Jump to content

அறிவித்தல்: யாழ் இணையம் 21 ஆவது அகவையில் - கள உறுப்பினர்களின் சுய ஆக்கங்கள்


Recommended Posts

அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு,


எதிர்வரும் 30.03.2019 அன்று யாழ் இணையம் தனது 21 ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. 1999ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் நாள் தொடங்கப்பட்ட யாழ் இணையம், பல்வேறு தடைகளையும், மேடு பள்ளங்களையும் தாண்டி, தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகமான மாற்றங்களுக்கும், சமூக வலைத்தளங்களின் துரித வளர்ச்சிக்கும் ஈடுகொடுத்து இன்று தன்நிகரற்ற தமிழ் இணையத்தளமாய் வளர்ந்துள்ளது. உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு குடிலாக, தமிழர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் காலக்கண்ணாடியாக, உலகத் தமிழர்தம் கருத்துக்களை காவும் ஒரு உறவாக யாழ் இணையம் உள்ளது.

யாழ் இணையம் 21 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நாளினைச் சிறப்பிக்கும் முகமாக கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்களைக் கோருகின்றோம்.

சுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம்.  கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஒளிப்படமாகவோ, ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.

எனினும் இச் சுய ஆக்கங்கள் முகநூல் நிலைத்தகவல், டுவிட்டர் குறுஞ்செய்தி போன்று மிகவும் குறுகியதாக அமையாமல் இருத்தல் வேண்டும். மேலும், இச் சுய ஆக்கங்களில் யாழ் களம் 21 ஆவது அகவையில் காலடி வைப்பதற்கான வாழ்த்து விடயங்களை தவிர்ப்பது நல்லது.

எமது நோக்கம் அனைத்து கள உறவுகளையும் அவரவர் திறமைகளுக்கேற்ப சுயமான ஆக்கங்களைப் படைப்பதற்கான வெளியை யாழ் கருத்துக்களத்தில் வழங்குவதேயாகும். இதன் மூலம் அனைத்து கள உறவுகளும் தேங்கிப்போயுள்ள தமது படைப்புத் திறனை வெளிக்காட்டுவார்கள் என்று நம்புகின்றோம். எனவே அனைவரையும் உற்சாகத்துடன் பங்குகொள்ளுமாறு கோருகின்றோம்.

யாழ் களம் 21 ஆவது அகவைக்குள் காலடி வைப்பதை முன்னிட்டு யாழ் கள உறவுகளின் சுய ஆக்கங்களுக்கான சிறப்புப் பக்கம் தயாராக உள்ளது. கள உறவுகள் சுய ஆக்கங்களைத் தயார்படுத்தவும், மெருகேற்றவும் இரு மாத காலம்தான் இருக்கின்றது. நாட்கள் விரைந்து ஓடிவிடும் என்பதால், காலந்தாழ்த்தாது சுய ஆக்கங்களைத் தயார்படுத்த இப்போதே ஆயத்தமாகுங்கள்.

விதிமுறைகள்:

  1. யாழ் கள உறுப்பினர்கள் மட்டுமே ஆக்கங்களை படைக்கலாம். உறுப்பினர்கள் அல்லாதவர்கள் உறுப்பினர்களாக இணைந்து ஆக்கங்களை இணைத்துக் கொள்ளலாம்.
  2. ஆக்கங்கள் கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்களாக இருக்கவேண்டும்.
  3. கருப்பொருள் எதுவாகவும் இருக்கலாம் (வாழ்த்துக்களைத் தவிர்த்து). எனினும் ஆக்கங்களின் உள்ளடக்கத்திற்கு  உறுப்பினர்களே முழுப் பொறுப்பும் ஏற்க வேண்டும்.
  4. கள உறுப்பினர் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட ஆக்கங்களைப் படைக்கலாம்.
  5. கள உறுப்பினர் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட வகைமைகளில் ஆக்கங்களைப் படைக்கலாம்.
  6. ஆக்கங்கள் இதற்கு முன் வேறெங்கும் பிரசுரம் ஆகாததாக இருக்கவேண்டும்.
  7. ஆக்கங்கள் யாழ் கள விதிகளை மீறாத வகையில் அமையவேண்டும்.

யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்

"நாமார்க்கும் குடியல்லோம்"

நன்றி

 யாழ் இணைய நிர்வாகம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் 21 வயதை எட்டுவதால் adult theme இல் ஏதாவது எழுதலாமா என்று யோசிக்கின்றேன்!😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, கிருபன் said:

யாழ் 21 வயதை எட்டுவதால் adult theme இல் ஏதாவது எழுதலாமா என்று யோசிக்கின்றேன்!😁

ஏதோ மார்க்கமா எழுத நினைச்சிட்டாப்பல.......😛

இப்படி எத்தனைபேர் கிளம்பப்போறாய்ங்களோ???😵

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

முதற்கண் 21 வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் யாழுக்கு நானும் தவழ்ந்து எழுந்து நடந்த இடம் என்றபடியால் வாழ்த்துக்கள்.

இந்த நேரங்களிலாவது ஆக்கங்கள் படைப்போருக்கு அவர்களின் படைப்புக்கு கருத்தெழுதுபவர்களுக்கு பச்சைப்புள்ளிகள் இடும் வசதியை செய்து கொடுக்கவும்.அனேகமாக மட்டுறுத்தினர்களால் சுய ஆக்கங்கள் படைக்கப்படுவதில்லை.அதனாலோ என்னவோ அதன் வலி அவர்களுக்குத் தெரிவதில்லை.
இந்த வருடமாவது ஏதாவது மாற்றம் நடக்கிறதா பார்ப்போம்.

இது வந்தவர்களை வரவேற்க முடியவில்லை என்பதே தவிர வேறோன்றுமல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் இனிய யாழ் இணையத்திற்கு வாழ்த்துக்கள்.....! இன்றும் தமிழ் எழுத்தை மறக்காமல் எழுதிக் கொண்டிருக்கிறோம் என்றால் அதற்கு ஒரே காரணம் யாழ் இணையம்தான் என்பதை மகிழ்வுடன் நினைவு கூறுகின்றேன்......!  🌺

ஏதாவது எழுதியே ஆக வேண்டும் என்ன எழுதுவது என்று யோசிக்க வேண்டி இருக்கின்றேன்.......!   😊

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

21வது அகவையில் காலடி வைக்கும் யாழுக்கு வாழ்த்துக்கள். உண்மையிலேயே எமக்கு கணனியில் தமிழ் எழுத வைத்ததே யாழ் இணையம்தான். இதன் மூலம் எமது பல புதிய உறவுகளையும் பெற்றுக் கொண்டோம். பிறந்தநாளை நினைவுகூரும் இத் தருணத்தில் ஏதாவது எழுதத்தான் வேண்டும். முயற்சிக்கிறேன். யாழ் இணையத்திற்கு எம் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

என் புனைபெயருக்கு மிகுந்த வாசம் கொடுத்த தளம். என்னை நான் மேலும் புரிந்து கொள்ள உதவிய களம். தட்டுத்தடுமாறி எழுத்துப் பிழைகளுடன் இங்கே எழுத ஆரம்பித்தது இன்னும் நினைவில் உள்ளது. யாழுக்கு எனது நன்றி கலந்த வாழ்த்துக்கள்! ❤️🎉🎊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க  யாழே

எங்கும் சொல்வதுண்டு

என்னை  எழுத  வைத்த

எழுதத்தூண்டிய

எழுத கற்றுத்தந்த தாயிவள்

வாழ்க  பல்லாண்டு

Link to comment
Share on other sites

அட 21 வருடம் ஆகிவிட்டதா. 20 வருடங்கள்  எனக்கும் யாழிற்குமான உறவு... வாழ்த்துக்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் என்று சொல்லிவிட்டு...நகர்ந்து விட மனது இடம் கொடுக்குதில்லை!

ஏதாவது எழுத வேண்டும் என்ற உந்துதல் ஏற்படுகின்றது !

வாழ்த்துக்கள் யாழ் களமே...!

வாழ்ந்திடு பல்லாண்டு....!

எமது வரலாற்றின் காப்பகமாய்....மிளிர்ந்திடு..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

photo-thumb-9421.png  Bildergebnis für பலà¯à®²à®¾à®£à¯à®à¯ வாழà¯à®  photo-thumb-9421.png

எனது அன்புக்  காதலி,  யாழுக்கு... 21 வயசு ஆகிறது.💋
என்  வாழ்வில்... மிக நேசிக்கும், களம்  இது.
யாழ். களத்தில்..   நான் இணைந்த காலத்தில் இருந்து, தினமும் குறைந்தது  3 மணித்தியாலமாவது,
அதனுடன் எனது நேரத்தை செலவழிப்பேன். என்ன மந்திர, மாயமோ... தெரியவில்லை. 

அதனை ஆரம்பித்த மோகன் அண்ணாவிற்கு... சிரம் தாழ்ந்த நன்றி கூறி...
யாழ் களத்தை... பல்லாண்டு வாழ்க என வாழ்த்துகின்றேன்.  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

                                                                                                                                                           

                                                                                                                                                 

                                                                                 

                                                                                                 

 

                                                                                                           

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

21வது அகவையில் காலடி வைக்கும் யாழுக்கு வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இணையத்திற்கு வாழ்த்துக்கள் நல்ல நட்புக்களையும் பரிசாக கொடுத்ததற்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

21 வது   அகவை  காணும் யாழுக்கு வாழ்த்துக்கள். என்னைத்தமிழ் எழுத வைத்து யாழ் தான்.  எனக்குள் இருந் ஆர்வத்தை  வெளிக்கொணர வைத்தும் யாழ் தான் ..முன்பு போல எழுத முடியவில்லை ஆனால் தினமும் வாசிக்க வருவேன். எழுத . நேரமின்மை ..சற்று சோம்பலும் தான் இருப்பினும் ஏதாவது  எழுத  முயற்சிக்கிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் யாழ் இணையம்... என்னையும் ஒரு உலகறிந்த எழுத்தாளனாக(சும்மா ஒரு ஆசை அம்பிட்டும்தான்) அறிமுக படுத்தியமைக்கு பல கோடி நன்றிகள் ...அத்துடன் எனது கிறுக்கள்களுக்கு பின்னூட்டம் இட்டு ஊக்கப்படுத்தும் அனைவருக்கும் நன்றிகள்....

யாழ்மகளே நீ வெற்றி நடை போட வேண்டும்  

Link to comment
Share on other sites

இருப்தோராவது  அகவையில் காலடி வைக்கும் யாழ் இணையத்திற்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும். இணைய வலையில் வெற்றிநடைபோட வாழ்த்துகிறேன்.

Link to comment
Share on other sites

 

வணக்கம்,

யாழ் அகவை 21 சுய ஆக்கங்களுக்கான சிறப்புப் பகுதி திறக்கப்பட்டு, கள உறுப்பினர்கள் சுய ஆக்கங்களுக்கான தலைப்புக்களை திறக்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

https://yarl.com/forum3/forum/219-யாழ்-21-அகவை-சுய-ஆக்கங்கள்/

 

பெப்ரவரி முதலாம் நாளில் இருந்து கள உறுப்பினர்களால் ஆரம்பிக்கப்பட்ட சுய ஆக்கங்கள் இப்பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளன.

குறிப்பு: பட்டியல் இணைக்கப்பட்ட திகதிவாரியில் உள்ளது.

 

இப்பட்டியலில் தவறவிடப்பட்ட சுய ஆக்கங்களை அறியத்தந்தால், அவற்றினை "யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்" பகுதிக்கு நகர்த்த உதவியாக இருக்கும்.

 

மேலும் பல சுய ஆக்கங்களை இணைத்து அகவை 21 ஐ சிறப்பிக்குமாறு கள உறுப்பினர்களை வேண்டுகின்றோம்.

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இணையத்தின் 21வது அகவை. சுதந்திரமாகப் பறப்பதற்குரிய வயது. அதற்கொரு திறவுகோல் வேண்டுமே...! (Key Birthday) திறவுகோலை தங்கத்திலா, வெள்ளியிலா, பித்தளையிலா செய்வதென்று யோசிக்கிறேன்....!! 

Quellbild anzeigen

Link to comment
Share on other sites

வணக்கம்,

யாழ் கள உறுப்பினர்கள் பலரும் சுய ஆக்கங்களைப் பதிந்து சிறப்பிப்பதற்கு மிக்க நன்றிகள்.

இதுவரை " யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்" பகுதியில் பின்வரும் ஆக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

குறிப்பு: பட்டியல் இணைக்கப்பட்ட திகதிவாரியில் உள்ளது.

 

இப்பட்டியலில் தவறவிடப்பட்ட சுய ஆக்கங்களை அறியத்தந்தால், அவற்றினை "யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்" பகுதிக்கு நகர்த்த உதவியாக இருக்கும்.

 

மேலும் பல சுய ஆக்கங்களை இணைத்து அகவை 21 ஐ சிறப்பிக்குமாறு கள உறுப்பினர்களை வேண்டுகின்றோம்.

நன்றி

Link to comment
Share on other sites

வணக்கம்,

யாழ் கள உறுப்பினர்கள் பலரும் சுய ஆக்கங்களைப் பதிந்து சிறப்பிப்பதற்கு மிக்க நன்றிகள்.

இதுவரை " யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்" பகுதியில் பின்வரும் ஆக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

குறிப்பு: பட்டியல் இணைக்கப்பட்ட திகதிவாரியில் உள்ளது.

 

இப்பட்டியலில் தவறவிடப்பட்ட சுய ஆக்கங்களை அறியத்தந்தால், அவற்றினை "யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்" பகுதிக்கு நகர்த்த உதவியாக இருக்கும்.

இன்னும் ஒரு மாதமே யாழ் அகவை -21க்குள் நுழைய இருப்பதனால், மேலும் பல சுய ஆக்கங்களை இணைத்து அகவை 21 ஐ சிறப்பிக்குமாறு கள உறுப்பினர்களை வேண்டுகின்றோம்.

நன்றி

Link to comment
Share on other sites

தமிழ்ப்பசி தணிக்க யாழ் அன்னை மடி தந்தாள்; அவளே தமிழ்த் தாகத்தை மேலும் தூண்டிவிட்டாள்! 

நமக்கெல்லாம் வாய்ப்பளித்த யாழ் இணையத்தின் நிர்வாக குழுவிற்கு நன்றிகள். வாழிய யாழ்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/25/2019 at 12:07 PM, நியானி said:

வணக்கம்,

யாழ் கள உறுப்பினர்கள் பலரும் சுய ஆக்கங்களைப் பதிந்து சிறப்பிப்பதற்கு மிக்க நன்றிகள்.

இதுவரை " யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்" பகுதியில் பின்வரும் ஆக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

குறிப்பு: பட்டியல் இணைக்கப்பட்ட திகதிவாரியில் உள்ளது.

 

இப்பட்டியலில் தவறவிடப்பட்ட சுய ஆக்கங்களை அறியத்தந்தால், அவற்றினை "யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்" பகுதிக்கு நகர்த்த உதவியாக இருக்கும்.

இன்னும் ஒரு மாதமே யாழ் அகவை -21க்குள் நுழைய இருப்பதனால், மேலும் பல சுய ஆக்கங்களை இணைத்து அகவை 21 ஐ சிறப்பிக்குமாறு கள உறுப்பினர்களை வேண்டுகின்றோம்.

நன்றி

சுய ஆக்கங்கள் எழுதி இணைத்த அனைத்து நண்பர்களுக்கும் பாராட்டுகள் உரித்தாகட்டும்.

 

ஆமா எங்கேப்பா யாழில் எழுதுகிற சனமெல்லாம் என்னைப்போல சோம்பேறியாக மாறிவிட்டார்களா? ஸ்சப்பா திருப்பி என்னைக் கேள்வி கேட்டுடாதேங்கோ.....எப்படியாவது இந்தக்காலப்பகுதிக்குள் ஒரு சுய ஆக்கத்தைத்தன்னும் எழுதி இணைத்து 21 ஆவது அகவையில் இணைந்து கொள்வேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, வல்வை சகாறா said:

சுய ஆக்கங்கள் எழுதி இணைத்த அனைத்து நண்பர்களுக்கும் பாராட்டுகள் உரித்தாகட்டும்.

 

ஆமா எங்கேப்பா யாழில் எழுதுகிற சனமெல்லாம் என்னைப்போல சோம்பேறியாக மாறிவிட்டார்களா? ஸ்சப்பா திருப்பி என்னைக் கேள்வி கேட்டுடாதேங்கோ.....எப்படியாவது இந்தக்காலப்பகுதிக்குள் ஒரு சுய ஆக்கத்தைத்தன்னும் எழுதி இணைத்து 21 ஆவது அகவையில் இணைந்து கொள்வேன்.

நானும் மண்டையை... கசக்கி, பிழிந்தாலும்... ஒண்டும், கிடைக்குதில்லை.
ஆனாலும்... முயற்சி பண்ணிக் கொண்டு இருக்கிறன். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிறைய ஆக்கங்கள் வந்துள்ளன. இன்னமும் எல்லாவற்றையும் படிக்கவில்லை. எழுத நேரம் கிடைக்குமோ தெரியவில்லை. ஆனாலும் யாழுக்காக இன்னமும் எழுத நேரம் இருக்கு என்று நம்புகின்றேன்

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சரத்குமாருக்கு… ஒரு கட்டத்தில் தமிழக முதல்வராக வர வேண்டும் என்ற ஆசையும் ஒரு ஓரத்தில் இருந்தது என்றால் பாருங்கோவன். 😂
    • டெல்லியில் aam ஆத்மி  கடும் பின்னடைவு  7 தொகுதிகளிலும் பா ஜ க  முன்னிலை.  தமிழ்நாடு மாநிலத்தில் 9 தொகுதிகளில்  காங்கிரஸ்  முன்னணியில்  தமிழ் நாடு  திருநெல்வேலி தொகுதியில் நயினார் நாகேந்திரன்( பா ஜ க) பின்னடைவு  காங்கிரஸ் முன்னணியில் 
    • வாரணாசியில் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் இந்திய பிரதமர் மோடி முன்னிலையில் 
    • முள்ளிவாய்க்கால் நிலம் - துரைராஜா ஜெயராஜா June 4, 2024   தமிழினப் படுகொலையின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிறைவுபெற்றுவிட்டது. பெருமளவான மக்களின் பங்கேற்புடனும், சர்வதேச அமைப்புகளின் – சர்வதேச ஊடகங்களின் நேரடி கண்காணிப்பின் கீழும் இவ்வருட நினைவேந்தல் உணர்வுபூர்வமாக மேற்கொள்ளப்பட்டது. நினைவேந்தலை வெறும் அழுது, ஆறுவதற்கான சம்பிரதாய நிகழ்வாக அல்லாமல், இங்கு இடம்பெற்றது இனப்படுகொலையே என்பதையும், அதனை அடுத்தடுத்த சந்ததியினரும் நினைவுகொள்ளவேண்டும் என்பதையும் பங்கேற்பாளர்கள் உணர்த்தியிருந்தார்கள். இன்னொருவிதத்தில் சொல்வதானால், முள்ளிவாய்க்கால் மண்ணும், அது தகிப்போடு வைத்திருக்கும் நினைவுகளும் அழுதரற்றுவதற்கானவை அல்ல, தமிழ் தேசிய எழுச்சிக்கானவை என்பதை வெளிப்படுத்தின.  இவ்வாறானதொரு கற்பித்தலை செய்திருக்கும் நினைவேந்தலைக் குழப்புவதற்கு இலங்கை அரசு பல வேலைகளை முன்னெடுத்தது. அதில் முதன்மையானது, நினைவேந்தல் விடயத்தில் வடக்கு, கிழக்கு எனத் தனித்தனியாகக் கையாண்டமை. கிழக்கில் குவிக்கப்பட்டிருக்கும் முஸ்லிம் பொலிஸார், இராணுவ புலனாய்வாளர்கள், தமிழ் ஒட்டுக்குழுக்களின் உறுப்பினர்கள் இந்தப் பணிக்காக அமர்த்தப்பட்டிருந்தனர். அவர்களும் மிகுந்த விசுவாசத்தோடு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பான அனைத்து நிகழ்வுகளையும் கிழக்கில் கட்டுப்படுத்திக்கொடுத்தனர். முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சியவர்களை, ஐ.சி.சி.பி.ஆர் சட்டத்தின் கீழ் கைதுசெய்தனர். நினைவேந்துவோரை களத்தில் இறங்கி அச்சுறுத்தினர். கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஒழுங்குசெய்த நினைவேந்தல் நிகழ்வைக் காலால் தட்டிவிட்டுக் குழப்பியடித்தனர். ஆனால் வடக்கில் இந்த அடக்குமுறையை மேற்கொள்ளவில்லை. பல இடங்களில் இராணுவமும், இராணுவப் புலனாய்வாளர்களும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வாங்கிப் பருகினர். இறுதி நாள் நினைவேந்தலில் கூட வடக்கு, உள்ளிட்ட முள்ளிவாய்க்கால் பகுதிகளில் சீருடையணித்த பொலிஸாரையோ, இராணுவத்தினரையோ காணமுடியவில்லை. எனவே முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை கிழக்குப் பக்கமாகவோ,இலங்கைத் தீவுக்குள் வடக்குத் தவிர்த்து தமிழர்கள் வாழும் ஏனைய பிராந்தியங்களுக்குள்ளோ பரவவிடாது தடுத்துவிட்டனர். நினைவேந்தல் விடயத்தில் வடக்கை தனியாகவும், கிழக்கை தனியாகவும் கையாளத்தொடங்கியிருக்கின்றனர். இனிவரும் காலங்களில் ஒரு தேசமாகத் தமிழர்கள் நினைவேந்தும் அனைத்து நிகழ்வுகளுக்கும் இதனைப் பிரயோகிக்கக்கூடும்.  இம்முறை இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வுகளில் அம்னெஸ்டி இன்டர்நெனல் அமைப்பின் செயலாளர் நாயகம் கலந்துகொண்டார். நினைவேந்தல் நிகழ்வுக்கு முதல்நாள் மாலையே முல்லைத்தீவிற்கு வருகைதந்திருந்த அம்மணி, காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள், ஊடகவியலாளர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகளைச் சந்தித்தார். “சிறீலங்காவில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்து 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இப்போது என்ன உணர்கிறீர்கள்” என்றவகையறாக் கேள்விகளை சந்தித்த அனைவரிடமும் கேட்டுக்கொண்டார். மறுநாள் அதாவது நினைவேந்தல் அன்று, வட்டுவாகல் பாலத்தில் இறங்கி நடந்தார். நினைவேந்தல் மையத்திற்கு வருகைதந்து, இனப்படுகொலையானவர்ககளுக்கு மலர்வணக்கம் செலுத்தினார். அவரைக் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள், தம் சகோதரியைப் போல அழைத்துவந்தனர். ஊடகங்கள், காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் அம்மணியைக் கட்டியணைத்து அழுவார்கள், தம் வலியைச் சொல்வார்கள், அந்நேரம் ஏதாவது ஒளிப்படங்கள் எடுக்கலாம் எனக் காத்திருந்தன. ஆனால் அவ்வாறான எவ்வித “அசம்பாவிதங்களும்” ஏற்படாதபடிக்கு, 17ஆம் திகதி காலையே முல்லைத்தீவுக்கு வருகைதந்துவிட்ட தொண்டு நிறுவனங்களின் பணியாளர்கள் “கவனித்துக்கொண்டார்கள்”. அம்மணியின் வருகையை அமைதியாக வழிநடத்தினர்.  நினைவேந்தல் மையத்திற்கு வெளியே வந்த அம்மணி, ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். எந்தப் பதிலிலும் இனப்படுகொலை என்ற வார்த்தை இடம்பெறவில்லை. தப்பித்தவறிகூட அந்த வார்த்தை வந்துவிடக்கூடாது என்பதில் கவனமாயிருந்தார். அவ்விடத்தில் அவர் அளித்த பதில்கள் மிக நுணுக்கமானவை.  இம்முறை நினைவேந்தலில், ஏ.பி, ஏ.எவ்.பி, கெட்டிஇமேஜஸ் உள்ளிட்ட பல சர்வதேச ஊடகங்கள் கலந்துகொண்டிருந்தன. முள்ளிவாய்க்காலில் சிதறிக் கிடக்கும் போரின் எச்சங்கள் தொடக்கம், இடிந்து கிடக்கு கட்டடஙகள் வரையில் அனைத்தையும் ஒளிப்படம் எடுத்தன. நினைவேந்தலில் கலந்துகொண்ட மக்கள் வடித்த ஒவ்வொரு கண்ணீர்த்துளியையும் ஒளிப்படம் எடுத்துக்கொண்டன. எவ்விடத்திலும், எந்தக் கெமராவும், தமிழினப்படுகொலை என்ற பாதகையைக்கூட ஒளிப்படமெடுக்கவில்லை. தமது ஊடகச் செய்தி அறிக்கைகளில் அந்த வார்த்தையையோ, அந்த வார்த்தையை வெளிப்படுத்தும் ஒளிப்படங்களையோ வெளியிடவில்லை. “தமது ஊடகம் அந்த வார்த்தையைப் பயன்படுத்துவதில்லை” என வெளிப்படையாகவே சொன்னார் ஒரு வெள்ளைக்கார ஊடகர். இதன்காரணத்தினாலேயே முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை நினைவேந்தலில் வாசிக்கப்பட்ட அறிக்கையை எந்த சர்வதேச ஊடகங்களும் வெளியிடவுமில்லை.  இம்முறை நினைவேந்தல் ஏற்பாடுகளில் மதம் சார்ந்த சில சலசலப்புகள் ஆங்காங்கே ஏற்பட்டன. அதனை ஆரம்பத்திலேயே கிள்ளியெறியாவிட்டால், எதிர்காலத்தில் மிகுந்த பாதிப்பினை அது ஏற்படுத்தும். நினைவேந்தலுக்கு மூன்று நாட்கள் மீதமாக இருக்கும்போது, நினைவேந்தல் நிகழ்வுகளை ஒழுங்குபடுத்தாது, அதனை ஒரு சமூக இயக்கமாக மாற்றுவதற்கு நினைவேந்தல் ஒருங்கிணைப்புக்குழு தயாராகவேண்டும். அப்போதுதான் இதுபோன்ற மதவாத சக்திகள் நினைவேந்தல் நிகழ்வொழுங்குகளுக்குள் தலையிடுவதைத் தடுக்க முடியும்.  இம்முறை நினைவேந்தலில் அவதானிக்கப்பட்ட மிகமுக்கியமான விடயங்களில் ஒன்று, நினைவேந்தல் இடம்பெறும் காணி சம்பந்தமானது. தற்போது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடம்பெறும் வளாகமானது, அரசுக்கு சொந்தமானது. அந்தக் காணியைக் கரைச்சி பிரதேச சபையின் கீழ் கொண்டுவந்து, நினைவேந்தல் மையமாகப் பிரகடனம் செய்வதற்கான பணிகள், வட மாகாண சபை இயங்கும் காலத்தில் முன்னெடுக்கப்பட்டது. அந்த வேலைத்திட்டத்தில் தமிழ் தேசிய அரசியல்வாதிகளும், நினைவேந்தல் ஒருங்கிணைப்புக்குழுவும் அதிக கவனமெடுக்காமை காரணமாக, எவ்வித முன்னேற்றமும் இடம்பெறவி்ல்லை. தற்போது, பிரதேச சபைகள் செயலற்றிருக்கின்ற நிலையில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மையம் நிலஅளவைத் திணைக்களத்தின் அளவீடு செய்யப்பட்டிருக்கின்றது. எந்த அரசியல் கட்சிகளும் இந்த விடயத்தில் கவனம் எடுக்கவில்லை. தமது எதிர்ப்பை வெளியிடவில்லை. எனவே குறித்த நினைவேந்தல் மையத்தினை அரசு தன் நிலம் என வர்த்தமானி அறிவிப்புச் செய்து, அபகரித்துக்கொள்ள அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.  முள்ளிவாய்க்காலில் தமிழின அழிப்பின் குறியீடாக இன்றும்எஞ்சியிருப்பது முள்ளிவாய்க்கால் பொதுச்சந்தைக் கட்டடம் மாத்திரமே. பதுங்குகுழியின் எச்சங்கள், துப்பாக்கி ரவை பதிந்த சுவர்கள், போராளிகளின் ஆடைகள், பொதுமக்களின் பாவனைப்பொருட்கள் என அந்தச் சூழலில் இனப்படுகொலையை நினைவுபடுத்துகின்ற பல விடயங்கள் இருக்கின்றன. தமிழீழ விடுதலைப் புலிகளின் இறுதி மாவீரர் மண்டபமாகவும் அந்தச் சந்தைக் கட்டடத்தொகுதி செயற்பட்டிருக்கின்றது. எனவேதான் அதனையாவது இனப்படுகொலையின் நினைவாக அப்படியே பேணிப்பாதுகாப்பதும், ஆவணப்படுத்துவதும் அவசியமானதாகும். ஆனால் அந்தக் கட்டடத்தை இடித்துப் புதிய சந்தைத்தொகுதியொன்றை அவ்விடத்தில் அமைப்பதற்கான வேலைத்திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்படுகின்றன.  முள்ளிவாய்க்கால், புதுமாத்தளன், வலையன்மடம், வட்டுவாகல் ஆகிய பகுதிகள் இறுதிப்போர் காலத்தில் முக்கியமான இடங்களாக இருந்தன. ஒவ்வொரு அங்குல நிலத்திலும், இனப்படுகொலையான தமிழர்களின் புதைகுழிகள் இருக்கின்றன. ஒவ்வொரு அங்குல நிலத்திலும் போர்க்காலத்தை நினைவுபடுத்துகின்ற பொருட்கள் சிதறிக்கிடந்தன. இறுதியா உணவு உண்ட உணவுப் பாத்திரம் தொடக்கம், பதுங்குகுழிக்கு பயன்படுத்திய உடுபுடவைகள் வரைக்கும் அந்நிலமெங்கும் சிதறிக்கிடந்தன. ஆனால் இன்று அவை அனைத்தும் திட்டமிட்ட வகையில் அகற்றப்பட்டிருக்கின்றன. தெற்கிலிருந்து வருகைதரும் இரும்பு வியாபாரிகளுக்கு அப்பொருட்களை உள்ளூர் மக்கள் வியாபாரம் செய்துவிட்டனர். காணிகளைத் துப்பரவு செய்கிறோம் என்கிற பெயரில், அங்கு கிடந்த துணிகள் உள்ளிட்ட பொருட்களை எரித்துவிட்டனர். தன் வரலாற்றைச் சரியாகப் பேணவும், ஆவணப்படுத்தவும் தெரியாத இனமாகத் தமிழர்கள் இருக்கின்றமையும், இது குறித்த விழிப்புணர்வு தமிழ் அரசியல்வாதிகளுக்கு இல்லாமல் இருக்கின்றமையுமே இதற்குப் பிரதான காரணமாகும். உலகம் முழுவதும் இனப்படுகொலைக்குள்ளான இனங்கள் இதுபோன்ற விடயங்களை பல நூற்றாண்டுகள் கடந்தும் ஆவணப்படுத்தி வைத்திருக்கின்றன. மிகப்பெரிய இனப்படுகொலையின் பின்னர் இஸ்ரேலியர்கள் தமக்கான நாட்டைக் கட்டமைத்துக்கொண்டாலும், தம் மீது ஜேர்மனியர்கள் நடத்திய இனப்படுகொலையை நினைவுபடுத்தும் ஆவணங்களை, ஆவணக்காப்பகங்களில் இன்றும் வைத்திருக்கின்றனர். உலகப் போர்க்காலத்தில் அணுகுண்டு வீச்சினால் பாதிக்கப்பட்ட ஜப்பானியர்கள் அந்தப் பாதிப்பின் எச்சங்களை இன்றும் ஆவணப்படுத்தி வைத்திருக்கின்றனர். உலகம் நன்கு வளர்ச்சியடைந்துவிட்ட யுகத்தில், பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் இனப்படுகொலைக்குள்ளான இனமொன்று, அதற்கான ஆவணங்களைத் தவறவிட்டிருப்பது எவ்வளவு துயரமானது? அடுத்து வட்டுவாகல் பாலம். இறுதிப் போரின் நாட்களை நினைவுகூறும் எவராலும் வட்டுவாகல் பாலத்தைத் தவிர்க்க முடியாது. பாலத்தைக் கடந்த பலர் இன்று உயிரோடில்லை. வலிந்து காணாமலாக்கப்பட்டு விட்டனர். பாலத்தில் இறுமருங்கிலும் இராணுவத்தால் சுடப்பட்ட நிலையில் இறந்து மிதந்தவர்களின் எண்ணிக்கை பல்லாயிரம். இவ்வளவு பெறுமதிமிகு நினைவுகளைக் கொண்டிருக்கும் வட்டுவாகல் பாலம் மிக விரைவில் மீளப் புனருத்தானம் செய்யப்படப்போகின்றது. அந்த பாலத்தை நீக்குவிட்டுப் புதிய பாலமொன்றை அமைத்துத் தரும்படி உள்ளூர் மக்களே அரசைக் கோரியிருக்கின்றனர்.  இப்படியாக தமிழ் இனப்படுகொலையின் பௌதீக சாட்சியங்களாக இருக்கின்ற பல விடயங்களும் விரைவாகவே அழிக்கப்பட்டு வருகின்றன. அனேகமாகத் தமிழினப் படுகொலையின் இருபதாம் ஆண்டு நினைவேந்தல் செய்யும் மேற்குறித்த எந்த நினைவேந்தல் எச்சங்களும் முள்ளிவாய்க்காலில் இருக்கப்போவதில்லை.  சர்வதேச நிறுவனங்களும், ஊடகங்களும், தமிழர்களும் முள்ளிவாய்க்கால் எனப்படும் தமிழினப் படுகொலையின் குறியீட்டு நிலத்தை எப்படி மாற்றிவருகின்றனர் என்பதற்கான சில விடயங்கள்தான் இந்தப் பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ளன. அந்நிலம் அமைதியாகக் கிடந்து எதிர்கொள்ளும் சவால்கள், சதிகள் பலநூறு.   https://www.ilakku.org/முள்ளிவாய்க்கால்-நிலம்/
    • வணக்கம் பாஞ் அண்ணா  உங்களை இங்கே காண்பதில் மகிழ்ச்சி 
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.