Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உதவி: 3 கிழமைகளுக்குள் தன் பெற்றோரை ஒவ்வொருவராக இழந்த என் நண்பனின் 6 வயது மகன்

Featured Replies

3 கிழமைகளுக்குள் தன் பெற்றோரை ஒவ்வொருவராக  இழந்த என் நண்பனின் 6 வயது மகன்
----

என் நண்பனின் ஒரு ஆறுவயது சின்னஞ் சிறு மகன் மூன்று கிழமைகளுக்குள் முதலில் தன் அம்மாவையும் பின் தன் அப்பாவையும் இழந்து விட்டான்.

மூன்று வாரங்களுக்கு முன், நான் கற்ற யாழ் பரியோவான் கல்லூரி வாட்ஸ் அப் குழுமத்தில் இருந்து எம்முடன் படித்த உற்ற நண்பன் தர்மா என்று அழைக்கபடும் தர்மேந்திராவின் மனைவி சுவாச பிரச்சனை காரணமாக இறந்து விட்டார் எனும் செய்தி எம்மை வந்தடைந்தது. அந்த செய்தியை அறிந்ததில் இருந்து என் நண்பனுக்காக நாம் கவலைப்படுவதை விட அதிகமாக அவனது மகனுக்காக கவலைப்பட்டோம். சிறு வயதில் தாயை இழப்பது என்பது கொடுமை. என் நண்பனும் தன் மகன் தாயில்லாமல் கஷ்டப்பட போகின்றான் என்பதை இட்டு மிகவும் கவலைப்பட்டுக் கொண்டு இருந்தான்.


செத்த வீடு எல்லாம் முடிய, அவனுடன் உரையாடும் போது  அவன் சொன்ன விடயம், தன் வாழ்வில் மிகவும் வலி தந்த 40 நிமிடங்கள் என்பது தன் மகனுக்கு தாயின் இறப்பை பற்றி விளங்கப்படுத்தியது தான் என்று சொல்லியிருந்தான்.

மூன்று வாரங்கள் கழிந்தன.

நேற்று நண்பன் சபேஷ் (யாழ் கள உறுப்பினர்) இடம் இருந்து வட்ஸ் அப்பில் அந்த கொடிய செய்தி அலறிக் கொண்டு வந்தது. தர்மா இறந்து விடான் எனும் செய்தி அது. என் நண்பன் தர்மா யாழ் கள  கனடிய உறவு சபேஷ் இனதும் நெருங்கிய நண்பன்.

ஆம், என் நண்பன் தர்மா நேற்று மாரடைப்பு காரணமாக திடீர் என்று இறந்து விட்டான். அம்புலன்சில் பரா மெடிக்ஸ் வரும் முன்னரே அவன் உயிர் அவனை விட்டு பிரிந்து விட்டது.

DM.jpg

அவனது 6 வயது மகன் மூன்றே மூன்று வாரங்களுக்குள் தன் தாயையும் தந்தையையும் இழந்து தவித்து நிற்கின்றான்.

சின்னஞ் சிறு வயதில் இருவரையும் மூன்று கிழமை இடவெளியில் இழப்பது என்பது ஒரு ஆறு வயது குழந்தைக்கு எத்தனை பெரிய இழப்பு.

கட்டிப் பிடித்துக் கொண்டு படுத்த அம்மாவும் இல்லை. அரவணைத்து தோள் தந்த அப்பாவும் இனி இல்லை.

காலம் அவன் மீது கவிழ்ந்து  கிடக்கின்றது.

நேற்றில் இருந்து இந்த கணம் வரை நெஞ்சை கூராக பிளந்த வேதனையுடன் நாம் நேரத்தை கடத்திக் கொண்டு இருக்கின்றோம். இந்த வேளையில் எம்மால் செய்ய கூடிய ஒரு பிரயோசனமான விடயம், அச் சிறுவனுக்காக ஒரு சிறு தொகையை திரட்டுவது மட்டுமே. அவ்வாறு திரட்டி அவனது உட்னடி எதிர்காலத்துக்கு உதவும் வண்ணம் அதை பயன்படுத்த கூடியவாறு செய்வதே.

அம்மா அப்பாவை அவனிடத்தில் இருந்து பிரித்து அவனை காலம் எம்மிடம் ஒப்படைத்து இருக்கு. வாரி அணைத்து ஆதரவு கொடுக்க நாம் தயராகின்றோம்.

 

உதவி செய்ய விரும்புகின்றவர்களுக்கு...:

https://www.gofundme.com/fundraisng-for-sheashan-dharmaendr

  • கருத்துக்கள உறவுகள்

பதிவுக்கு நன்றி நிழலி. என் நண்பனின் முகம் கண் முன் வந்து வந்து போகிறது.  மனசை மாற்றி எதாவது செய்தலும் அவனது நினைவுகளும், அவனது சிறு பாலகனின் ஏக்கம், ஏமாற்றம், எப்பிடி தாங்குவானோ என்ற என் ஏக்கமும் மனசை பிளிகிறது.  தாயை இழந்த போதே அந்த பிள்ளை எ‌வ்வளவு அங்கலாய்ப்புடன் இருந்தான் என்பதை நேரில் பார்த்தேன். ???

 

Edited by Sabesh

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொடுமையான செய்தி. 

ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வயதில் அதுவும் இத்தனை சிறிய இடைவெளியில் இச் சிறுவனுக்கு இப்படியோர் இழப்பு நிகழ்ந்திருக்கக் கூடாது. மிகவும் துயரமான நிகழ்வு. இப் பாலகனுக்கு அன்பையும் அரவணைப்பையும் கொடுக்கக் கூடிய உறவுகள் யாரும் இங்கில்லையா?  அணைத்து ஆதரவு கொடுத்து அச் சிறுவனை இத் துயரிலிருந்து வெளியே கொண்டு வருவது அவசியம்..உங்கள் நண்பனின் ஆன்மசாந்திக்காகவும் இப் பாலகனின் மன அமைதிக்காகவும் இறைவனைப் பிராத்திக்கின்றோம்.

  • கருத்துக்கள உறவுகள்
 

ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கேட்கவே மனதுக்கு மிகவும் கடினமாக உள்ளது!

சில நிகழ்வுகள் ஏன் தான் நிகழ்கின்றனவோ....என்ற கேள்வி தான் மனதில் மிச்சமாக மிஞ்சியிருக்கின்றது!

 

 

  • கருத்துக்கள உறவுகள்

உலகம் புரியாத  சிறு வயதிலேயே.... பெற்றோரை இழந்து இருப்பது மிகவும் பரிதாபகரமானது.
ஆழ்ந்த அனுதாபங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் கவலையான செய்தி. பெற்றோரை குறுகிய இடைவெளியில் மிகவும் சிறிய வயதில் இழப்பது கொடுமையானது. இப் பிஞ்சுப் பாலகனை துயரத்தில் இருந்து மீட்க உறவினர்களும் நண்பர்களும்தான் தம்மால் இயன்றதைச் செய்யவேண்டும்.

1 மாதத்திற்குள் பெற்றோர் இருவரையும் இழப்பது என்னது ....நினைத்து பார்க்க முடியவில்லை :(
 உறவினர்கள் அந்த பிஞ்சு குழந்தைக்கு முடிந்தளவு அன்பையும் அரவணைப்பை கொடுத்து வளர்ப்பார்க்கள் என்று  நம்புகின்றோம்.

இவ்வுலகை விட்டு இளம் வயதிலேயே பிரிந்து போன இருவரது உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்! :(

  • தொடங்கியவர்

எத்தனையோ சாவுகளை கண்டும், கடந்தும் வந்துள்ளேன். அப்பாவில் இருந்து, அப்பு, மாமா,மாமி, நண்பர்கள், தோழிகள் என்று. ஆனால் இவ் நண்பனின் மரணம் மட்டும் மிகவும் வலிக்கின்றது. இந்த வலி அவனது மகனை ஒட்டி வருகின்றது என நினைக்கின்றேன்.


24 மணித்தியாலங்களுக்குள் எமக்கு கிடைக்கும் பேராதரவை காண வியப்பாகவும் மகிழ்வாகவும் இருக்கின்றது. எம் சமூக மக்கள் மட்டுமல்ல பெயர் ஊர் இனம் மொழி என்று எந்த பாகுபாடும் இல்லாமல் உலகின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் உதவிக்கொண்டு இருக்கின்றார்கள்.

இதுவரைக்கும் 48,000 டொலர்ஸ் வரை சேர்த்துள்ளோம். ஒரு இலட்சம் சேர்க்க வேண்டும் என்பது தான் எம் இலக்கு. சேர்த்த பின் ஒரு trusty அமைத்து அவன் மகனிற்கு படிப்படியாக உதவ திட்டமிட்டுள்ளோம்.

கவலையான செய்தி.

ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.....!

என்ன சொல்வதென்று தெரியவில்லை....!

  • கருத்துக்கள உறவுகள்

கொடுமையான செய்தி. 

ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கொடிதிலும் கொடிது

ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.யாருக்கும் இப்படி நிகழக்கூடாது என இறைவனை வேண்டுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

 ஆறுவயது சிறுவனை எண்ணிக் கவலையாக உள்ளது . உறவினர் அன்பும் ஆதரவும் கொடுத்து  வளர்ப்பார்களென எண்ணுகிறேன். ஆழ்ந்த இரங்கல்கள். 

ஆழ்ந்த அனுதாபங்கள்.....!

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பாதுகாவலர்கள் அந்த சிறுவனுக்கு கிடைக்கட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இறந்தவர்களது ஆத்மா சாந்தியடையட்டும்...கணவர்,மனைவி மேல் மிகுந்த பாசம் வைத்திருக்கிறார் ...அச் சிறுவன் இத் துயரில் இருந்து சீக்கிரம் மீண்டு வர வேண்டும்....ஒரு சின்ன ஆறுதல் இந்த சிறுவன் புலத்தில் இருக்கிறான்...எத்தனையோ குழந்தைகள் போரில் கண் முன்னே பெற்றோரை இழந்து அனாதரவாய் நிற்கிறார்கள் 


 

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் வேதனையாகவுள்ளது. வாழ்க்கையில் ஏன் சில விடயங்கள் இப்படி ந‌டக்கின்றது?  நல்லதொரு வாழக்கையை சிறுவனுக்கு இறைவன் அமைத்துக்கொடுப்பார்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்
இவரைப்பற்றி  ஒரு செய்தி வாசித்தபோது மிகவும் கவலையாக இருந்தது
மிகவும் சிறந்த ஒரு பன்முக விளையாட்டுவீரன்.
கனடாவில் பல தமிழ் விளையாட்டுக்கழங்களின் வளர்ச்சியில் இவரது பங்கு மிகவும் அளப்பரியதாக இருந்திருக்கின்றது.
இவரது குழந்தைக்கான எதிர்காலம் கடவுளின் கிருபையால் சிறப்பாக அமைய வேண்டுகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

கொடுமையான செய்தி. 

ஆழ்ந்த அனுதாபங்கள்.

ஆழ்ந்த அனுதாபங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.