Jump to content

பச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.


Recommended Posts

  • Replies 2.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

 photo-thumb-1409.jpg   Bildergebnis für cograts  gif   Bildergebnis für cograts  gif

சிறந்த கருத்துக்களை... ஆதாரபூர்வமாக இணைப்பதில்  மருதங்கேணியும்  ஒருவர். :101_point_up:
இவர்  கருத்துக்களை பதியும் போது... அதற்கு முன், 
அதனைப் பற்றிய தேடல் அதிகம் இருப்பதை பல இடங்களில் அவதானித்துள்ளேன்.

பல விடயங்களில்.... இவரின் நினைவாற்றலை கண்டு அதிசயத்துள்ளேன்.
தாயகப் பற்று மிகுந்த இவரின் கருத்துக்களில்... 
உள்ள நியாயங்களை  வாசிக்கும் போது,  மகிழ்ச்சியாக இருக்கும். 

"சுசி லீக்ஸ்"
:D: போன்ற "கிசு, கிசு" tw_tounge_xd: தலைப்புகளில்.....  இவர் பதியும், பதிவுகள்... 
மிகுந்த சிரிப்பை வரவழைக்கும்.
:grin: வாழ்த்துக்கள் மருது.  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மருதருக்கா....? ஆயிரமா...?

இப்போது தானா..?

எப்போதோ இவர் ஆயிரத்தைக் கடந்திருக்க வேண்டுமே!

நல் வாழ்த்துக்கள்....மருதர்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மருது யாழ் விளைநிலத்தின் எருது ....!

வாழ்த்துக்கள் மருதர்....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

மருதங்கேணி தற்பொழுது 1000 பச்சைப் புள்ளிகள் பெற்று அமைதியாக களம் காண்கிறார்..!

இனிய வாழ்த்துக்கள்..! vil-super.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, புங்கையூரன் said:

மருதருக்கா....? ஆயிரமா...?

இப்போது தானா..?

எப்போதோ இவர் ஆயிரத்தைக் கடந்திருக்க வேண்டுமே!

நல் வாழ்த்துக்கள்....மருதர்!

உந்த கேள்விதான் எனக்கும் வந்தது.:grin:

மருதங்கேணியே! நீவீர் இன்னும் பல்லாயிரம் பச்சை நட்சத்திரங்களை பெற வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாவ் ... எல்லோருடைய அன்பிற்கும் 
பாராட்டுகளுக்கு நன்றி !

பச்சையை பெரிதாக நான் பார்ப்பதில்லை 
தமிழ் என்ற பாசம் தான் முக்கியம் 
அதனோடு தொடர்ந்தும் யாழில் பயணிப்பதே 
மகிழ்ச்சி ! 

எல்லோரும் பயண கட்டுரை வரைவதால் .....
நானும் ஒன்றை வரையலாம் எனும் எண்ணத்தோடு 
இன்று ஒரு பயணம் போகிறேன்   கங்கூன் என்று மெக்ஸிகோ வில் ஓர் நகரம்.

பெரிதாக இங்கு எதுவும் இல்லை சுற்றுலா கேளிக்கை க்கு என்று தென் அமெரிக்காவில் 
ஓர் நகரம் அவளவுதான்.

கூடிய வரையில் கொஞ்சம் படங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்!

மீண்டும் எல்லோருக்கும் நன்றி ! 

ஈழப்பிரியன் அண்ணாவிற்கு பாராட்டுக்கள்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மருதர் இன்னும் பல்லாயிரம் பச்சைகளை அள்ளிக்குவிக்க வாழ்த்துக்கள்!

மெக்சிக்கோ பயணம்கட்டுரையை ஆவலோடு எதிர்பார்க்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மருதங்கேணிக்கும் ஈழப்பிரியனுக்கும் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

உறவுகளின் உள்ளங்களை உழுது பச்சைகள் பெற்ற மருதங்கேணி அவர்களுக்கு வாழ்த்துக்கள்!!

Bildergebnis für ரதி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மருதங்கேணிக்கும் ஈழப்பிரியனுக்கும் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் மருதர்..தொடர்ந்து எழுதுங்கோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1000 பச்சை விருப்பப் புள்ளிகளைப் பெற்ற மருதங்கேணிக்கு வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்.. vil2_nuage.gif

 கடுந்தமிழில் கவிதைகள் குறைந்தாலும், குடும்ப பொறுப்புகளிடையே யாழில் தொடர்ந்து எழுதும் ஒரு சில அம்மணிகளில் கவனிக்கத்தக்க வகையில் பதிவிடும் பீனிக்ஸ் பறவையான
"வல்வை சகாரா" சமீபத்தில் 1000 பச்சைப் புள்ளிகளை பெற்று மிளிர்கிறார்..

அவருக்கு எம் மனமார்ந்த வாழ்த்துக்கள்..!

 

u8revF.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சகோதரி....., வெறும் பச்சைகளால் உங்களின் பங்களிப்பை எடைபோட முடியாதுதான், ஆனாலும் எமது விருப்பைத் தெரிவிக்க அதுதானே வழியாய் இருக்கு....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் பல்லாயிரம் பச்சைப் புள்ளிகளை அள்ளிக் குவிக்க வாழ்த்துக்கள் சகாறா அக்கா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரம் பச்சைகளைப் பெற்ற சகாராவுக்கு வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சகாரா.

இவ்வளவு நாளும் வேலையில் வாங்கிய பச்சை காணும்.இனி யாழில ; வாங்குங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் பல ஆயிரம் பச்சைகள் வாங்கிக் குவிக்க வாழ்த்துக்கள் சகாறா!

அடிக்கடி என்று இல்லாவிட்டாலும்...இடைக்கிடையாவது  தலை காட்டுங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவருக்கு  மனமார்ந்த வாழ்த்துக்கள்..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 👍..... மூன்று கிழமைகள் ஊர் போயிருந்தேன். திரும்பி வந்தவுடன் கொஞ்சம் அசதியாகப் போய் விட்டது....
    • மேலும் தொடருங்கள் வாசிக்க காத்திருக்கிறோம். சில நாட்களாக காணவில்லை என எண்ணினேன் தாயாக பயணமா ?
    • நீங்கள் முதலில் சிங்கள அரசுகளின் தயவிலேயே தமிழ் மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்று கருதுவதை நிறுத்த வேண்டும். ஏனென்றால், தமிழர்களைச் சிங்கள அரசுகள் கைவிட்டு கிட்டத்தட்ட 76 வருடங்கள் ஆகிவிட்டது. சிங்கள அரசுகளுக்கு தமிழர்களின் நலன்களைக் காப்பததைத்தவிர வேறு தலையாய கடமையே இல்லை எனும் ரேஞ்சில் எழுதுகிறீர்கள். தமிழர்களின் வாழ்வாதாரமும், வளமான தாயகமும், மேய்ச்சல் நிலங்களும் நீங்கள் கூறும் அதே சிங்கள அரசுகளாலேயே காவுகொள்ளப்பட்டன. ஆயுதப் போராட்டம் ஆரம்பித்த காலத்திலிருந்தே வடக்கும், வன்னியும், கிழக்கின் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழான பகுதிகளும் இலங்கை அரசினதும், இராணுவத்தினதும் பூரண பொருளாதாரத் தடைக்குள்ளேயே இருந்துவந்தன. அதற்காக, அங்கிருந்த தமிழர்கள் பட்டிணியால் இறந்துவிடவில்லை. தமது கைகளில் இருந்த வளங்களைக் கொண்டு தமது வாழ்வாதாரத்தைப் பார்த்துக்கொண்டார்கள். வன்னியில் ஓரளவிற்கு தன்னிறைவை அவர்கள் ஒருகட்டத்தில் அடைந்திருந்தார்கள். 2005 முதல் 2009 வரையான காலப்பகுதியில் வன்னிமீது மகிந்த இறுக்காத த‌டையினையா  இனிவரும் சிங்களத் தலைவர் இறுக்கப்போகிறார்? சரி, அதை விடுங்கள், 2020 ‍- 2022 வரையான கொரோணாப் பகுதியில் மொத்த நாடுமே வீதிக்கு வந்தபோது வடக்கும் கிழக்கும் தம்மைத் தாமே பார்த்துக்கொண்டன. நிரந்தரமாகவே சிங்கள அரசுகளின் பொருளாதாரத் தடையினை முகம்கொடுத்துவரும் தமிழ்ச் சமூகம் தன்னை மீண்டும் சுய பொருளாதாரத்திற்கு மாற்றிக்கொள்ள அவர்களின் முன்னைய அனுபவம் கைகொடுத்தது. 80 களின் ஆரம்பத்திலிருந்தே புலம்பெயர் தமிழ்ச் சமூகம் தாயகத்தில் இருக்கும் உறவுகளுக்கு உதவியே வருகின்றன. கிட்டத்தட்ட 40 வருடங்களாக இது தொடர்கிறது. எப்போது நிற்கும் என்று கேட்டால் என்னிடம் பதில் இல்லை. வடக்கிற்கும் கிழக்கிற்கும் இடையே கிடைக்கும் புலம்பெயர் உதவிகளின் அள்வில் ஏற்றத்தாள்வு இருக்கிறது என்பதை நான் மறுக்கவில்லை. மலையகத் தமிழர்கள் நிச்சயமாக தமிழ் வேட்பாளருக்கு வாக்களிக்கப்போவதில்லை. அவர்களது தலைமை நிச்சயம் அவர்களை தான் முடிவெடுக்கும் சிங்கள வேட்பாளருக்கே வாக்களிக்கும்படி பணிக்கும். இலங்கைத் தமிழர்களுக்கும் மலையகத் தமிழர்களுக்குமான அரசியல் தொண்டைமானின் பிரிவிலிருந்தே வேறு பாதையில் பயணிக்கத் தொடங்கிவிட்டன. ஆகவே, புதிதாக வரும் சிங்கள ஜனாதிபதி அவர்களை இக்காரணத்திற்காக வஞ்சிப்பார் என்று நினைக்கவில்லை.  உங்களுக்கு ஓவியம் வரையும் திறமை இருப்பது நாம் எல்லோரும் அறிந்ததே. அதற்காக மற்றையவர்களின் கருத்துக்களுக்கு ஓவியம் வரைந்து பதிலளிக்கவேண்டும் என்று கட்டாயம் இல்லை. முடிந்தால் எழுதுங்கள். 
    • நந்தன் எனும் தெய்வத்தை கண்டதில் மிகப்பெரிய சந்தோசம்.🙏🏼 ஏன் எழுதுவதில்லை தலைவா?👈🏽 எழுதுங்கள் வாசிக்க காத்திருக்கின்றேன். 
    • எனக்கும் கூட்டல் பெருக்கல் கணக்கு வருகின்றது. தொடருங்கள். வாசிக்கலாம்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.