். கவிஞர் தாமரை பற்றிய பதிவை இதற்கு ஒரு உதாரணமாக எடுக்கலாம்.

வசம்பு அண்ணாவும் சமையல்கட்டில் எழுத தவறவில்லை. எங்க சமையல்கட்டிற்கு அத்தனை மகிமை. செய்முறை எழுதாவிடினும், சில உதவிக்குறிப்புகளை வாரி வழங்கியுள்ளார். (எல்லாம் அனுபவம் போல) படித்து பயன் பெறுங்கள்.

வசம்பு அண்ணாவை பற்றி நான் அவதானித்த ஒரு விடயம், விவாதங்களில் அடிக்கடி "களத்து பெண்கள் என்ன சொல்கின்றார்கள் பார்க்கலாம்" போன்ற ஒரு வரி நிச்சயம் இருக்கும். பொல்லு குடுத்து அடி வாங்குவதில் அவருக்கு அத்தனை பிரியம். முன்னர் தமிழினி அக்கி தான் இதற்கு பல தடவைகள் நல்ல பதில்கள் எழுதியிருக்கின்றார். (கிகிகி)

சியாம் அண்ணாவை பற்றி எழுதிய போது, வசம்பண்ணாவே எங்கள் முதல் பட்டிமன்றத்தை பற்றி குறிப்பிட்டிருந்தார். நவீன விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் மனிதனை உற்சாகப்படுத்துகின்றதா சோம்பேறியாக்கின்றது என்ற அணியின் தலைவராக இருந்து, சிறப்பாக செயல்பட்டிருந்தார். சியாமண்ணாவும், வசம்பண்ணாவும் நண்பர்களா என ஆச்சர்யப்பட்டவர்கள் மறக்காமல் இதை படித்து பாருங்கள். யாழின் முதல் பட்டிமன்றமாக அமைந்த இந்த பட்டிமன்றத்தில் பல விடயங்கள் நடந்திருக்கு. அது பற்றி இன்னொரு பகுதியில் விவரமாக பார்க்கலாம்.

களத்தில் சிலர் ஆர்ப்பாட்டமாக நகைச்சுவையாக எழுதுவார்கள். சிலர் அமைதியாக எழுதிவிட்டு சென்றுவிடுவார்கள். வசம்பண்ணா அதில் நிச்சயம் இரண்டாவது வகை தான். அவரில் சில மறுமொழிகளை பார்த்து நான் விழுந்து விழுந்து சிரித்திருக்கின்றேன். அவற்றில் சில:

"சூனியத்தைப் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் செய்வினையில் நம்பிக்கை உண்டு. ஏனெனில் முன்பு தமிழில் செய்வினை செயற்பாட்டுவினை படித்தனான். "

"காதலுக்கும் கத்தரிக்காய்க்கும் என்ன சம்மந்தம்? :?: :?: " இரண்டும் க வரிசையில் ஆரம்பிக்கின்றன. இது கூடவா தெரியவில்லை?"

முகத்தார், சின்னப்புவை அடிக்கடி வம்பிற்கு இழுக்கும் பழக்கம் எங்கள் அனைவருக்கும் பொதுவான ஒரு விசயம். இதில் வசம்பண்ணாவும் விதிவிலக்கல்ல என்பதற்கு என்னுடைய ஆதாரம்:

முகத்தாரின் சொந்தக்காரரொருவர் சுண்ணாகம் சந்தையில் முகத்தாரைக் கண்டு கதைத்தார். அப்போ

சொந்தக்காரர்: அட தம்பி இப்ப நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்?

முகத்தார் : ஊரிலே அப்பாவிற்கு உதவி செய்து கொண்டிருக்கின்றேன்.

சொந்தக்காரர் : ஓ நல்லவிடயம். அப்பா என்ன வேலை தம்பி செய்கிறார்?

முகத்தார் : சும்மாதான் இருக்கின்றார்

சொந்தக்காரர் : :ரொல்ல்: :ரொல்ல்: :ரொல்ல்: :ரொல்ல்:

சிலவருடங்கள் தினமும் வசம்பண்ணா எழுதுவதை பார்த்து வருகின்றேன். அதில் நான் அவதானித்த ஒரு விடயம், வசம்பண்ணா அனைவரையும் பெயர் சொல்லி தான் அழைப்பார். எங்களில் பலர் அண்ணா, அக்கா, தங்கை, தம்பி என குறிப்பிடுவோம். ஆனால் வசம்பண்ணா அப்படியல்ல. சரிதானே வசம்பண்ணா? அனைவரையும் ஒரே முறையில் மரியாதையாக தான் அழைப்பார், கதைப்பார், விவாதங்களில் பங்கெடுக்கும் போது விளிப்பார்.

வசம்பண்ணாவிடம் எனக்கு பிடித்த இன்னொரு விடயம், பாரபட்சம் பாராமல் திறமையாளர்களை ஊக்குவிப்பதும், நன்றி சொல்ல வேண்டிய இடங்களில் யார் என்றாலும் நன்றி சொல்வது தான். இவரை பார்த்து நானும் இந்த நல்ல விடயத்தை கற்றுக்கொண்டு செயல்படுத்த முயற்சிக்கின்றேன்.

ஒரு தடவை குருவி பபா சொன்னவர் "யாழ் ஒரு பேருந்து போல, உறுப்பினர்கள் பயணிகள் போல ஏறி இறங்கிக்கொண்டேயிருப்பார்கள��

�" என. இதில் நான் பேருந்தில் ஏறிய நேரத்தில் இருந்து இன்றுவரை பயணிக்கும் வசம்பு அண்ணா, தொடர்ந்து எங்களுடன் பயணிக்க வேண்டும். வாழும் காலம் வரை யாழுடன் பயணிக்க வேண்டும்.

ஆரம்பத்திலிருந்து என் ஆக்கங்களை மறக்காமல் ஊக்கம் தரும் உங்களிற்கு என் அன்பான நன்றிகளை தெரிவித்துகொள்கின்றேன் வசம்பண்ணா..

http://www.yarl.com/forum3/index.php?showtopic=39963&st=120

---------------------------------------------------

பொன்னையா

வசம்பு ஒரு திறமையான கருத்தாளர். நகைச்சுவையானவர். நிறையப் பொது விடயங்களைப் படித்து வைத்திருப்பவர்.

--------------------

nunavilan

வசம்புவின் கருத்துக்கள் வித்தியாசமானவை. சிந்திக்க தூண்டுபவை. பிடித்தது கருத்து எழுதுபவரை( செய்தி இணைப்பவரை) அடிக்கடி கேள்வி கேட்பார். நிறைய வாசிப்பார் போல தெரிகிறது. மொத்தத்தில் நல்ல கருத்தாளர்.

------------------------------

Sabesh

வசம்பு அருமையன கருத்தாளர். அநாகரிகமாக கருத்தெழுதி பார்த்ததில்லை. உண்மை/மனசுக்கு பட்டதை/தனக்கு அறிந்ததை/தெரிந்ததை நேரடியக சொல்வதனால் சிலருக்கு பிடிப்பதில்லை என்பது கசப்பானது.

-------------------------------------

குமாரசாமி

வசம்பு அண்ணணின் கருத்துக்கள் பலது புரிந்துகொள்ளக் கூடியவர்களாலே மட்டும் புரிந்து கொள்ள முடியும்.

நல்ல கருத்தாளன் மட்டுமல்ல ஒவ்வொரு கருத்துடனும் குசும்பையும் புகுத்தி அருமையாக வசனம் எழுதக்கூடியவர்.

எனது முன்னோடிகளில் இவரும் ஒருவர்

--------------------------------

கறுப்பன்

உண்மையில் வசம்பு ஒரு வி்த்தியாசமான கருத்தாளந்தான். அவரின் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று இல்லாமல் நிதானமான போக்கு ரசிக்க கூடியது.....

அவர் இலங்கை அரசியலை அவ்வளாவாக ரசிக்கவில்லை போல...

உலக நடப்பையே அதிகமாக ரசிப்பவர். யதார்த்தவாதி...அதனாலேயே சிலபேருக்கு [கருத்து] விரோதி.....எந்தநிலையிலும் தன்கருத்தை மாற்றாதவர்.

-----------------------------------

தமிழ் சிறி

வசம்பின் குசும்பு எனக்குப் பிடிக்கும் . நகைச்சுவை உணர்வு மிக்கவர் . அநாகரீகமாக எழுத மாட்டார் .

இந்திய சஞ்சிகைகளை விரும்பி படிப்பார் போல் உள்ளது ...........

இருந்தும் கருணாநிதியை கண்ணைமூடிக்கொண்டு ஆதரிப்பார் .

தமிழ்நாட்டில் பிறந்திருந்தால் மாவட்ட செயலாளராகவோ , வாரியத்தலைவராகவோ இருந்திருப்பார் .

--------------------------------------

chozhan

வசம்பண்ணாவின் கருத்துக்களை கொஞ்ச நாட்களாக படிக்கின்றேன். அவர் நக்கலை மிகவும் நளினமாக செய்கின்றார். நல்ல ஞாபக சக்தி இருக்கின்றவர் போலும். அதே நேரத்தில் கொஞ்சம் கோபக்காரர் போல் தெரிகிறார்

---------------------------------------

வசம்பு அவர்கள் தன்னைப் பற்றிச் சொன்ன பதிவு

கள உறவுகள் அனைவருக்கும் வணக்கம்.

சென்ற வியாழனன்று (24.07.08) காலையில் களத்திற்கு வந்தபோது தூயா எனைப்பற்றி பதிந்திருப்பதைக் கண்டேன். அதற்கு ஏனைய கள உறவுகள் விமர்சனம் வைத்திருப்பதையும் கண்டேன். எனவே கள உறவுகளின் விமர்சனங்களுக்கும் சேர்த்துப் பதிலளிப்பதற்காக இன்றுவரை காத்திருந்து எனது பதிலைப் பதிகின்றேன்.

முதலில் தூயாவிற்குத்தான் நன்றிகளைச் சொல்ல வேண்டும். இப்படியான ஒரு பதிவினை மேற்கொள்வதால் களத்தில் புதிதாக இணையும் கருத்தாளர்களுக்கு உதவியாக இருக்குமெனவே இதுவரை நினைத்திருந்தேன். ஆனால் இப்பதிவுகளின் பின் வரும் ஏனைய கள உறவுகளின் நாகரீகமான விமர்சனங்களின் மூலம் எம்மை சுயபரிசோதனை செய்யவும் முடிகின்றதென்பது யதார்த்தமான உண்மை. இதனால் எல்லாப் புகழும் தூயாவிற்கே!!!!

களத்தோடு நெருங்கிய தொடர்புடைய எனது சில நண்பர்களின் தூண்டுதலாலேயே நானும் களத்திற்கு முதலில் பார்வையாளனாக வந்து சில தினங்களிலேயே கருத்தாளனாக இணைந்தும் விட்டேன். எனக்குக் கொஞ்சம் குசும்பு ஜாஸ்தி என்பதனாலேயும் கொஞ்சம் வித்தியாசமாகவும் அதே நேரம் இதுவரை மற்றவர்கள் வைக்காதது போலவும் ஒரு பெயரை வைக்க விரும்பினேன். அப்போது மனதில் உதித்தது தான் இந்த வசம்பு. வசம்பில் வம்பும் இருப்பதால் இது குசும்பிற்கும் பொருந்துவதால் சரியாக இருக்குமென்று இதையே தெரிவு செய்தேன். வசம்பு என்பது சில கள உறவுகள் குறிப்பிட்டிருப்பது போல் ஒரு மருந்து தான். இது ஒருவகைப் புல்லின் வேரிலிருந்து தயாரிக்கப்படுவது. வசம்பைக் கூடுதலாக மைனா வளர்ப்பவர்கள் அதற்கு வலிப்பு நோய் வராமலிருப்பதற்காக கொடுப்பதை நான் அறிந்திருக்கின்றேன். இஞ்சியைக் காயவைத்தால் வருவது வேர்க்கொம்பு. இதற்கும் வசம்பிற்கும் சம்பந்தமில்லை.

இன்றுவரை எவரையும் புண்படுத்தாது குசும்பாகவும், வம்பாகவும், நட்பாகவும் கருத்துக்களைப் பகிர்ந்திருக்கின்றேன். அதுபோல் தவறுகளைச் சுட்டிக் காட்டவும் தயங்கியதில்லை. என்னையும் அறியாமல் எவரையும் புண்படுத்தியிருந்தால் அதற்காக இந்தச் சந்தர்பத்தில் மன்னிப்புக் கேட்டுக் கொள்கின்றேன். களத்தில் எல்லோரும் நாகரீகமாகக் கருத்தாடுவதையே என்றும் விரும்புகின்றேன். அதனையே அநேகமான கள உறவுகளும் கடைப்பிடிக்கின்றார்கள்.

குடும்பத்தில் நான் தான் கடைக்குட்டி. அதனால் தம்பி தங்கை இல்லாத ஏக்கம் இருந்தது. சிறுவயதில் இது பற்றி அம்மாவிடம் கேட்டுத் தொல்லை கொடுத்துள்ளேன். அப்போதெல்லாம் அம்மாவின் பதில் சிரிப்பாக மட்டுமேயிருக்கும். அடிக்கடி கேட்டுத் தொல்லை கொடுத்ததால் ஒரு நாள் அம்மாவே என்னிடம் திருப்பிக் கேட்டா, சரி உன் ஆசைப்படி ஒரு தம்பிப் பாப்பாவோ அல்லது தங்கச்சிப் பாப்பாவோ பிறந்ததாலும், திரும்பவும் அவர்கள் உன் போல் என்னைக் கேட்டால் பிறகென்ன செய்வது?? இந்தக் கேள்வியிலுள்ள நியாயத்தால் தம்பி, தங்கை இல்லையென்ற ஏக்கம் இருந்தாலும் அத்தோடு அம்மாவிற்கு தொல்லை கொடுப்பதை நிறுத்தி விட்டேன். ஆனால் யாழ்க் களத்திற்கு வந்தபின் எனக்கு நிறைய தங்கைகள் இரசிகை, தூயா, வெண்ணிலா, அனிதா என்று நிறையவே கிடைத்தார்கள். ஆனால் தம்பியாக ஒரேயொரு தூயவன் மட்டுமே கிடைத்தார். பலருக்கு இது ஆச்சரியமாக இருக்கும். காரணம் களத்தில் கருத்துக்களால் நாம் மோதிக் கொள்வதே அதிகம். அவை கருத்துக்களில் மாத்திரம் தான். தனிமடலில் என்னை அண்ணாவென தூயவன் அழைக்கும் அழகே தனி. அவர் மடல்களில் உண்மையான பாசம் கொப்பளிக்கும். அதனால் அவர் மீது நானும் உண்மையான பாசத்தையே வைத்திருந்தேன். களத்தில் என் கருத்தைக் கடுமையாகச் சாடி தூயவன் கருத்தெளிதினால், உடன் எனக்கொரு தனிமடலும் அனுப்புவார். அதில் அண்ணா என்னில் கோபிக்கிக்க மாட்டீர்கள் தானே அண்ணாவோடு தானே நான் மோதலாம் எனக் கேட்டிருப்பார். அவர் களத்தை விட்டு விலகுவதாக அறிவித்த போது உண்மையாகவே என் மனது வலித்தது. அவர் மீண்டும் தூயவனாக களம் வர வேண்டுமென்பதே என் பேரவா!!

அது போலவே களத்தில் நிறையவே நண்பர்கள் கிடைத்தார்கள். அதன் மூலம் நிறைய அறிவுசார் விடயங்களைப் பகிர்ந்து கொள்ளக் கூடிய சந்தர்ப்பங்கள் வாய்த்தன.

இப்படியான பல நன்மைகளுக்கு வழி சமைத்த யாழ் கருத்துக் களத்திற்கும் இச்சந்தர்பத்தில் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

------------------------------------------------

மீண்டுமொரு முறை உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் இப்டியொரு பதிவை ஆரம்பித்ததற்காக.

1)வசம்பர் என அழைக்கதம் தொடங்கிய சின்னப்பு இப்ப அதையும் சுருக்கி வம்பர் ஆக்கிவிட்டார். நம்ம ஜம்மு என்னை வசபண்ணா என்றே அழைக்கின்றார்.

2)சமையல் கட்டில் என் கைவரிசையும் உண்டு தான். ஆனாலும் பொதுவாக ஏனைய இணையத்தளங்களில் நான் பார்த்த நல்ல விடயங்களை என் கள உறவுகளும் தெரிந்து பயனடைய இணைப்பது என் வழக்கம்.

3)முன்பு களம் கலகலப்பாக இருந்த காலத்தில் களத்்தில் எழுதும் பெண்கள் குறைவு. ஓரளவு அதிகமாக எழுதி வந்தவர் தமிழினி. அவரை மேன்மேலும் எழுத வைப்பதற்காக அப்பப்போ சீண்டுவேன். அது போல் நான் சீண்டிய இன்னொரு கள உறவு நித்திலா. அவவும் எனக்கு பதில் எழுதுவதற்காக அடிக்கடி எழுதுவா. ஆனால் இருவரும் தற்போது களத்தில் இல்லாதது வேதனையானது. நிறையப்் பெண்கள் (பெண் பெயரில் ஆண்களல்ல) களத்தில் இணைந்து தங்கள் திறைமைகளையும் வெளிக் கொணர வேண்டுமென்பது எனது நீண்ட நாள் ஆசை. எனவே திறைமையுள்ள பெண்கள் களத்தில் இணைந்து உங்கள் திறைமைகளை எல்லோரோடும் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களை வரவேற்று உற்சாகப்படுத்த பல கள உறவுகள் காத்திருக்கின்றோம்.

4)உண்மையில் நடைமுறையில் நான் பாடசாலை காலத்திலிருந்து பல பட்டிமன்றங்கள், வழக்காடு மன்றங்களில் கலந்து கொண்டிருந்தாலும் களத்தில் முதன் முதலாக நடந்த பட்டிமன்றம் எனக்கொரு வித்தியாசமான அனுபவத்தை தந்தது என்றால் அது மிகையாகாது. அதற்கும் எல்லாப் புகழும் தூயாவிற்கே!!!

5)பொதுவாகவே எமது பெயரை எம்மைவிட அடுத்தவர்கள் தான் அதிகமாகப் பாவிக்கின்றார்கள். அதனால் உறவுகள் தமக்கென வைத்துள்ள பெயரை நாமும் பாவிக்காது விட்டால் எப்படி?? அதனாலேயே எல்லோரையும் பெயரைக் கூறி ஆனால் மரியாதைக் குறைவில்லாமல் அழைப்பது என் வழக்கம்.

6)உண்மையில் பாராட்டுவதென்பது ஒவ்வொரு படைப்பாளியையும் மேலும் பல படைப்புக்களை படைப்பதற்கான ஊக்குவிப்பைக் கொடுக்கும் உன்னதமான ஒரு டானிக்.

7)யாழ்க் களத்தில் உங்கள் எல்லோருடனும் தொடர்ந்து பயனிப்பதே எனது விருப்பமும்.

Link to comment
Share on other sites

கந்தப்பு இணைத்த பதிவினைப் பார்க்கும் போது மேலும் மேலும் கவலை வருகுது. நான் முதன் முதலில் எழுதிய அன்று வசம்பிடம் தான் விவாதம் செய்திருந்தேன் என்று நினைவு. என் "ஆயிரத்தில் ஒருவன்' படத்துக்கான விமர்சனத்துக்கான பதில் தான் அவர் இறுதியாக என் திரிக்கு இட்ட பதில்

இன்று முழுதும் மனசு பாரமாக இருக்கு

Link to comment
Share on other sites

வசம்பு அவர்களின் நகைச்சுவைகளில் ஒன்று:

முட்டையில மயிர் பிடுங்குதல் என்றால் என்ன...?

ஓ அதுவா சிலர் மினக்கிட்டு முட்டையில் மயிர்களை நட நாங்கள் வந்து புடுங்குகின்றோமாம். நீங்களே சொல்லுங்கள் பறைவைக் காய்ச்சல் பிரைச்சினையெல்லாம் இருக்க இவங்க போய் முட்டையில் மயிர்களை நடலாமா?? அதைச் சுட்டிக் காட்டினால் தப்பாம்.

Link to comment
Share on other sites

ஒஒஒ வம்பன்னா வமபன்னான்டு சொல்லுவனே..நான் இனைக்கின்ற செய்திகளுக்கு எல்லாம் நகைச்சுவையாக கருத்து எழுதுவிங்களே...

குடும்பத்தபருக்கு ஆழ்நத அணுதாபங்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணையத்தில் தேடிய போது

67476101501012529189028.jpg

திரு சிவஞானசுந்தரம் கிருபானந்தன்(வை.சி) ; பார்த்தீபனின் பூதவுடல்

20.10.2010, 21.10.2010, 22.10.2010 புதன்கிழமை, வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை ஆகிய தினங்களில் மாலை 15:00 மணியிலிருந்து 20:00 மணிவரைக்கும்,

23.10.2010, 24.10.2010 சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய தினங்களில் காலை 10:00 மணிமுதல் இரவு 20:00 மணிவரைக்கும் Friedhof Huttwil, Friedhofweg 37A, 4950 Huttwil என்னும் முகவரியில் பார்வைக்காக வைக்கப்பட்டு,

ஈமக்கிரியைகள் 25-10.2010 திங்கட்கிழமை அன்று மதியம் 13:00 மணிமுதல் 15:00 மணிவரை Krematorium, Geissbergweg 29, 4900 Langenthal BE என்னும் முகவரியில் நடைபெறும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அதெல்லாம் இருக்கட்டும், குஜாரத்தில் தானே தீவைத்த இந்துக்களின் ரயிலுக்குப் பழிவாங்க ஆயிரமாயிரம் முஸ்லீம்களைப் படுகொலை செய்ததற்காக அமெரிக்காவே இவருக்கு தடை விதித்திருந்தது. இந்த லட்சணத்தில் இந்தியஅ மனிதநேயத்திற்குப் பாதுகாப்பான நாடாம். 
    • தமிழ்ப் பொதுவேட்பாளரை இறக்கி ரணில் ஐய்யாவுக்கு விழப்போற வாக்குகளைத் தடுத்துப்போடுவாங்கள் என்கிற கவலையில இருக்கிறம் உங்களுக்கு நக்கலாக் கிடக்கு என்ன?  ரணில் மாத்தையாட்ட, ஜயவேவா!
    • நீங்கள் அரசாங்கத்துடன் திம்புவில் பேசலாம், நான் இராணுவத்துடன் கிரிக்கெட் விளையாடினால் தவறோ? ‍- பரி யோவானின் ஆனந்தராஜனும், இந்தியர்களை அலைக்கழித்த இலங்கையும்   மறுநாளான ஆடி 24 ஆம் திகதி டிக் ஷிட் அவர்கள் நீலன் திருச்செல்வத்தைச் சந்தித்தார். தமிழர்களின் பிரச்சினையின் சிக்கல்களை பண்டாரி சரியாக உணர்ந்துகொள்ளத் தவறிவிட்டதாக டிக் ஷிட்டிடம் தெரிவித்தார் நீலன். மேலும் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வொன்றினைக் கண்டுபிடிக்குமாறு பண்டாரி  அழுத்தம்கொடுத்து வந்தமை, ஜெயாரிற்கு தமிழர்களுடன், தீர்வெதனையும் தராத, வெற்றுப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் வாய்ப்பினையும் ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாகவும் நீலன் கூறினார். சந்திரிக்காவின் ஆட்சியின்போது பிரபல சிங்கள இனவாதியான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸுடன் இணைந்து தீர்வுப்பொதியொன்றினைத் தயாரித்த நீலன் திருச்செல்வம் மேலும், டிக்ஷிட்டிடன் பேசும்போது தமிழரின் தாயகம் தொடர்பாகவும், அதனை திட்டமிட்ட அரச ஆதரவிலான சிங்களக் குடியேற்றங்கள் மூலம் இரு துண்டுகளாக உடைக்க சிங்களவர்கள் முயன்றுவருவது குறித்தும் விளக்கியதோடு, தமிழர்கள் தமது தாயகத்தில் சுயநிர்ணய உரிமைகொண்டவர்களாக வாழ்தலே எந்தவொரு தீர்விற்கும் அடிப்படையாக அமைதல் வேண்டுமென்றும் அழுத்தமாகக் கூறினார்.  இதற்குக் குறைவான எந்தத் தீர்வினையும் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதனையும் அவர் டிக்ஷிட்டிடம் தெரிவித்தார். நீலனுக்குப் பதிலளித்த டிக்ஷிட், இவ்விடயங்கள் குறித்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ரஜீவிடமும், பண்டாரியிடமும் தெளிவாகப் பேசவேண்டும் என்று கூறினார். "இனப்பிரச்சினையின் தீர்விற்கான அடிப்படை குறித்த ஆவணம் ஒன்றைத் தயாரித்து ஜெயாருக்கு அனுப்பிவைப்பதற்காக என்னை தில்லிக்கு அழைத்திருக்கிறார்கள். நான் நாளை பயணமாகிறேன். நீங்கள் என்னிடம் தற்போது கூறிய விடயங்களை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ஒரு ஆவணமாகத் தயாரித்து அனுப்பினால், நாம் ஜெயாருக்கு அனுப்பவிருக்கும் ஆவணத்தை அதன் அடிப்படியில் உருவாக்கிக்கொள்ளலாம்" என்று நீலனை நோக்கிக் கூறினார் டிக்ஷிட்.    அப்போது சென்னையில் தங்கியிருந்த அமிர்தலிங்கத்திடம் இவ்விடயங்கள் குறித்து நீலன் தெரிவித்தார். அதன் பின்னர் ஆடி 26 ஆம் திகதி தமது பேரம்பேசலின் நிலைப்பாடு குறித்த விளக்கமான கடிதம் ஒன்றினை அமிர்தலிங்கமும், சிவசிதம்பரமும் ரஜீவ் காந்திக்கு அனுப்பி வைத்தனர். அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த சில முக்கிய விடயங்கள் கீழே, "தமிழர் பிரச்சினைக்கான எந்தவொரு தீர்வின் அடிப்படையும் தமிழர்கள் தமது தாயகத்தில் தம்மைத்தாமே ஆளும் உரிமையினை உறுதிப்படுத்துவதாக இருக்க வேண்டும். பலஸ்த்தீனத்தில் இஸ்ரேல் செய்துவருகின்ற திட்டமிட்ட ஆக்கிரமிப்பிற்கு நிகரான ஆக்கிரமிப்பினை இலங்கையில் தொடர்ச்சியாக ஆட்சிக்கு வரும் சிங்கள அரசுகள் செய்துவருவதுடன்,  தமிழர் தாயகத்தின் ஒருமைப்பாட்டினைச் சிதைக்கும் நோக்குடன், தமிழர்களின் ஆட்சேபணைக்கு மத்தியிலும், அரச ஆதரவிலான திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை சுதந்திரக் காலத்திலிருந்து செய்து வருகின்றன". "தமிழர் தாயகத்தை இரண்டாகத் துண்டாக்குவதன் மூலம் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களை முற்றாக அழித்துவிட சிங்கள அரசுகள் முயன்று வருகின்றன. கிழக்கில் தமிழர்களை அப்புறப்படுத்துவதனூடாக தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வை வழங்கமுடியும் என்று ஜெயவர்த்தன கருதிவருகின்ற போதிலும், நீங்கள் அதனை ஒரு தீர்வாக ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறோம். தமது தாயகம் துண்டாடப்படுவதை தமிழர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை" என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.  புலிகளின் எச்சரிக்கைகளுக்கு மத்தியிலும் இலங்கை இராணுவத்துடன் துடுப்பாட்டப் போட்டியொன்றினை ஒழுங்குசெய்த பரி யோவான் கல்லூரி அதிபர் ஆனந்தராஜன்  ஆடி 27 ஆம் திகதி மாலை டிக்ஷிட் தில்லியை வந்தடைந்தார். அந்நாள் காலையிலேயே யாழ்ப்பாணம் புனித யோவான் கல்லூரியின் அதிபர் ஆனந்தராஜா கொல்லப்பட்டிருந்தார். பரி யோவான் கல்லூரியின் துடுப்பாட்ட அணிக்கும், இலங்கை இராணுவத்தின் துடுப்பாட்ட அணிக்கும் இடையிலான சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டியொன்றினை பரி யோவான் கல்லூரி மைதானத்தில் நடத்த முயன்றதனால் அவர் சுடப்பட்டார். போட்டியினை நடத்துவதற்கான முயற்சிகளில் அவர் இறங்கியபோது புலிகளால் பலதடவைகள் அவருக்கு அதனைச் செய்யவேண்டாம் என்று எச்சரிக்கைகள் விடப்பட்டு வந்தன. ஆனால், அவ்வெச்சரிக்கைகளை உதாசீனம் செய்த ஆனந்தராஜா, "நீங்கள் அரசாங்கத்துடன் திம்புவில் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்றால், இராணுவத்துடன் கிரிக்கெட் ஆட்டம் ஒன்றினை நான் ஒழுங்குசெய்வதில் என்ன தவறு இருக்க முடியும்?" என்று அவர் பதிலுக்கு தனது செயலை நியாயப்படுத்தி வந்தார்.  யாழ்ப்பாண மக்களின் மனங்களையும், இதயங்களையும் வென்று, அவர்களின் ஆதரவினைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் யாழில் இயங்கிவந்த சில பிரபல பாடசாலைகளுடன் சிநேகபூர்வமான துடுப்பாட்டம் மற்றும் கால்பந்தாட்டப் போட்டிகளை இலங்கை இராணுவம் ஒழுங்குசெய்யத் திட்டமிட்டு வந்தது. இலங்கை அரசாங்கத்திற்கெதிராக மக்களை அணிதிரட்டும் தமது முயற்சியை இராணுவத்தினரின் "யாழ் மக்களின் மனங்களையும், இதயங்களையும் வெல்லுதல்" முயற்சி பாதிக்கக் கூடும் என்று கருதிய போராளிகள், இராணுவத்தின் இந்த முயற்சிக்கு எவரும் ஆதரவளிக்கக் கூடாது என்று கூறி வந்தனர். இன்று மேற்கு நாடொன்றில் வசிக்கும் புலிகளின் முன்னாள்ப் போராளியொருவரே ஆனந்தராஜாவைச் சுட்டுக் கொன்றிருந்தார். ஆனந்தராஜாவைத் தாமே கொன்றதாக புலிகள் உரிமைகோரும் துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டனர். தாம் பலமுறை வழங்கிய எச்சரிக்கைகளையும் மீறி இராணுவத்துடன் துடுப்பாட்டப் போட்டியை நடத்துவதில் உறுதியாக நின்றமைக்காகவே அவருக்குத் தண்டனை வழங்கப்பட்டதாக புலிகளின் அறிவித்தல் கூறியது. ஆனந்தராஜா மீதான தாக்குதல் சொல்லவேண்டியவர்களுக்குத் தெளிவான செய்தியைச் சொல்லியது. இராணுவத்தினருடனான சகலவிதமான சிநேகபூர்வப் போட்டிகளும் யாழ்ப் பாடசாலைகளால்  கைவிடப்பட்டன. யாழ் மக்களின் மனங்களையும், இதயங்களையும் வெல்லும் இராணுவத்தின் முயற்சி பிசுபிசுத்துப் போனது. ஆனந்தராஜா மீதான தாக்குதலை அரசாங்கம் தனது பிரச்சாரத் தேவைக்காகப் பயன்படுத்திக்கொண்டது. இதனை கடுமையான யுத்தநிறுத்த மீறலாகக் காட்டிய அரசாங்கம், ஆனந்தராஜாவின் கொலையோடு சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பாகத் தகவல் வழங்குவோரு சன்மானமாக ஐந்து லட்சம் ரூபாய்களைத் தருவதாக அறிவித்தது. ஆனால், அரசால் தாக்குதலில் ஈடுபட்டவர்களை இறுதிவரை கண்டுபிடிக்க முடியவில்லை. தில்லியில் தான் தங்கியிருந்த நான்கு நாட்களில் டிக்ஷிட், ரஜீவ் காந்தி, ரஜீவால் பிந்தள்ளப்பட்டிருந்த பார்த்தசாரதி, ரோவின் சக்சேனா மற்றும் சில வெளியுறவுத்துறை அதிகாரிகள் ஆகியோரைச் சந்தித்தார். இச்சந்திப்புக்களின்போது, இலங்கையின் ஒற்றுமையினையும், பிராந்திய ஒருமைப்பாட்டினையும் பாதிக்காத வகையில், தமிழர்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்குச் சாதகமான வகையில் ஜெயார் முன்வைக்கக் கூடிய ஆலோசனைகளை அவர்கள் தயாரித்தனர். இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட, கடப்பாடுகள் எதுவும் அற்ற இந்த ஆவணத்தில் இலங்கையினால் முன்வைக்கப்பட்ட அதிகபட்ச அதிகாரப் பரவலாக்கல் அலகான மாவட்ட அபிவிருத்திச் சபையின் அதிகாரங்களை மேம்படுத்துவது தொடர்பாகவே பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. தமிழரின் கோரிக்கையான பூர்வீகத் தாயகத்திற்குப் பதிலாக மாகாண அலகினை இலங்கையரசு வழங்க முடியும் என்றும், வடக்கு மாகாணமும், கிழக்கு மாகாணமும் கருத்து ரீதியாக இணைக்கப்படலாம் என்றும் இந்தியா பரிந்துரை செய்திருந்தது. இவ்வாறு அமைக்கப்படும் மாகாணங்களுக்கான அதிகாரங்கள் குறித்துப் பேசும்போது, நிதி , காணியதிகாரம், சட்டம் ‍ ஒழுங்கினை நிலைநாட்டும் அதிகாரம் ஆகியவை மத்திய அரசினால் பகிர்ந்தளிக்கப்படலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. மேலும், இந்த இணைந்த மாகாணங்களில் தமிழ் உத்தியோகபூர்வ மொழியாகப் பாவிக்கப்படலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டது. ஜெயாருடன் பார்த்தசாரதி   இரண்டாம் சுற்றுப் பேச்சுக்கள் நடப்பதற்கு சற்று முன்னதாக இந்தியாவின் "கடப்பாடு அற்ற" பரிந்துரைகளின் நகல் ஒன்றினை நீலனிடம் கொடுத்த டிக்ஷிட், "இவை அனைத்தும்  பார்த்தசாரதியின் யோசனைகள் தான்" என்று கூறினார். "பண்டாரிக்கோ, சக்சேனாவுக்கோ இவைகுறித்த எந்தவிதமான அறிவும் இருக்கவில்லை" என்று நீலன் கூறினார்.  தாம் தயாரித்த "கடப்பாடற்ற" பரிந்துரைகளை ஜெயாரிடம் வழங்கி, அவற்றின் அடிப்படையில் தனது தீர்வினை ஜெயார் வரைந்துகொள்ளலாம் என்றும், பண்டாரியின் இரண்டாவது விஜயம் தொடர்பாக அவரை ஆயத்தமாக இருக்கும்படி  கூறுமாறும் டிக்ஷிட்டைப் பணித்தார் ரஜீவ் காந்தி. ஆவணி 2 ஆம் திகதி கொழும்பு வந்திறங்கிய பண்டாரி, அன்று மாலையே ஜெயாரை அவரது உத்தியோகபூர்வ வாசஸ்த்தலத்தில் சந்தித்தார். இச்சந்திப்பில் லலித் அதுலத் முதலியும் உடனிருந்தார். ஜெயாருடனான தனது சந்திப்புப் பற்றி கொழும்பு அசைன்மென்ட்டில் எழுதும் டிக்ஷிட், திம்புப் பேச்சுக்களின் தோல்வி குறித்த இந்தியாவின் அதிருப்தியை ஜெயாரிடம் தெரிவித்ததுடன், இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட பரிந்துரைகளை அவரிடம் தான் வழங்கியதாகவும் கூறுகிறார். இச்சந்திப்புக் குறித்து நீலனிடம் பேசும்போது, "நான் கொடுத்த பரிந்துரைகளை வாங்கிப் படித்துவிட்டு, சிறிய புன்னகையுடன் அதனை அருகில் நின்ற லலித்திடம் கையளித்தார் ஜெயார்" என்று கூறியிருக்கிறார்.   மேலும், ஜெயாருடன் பேசிய டிக்ஷிட், இலங்கை அரசால் முதலாம் கட்டப் பேச்சுக்களில் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள், தமிழ்ப் போராளிகள் தமது ஆயுதங்களைக் கைவிட்டு சமாதானப் பேச்சுக்களுக்குத் திரும்புவதற்குப் போதுமான சலுகைகளைக் கொண்டிருக்கவில்லை என்றும் கூறினார். இடையில் குறுக்கிட்ட லலித் அதுலது முதலி, மிகவும் காட்டமான முறையில் இதற்குப் பதிலளித்தார். "இந்தியா தம்மை ஆதரிக்கிறது என்பதற்காக, தமிழர்கள் தாந்தோன்றித்தனமான முறையில் முன்வைக்கும் நிபந்தனைகள் எல்லாவற்றையும் நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்கிற கட்டாயம் எமக்கு இல்லை" என்று கூறியதுடன், "நீங்கள் தமிழ்ப் பயங்கரவாதிகளுக்கு எவ்வாறான உதவிகளைச் செய்துவருகிறீர்கள் என்பது குறித்தும் நாம் அறிவோம்" என்று நீண்ட விளக்கம் றினையும்  வழ‌ங்கினார். பின்னர் பேசிய ஜெயார், "இலங்கை அரசின் சார்பாக இரண்டாம் கட்டப் பேச்சுக்களை ஹெக்டர் ஜெயவர்த்தனவே நடத்துவார் என்பதனால், அவரிடமே இந்தியாவின் பரிந்துரைகளைக் கையளிக்கிறேன்" என்று டிக்ஷிட்டிடம் கூறினார். மேலும், பண்டாரியின் வருகையினை நாம் வரவேற்கிறோம், அவர் கூறப்போவதைச் செவிமடுக்கவும் ஆயத்தமாக இருக்கிறோம் என்று ரஜீவிடம் கூறுங்கள் என்று கூறினார்.   ஆவணி 8 ஆம் திகதி கொழும்பு வந்தடைந்த பண்டாரி, ஜனாதிபதி ஜெயவர்த்தன, பிரதமர் பிரேமதாச, வெளியுறவு அமைச்சர் ஹமீது, பாதுகாப்பமைச்சர் லலித் அதுலத் முதலி, எதிர்க்கட்சித் தலைவர் சிறிமா ஆகியோரைச் சந்தித்தார்.   ஆனால், பண்டாரியின் ஜெயாருடனான சந்திப்பு பலனற்றுப் போயிற்று. தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல்த் தீர்வொன்றினைக் காண்பதற்கு இந்தியாவினால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளின் அடிப்படையிலான தீர்வொன்றினை இலங்கை முன்வைக்க வேண்டும் என்று பண்டாரி ஜெயாரிடம் கூறினார். இரண்டாம் கட்டப் பேச்சுக்கள் மிகவும் முக்கியமானவை என்று இந்தியா கருதுவதாகவும் அவர் ஜெயாரிடம் தெரிவித்தார். இப்பேச்சுக்களும் தோல்வியடையும் பட்சத்தில் இலங்கை கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரும் என்று  அவர் ஜெயாரை எச்சரித்தார். ஆனால் பண்டாரியின் அழுத்தங்களினால் ஜெயாரைப் பணியவைக்க முடியவில்லை. பண்டாரியுடன் தீர்க்கமான பேச்சுக்களில் ஈடுபடுவதையே ஜெயார் தவிர்த்தார். பண்டாரியைக் கையாளும் பணியினை தனது சகோதரர் ஹெக்டர் ஜெயவர்த்தனவிடமும், லலித் அதுலத் முதலியிடமும் கையளித்தார் ஜெயார். "எனது சகோதரரே இரண்டாம் கட்டப் பேச்சுக்களையும் எமசார்பில் நடத்தவிருப்பதால், நீங்கள் அவரிடமே உங்களின் விளக்கங்களைக் கூறுங்கள்" என்று பண்டாரியை நோக்கிக் கூறினார் ஜெயார். மேலும், "லலித் இதுகுறித்து உங்களுடன் விளக்கமாகப் பேசுவார்" என்றும் அவரிடம் கூறினார்.  பிரேமதாசவுடனான பண்டாரியின் பேச்சுக்கள் பொதுவானவையாக இருந்தன. வழ‌க்கம்போல் "மகாத்மா காந்தியில் நான் மதிப்பு வைத்திருக்கிறேன், இந்தியாவை நேசிக்கிறேன்" என்று பிரேமதாச பண்டாரியிடம் பேசத் தொடங்கினார். பின்னர், பயங்கரவாதத்தினை முற்றாக அழித்துவிட இந்தியா இலங்கைக்கு உதவேண்டும் என்றும் அவர் கோரினார். "தமிழ்ப் பயங்கரவாதம் இருக்கும்வரை, அரசியல்த் தீர்விற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவானவை. சிங்கள மக்களின் பெருமையும், கெளரவமும் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறன. இந்த நிலையில் அவர்கள் எந்த விட்டுக் கொடுப்பிற்கும் முன்வரப்போவதில்லை. இலங்கையில் சமாதானமும், உறுதிப்பாடும் நிலைநாட்டப்படுவதில் இந்தியாவிற்கு இருக்கும் அக்கறையினை சிங்கள மக்கள் அறிவார்கள், ஆனால் பேச்சுக்களில் மத்தியஸ்த்தம் வகிக்க இந்தியா எடுத்துவரும் முயற்சிகளை சிங்கள மக்கள் சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்க்கிறார்கள். நீங்கள் தமிழர்கள் சார்பாகவே செயற்படுவதாக அவர்கள் முற்றாக நம்புகிறார்கள்" என்று அவர் பண்டாரியிடம் தெரிவித்தார். சிறிமாவுடனான சந்திப்பின்போது, "நான் திம்புப் பேச்சுக்கள் தோல்வியிலேயே முடிவடையும் என்று எதிர்பார்த்திருந்தேன். அப்படியே நடந்தது. ஏனென்றால், ஜெயவர்த்தன இப்பேச்சுக்களில் இதய சுத்தியுடன் ஈடுபடவில்லை. இரண்டாம் கட்டப் பேச்சுக்களுக்கும் இதே நிலைதான் ஏற்படும்" என்று பண்டாரியிடம் தெரிவித்தார் சிறிமா.    இலங்கையின் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவரான ஹெக்டர் ஜெயவர்த்தனவுடன் பேசும்போது, "பழைய விடயங்களைத் திரும்பத் திரும்ப பேச்சுவார்த்தை மேசையில் பேசுவதைத் தவிருங்கள், எதிர்காலம் குறித்து மட்டுமே நாம் பேசலாம்" என்று கெஞ்சுவது போலக் கோரினார் பண்டாரி. இலங்கை தனது தீர்வினை எந்தெந்த இடங்களில் மேம்படுத்த முடியும் என்பது குறித்த பரிந்துரைகளை இந்தியாவின் "கடப்பாடு அற்ற" ஆவணம் கொண்டிருப்பதாக அவர் சுட்டிக் காட்டினார். இதற்குப் பதிலளித்த ஹெக்டர், "1978 ஆம் ஆண்டு யாப்பின் வரையறைகளை நான் சரியாக ஆராய்ந்து, எனது ஆலோசனைகளை அவற்றின் அடிப்படையில்  முன்வைக்கிறேன்" என்று கூறினார். லலித்துடனான பண்டாரியின் சந்திப்பு வித்தியாசகாம இருந்தது. "கடப்பாடு அற்ற" என்கிற தொனியில் இந்தியா முன்வைத்த அனைத்து பரிந்துரைகளையும் லலித் திட்டவட்டமாக நிராகரித்தார். வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் இந்தியாவின் யோசனையினை இலங்கை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று பண்டாரியிடம் கூறினார் லலித். கிழக்கு மாகாணத்தில் சிங்களவர்களும் முஸ்லீம்களும் இணைந்து பெரும்பான்மையினராக மாறியிருப்பதாகவும், தமிழர்கள் அங்கு சிறுபான்மையினர் என்றும் அவர் கூறினார். மேலும், 1977 ஆம் ஆண்டுத் தேர்தலில் தனிநாட்டிற்கான ஆணையினை கிழக்கு மாகாண மக்கள் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு வழங்கவில்லை என்றும் அவர் வாதிட்டார். 1982 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலும், சர்வஜன வாக்கெடுப்பும் கிழக்கு மாகாணம் அரசாங்கத்திற்கு ஆதரவாக நிற்பதையே நிரூபித்திருக்கின்றன என்று தனது வாதத்திற்கு மேலும் வலுச் சேர்த்தார் லலித்.  அடுத்ததாக, மாகாண சபைகளுக்கு வழங்கப்படும் அதிகாரங்களை மேம்படுத்தலாம் என்கிற இந்தியாவின் ஆலோசனைகளையும் லலித் புறக்கணித்தார். மாகாண சபைகளுக்கு நிதியதிகாரம், காணியதிகாரம், சட்டம் ஒழுங்கு ஆதிகாரம் ஆகியவற்றை வழங்குவதை சிங்கள மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று அவர் கூறினார். தனிச் சிங்களச் சட்டத்தில் மாற்றங்களைச் செய்யும் அதிகாரமோ, அல்லது 1972 மற்றும் 1978 ஆம் ஆண்டு யாப்புகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் நாட்டின் ஒருமைப்பாடு, ஒற்றையாட்சி ஆகியவற்றில் மாற்றங்களைக் கொண்டுவரும் அதிகாரமோ இலங்கையில் எந்த அரசிற்கும் கிடையாது என்றும் அவர் கூறினார். "இந்த விடயங்களில் இலங்கையின் அரசானாலும், எதிர்க்கட்சியானாலும் அவர்கள் அனைவரினதும் நிலைப்பாடு ஒன்றுதான்" என்று மிகுந்த நம்பிக்கையுடன் பண்டாரியைப் பார்த்துக் கூறினார் லலித். 
    • கைக்காப்பு, கைப்பற்று மற்றும் தொலைநோக்கி பூட்டப்பட்ட ஏ.கே. 103 துமுக்கியால் சுட்டுப் பார்க்கிறார் தலைவர் மாமா காலம்: நான்காம் ஈழப்போர்    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.