Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கில் வெளியாகியுள்ள, மிக மோசமான இனவாத பிரசுரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வன்மையாக கண்டிக்கிறேன்...முஸ்லீம் மக்கள் வேறு பயங்கரவாதிகள் வேறு...முஸ்லீம்கள் எமது உடன்பிறவா Bro... 

இப்படிக்கு 
 நடுநிலைசிங்கம்  

  • கருத்துக்கள உறவுகள்

மிக தவறு.

அம்மானோட வேலையோ?

  • கருத்துக்கள உறவுகள்

பல்லினங்கள் வாழும் ஒரு சமூகத்தில், ஒரு சமூகம் மட்டும் ஏதாவது ஒரு துறையில் சராசரி விகிதத்தைவிட அதிகமாக பிரதினிதித்துவப்படித்தினால் அங்கு சமூக அமைதி குழம்பும்.


இது வர்த்தகம், கல்வியில் மட்டும் இல்லை, வறுமையே ஆலும் கூட.

இது ஸ்ரீலங்காவுக்கோ அல்லது மூன்றாம் உலக நாடுகளுக்கோ உரிய பிரச்சனை மட்டும் இல்லை, மேற்கு நாடுகளுக்கும் இது பொருந்தும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் அறிக்கை விட்டது தப்பு, அவர்கள் அறிவிக்காமல் செய்வது போல (தங்கட ஆக்களின் கடைகளிலேயே) நாங்களும் வாங்க வேண்டும்.

தமிழ் இனமும் முஸ்லீம் சகோதர இனமும் பிளவு பட்டு நிற்பதை என்றும் சிங்களம் கண்ணும் கருத்துமாக பாதுகாக்கும் !

நேற்று யாழில் முன்னாள் போராளிகளை சந்தித்து சிங்கள இராணுவம் அவர்களை தமக்காக வேலை செய்ய சொல்லி கேட்டிருந்தது. இந்த அழைப்பை ஏற்று வர மறுக்கும் பட்சத்தில் போராளிகள் மூலம் பயங்கரவாத சட்டமைப்பின்  கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டியுள்ளது சிங்களம். இதை வன்னியில் கூட சிங்களம் செய்திருக்கின்றது.  https://tamilnet.com/art.html?catid=13&artid=39431

இன்று இந்த சுவரொட்டிகளை கூட சிங்கள இராணுவமே ஒட்டியிருக்கும் இல்லை ஒட்ட வைத்திருக்கும். அதே மிரட்டலையும் செய்திருக்கும். 

எவ்வாறு பிரித்தானியா பிரித்து ஆண்டதோ அதையே சிங்களம் செய்கின்றது.

 

அண்மையில் பெண்கள் வாழ்நாள் முழுவதும் குழைந்தை பெறமுடியாத மாத்திரைகளை முஸ்லீம் கடைகளில் பெருமளவில் கைப்பற்றியுள்ளனர்! இவை தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் விற்கப்பட்டு வந்துள்ளது!

எனவே தமிழர்கள் முஸ்லிம்களின் கடைகளில் பொருட்களை வாங்குவதை முடிந்தளவு தவிர்க்க வேண்டும்!

இது முஸ்லிம் மதவெறிப் பயங்கரவாதத்திலிருந்து தமிழர்களை பாதுகாத்துக்கொள்ளும் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை!

625.0.560.320.160.600.053.800.700.160.90

625.0.560.320.160.600.053.800.700.160.90

625.0.560.320.160.600.053.800.700.160.90

https://www.tamilwin.com/security/01/213667?ref=home-feed

 

Edited by போல்

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, போல் said:

அண்மையில் பெண்கள் வாழ்நாள் முழுவதும் குழைந்தை பெறமுடியாத மாத்திரைகளை

இப்படியொரு மாத்திரை இருக்கிறதா ?

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பெருமாள் said:

இப்படியொரு மாத்திரை இருக்கிறதா ?

இருக்கும் யார் கன்டது. அவர்களின் வளர்ச்சிக்கு நாங்கள் யுப்பி.

1 hour ago, பெருமாள் said:

இப்படியொரு மாத்திரை இருக்கிறதா ?

கருக்கலைப்புக்கு என்று கூட ஒரு மாத்திரை இருப்பதாக தெரியவில்லை. இவ்வாறான மாத்திரைகள் இல்லாமையால் தான் அனுமதி பெறாத பல கருக்கட்டல் நிலையங்கள் இயங்கி வருகின்றன. கருக்கட்டல் நிகழா வண்ணம் பார்த்துக் கொள்ள மட்டுமே மாத்திரைகள் இருப்பதாகவே அறிந்து இருக்கின்றோம்.

இது சிங்கள புலனாய்வுப் பிரிவால் கசிய விடப்பட்டு பின் தமிழ் வின்னால் ஊதி பெருப்பிக்கப்பட்ட செய்தி போல இருக்கு

 

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம்களுக்கு "ஹலால்" பண்டங்கள் போல தமிழர்களும் "அரோஹரா" என்ற ஒரு புது கப்ஸாவை உருவாக்கி 
நம் வியாபாரங்களை ஊக்குவிக்கலாம்.
"அரோஹரா வெங்காயம் "
"அரோஹரா கருப்பட்டி"
"அரோஹரா மண்ணெண்ணெய் "

ஆகா... கேட்கவே வாய் மணக்கிறது..

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, putthan said:

வன்மையாக கண்டிக்கிறேன்...முஸ்லீம் மக்கள் வேறு பயங்கரவாதிகள் வேறு...முஸ்லீம்கள் எமது உடன்பிறவா Bro... 

இப்படிக்கு 
 நடுநிலைசிங்கம்  

உந்தச் சிங்கங்களிடம் ஒருக்கா கேட்டுச் சொல்லுங்கோ.. வடக்கிலும் கிழக்கிலும் மேற்கிலும்.. தெற்கிலும்.. எல்லாத் திசைகளிலும்.. தமிழர்களை எந்த வித்தியாசமும் இன்றி காட்டிக்கொடுத்ததும்.. கொலை செய்ததும்.. கைது செய்து சித்திரவதை செய்ததும்... எந்த வகைக்குள் அடங்கும் என்று. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, colomban said:

கிழக்கில் வெளியாகியுள்ள, மிக மோசமான இனவாத பிரசுரம்

கொழும்பான் ...இந்த தலையங்கம் நீங்கலாக கொடுத்ததோ 
என்னை கேட்டால் அப்படி ஒன்றும் "மிக மோசமான இனவாத பிரசுரம்" போல தெரியவில்லை.
எங்கள் இனத்து பெண் பிள்ளைகளை கடத்திச்சென்று ..
கட்டாய , மிரட்டல் பாணியில் கல்யாணம் செய்து..,
மிகவும் நயவஞ்சகமான முறையில் தற்கொலை  குண்டுதாரியாய் மாற்றி.. 

குடும்பத்தையும் ,நாட்டையும் சின்னாபின்னமாக்கி ....
இதை எப்படியாம் எழுதுவீர்கள்...
 

Edited by Sasi_varnam

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கில் வெளியாகியுள்ள, மிக மோசமான இனவாத பிரசுரம்

colompanuக்கு..அக்குரனை,யாழ்ப்பாண  ...செய்திகள்.. மென்மைப் போக்குடையவை..

Edited by alvayan

5 hours ago, போல் said:

அண்மையில் பெண்கள் வாழ்நாள் முழுவதும் குழைந்தை பெறமுடியாத மாத்திரைகளை முஸ்லீம் கடைகளில் பெருமளவில் கைப்பற்றியுள்ளனர்! இவை தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் விற்கப்பட்டு வந்துள்ளது!

எனவே தமிழர்கள் முஸ்லிம்களின் கடைகளில் பொருட்களை வாங்குவதை முடிந்தளவு தவிர்க்க வேண்டும்!

இது முஸ்லிம் மதவெறிப் பயங்கரவாதத்திலிருந்து தமிழர்களை பாதுகாத்துக்கொள்ளும் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை!

625.0.560.320.160.600.053.800.700.160.90

625.0.560.320.160.600.053.800.700.160.90

625.0.560.320.160.600.053.800.700.160.90

https://www.tamilwin.com/security/01/213667?ref=home-feed

 

எனக்கு தெரிந்து அப்படி ஒரு மாத்திரை இல்லை , ஒவ்வொரு நாளும் எடுத்துகொள்ளவேண்டும் கருக்கட்டலிருந்து தப்பிக்க ,எப்போது நிறுத்துகிறாரோ அடுத்துவரும் நாட்களில் அவர் கருகட்டலுக்கு தயாராகி விடுவர்.. கொத்துரொட்டி கடைகளிற்கு பெண்கள் அதிகளவில் போகிறார்களா என்ன? 

ஆண்களிற்கு இப்படியான ஒரு மாத்திரை இன்னும் வரவில்லை 

இது வெறும் போதை மாத்திரையாக  இருக்கதான் சந்தர்ப்பங்கள் அதிகம் 

15 hours ago, colomban said:

மட்டக்களப்பு நகரபகுதியின் 90வீதமான கடைகள்அவர்களிடமாம் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, பெருமாள் said:

இப்படியொரு மாத்திரை இருக்கிறதா ?

3 hours ago, நிழலி said:

கருக்கலைப்புக்கு என்று கூட ஒரு மாத்திரை இருப்பதாக தெரியவில்லை. இவ்வாறான மாத்திரைகள் இல்லாமையால் தான் அனுமதி பெறாத பல கருக்கட்டல் நிலையங்கள் இயங்கி வருகின்றன. கருக்கட்டல் நிகழா வண்ணம் பார்த்துக் கொள்ள மட்டுமே மாத்திரைகள் இருப்பதாகவே அறிந்து இருக்கின்றோம்.

இது சிங்கள புலனாய்வுப் பிரிவால் கசிய விடப்பட்டு பின் தமிழ் வின்னால் ஊதி பெருப்பிக்கப்பட்ட செய்தி போல இருக்கு

 

5 minutes ago, அபராஜிதன் said:

எனக்கு தெரிந்து அப்படி ஒரு மாத்திரை இல்லை , ஒவ்வொரு நாளும் எடுத்துகொள்ளவேண்டும் கருக்கட்டலிருந்து தப்பிக்க ,எப்போது நிறுத்துகிறாரோ அடுத்துவரும் நாட்களில் அவர் கருகட்டலுக்கு தயாராகி விடுவர்.. கொத்துரொட்டி கடைகளிற்கு பெண்கள் அதிகளவில் போகிறார்களா என்ன? 

ஆண்களிற்கு இப்படியான ஒரு மாத்திரை இன்னும் வரவில்லை 

இது வெறும் போதை மாத்திரையாக  இருக்கதான் சந்தர்ப்பங்கள் அதிகம் 

நீங்கள் எல்லோரும் எந்த உலகில் வாழ்கின்றீர்கள்??????

  • கருத்துக்கள உறவுகள்

எப்போது மார்கம் என்ற சகதிக்குள் விழூந்தார்களோ அன்றிலிருந்து முஸ்லீம் மக்கள் தமிழர்களிடம் இருந்து (அந்த மதங்களை திணிக்கும் கும்பலிடம் சிக்கி கொண்டார்களோ) பிரிய ஆரம்பித்தார்கள் கிழக்கை மத்திய கிழக்கை போல் நினைக்க தொடங்கினார்கள் அவர்கள் மெல்ல மெல்ல மாற்றம் அடைய மொத்தமாக தமிழர்களிடம் இருந்து பிரிந்து போனார்கள் இன்று தனியாக நிற்கிறார்கள் .

நம்ம நாடு ஓர் தனியான நாடு இல்லையென்பதை அவர்கள் இப்போது புரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள்  ஆனால் கிழக்கில் முஸ்லீம்கள் இனி தமிழர்களுடன் சார்ந்து  போக வேண்டும் இந்த துண்டு பிரசுரம் எல்லாம் வெறும் காகிதம் மட்டுமே நாளடைவில் குப்பைக்குள் சென்றுவிடும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

நீங்கள் எல்லோரும் எந்த உலகில் வாழ்கின்றீர்கள்??????

 

இது ஒரு சாம்பிளுக்கு இதை மாதிரி எத்தனையோ இருக்கு

 

https://www.cancerresearchuk.org/about-cancer/cancer-in-general/treatment/chemotherapy/fertility/men

  

Men's fertility and chemotherapy

Some chemotherapy drugs can affect a man’s fertility. Talk to your doctor about your risk of infertility. They can tell you more about the possibility of storing sperm.

How chemotherapy affects fertility

Being infertile means you cannot have children.

Not all chemotherapy drugs affect your ability to father a child. But some drugs can:

  • reduce the number of sperm you produce

  • affect the sperm's ability to fertilise an egg

    The infertility may be temporary or permanent. This depends on the drugs you have, the doses and your age. Permanent infertility is more likely if you have higher doses. 

    Some chemotherapy drugs can affect the nerves in the genital area. This can make it difficult for you to get or maintain an erection. This is usually temporary and gets better gradually once the treatment has finished.

    Most men can still get an erection and have an orgasm as they did before treatment. Chemotherapy drugs don't normally have any permanent effect on your sexual performance or your enjoyment of sex.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, nedukkalapoovan said:

உந்தச் சிங்கங்களிடம் ஒருக்கா கேட்டுச் சொல்லுங்கோ.. வடக்கிலும் கிழக்கிலும் மேற்கிலும்.. தெற்கிலும்.. எல்லாத் திசைகளிலும்.. தமிழர்களை எந்த வித்தியாசமும் இன்றி காட்டிக்கொடுத்ததும்.. கொலை செய்ததும்.. கைது செய்து சித்திரவதை செய்ததும்... எந்த வகைக்குள் அடங்கும் என்று. 

ஒரு சில முஸ்லீங்களின் செயலை வைத்துக்கொண்டு நாங்கள் எல்லா முஸ்லீம்களை தப்பா சொல்லக்கூடாதாம் என்று அந்த நடுநிலை சிங்கம் கர்ச்சிக்கின்றது...

அவர் தனது முகப்புத்தகத்தில் இப்படியும் எழுதியிருக்கிறார் ....தற்கொலைதாரிகள் பாவிக்கும் அங்கியை முதல் முதல் புலிகள்தான் அறிமுகப்படுத்தியவையளாம் ஆகவே அண்மைய குண்டுத்தாக்குதலுக்கு அவர்களைதான் குற்றம் சாட்டவேணுமாம்...

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, putthan said:

ஒரு சில முஸ்லீங்களின் செயலை வைத்துக்கொண்டு நாங்கள் எல்லா முஸ்லீம்களை தப்பா சொல்லக்கூடாதாம் என்று அந்த நடுநிலை சிங்கம் கர்ச்சிக்கின்றது...

அவர் தனது முகப்புத்தகத்தில் இப்படியும் எழுதியிருக்கிறார் ....தற்கொலைதாரிகள் பாவிக்கும் அங்கியை முதல் முதல் புலிகள்தான் அறிமுகப்படுத்தியவையளாம் ஆகவே அண்மைய குண்டுத்தாக்குதலுக்கு அவர்களைதான் குற்றம் சாட்டவேணுமாம்...

யார் அவர்? எங்களை போன்ற புதியவர்களுக்கு சொன்னால்தான் தெரியும் 

On 5/3/2019 at 8:09 AM, குமாரசாமி said:

நீங்கள் எல்லோரும் எந்த உலகில் வாழ்கின்றீர்கள்??????

கீழே உள்ளதை எழுதி இருப்பவர் ஒரு டாக்டர்- முகநூல்

 

https://m.facebook.com/story.php?story_fbid=10219134996747575&id=1286697015

 

 

ஒரு இனத்துக்காக குரல் கொடுப்பதென்பதில், அந்த இனத்தவர் எவ்வளவு அறிவு சார்ந்தவர்களாக தங்களை வெளிக்காட்டிக்கொள்கிறார்கள் என்பதும் அடங்கும். 

குழந்தையே பெற்றுக்கொள்ளமுடியாத மாத்திரைகள் கைப்பற்றப்பட்டிருக்கிறதாம். அதை நம் சந்தியில் நின்று சைட் அடித்து தமிழீழம் பெற நினைக்கும் போராளிக்குஞ்சுகளும் பகிர்ந்து தள்ளுகின்றன. நீங்க மண்டைக்குள்ள ஒன்றுமில்லாம மொக்குத்தனமா எழுதிறத பார்த்தா மற்றவர்கள்  நம்மைப்பற்றி என்ன நினைப்பார்கள்? நீங்க இனத்துக்கு ஏதும் செய்யவேண்டுமென்றால் பாசிபிடித்த மூளையோடு ஒன்றும் பேசாமால் இருப்பதே பெரிய உதவியாக இருக்கும்.

சரி 

இப்படி பவுடர்/ மாத்திரைபோட்டு கருத்தடை ஏற்படுத்தலாமா?

ஆண்கள் பயன்படுத்தும் கருத்தடைமாத்திரை இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.  அதை யாரும் கண்டுபிடித்தால் இப்படி கள்ளத்தனமாக விற்கவேண்டியதில்லை. ஒழுங்ககாக கொப்பி ரைட்ஸ் எடுத்து விற்றாலே ஒருமாதத்தில் அவர் உலகப்பணக்காரர் ஆகலாம். நோபல் பரிசும் நிச்சயம்.

பெண்களுக்கு இப்படியான மாத்திரைகள்மூலம் கருத்தடை ஏற்படுத்தலாமா?

அவ்வாறு ஏற்படுத்துவதென்றால் அந்தப்பெண் ஒவ்வொரு நாளும் அந்த மாத்திரை எடுக்கவேண்டும். அதை உட்கொள்வதை நிறுத்தி அடுத்த நாளே அவர் கருத்தரிக்கக்கூடிய நிலையை அடைந்துவிடுவார். 

நிரந்தரமாக கருத்தடை செய்ய சத்திரசிகிச்சையே ஒரே வழி. அப்படி நிரந்தரமாக கருத்தடைசெய்யும் மாத்திரைகளை கண்டுபிடிப்பவர், நிச்சயம் பில்கேட்ஸைவிட பெரும் பணக்காரர் ஆகிவிடுவார்.

கண்டுபிடிக்கப்படும் மாத்திரைகள் எவை?

1.வலி நிவாரணியாக பயன்படுத்தும் மாத்திரை.  அதன் இரசாயண உள்ளடக்கம் ஹெரோயினுக்கு ஒத்தது. ஆகவே அதை போதைவஸ்தாகவும் பயன்படுத்தலாம். அதனால் அவை ஒசுசலவில் மற்றுமே கிடைக்கும். அங்கே வைத்தியரின் சிட்டை இல்லாமல் ஒரு மாத்திரைகூட வாங்க முடியாது. இந்தியா போன்ற நாடுகளில் இதை எவரும் வாங்கலாம். ஆகவே அங்கேயிருந்து இதை கள்ளமாக கொண்டு வந்து போதை மாத்திரையாக.  விற்கிறார்கள். இந்த மாத்திரை ஒன்றின் விலை 3 ரூபாய். ஆனால் மார்க்கெட்டில் 200 ரூபாய்க்கும் மேல் கள்ளமாக விற்கிறார்கள். இவை அதிகமாக பிடிபடுபவது முஸ்லிம்களிடமிருந்து. அதை எழுதுங்கள். பாடசாலை மாணவர்களிடையே இப்படி போதைப்பழக்கம் பெருக முஸ்லிம்கள் பெரும் காரணமாக இருப்பதை சுட்டிக்காட்டுங்கள். (இதுவரை இப்படியொரு மாத்திரை முஸ்லிம் அல்லாத ஒருவரிடம் கைப்பற்றப்பட்டதாக ஒரு செய்தியும் நான் பார்க்கவில்லை. பாகிஸ்தானில் இவை இலகுவாகக் கிடைப்பதும் காரணமாகலாம்).

2. கருக்கலைப்பு மாத்திரை - இந்த மாத்திரைகள் மருத்துவ ரீதியாக கருக்கலைப்புக்காகவும், வேறு சில காரணங்களுக்காகவும் பயன்டுத்தப்படுகின்றன.  இவையும் எல்லாப் பார்சியிலும் இலகுவில் கிடையாது. இதையும் திருட்டுத்தனமாக கொண்டுவந்து சட்டவிரோத கருக்கலைப்புக்கு பயன்படுத்துகிறார்கள். ஒரு மாத்திரை 15 ரூபாய் என்றாலும் வெளியில் பல ஆயிரங்களுக்கு விற்கிறார்கள்.  கருக்கலைப்பு செய்வதற்கு இந்த மாத்திரை உட்கொள்ளவேண்டிய ஒரு முறை உள்ளது.  அதை சுவைதெரியாதபடி ஒருமுறை உட்கொள்ளும் உணவோடு சேர்துக்கொடுத்து கருக்கலைப்புச்செய்ய முடியாது. 
இந்தமாத்திரை கடத்தலிலும் அடிக்கடி முஸ்லிம்களே பிடிபட்டாலும் உள்ளூரில் இந்தமாத்திரையை சட்டவிரோத கருக்கலைப்புக்குப் பயன்படுத்துபவர்கள் தமிழர்கள்.

இந்த இரண்டு மாத்திரைகள் பிடிபட்டதும்தான் தமிழினத்தின் சனத்தொகை குறைவதற்கு இவைதான் காரணமென்று எழுதித் தள்ளுகிறோம். நம்முடைய சனத்தொகை குறைவதற்கான காரணம் நாம்தான் அவற்றை பிரிதொரு கட்டுரையில் எழுதுகிறேன்.

 

சில படித்தமனிதர்களே இப்படியான பொய்ச் செய்திகள் மூலமாவது முஸ்லிம்கடைகளுக்கு ஆட்கள்  போவதைத் தடுப்போம் என்கிறார்கள்.  முஸ்லிம் கடைகளுக்கு தமிழர்கள் போகவேண்டாமென மூச்சுமுட்டப் பேசுபவர்களும் பின்னேரமானால் முஸ்லிம் ஹொட்டல்களில் கொத்துவெட்டுவதை கண்டிருக்கிறேன். 

சிலர் சில இரசாயணங்களின் பெயரை கூகிள்பண்ணி அவை கருத்தடைக்கு பயன்படுத்தப்படலாமென எழுதிக்கொண்டிருக்கிறார்கள். அவை நஞ்சுகள். கொஞ்சம் கொஞ்சமாக உணவிலே கலந்து நீண்ட காலத்துக்குக்கொடுத்தால், அவை ஆளையே போட்டுவிடும். ஓஷோவும் இப்படித்தான் ஜெயிலில் இருக்கும்போது கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது. இப்படியான இரசாயணங்கள் எதுவும் இதுவரை பிடிபடவில்லை. 

தமிழர்கள் அதிகமாக வாழும் இடத்தில் வியாபாரம் சார்ந்த பொருளாதாரம் முஸ்லிம்வசம் போகின்றதேயென்ற கவலை எனக்கும் உள்ளது. 

அதற்கான காரணங்களை அலசி, முஸ்லிம்களோடு போட்டிபோட்டு வியாபாரச்சந்தையை நம் வசப்படுத்துவது எப்படி என்று பல கட்டுரைகள் எழுதியுள்ளேன். அவற்றைப்  பின்பற்ற யாரும் தயாரில்லை. அந்தக்கட்டுரைகளை கிட்டத்தட்ட 10 யிற்கும் மேற்பட்ட முஸ்லிம் இணையத்தளங்களால் பகிரப்பட்டன. நம்முடைய இணையத்தளங்கள் இன்னும் தமிழினத்தை அழிக்கும் மாத்திரைகளை வைத்திருந்த முஸ்லிம்கள் கைது என்ற அதிர்ச்சித் செய்தியைமட்டும் பகிர்ந்துகொண்டிருக்கின்றன. உங்களுக்கும், நல்லூரில் இருந்த முஸ்லீம்களை பன்றித்தலையைபோட்டு சோழமன்னன் துரத்தினான் என்று சொன்னவனுக்கும் வித்தியாசமில்லை.
 உங்களுக்குக் காலமெல்லாம் தமிழ் வின்னும், டியூப் தமிழும், IBC யும்தான் ஊடகங்கள்.
நாம் முன்னேறவேண்டும். அதற்கு அறிவுசார்ந்த இனமாக சிந்திப்போம், பேசுவோம், எழுதுவோம்.

Edited by அபராஜிதன்

  • கருத்துக்கள உறவுகள்

விரைவில் கிழக்கு மாகாணம் ஹிஸ்புல்லா மாகாணம் என்று அழைக்கப்படுமாம்   😉

5 hours ago, அபராஜிதன் said:

கீழே உள்ளதை எழுதி இருப்பவர் ஒரு டாக்டர் 

இலங்கை இந்தியா டொக்டர்மாருக்கு உலகத்திலை நடக்கிற நிறைய விஷயம் தெரியாது.

வெளிநாடுகளில் கெமிக்கல் ஏற்றி மலட்டுத்தன்மையை ஏற்படுத்துவது மட்டுமல்ல, strait ஆக உள்ள ஒருவரை gay, bisexual உணர்வுள்ள ஆளாக மாற்றுவது உட்பட நிறைய நடக்கிறது. முக்கியமாக music industry, hollywood industry, politics மற்றும் பலவற்றில் உள்ளவர்களுக்கு. மைக்கல் ஜக்சன் கூட இது பற்றி மக்கள் முன் கதைத்ததாக கேள்விப்பட்டிருக்கிறேன்.

இலங்கையில் போர்க்காலத்தில் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் பதார்த்தங்கள் கலக்கப்பட்ட பொருட்களை சிங்கள அரசு தமிழர்கள் பகுதிக்கு விநியோகித்தார்கள் என்ற செய்தியும் வந்தது. விட்டால் அதையும் மறுப்பார்கள் போல. 

வெளிநாடுகளுடன் தொடர்பில் உள்ள சிங்கள அரசுக்கும், இஸ்லாமிய அரசியல்வாதிகளுக்கும் இப்படியான மாத்திரைகள், கெமிக்கல்களை பெற்றுக்கொள்வதில் கஷ்டமிருக்காது.

Edited by Lara

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, அபராஜிதன் said:

கீழே உள்ளதை எழுதி இருப்பவர் ஒரு டாக்டர்- முகநூல்

 

https://m.facebook.com/story.php?story_fbid=10219134996747575&id=1286697015

 

 

ஒரு இனத்துக்காக குரல் கொடுப்பதென்பதில், அந்த இனத்தவர் எவ்வளவு அறிவு சார்ந்தவர்களாக தங்களை வெளிக்காட்டிக்கொள்கிறார்கள் என்பதும் அடங்கும். 

குழந்தையே பெற்றுக்கொள்ளமுடியாத மாத்திரைகள் கைப்பற்றப்பட்டிருக்கிறதாம். அதை நம் சந்தியில் நின்று சைட் அடித்து தமிழீழம் பெற நினைக்கும் போராளிக்குஞ்சுகளும் பகிர்ந்து தள்ளுகின்றன. நீங்க மண்டைக்குள்ள ஒன்றுமில்லாம மொக்குத்தனமா எழுதிறத பார்த்தா மற்றவர்கள்  நம்மைப்பற்றி என்ன நினைப்பார்கள்? நீங்க இனத்துக்கு ஏதும் செய்யவேண்டுமென்றால் பாசிபிடித்த மூளையோடு ஒன்றும் பேசாமால் இருப்பதே பெரிய உதவியாக இருக்கும்.

சரி 

இப்படி பவுடர்/ மாத்திரைபோட்டு கருத்தடை ஏற்படுத்தலாமா?

ஆண்கள் பயன்படுத்தும் கருத்தடைமாத்திரை இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.  அதை யாரும் கண்டுபிடித்தால் இப்படி கள்ளத்தனமாக விற்கவேண்டியதில்லை. ஒழுங்ககாக கொப்பி ரைட்ஸ் எடுத்து விற்றாலே ஒருமாதத்தில் அவர் உலகப்பணக்காரர் ஆகலாம். நோபல் பரிசும் நிச்சயம்.

பெண்களுக்கு இப்படியான மாத்திரைகள்மூலம் கருத்தடை ஏற்படுத்தலாமா?

அவ்வாறு ஏற்படுத்துவதென்றால் அந்தப்பெண் ஒவ்வொரு நாளும் அந்த மாத்திரை எடுக்கவேண்டும். அதை உட்கொள்வதை நிறுத்தி அடுத்த நாளே அவர் கருத்தரிக்கக்கூடிய நிலையை அடைந்துவிடுவார். 

நிரந்தரமாக கருத்தடை செய்ய சத்திரசிகிச்சையே ஒரே வழி. அப்படி நிரந்தரமாக கருத்தடைசெய்யும் மாத்திரைகளை கண்டுபிடிப்பவர், நிச்சயம் பில்கேட்ஸைவிட பெரும் பணக்காரர் ஆகிவிடுவார்.

கண்டுபிடிக்கப்படும் மாத்திரைகள் எவை?

1.வலி நிவாரணியாக பயன்படுத்தும் மாத்திரை.  அதன் இரசாயண உள்ளடக்கம் ஹெரோயினுக்கு ஒத்தது. ஆகவே அதை போதைவஸ்தாகவும் பயன்படுத்தலாம். அதனால் அவை ஒசுசலவில் மற்றுமே கிடைக்கும். அங்கே வைத்தியரின் சிட்டை இல்லாமல் ஒரு மாத்திரைகூட வாங்க முடியாது. இந்தியா போன்ற நாடுகளில் இதை எவரும் வாங்கலாம். ஆகவே அங்கேயிருந்து இதை கள்ளமாக கொண்டு வந்து போதை மாத்திரையாக.  விற்கிறார்கள். இந்த மாத்திரை ஒன்றின் விலை 3 ரூபாய். ஆனால் மார்க்கெட்டில் 200 ரூபாய்க்கும் மேல் கள்ளமாக விற்கிறார்கள். இவை அதிகமாக பிடிபடுபவது முஸ்லிம்களிடமிருந்து. அதை எழுதுங்கள். பாடசாலை மாணவர்களிடையே இப்படி போதைப்பழக்கம் பெருக முஸ்லிம்கள் பெரும் காரணமாக இருப்பதை சுட்டிக்காட்டுங்கள். (இதுவரை இப்படியொரு மாத்திரை முஸ்லிம் அல்லாத ஒருவரிடம் கைப்பற்றப்பட்டதாக ஒரு செய்தியும் நான் பார்க்கவில்லை. பாகிஸ்தானில் இவை இலகுவாகக் கிடைப்பதும் காரணமாகலாம்).

2. கருக்கலைப்பு மாத்திரை - இந்த மாத்திரைகள் மருத்துவ ரீதியாக கருக்கலைப்புக்காகவும், வேறு சில காரணங்களுக்காகவும் பயன்டுத்தப்படுகின்றன.  இவையும் எல்லாப் பார்சியிலும் இலகுவில் கிடையாது. இதையும் திருட்டுத்தனமாக கொண்டுவந்து சட்டவிரோத கருக்கலைப்புக்கு பயன்படுத்துகிறார்கள். ஒரு மாத்திரை 15 ரூபாய் என்றாலும் வெளியில் பல ஆயிரங்களுக்கு விற்கிறார்கள்.  கருக்கலைப்பு செய்வதற்கு இந்த மாத்திரை உட்கொள்ளவேண்டிய ஒரு முறை உள்ளது.  அதை சுவைதெரியாதபடி ஒருமுறை உட்கொள்ளும் உணவோடு சேர்துக்கொடுத்து கருக்கலைப்புச்செய்ய முடியாது. 
இந்தமாத்திரை கடத்தலிலும் அடிக்கடி முஸ்லிம்களே பிடிபட்டாலும் உள்ளூரில் இந்தமாத்திரையை சட்டவிரோத கருக்கலைப்புக்குப் பயன்படுத்துபவர்கள் தமிழர்கள்.

இந்த இரண்டு மாத்திரைகள் பிடிபட்டதும்தான் தமிழினத்தின் சனத்தொகை குறைவதற்கு இவைதான் காரணமென்று எழுதித் தள்ளுகிறோம். நம்முடைய சனத்தொகை குறைவதற்கான காரணம் நாம்தான் அவற்றை பிரிதொரு கட்டுரையில் எழுதுகிறேன்.

 

சில படித்தமனிதர்களே இப்படியான பொய்ச் செய்திகள் மூலமாவது முஸ்லிம்கடைகளுக்கு ஆட்கள்  போவதைத் தடுப்போம் என்கிறார்கள்.  முஸ்லிம் கடைகளுக்கு தமிழர்கள் போகவேண்டாமென மூச்சுமுட்டப் பேசுபவர்களும் பின்னேரமானால் முஸ்லிம் ஹொட்டல்களில் கொத்துவெட்டுவதை கண்டிருக்கிறேன். 

சிலர் சில இரசாயணங்களின் பெயரை கூகிள்பண்ணி அவை கருத்தடைக்கு பயன்படுத்தப்படலாமென எழுதிக்கொண்டிருக்கிறார்கள். அவை நஞ்சுகள். கொஞ்சம் கொஞ்சமாக உணவிலே கலந்து நீண்ட காலத்துக்குக்கொடுத்தால், அவை ஆளையே போட்டுவிடும். ஓஷோவும் இப்படித்தான் ஜெயிலில் இருக்கும்போது கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது. இப்படியான இரசாயணங்கள் எதுவும் இதுவரை பிடிபடவில்லை. 

தமிழர்கள் அதிகமாக வாழும் இடத்தில் வியாபாரம் சார்ந்த பொருளாதாரம் முஸ்லிம்வசம் போகின்றதேயென்ற கவலை எனக்கும் உள்ளது. 

அதற்கான காரணங்களை அலசி, முஸ்லிம்களோடு போட்டிபோட்டு வியாபாரச்சந்தையை நம் வசப்படுத்துவது எப்படி என்று பல கட்டுரைகள் எழுதியுள்ளேன். அவற்றைப்  பின்பற்ற யாரும் தயாரில்லை. அந்தக்கட்டுரைகளை கிட்டத்தட்ட 10 யிற்கும் மேற்பட்ட முஸ்லிம் இணையத்தளங்களால் பகிரப்பட்டன. நம்முடைய இணையத்தளங்கள் இன்னும் தமிழினத்தை அழிக்கும் மாத்திரைகளை வைத்திருந்த முஸ்லிம்கள் கைது என்ற அதிர்ச்சித் செய்தியைமட்டும் பகிர்ந்துகொண்டிருக்கின்றன. உங்களுக்கும், நல்லூரில் இருந்த முஸ்லீம்களை பன்றித்தலையைபோட்டு சோழமன்னன் துரத்தினான் என்று சொன்னவனுக்கும் வித்தியாசமில்லை.
 உங்களுக்குக் காலமெல்லாம் தமிழ் வின்னும், டியூப் தமிழும், IBC யும்தான் ஊடகங்கள்.
நாம் முன்னேறவேண்டும். அதற்கு அறிவுசார்ந்த இனமாக சிந்திப்போம், பேசுவோம், எழுதுவோம்.

அவர் அவர் கருத்தை மட்டும் திணிக்கும் வைத்தியர் அது போக நடுநிலையாளர் என காட்டிக்கொள்வார் கன பேரை பிளக் பண்ணி வருகிறார் கேள்வி கேட்டவர்களை  

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

அவர் அவர் கருத்தை மட்டும் திணிக்கும் வைத்தியர் அது போக நடுநிலையாளர் என காட்டிக்கொள்வார் கன பேரை பிளக் பண்ணி வருகிறார் கேள்வி கேட்டவர்களை  

யார் அவர்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.