Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முதல் விமானப்பயணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"எங்களுடன் பயணித்தமைக்கு நன்றிகள் மீண்டும் ஒரு பயணத்தில் சந்திப்போம்"என்ற குரலைக்கேட்டு எல்லோரும் தங்களது இருக்கை பட்டிகளை சரிபார்த்து கொண்டனர்.நான் எனது இருக்கை பட்டியை போடாமல் இருந்தேன்.எத்தனை தரம் விமானத்தில ஏறி இறங்கிட்டன் ஒன்றும் நடக்கயில்லை பிறகு ஏன் இந்த பேல்ட் ,எனக்கு தேவையில்லை அவையளுக்கு தேவையென்றால் வந்து போட்டுவிடட்டும் என நினைத்தபடி மேலே பார்த்து கொண்டிருந்தேன்.

"சேர் வாசின்ட் யுஆர் சீட் பெல்ட்"என்ற படி பக்கத்தில விமானப்பணிப்பெண் புன்னகைத்தபடி நின்றாள்.உடனே நான் பேல்ட்டை தேடுவது போல நடித்து எடுத்து போட்டுக்கொண்டேன்.

இதுதான் உவரின்ட முதல் விமானப்பயணம் என்று சகபயணிகள் நினைத்துவிடுவார்கள் என்ற வெட்கத்தில் உடனே போட்டுவிட்டேன்.

 

முப்பது வருடங்களுக்கு முன்பு, முதல் விமானப்பயணம் சென்னையிலிருந்து கொழும்புக்கு ஏர்லங்கா மூலம் ஆரம்பமானது. மானிப்பாயிலிருந்து மினி வானில் தலைமன்னார் சென்று அங்கிருந்து கப்பலில் ராமேஸ்வரம் போய் ரயிலில் சென்னை போய் சேர்ந்தேன்

போனபாதையால் திரும்பி ஊருக்கு வரமுடியாமல் போய்விட்டது.ராமானுஜம் கப்பல் திரும்பி ஓடும் என்று எதிர்பார்த்து காத்திருந்திருந்தால் இன்று அவுஸ்ரேலியா ஒரு சூப்பர்டூப்பர் எழுத்தாளனை இழந்திருக்கும் .

 

இரண்டுவருடங்கள் வரை ஓடும் ஒடும் என காத்திருந்து  எனது முதல்  விமானப்பயணம் ஆரம்பமானது. விமானநிலையத்திற்கு வழி அனுப்ப நண்பர்கள் வந்திருந்தார்கள்.எல்லோரும் என்னை போல் கப்பலில் வந்து இந்தியாவில் தஞ்சமடைந்தவர்கள் .சிலருக்கு நாடு திரும்ப விமானம் ஏற வேண்டிய நிலை வேறு சிலருக்கு வெளிநாடு செல்ல விமானம் ஏற வேண்டிய நிலை. அந்த வயதில் பெண்களைப்பற்றிய கற்பனை அதிகமாக இருக்கும் .நண்பர்கள் ஒன்றுகூடினால் அதிகம் பெண்களைப்பற்றித்தான் பேசுவோம். பொழுது போக்காக சிலசமயங்களில் விடுதலை பற்றி பேசுவதுண்டு.

டொக்டர்மாருக்கு  பெண்களை தொட்டு பார்க்கும் சந்தர்ப்பம் அதிகம் என்றான் ஒருத்தன் ,இன்னோருத்தன் இல்லையடா பைலட்மாருக்குத்தான் நல்ல சான்ஸ் இருக்கு என்றான்.மற்றவன் ஒருபடி மேல போய் "மச்சான் ஏர்கொஸ்டரிடம் ஒரு கிஸ் கேட்டுப்பார் அவள் தருவாள்,அவையளின்ட டியுட்டி... கஸ்டமாரின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் இல்லாவிடில் அவையளினட வேலை போய்யிடும்" என சொல்லி உசுப்பேத்தினான்.

 

எனக்கோ விமானத்தில் முதல்முதலாக பயணம் செய்ய போற பயமொன்று மனதை துளைத்தெடுத்துகொண்டிருந்தது.

சுங்க சோதனைகள் ,குடியகழ்வு சோதனைகளை முடித்து, போர்டிங்க் பாஸ் கையிலிருந்தும் ஊரில் பஸ்ஸுக்கும் புகையிரதத்திற்கும் இடம் பிடிக்க முண்டியடித்துக் கொண்டு ஏறிய பழக்கம் தோசத்தில் இங்கேயும் ஒடிச்சென்று நுழைவாயிலில் நின்றுகொண்டேன்.

"இரு கை கூப்பி ஆயுபோவன் என்ற புன்னகையுடன் ஒருத்திவரவேற்றாள்"என்னுடைய தமிழ்ப்பற்றை அடக்கி வைத்து கொண்டுபதிலுக்கு நானும் ஆயுபோவன் என்றேன். "போடிங்க்பார்ஸ் பிளிஸ்"

பாஸ்போர்ட்டையும்,அவங்கள் தந்த வெள்ளை துண்டையும் சேர்த்து கொடுத்தேன்.பார்ஸ்போர்ட்டை திருப்பி தந்துவிட்டு வெள்ளைதுண்டை பார்த்துவிட்டு "யு சீட் நம்பர் .....டெர்ன் யு ரைட்"

அவளுக்கு தெரியுமே, எனக்கு ரைட் லெவ்ட் பிரச்சனையிருக்கு என்று.ஒரு மாதிரி                                                                                                                                                                                         சமாளிச்சு சீட்டை கண்டுபிடித்து அமர்ந்து கொண்டேன்.  .விமானபணியாளர்கள் தங்கள் கடமைகளை செய்துகொண்டிருந்தனர்.

அந்த குளிருக்குள்ளும் எனக்கு வியர்க்க தொடங்கிவிட்டது.விமானம் புறப்பட தொடங்க முதல் பணிப்பெண் எனது சீட்டுக்கு முன்பு நின்று இருக்கை பட்டி போடும் முறையையும்,ஒட்சிசன் குறைந்தால்  என்ன செய்ய வேண்டும் மற்றும் உயிர்காப்பு கவசம் அணிவது எப்படி எனவிளக்கம்கொடுத்து கொண்டிருந்தார்.அவர் கூறிய எதுவும் எனது மனதில் பதியவில்லை எனது சிந்தனை முழுவதும் கொழும்பு விமான நிலயத்தில் இறங்கி வெளியே செல்லும் பொழுது இராணுவத்தொல்லை இருக்ககூடாது என்பதாகவே இருந்தது.

உணவு பரிமாறினார்கள், முள்ளுக்கரண்டி கத்தி போன்றவற்றை பார்த்ததுண்டு ஆனால் அன்று பாவிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிட்டது.அதுவும் முதல் அனுபவம் ஒரு மாதிரி உணவை  போராடி சாப்பிட்டு முடித்துவிட்டேன் .சற்று குனிந்தேன் சேர்ட்டில் குழம்பு கறை பட்டிருந்தது.துடைத்து பார்த்தேன் கறை போகவில்லை.விமானப் பயணத்திற்காக வாங்கிய வெள்ளை சேர்ட் கறைபட்டு அழுக்காகியிருந்தது. சேர்ட்டில் கறை படிந்ததை விட ,கறையை பார்த்து விமானபணிப்பெண்களும் சகபயணிகளும் எனது பயணம் கன்னிப்பயணம் என்று கண்டுபிடித்துவிடுவார்களோ என்ற கவலை அதிகமாக இருந்தது.

இன்னும் சில மணி நேரத்தில் கொழும்பு சர்வதேச விமானநிலையத்தில் இறங்கப்போகின்றோம் என விமானி அறிவிக்க ,எனது கைப்பையை எடுக்கஎழும்பினேன். பணிபெண் அருகே வந்து சொன்னாள் பிளேன் இறங்கப்போகுது இருக்கையிலிருந்து இருக்கை பட்டியை போடுமாறு.   புகையிரதத்திலிருந்து  இறங்குவதற்கு அடிப்பட்டு இறங்கிய பழக்க தோசம் இங்கயும் வந்திட்டு என்று நான் கவலைப்பட்வில்லை. சொறி என்று சொல்லி அமர்ந்துவிட்டேன்.

முன்சீட்டை இறுக்கமாக பிடித்துக்கொண்டேன் விமானம் ஒடுபாதையில் தரைதட்டும்பொழுது .விமானம் நின்று சகபயணிகள் எல்லொரும் எழுந்த பின்பு தான் நான் எழுந்தேன் .நன்றி சொல்லி விமான ஊழியர்கள் வழி அனுப்பிவைத்தனர்.ஏணியால் இறங்கும் பொழுது திரும்பி பார்த்தேன் இருபக்கத்திலும் ஆயுதம் தாங்கிய சீருடையினர். பக்கத்தில் நின்ற பஸ்ஸில் ஒடிப்போய் ஏறிக்கொண்டேன்.விமானப்படையனரின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது.

 

குடிவரவுக்கு போய் கடவுச்சீட்டை நீட்டினேன் .முகத்தையும் பாஸ்போர்ட்டையும் இரண்டு,மூன்று தடவை திரும்பி பார்த்தார் ,இனிமேல் இல்லாத அப்பாவி போன்று முகத்தை வைத்திருந்தேன்.

ஒரு முத்திரையை குத்திபோட்டு வேண்டா விருப்பா பாஸ்போர்ட்டை தந்தார்.அவர் சிரிக்கவில்லை என்றாலும் நான் சிரித்துபோட்டு போம ஸ்துதி சொல்லி வாங்கி வெளியே வர, கட்டிட நடைபாதையின் மேலே" போர் என்றால் போர் சமதானம் என்றால் சமாதானம்"என்று குரல் கொடுத்த ஜேஆரின் படம் தொங்கி கொண்டிந்தது....

 

அதே இடத்தில் இன்று மைத்திரியின் படம் தொங்கிகொண்டிருக்கின்றது."அடே உங்களை என்ன செய்யிறது என்றே விளங்குதில்லை.. எப்படி அழிச்சாலும் முளைச்சு வந்திடுறீயள்....ஈழம் என்று வெளிநாட்டுக்கு போனியள் இப்ப ஐக்கிய இலங்கை என்று திரும்பிவாறீயள்"கேட்பது போல இருந்தது.

 

பதிலுக்கு நானும் மனதினுள் சிரித்தபடி யோவ் நாங்கள் இதுவும் செய்வோம் இன்னும் செய்வோம் இது "அப்பே ரட்ட....."

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இருக்கு புத்தன். என் முதல் விமானப் பயணம் நினைவில் வந்தது. அதுபற்றியும் ஒருக்கா எழுதவேணும்.

புத்தனின் கிறுக்கல் எப்போதும்  ஒரு தனி ரகம்..tw_blush:

பிறகுதான் பச்சை.

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, putthan said:

அதே இடத்தில் இன்று மைத்திரியின் படம் தொங்கிகொண்டிருக்கின்றது."அடே உங்களை என்ன செய்யிறது என்றே விளங்குதில்லை.. எப்படி அழிச்சாலும் முளைச்சு வந்திடுறீயள்....ஈழம் என்று வெளிநாட்டுக்கு போனியள் இப்ப ஐக்கிய இலங்கை என்று திரும்பிவாறீயள்"கேட்பது போல இருந்தது.

பதிலுக்கு நானும் மனதினுள் சிரித்தபடி 'யோவ் நாங்கள் இதுவும் செய்வோம் இன்னும் செய்வோம்' இது "அப்பே ரட்ட....."

'பஞ்ச்' டயலாக், நல்லாயிருக்கு..!  vil2_roi.gif

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன்  முதல் முத்தம்போல் முதல் ரயில் பயணம்,முதல் கப்பல் பயணம், முதல் விமானப் பயணமும் மறக்க முடியாதுதான்.மிக நன்றாக இருக்கின்றது.அதுசரி விமானத்தில யன்னல் ஒர சீற்றுக்கு சண்டை பிடிக்க வில்லையா.....!  tw_blush: 

  • கருத்துக்கள உறவுகள்

கிறுக்கல் நன்றாக இருக்கின்றது

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன்
 
விமான பணிப்பெண்ணை கட்டியணைத்து முத்தமிட முயன்ற வாலிபர் கைது என்று பேப்பரில் என்றோ படித்த ஞாபகம்.அது நீங்களாக இருக்குமோ என்று சந்தேகமாக இருக்கு.

ஆமா நான் தான் என்று உண்மையா சொல்ல போறீங்க?

ஆரம்பத்தில் இருந்து முடியும் வரை ஒரே புன்சிரிப்பாகவே இருந்தது.

இது கற்பனை இல்லை. நிஐம். 

இது கற்பனை இல்லை. நிஐம். 

  • கருத்துக்கள உறவுகள்

முதல் பயணம் மாதிரி தெரியவில்லையே ... நன்றாக இருக்கிறது 

  • கருத்துக்கள உறவுகள்

உங்கட பெயர் அவருக்கு தெரிந்திருக்குமோ என்னவோ புத்தன் 

ம் சூப்பரு  

 கூட்டாளிகள் ஆகாது  எப்ப பாரு சொப்பன சுந்தரி கள் நினைப்புத்தான் tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

 

"அடே உங்களை என்ன செய்யிறது என்றே விளங்குதில்லை.. எப்படி அழிச்சாலும் முளைச்சு வந்திடுறீயள்....ஈழம் என்று வெளிநாட்டுக்கு போனியள் இப்ப ஐக்கிய இலங்கை என்றுதிரும்பிவாறீயள்"

தமிழர் தலையில்  சுத்தியலால்  அடித்த மாதிரிஇருக்கு..

அடுத்த  அடியோட

சிறீலங்கா தானே...

ம்ம்ம்

இன்னொரு அற்புதக்கிறுக்கல்...

தொடருங்கள்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புத்தனின் கதை அசத்தல்.tw_thumbsup:

13 hours ago, putthan said:

அந்த வயதில் பெண்களைப்பற்றிய கற்பனை அதிகமாக இருக்கும் .நண்பர்கள் ஒன்றுகூடினால் அதிகம் பெண்களைப்பற்றித்தான் பேசுவோம். பொழுது போக்காக சிலசமயங்களில் விடுதலை பற்றி பேசுவதுண்டு.

டொக்டர்மாருக்கு  பெண்களை தொட்டு பார்க்கும் சந்தர்ப்பம் அதிகம் என்றான் ஒருத்தன் ,இன்னோருத்தன் இல்லையடா பைலட்மாருக்குத்தான் நல்ல சான்ஸ் இருக்கு என்றான்.மற்றவன் ஒருபடி மேல போய் "மச்சான் ஏர்கொஸ்டரிடம் ஒரு கிஸ் கேட்டுப்பார் அவள் தருவாள்,அவையளின்ட டியுட்டி... கஸ்டமாரின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் இல்லாவிடில் அவையளினட வேலை போய்யிடும்" என சொல்லி உசுப்பேத்தினான்.

அந்த வாலிப காலத்திலை எனக்கோ என்ரை கூட்டுவளுக்கு உப்புடியான தீய சிந்தனையள் வந்தே இல்லை. எப்பவும் இலக்கியம் கவிதை மகாபாரதம் கம்பராமாயணம் எண்ட கதையள் தான் :cool:

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் மனதில் இருக்கும் வலியை நீங்கள் ஆசுவாசப்படுத்த "....மனதினுள் சிரித்தபடி யோவ் நாங்கள் இதுவும் செய்வோம் இன்னும் செய்வோம் இது "அப்பே ரட்ட....." நெத்தியடி புத்தன்...
தொடரட்டும்  இந்த "கருக்களால் நிறைந்த கிறுக்கல் "

  • கருத்துக்கள உறவுகள்

முதல் விமானப் பயணத்தை.... எவராலும் மறக்க முடியாது.
அதனை தலைப்பாக எடுத்து, கிறுக்கிய புத்தனின்  சிந்தனைக்கு பாராட்டுக்கள்.
உங்களது பதிவு... எம்மை மீண்டும்  எமது முதல் விமானப் பயண அனுபங்களை,  அசை போட வைத்தது. :)

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான ஒரு விமானப் பயண அனுபவம்!

எனது நினைவுகளையும் கீறி விட்டது!

அந்தக்காலத்தில் அரசாங்க உத்த்யோகத்தர்களுக்கும், அவர்களின் பிள்ளைகளுக்கும் இலவசப் பயண வாரண்ட் மாதிரிக் கொடுப்பார்கள்! அந்த வாரண்டுகள்...அந்த வருடம் உபயோகிக்கப் படா விட்டால் காலாவதியாகி விடும்! எனக்கு மூன்று அல்லது நான்கு வயதளவில் இருக்கும்! அப்போது எயர் சிலோன் என்ற பெயரில் தான் விமான சேவை இயங்கியது! ஒவ்வொரு பயணியையும், அவர்கள் குழந்தைகளாக இருந்தாலும். நிறுத்த பின்னர் தான் விமானத்துக்குள் ஏற விடுவார்கள்! காதுகளுக்குள் வைத்துக் கொள்ளப் பஞ்சும், வட்ட வடிவமாக உள்ள 'பெப்பர் மின்ற்' இனிப்புகளும் தந்ததாக ஞாபகம் உள்ளது!

இதனால் விமானப் பற்றிய பயம் இல்லாமலே போய் விட்டது!

என்னை ஏற்றிச் சென்ற முதாலாவது..இலங்கை விமானம்..இது தான்!

Air_Ceylon_Douglas_DC-8_at_Zurich_Airpor

இருப்பினும்...கொழும்பிலிருந்து..தாய்லாந்து நோக்கிய முதல் பயணம்...அற்புதமானது என்பது மட்டுமல்ல...வானத்திலிருந்து பார்க்கும் போது..மாலை தீவின் கரைகளும்... இலங்கைத் தீவின் கரைகளும்..பொற் கோடுகளால் வரைந்த ஓவியம் போல தோன்றும்! ஒரு வேளை எமது விமானம் புறப்பட்ட நேரம்...சூரியனின் திசை போன்றவற்றால்..அந்த மாயத் தோற்றம் ஏற்பட்டிருக்கலாம்!

எனக்கு உயரத்திலிருந்து இயற்கை அமைப்புகளைப் பார்க்கப் பிடிக்கும்!

ஈராக்கின் மேலாக விமானம் பறக்கும் போது..அதன் கல்லாலான மலை முகடுகளும், அவுஸின் மேலாகப் பறக்கும் போது..அயர்'ஸ் றொக், மேற்கு அவுஸ்திரேலியாவின் பங்கிள், பங்கிள் மலைக்குன்றுகளும் மிகவும் அழகானவை!

தொடர்ந்தும்...அடிக்கடி...கிறுக்குங்கள்!

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 23/03/2017 at 9:00 PM, putthan said:

 

Image result for images of first journey man in flight

 

 

 

On 23/03/2017 at 6:00 AM, putthan said:

அதே இடத்தில் இன்று மைத்திரியின் படம் தொங்கிகொண்டிருக்கின்றது."அடே உங்களை என்ன செய்யிறது என்றே விளங்குதில்லை.. எப்படி அழிச்சாலும் முளைச்சு வந்திடுறீயள்....ஈழம் என்று வெளிநாட்டுக்கு போனியள் இப்ப ஐக்கிய இலங்கை என்று திரும்பிவாறீயள்"கேட்பது போல இருந்தது.

ஒவ்வொரு சிங்களவரும் இதைத்தன்  எண்ணுவார்கள்  அல்லது அவ்வாறு எண்ணுவார்கள் என்று நாம் எண்ணுவோம். ஒரு தரப்புக்கு அடிமைப்பட்டதன் தாக்கம் வாழ்நாள் முழுக்க  மனதை பாதிக்கும். 

வழக்கம் போல நன்றாக இருக்கு புத்தன்.... விரைவில் கதைகளை தொகுத்து புத்தகமாக போடுங்கள்

8 hours ago, புங்கையூரன் said:

இருப்பினும்...கொழும்பிலிருந்து..தாய்லாந்து நோக்கிய முதல் பயணம். அற்புதமானது என்பது மட்டுமல்ல

 

சரி, பிறகு தாய்லாந்தில் ஏற்பட்ட அருமையான அனுபவங்களையும் கூச்ச நாச்சமில்லாமல் எழுதுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, நிழலி said:

சரி, பிறகு தாய்லாந்தில் ஏற்பட்ட அருமையான அனுபவங்களையும் கூச்ச நாச்சமில்லாமல் எழுதுங்கள்

ஆமோதிக்கின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய முதல் விமானப்பயணமும் மறக்கமுடியாதது. பலாலியிலிருந்து கொழும்புக்கு இந்திய இராணுவ அடக்குமுறையிலிருந்து தப்பித்து ஓடிய பயணம். முழுக்காற்சட்டை போட முன்னரே அவசரமாகப் போகவேண்டி வந்தது. சிறிலங்கன் விமானப்படையின் துருப்புக்காவும் விமானத்தில் நின்றுகொண்டே அநுராதபுரம் மட்டும் போகவேண்டி வந்தது. பின்னர் இருக்கைகள் கிடைத்தன!

பண்ணைப் பாலத்தை அந்த முதலாவது விமானப் பயணத்தில்தான் பார்த்தேன். இன்னும் நேரே பார்க்கவில்லை?

  • கருத்துக்கள உறவுகள்

அருமை புத்தன்.எந்த முதல் அனுபவமும் மறக்க முடியாது.எனது முதல் விமானப்பயணம் கொழும்பு சென்னை .அதில வாழைப்பழத்தை கத்தி கறன்டியால் வெட்டி சாப்பிட்டதை மறக்க முடியாது.tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
On 25.3.2017 at 8:31 AM, சுவைப்பிரியன் said:

அருமை புத்தன்.எந்த முதல் அனுபவமும் மறக்க முடியாது.எனது முதல் விமானப்பயணம் கொழும்பு சென்னை .அதில வாழைப்பழத்தை கத்தி கறன்டியால் வெட்டி சாப்பிட்டதை மறக்க முடியாது.tw_blush:

விமானத்தில் ஏறியவுடன்,
வாழைப் பழத்தை...... கத்தியால் வெட்டி, முள்ளுக் கரண்டியால் குத்தி....  சாப்பிடுவது  தான்... "டிசிப்பிளின்". :grin:

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 23/03/2017 at 9:16 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நன்றாக இருக்கு புத்தன். என் முதல் விமானப் பயணம் நினைவில் வந்தது. அதுபற்றியும் ஒருக்கா எழுதவேணும்.

வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றிகள் .....எழுதுங்கள் வாசிக்க காத்திருக்கிறோம்

On 23/03/2017 at 9:20 PM, நவீனன் said:

புத்தனின் கிறுக்கல் எப்போதும்  ஒரு தனி ரகம்..tw_blush:

பிறகுதான் பச்சை.

நன்றிகள் நவீனன் பச்சைக்கும்

On 23/03/2017 at 9:21 PM, ராசவன்னியன் said:

'பஞ்ச்' டயலாக், நல்லாயிருக்கு..!  vil2_roi.gif

நன்றிகள் ராசவன்னியன் எல்லா புகழும் தமிழ் சினிமாவுக்கே

On 23/03/2017 at 9:32 PM, suvy said:

புத்தன்  முதல் முத்தம்போல் முதல் ரயில் பயணம்,முதல் கப்பல் பயணம், முதல் விமானப் பயணமும் மறக்க முடியாதுதான்.மிக நன்றாக இருக்கின்றது.அதுசரி விமானத்தில யன்னல் ஒர சீற்றுக்கு சண்டை பிடிக்க வில்லையா.....!  tw_blush: 

நன்றிகள் சுவி ஏன் இல்லை ,தெரியாத மாதிரி யன்னல் சீட்டில் போய்யிருந்திட்டன் ....பக்கத்து சீட்டில இருக்க வந்தவன் என்னைவிட உசார் பேர்வழி

On 24/03/2017 at 0:22 AM, வாத்தியார் said:

கிறுக்கல் நன்றாக இருக்கின்றது

நன்றிகள் வாத்தியார் எல்லாம் உங்களது பாராட்டுக்கள் தான்

On 24/03/2017 at 2:34 AM, ஈழப்பிரியன் said:

புத்தன்
 
விமான பணிப்பெண்ணை கட்டியணைத்து முத்தமிட முயன்ற வாலிபர் கைது என்று பேப்பரில் என்றோ படித்த ஞாபகம்.அது நீங்களாக இருக்குமோ என்று சந்தேகமாக இருக்கு.

ஆமா நான் தான் என்று உண்மையா சொல்ல போறீங்க?

ஆரம்பத்தில் இருந்து முடியும் வரை ஒரே புன்சிரிப்பாகவே இருந்தது.

நன்றிகள் ஈழப்பிரியன் .....சத்தியமா நான் அவனில்லை

On 24/03/2017 at 3:39 AM, kilian said:

இது கற்பனை இல்லை. நிஐம். 

இது கற்பனை இல்லை. 

நன்றிகள் kilian கற்பனை கலந்த  நிஐம். 

On 24/03/2017 at 4:58 AM, நிலாமதி said:

முதல் பயணம் மாதிரி தெரியவில்லையே ... நன்றாக இருக்கிறது 

நன்றிகள் நிலாமதி.....கொஞ்சம் புதுசும் கலந்துதான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 24/03/2017 at 5:04 AM, முனிவர் ஜீ said:

உங்கட பெயர் அவருக்கு தெரிந்திருக்குமோ என்னவோ புத்தன் 

ம் சூப்பரு  

 கூட்டாளிகள் ஆகாது  எப்ப பாரு சொப்பன சுந்தரி கள் நினைப்புத்தான் tw_blush:

நன்றிகள் ஜீ....உந்த கூட்டாளிமார் இல்லாட்டி நான் இப்ப அமேரிக்காவில் ட்ரம்பட்டுக்கு அரசியல் ஆலோசக்ராக இருந்திருப்பன்:10_wink:

On 24/03/2017 at 5:47 AM, விசுகு said:

 

"அடே உங்களை என்ன செய்யிறது என்றே விளங்குதில்லை.. எப்படி அழிச்சாலும் முளைச்சு வந்திடுறீயள்....ஈழம் என்று வெளிநாட்டுக்கு போனியள் இப்ப ஐக்கிய இலங்கை என்றுதிரும்பிவாறீயள்"

தமிழர் தலையில்  சுத்தியலால்  அடித்த மாதிரிஇருக்கு..

அடுத்த  அடியோட

சிறீலங்கா தானே...

ம்ம்ம்

இன்னொரு அற்புதக்கிறுக்கல்...

தொடருங்கள்..

நன்றிகள் விசுகு ....இப்ப நான் சிறீ அடுத்த அடியோட லங்கா ...அதன்பின்பு சிறிலங்கன்

On 24/03/2017 at 10:29 AM, குமாரசாமி said:

புத்தனின் கதை அசத்தல்.tw_thumbsup:

அந்த வாலிப காலத்திலை எனக்கோ என்ரை கூட்டுவளுக்கு உப்புடியான தீய சிந்தனையள் வந்தே இல்லை. எப்பவும் இலக்கியம் கவிதை மகாபாரதம் கம்பராமாயணம் எண்ட கதையள் தான் :cool:

நன்றிகள் கு.சாமி ...அப்பேவே உங்களுடன் கூட்டாளியாக இருந்திருந்தால் இப்ப சிட்னியில் கம்பன்கழகத்தின் தலிவராகவோ ,செயலாளராகவோ இருந்து கன்னி  தமிழ் வளர்த்திருக்கலாம்...யஸ்ட் மிஸ்ட்...:10_wink:

  • கருத்துக்கள உறவுகள்

கன்னிப் பயணத்தில் மிடுக்கு வேற..... அதென்னப்பா கௌரவப்பிரச்சனையா பீல் பண்ணுறீங்கள்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.