Jump to content

தமிழகத்தில் ஏறு தழுவுதலுக்காக நடைபெறும் இளைஞர்களின் எழுச்சி தொடர்பாக உங்கள் கருத்து என்ன? - விவாத களம்


Recommended Posts

வணக்கம்,

மிழகத்தில் ஏறு தழுவுதலுக்காக நடைபெறும் இளைஞர்களின் எழுச்சி தொடர்பாக உங்கள் கருத்து என்ன? எனும் கருத்துக்கணிப்பிற்கான விவாதத்திரி

உங்கள் அபிப்பிராயங்களையும் இப் போராட்டம் தொடர்பான உங்கள் பார்வையையும் பகிருங்கள்

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இத்தன்னெழுச்சிற்கு தலை வணங்குகிறேன்.. 5.gif

இவ்வொற்றுமை, அனைத்து தமிழ் மற்றும் தமிழர் சம்பந்தப்பட்ட விடயங்களில் மிக கவனமாக விழித்திருந்து அந்நிய சக்திகளின் ஆக்கிரமிப்பு, இனவழிப்பு செயல்களை இனம்கண்டு, தமிழ் இனம், மொழி, கலாச்சாரம் ஆகியன பாதுகாக்கபட வேண்டுமென விரும்புகிறேன்.

jallikkaddu.jpg

 யாழ் இணைய முகப்பில் தமிழக எழுச்சிற்கான தார்மீக ஆதரவிற்கு நன்றி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏறுதழுவுதல், ஜல்லிக்கட்டு, சிலம்பாட்டம்,குஸ்தி எல்லாம் தமிழினக் கலாச்சாரக் கலைகள். அது அழிந்து போக விடக்கூடாது . ஆயிரமாயிரம் மேடைப் பேச்சுக்களாலும் விளம்பரங்களாலும் செய்ய முடியாததை  இவ் எழுச்சிப் போராட்டம் மிகச்சுலபமாக அடுத்த தலைமுறையிடம் கடத்தி விட்டிருக்கு. அதற்காக இந்த இளஞர்களின் போராட்டத்துக்கு தலை வணங்குகின்றேன்....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இளம் தலைமுறையின் இவ்வெழுச்சிக்கு தலை வணங்குகின்றேன்

இவ்வெழுச்சியை ஐல்லிக்கட்டு என்னும் தமிழர் பாரம்பரிய விளையாட்டின் ஒழிப்பு சார்ந்து மட்டும் பார்க்கவில்லை

 பலமுறை ஏமாற்றப்பட்ட தமிழினத்தின் குமுறலாகவும்

எல்லாவற்றின் மீட்சிக்குமான எழுச்சியாகவே பார்க்கின்றேன்

அதுவே உண்மையும்  கூட.

எழுச்சியில் பங்குபற்றியுள்ள இளைஞர்களின் பேட்டிகளில் 

அவர்கள் இதுவரை ஏமாற்றப்பட்டதும்

அவை எவை என்பதும் ஒவ்வொருமுறையும் உரக்க சொல்லப்பட்டு வருகிறது

அதில் ஈழத்தமிழரது இனப்:படுகொலையும் முக்கியமானது.


தமிழர்கள் ஒற்றுமைப்படாமல்
தமிழகம் தமிழரின் கையில் வராமல் ஈழத்தமிழருக்கு விடிவில்லை.
அதற்கான காலம் கனிந்து வருகிறது.
நன்றி மறப்பது நன்றன்று.
இதில் சீமானின் பங்கு மிக மிக அதிகம்.
நன்றி நாம் தமிழர் கட்சியினருக்கு.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 பண்பாட்டு நிகழ்வைத் தடை செய்ய இவர்கள் யார்? மாணவர்கள் தொடர்ந்து கடைசிவரை போராட்டத்தைத் தொடர்வார்களா? என்ற கேள்வி உண்டு என்றாலும் தாங்களாகவே ஒன்றிணைந்தமைக்கு வாழ்த்துக்களும் ஆதரவும்.

Link to comment
Share on other sites

இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள்.

இளைஞர்கள் தலைவர்களாகி தமிழர்களுக்கான ஒரு நாட்டையும் உலகத்தில் உருவாக்கிக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையைத் தந்துள்ளது இந்த ஏறுதழுவல் போராட்ட நிகழ்வு.

Link to comment
Share on other sites

இதெல்லாம் சென்ரல் பிஜேபி உள்ளே வருவதுக்கு போடும் அட்சரம் கடந்தகாலம்களில் மாணவர் போராட்டம்களை எப்படி அடக்கினார்கள் ? இப்போது முடியவில்லை காரணம் போராட்டகாரார்மீது கைவைத்தால் பன்னீர்ம் இல்லை மோடி pjb யும் இல்லை இதைவிட இரும்புக்கரம் கொண்டு அடக்க அம்மாவும் இல்லை குள்ளநரி கர்ணாநிதி கடைசி தேர்தலில் வேண்டிக்கட்டின தாக்கத்தில் இருந்து மீளவில்லை அப்படி மீண்டாலும் யார் தலிவர் எனும் பிரச்சினை தமிழ்நாட்டு சதுரங்கம் இப்படி எப்படித்தான் ராஜாவை வெட்டினாலும் வெட்டுபவனுக்கு அதிக பாதிப்பு அதை யோசிக்காமல் கை வைக்க தில் வேணும் ஜல்லிகட்டு தடை அவர்கள் இதுக்காக மாத்திரம் போடுகிறார்கள் என்று நினைத்தால் அது படுமுட்டாள்த்தனம் லட்சம் விவசாய நிலம்களுக்குள்ளால் அத்துமீறி கெயின் குழாய் திட்டம் ,காவிரி நீர் உச்சநீதிமன்றம் டகால்டி விளையாட்டு விவசாயிகளின் தற்கொலைகள்,குப்பை அணுமின்நிலையம் கூடம்குளம்.தமிழ் மீனவர்கள் சாவுகள் இப்படி பலகாரனம்கள். உச்ச நீதி மன்றத்தில் வழக்கு இருப்பதால் ஒன்றும் செய்ய முடியவில்லை மோடி சொல்கிறார் அப்படிஎன்றால் உச்ச நீதிமன்றமே நாட்டை நிர்வகிக்கட்டுமே இவர் எண்ணத்துக்கு ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"ஏமாறுபவன் இருந்தால்,  ஏமாற்றிக்  கொண்டே..... இருப்பவனுக்கு  கொண்டாட்டம்." என்று சொல்வார்கள்.

கடந்த மூன்று வருடமாக... ஜல்லிக் கட்டுக்கு விதித்த தடையை நீக்க ஏதாவது  செய்வார்கள்  என்று, தமிழக மக்கள்.... மாநில அரசையும்,  மத்திய அரசையும், நீதி மன்றத்தையும் எதிர் பார்த்தார்கள். :unsure:

ஒவ்வொரு தைப்பொங்கலுக்கு மட்டுமே.... இதனை விவாதப் பொருளாக்கி.... கடைசியில், கைவிரித்துக் கொண்டு இருந்ததை, அமைதியாக பார்த்துக் கொண்டு இருந்த தமிழக மக்கள், இனி.... இவங்களை நம்பி பிரயோசனம்  இல்லை என்ற முடிவுக்கு.... வந்து,  அந்தப் போராட்டத்தை  எந்த அரசியல் கட்சிகளும் உள் நுழைந்து, குழப்பியடிக்காமல் இருக்க, ஆரம்பத்திலேயே... அவர்களை அதில் தலையிட வேண்டாம் என்று சொல்லி, தொடங்கிய போராட்டம், நல்ல ஆரம்பம்.:)

நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்று,  நம்பிய நீதிமன்றமே...   
"உனக்கு  காளையை... அடக்க விருப்பம் என்றால், முதலில்.... சிங்கத்தை அடக்கு"
என்ற.... கேனைத்தனமான  கேள்வி, அனைத்து.... தமிழக மக்களையும், உசுப்பி விட்டது. :shocked:

குறிப்பிபிட்ட  சில மாவட்டங்களில்... மட்டுமே நடந்து கொண்டு இருந்த,  ஏறு தழுவுதல் விளையாட்டை.... இனி.....தமிழகம் முழுவதும்  விளையாட வைக்க, அத்திவாரம் போட்ட....  பீட்டா அமைப்பிற்கும்,  அரசியல் வாதிகளுக்கும், நீதிமன்றத்துக்கும் நன்றி. :grin:

இனி... எந்த விடயத்திலும் தமிழனை, எவராலும்.... ஏமாற்ற முடியாது. என்பதனை.... இந்த, ஜல்லிக்கட்டு  போராட்டம், கட்டியம் கூறி நிற்கும் என்பது... நிதர்சனமான உண்மை.:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வாக்குப்பதிவு திரும்ப திரும்ப வாக்களிக்கும் வண்ணம் எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் உள்ளது..

தயவுசெய்து திருத்தியமைக்கவும்!

Link to comment
Share on other sites

எனது பார்வை, வாழ்வியல் அனுபவங்களின் அடிப்படையில் நான் கூறக்கூடியது. உணர்ச்சிபூர்வமான காரியங்களை விட அறிவுபூர்வமான காரியங்களே பயன்மிக்கவை.

நாங்களும் ஒரு இலட்சத்து இருபதாயிரம் தமிழ் மக்கள் கனடா டொரோன்டோ மாநகரில் அமைதியான முறையில் மனிதச்சங்கிலி செய்தோம். எமக்கு இவை எல்லாம் புதினமான விடயங்கள் இல்லை. மாணவர் சக்தி மாபெரும் சக்தி... இந்த வாசகங்கள் இதனையும்விட உணர்ச்சிகரமான வாசகங்களை எல்லாம் கடந்து வந்தது எங்கள் பாதை.

கூட்டிக்கழித்துப்பார்த்தால் சந்தில் சிந்து பாடுபவர்கள்... போராட்டங்கள் மூலம் தமது சுயலாபங்களை சம்பாதிப்பவர்கள், அப்பாவி மக்களின் உணர்வுகளை ஏணியாக பயன்படுத்தி தாம் வானத்தின் உச்சியை தொட்டுவிடப்பார்ப்பவர்கள் வாழும் உலகம் இது.

பல்வேறு விடயங்களில் உலகில் தமிழ்நாடு மிகவும் சக்தி பொருந்திய பகுதி. மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுவது நிச்சயம் வரவேற்கத்தக்கது. அதேசமயம், யதார்த்தம் புரியவேண்டும், தமது எல்லைகள் எவை என்பது தெரியவேண்டும். ஆழமறியாமல் காலை விடக்கூடாது. நாங்கள் பட்ட அல்லல்களை தமிழ்நாட்டு மக்களும் அடையக்கூடாது. இந்தவகையில் நிதானம் அவசியம். போராட்டங்களில் ஈடுபடுபவர்கள் தமது தனிப்பட்ட வாழ்க்கை பாதிக்கபடாதவண்ணம் கவனம் செலுத்தவேண்டும்.

வெளிமாநிலத்தவர், மத்திய அரசை குறைபிடிக்கமுன்னர் தமிழ்நாட்டிலேயே உள்ள திருட்டுக்கும்பல்களை இனம்கண்டு புறக்கணிக்கும் பக்குவம் மக்களிற்கு ஏற்படவேண்டும். தமிழ்நாட்டு மக்கள் முறையான தலமையை தெரிவுசெய்து, முறையான அரசை உருவாக்கி இருந்தால் இப்படியான பிரச்சனைகள் எல்லாம் ஏற்பட்டு இருக்காது. வந்தவன், வருபவன் எல்லாம் தானும் தன் கட்சியும் ஆட்சிக்கு வந்து, அதிகாரத்தை பிடித்து என்னத்தை புடுங்கிக்கொண்டு போகலாம் எனும் திருட்டு மனநிலையில் இருக்கும்போது மக்களின் நலன்களில் ஆட்சிபீடத்தில் அமர்ந்து இருப்பவர்களுக்கு எங்கே அக்கறை வரப்போகின்றது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இவர்களது இப் போராட்டத்திற்கு ஆதரவு அழிக்க்கிறேன்...இவ்வளவு காலம் தாழ்த்தியாவது நாங்கள் தமிழர்கள் அடக்கு முறைக்கு எதிராக போராட வேண்டும் என்ட உணர்வு இவர்களுக்கு வந்ததே வரவேற்க தக்கதொரு மாற்றம்

Link to comment
Share on other sites

உண்மையில் உயிரின சித்திரவதைகளுக்கு முடிவுகட்ட வேண்டுமென்றால் முதலில் தடை செய்யப்பட வேண்டியது ஈழத் தமிழ் மண்ணிலும், வைத்தியசாலைகளிலும்  எல்லைக்கிராமங்களிலும் பல சித்திரவதைகளை, படுகொலைகளை, பாலியல் வன்கொடுமைகளை அரங்கேற்றிவரும் ஒழுக்கமற்ற இந்திய இராணுவக் கும்பலை தான்.

இரண்டாவது தமிழின அழிப்புக்கு பெரும் துணை போகும், இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலைகளுக்கு சில தசாப்தங்களாக பெரும் துணை போகும் இந்திய அரச நிர்வாகத்தை தடை செய்ய வேண்டும். 

இது போன்ற மனித உயிர்களை அழிக்கும் கும்பல்கள் ஒன்றிணைந்து மிருகவதை என்ற பெயரில் தமிழரின் பாரம்பரிய வீரவிளையாட்டுக்களில் ஒன்றான ஜல்லிக்கட்டை தடை செய்திருப்பதை வன்மையாக எதிர்க்கிறேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, போல் said:

உண்மையில் உயிரின சித்திரவதைகளுக்கு முடிவுகட்ட வேண்டுமென்றால் முதலில் தடை செய்யப்பட வேண்டியது ஈழத் தமிழ் மண்ணிலும், வைத்தியசாலைகளிலும்  எல்லைக்கிராமங்களிலும் பல சித்திரவதைகளை, படுகொலைகளை, பாலியல் வன்கொடுமைகளை அரங்கேற்றிவரும் ஒழுக்கமற்ற இந்திய இராணுவக் கும்பலை தான்.

இரண்டாவது தமிழின அழிப்புக்கு பெரும் துணை போகும், இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலைகளுக்கு சில தசாப்தங்களாக பெரும் துணை போகும் இந்திய அரச நிர்வாகத்தை தடை செய்ய வேண்டும். 

இது போன்ற மனித உயிர்களை அழிக்கும் கும்பல்கள் ஒன்றிணைந்து மிருகவதை என்ற பெயரில் தமிழரின் பாரம்பரிய வீரவிளையாட்டுக்களில் ஒன்றான ஜல்லிக்கட்டை தடை செய்திருப்பதை வன்மையாக எதிர்க்கிறேன்!

போல், அண்ணே...... இது, நடக்கிற காரியமா?
"பொல்லை குடுத்து,  அடி  வாங்கிக் குடுக்குற..."  பெரிய,   
"மாஸ்ரர் பிளான்"  உங்களிடம் உள்ளது  போலுள்ளது.  
அதை... இப்ப.... கசிய, வைத்து விடாதீங்க.
பாவம்.... சம்பந்தன். :grin: :D: :119_busts_in_silhouette: tw_rage:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல குமுறல்களுக்கு ஒரு இடைவெளி கிடைத்துள்ளது. அதை கெட்டியாக பிடித்துள்ளார்கள் போலிருக்கின்றது. 
பலதை அல்லது சிலதை விவாதித்து போட்டுடைக்காமல் மாணவர்கள் வழியையே பின்பற்றுவோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

08-1452255575-murattu-kaalai----600.jpg

 

ஜல்லிக்கட்டு - ஏறு தழுவுதலை தடை செய்யும்போது செய்யாத போராட்டத்தை இப்போது செய்வது கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்வதுபோலத்தான் இருக்கின்றது. ஆனால் சட்டத்தில் சில திருத்தங்களைக் கொண்டுவந்து ஏறு தழுவுதலை அனுமதிக்கவேண்டும்.

நல்ல கொம்பு சீவின முரட்டுக்காளையை அடக்க இதே மாதிரி இளைஞர்கள் போட்டி போட்டுக்கொண்டு முன்னுக்கு வருவார்களா??

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜல்லிக்கட்டு தடையை நீக்க வேண்டும் என்று நான் ஆதரவு அளிக்கின்றேன்.

பாவேந்தர் பாரதிதாசனின் பாடல் வரிகள் ஞாபகம் வருகிறது:


எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே,
பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்
சங்காரம் நிஜமென்று சங்கே முழங்கு
 

 

உங்கள் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள். லட்சம் லட்சமாக நாங்கள் வீதியில் இறங்கி போராடின போது எங்களுக்கு நீதி வழங்க ஒருவரும் முன் வரவில்லை,  பதிலாக சில சுயநலவாதிகள் அதை தங்கள் லாபதிக்காக இதனை பயன்படுத்திக் கொண்டார்கள். வாக்குறுதிகளை நம்பாதீர்கள். தீர்வை கையில் எடுத்துக் கொண்டு போராட்ட களத்தை விட்டு விடை பெறுங்கள். அனுபவம் கற்றுத்  தந்த பாடங்கள் பல.

Image result for விருமாண்டி images

Link to comment
Share on other sites

நம்மிடையே பொதுவில் மிருகங்களுக்கான உரிமை தொடர்பான விழிப்புணர்வு என்பது மிகவும் குறைவு மனிதர்களுக்கான உரிமை மட்டுப்படுத்தப்பட்ட ஒரு சமூகத்தில் இது ஆச்சரியப்படக் கூடிய விடயமல்ல. ஏறுதழுவுதல் நிகழ்வின் போது ஒரு விலங்கை பல மனிதர்கள் பெரும் சத்தத்துடன் துரத்திச் சென்று அதனை வெருள மிரள  வைத்து அதனை பலர் இரசிப்பதை எனது பண்பாடு என்று சொல்லி பெருமைப்படுவது எந்தவகையில் என்பது புரியவில்லை. 

Link to comment
Share on other sites

2 hours ago, manimaran said:

நம்மிடையே பொதுவில் மிருகங்களுக்கான உரிமை தொடர்பான விழிப்புணர்வு என்பது மிகவும் குறைவு மனிதர்களுக்கான உரிமை மட்டுப்படுத்தப்பட்ட ஒரு சமூகத்தில் இது ஆச்சரியப்படக் கூடிய விடயமல்ல. ஏறுதழுவுதல் நிகழ்வின் போது ஒரு விலங்கை பல மனிதர்கள் பெரும் சத்தத்துடன் துரத்திச் சென்று அதனை வெருள மிரள  வைத்து அதனை பலர் இரசிப்பதை எனது பண்பாடு என்று சொல்லி பெருமைப்படுவது எந்தவகையில் என்பது புரியவில்லை. 

நீங்கள் கூறுவதை ஒரு வாதத்திற்காக ஏற்றுக் கொண்டாலும் உலகம்முழுவதிலும் இதை விட படு மோசமாக நடக்கும் விலங்கு வதைகளை தடை செய்யாமல் இதைத் தடை செய்ய கங்கணம் கட்டி நிற்பது ஏன்? தமிழ்நாட்டு மக்களுக்கு ஏற்பட்ட கோபம் நியாயமானது. 

Link to comment
Share on other sites

3 hours ago, manimaran said:

நம்மிடையே பொதுவில் மிருகங்களுக்கான உரிமை தொடர்பான விழிப்புணர்வு என்பது மிகவும் குறைவு மனிதர்களுக்கான உரிமை மட்டுப்படுத்தப்பட்ட ஒரு சமூகத்தில் இது ஆச்சரியப்படக் கூடிய விடயமல்ல. ஏறுதழுவுதல் நிகழ்வின் போது ஒரு விலங்கை பல மனிதர்கள் பெரும் சத்தத்துடன் துரத்திச் சென்று அதனை வெருள மிரள  வைத்து அதனை பலர் இரசிப்பதை எனது பண்பாடு என்று சொல்லி பெருமைப்படுவது எந்தவகையில் என்பது புரியவில்லை. 

இதே கேள்வியை உங்களால் ஸ்பானிஸ் மாடு பிடி வீரர்களிடம் கேட்க்க முடியுமா ?

அதுவும் அங்கு கடைசியாக மாடு கொல்லப்படும் அதுதான் தங்கள் பாரம்பரியம் என்று திமிராகவே சொல்வார்கள் மாட்டுக்கு முதல் குதிரை போட்டிகள் அதில் காயமடையும் குதிரைகள் ஆண்டொன்றுக்கு அறுபது வீதம் மாட்டுக்கு முதல் குதிரை ரேஸ் அதை தடைபன்னிட்டு மாட்டுக்கு வாங்கோ முடியாது பீட்டாவின் கண்ணுக்குள் தமிழ்நாட்டின் முன்றாரை லட்சம் கோடி புழங்கும் பால் விற்பனை இந்த வருமானத்துக்கு அவர்கள் இடும் மூலதனம் வெறும் பத்து ஆயிரம்  கோடி மிகுதி லாபம் அவர்களின் கண்ணுக்குள் குத்துவது அதனாலேயே இந்த ஆட்டம் இன்னும் விளக்கம் ஆக என்றால் ஊரில் நாய் வளர்ப்புக்கும் இங்கு நாய் வளர்ப்புக்கும் உள்ள சிலவு அதாவது இங்கு நாய் வளர்க்க ஆசைபட்டால் இங்கு நாய் உணவு உற்பத்தி பண்ணும் முதலாளியுடன் நீங்கள் இணைந்து போகணும் இல்லை மிஞ்சிய சோத்தை போட்டு ஊர் போல் வளர்க்க வெளிகிட்டால் நாய்க்கு சுகமில்லாமல் வந்துவிடும் நாய் வளர்க்கும் காலம் மட்டும் நாய் உணவு முதலாளிக்கு நீங்கள் அடிமை அது போல் ஊர் மாட்டு இனத்தை அழிப்பதுக்கு ஜல்லிகட்டு தடை போட்டால் வெளிநாட்டு மாடு இலகுவாக பரவி விடும் பின்பு அதற்க்கு தேவையான உணவு உற்பத்தி செய்பவர்களிடம் மறைமுகமாக அடிமைபடவேண்டி வரும் அத்துடன் அந்த jc மாடுகள் பராமரிப்பு செலவு கூட.

3 hours ago, manimaran said:

நம்மிடையே பொதுவில் மிருகங்களுக்கான உரிமை தொடர்பான விழிப்புணர்வு என்பது மிகவும் குறைவு மனிதர்களுக்கான உரிமை மட்டுப்படுத்தப்பட்ட ஒரு சமூகத்தில் இது ஆச்சரியப்படக் கூடிய விடயமல்ல

இந்த கருத்து சிரிக்க வைக்குது இப்படியெல்லாம் ஜோக் அடிக்க எப்படி உங்களால் சுய சிந்தனை உள்ளவர்கள் இப்படி அடிக்க மாட்டார்கள் .

Link to comment
Share on other sites

5 hours ago, manimaran said:

நம்மிடையே பொதுவில் மிருகங்களுக்கான உரிமை தொடர்பான விழிப்புணர்வு என்பது மிகவும் குறைவு மனிதர்களுக்கான உரிமை மட்டுப்படுத்தப்பட்ட ஒரு சமூகத்தில் இது ஆச்சரியப்படக் கூடிய விடயமல்ல. ஏறுதழுவுதல் நிகழ்வின் போது ஒரு விலங்கை பல மனிதர்கள் பெரும் சத்தத்துடன் துரத்திச் சென்று அதனை வெருள மிரள  வைத்து அதனை பலர் இரசிப்பதை எனது பண்பாடு என்று சொல்லி பெருமைப்படுவது எந்தவகையில் என்பது புரியவில்லை. 

மாட்டுக்கும் மனிதர்போன்ற உணர்ச்சிகள்தான் உண்டு என்பது போன்ற புரிதலில் வெளிப்படுவதுதான் இத்தகைய கருத்துகள். அந்த மாடுகள் ஒரு நாள் இப்படி ஓடுகின்றன. மிகுதி 364 நாட்களும் இது போன்ற எதுவும் நடப்பதில்லை.

அப்படிப் பார்த்தால் மேலை நாடுகளில்கூட காவல்துறையினர் குதிரைகள் மீது ஏறி பயணிக்கிறார்கள் தினந்தோறும். அது சகிக்கமுடியாத வன்கொடுமை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி பார்த்தால் பல  உயிரினங்கள் மனித விளையாட்டுகளில்  துன்புறுத்தப் படுகிறது. மனிதனை மனிதன் அடிப்பது- குத்துச் சண்டை, உடனும் இல்லாவிட்டாலும், இதன் விளைவுகள் பாரதூரமானவை. ஏன் தடை செய்ய வில்லை என கேள்வி கேட்க முடியுமா? பல பண முதலாளிகளின் மனிதக் கட்டு. 

தமிழர்கள் (இந்துக்கள்) மாட்டிறைச்சி சாப்பிடுவதில்லை. பசு தெய்வத்திற்கு ஈடானது. பண்டைய  நாகரிக வளர்ச்சியில் பசுவின் பங்கு அளப்பரியது. அதன் இனப் பெருக்கம் காளை மாடு இல்லாமல் நடக்காது. காளை உழவுக்கு, ஜல்லிக்கட்டுக்கு மட்டுமல்ல இனப் பெருக்கத்துக்கும் முக்கியமானது. ஜல்லிக் கடடை நிறுத்தி விட்டால், காளைகளை வளர்ப்பது குறைந்து விடும். இதன் மூலம் உள்ளூர் பசுக்களின் உற்பத்தியும் குறைய வாய்ப்பு உள்ளது. ஊசி மூலம் உற்பத்தி  செய்யலாம், இது உழவர்களின் கையில் இல்லை. பசு இனப்பெருக்கம் பெரிய கொம்பனிகளின் கைகளில் போய் விடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில சொல்லறதுக்கு என்ன இருக்குது.நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று மாற்றான் தீர்மானிக்க முடியாது.எனது முழுமையான ஆதரவு எப்பவும் உண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராஜாவும் இல்லை.. மணியும் இல்லை ..

 

gingee_fort_16_08_14_127.jpg

எங்கட வீட்டில் 50 மாடுகள் இருந்தன  போக 20 எருமை மாடுகள் .. எப்படி அழிந்தது எல்லாம் ..? வனத்துறை பாதுகாப்பு சட்டம் .. விளையாட்டில் வெற்றி பெற்ற மாடுகளின் கழுத்தில் ஒரு மணியை கட்டி போடுவம் ... அவனுக்கு ராஜா என்று பெயர் வைத்து அழைப்போம் .. கும்பலாக காட்டிற்குள் விடியற்காலையில் அனுப்பிவிட்டால் அந்தி சாயும் நேரம் அந்த மணியின் ஒசை கேட்டு திரும்ப அழைத்து வருவம் ..அந்த முழு நாளுக்கும் மற்ற மாடுகளின் பாதுகாப்பிற்கு ராஜாதான் கேரண்டி .. இடையில் சிலது நரி அடித்தது . குள்ள நரி அடித்தது என்று விட்டு போட்டாலும் கூட .. இயற்கை சுழற்சி என்று விடுவம்.. ஒழுங்கா வீடு வந்து சேர்ந்தது .. இன்று என்ன நிலைமை ?

டிஸ்கி :

அட முட்டாள் பய மக்களா ! நீங்கதான் வனவிலங்கு பட்டியிலில் சேர்த்து போட்டீர்கள்  அல்லவா ..?அப்போ ஒரு வன விலங்கு தன்னுடய வனபகுதியில் மேய்ச்சலுக்கு செல்வதில் என்ன குறை கண்டு கொண்டீர்கள் ..? ஒரு மாட்டிற்கு வனபகுதியில் மேய்வதற்கு ஏன் தினம் ரூபாய் 50 லஞ்சம் கேட்கிறீர்கள் .. ? !@#$%^&*()

 

Link to comment
Share on other sites

16 hours ago, manimaran said:

நம்மிடையே பொதுவில் மிருகங்களுக்கான உரிமை தொடர்பான விழிப்புணர்வு என்பது மிகவும் குறைவு மனிதர்களுக்கான உரிமை மட்டுப்படுத்தப்பட்ட ஒரு சமூகத்தில் இது ஆச்சரியப்படக் கூடிய விடயமல்ல. ஏறுதழுவுதல் நிகழ்வின் போது ஒரு விலங்கை பல மனிதர்கள் பெரும் சத்தத்துடன் துரத்திச் சென்று அதனை வெருள மிரள  வைத்து அதனை பலர் இரசிப்பதை எனது பண்பாடு என்று சொல்லி பெருமைப்படுவது எந்தவகையில் என்பது புரியவில்லை. 

இதில் உண்மைகள் இல்லாமல் இல்லை. ஆனால் யதார்த்தம் வேறானது.

வலிமை பெற உருவான பயிற்சிகள் அனைத்தும் சில கடின செயற்பாடுகளைக் கொண்டவையே! அவற்றை கொடுமைப்படுத்தல் என்று சொல்லிவிட முடியாது.

மிருக கொடுமைகள் பற்றி விவாதிப்பவர்கள் சகல மாமிச உணவுகளையும், பால் முட்டை முதலான உணவுப் பொருட்களையும்  தவிர்த்துவிட்டு விவாதிக்க வேண்டும். தயாரா?

இந்த பீட்டா அமைப்பினர் KFC முன்னாலோ, இறைச்சிக்கடைகள் முன்னாலோ, மீன் சந்தைகளின் முன்னாலோ ஆர்ப்பாட்டம் செய்வதில்லை!

Link to comment
Share on other sites

ஒரு தவறு இன்னொரு தவறை நியாயப்படுத்தாது.

இங்கு இரண்டு விடயங்கள்

ஒன்று இந்து 'மதம்' பிடித்தவர்கள் தமது ஆதிக்கத்தை தமிழகம் மீது காலம் காலமாக திணிக்க முயல்வது தொடர்ச்சியான அத்தகைய திணிப்பின் எதிர்விளைவாக மெரீனா எழுச்சியைக் கருதலாம். 

இரண்டாவது களியாட்ட நிகழ்விற்காக இயற்கையின் இன்னொரு படைப்யை துன்புறுத்துவது. அதனை நியாயப்படுத்த பல்வேறு காரண காரியங்களை அடுக்கிக் கொண்டு செல்வது. 


ஆடு மாடுகளை உலக்கையால் அடித்து இறைச்சிக்காக கொல்வது விலங்கு உயிருடன் இருக்கும்போது அதன் கழுத்தில் துளைபோட்டு இரத்தம் எடுத்து இரத்தவறை செய்து சுவைப்பது உயிருடன் வைத்து பறவைகளின் செட்டைகளை உரித்து அவற்றை துடிக்க துடிக்க கொலைசெய்து அவற்றை உண்பது என்பவற்றுடன் ஒப்பிடும் போது ஏறுதழுவும் போது காளை மாடு படும் துன்பம் அற்பமானதே. அதனால் தான் என்னவோ நமக்கு அதன் துன்பம் தெரிவதில்லை. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அதெல்லாம் இருக்கட்டும், குஜாரத்தில் தானே தீவைத்த இந்துக்களின் ரயிலுக்குப் பழிவாங்க ஆயிரமாயிரம் முஸ்லீம்களைப் படுகொலை செய்ததற்காக அமெரிக்காவே இவருக்கு தடை விதித்திருந்தது. இந்த லட்சணத்தில் இந்தியஅ மனிதநேயத்திற்குப் பாதுகாப்பான நாடாம். 
    • தமிழ்ப் பொதுவேட்பாளரை இறக்கி ரணில் ஐய்யாவுக்கு விழப்போற வாக்குகளைத் தடுத்துப்போடுவாங்கள் என்கிற கவலையில இருக்கிறம் உங்களுக்கு நக்கலாக் கிடக்கு என்ன?  ரணில் மாத்தையாட்ட, ஜயவேவா!
    • நீங்கள் அரசாங்கத்துடன் திம்புவில் பேசலாம், நான் இராணுவத்துடன் கிரிக்கெட் விளையாடினால் தவறோ? ‍- பரி யோவானின் ஆனந்தராஜனும், இந்தியர்களை அலைக்கழித்த இலங்கையும்   மறுநாளான ஆடி 24 ஆம் திகதி டிக் ஷிட் அவர்கள் நீலன் திருச்செல்வத்தைச் சந்தித்தார். தமிழர்களின் பிரச்சினையின் சிக்கல்களை பண்டாரி சரியாக உணர்ந்துகொள்ளத் தவறிவிட்டதாக டிக் ஷிட்டிடம் தெரிவித்தார் நீலன். மேலும் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வொன்றினைக் கண்டுபிடிக்குமாறு பண்டாரி  அழுத்தம்கொடுத்து வந்தமை, ஜெயாரிற்கு தமிழர்களுடன், தீர்வெதனையும் தராத, வெற்றுப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் வாய்ப்பினையும் ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாகவும் நீலன் கூறினார். சந்திரிக்காவின் ஆட்சியின்போது பிரபல சிங்கள இனவாதியான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸுடன் இணைந்து தீர்வுப்பொதியொன்றினைத் தயாரித்த நீலன் திருச்செல்வம் மேலும், டிக்ஷிட்டிடன் பேசும்போது தமிழரின் தாயகம் தொடர்பாகவும், அதனை திட்டமிட்ட அரச ஆதரவிலான சிங்களக் குடியேற்றங்கள் மூலம் இரு துண்டுகளாக உடைக்க சிங்களவர்கள் முயன்றுவருவது குறித்தும் விளக்கியதோடு, தமிழர்கள் தமது தாயகத்தில் சுயநிர்ணய உரிமைகொண்டவர்களாக வாழ்தலே எந்தவொரு தீர்விற்கும் அடிப்படையாக அமைதல் வேண்டுமென்றும் அழுத்தமாகக் கூறினார்.  இதற்குக் குறைவான எந்தத் தீர்வினையும் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதனையும் அவர் டிக்ஷிட்டிடம் தெரிவித்தார். நீலனுக்குப் பதிலளித்த டிக்ஷிட், இவ்விடயங்கள் குறித்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ரஜீவிடமும், பண்டாரியிடமும் தெளிவாகப் பேசவேண்டும் என்று கூறினார். "இனப்பிரச்சினையின் தீர்விற்கான அடிப்படை குறித்த ஆவணம் ஒன்றைத் தயாரித்து ஜெயாருக்கு அனுப்பிவைப்பதற்காக என்னை தில்லிக்கு அழைத்திருக்கிறார்கள். நான் நாளை பயணமாகிறேன். நீங்கள் என்னிடம் தற்போது கூறிய விடயங்களை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ஒரு ஆவணமாகத் தயாரித்து அனுப்பினால், நாம் ஜெயாருக்கு அனுப்பவிருக்கும் ஆவணத்தை அதன் அடிப்படியில் உருவாக்கிக்கொள்ளலாம்" என்று நீலனை நோக்கிக் கூறினார் டிக்ஷிட்.    அப்போது சென்னையில் தங்கியிருந்த அமிர்தலிங்கத்திடம் இவ்விடயங்கள் குறித்து நீலன் தெரிவித்தார். அதன் பின்னர் ஆடி 26 ஆம் திகதி தமது பேரம்பேசலின் நிலைப்பாடு குறித்த விளக்கமான கடிதம் ஒன்றினை அமிர்தலிங்கமும், சிவசிதம்பரமும் ரஜீவ் காந்திக்கு அனுப்பி வைத்தனர். அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த சில முக்கிய விடயங்கள் கீழே, "தமிழர் பிரச்சினைக்கான எந்தவொரு தீர்வின் அடிப்படையும் தமிழர்கள் தமது தாயகத்தில் தம்மைத்தாமே ஆளும் உரிமையினை உறுதிப்படுத்துவதாக இருக்க வேண்டும். பலஸ்த்தீனத்தில் இஸ்ரேல் செய்துவருகின்ற திட்டமிட்ட ஆக்கிரமிப்பிற்கு நிகரான ஆக்கிரமிப்பினை இலங்கையில் தொடர்ச்சியாக ஆட்சிக்கு வரும் சிங்கள அரசுகள் செய்துவருவதுடன்,  தமிழர் தாயகத்தின் ஒருமைப்பாட்டினைச் சிதைக்கும் நோக்குடன், தமிழர்களின் ஆட்சேபணைக்கு மத்தியிலும், அரச ஆதரவிலான திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை சுதந்திரக் காலத்திலிருந்து செய்து வருகின்றன". "தமிழர் தாயகத்தை இரண்டாகத் துண்டாக்குவதன் மூலம் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களை முற்றாக அழித்துவிட சிங்கள அரசுகள் முயன்று வருகின்றன. கிழக்கில் தமிழர்களை அப்புறப்படுத்துவதனூடாக தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வை வழங்கமுடியும் என்று ஜெயவர்த்தன கருதிவருகின்ற போதிலும், நீங்கள் அதனை ஒரு தீர்வாக ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறோம். தமது தாயகம் துண்டாடப்படுவதை தமிழர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை" என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.  புலிகளின் எச்சரிக்கைகளுக்கு மத்தியிலும் இலங்கை இராணுவத்துடன் துடுப்பாட்டப் போட்டியொன்றினை ஒழுங்குசெய்த பரி யோவான் கல்லூரி அதிபர் ஆனந்தராஜன்  ஆடி 27 ஆம் திகதி மாலை டிக்ஷிட் தில்லியை வந்தடைந்தார். அந்நாள் காலையிலேயே யாழ்ப்பாணம் புனித யோவான் கல்லூரியின் அதிபர் ஆனந்தராஜா கொல்லப்பட்டிருந்தார். பரி யோவான் கல்லூரியின் துடுப்பாட்ட அணிக்கும், இலங்கை இராணுவத்தின் துடுப்பாட்ட அணிக்கும் இடையிலான சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டியொன்றினை பரி யோவான் கல்லூரி மைதானத்தில் நடத்த முயன்றதனால் அவர் சுடப்பட்டார். போட்டியினை நடத்துவதற்கான முயற்சிகளில் அவர் இறங்கியபோது புலிகளால் பலதடவைகள் அவருக்கு அதனைச் செய்யவேண்டாம் என்று எச்சரிக்கைகள் விடப்பட்டு வந்தன. ஆனால், அவ்வெச்சரிக்கைகளை உதாசீனம் செய்த ஆனந்தராஜா, "நீங்கள் அரசாங்கத்துடன் திம்புவில் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்றால், இராணுவத்துடன் கிரிக்கெட் ஆட்டம் ஒன்றினை நான் ஒழுங்குசெய்வதில் என்ன தவறு இருக்க முடியும்?" என்று அவர் பதிலுக்கு தனது செயலை நியாயப்படுத்தி வந்தார்.  யாழ்ப்பாண மக்களின் மனங்களையும், இதயங்களையும் வென்று, அவர்களின் ஆதரவினைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் யாழில் இயங்கிவந்த சில பிரபல பாடசாலைகளுடன் சிநேகபூர்வமான துடுப்பாட்டம் மற்றும் கால்பந்தாட்டப் போட்டிகளை இலங்கை இராணுவம் ஒழுங்குசெய்யத் திட்டமிட்டு வந்தது. இலங்கை அரசாங்கத்திற்கெதிராக மக்களை அணிதிரட்டும் தமது முயற்சியை இராணுவத்தினரின் "யாழ் மக்களின் மனங்களையும், இதயங்களையும் வெல்லுதல்" முயற்சி பாதிக்கக் கூடும் என்று கருதிய போராளிகள், இராணுவத்தின் இந்த முயற்சிக்கு எவரும் ஆதரவளிக்கக் கூடாது என்று கூறி வந்தனர். இன்று மேற்கு நாடொன்றில் வசிக்கும் புலிகளின் முன்னாள்ப் போராளியொருவரே ஆனந்தராஜாவைச் சுட்டுக் கொன்றிருந்தார். ஆனந்தராஜாவைத் தாமே கொன்றதாக புலிகள் உரிமைகோரும் துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டனர். தாம் பலமுறை வழங்கிய எச்சரிக்கைகளையும் மீறி இராணுவத்துடன் துடுப்பாட்டப் போட்டியை நடத்துவதில் உறுதியாக நின்றமைக்காகவே அவருக்குத் தண்டனை வழங்கப்பட்டதாக புலிகளின் அறிவித்தல் கூறியது. ஆனந்தராஜா மீதான தாக்குதல் சொல்லவேண்டியவர்களுக்குத் தெளிவான செய்தியைச் சொல்லியது. இராணுவத்தினருடனான சகலவிதமான சிநேகபூர்வப் போட்டிகளும் யாழ்ப் பாடசாலைகளால்  கைவிடப்பட்டன. யாழ் மக்களின் மனங்களையும், இதயங்களையும் வெல்லும் இராணுவத்தின் முயற்சி பிசுபிசுத்துப் போனது. ஆனந்தராஜா மீதான தாக்குதலை அரசாங்கம் தனது பிரச்சாரத் தேவைக்காகப் பயன்படுத்திக்கொண்டது. இதனை கடுமையான யுத்தநிறுத்த மீறலாகக் காட்டிய அரசாங்கம், ஆனந்தராஜாவின் கொலையோடு சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பாகத் தகவல் வழங்குவோரு சன்மானமாக ஐந்து லட்சம் ரூபாய்களைத் தருவதாக அறிவித்தது. ஆனால், அரசால் தாக்குதலில் ஈடுபட்டவர்களை இறுதிவரை கண்டுபிடிக்க முடியவில்லை. தில்லியில் தான் தங்கியிருந்த நான்கு நாட்களில் டிக்ஷிட், ரஜீவ் காந்தி, ரஜீவால் பிந்தள்ளப்பட்டிருந்த பார்த்தசாரதி, ரோவின் சக்சேனா மற்றும் சில வெளியுறவுத்துறை அதிகாரிகள் ஆகியோரைச் சந்தித்தார். இச்சந்திப்புக்களின்போது, இலங்கையின் ஒற்றுமையினையும், பிராந்திய ஒருமைப்பாட்டினையும் பாதிக்காத வகையில், தமிழர்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்குச் சாதகமான வகையில் ஜெயார் முன்வைக்கக் கூடிய ஆலோசனைகளை அவர்கள் தயாரித்தனர். இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட, கடப்பாடுகள் எதுவும் அற்ற இந்த ஆவணத்தில் இலங்கையினால் முன்வைக்கப்பட்ட அதிகபட்ச அதிகாரப் பரவலாக்கல் அலகான மாவட்ட அபிவிருத்திச் சபையின் அதிகாரங்களை மேம்படுத்துவது தொடர்பாகவே பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. தமிழரின் கோரிக்கையான பூர்வீகத் தாயகத்திற்குப் பதிலாக மாகாண அலகினை இலங்கையரசு வழங்க முடியும் என்றும், வடக்கு மாகாணமும், கிழக்கு மாகாணமும் கருத்து ரீதியாக இணைக்கப்படலாம் என்றும் இந்தியா பரிந்துரை செய்திருந்தது. இவ்வாறு அமைக்கப்படும் மாகாணங்களுக்கான அதிகாரங்கள் குறித்துப் பேசும்போது, நிதி , காணியதிகாரம், சட்டம் ‍ ஒழுங்கினை நிலைநாட்டும் அதிகாரம் ஆகியவை மத்திய அரசினால் பகிர்ந்தளிக்கப்படலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. மேலும், இந்த இணைந்த மாகாணங்களில் தமிழ் உத்தியோகபூர்வ மொழியாகப் பாவிக்கப்படலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டது. ஜெயாருடன் பார்த்தசாரதி   இரண்டாம் சுற்றுப் பேச்சுக்கள் நடப்பதற்கு சற்று முன்னதாக இந்தியாவின் "கடப்பாடு அற்ற" பரிந்துரைகளின் நகல் ஒன்றினை நீலனிடம் கொடுத்த டிக்ஷிட், "இவை அனைத்தும்  பார்த்தசாரதியின் யோசனைகள் தான்" என்று கூறினார். "பண்டாரிக்கோ, சக்சேனாவுக்கோ இவைகுறித்த எந்தவிதமான அறிவும் இருக்கவில்லை" என்று நீலன் கூறினார்.  தாம் தயாரித்த "கடப்பாடற்ற" பரிந்துரைகளை ஜெயாரிடம் வழங்கி, அவற்றின் அடிப்படையில் தனது தீர்வினை ஜெயார் வரைந்துகொள்ளலாம் என்றும், பண்டாரியின் இரண்டாவது விஜயம் தொடர்பாக அவரை ஆயத்தமாக இருக்கும்படி  கூறுமாறும் டிக்ஷிட்டைப் பணித்தார் ரஜீவ் காந்தி. ஆவணி 2 ஆம் திகதி கொழும்பு வந்திறங்கிய பண்டாரி, அன்று மாலையே ஜெயாரை அவரது உத்தியோகபூர்வ வாசஸ்த்தலத்தில் சந்தித்தார். இச்சந்திப்பில் லலித் அதுலத் முதலியும் உடனிருந்தார். ஜெயாருடனான தனது சந்திப்புப் பற்றி கொழும்பு அசைன்மென்ட்டில் எழுதும் டிக்ஷிட், திம்புப் பேச்சுக்களின் தோல்வி குறித்த இந்தியாவின் அதிருப்தியை ஜெயாரிடம் தெரிவித்ததுடன், இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட பரிந்துரைகளை அவரிடம் தான் வழங்கியதாகவும் கூறுகிறார். இச்சந்திப்புக் குறித்து நீலனிடம் பேசும்போது, "நான் கொடுத்த பரிந்துரைகளை வாங்கிப் படித்துவிட்டு, சிறிய புன்னகையுடன் அதனை அருகில் நின்ற லலித்திடம் கையளித்தார் ஜெயார்" என்று கூறியிருக்கிறார்.   மேலும், ஜெயாருடன் பேசிய டிக்ஷிட், இலங்கை அரசால் முதலாம் கட்டப் பேச்சுக்களில் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள், தமிழ்ப் போராளிகள் தமது ஆயுதங்களைக் கைவிட்டு சமாதானப் பேச்சுக்களுக்குத் திரும்புவதற்குப் போதுமான சலுகைகளைக் கொண்டிருக்கவில்லை என்றும் கூறினார். இடையில் குறுக்கிட்ட லலித் அதுலது முதலி, மிகவும் காட்டமான முறையில் இதற்குப் பதிலளித்தார். "இந்தியா தம்மை ஆதரிக்கிறது என்பதற்காக, தமிழர்கள் தாந்தோன்றித்தனமான முறையில் முன்வைக்கும் நிபந்தனைகள் எல்லாவற்றையும் நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்கிற கட்டாயம் எமக்கு இல்லை" என்று கூறியதுடன், "நீங்கள் தமிழ்ப் பயங்கரவாதிகளுக்கு எவ்வாறான உதவிகளைச் செய்துவருகிறீர்கள் என்பது குறித்தும் நாம் அறிவோம்" என்று நீண்ட விளக்கம் றினையும்  வழ‌ங்கினார். பின்னர் பேசிய ஜெயார், "இலங்கை அரசின் சார்பாக இரண்டாம் கட்டப் பேச்சுக்களை ஹெக்டர் ஜெயவர்த்தனவே நடத்துவார் என்பதனால், அவரிடமே இந்தியாவின் பரிந்துரைகளைக் கையளிக்கிறேன்" என்று டிக்ஷிட்டிடம் கூறினார். மேலும், பண்டாரியின் வருகையினை நாம் வரவேற்கிறோம், அவர் கூறப்போவதைச் செவிமடுக்கவும் ஆயத்தமாக இருக்கிறோம் என்று ரஜீவிடம் கூறுங்கள் என்று கூறினார்.   ஆவணி 8 ஆம் திகதி கொழும்பு வந்தடைந்த பண்டாரி, ஜனாதிபதி ஜெயவர்த்தன, பிரதமர் பிரேமதாச, வெளியுறவு அமைச்சர் ஹமீது, பாதுகாப்பமைச்சர் லலித் அதுலத் முதலி, எதிர்க்கட்சித் தலைவர் சிறிமா ஆகியோரைச் சந்தித்தார்.   ஆனால், பண்டாரியின் ஜெயாருடனான சந்திப்பு பலனற்றுப் போயிற்று. தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல்த் தீர்வொன்றினைக் காண்பதற்கு இந்தியாவினால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளின் அடிப்படையிலான தீர்வொன்றினை இலங்கை முன்வைக்க வேண்டும் என்று பண்டாரி ஜெயாரிடம் கூறினார். இரண்டாம் கட்டப் பேச்சுக்கள் மிகவும் முக்கியமானவை என்று இந்தியா கருதுவதாகவும் அவர் ஜெயாரிடம் தெரிவித்தார். இப்பேச்சுக்களும் தோல்வியடையும் பட்சத்தில் இலங்கை கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரும் என்று  அவர் ஜெயாரை எச்சரித்தார். ஆனால் பண்டாரியின் அழுத்தங்களினால் ஜெயாரைப் பணியவைக்க முடியவில்லை. பண்டாரியுடன் தீர்க்கமான பேச்சுக்களில் ஈடுபடுவதையே ஜெயார் தவிர்த்தார். பண்டாரியைக் கையாளும் பணியினை தனது சகோதரர் ஹெக்டர் ஜெயவர்த்தனவிடமும், லலித் அதுலத் முதலியிடமும் கையளித்தார் ஜெயார். "எனது சகோதரரே இரண்டாம் கட்டப் பேச்சுக்களையும் எமசார்பில் நடத்தவிருப்பதால், நீங்கள் அவரிடமே உங்களின் விளக்கங்களைக் கூறுங்கள்" என்று பண்டாரியை நோக்கிக் கூறினார் ஜெயார். மேலும், "லலித் இதுகுறித்து உங்களுடன் விளக்கமாகப் பேசுவார்" என்றும் அவரிடம் கூறினார்.  பிரேமதாசவுடனான பண்டாரியின் பேச்சுக்கள் பொதுவானவையாக இருந்தன. வழ‌க்கம்போல் "மகாத்மா காந்தியில் நான் மதிப்பு வைத்திருக்கிறேன், இந்தியாவை நேசிக்கிறேன்" என்று பிரேமதாச பண்டாரியிடம் பேசத் தொடங்கினார். பின்னர், பயங்கரவாதத்தினை முற்றாக அழித்துவிட இந்தியா இலங்கைக்கு உதவேண்டும் என்றும் அவர் கோரினார். "தமிழ்ப் பயங்கரவாதம் இருக்கும்வரை, அரசியல்த் தீர்விற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவானவை. சிங்கள மக்களின் பெருமையும், கெளரவமும் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறன. இந்த நிலையில் அவர்கள் எந்த விட்டுக் கொடுப்பிற்கும் முன்வரப்போவதில்லை. இலங்கையில் சமாதானமும், உறுதிப்பாடும் நிலைநாட்டப்படுவதில் இந்தியாவிற்கு இருக்கும் அக்கறையினை சிங்கள மக்கள் அறிவார்கள், ஆனால் பேச்சுக்களில் மத்தியஸ்த்தம் வகிக்க இந்தியா எடுத்துவரும் முயற்சிகளை சிங்கள மக்கள் சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்க்கிறார்கள். நீங்கள் தமிழர்கள் சார்பாகவே செயற்படுவதாக அவர்கள் முற்றாக நம்புகிறார்கள்" என்று அவர் பண்டாரியிடம் தெரிவித்தார். சிறிமாவுடனான சந்திப்பின்போது, "நான் திம்புப் பேச்சுக்கள் தோல்வியிலேயே முடிவடையும் என்று எதிர்பார்த்திருந்தேன். அப்படியே நடந்தது. ஏனென்றால், ஜெயவர்த்தன இப்பேச்சுக்களில் இதய சுத்தியுடன் ஈடுபடவில்லை. இரண்டாம் கட்டப் பேச்சுக்களுக்கும் இதே நிலைதான் ஏற்படும்" என்று பண்டாரியிடம் தெரிவித்தார் சிறிமா.    இலங்கையின் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவரான ஹெக்டர் ஜெயவர்த்தனவுடன் பேசும்போது, "பழைய விடயங்களைத் திரும்பத் திரும்ப பேச்சுவார்த்தை மேசையில் பேசுவதைத் தவிருங்கள், எதிர்காலம் குறித்து மட்டுமே நாம் பேசலாம்" என்று கெஞ்சுவது போலக் கோரினார் பண்டாரி. இலங்கை தனது தீர்வினை எந்தெந்த இடங்களில் மேம்படுத்த முடியும் என்பது குறித்த பரிந்துரைகளை இந்தியாவின் "கடப்பாடு அற்ற" ஆவணம் கொண்டிருப்பதாக அவர் சுட்டிக் காட்டினார். இதற்குப் பதிலளித்த ஹெக்டர், "1978 ஆம் ஆண்டு யாப்பின் வரையறைகளை நான் சரியாக ஆராய்ந்து, எனது ஆலோசனைகளை அவற்றின் அடிப்படையில்  முன்வைக்கிறேன்" என்று கூறினார். லலித்துடனான பண்டாரியின் சந்திப்பு வித்தியாசகாம இருந்தது. "கடப்பாடு அற்ற" என்கிற தொனியில் இந்தியா முன்வைத்த அனைத்து பரிந்துரைகளையும் லலித் திட்டவட்டமாக நிராகரித்தார். வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் இந்தியாவின் யோசனையினை இலங்கை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று பண்டாரியிடம் கூறினார் லலித். கிழக்கு மாகாணத்தில் சிங்களவர்களும் முஸ்லீம்களும் இணைந்து பெரும்பான்மையினராக மாறியிருப்பதாகவும், தமிழர்கள் அங்கு சிறுபான்மையினர் என்றும் அவர் கூறினார். மேலும், 1977 ஆம் ஆண்டுத் தேர்தலில் தனிநாட்டிற்கான ஆணையினை கிழக்கு மாகாண மக்கள் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு வழங்கவில்லை என்றும் அவர் வாதிட்டார். 1982 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலும், சர்வஜன வாக்கெடுப்பும் கிழக்கு மாகாணம் அரசாங்கத்திற்கு ஆதரவாக நிற்பதையே நிரூபித்திருக்கின்றன என்று தனது வாதத்திற்கு மேலும் வலுச் சேர்த்தார் லலித்.  அடுத்ததாக, மாகாண சபைகளுக்கு வழங்கப்படும் அதிகாரங்களை மேம்படுத்தலாம் என்கிற இந்தியாவின் ஆலோசனைகளையும் லலித் புறக்கணித்தார். மாகாண சபைகளுக்கு நிதியதிகாரம், காணியதிகாரம், சட்டம் ஒழுங்கு ஆதிகாரம் ஆகியவற்றை வழங்குவதை சிங்கள மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று அவர் கூறினார். தனிச் சிங்களச் சட்டத்தில் மாற்றங்களைச் செய்யும் அதிகாரமோ, அல்லது 1972 மற்றும் 1978 ஆம் ஆண்டு யாப்புகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் நாட்டின் ஒருமைப்பாடு, ஒற்றையாட்சி ஆகியவற்றில் மாற்றங்களைக் கொண்டுவரும் அதிகாரமோ இலங்கையில் எந்த அரசிற்கும் கிடையாது என்றும் அவர் கூறினார். "இந்த விடயங்களில் இலங்கையின் அரசானாலும், எதிர்க்கட்சியானாலும் அவர்கள் அனைவரினதும் நிலைப்பாடு ஒன்றுதான்" என்று மிகுந்த நம்பிக்கையுடன் பண்டாரியைப் பார்த்துக் கூறினார் லலித். 
    • கைக்காப்பு, கைப்பற்று மற்றும் தொலைநோக்கி பூட்டப்பட்ட ஏ.கே. 103 துமுக்கியால் சுட்டுப் பார்க்கிறார் தலைவர் மாமா காலம்: நான்காம் ஈழப்போர்    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.