Jump to content

அறிவித்தல்: யாழ் இணையம் 21 ஆவது அகவையில் - கள உறுப்பினர்களின் சுய ஆக்கங்கள்


Recommended Posts

அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு,


எதிர்வரும் 30.03.2019 அன்று யாழ் இணையம் தனது 21 ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. 1999ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் நாள் தொடங்கப்பட்ட யாழ் இணையம், பல்வேறு தடைகளையும், மேடு பள்ளங்களையும் தாண்டி, தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகமான மாற்றங்களுக்கும், சமூக வலைத்தளங்களின் துரித வளர்ச்சிக்கும் ஈடுகொடுத்து இன்று தன்நிகரற்ற தமிழ் இணையத்தளமாய் வளர்ந்துள்ளது. உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு குடிலாக, தமிழர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் காலக்கண்ணாடியாக, உலகத் தமிழர்தம் கருத்துக்களை காவும் ஒரு உறவாக யாழ் இணையம் உள்ளது.

யாழ் இணையம் 21 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நாளினைச் சிறப்பிக்கும் முகமாக கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்களைக் கோருகின்றோம்.

சுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம்.  கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஒளிப்படமாகவோ, ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.

எனினும் இச் சுய ஆக்கங்கள் முகநூல் நிலைத்தகவல், டுவிட்டர் குறுஞ்செய்தி போன்று மிகவும் குறுகியதாக அமையாமல் இருத்தல் வேண்டும். மேலும், இச் சுய ஆக்கங்களில் யாழ் களம் 21 ஆவது அகவையில் காலடி வைப்பதற்கான வாழ்த்து விடயங்களை தவிர்ப்பது நல்லது.

எமது நோக்கம் அனைத்து கள உறவுகளையும் அவரவர் திறமைகளுக்கேற்ப சுயமான ஆக்கங்களைப் படைப்பதற்கான வெளியை யாழ் கருத்துக்களத்தில் வழங்குவதேயாகும். இதன் மூலம் அனைத்து கள உறவுகளும் தேங்கிப்போயுள்ள தமது படைப்புத் திறனை வெளிக்காட்டுவார்கள் என்று நம்புகின்றோம். எனவே அனைவரையும் உற்சாகத்துடன் பங்குகொள்ளுமாறு கோருகின்றோம்.

யாழ் களம் 21 ஆவது அகவைக்குள் காலடி வைப்பதை முன்னிட்டு யாழ் கள உறவுகளின் சுய ஆக்கங்களுக்கான சிறப்புப் பக்கம் தயாராக உள்ளது. கள உறவுகள் சுய ஆக்கங்களைத் தயார்படுத்தவும், மெருகேற்றவும் இரு மாத காலம்தான் இருக்கின்றது. நாட்கள் விரைந்து ஓடிவிடும் என்பதால், காலந்தாழ்த்தாது சுய ஆக்கங்களைத் தயார்படுத்த இப்போதே ஆயத்தமாகுங்கள்.

விதிமுறைகள்:

  1. யாழ் கள உறுப்பினர்கள் மட்டுமே ஆக்கங்களை படைக்கலாம். உறுப்பினர்கள் அல்லாதவர்கள் உறுப்பினர்களாக இணைந்து ஆக்கங்களை இணைத்துக் கொள்ளலாம்.
  2. ஆக்கங்கள் கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்களாக இருக்கவேண்டும்.
  3. கருப்பொருள் எதுவாகவும் இருக்கலாம் (வாழ்த்துக்களைத் தவிர்த்து). எனினும் ஆக்கங்களின் உள்ளடக்கத்திற்கு  உறுப்பினர்களே முழுப் பொறுப்பும் ஏற்க வேண்டும்.
  4. கள உறுப்பினர் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட ஆக்கங்களைப் படைக்கலாம்.
  5. கள உறுப்பினர் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட வகைமைகளில் ஆக்கங்களைப் படைக்கலாம்.
  6. ஆக்கங்கள் இதற்கு முன் வேறெங்கும் பிரசுரம் ஆகாததாக இருக்கவேண்டும்.
  7. ஆக்கங்கள் யாழ் கள விதிகளை மீறாத வகையில் அமையவேண்டும்.

யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்

"நாமார்க்கும் குடியல்லோம்"

நன்றி

 யாழ் இணைய நிர்வாகம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் 21 வயதை எட்டுவதால் adult theme இல் ஏதாவது எழுதலாமா என்று யோசிக்கின்றேன்!😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, கிருபன் said:

யாழ் 21 வயதை எட்டுவதால் adult theme இல் ஏதாவது எழுதலாமா என்று யோசிக்கின்றேன்!😁

ஏதோ மார்க்கமா எழுத நினைச்சிட்டாப்பல.......😛

இப்படி எத்தனைபேர் கிளம்பப்போறாய்ங்களோ???😵

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

முதற்கண் 21 வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் யாழுக்கு நானும் தவழ்ந்து எழுந்து நடந்த இடம் என்றபடியால் வாழ்த்துக்கள்.

இந்த நேரங்களிலாவது ஆக்கங்கள் படைப்போருக்கு அவர்களின் படைப்புக்கு கருத்தெழுதுபவர்களுக்கு பச்சைப்புள்ளிகள் இடும் வசதியை செய்து கொடுக்கவும்.அனேகமாக மட்டுறுத்தினர்களால் சுய ஆக்கங்கள் படைக்கப்படுவதில்லை.அதனாலோ என்னவோ அதன் வலி அவர்களுக்குத் தெரிவதில்லை.
இந்த வருடமாவது ஏதாவது மாற்றம் நடக்கிறதா பார்ப்போம்.

இது வந்தவர்களை வரவேற்க முடியவில்லை என்பதே தவிர வேறோன்றுமல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் இனிய யாழ் இணையத்திற்கு வாழ்த்துக்கள்.....! இன்றும் தமிழ் எழுத்தை மறக்காமல் எழுதிக் கொண்டிருக்கிறோம் என்றால் அதற்கு ஒரே காரணம் யாழ் இணையம்தான் என்பதை மகிழ்வுடன் நினைவு கூறுகின்றேன்......!  🌺

ஏதாவது எழுதியே ஆக வேண்டும் என்ன எழுதுவது என்று யோசிக்க வேண்டி இருக்கின்றேன்.......!   😊

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

21வது அகவையில் காலடி வைக்கும் யாழுக்கு வாழ்த்துக்கள். உண்மையிலேயே எமக்கு கணனியில் தமிழ் எழுத வைத்ததே யாழ் இணையம்தான். இதன் மூலம் எமது பல புதிய உறவுகளையும் பெற்றுக் கொண்டோம். பிறந்தநாளை நினைவுகூரும் இத் தருணத்தில் ஏதாவது எழுதத்தான் வேண்டும். முயற்சிக்கிறேன். யாழ் இணையத்திற்கு எம் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

என் புனைபெயருக்கு மிகுந்த வாசம் கொடுத்த தளம். என்னை நான் மேலும் புரிந்து கொள்ள உதவிய களம். தட்டுத்தடுமாறி எழுத்துப் பிழைகளுடன் இங்கே எழுத ஆரம்பித்தது இன்னும் நினைவில் உள்ளது. யாழுக்கு எனது நன்றி கலந்த வாழ்த்துக்கள்! ❤️🎉🎊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க  யாழே

எங்கும் சொல்வதுண்டு

என்னை  எழுத  வைத்த

எழுதத்தூண்டிய

எழுத கற்றுத்தந்த தாயிவள்

வாழ்க  பல்லாண்டு

Link to comment
Share on other sites

அட 21 வருடம் ஆகிவிட்டதா. 20 வருடங்கள்  எனக்கும் யாழிற்குமான உறவு... வாழ்த்துக்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் என்று சொல்லிவிட்டு...நகர்ந்து விட மனது இடம் கொடுக்குதில்லை!

ஏதாவது எழுத வேண்டும் என்ற உந்துதல் ஏற்படுகின்றது !

வாழ்த்துக்கள் யாழ் களமே...!

வாழ்ந்திடு பல்லாண்டு....!

எமது வரலாற்றின் காப்பகமாய்....மிளிர்ந்திடு..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

photo-thumb-9421.png  Bildergebnis für பலà¯à®²à®¾à®£à¯à®à¯ வாழà¯à®  photo-thumb-9421.png

எனது அன்புக்  காதலி,  யாழுக்கு... 21 வயசு ஆகிறது.💋
என்  வாழ்வில்... மிக நேசிக்கும், களம்  இது.
யாழ். களத்தில்..   நான் இணைந்த காலத்தில் இருந்து, தினமும் குறைந்தது  3 மணித்தியாலமாவது,
அதனுடன் எனது நேரத்தை செலவழிப்பேன். என்ன மந்திர, மாயமோ... தெரியவில்லை. 

அதனை ஆரம்பித்த மோகன் அண்ணாவிற்கு... சிரம் தாழ்ந்த நன்றி கூறி...
யாழ் களத்தை... பல்லாண்டு வாழ்க என வாழ்த்துகின்றேன்.  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

                                                                                                                                                           

                                                                                                                                                 

                                                                                 

                                                                                                 

 

                                                                                                           

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

21வது அகவையில் காலடி வைக்கும் யாழுக்கு வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இணையத்திற்கு வாழ்த்துக்கள் நல்ல நட்புக்களையும் பரிசாக கொடுத்ததற்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

21 வது   அகவை  காணும் யாழுக்கு வாழ்த்துக்கள். என்னைத்தமிழ் எழுத வைத்து யாழ் தான்.  எனக்குள் இருந் ஆர்வத்தை  வெளிக்கொணர வைத்தும் யாழ் தான் ..முன்பு போல எழுத முடியவில்லை ஆனால் தினமும் வாசிக்க வருவேன். எழுத . நேரமின்மை ..சற்று சோம்பலும் தான் இருப்பினும் ஏதாவது  எழுத  முயற்சிக்கிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் யாழ் இணையம்... என்னையும் ஒரு உலகறிந்த எழுத்தாளனாக(சும்மா ஒரு ஆசை அம்பிட்டும்தான்) அறிமுக படுத்தியமைக்கு பல கோடி நன்றிகள் ...அத்துடன் எனது கிறுக்கள்களுக்கு பின்னூட்டம் இட்டு ஊக்கப்படுத்தும் அனைவருக்கும் நன்றிகள்....

யாழ்மகளே நீ வெற்றி நடை போட வேண்டும்  

Link to comment
Share on other sites

இருப்தோராவது  அகவையில் காலடி வைக்கும் யாழ் இணையத்திற்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும். இணைய வலையில் வெற்றிநடைபோட வாழ்த்துகிறேன்.

Link to comment
Share on other sites

 

வணக்கம்,

யாழ் அகவை 21 சுய ஆக்கங்களுக்கான சிறப்புப் பகுதி திறக்கப்பட்டு, கள உறுப்பினர்கள் சுய ஆக்கங்களுக்கான தலைப்புக்களை திறக்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

https://yarl.com/forum3/forum/219-யாழ்-21-அகவை-சுய-ஆக்கங்கள்/

 

பெப்ரவரி முதலாம் நாளில் இருந்து கள உறுப்பினர்களால் ஆரம்பிக்கப்பட்ட சுய ஆக்கங்கள் இப்பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளன.

குறிப்பு: பட்டியல் இணைக்கப்பட்ட திகதிவாரியில் உள்ளது.

 

இப்பட்டியலில் தவறவிடப்பட்ட சுய ஆக்கங்களை அறியத்தந்தால், அவற்றினை "யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்" பகுதிக்கு நகர்த்த உதவியாக இருக்கும்.

 

மேலும் பல சுய ஆக்கங்களை இணைத்து அகவை 21 ஐ சிறப்பிக்குமாறு கள உறுப்பினர்களை வேண்டுகின்றோம்.

நன்றி

Link to comment
Share on other sites

யாழ் இணையத்தின் 21வது அகவை. சுதந்திரமாகப் பறப்பதற்குரிய வயது. அதற்கொரு திறவுகோல் வேண்டுமே...! (Key Birthday) திறவுகோலை தங்கத்திலா, வெள்ளியிலா, பித்தளையிலா செய்வதென்று யோசிக்கிறேன்....!! 

Quellbild anzeigen

Link to comment
Share on other sites

வணக்கம்,

யாழ் கள உறுப்பினர்கள் பலரும் சுய ஆக்கங்களைப் பதிந்து சிறப்பிப்பதற்கு மிக்க நன்றிகள்.

இதுவரை " யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்" பகுதியில் பின்வரும் ஆக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

குறிப்பு: பட்டியல் இணைக்கப்பட்ட திகதிவாரியில் உள்ளது.

 

இப்பட்டியலில் தவறவிடப்பட்ட சுய ஆக்கங்களை அறியத்தந்தால், அவற்றினை "யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்" பகுதிக்கு நகர்த்த உதவியாக இருக்கும்.

 

மேலும் பல சுய ஆக்கங்களை இணைத்து அகவை 21 ஐ சிறப்பிக்குமாறு கள உறுப்பினர்களை வேண்டுகின்றோம்.

நன்றி

Link to comment
Share on other sites

வணக்கம்,

யாழ் கள உறுப்பினர்கள் பலரும் சுய ஆக்கங்களைப் பதிந்து சிறப்பிப்பதற்கு மிக்க நன்றிகள்.

இதுவரை " யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்" பகுதியில் பின்வரும் ஆக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

குறிப்பு: பட்டியல் இணைக்கப்பட்ட திகதிவாரியில் உள்ளது.

 

இப்பட்டியலில் தவறவிடப்பட்ட சுய ஆக்கங்களை அறியத்தந்தால், அவற்றினை "யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்" பகுதிக்கு நகர்த்த உதவியாக இருக்கும்.

இன்னும் ஒரு மாதமே யாழ் அகவை -21க்குள் நுழைய இருப்பதனால், மேலும் பல சுய ஆக்கங்களை இணைத்து அகவை 21 ஐ சிறப்பிக்குமாறு கள உறுப்பினர்களை வேண்டுகின்றோம்.

நன்றி

Link to comment
Share on other sites

தமிழ்ப்பசி தணிக்க யாழ் அன்னை மடி தந்தாள்; அவளே தமிழ்த் தாகத்தை மேலும் தூண்டிவிட்டாள்! 

நமக்கெல்லாம் வாய்ப்பளித்த யாழ் இணையத்தின் நிர்வாக குழுவிற்கு நன்றிகள். வாழிய யாழ்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/25/2019 at 12:07 PM, நியானி said:

வணக்கம்,

யாழ் கள உறுப்பினர்கள் பலரும் சுய ஆக்கங்களைப் பதிந்து சிறப்பிப்பதற்கு மிக்க நன்றிகள்.

இதுவரை " யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்" பகுதியில் பின்வரும் ஆக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

குறிப்பு: பட்டியல் இணைக்கப்பட்ட திகதிவாரியில் உள்ளது.

 

இப்பட்டியலில் தவறவிடப்பட்ட சுய ஆக்கங்களை அறியத்தந்தால், அவற்றினை "யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்" பகுதிக்கு நகர்த்த உதவியாக இருக்கும்.

இன்னும் ஒரு மாதமே யாழ் அகவை -21க்குள் நுழைய இருப்பதனால், மேலும் பல சுய ஆக்கங்களை இணைத்து அகவை 21 ஐ சிறப்பிக்குமாறு கள உறுப்பினர்களை வேண்டுகின்றோம்.

நன்றி

சுய ஆக்கங்கள் எழுதி இணைத்த அனைத்து நண்பர்களுக்கும் பாராட்டுகள் உரித்தாகட்டும்.

 

ஆமா எங்கேப்பா யாழில் எழுதுகிற சனமெல்லாம் என்னைப்போல சோம்பேறியாக மாறிவிட்டார்களா? ஸ்சப்பா திருப்பி என்னைக் கேள்வி கேட்டுடாதேங்கோ.....எப்படியாவது இந்தக்காலப்பகுதிக்குள் ஒரு சுய ஆக்கத்தைத்தன்னும் எழுதி இணைத்து 21 ஆவது அகவையில் இணைந்து கொள்வேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, வல்வை சகாறா said:

சுய ஆக்கங்கள் எழுதி இணைத்த அனைத்து நண்பர்களுக்கும் பாராட்டுகள் உரித்தாகட்டும்.

 

ஆமா எங்கேப்பா யாழில் எழுதுகிற சனமெல்லாம் என்னைப்போல சோம்பேறியாக மாறிவிட்டார்களா? ஸ்சப்பா திருப்பி என்னைக் கேள்வி கேட்டுடாதேங்கோ.....எப்படியாவது இந்தக்காலப்பகுதிக்குள் ஒரு சுய ஆக்கத்தைத்தன்னும் எழுதி இணைத்து 21 ஆவது அகவையில் இணைந்து கொள்வேன்.

நானும் மண்டையை... கசக்கி, பிழிந்தாலும்... ஒண்டும், கிடைக்குதில்லை.
ஆனாலும்... முயற்சி பண்ணிக் கொண்டு இருக்கிறன். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிறைய ஆக்கங்கள் வந்துள்ளன. இன்னமும் எல்லாவற்றையும் படிக்கவில்லை. எழுத நேரம் கிடைக்குமோ தெரியவில்லை. ஆனாலும் யாழுக்காக இன்னமும் எழுத நேரம் இருக்கு என்று நம்புகின்றேன்

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மட்டக்களப்பு எல்லையில் புதிதாக விகாரை அமைப்பு – திட்டமிட்ட சிங்கள மயமாக்கல் தீவிரம் May 23, 2024   மட்டக்களப்பை சிங்கள மயமாக்கலின் அடிப்படையில் எல்லைக் கிராமமான கிரான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வடமுனை கிராம சேவகர்பிரில் உள்ள நெலுகல் மலை எனப்படுகின்ற மலையில் எமது மாவட்டத்தின் இரு இராஜாங்க அமைச்சர்களின் ஆசீர்வாதத்துடன் நெலுகல்மலை கிறீன் விகாரை எனும் பெயரில் புதிதாக விகாரை கட்டும் பணி திருகோணமலை சோமவதி விகாரை விகாராதிபதி தலைமையில் இடம்பெற்று வருகின்றது என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தேசிய அமைப்பாளா் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார். மட்டக்களப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி காரியாலத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாள் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். திட்டமிட்ட அடிப்படையிலே கிழக்கு சிங்கள தேசத்துக்குள் படிப் படியாக கரைந்து கொண்டிருக்கின்றது அம்பாறை. திருகோணமலை மாவட்டம் முழுவதுமாக சிங்கள தேசத்தின் திட்டமிட்ட அபகரிப்பு உட்பட்டு தமிழ் மக்கள் கையில் இருந்து விடுவிக்கப்படுகின்ற மிகப் பெரிய ஆபத்தான நிலைக்கு போயிருக்கின்றது. அதன் அடுத்த கட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் இதில் எல்லைப்புற கிராமங்கள் சிங்கள தேசத்தினாலும் பெரும்பான்மை இனத்தவர்களால் குறிவைக்கப்பட்டு எல்லைக் கிராமங்கள் அபகரிக்கும் செயற்பாடுகள் படிபடியாக நடந்தேறிவருகின்றது. அதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரான் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள வடமுனை கிராமசேவகர் பிரிவிலுள்ள நெலுகல் மலையில் எனப்படுகின்ற குடும்பி மலையின் பின்பகுதியான இந்த மலையில் நெலுகல்மலை கிறீன் விகாரை எனும் பெயரில் விகாரை கட்டும் பணியை திருகோணமலை சோமவதி விகாரை விகாராதிபதி தலைமையில் இடம்பெற்று வருகின்றது. இந்த பகுதியில் பாரிய கட்டிடம் அமைக்கப்பட்டு அதில் இருந்துகொண்டு கட்டுமானப்பணியில் இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதன்நோக்கம் கிழக்கு மாகாணத்தை முற்றுமுழுதாக சிங்கள பௌத்த தேசத்துக்குள் கரைப்பதற்கான நடவடிக்கையபக பார்க்கின்றோம் வடக்கில் குருந்தூர்மலை வெடுக்குநாறி மலை, கையகப்படுத்தப்பட்டுள்ள இந்த வேளையிலே கிழக்கு மண் சத்தம் இல்லாமல் பறிபோய் கொண்டிருக்கின்றது. மயிலத்தமடு மேச்சல்தரையில் ரவுண்டப் எனும் புல்லுக்கு அடிக்கும் மருந்தையடித்து மேச்சல் புல்தரைகள் அழிக்கப்பட்டு 8 ஆயிரத்துக்கு மேற்பட்ட மேச்சல் தரை காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளது அதேவேளை மகாவலி ஏ வலயத்துக்குரிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு பெரும்பான்மை இனத்தவர்களை குடியேற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்தப் பண்ணையாளா்கள் தொடர்ந்து அச்சுறுத்தி அங்கிருந்து அவர்களை வெளியேற்றுகின்ற நடவடிக்கைகள் கச்சிதமாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றது இந்த நடவடிக்கைகளுக்கு யார் காரணம் என்பதை மக்கள் மிகத் தெளிவாக விளங்கிகொள்ள வேண்டும். இந்த மாவட்டத்தில் 2 இராஜாங்க அமைச்சர்கள் இருக்கின்றனர். இவர்களுடைய பணி சிங்கள தேசத்தினுடைய நிகழ்சி நிரலை அமுல்படுத்துவதுதான் இவர்களது நோக்கமாக இருக்கின்றதே தவிர மட்டக்களப்பு மாவட்ட மக்களை பாதுகாக்க எந்தவொரு முன்னேற்றகரவமான செயற்பாடுகளையும் செய்யவில்லை. குறிப்பாக மேச்சல்தரை பகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் போக முடியாத சூழ்நிலை காணப்பட்டது அதனை எமது கட்சி தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அந்த இடத்துக்கு சென்று அந்த பகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர் கூட செல்லமுடியாது என்பதை சர்வதேசத்துக்கு அம்பலப்படுயிருந்தார். இந்த நிலையில் கஜேந்திரகுமார் ஏன் இங்கு வரவேண்டும் என பிள்ளையான் நேற்ரூ முன்தினம் கூட்டத்தில் கேட்டிருந்தார். எனவே கஜேந்திரகுமார் இந்த இடத்துக்கு வரவேண்டியதாக இருந்தது. நீங்கள் ஒரு காட்டிக் கொடுப்பை செய்து தமிழ் மக்களை அழிக்கின்ற செயற்பாட்டில் நின்றதனால் அந்த மக்கள் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளை கூப்பிடவேண்டிய அபாய நிலைக்கு இட்டுச் சென்றீர்கள் எனவே அது ஒரு வெக்க கேடான விடயம். இவரின் செயற்பாடுகளை பார்த்தால் தெரியும் தங்களது பக்கற்றுக்களை நிரப்புகின்ற விதமாக தங்களின் அமைச்சுக்கு ஊடாககிடைக்கின்ற வீதிகளை அமைத்து அதில் 15 வீதம் தரகு பணம் பெற்றுக் கொண்டு அதற்கு வக்காளத்து வாங்குகின்ற ஒப்பந்தகாரர்களை பின்னால் வைத்துக்கொண்டு பேச ஒப்பந்தகாரர்கள் கையடிக்கின்ற செயற்பாட்டை மிகக் கச்சிதமாக பிள்ளையான் செய்துவருகின்றாா் என்றும் சுரேஷ் தெரிவித்தாா்.   https://www.ilakku.org/மட்டக்களப்பு-எல்லையில்-ப/
    • ஈரான் ஜனாதிபதியின் ஜனாசா நல்லடக்கம் இன்று sachinthaMay 23, 2024 ஹெலிகொப்டர் விபத்தில் கொல்லப்பட்ட ஈரான் ஜனாதிபதி, வெளியுறவு அமைச்சர் மற்றும் ஏனையவர்களுக்காக அந்நாட்டு உயர்மட்டத் தலைவர் ஆயதொல்லா அலி காமெய்னி நேற்று தொழுகை நடத்தினார். ஈரானிய கொடி போர்த்திய இறந்தவர்களின் உடல்கள் அடங்கிய பேழைகள் டெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டு பெரும் எண்ணிக்கையான மக்களுக்கு முன் உயர்மட்டத் தலைவர் ஜனாஸா தொழுகையை நடத்தினார். ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிர் அப்துல்லாஹியன் மற்றும் மேலும் ஆறு பேர் சென்ற ஹெலி கடந்த ஞாயிற்றுக்கிழமை அசர்பைஜான் நாட்டு எல்லைக்கு அருகில் விபத்துக்குள்ளாகியதில் ஒருவரும் உயிர் தப்பவில்லை. ‘இறைவனே நாம் அவரிடம் நன்மையைத் தவிர வேறு எதனையும் பார்க்கவில்லை’ என்று உயர்மட்டத் தலைவர் பிரார்த்தனையின்போது தெரிவித்தார். தொடர்ந்து அந்த பேழைகள் மக்களால் சுமந்து செல்லப்பட்டதோடு வெளியே ‘அமெரிக்கா ஒழிக’ என்ற கோசமும் எழுப்பப்பட்டது. இந்த இறுதிக் கிரியையில் பல வெளிநாட்டு தலைவர்களும் பங்கேற்றனர். ஈரான் ஜனாதிபதியின் இறுதிக் கிரியை கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அவரது உடல் தெற்கு கொராசன் மாகாணத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் அவரது சொந்த ஊரான மஷாத்துக்கு எடுத்து வரப்படவுள்ளது. இன்று (23) மாலை இறுதிச் சடங்குகளுக்குப் பின்னர் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.   https://www.thinakaran.lk/2024/05/23/world/62483/ஈரான்-ஜனாதிபதியின்-ஜனாச/
    • இதெல்லாம் ரணிலுக்கு வாக்கு போட சொல்லும் ஒரு யுக்தி , மொக்கு சிங்களவனுக்கு சொல்லும் செய்தி 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.