Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளனுக்கு வாழ்த்துகள்

Featured Replies

பாராட்டுகளும், வாழ்த்துகளும்.

எதிர்காலத்தில் என்னாலான பங்களிப்பும் கட்டாயம் இருக்கும்

  • Replies 66
  • Views 4.6k
  • Created
  • Last Reply

 நன்றிகள்  ஏராளன். உங்கள் நல்முயற்சி  சேவை தொடர எனது வாழ்த்துகள். 

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் ஏராளன்.. உதவி ஏதும் தேவைப்படும்போது சொல்லவும்.. ஊரில் வந்து சேர்ந்தாபிறகு யாழ்ப்பாணம் எண்டா நேரிலும் இணைந்துகொள்கிறேன்..

  • கருத்துக்கள உறவுகள்

ஏராளனுக்கும் அவரது குழுவுக்கும் வாழ்த்துக்கள் 👏💐

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் ஏராளன்,👌
தேவையான பொழுது என்னுடைய பங்களிப்பும் நிச்சையம் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

ஏராளமான வாழ்த்துக்கள், ஏராளன் 👍

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்


ஏராளனுக்கும் அவரது புலர் உதவிநிறுவனக் குழாமினர்க்கும் பாராட்டுகள் உரித்தாகுக. இதனால்தான் எமதினத்தினது தொடர்ச்சி நீடிக்கிறதெனலாம். வீழும்போதெல்லாம் உதவிடமுனையும் இளையதலைமுறை. வாழ்க! வளர்க! வெல்க!   

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி எராளன்.என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் உங்களைச்  சேரட்டும்

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவிக்கும் கள உறவுகள் எல்லோருக்கும் மிக்க நன்றி. இந்த வாழ்த்துக்கு உரியவர்கள் கருணை உள்ளம் கொண்ட கொடையாளர்களே. அவர்களும் அவர்களது குடும்பமும் வாழ்க வளத்துடன்.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் ஏராளன் ..உங்கள் பணி சிறக்கட்டும் 
 

  • கருத்துக்கள உறவுகள்

ஏராளன், உங்கள் சேவை தொடர எனது வாழ்த்துக்கள் மட்டுமல்ல எதிர்கால பங்களிப்பும் இருக்கும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள் ஏராளனுக்கும் அவர் சார்ந்த நண்பர்களுக்கும்.
உங்கள் காணொளிகளை பார்த்தேன். இன்றைய காலகட்டத்தில் காணொளிகளும் அவசியம்.
சிறு துளி பெருவெள்ளம் போல் வளர வாழ்த்துக்கள். எனது பங்களிப்பு கையும் நிச்சயம் இணைந்திருக்கும்.

இந்த செய்தியை இணைத்த உடையாருக்கு என் நன்றிகள். 
நான் அவதானித்த அளவில் நீவீர் அமசடக்கு கள்ளன் ஐயா :)
 

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ஏராளன் said:

இப்போது இரண்டு விசேட தேவையுடைய பெண் பிள்ளைகள்(படுக்கையில் இருக்கிறார்கள்) 18,22 வயது. பெற்றோர் நாள் வேலைக்கு போறவர்கள். பிள்ளைகளுக்கு பம்பர்ஸ், மெத்தை  வாங்க உதவும்படி கேட்டார்கள்

இதை படிக்கும்போது தலை சுற்றியது, பிறந்து ஒரு சில மாதங்கள் இருந்த நிலையில் அவர்கள் கல்யாண வயசில் இருக்கிறார்கள் என்று நினைத்தபோது மனசு வலித்தது, விதியை நோவதா எவரை நோவது ?

கள உறுப்பினர் ஒருவர் தாயகத்திலிருந்தபடி பாதிக்கப்பட்டவர்களுக்காக குழு அமைத்து இயங்குவது அரிதான விஷயம், புலத்திலிருந்தபடி பங்களிப்பு  செய்பவர்களின் நம்பிக்கையையும் அதிகரிக்கும்.

ஏராளனும் அவரது குழுவினரும் ஆற்ற முனைகின்ற காரியம் உதவியல்ல, நீங்களும் உங்கள் உதவிக்கு பங்களிக்கின்றவர்களும் அவர்கள் வாழ்நாளில் சேர்க்கபோகின்ற புண்ணியம். வாழ்த்துக்கள்.

தக்க நேரத்தில் என் பங்களிப்பும் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

வாழ்த்துக்கள் ஏராளனுக்கும் அவர் சார்ந்த நண்பர்களுக்கும்.
உங்கள் காணொளிகளை பார்த்தேன். இன்றைய காலகட்டத்தில் காணொளிகளும் அவசியம்.
சிறு துளி பெருவெள்ளம் போல் வளர வாழ்த்துக்கள். எனது பங்களிப்பு கையும் நிச்சயம் இணைந்திருக்கும்.

இந்த செய்தியை இணைத்த உடையாருக்கு என் நன்றிகள். 
நான் அவதானித்த அளவில் நீவீர் அமசடக்கு கள்ளன் ஐயா :)
 

குமாரசாமி அண்ணை நான் யார் என்று தெளிவு படுத்தாமல் உதவி கேட்பது அழகல்ல, நம்பிக்கையும் வராது. அதனால தான் வெளிப்படுத்தவில்லை. வேலை செய்யாது விளம்பரப் படுத்தல் போல ஆகிவிடும். கிராம சேவகர் சொன்னார் பெரிய அளவில போகாமல் முதல்ல சின்னதாக செய்யச் சொன்னார். வெளிநாட்டு காசு என்றால் விசாரணையும் வரலாம், என்னுடைய வேண்டுகோளை ஏற்று நிர்வாகம் செய்ய வந்த நிர்வாகிகளுக்கு கரைச்சல் வரக்கூடாது என்று நினைக்கிறேன்.

6 hours ago, valavan said:

இதை படிக்கும்போது தலை சுற்றியது, பிறந்து ஒரு சில மாதங்கள் இருந்த நிலையில் அவர்கள் கல்யாண வயசில் இருக்கிறார்கள் என்று நினைத்தபோது மனசு வலித்தது, விதியை நோவதா எவரை நோவது ?

கள உறுப்பினர் ஒருவர் தாயகத்திலிருந்தபடி பாதிக்கப்பட்டவர்களுக்காக குழு அமைத்து இயங்குவது அரிதான விஷயம், புலத்திலிருந்தபடி பங்களிப்பு  செய்பவர்களின் நம்பிக்கையையும் அதிகரிக்கும்.

ஏராளனும் அவரது குழுவினரும் ஆற்ற முனைகின்ற காரியம் உதவியல்ல, நீங்களும் உங்கள் உதவிக்கு பங்களிக்கின்றவர்களும் அவர்கள் வாழ்நாளில் சேர்க்கபோகின்ற புண்ணியம். வாழ்த்துக்கள்.

தக்க நேரத்தில் என் பங்களிப்பும் இருக்கும்.

நீண்ட காலமாக இப்பணியை மேற்கொள்ள சிந்தித்து தயங்கி இருந்தேன். கனடா நண்பன் ராஜன், தான் ஒரு வீடு விற்றபோது வந்த இலாபத்தில் ஒரு பகுதியை 6ஆம் மாத ஊரடங்கின் போது வழங்கினவன். விசேட தேவையுடையோர், முதியோர், பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு 5000 ரூபாய் வீதம் வழங்கி இருந்தோம். அப்போது தான் இந்த இரு பெண் பிள்ளைகளின் பெற்றோரை சந்தித்திருந்தேன். பம்பர்ஸ் வாங்க மாதாந்த உதவியைக் கோரியிருந்தனர்.

அமைப்பை தொடங்கிய பின்னர் பிள்ளைகளை பார்க்க நானும் செயலாளர் நண்பனும் நேரில் சென்றோம். அப்போது பிள்ளைகளை தூக்கி வந்து தாய்மார் காட்டினர், பிள்ளையை கொண்டு போய் படுக்க வைத்து விட்டு உரையாடிய போது மெத்தை இருந்தால் உதவியாக இருக்கும் என்று சொன்னார்கள். கடந்த 15ஆம் திகதி மெத்தை வழங்கி விட்டோம். அவ்விரு பிள்ளைகளையும் பார்த்த பின்னர் சரியான ஒன்றைத் தொடங்கியிருக்கிறேன் என்று நம்பிக்கை பிறந்தது.

வாழ்த்திய யாழ் உறவுகளுக்கு நன்றியைத் தெரிவிக்கிறேன்.
உங்கள் வாழ்த்துக்கள் அனைத்தும் கருணை உள்ளம் கொண்ட கொடையாளர்களுக்கு போய்ச் சேரட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

எம்மவரை சுயநிறைவடையச் செய்வதே எம்முன்னால் உள்ளதும் இப்போதைக்கு செய்யக்கூடியதுமான செயல் . இதில் புலம் பெயர்ந்தோரின் பங்களிக்கும் பலமும் புலத்தில் இருப்போரின் அர்ப்பணிப்பும் ஒன்று சேர உண்மையில் அதிசயங்கள் சாத்தியப்படும் .

இந்த செயல்முறையில் ஏராளனின் அர்ப்பணிப்பு மிகுந்த மனநிறைவைத் தருகிறது .

இதற்கு சமாந்தரமாக செயல்திட்டமொன்றில் கடந்த ஒரு வருட காலமாமாக பாடசாலை நண்பர்களுடன் சேர்ந்து ஈடுபாட்டுக்கொண்டிருப்பவன் எனற அடிப்படையில் இந்த செயல்திட்டங்களை என்னால் நன்கு உணர முடிகிறது.


உதாரணமாக  இலங்கை ரூபா 70 ,௦௦௦ இல் 50 கோழிக்குஞ்சுகள் + கூடு + 4-5  மாதங்களுக்கு பராமரிப்பு என்று ஆரம்பித்துக் கொடுத்தால் , 4-5  மாதங்களின் பின்னர் 80% வினைத்திறனில் ( அதாவது ஒரு நாளைக்கு 4௦ முட்டை என்ற அடிப்படையில் ) ஒரு நாளுக்கு 8,௦௦௦ ரூபாவும் ஒரு மாதத்திற்கு 25,000 ரூபாவும் வரும்படியாகக் கிடைக்கும் . பராமரிப்புச் செலவு மாதம் 5 தொடக்கம் 8 ஆயிரம் வரை வர , நிகர வரவாக 15 ஆயிரத்திற்கு மேல் வரும் .


வறுமைக்கு கோட்டிற்கு  மிக கீழே இருக்கும் 25 குடும்பங்களிற்கு இந்த செயல்திட்டத்தை கடந்த சில மாதங்களில் அமுல் படுத்தியிருக்கிறோம் .
பாடசாலை வகுப்பு நண்பன் ஒருவன் ஊரில் இருந்து செயல்பாடுகளை நிர்வகித்து வருவது இதில் உள்ள மிகவும் முக்கியமான விடயம் அன்பர் ஏராளன் செய்வது போல . 

வாழ்த்துக்கள் ஏராளன்.. 

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் முயற்சி நிச்சயமாக பாராட்டுதலுக்குரியது. வாழ்த்துக்களும் நன்றிகளும். 

மேன் மேலும் உங்கள் சேவை தொடர வேண்டும். வாழ்க வளமுடன்.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள் ஏராளன்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, சாமானியன் said:


உதாரணமாக  இலங்கை ரூபா 70 ,௦௦௦ இல் 50 கோழிக்குஞ்சுகள் + கூடு + 4-5  மாதங்களுக்கு பராமரிப்பு என்று ஆரம்பித்துக் கொடுத்தால் , 4-5  மாதங்களின் பின்னர் 80% வினைத்திறனில் ( அதாவது ஒரு நாளைக்கு 4௦ முட்டை என்ற அடிப்படையில் ) ஒரு நாளுக்கு 8,௦௦௦ ரூபாவும் ஒரு மாதத்திற்கு 25,000 ரூபாவும் வரும்படியாகக் கிடைக்கும் . பராமரிப்புச் செலவு மாதம் 5 தொடக்கம் 8 ஆயிரம் வரை வர , நிகர வரவாக 15 ஆயிரத்திற்கு மேல் வரும் .

 

ஒரு முட்டை 200 ரூபாயா ??? எனக்கு இந்தக் கணக்குப் புரியவில்லையே சாமானியன்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஒரு முட்டை 200 ரூபாயா ??? எனக்கு இந்தக் கணக்குப் புரியவில்லையே சாமானியன்.

அது ஒரு பூஜ்யம் தவறுதலாக கூடிவிட்டது போலிருக்கிறது. ஒரு முட்டை 20 ரூபா, ஒருநாள் வருமானம் 800 ரூபா, மாதவருமானம் கிட்டத்தட்ட 25,000 ரூபா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஒரு முட்டை 200 ரூபாயா ??? எனக்கு இந்தக் கணக்குப் புரியவில்லையே சாமானியன்.

உதுக்குத்தான் விசயம் தெரிஞ்ச ஆக்கள் வேணுமெண்டுறது :grin:

  • கருத்துக்கள உறவுகள்

ஏராளனுக்கு உதவியாக இருந்து செயல்பட்ட யாழ்கள உறவுகள் @உடையார் @கோஷான் வேறு யாரும் பின்னணியில் இருந்திருந்தால் அவர்களுக்கும் பாராட்டுக்கள்.

கடவுள் எங்கே?எங்கே?எங்கே? என்று அலைபவர்களுக்கு இப்படியான செயல்கள் ஒரு முன் உதாரணம்.

உங்களது அளப்பரிய சேவைக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும் ஏராளன்.

நாமும் எய்டனின் பெயரில் non profit organization ஆரம்பித்து அங்கு புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளோருக்கு ( வெளிநாட்டு உதவி இல்லாதவர்களுக்கு) உதவி செய்ய ஆரம்பித்துள்ளோம்.  முதலில் பண உதவியும் பின்னர் அவர்களுக்கு சிறு தொழில் வாய்ப்பை ஆரம்பித்து வைக்கவும் உதவுவது தான் எமது தற்போதைய திட்டம். வைத்தியர்கள் மூலம் உறுதி செய்த பின்பே உதவி செய்கின்றோம். எமது தொண்டு நிறுவனம் ஒரளவிற்கு வளர்ச்சியடைந்த பின்பு நிச்சயம் உங்களை தொடர்பு கொண்டு உங்களூடாகவும் உதவிகள் செய்வோம்.

மீண்டும் உங்களுக்கும் உங்களுடன் இணைந்து செயல்படுவோருக்கும் மிக்க நன்றிகள் 🙏

 

Edited by தமிழினி

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, தமிழினி said:

உங்களது அளப்பரிய சேவைக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும் ஏராளன்.

நாமும் எய்டனின் பெயரில் non profit organization ஆரம்பித்து அங்கு புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளோருக்கு ( வெளிநாட்டு உதவி இல்லாதவர்களுக்கு) உதவி செய்ய ஆரம்பித்துள்ளோம்.  முதலில் பண உதவியும் பின்னர் அவர்களுக்கு சிறு தொழில் வாய்ப்பை ஆரம்பித்து வைக்கவும் உதவுவது தான் எமது தற்போதைய திட்டம். வைத்தியர்கள் மூலம் உறுதி செய்த பின்பே உதவி செய்கின்றோம். எமது தொண்டு நிறுவனம் ஒரளவிற்கு வளர்ச்சியடைந்த பின்பு நிச்சயம் உங்களை தொடர்பு கொண்டு உங்களூடாகவும் உதவிகள் செய்வோம்.

மீண்டும் உங்களுக்கும் உங்களுடன் இணைந்து செயல்படுவோருக்கும் மிக்க நன்றிகள் 🙏

 

நல்ல விடயம் அக்கா. தெல்லிப்பளை புற்றுநோய் சிகிச்சை வைத்தியசாலைக்கு செல்வோரில் சிலராவது பொருளாதார ரீதியில் பின்தங்கி உள்ளனர். மருந்துகளும் சிகிச்சையும் இலவசம் என்றாலும் மேலதிகமாக ஏற்படும் சிறு செலவுகளை மேற்கொள்ள முடியாத நிலையில் உள்ளனர். அவர்களைப் போன்றோருக்கு உங்கள் உதவி மிகத் தேவையானது. 
வாழ்த்துக்களுக்கு நன்றி உறவுகளே.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் ஏராளன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.