Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நிலவின் வருகை: நிழலி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

என்னை கொடுத்து உன்னை பெற்றேன் நான்

என் ஆசையின் உயிர் நீ

நீ வந்ததை எண்ணி வாய் பேசுகிறேன் ........ நான்

ஆனந்தத்தில் ஆனந்தத்தில்

வாழ்த்துக்கள் நிழலி :):)

  • Replies 87
  • Views 11.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தம்பி நிழலி!

இரண்டு கடிநாய் வாங்கி வளவப்பா

இனி உங்கை உள்ள கடுவன்கள் எல்லாம் வாலை ஆட்டிக்கொண்டு திரியப்போகுதுகள்

நிழலி அண்ணாவை....என்ன இனத்து நாய்க்குட்டி வாங்கி வளர்க்கச் சொல்லுறயள் கு.சா அண்ணா...?வவ்... :) வவ்... :D நான் சும்மா பகிடிக்கு சொல்லுறன்.. :D

Edited by யாயினி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிழலி,

உங்களைப்போல அந்த வேதனையை அருகிருந்து பங்கிட்டுக்கொள்ளும் சந்தர்ப்பம் எங்கள் காலத்தில் இருக்கவில்லை. உங்கள் கவிதை வரிகள் எனக்கு அதை உணர்த்தின. என் மகள் இன்று யாருடையதோ தேவதையாகப் போய்விட்டாலும் முதன்முறை தொட்டிலில், யாரோ கனவில் வேடிக்கை காட்ட சிரித்தபடி உறங்கிய என் மழலையை அவ்வப்போது நினத்துக்கொள்ளத்தான் செய்கிறேன்.இப்போது மீண்டும் ஒருமுறை..

வாழ்த்துகிறேன்

கே.எஸ்.பாலச்சந்திரன்

என்னை கொடுத்து உன்னை பெற்றேன் நான்

என் ஆசையின் உயிர் நீ

வாழ்த்துக்கள் நிழலி

என்ன நிழலி காலை வாரி போட்டியள்...............

எப்ப தொடக்கம் ஆண்கள் சீதனம் குடுத்து கட்டுற கலாச்சாரம் ஆரம்பமானது!!!!!!!

அப்ப எங்கட இனம் முன்னேறுது எண்டு சொல்லுறியள்...................

என்ர பொடியளுக்கும் நான் கராட்டே பழகி கறுப்பு பட்டி வேண்டி வைச்சிருக்கிறாங்கள்!!!!!!!

அதால குடும்ப சண்டை எண்டு வரும் போது அவையள் இரண்டு பேருமே அடிச்சு தீர்த்துக் கொள்வார்கள்.................

அதால இதை விட பெரிய சீதணம்; எண்டு வேறை ஒண்டும் நீங்கள் கேக்க மாட்டியள் எண்டு நினைக்கிறன்...................

  • கருத்துக்கள உறவுகள்

நிலவின் வருகையை இட்டு மகிழ்ச்சி...வாழ்த்துகள் நிழலி உங்கள் மனைவிக்கும் எனது வாழ்த்தினை தெரிவியுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நிழலியின் கவிதை இரண்டு உயிரின் பெறுமதியை சொன்னது.

பெண்களை இழிவாக நினைக்கும் நெடுக்காலைபோவானுக்கு ........

ஒரு பெண் பிரசவ அறையில் குழந்தை பெறும் போது ..... வரும் அழுகையை , வேதனையை கேட்ட அனுபவம் உண்டா ....?

ஏட்டுச்சுரைக்காய் என்றும் கறிக்கு உதவாது.

எதனடிப்படையில் பெண்களை நான் இழிவாக நோக்குகிறேன் என்று குறிப்பிடுகிறீர்கள்.

பெண்கள் சமூகத்தில் செய்யும் தவறுகளைச் சொல்வதால் நான் பெண்களை எல்லாம் இழிவாக நோக்குகிறேன் என்று அர்த்தப்படுத்துதல் தவறானது. சமூகத்திற்கு தீங்கிழைக்கும் பெண்களை மட்டுமல்ல ஆண்கள் மீதும் குற்றம் சுமத்தி இருக்கிறேன்.

நீங்கள் பிறந்து வளர்ந்து ஒரு பெண்ணை திருமணம் முடித்து அவள் கருவுற்று பின் அவள் பிள்ளைப் பெறும் வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை தாய்மையின் தன்மையை அறிவதற்கு.

வீதியோர நாய்க்கும் தாய்மை இருக்கு. அதை நான் கண்டிருக்கிறேன். உச்சித் தென்னையில் கூடுகட்டி குஞ்சு பொரிக்கும் காக்கையிடம் தாய்மை இருக்கு கண்டிருக்கிறேன். தன் குஞ்சுகளுக்காய் இரவல் கூட்டில் முட்டையிட்டு கொத்து வாங்கி குளறி அடித்துத் திரியும் குயிலின் குரலுக்கு இரங்கி இருக்கிறேன். பருந்திடம் இருந்து தன் குஞ்சுகளை காக்க பதறி அடிக்கும் பேட்டுக் கோழியிடம் இருக்கும் தாய்மை கண்டிருக்கிறேன். சிறு பூச்சி என்றாலும் குஞ்சுகளுக்காய் கொண்டோடித் திரியும் மீன்கொத்தி கண்டு வியந்திருக்கிறேன்.

பிறந்த பூனைக்குட்டியை பெட்டை என்பதற்காக பிரித்து குப்பைத் தொட்டியில் விட்டெறிந்த சமூகத்தையும் கண்டிருக்கிறேன்.

அம்மா பிச்சை என்று கையில் குழந்தையோடு வருபவளை வாசலில் வைத்து 10 சதத்தை கொடுத்து விரட்டி அடித்த சமூகத்தையும் கண்டிருக்கிறேன். ஐயோ அவள் பாவம் என்று பின்னர் நாலு பேர் முன் போலி இரக்கப்பட்டதையும் கண்டிருக்கிறேன். இன்று அவர்களே வேதாந்தம் பேசுவதையும் கண்டிருக்கிறேன்.

ஏன்.. பெற்ற பிள்ளையையே பச்சிளம் நிலையில் குளத்தில் மண்ணில் வைத்தியசாலை விட்டெறிந்துவிட்டு பிள்ளையே பெறவில்லை என்று உலா வந்த பெண்களும் உளர். அவர்களை எல்லாம் தாய்மையின் பெயரால் மதிக்கவா முடியும்..??

இன்னும் இன்னும் தினமும்.. தங்கள் சுயநலனுக்காக கருவிலேயே சிதைக்கப்படும் எத்தனையோ ஆயிரம் சிசுக்களின் பெயரால் உருவாக இருந்த தாய்மை பறிபோனதற்காய் எத்தனை பெயர் வருந்தி இருக்கிறீர்கள்..???!

ஏன் இன்னொரு தாய் பெற்ற பிள்ளை வெடித்துச் சிதற நாம் அவர் பெயரால் வாழ்வமைத்துக் கொண்டு வாழ்ந்தோமே.. அப்போ எல்லாம் உணரப்படாத தாய்மையும் பெண்மையும்.. சொந்தமா ஒருத்தி பிள்ளைப் பெற்றால் தான் உணரப்படும் என்றால் அப்படி ஒரு மனிதம் மனிதனுக்கு அவசியமா..??!

இதை நான் நிழலியின் கவிதைக்காகக் கேட்கவில்லை. அது அவரின் அந்த நேர உணர்வின் தூண்டலின் பெறுபேறு என்று அவரே சொல்லிவிட்டார்.

இதை நான்.. கேட்பதற்குக் காரணம்.. ஒருவன் அல்லது ஒருத்தி திருமணம் செய்து பிள்ளை பெற்றால் தான் இந்த உலகில் தாய்மையின் நிலையை உணர முடியுமா என்பது..??!

தாய்மையைக் காரணம் காட்டி பெண்களை எல்லாம் உத்தமர்கள் என்று போற்றிட நான் தயார் இல்லை. ஏனெனில் தாய்மையையே பழிக்குள் தள்ளிவிட்டு வாழும் பெண்களும் இந்த உலகில் இருக்கின்றனர். அது அவர்களே ஏற்படுத்திக் கொண்ட இழிநிலை. அதில் இருந்து அவர்கள் விடுபடட்டும். நிச்சயம் அவர்கள் மீது நான் குற்றம் சொல்லமாட்டேன். :wub:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்கு சாமியின்ரை அதிரடி விசயங்களை பாக்கேக்கை :wub:

ஓரினசேர்க்கைக்கு சப்போட் பண்ணுறார் போலை கிடக்கு :)

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு சாமியின்ரை அதிரடி விசயங்களை பாக்கேக்கை :wub:

ஓரினசேர்க்கைக்கு சப்போட் பண்ணுறார் போலை கிடக்கு :)

பெண்களின் சமூகக் குற்றங்களை சொல்லுவது என்பது ஓரினச் சேர்கையை ஆதரிப்பது என்பதல்ல அர்த்தம். ஒரு நீதிபதி ஒரு பெண்ணைக் குற்றவாளி என்று இனங்கண்டு விட்டால் அவர் ஓரினச் சேர்கையை ஆதரிக்கிறார் என்று சொல்வீர்கள் போலிருக்கிறது.

இவ்வாறான கண்மூடித்தனமான குற்றச்சாட்டுக்கள் மூலம் கருத்தியலுக்கு தடை போடுவது எமது சமூகத்தின் கீழ்த்தரமான ஒரு செயற்பாடாக காலம் காலமாக இருந்து வருகிறது. அதுவும் உடைத்தெறியப்பட வேண்டும். ஓரினச் சேர்கையை ஆதரிப்பதால் கூட ஒருவன் ஓரினச் சேர்கையாளனாகத்தான் இருக்க வேண்டும் என்பதல்ல. அவர்களின் நிலையை சரிவர ஆராய்ந்து அறிந்தவர்களாகக் கூட இருக்கலாம். அப்படித்தான் உயிர் அறிவியலாளர்கள் இருக்கிறார்கள்.

ஓரினச் சேர்கை என்பதை இயற்கையின் உயிரினவியலுக்கு அவசியமற்ற ஒன்றாகவே நான் கருதுகிறேன். ஓரினச் சேர்கையாளர்கள் பிறப்பால் தீர்மானிக்கப்படுகிறார்கள் என்ற சமீபத்திய ஆராய்ச்சிகளின் வாயிலாக அவர்களின் பிறப்புரிமை சார்ந்து எழும் அந்தப் பிரச்சனைக்காக அவர்களின் அடிப்படை மனித உரிமைகளைப் பறிப்பதலில் எனக்கு உடன்பாடில்லை. இப்போ டவுன் சின்றோமோடு பிறந்துள்ள குழந்தைகளுக்கு வழங்கப்படும் உரிமைகள் போன்று ஓரினச் சேர்க்கையாளர்களுக்கும் வழங்கப்படுதல் வேண்டும். ஓரினச் சேர்கையாளர்கள் என்பதற்காக அவர்களின் வாழ்வுரிமையைப் பறிக்க முடியாது. இப்படிச் சொல்லி விடுவதால் சாதாரணமனவர்களிடம் ஓரினச் சேர்கையை ஆதரிக்கிறோம் என்பதல்ல அர்த்தம். :)

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு சாமியின்ரை அதிரடி விசயங்களை பாக்கேக்கை :wub:

ஓரினசேர்க்கைக்கு சப்போட் பண்ணுறார் போலை கிடக்கு :)

நெடுக்கரை யாரப்பா உசுப்பேத்திரது அந்தாள் கடுப்பாகி பந்தி பந்தியா எழுதப்போகிறார் :):wub:

  • கருத்துக்கள உறவுகள்

நிலவின் வருகை:

யுகங்களுக்கு அப்பால்

இருந்து கால பைரவன்

உயிரின் துளிகளை

சுமந்து என்னிடம் தந்தான்

என் தேவதையின்

காதல் இடைவெளியை

அந்த உயிர் துளிகளால்

நிரப்பினேன்

ஒரு மொட்டின்

அசைவை தன்னில்

என் தேவதை

எனக்குச் சொன்னாள்

வார்த்தைகள் அற்றுப்

போகின

வாக்கியங்கள் தன்

ஆளுமை இழந்தன

எல்லா மொழியும்

தன் இருப்பை

தொலைத்தன

காலம் என்னை விட்டு

தானே கழன்று

கொள்வதாய்

நான் உணர்தேன்

ஒரு கண இடைவெளியில்

நிலவின் வருகை

அமைந்திருந்தது

கீச்சுக் குரல்

கொண்ட அழுகை

என் வாழ்வின்

இடைவெளிகளை

நிரப்பியது

சின்ன நிலவு

விழி திறக்கையில்

என் உயிர்வாழ்தலின்

வலி இன்புற்றது

முதல் தொடுகையில்

விழிகள் கண்ணீரை

உதிர்த்தது

ஆயிரம் ஆண்டுகால

வாழ்வின் சுமை

விடுபட்டது

என்

தேவதையை திரும்பிப்

பார்கின்றேன்

கேட்காத அற்புத

இசையை அவள்

கண்களால்

சொல்லிக் கொண்டாள்

அதில் அவள்

காட்டாத உச்சபட்ச

காதல் நிரம்பியிருந்ததை

நான் அறிந்தேன்

: நிழலி

(நவம்பர் 14, 2009 இரவு அன்று என் மகள் பிறக்கும் போது அருகிருந்த உணர்வின் பாற்பட்டு எழுதிய கவிதை. என்னால் மீள் திருத்தம் ஒரு போதும் செய்யப்பட மாட்டாத ஒரு உணர்வுக் கவிதை)

எழுதியது: நவம்பர் 18, இரவு 11:00

தலைவா வாழ்த்துக்கள். கவிதையில் கலீல் ஜிப்ரானை விஞ்சிவிட்டீர்கள்.

அத்தோட என்னட்டையும் 4 பெடியள் இருக்கிறாங்கள் எண்டு

சொல்லி வைக்கிறன்..................

நிழலியின் வீட்டுக்கு இப்போதைக்குக் காவலாக எனது மகளினதும் மகனினதும் ரேக்வண்டோ சிவப்புப்பட்டிகளை அனுப்பி வைக்கிறேன் தமிழ்மாறன். :wub:

  • 11 months later...
  • தொடங்கியவர்

நிலவின் வருகைக்கு இன்று ஒரு வருடம் பூர்த்தி... எல்லாத் திசை எங்கும் அன்பு மழை பொழிந்த வண்ணம் எம் வாழ்வை அர்த்தப் படுத்துகின்றாள்

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வயது இயலினிக்கு வாழ்த்துகள் நிழலி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிலவின் வருகைக்கு இன்று ஒரு வருடம் பூர்த்தி... எல்லாத் திசை எங்கும் அன்பு மழை பொழிந்த வண்ணம் எம் வாழ்வை அர்த்தப் படுத்துகின்றாள்

வாழ்த்துக்கள் நிழலி அண்ணா அந்த Cinderella Angel க்கு. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் நிழலி உங்கள் மகளுக்கும், தங்கள் குடும்பத்துக்கும்! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தனது முதலாவது பிறந்தநாளைக்காணும்

இயலினிக்கு எமது வாழ்த்துகள் ....

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்தநாள் வாழ்த்துக்கள் இயலினிக்கு..! :lol:

இயலினிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

'இயலினி' வித்தியாசமான நல்ல பெயர்.

  • கருத்துக்கள உறவுகள்

இயலினிக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்..

bdayb.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இயலினிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

firstbirthdaycake.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிதை அருமை வாழ்த்துக்கள்

திருமால்

  • கருத்துக்கள உறவுகள்

இயலினிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் நிழலி அண்ணா உங்கள் மகளுக்கு

உங்கள் மகளிற்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிழலி. உங்கள் உணர்வுகளைச் சிறப்பாகக் கவிதையில் சொல்லி உள்ளீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நிழலியின் நிலவுக்கு பிறந்த நாள்வாழ்த்துக்கள்.

இப்போதைக்கு இது தான் என்னால் முடிந்தது. :lol:

Edited by நிலாமதி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.