Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. Started by Mathan,

    புதிய சர்ச்சை உருவாகிறது "வீடு' சின்னத்தை பயன்படுத்தக் கூடாது என தேர்தல் ஆணையாளருக்கு கடிதம் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் நானே. என்னைக் கலந்தாலோசிக்காமல் கட்சியின் செயலாளர் நியமனப்பத்திரங்களை சமர்ப்பித்துள்ளார். கட்சியின் யாப்பு விதிகளுக்கு முரணாக தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் இலங்கை தமிழரசுக்கட்சியின் சின்னத்தை பயன்படுத்துவதற்கு முற்படுவதை தங்களுக்குரிய அதிகாரங்களைப் பயன்படுத்தி தடுத்து நிறுத்த வேண்டும் என ஆவரங்கால் சின்னத்துரை என அழைக்கப்படும் சே.சின்னத்துரை லண்டனிலிருந்து தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்காவுக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். 22.2.2004 திகதியிட்ட மேற்படி கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: இலங்கை தமிழரசுக் கட்சியின…

  2. (எம்.எப்.எம்.பஸீர்) இலங்கையில் தற்போது இரு கொரோனா தொற்றுக்குள்ளான நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், இன்று காலை பரவிய வதந்திகளால் சில பாடசாலைகளில் பதற்ற நிலை ஏற்பட்டது. இதனால் பெற்றோர் தமது பிள்ளைகளை பாடசாலையிலிருந்து வீட்டுக்கு அழைத்து சென்ற சம்பவங்கள், பாடசாலைக்கு சென்று அதிபர் ஆசிரியர்களுடன் முரண்பட்ட சம்பவங்கள் கொழும்பு ஆனந்தா கல்லூரி, திக்வெல்லை மற்றும் தம்புள்ளை ஆகிய பகுதி பாடசாலைகளில் பதிவாகியுள்ளன. இத்தகைய வதந்திகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப் போவதாக பொலிஸார் தெரிவித்தனர். இந் நிலையிலேயே பாடசாலைகளில் பரவிய வதந்திகளால் பெற்றோர் மத்தியில் வீண் அச்சம் ஏற்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு கல்வி அமைச்சு நாளை முதல் எதிர்வரும் ஏப்ரல் 20 ஆம் திகத…

  3. முடிவுகளை அறிவிக்க வேண்டாம் Editorial / 2024 நவம்பர் 14 , பி.ப. 06:13 - தேர்தல்கள் ஆணைக்குழுவினால், உத்தியோகபூர்வ முடிவுகள் அறிவிக்கப்படும் வரையிலும், உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை அறிவிக்க வேண்டாம் என்று ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது. https://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/முடிவுகளை-அறிவிக்க-வேண்டாம்/150-347131

  4. VOTE FOR "Sri Lanka's Killing Fields" For Bafta TV Awards 2012/ Takes One Second to vote & forward to others http://www.radiotime...in#pd_a_6166811 http://www.radiotime...in#pd_a_6166811 http://www.radiotime...in#pd_a_6166811

  5. உறவுகளே, இலங்கை பாராளுமன்ற தேர்தல் முடிவுகளை இப் பொதுத் திரியில் தொடர்ச்சியாக பதியவும். முன்னரும் தேர்தல் முடிவுகளை வெளியிடுவதில் யாழ் இணையம் பொதுவாகவே வேகமாக செயற்பட்டு வந்துள்ளமையால் இம் முறையும் ஒவ்வொரு முடிவுகளும் வெளிவரும் போது உடனடியாக இத் திரியிலேயே தொடர்ந்து பதிவோம்

  6. சுனாமி அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், மீள் குடியேற்றப்பட்ட பிரதேசங்களில், மதத்தை மாற்றுவதற்கான செயற்பாடுகள் மிக விரைவாக இடம்பெறுவதாகவும், அதனைத் தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமெனவும், அப்பிரதேசத்திலுள்ள மக்கள் தெரிவிக்கின்றனர். வடக்கு, கிழக்கில் இவ்வாறான செயற்பாடுகள் மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் அதேவேளை, கிழக்கில், மட்டக்களப்பு - பாசிக்குடா பகுதியிலேயே மதத்தை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மிகவேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றனவென, பிரதேசவாசிகள் எமக்குப் புகார் கடிதம் அனுப்பியுள்ளனர். மதமாற்றத்தால், மக்களுக்கிடையில் தேவையில்லாத பிரச்சினைகளும், மதம்மாறிச் சென்றவர்கள், ஏற்கெனவே, கடைபிடித்த மதத்தை நிந்திப்பதனால், வேண்டாத கசப்புணர்வுகள…

  7. நடந்து முடிந்துள்ள வட மாகாண சபையின் தேர்தல் முடிவுகளை பதிவு செய்வதற்கான பதிவு. நான் முடிந்த வரையில் பதிவு செய்ய முயற்சிக்கும் அதே வேளையில் ஏனையவர்களும் தாம் அறியும் முடிவுகளை இணைத்துங் கொள்ளுங்கள்...

  8. நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து? தமிழரசுக் கட்சியின் யாப்பின் பிரகாரம் பொதுச்சபைக் கூட்டத்தில் 161 பேர் மாத்திரமே கலந்து கொள்ள முடியும். ஒவ்வொரு தொகுதியிலிருந்தும் எத்தனை பேர் கலந்து கொள்ள வேண்டும் என யாப்பில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. ஆனால் திருகோணமலையில் கடந்த மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற பொதுச் சபைக் கூட்டத்தில் 300 இற்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டிருந்தனர். பொதுச் செயலாளருக்கான தேர்தலில் 320 பேர் வாக்களித்திருக்கிறார்கள். ஆகவே மேலதிகமாக வாக்களித்த உறுப்பினர்கள் எங்கிருந்து எப்படி வந்தார்கள். இந்த உறுப்பினர்களின் அதிகரிப்பு தொடர்பாக யாப்பில் குறிப்பிடப்படாததன் நோக்கம் தொடர்பாக கேள்விகள், சந்தேகங்கள் எழுந்துள்ளன. …

  9. கொழும்பில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சம்பந்தர் காலமானார்

  10. ஏப் 21, 2010 மணி தமிழீழம் மே 18 - போர்க்குற்ற நாள் தமிழீழ மக்கள் அவை, அனைத்துலகச் செயலகம் மே 18 நாளை போர்க்குற்ற நாளாக பிரகடனப்படுத்துகிறது. அன்பார்ந்த தமிழ் ௨றவுகளே, மே 18... சிங்கள தேசம் எங்கள் மக்கள் மீது நிகழ்த்திய கொடூர யுத்தத்தின் இறுதி நாள்... கொத்துக் குண்டுகளும், எங்கள் மக்கள் மீது கொடூர நச்சுக் குண்டுகளும் பரீட்சித்துப் பார்த்த நாள்... எங்கள் மக்கள் பல்லாயிரக்கணக்கில் உயிரோடு புதைக்கப்பட்ட நாள்... மே 18... எங்கள் நெஞ்சங்களை ரணமாக்கிய நாள்... பூக்களும், பிஞ்சுகளும், காய்களும், பழங்களுமாய் பூத்துக் குலுங்கிய எங்கள் தேசத்து ஆலம் விருட்சம் வேரோடு சாய்க்கப்பட்ட கரி நாள்... உயிர் காக்க, உடல் …

  11. Jaffna Polling Divisions Results Nallur Logo Candidate Vote Pre % Sajith Premadasa 27,605 86.02% Gotabaya Rajapaksa 1,836 5.72% M. L. A. M. Hizbullah 659 …

  12. உண்மையா Deep Fake ’கா உலகம்தான் சொல்லணும்

  13. 2009 ஈழத்தில் நடந்த இறுதிப் போரின் போது கொல்லப்பட்ட தமிழ் மக்களின் நினைவாகவும் இனப்படுகொலையை நினைவு கூறும் வகையிலும் தஞ்சை விளார் சாலையில் இரண்டரை ஏக்கர் நிலத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைக்கப்பட்டு 8 -ம் தேதி திறக்கப்பட்டது. கற்சிற்பங்கள், ஓவியங்கள் என காண்போர் மனதை நெருடும் வகையில் அமைக்கப்பட்டிருந்த இந்த முற்றத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா விரும்பவில்லை என்று தெரிகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை 500 -ம் அதிகமான போலீசாரின் மேற்பார்வையில் முற்றம் இடிக்கப்பட்டு வருகிறது. இதனால் தஞ்சையில் பதட்டம் எழுந்துள்ளது. "முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் முன் பகுதியில் உரிய அனுமதி பெற்று சட்டப்பூர்வமாக அமைக்கப்பட்டிருந்த இந்தப் பூங்கா இன்று அதிகாலை 5.30 மணியளவில் அத்தும…

  14. இலங்கையில் இன்று நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை லங்காசிறியின் நேரலை ஊடாக உடனுக்குடன் பெற்றுக்கொள்ள முடியும். இலங்கை ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் சிறப்பு நேரலையை இந்த இணைப்பில் பார்வையிடலாம். மேலும் உங்கள் கருத்துக்களுடன் நீங்களும் நேரலையில் இணைந்துகொள்ளலாம். https://tamilwin.com/article/sri-lanka-presidential-election-2024-live-updates-1726934857#google_vignette திருவுளச்சீட்டு முறையின் மூலம் வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவார் : தேர்தல் ஆணையாளர் வெளியிட்ட அறிவிப்பு நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள் ஒரு எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்றுக்கொண்டிருந்தால் திருவுளச் சீட்டு முறையின் மூலம் வெற்றியாளர் தீர்மானிக்கப்படு…

  15. சிறிலங்கா விமான நிலையப் பகுதியில் தாக்குதல் நடக்கிறதா? தற்போது கிடைத்த செய்தி என்று குறிப்பிடப்பட்டு இப்படியொரு செய்தி அல்ஜசீறா தொலைக்காட்சியில் சொல்லப்பட்டது. மேலதிக விபரங்கள் எதுவும் சொல்லப்படவில்லை. தகவல் தெரிந்தவர்கள் யாராவது இருந்தால் பதிவிடுங்கள்

  16. இந்தத் திரியில் சிறிலங்கா சனாதிபதித் தேர்தல் முடிவுகளை முடிந்தளவுக்கு தர முயல்கின்றேன். ஏனையவர்களும் தொடர்ந்து கிடைக்கப்பெறும் முடிவுகளை தாருங்கள் UPFA: மகிந்த NDF: சரத் நாடளாவிய ரீதியில் மஹிந்த: 6,015,934------57.88% சரத்: 4,173,185------40.15% சிவாஜிலிங்கம்: 9,662-------0.09% விக்கிரமாகு: 7,055-------0.07% தொகுதி ரீதியான முடிவுகள் Galle / Karandeniya Mahinda Rajapaksha 34,809 --71.00% Sarath Fonseka 13,420 -27.37% கண்டி / கம்பளை Mahinda Rajapaksha 33,078 49.62% Sarath Fonseka 32,090 48.14% Matara District /Kamburupitiya Mahinda Rajapaksha 40,879 --70.04% Sarath Fonseka 16,561 --28.37% வித்திய…

    • 272 replies
    • 22.3k views
  17. கவிஞரும் யாழ் கள உறுப்பினருமான ஜெயபாலன் அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக முகப்புத்தகம் வாயிலாக அறிந்தேன். இந்தச் செய்தியை கள உறுப்பினர் என்ற வகையில் உங்களுடனும் பகிர்ந்து கொள்கிறேன். இது குறித்த மேலதிக தகவல்கள் தெரிந்தவர்கள் இணைக்கவும்

      • Like
    • 264 replies
    • 31.1k views
  18. நவரத்தினம் கபில்நாத் 'கண்விழியுங்கள் இந்துக்களே, இந்து சமயம் அழிந்தால் அழியட்டும் என்ற எண்ணம் கொண்ட இந்து சமயத்தவரா நீங்கள்? ஆம் என்றால் இதை தொடர்ந்து வாசிக்காதீர்கள்' என்ற தலைப்புடன் வவுனியா முழுவதும் துண்டு பிரசுரங்கள் வெள்ளிக்கிழமை இரவு போடப்பட்டுள்ளன. சிவசேனா, (பிற மதத்தவரின் கருத்தில் சாத்தானின் பிள்ளைகள்) என உரிமைகோரப்பட்டுள்ள இத் துண்டு பிரசுரத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 'இந்துக்கள் யாரும் மற்ற மதத்தினரை இந்து மதத்திற்கு மாற்ற முயற்சிப்பது இல்லை. இந்துக்கள் மற்ற மதத்தவரின் பழக்கவழக்கங்களை தரகுறைவாக பேசுவதும் இல்லை. இந்துக்கள் பிற மத கடவுள்களை தீய சக்திகளாக (சாத்தான்களாக) சித்தரிப்பதில்லை. உலகின் பழமையான மதமாக இருந்தாலும் பெரும்பான்மையான மதமாக…

  19. எரி­பொ­ருளை கட­னா­கத் தரு­வீர்­களா? பேச்சை ஆரம்­பித்­தது அரசு! எரி­பொ­ருள் கொள்­வ­ன­வுக்கு கடன் பெற்­றுக்­கொள்­வது தொடர்­பி­லும், எரி­பொ­ ரு­ளைக் கட­னா­கப் பெற்­றுக்­கொள்­வது தொடர்­பி­லும் இந்­தியா மற்­றும் ஐக்­கிய அரபு இராச்­சி­யத்­து­டன் இலங்கை அரசு பேச்­சு­களை ஆரம்­பித்­துள்­ளது. இதன்­படி இந்­திய அர­சி­ட­மி­ருந்து 500 மில்­லி­யன் அமெ­ரிக்க டொலர் கடன் பெற்­றுக்­கொள்­வது தொடர்­பில் இலங்கை அரசு பேச்­சு­களை ஆரம்­பித்­துள்­ளது என ஜனா­தி­பதியின் செய­லா­ளர் பி.பி.ஜய­சுந்­தர தெரி­வித்­துள்­ளார் என்று ‘எக­னமி நெக்ஸ்ட்’ செய்தி வெளி­யிட்­டுள்­ளது. நிலு­வை­யில் உள்ள எரி­பொ­ருள் கொள்­வ­ன­வுக்­கான தொகை­யைச் செலுத்­து­வ­தற்­கும் புதி­தாக எரி­பொ­ருள் கொள்­வ­னவு செய்­வ­தற…

  20. இலங்கையின் பாராளுமன்ற தேர்தல் வரும் 5 ஆம் திகதி நடைபெற உள்ளது அது சம்பந்தமாக யாழ் கள உறவுகளிடம் ஒரு வாக்கெடுப்பு அனைவரும் பங்கெடுப்பீர்கள் என நம்புகிறேன்

  21. தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியிலில் திரு சுமந்திரன் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படுவாரா?

  22. இன்றைய தினம் நிதர்சனம்.கொம் இல் வெளிவந்துள்ள "யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக சிங்களப்படைகளின் ஒற்றன் நியமனம்" என்ற தலைப்பில் வெளிவந்துள்ள செய்தியானது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. கலாநிதி ஜீவன் ஹூல் அவர்கள் மிகவும் மதிப்பிற்குரிய புத்திஜீவிகளில் ஒருவர் என்பது பேராதனைப் பல்கலைக்கழக சமுதாயம் அனைத்திற்கும் தெரிந்த விடயம். அவர் தமிழ் சமூகத்தைச் சேர்ந்தவராயிருப்பது அனைத்துத் தமிழருக்கும் பெருமை தரும் ஒரு விடயம். நான் நினைக்கிறேன் நிதர்சனம் ராஜன் ஹூல் (UTHR என்ற பெயரில் அடிக்கடி அறிக்கை விடுபவர்) என்பவருடன் கலாநிதி ஜீவன் ஹூலின் பெயரைப் போட்டு, தான் குழம்பியதுமல்லாமல் மற்றவர்களையும் குழப்பி கற்பனையான ஒரு தலையங்கத்தை தனது செய்திக்கு இட்டுள்ளது.

    • 248 replies
    • 30.9k views
  23. அவுஸ்திரேலியா நோக்கி இந்தியாவிலிருந்து ஆபத்தான கடற்பயணத்தை மேற்காண்டிருந்த 153 இலங்கை தமிழர்களுக்கு என்ன நேர்ந்தது என்பது மர்மாக உள்ள அதேவேளை இவர்களை அவுஸ்திரேலிய கடற்படையினர் இலங்கை கடற்படையிடம் ஒப்படைத்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. படகிலிருந்தவர்கள் அனைவரும் இலங்கை கடற்படையினரிடம் கையளிக்கப்பட்டு உள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவலகள் தெரிவிப்பதாக கிறிஸ்மஸ் தீவின் ஜனாதிபதி கோர்டன் தோம்சன் தெரிவித்துள்ளார். படகிலிருந்தவர்கள் எவரும் கரைக்கு அழைத்துச் செல்லப்பட்டதற்கான அறிகுறிகளோ அல்லது படகோ தென்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/108816/language/ta-IN/article.aspx

    • 247 replies
    • 12.1k views
  24. இன்று வன்னிப் பகுதியில் தாக்குதல் நடாத்த வந்த கிபீர் விமானம் தாக்குதலுக்கு உள்ளானதாகவும், அது புகைந்து கொண்டு சென்றதை மக்கள் கண்டதாகவும் ஊர்ஜிதப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.