Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் சோழியன் அண்ணா காலமானார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜெர்மனியை சேர்ந்த எழுத்தாளரும்

யாழ் கருத்து களத்தில் சோழியான் என்ற பெயரில் எழுதுபவருமான ராஜன் அண்ணாவின் இறப்பு அதிர்ச்சி தருகிறது

RIP

தகவல்

சபேசன் 

ஜெர்மனி

Edited by SUNDHAL

  • Replies 120
  • Views 16.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ

என்ன இது???

 

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையா சுண்டல்?

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

கடவுளே...! பிறந்தநாள் வாழ்த்து திரியை திரு. சோழியன் அவர்கள்தான் தொடக்கி வைத்தார். நேற்றுக்  கூட  அதை ஒரு திரியில் நினைவு கூர்ந்திருந்தேன். அண்ணாரின் ஆத்மா சாந்தியடையட்டும். அவரின் குடும்பத்தாரின் துயரிலும் பங்கு கொள்கின்றோம்....!

மிகவும் கவலையான செய்தி. சோழியன் அண்ணாவின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

யாழில் சோழியன் அண்ணாவின் ஆக்கங்களில் சில :

http://www.yarl.com/எழுதியவர்/இராஜன்-முருகவேல்

(எழுத்து வடிவமைப்பு சீராக இல்லாமைக்கு வருந்துகிறோம்)

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் கவலையான செய்தி. சோழியன் அண்ணாவின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும்  இனிமையாக பேசக்கூடியவர்

மிகவும் கடினமான விடயங்களையும் சுடு சொல் சேராது எழுதுபவர்

எங்கிருந்தாலும் தன்னை சுற்றி சந்தோசத்தை தரக்கூடியது போல் பழகுபவர்

அண்ணா அண்ணா என்று நான் அழைத்த என் அண்ணன்

பலமுறை வாங்கோ வாங்கோ என்று அவரும் நானும்  மாறி மாறி அழைத்த போதும்

அவர் பிரான்சுக்கும்

நான் அவரது இடத்துக்கும் சென்று வந்த  போதும்

சந்திக்கவே முடியவில்லை

இனி.....???

ஆத்ம சாந்திக்கும்

உங்கள் குடும்பம் இத்துயரிலிருந்து மீளவும்

 வேண்டுகின்றேன்  அண்ணா

ஓம் சாந்தி. ஓம் சாந்தி ஓம் சாந்தி.

 

 

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

என்ன இது ஐயோ என்னால் நம்ப முடியவில்லை நாள் தவறாமல் முகநூலில் உள்பெட்டியில் அரட்டை அடிக்கும் எனது அண்ணன் காலில் ஒரு காயம் வந்ததாக சொன்னார் சில‌ வாரங்களுக்கு முன்னர் தான் தொடர்பை இழந்தேன் தனிமடல் அனுப்பியிருந்தேன் இதுவரை பதில் இல்லை இந்த செய்தி எனக்கு இடியாக இறங்கிறதே அண்ணை  உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும் 

ஊர் வந்து போனதில் இருந்து சுகமில்லையென்று சொன்னார் நாள் தோறும் நலம் விசாரித்து அரட்டை அடிக்கும் அண்ணை கதை ஒன்று எழுதியிருக்கிறேன் ( குறிஞ்சி மலர்கள் )அதைப் படிங்கள் என்று சொன்னதும் யாழுக்கு வராமல் இருந்தவர் வந்தார் சந்தோசம் ஆனால்  இந்த‌ துயரச்செய்தி என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லையே

கவலையான செய்தி..tw_cold_sweat:

சோழியன் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மிக மென்மையான மனிதர். ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் கவலையான செய்தி. சோழியன் அண்ணாவின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நம்பமுடியாத செய்தி. ஆனாலும் நம்பித்தான் ஆகவேண்டும். குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபம் தெரிவிப்பதுடன், இனிய உள்ளம்கொண்ட அவர் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றேன்.

 

  • கருத்துக்கள உறவுகள்

நம்ப முடியாத ஒரு செய்தி.ஆழ்ந்த அனுதாபங்கள்:( 

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

இதை எதிர்பார்க்கவில்லை. சோழியான் அண்ணாவின் ஆன்மா அமைதி பெறட்டும்..! அவரை இழந்து துயருறும் குடும்பத்தினர், உறவினர், நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்..!!

  • கருத்துக்கள உறவுகள்

காலையில் அதிர்ச்சியான செய்தி! சோழியன் அண்ணரின் ஆத்மா சாந்தி பெறவும், குடும்பத்தினர் ஆறுதல் பெறவும் பிரார்த்திக்கிறேன்! 

எப்படி, என்ன எழுதுவதென்று தெரியவில்லை.

குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கள உறவு சகாராவின் இரு புத்தகங்களைத் தபால் மூலம் அனுப்பியிருந்தார். அன்றிலிருந்து  அவருடைய விலாசத்தைப் பத்திரமாக வைத்திருக்கின்றேன் . அவருடைய நகரத்திற்கு எப்போதாவது   சென்றால்
அவரைச் சந்திக்கும் முடிவில் இருந்தேன். ஆனால் அந்த ஆசை நிறைவேறவில்லை.  
யாரையும் நோகடிக்காமல் பக்குவமாகக் கருத்தெழுதும் சோழியன்  அண்ணா எம்முடன் எம்மனதில் என்றும் நிலைத்திருப்பார்.
அன்னாரின் குடும்பத்தினருக்கும் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும்  ஆழ்ந்த இரங்கல்கள்.

இராஜன் முருகவேல் (சோழியன்) மறைந்தார்!

நண்பனே உனக்காக மௌனமாக நிற்பதை தவிர 
ஒன்றும் செய்ய தெரியவில்லை!

இலங்கை சுழிபுரத்தை பிறப்பிடமாகவும் , ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட கொழும்பு றோயல் கல்லூரி பழைய மாணவன் , இராஜன் முருகவேல் (சோழியன்) மறைவு ஓர் அதிர்ச்சியாக தம்பி பரணி மூலம் முகப் புத்தகம் வாயிலாக அறிய முடிந்தது.

சில காலமாக உடல் நலமில்லாமல் இருந்தார். நான் இடையிடையே தொலைபேசி வழி பேசுவேன். பெட்டி செய்தி ஊடாக கருத்து பரிமாற்றம் செய்து கொள்வோம். யாழ் இணையம் மூலம் ஏற்பட்ட நட்பு. அன்று முதல் தொடர்ந்து வந்தது.

ஆரம்ப காலம் தொட்டு யாழ் இணைய உறவாக இருந்தவர். அரசியல் ரீதியாக நாங்கள் இருவரும் முரண்பட்டவர்கள். இருந்தாலும் நட்பு ரீதியாக அது எம்மை பிரித்ததில்லை. காயப்படுத்தியதும் இல்லை. அப்படியான ஒரு குண நலன் கொண்டவரை பார்ப்பது மிக அரிது. நான் பல முறை அவர் வீட்டுக்கு போய் தங்கி மகிழ்வாய் கழித்துள்ளோம். உண்மைகளை அஞ்சாமல் பேசும் ஒரு அன்பர். அதை நகைச்சுவையாக சொல்வதில் கை தேர்ந்தவர். கடினமான எதையும் சிரித்துக் கொண்டே சொல்வார். அதனால் அவரை எனக்கு நன்கு பிடிக்கும்.

புலி ஆதரவாளர்களில் எனக்கு மிகவும் பிடித்த நண்பர்களில் இவரும் ஒருவர். இதைவிட அதிகம் தேவையில்லை.

செய்தி கேட்டதும் வீட்டுக்கு தொடர்பு கொண்டேன். மகனோடு பேசினேன். அனைவரோடும் எனக்கு நல்ல உறவு. இராஜனுக்கு கொலொஸ்ரோல் இருந்து வந்தது. அதற்காக சிகிச்சை எடுத்து வந்தார். அண்மையில் இலங்கைக்கும் போய் வந்தார். முகப் புத்தகத்தில் படங்களை போட்டு , ஊரின் நிலை குறித்து உண்மையை பதிவு செய்து கொண்டிருந்தார்.

உடல் நலமில்லாமல் எதுவும் செய்யாமல் சில நாட்களாக கட்டிலிலேயே இருந்துள்ளார். நேற்று தூங்கியவரை எழுப்பிய போது அவர் எழுந்திருக்கவில்லை.

நண்பர்கள் அழைப்பதற்காக அவரது வீட்டு தொலைபேசி எண் : 0049 421 55 37 27

 

 

  • கருத்துக்கள உறவுகள்

சோழியன் அண்ணாவின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள். 

ஒரு நாள் ஐயாவுடனும், விசுகு அண்ணாவுடனும் நீண்ட நேரம் திண்ணையில் அரட்டை அடித்த ஞாபகம். எனக்கு நூலகம் என ஓர் இணைப்பை அனுப்பியிருந்தார் இதில் நிறைய சிறுகதைகள் இருந்தன.

ஆத்மா சாந்தியடைவதாக‌

  • கருத்துக்கள உறவுகள்

ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

காலை யில் பார்த்த அதிர்ச்சியான சேதி  .. இவரின் .ஐஸ்கிரீம் சிலையே என்ற கதை வசித்த ஞாபகம்  காலில் கட்டுடன் முக புத்தகத்தில் பார்த்த ஞாபகம்  ..  பிறந்த நாள்  இரண்டு  கொண்டாடடம் என்பார் .பிறந்தா நாள் ஒன்றும்  பதிவில் உள்ள  நாள்  வேறு ஒன்றுமாக இரண்டு என்பார் .   பேசிப் பழக இனிய   மனிதர் . ஆன்மாவின் சாந்திக்கு என்   பிரார்த்தனைகள் 

ஆத்மா சாந்தியடையப் பிரார்த்தனைகள்!

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் கவலையான செய்தி. அதிர்ச்சியாகவும் இருக்கிறது. 8 வருடங்களுக்கு முன் வீட்டிற்கு வந்துள்ளார். அந்த பசுமையான நாட்களை நினைத்து பார்க்கிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.