Jump to content

குளத்தின் பாதுகாப்பு சுவருக்கு பூசுவது பௌத்த வர்ணமல்ல ஒலிம்பிக் வர்ணமாம் - அங்கஜன் இராமநாதன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையார் கோவில் குள பாதுகாப்பு சுவருக்கு பூசப்பட்ட வர்ணம் பௌத்த வர்ணம் அல்ல ஒலிம்பிக் வர்ணம் என தன்னிடம்  நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரி தெரிவித்ததாக யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவருமான பாராளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். 

0__4_.jpg

யாழ்.பொஸ்கோ பாடசாலைக்கு முன்பாகவுள்ள பிள்ளையார் குளம் புனரமைப்பு செய்யப்படும் நிலையில் குளத்தை சுற்றி புதிதாக கட்டப்பட்டிருக்கும் பாதுகாப்பு சுவர்களில் பௌத்த கொடியை ஒத்த வர்ணம் தீட்டப்படுவதாக  சர்ச்சைகள் எழுந்துள்ளன. 

அது தொடர்பில் அங்கஜன் இராமநாதன் தெரிவிக்கையிலையே அவ்வாறு தெரிவித்தார். 

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் , 

யாழ்ப்பாணம் பிள்ளையார் கோவில் குளத்தினை புனரமைக்கும் செயற்பாட்டின் ஓர் அங்கமாக வர்ணப்பூச்சுப் பணிகள் இடம்பெற்றுவரும் நிலையில், குறித்த வர்ணங்கள் பௌத்த கொடியினை பிரதிபலிப்பதாக ஏற்படுத்தப்பட்ட சர்ச்சை தொடர்பில், நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகளோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டேன். 

அதற்கு,  குறித்த நிறங்கள் ஒலிம்பிக் கொடியினை பிரதிபலிக்கும் வகையில் பயன்படுத்தப்படுவதாகவும் அவை அருகில் உள்ள முன்னணி ஆரம்ப பாடசாலையின் மாணவர்களை கருத்தில் கொண்டு பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

0__2_.jpg

எனவே இவ்விடயத்தில் வீண் சர்ச்சைகளை தவிர்க்குமாறும், சுயலாப அரசியலை முன்னெடுக்க முயற்சிக்கும்போது பௌத்த கொடியில் பச்சை நிறம் உள்ளடக்கபட்டிருக்கவில்லை என்பதையும் கருத்தில் கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்தார். 

வர்ணப்பூச்சு வேலைகள் இடைநிறுத்தம். 

அதேவேளை , வர்ண சர்ச்சை காரணமாக குளத்திற்கு நேரடியாக சென்ற யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன்  வர்ண பூச்சு பணிகளை இடைநிறுத்துமாறு பணித்துள்ளார். 

யாழ்.மாவட்டத்தில் இடம்பெறும் அபிவிருத்திகள் தொடர்பில் கள ஆய்வுகளை மேற்கொள்வதற்காக கடந்த வாரம் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ குறித்த குளத்தின் அபிவிருத்தி பணிகளை பார்வையிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

குளத்தின் பாதுகாப்பு சுவருக்கு பூசுவது பௌத்த வர்ணமல்ல ஒலிம்பிக் வர்ணமாம் - அங்கஜன் இராமநாதன் | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பூச்சு வர்ணம் அழகாகதான் உள்ளது.

பூச்சுக்கு Googleம் சொந்தம் கொண்டாடலாம்?

பிள்ளையார் கோயில் LGBT friendly என்றும் எடுத்து கொள்ளலாம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, பிழம்பு said:

பிள்ளையார் கோவில் குள பாதுகாப்பு சுவருக்கு பூசப்பட்ட வர்ணம் பௌத்த வர்ணம் அல்ல ஒலிம்பிக் வர்ணம் என தன்னிடம்  நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரி தெரிவித்ததாக யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவருமான பாராளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். 

ஒலிம்பிக் வர்ணம் பூசுறதுக்கு இப்ப என்ன பிள்ளையார் கோயிலடியிலை ஒலிம்பிக் போட்டியே நடக்கப்போகுது? 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதிகூடிய விருப்பு வாக்குப் பெற்ற பா.உ சொன்னால் நம்பவேணும் கண்டியளோ.

Link to comment
Share on other sites

1 hour ago, குமாரசாமி said:

ஒலிம்பிக் வர்ணம் பூசுறதுக்கு இப்ப என்ன பிள்ளையார் கோயிலடியிலை ஒலிம்பிக் போட்டியே நடக்கப்போகுது? 😎

அடுத்த ஒலிம்பிக் போட்டியில் கொழுக்கட்டை, மோதகம் உண்ணும்  போட்டி இணைக்கப்படலாம் சாமியார். அங்கயனை நீங்கள் நேரில் கண்டதில்லையா.... போட்டியில் பங்குபற்றப் பயிற்சியை எப்போதோ தொடங்கிவிட்டார். 🤗

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

ஒலிம்பிக் வர்ணம் பூசுறதுக்கு இப்ப என்ன பிள்ளையார் கோயிலடியிலை ஒலிம்பிக் போட்டியே நடக்கப்போகுது? 😎

ஊர் அழகாவதை சிலர் விரும்புவதில்லை சும்மா கிடப்பதை சொரண்டினால் எப்பவும் பிரச்சினைதான் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோவிலுக்கு கோவில் சுற்றயலுக்கு என்று ஒரு வர்ணம் தனித்துவாம இருக்குத்தானே.. அதையேன் இவர் கெடுக்கிறார்.

தமிழன் தனித்துவமாக இருக்கக் கூடாதுன்னு எஜமானர்கள் எழுதிக் கொடுத்திருப்பினம் போல.

அதுசரி.. யாழ்ப்பாணம்.. இதோ அதோ ஆகுது என்றதன்.. பொருள் இதுதானோ. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உதில பச்சை கலர் தெரியுது.

பெளத்த கொடியில் பச்சை நிறம் இல்லை என நினைக்கிறேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பிழம்பு said:

வர்ண சர்ச்சை காரணமாக குளத்திற்கு நேரடியாக சென்ற யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன்  வர்ண பூச்சு பணிகளை இடைநிறுத்துமாறு பணித்துள்ளார். 

😂

தங்களது வீட்டு சுவர் மதில் வர்ணம் தீட்டப்படாமல் அழகிழந்து காட்சி அளிக்கிறது பிள்ளையார் கோவிலுக்கு புது மதில் வர்ண பூச்சு அழகு எல்லாம் எதற்கு என்று பொறாமைபட்டவர்கள் முயற்சி செய்து வெற்றி கண்டுள்ளனர்.

 

Link to comment
Share on other sites

4 hours ago, goshan_che said:

உதில பச்சை கலர் தெரியுது.

பெளத்த கொடியில் பச்சை நிறம் இல்லை என நினைக்கிறேன்.

 

Quote

எனவே இவ்விடயத்தில் வீண் சர்ச்சைகளை தவிர்க்குமாறும், சுயலாப அரசியலை முன்னெடுக்க முயற்சிக்கும்போது பௌத்த கொடியில் பச்சை நிறம் உள்ளடக்கபட்டிருக்கவில்லை என்பதையும் கருத்தில் கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்தார். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

பூச்சு வர்ணம் அழகாகதான் உள்ளது.

பூச்சுக்கு Googleம் சொந்தம் கொண்டாடலாம்?

பிள்ளையார் கோயில் LGBT friendly என்றும் எடுத்து கொள்ளலாம்?

உப்பிடி பலவற்றை கண்டுங்காணாமல் விட்டதன் பயன்; இன்று எல்லாவற்றையும் இழந்து நிற்கிறோம். அது சரி ஒலிம்பிக் போட்டிக்கும் பிள்ளையாருக்கும் என்ன சம்பந்தம்? தமிழர் பிரதேசத்தில்  பெயர்பலகையில் தமிழில்  முதலில்  போட்டதால் அதகளம் பண்ணி  அழித்து சிங்களத்தில் போடும்படி ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் கொஞ்சம் கவனிக்க வேண்டும். எங்களுக்கென்றொரு தனித்துவம் இருக்கும்போது, ஏன் எங்களோடு தொடர்பில்லாத  மற்றவர்களின் அடையாளங்களுக்கு எங்களை இழந்து முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டும்? சொரணை கெட்ட அங்கஜனுக்கு அரசியல் பெரிதாக இருக்கலாம் எல்லோரும் அப்படி இருக்க முடியாது என்பதை நினைவிற் கொள்ளவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

பூச்சு வர்ணம் அழகாகதான் உள்ளது.

பூச்சுக்கு Googleம் சொந்தம் கொண்டாடலாம்?

பிள்ளையார் கோயில் LGBT friendly என்றும் எடுத்து கொள்ளலாம்?

பள்ளிவாயலுக்கு பணிய நீன் போயி நின்னு பள்ளிவாயலும் LGBT friendly ஏன்னு செல்லியிருந்தீன்னாக்க எல்லோரும் நல்லா வாழணும் அப்பிடீங்கிறத்துக்கு நல்ல பலாய் கெடைச்சஇருந்திருக்கும்.

மட்டுறுத்துனர் அப்பிடீன்னு செல பேத்து இருக்கங்கக்ன்னு அங்கினைக்குள்ள பேசிக்கினாங்க ...🤨

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

உதில பச்சை கலர் தெரியுது.

பெளத்த கொடியில் பச்சை நிறம் இல்லை என நினைக்கிறேன்.

 

பவுத்த கொடி என்று நீங்கள்  எதை சொல்லுகிறீர்கள்? ஒருக்கா இணைத்துவிட்டால் நாங்களும் பாப்போமில்ல!

சக்கரத்தையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

பவுத்த கொடி என்று நீங்கள்  எதை சொல்லுகிறீர்கள்? ஒருக்கா இணைத்துவிட்டால் நாங்களும் பாப்போமில்ல!

சக்கரத்தையா?

image.jpeg.083535edd56735f4b9e4bb031b81702b.jpeg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of tree and outdoors

அடுத்த ஒலிம்பிக், நீச்சற் போட்டிக்கான... குளம் இலங்கையில் நிறுவப்படுகின்றது. 🤣

-இணுவையூர் மயூரன்.-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, satan said:

பவுத்த கொடி என்று நீங்கள்  எதை சொல்லுகிறீர்கள்? ஒருக்கா இணைத்துவிட்டால் நாங்களும் பாப்போமில்ல!

சக்கரத்தையா?

கீழே புங்கை அண்ணா இணைத்த கொடிதான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, புங்கையூரன் said:

image.jpeg.083535edd56735f4b9e4bb031b81702b.jpeg

நன்றி புங்கையூரன் இணைப்புக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, nunavilan said:

 

அவையின்ரைநோக்கம் அதுவாகத்தான் இருந்திருக்கும். தனக்கு வாக்கு இல்லாமல் போனாலும் என்று பச்சையைக்கலந்திருப்பினம். இந்த இடத்துக்கும் ஒலிம்பிக்குக்கும் என்ன சம்பந்தம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒலிம்பிக் போட்டியை  யாழ்ப்பாணத்தில் நடாத்தும்  அளவுக்கு அண்ணன் அங்கஜன் இராமநாதன் மகிந்தவுக்கு  சேவை  செய்து  பெற்றிருப்பது  புல்லரிக்கிறது???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காணாமல் ஆக்கப்பட்டவர்களைப் பற்றி ஒரு கதையும் கதைக்காதவர்கள்...
குளம் குட்டைகளுக்கு வர்ணம் பூசியதற்கு கதைகள் பல சொல்கின்றார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, வாதவூரான் said:

அவையின்ரைநோக்கம் அதுவாகத்தான் இருந்திருக்கும். தனக்கு வாக்கு இல்லாமல் போனாலும் என்று பச்சையைக்கலந்திருப்பினம். இந்த இடத்துக்கும் ஒலிம்பிக்குக்கும் என்ன சம்பந்தம்

 

On 14/9/2021 at 23:58, பிழம்பு said:

பௌத்த கொடியில் பச்சை நிறம் உள்ளடக்கபட்டிருக்கவில்லை என்பதையும் கருத்தில் கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்தார். 

மக்கள் மறந்துபோக அதுவும் ஒருநாள் இரவோடிரவாக மறையும். ஒரு நிறந்தானே! ஒரு நொடியில் மறைந்து போகும். இரவோடிரவாக புத்தர்  எழுந்தருளும்போது இது பெரிய வேலையா என்ன? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14/9/2021 at 18:12, தனிக்காட்டு ராஜா said:

ஊர் அழகாவதை சிலர் விரும்புவதில்லை சும்மா கிடப்பதை சொரண்டினால் எப்பவும் பிரச்சினைதான் 

அந்தக் கலர் ஒலிம்பிக் வர்ணம் என அங்கஜன் சொல்ல காரணம் என்ன? ஏன் அப்படி சொன்னார்? சிந்திக்க மாட்டீர்களா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

அந்தக் கலர் ஒலிம்பிக் வர்ணம் என அங்கஜன் சொல்ல காரணம் என்ன? ஏன் அப்படி சொன்னார்? சிந்திக்க மாட்டீர்களா? 

சும்மா கிடப்பதை சுரண்டக்கூடாது

ஆனால் ர்   டிக்லாம்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, குமாரசாமி said:

அந்தக் கலர் ஒலிம்பிக் வர்ணம் என அங்கஜன் சொல்ல காரணம் என்ன? ஏன் அப்படி சொன்னார்? சிந்திக்க மாட்டீர்களா? 

The Olympic symbol consists of five interlaced rings of equal dimensions, used alone, in one or in five different colours, which are, from left to right, blue, yellow, black, green and red.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Colour blind toilet boy.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழில் சகோதரிக்கு போதை ஊசி செலுத்தி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரன் கைது Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 03:41 PM   தனது சகோதரியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்ததுடன், சகோதரியை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த குற்றச்சாட்டில் சகோதரன் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.  யாழ்ப்பாணம் நகர் பகுதியை அண்டிய கிராமத்தைச் சேர்ந்த 34 வயதுடைய பெண்ணொருவர் தனது பெற்றோர் உயிரிழந்த நிலையில், சகோதரியுடன் வடமராட்சி கிழக்கு பகுதியில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் வசித்து வந்துள்ளார்.  இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் பெண்ணின் சகோதரி உயிரிழந்துள்ளார். அதனை அடுத்து இல்லத்தில் வசித்து வந்த சகோதரியை , யாழ்.நகர் பகுதியை அண்டிய பிரதேசத்தில் வாழும் சகோதரன் தன்னுடன் அழைத்து வந்து தங்க வைத்துள்ளார்.  இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் குறித்த பெண்ணுக்கு போதைப்பொருட்களை வலுக்கட்டாயமாக நுகர வைத்தும், போதை ஊசிகளை செலுத்தியும் பாலியல் வன்புணர்வுக்கு கும்பல் ஒன்று உட்படுத்தி வந்துடன் பெண்ணை சித்திரவதைக்கு உள்ளாக்கியும் வந்துள்ளது.  பின்னர் கடந்த வாரம் மீண்டும் ஆதரவற்றோர் இல்லத்தில் பெண்ணை கொண்டு சென்று சகோதரன் சேர்த்துள்ளார். இல்லத்தில் பெண்ணின் நடவடிக்கையில் மாற்றங்கள் தென்பட்டதுடன், உடலில் காயங்கள் காணப்பட்டமையால், இல்ல நிர்வாகத்தினரால் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பெண்ணை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.  வைத்திய சிகிச்சையின் போதே பெண் தனக்கு நேர்ந்த கொடுமைகளை விபரித்துள்ளார். அதனை அடுத்து சட்ட வைத்திய அதிகாரியினால், முன்னெடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனைகளின் போது, பெண் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமையும், பெண்ணை அடித்து துன்புறுத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கியமைக்கான காயங்கள் உடலில் காணப்பட்டுள்ளமையும் உறுதிப்படுத்தப்பட்டது.  சம்பவம் தொடர்பில் ஆரம்ப விசாரணைகளை முன்னெடுத்த பருத்தித்துறை பொலிஸார், குற்றம் நடைபெற்ற பிரதேசம் யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலைய பிரிவுக்கு உட்பட்டது என்றதன் அடிப்படையில் , யாழ்ப்பாண பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து, யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.  விசாரணைகளின் அடிப்படையில் பெண்ணின் சகோதரனே, பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்தமையும், போதைப்பொருட்களை கட்டாயப்படுத்தி நுகர வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியமையும் தெரிய வந்துள்ளது.  அதனை அடுத்து சகோதரனை கைது செய்த பொலிஸார் விசாரணைகளின் பின்னர் யாழ்,நீதவான் நீதிமன்றில் நேற்று வியாழக்கிழமை முற்படுத்தியவேளை, சகோதரனை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.  அதேவேளை, பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியவர்கள் என 08 பேரை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   யாழில் சகோதரிக்கு போதை ஊசி செலுத்தி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரன் கைது | Virakesari.lk
    • மன்னார் - நானாட்டான் கமநல சேவைகள் பிரிவில் உள்ள வஞ்சியன்குளம் கமக்காரர் அமைப்புக்கு உட்பட்ட வஞ்சியக் குளக்கண்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை (26) காலை பயிர்களுக்கு ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறும் பணிகள் இடம்பெற்றன. அந்த வகையில், MI 07 இனத்தைச் சேர்ந்த பயறு செய்கைக்கான திரவ உரம் ட்ரோன் மூலம் விசிறப்பட்டது.  ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறும் பணிகள் இடம்பெற்றபோது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், கமநல அபிவிருத்தி  உதவி ஆணையர், விவசாய மாகாண பிரதி பணிப்பாளர், கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர், கமநல மற்றும் விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள், விவசாயிகள் என பலர் களத்தில் இருந்தனர். மன்னார் - நானாட்டானில் பயிர்களுக்கு ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறப்பட்டது!  | Virakesari.lk
    • நெடுமாறன் அய்யா எமக்காக செய்தவற்றில் சில 1982ஆம் ஆண்டு இலங்கையில் தமிழ் நூல்கள் அதிகம் இருந்த யாழ் நூலகம் தீக்கிரையாக்கப்பட்டபோது, அவ்விடம் சென்று அதனை ஆவணப்படுத்தி, அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆரிடம் அறிக்கை சமர்ப்பித்தார். அதன்பின், எம்.ஜி.ஆர், இலங்கையில் தமிழர் போராட்டம் குறித்து அன்றைய பிரதமர் இந்திரா காந்தியிடம் பேசினார் என்பது வரலாறு. மேலும், 1985ஆம் ஆண்டு, சிங்களப் படைகளால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ்ப்பகுதிகளை, ரகசியமாக பயணம் செய்து காணொலியாகப் பதிந்து, உலகம் முழுக்க தெரியப்படுத்தினார். அதேபோல், 1991ஆம் ஆண்டு இந்திய அமைதிப்படை இலங்கையில் செய்த கொடூரங்களை, ஆவணப்படுத்தி, அன்றைய பிரதமர் வி.பி.சிங்கிடம் இதுகுறித்து பேசி,அவரை திரும்பப்பெற வலியுறுத்தினார். இப்படி தொடர்ந்து ஈழ ஆதரவுப் போராட்டங்களில் ஈடுபட்டார், பழநெடுமாறன்.  நாங்கள் என்ன செய்தோம்.  போராடமால் வெளிநாடு சென்று இணையத்தில் மட்டுமே போராடுகிறோம்.  2010 தேர்தலில் எம்மை அழித்த சரத் பொன்சேகாவுக்கு யாழில் எம்மவர்கள் வழங்கிய அதிக வாக்குகள்.  ஆனால் நாங்கள் தமிழக அரசியல்வாதிகளைப் பார்த்து துரோகிகள் என்கிறோம். இது வேடிக்கை இல்லையா?
    • இப்படி உறைக்க சொல்லுங்கோ பாஸ். அப்பதான் எனக்கும் உறைக்கும். ஏனென்றால், நானும் இப்படித்தான் நினைச்சுக் கொண்டு இருக்கின்றேன். என் மகள் உறைப்பு சாப்பிடவே மாட்டார், ஆனால் மகன் மகளுக்கு நேர் எதிர். இதனால், அவனுக்கு "எந்த சாப்பாட்டைக் கொடுத்தாலும், சாப்பிடுவான்' என்று ஒரே நற்சான்றிதழ் கொடுப்பதுடன், அவன் விரும்பிச் சாப்பிடும் சாப்பாடுகளில், உறைப்பை தூக்கலாக போட்டுத்தான் சமைப்பது. நானும் கடும் உறைப்பு சாப்பிட்டுக் கொண்டு இருந்தனார் - இந்த வருடம் பெப்ரவரி வரைக்கும். பெப் இல் வந்த நிமோனியாவுக்கு எடுத்த  நுண்ணுயிர் எதிர்ப்பியால் / Antibiotics , மிளகாய்த் தூள் கொஞ்சம் கூடப் போட்டு சமைத்தால்.... பிச்சுக் கொண்டு போகுது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.