Jump to content

புலிகளை அழித்த எமக்கு கொரானோ ஒரு சவால் அல்ல.!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளை அழித்த எமக்கு கொரோனா சவால் அல்ல - ஹெகலிய.

hehaliya.jpg

“பயங்கரவாதத்தின் மூலம் நாடு முழுவதையும் நிர்மூலமாக்கத் தயாரான தமிழீழ விடுதலைப் புலிகளைக் கூண்டோடு இல்லாதொழித்த எமக்குக் கொரோனா வைரஸ் சவால் அல்ல. அது இங்கு ஆட்கொண்டால் முற்றாக இல்லாதொழிப்போம்.”

– இப்படிக் கூறியுள்ளார் மஹிந்த அணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல.

‘கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆலோசனைகளை அரசு உரிய முறையில் பின்பற்றாத காரணத்தாலேயே நாட்டு மக்கள் அந்த  வைரஸ் தொற்றுக்கு உள்ளாகும் ஆபத்தான நிலைமை ஏற்பட்டுள்ளது’ என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

“கொரோனா வைரஸ் பரவுவதற்கும் அரசுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. இந்த நோய் நாட்டைப் பார்த்தோ அல்லது இனத்தைப் பார்த்தோ அல்லது மொழியைப் பார்த்தோ அல்லது அரசைப் பார்த்தோ வருவதில்லை.

இந்த வைரஸ் நோய் உலகெங்கும் பரவி வருகின்றது. இலங்கைப் பிரஜை ஒருவர் மட்டுமே இங்கு கொரோனா நோயால் அடையாளம் காணப்பட்டுள்ளார். ஏனையவர்களுக்கு இந்த நோய் பரவாமல் தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை அரசு தலைமையிலான சுகாதாரக் குழுவினர் எடுத்துள்ளனர்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆலோசனைகளை அரசு உரிய முறையில் பின்பற்றிய காரணத்தால்தான் கொரோனா வைரஸ் இங்கு ஆட்கொள்ளவில்லை. தற்போது இங்கு ஒருவர் மட்டுமே இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் விரைவில் சுகமடைவார் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது. ஏற்கனவே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த சீனப் பெண்ணைக் குணமாக்கி அவரை நாம் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளோம்.

எனவே, இந்த வைரஸ் தொடர்பில் நாட்டு மக்கள் அச்சமடையத் தேவையில்லை” – என்று கூறியுள்ளார்.

http://www.vanakkamlondon.com/hehaliya-12-03-2020/

டிஸ்கி

article-2642994-1E4EDA1D00000578-571_634

Link to comment
Share on other sites

56 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

கொரோனா வைரஸ் பரவுவதற்கும் அரசுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. இந்த நோய் நாட்டைப் பார்த்தோ அல்லது இனத்தைப் பார்த்தோ அல்லது மொழியைப் பார்த்தோ அல்லது அரசைப் பார்த்தோ வருவதில்லை.

கொரோனா மனிதர்களிடையே வேற்றுமை பார்த்து அழிப்பதில்லை. நாங்கள் கொரோனாவைவிடக் கொடியவர்கள். இனம் மொழி பார்த்துத்தான் அழிப்போம், அழித்தும் உள்ளோம்.- முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கெகலிய ரம்புக்வெல.

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

“பயங்கரவாதத்தின் மூலம் நாடு முழுவதையும் நிர்மூலமாக்கத் தயாரான தமிழீழ விடுதலைப் புலிகளைக் கூண்டோடு இல்லாதொழித்த எமக்குக் கொரோனா வைரஸ் சவால் அல்ல. அது இங்கு ஆட்கொண்டால் முற்றாக இல்லாதொழிப்போம்.”

இந்த வாய்கொழுப்புத்தான் கூடாது என்கிறது புலியை அழித்த  உங்களால் இறையாண்மையை தக்கவைக்க முடியலை புலிஅழிப்பு என்பதன் மூலமாய் தென்பகுதிக்குள்ளால் சைனா காரன் வருவதை தடுக்க முடியலை தென்பகுதியில் அநேக ஹொட்டல்களில் ஆங்கிலமும்  சைனிஸிலும்  மட்டுமே அறிவிப்புகள்  கிடைக்கும் அவலம் உங்கள் சிங்களம் எங்கு போச்சு காணமல் போய் விட்டது இப்படி வெட்டிக்கதை விட்டு நடக்க வேண்டிய  கதையை பாருங்க .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உதைச் சொல்லி சொல்லி மக்களை முட்டாளாக்கி சுகம் கண்டு பழகிப்போச்சு. மாற்றி பேசவோ, சிந்திக்கவோ  முடியவில்லை இவர்களால்.  இதுவே மாறி இவர்களை தாக்கும் நாள் வரும்வரை இந்தப் பல்லவி மாறாது  தொடர்ந்து கொண்டேயிருக்கும் நாடு வாங்கிய கடனை அடைக்க முடியாமல் திண்டாடுது வீரக்கதைகளுக்கு குறையில்லை.       

Link to comment
Share on other sites

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல.:

யுத்த காலத்தில் முற்றாக பாடசாலைகளை மூடிய ஞாபகம் உண்டா?

பின் குறிப்பு : வழமை போல உலக நாடுகளிடம் உதவிகளை வேண்டிய எதையும் வெல்லத்தான் தெரியும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ampanai said:

பின் குறிப்பு : வழமை போல உலக நாடுகளிடம் உதவிகளை வேண்டிய எதையும் வெல்லத்தான் தெரியும். 

இனி ஒரு யுத்தம் எங்கடை வாழ்வில் வரப்போவதில்லை உங்கடை வெட்டி பேச்சுகளால் வரும்காலத்தில் ஒருத்தன் உருவாகினால்  பிரபாகரன் எனும் நேர்மையான மனிதருடன் உங்கள் இனம் சண்டை போட்டது போல் யுத்தம் நடக்காது என்பது மாத்திரம் உறுதி .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பெருமாள் said:

இனி ஒரு யுத்தம் எங்கடை வாழ்வில் வரப்போவதில்லை உங்கடை வெட்டி பேச்சுகளால் வரும்காலத்தில் ஒருத்தன் உருவாகினால்  பிரபாகரன் எனும் நேர்மையான மனிதருடன் உங்கள் இனம் சண்டை போட்டது போல் யுத்தம் நடக்காது என்பது மாத்திரம் உறுதி .

அதை இந்தியாதான் முடிவு செய்ய வேண்டும். போகிற போக்கைப் பார்த்தால் இந்தியனுக்கும் சீனனுக்கும் கச்சை தீவில் சண்டை தொடங்கினாலும் சொல்வதற்கில்லை.

ஆனால் அழிவு தமிழனுக்குத்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரானாவுக்கு எதிராக சொறீலங்கா இராணுவத்தை பாவிப்பதும்.. தமிழர் தாயகத்தில் கொரானோ தடுப்பு முகாம் அமைப்பதும்... சிங்களத்தின் கோழை மனப்பான்மையிலும்.. பகமை தான் அதிகம் வெளிப்படுகிறது. 

சுனாமியின் போது பன்னாட்டு இராணுவங்களின் நேரடி உதவியை சொறீலங்கா பெற்ற போதும்.. புலிகள் அதனை நிராகரித்து.. தங்களின் சொந்த முயற்சியால்.. மீட்புக்களை செய்து முடித்தார்கள்.

யுத்த காலத்தில் தமிழர் தாயகம் எயிட்ஸ் நோயற்ற பிரதேசமாக இருந்தது  வெளிநாட்டில் இருந்து வந்த ஒரு சிலர் காவி வந்ததை தவிர.  புலிகள் எயிட்ஸ் நோய்க்கெதிரான விழிப்புணர்வை பாடசாலை மட்டத்தில் ஆரம்பித்து சமூகத்தின் எல்லா தளங்களிலும் கொண்டு சென்றனர். ஆனால்.. சிங்கள ஆக்கிரமிப்பின் பின்.. இன்று தமிழர் தாயகத்தில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையான எயிட்ஸ் நோயாளிகள் உள்ளனர். 

சொறீலங்காவில்.. கொரானா தொற்று மோசமானால்.. தமிழர் தாயகத்தை சிங்களம் மாற்றான் தாய் மனப்பான்மையோடு தான் பார்க்கும் என்பதை ஹெகலியவின் இந்த அர்த்தமற்ற முட்டாள் தனமான கொக்கரிப்பு உறுதி செய்கிறது. 

எனவே தமிழர் தாயகம் கொரானாவுக்கு எதிரான சரியான விழிப்புணர்வையும் அதன் பரவலை தொற்றை தடுக்கும் ஆற்றலையும் வளர்த்துக் கொள்வதோடு.. தொற்றுக்கண்டோர் விரைந்து குணமடையும் வகைக்கு சரியான மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படுவது அவசியம். 

Link to comment
Share on other sites

10 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

புலிகளை அழித்த எமக்கு கொரோனா சவால் அல்ல - ஹெகலிய.

மல்டிபரல் வைத்து ஏர்போர்ட், துறைமுகங்களை கண்மூடித்தனமா தாக்கினா வைரஸ் வராது என்டு கண்டுபிடிச்சிருக்கிறார் சிங்கள அறிவாளி.

சொறிலங்கன் என்டா சும்மாவா?

Link to comment
Share on other sites

Quote

புலிகளை அழித்த எமக்கு கொரோனா சவால் அல்ல - ஹெகலிய.

மீண்டும் ஒரு முள்ளிவாய்கால்..??
கொரோனா பாதித்தவர்கள், தாக்கியதாக சந்தேகம் உள்ளவர்கள் எல்லாரையும் மட்டக்களப்பில் தனிமைப்படுத்தி மனிதாபிமான படுகொலை செய்து புதைத்துவிடத்திட்டமா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, பெருமாள் said:

வெட்டிக்கதை விட்டு நடக்க வேண்டிய  கதையை பாருங்க .

B1-AAC4-F5-3-A16-4341-AACD-AC46-EFD7-EC5

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

#உண்மைதான் ஆனால்
#37வருசம் வேணும்
#07ஜனதிபதிகள் வேணும்
#100க்குமேற்பட்ட புதிய பதிய இரானுவ தளபதிகள் வேணும்
#27வெளிநாடுகள் முண்டுகொடுக்க வேணும்
#பலதுரோகிகள் வேணும்
#லட்சக் கணக்கான மக்கள் கொல்லப்பட வேண்டும்.
#தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் பாவிக்க வேண்டு.
#அடி தாங்க முடியாம மண்டியிட்டு பல சுற்று சமாதான பேச்சுக்கு #உலகம் சுற்ற வேண்டும். ஆனால் பேச்சுவார்த்தையில் சொன்னதை எல்லாம் மீறவேண்டும் பலரை விலைபேசவேண்டும்.
#இவற்றை ஒழுங்குபடுத்துவதற்கிடையில்
#இலங்கையை கொரோனா நக்கிபோடும்.

நன்றி முக புத்தகம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, nedukkalapoovan said:

கொரானாவுக்கு எதிராக சொறீலங்கா இராணுவத்தை பாவிப்பதும்.. தமிழர் தாயகத்தில் கொரானோ தடுப்பு முகாம் அமைப்பதும்... சிங்களத்தின் கோழை மனப்பான்மையிலும்.. பகமை தான் அதிகம் வெளிப்படுகிறது. 

சுனாமியின் போது பன்னாட்டு இராணுவங்களின் நேரடி உதவியை சொறீலங்கா பெற்ற போதும்.. புலிகள் அதனை நிராகரித்து.. தங்களின் சொந்த முயற்சியால்.. மீட்புக்களை செய்து முடித்தார்கள்.

யுத்த காலத்தில் தமிழர் தாயகம் எயிட்ஸ் நோயற்ற பிரதேசமாக இருந்தது  வெளிநாட்டில் இருந்து வந்த ஒரு சிலர் காவி வந்ததை தவிர.  புலிகள் எயிட்ஸ் நோய்க்கெதிரான விழிப்புணர்வை பாடசாலை மட்டத்தில் ஆரம்பித்து சமூகத்தின் எல்லா தளங்களிலும் கொண்டு சென்றனர். ஆனால்.. சிங்கள ஆக்கிரமிப்பின் பின்.. இன்று தமிழர் தாயகத்தில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையான எயிட்ஸ் நோயாளிகள் உள்ளனர். 

சொறீலங்காவில்.. கொரானா தொற்று மோசமானால்.. தமிழர் தாயகத்தை சிங்களம் மாற்றான் தாய் மனப்பான்மையோடு தான் பார்க்கும் என்பதை ஹெகலியவின் இந்த அர்த்தமற்ற முட்டாள் தனமான கொக்கரிப்பு உறுதி செய்கிறது. 

எனவே தமிழர் தாயகம் கொரானாவுக்கு எதிரான சரியான விழிப்புணர்வையும் அதன் பரவலை தொற்றை தடுக்கும் ஆற்றலையும் வளர்த்துக் கொள்வதோடு.. தொற்றுக்கண்டோர் விரைந்து குணமடையும் வகைக்கு சரியான மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படுவது அவசியம். 

தமிழர் பகுதியில் தமிழருக்கு வருத்தம் வந்தால், சிங்களப் பகுதியில் கொண்டு போய் வைத்தியம் செய்ய வேண்டும் என்று சொல்கிறீர்களா?

Link to comment
Share on other sites

நான் நினைகிறேன் ஹெகலிய ரம்புகவெல வீட்டில் பொண்டாட்டிட்ட அடி வாங்கிலாலும்   புலிகளை அழித்த எனக்கு நீ ஒன்றும் பெரிய இவா இல்லை என்று தான் சொல்லுவார் என்று. 

Link to comment
Share on other sites

18 hours ago, Ahasthiyan said:

#உண்மைதான் ஆனால்
#37வருசம் வேணும்
#07ஜனதிபதிகள் வேணும்
#100க்குமேற்பட்ட புதிய பதிய இரானுவ தளபதிகள் வேணும்
#27வெளிநாடுகள் முண்டுகொடுக்க வேணும்
#பலதுரோகிகள் வேணும்
#லட்சக் கணக்கான மக்கள் கொல்லப்பட வேண்டும்.
#தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் பாவிக்க வேண்டு.
#அடி தாங்க முடியாம மண்டியிட்டு பல சுற்று சமாதான பேச்சுக்கு #உலகம் சுற்ற வேண்டும். ஆனால் பேச்சுவார்த்தையில் சொன்னதை எல்லாம் மீறவேண்டும் பலரை விலைபேசவேண்டும்.
#இவற்றை ஒழுங்குபடுத்துவதற்கிடையில்
#இலங்கையை கொரோனா நக்கிபோடும்.

நன்றி முக புத்தகம் 

அருமையான பதிவு!

On 3/13/2020 at 11:10 AM, Kavi arunasalam said:

B1-AAC4-F5-3-A16-4341-AACD-AC46-EFD7-EC5

அருமையான பதிவு!

Link to comment
Share on other sites

On 3/13/2020 at 4:19 AM, Kapithan said:

அதை இந்தியாதான் முடிவு செய்ய வேண்டும். போகிற போக்கைப் பார்த்தால் இந்தியனுக்கும் சீனனுக்கும் கச்சை தீவில் சண்டை தொடங்கினாலும் சொல்வதற்கில்லை.

ஆனால் அழிவு தமிழனுக்குத்தான்.

இந்தியனுக்கும், சீனனுக்கும் நிச்சயமாக கச்சத்தீவில் சண்டை தொடங்காது। அது முழுவது இலங்கை ராணுவத்தின் முழு கட்டுப்பாடில் இருக்கிறது।

இப்போது இலங்கையில் சீனாவுக்கும் , இந்தியாவுக்கும் பனிப்போர் நடந்துகொண்டிருக்கிறது। நிச்சயமாக ஒரு நாளைக்கு ஆயுதப்போர் இலங்கையில் தொடங்கும்।

இருந்தாலும் ரம்புக்வெல்ல சொல்வது போல போரை முடித்தவர்கள் இவர்கள் இல்லை। இந்தியாவே தொடக்கி , இந்தியாவே முடித்து வைத்தது। எல்லாம் தாங்கள் சுயநலத்துக்காகத்தான்।

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பின் பக்கம் அடிச்சா பல்லு போனதாம். அத மாதி ஈக்கு வா ஒங்கட கத. ஒங்களவலால் மாதி ஜாதி மோட சூன்ங்கள் ஈக்க‌ வரைக்கும் நாடு நகீஸ்லவா ஈக்கும்.

Link to comment
Share on other sites

2 hours ago, Vankalayan said:

 

இப்போது இலங்கையில் சீனாவுக்கும் , இந்தியாவுக்கும் பனிப்போர் நடந்துகொண்டிருக்கிறது। நிச்சயமாக ஒரு நாளைக்கு ஆயுதப்போர் இலங்கையில் தொடங்கும்।

 

சீனா காரணுடன் இந்தியா போருக்கு போகாது; சீனாவின் இராணுவ பலமும் அர்ப்பணிப்பும் எங்கே.....???? ஊழலில் மூழ்கி போய் இருக்கும் இந்தியா எங்கே.... அமெரிக்காவால் கூட சீனாவுடன் போட்டி போட முடியாது.

அதை விட இந்தியாகாரன் சீனாவின் காலில் விழுந்து பல காலம்; இந்தியாவின் கைத் தொலைபேசி சந்தை முழுமையாக சீனாவின் oppo,vivo,redmi,one plus& huwei  போன்ற நிறுவனங்களின் கையில்; அதே போல் பல metro rail சேவைகளுக்கு ரயில்களௌ உற்பத்தி செய்வதும் சீனா தான்.

 

எங்கட புலம்பெயர் ஈழ வாதிகள் மட்டும் தான் சீன இந்திய போர் நடக்கும் போது தமிழ் ஈழம் பிடிக்கலாம் என்று கனவு கண்டு கொண்டு இருக்கீனம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தியற்றவர்கள்...எங்கு என்ன கதைப்பதென்பதே தெரியாத முட்டாள் பேச்சாளர்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/12/2020 at 4:02 PM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

புலிகளை அழித்த எமக்கு கொரோனா சவால் அல்ல - ஹெகலிய.

அவுஸ்ரேலியாவிலை தண்ணியடிச்சுப்போட்டு மண்டையடிபட விழுந்தது இப்பதான் ஒழுங்காய் வேலை செய்யுது..😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

அவுஸ்ரேலியாவிலை தண்ணியடிச்சுப்போட்டு மண்டையடிபட விழுந்தது

நஷ்ட ஈடும் பெற்றதாம் என்று சொல்கிறார்கள்.

அப்பிடித்தான் கோரோனோவும் என்று நினைச்சு கதை விடுகிறார். அடிபட்டவன் ஏழை சிங்களவனும், வெளிநாட்டுக்காரனும். இவர் வெற்றிப்பேச்சு பேசுறார். இழப்பும், வலியும் தெரிந்த பொறுப்புள்ள அரசியல்வாதி இப்படிப் பொறுப்பற்ற விதமாய்ப் பேசமாட்டார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/12/2020 at 11:02 AM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

புலிகளை அழித்த எமக்கு கொரோனா சவால் அல்ல - ஹெகலிய.

புலிகளை அழிக்க உதவி செய்த நாடுகளால்கூட கொரோனா சவாலை எதிர்கொள்ள முடியவில்லை, அவர்களிடம் உதவிபெற்ற நீங்கள் எப்படி சவாலை எதிர்கொள்வீர்கள்.

அதுக்கும், அவர்களிடம்தானே போய் நிற்கணும், அவர்களே கிடந்து அல்லாடுகிறார்கள்.

புலிகள் எதிரியை கண்டு ஓடி ஒளியாத  கண்ணுக்கு தெரிந்த எதிரி என்பதனால்  கடன் வாங்கின ஆயுதங்களால் அழித்தீர்கள் ,

கொரோனா என்ன மணி அடிச்சுக்கொண்டா உங்களை தேடிவரும் கூமுட்டை ரம்புக்கல?

 

யார் செய்த புண்ணியமோ வறியநாடுகளை கொரோனா இன்னும் பாரிய அளவில் தாக்கவில்லை. அப்படியொரு நிலமை வந்தால் அவர்கள் கொண்டிருக்கும் தொழில்நுட்ப பொருளாதார வசதிகளுக்கு பல லட்சம் உயிர்களை பலி வாங்கிய பின்னரே அது ஓய்வெடுக்கும். அந்த ஒரு நிலமை வராமல் தடுத்த தெய்வங்களில் ஒருவரான  ரம்புகல வணங்கும் புத்தருக்கும் நான் நன்றி சொல்லுவேன்.

Link to comment
Share on other sites

உந்த ஹெகெலியவை ஏதாவது ஒரு தடுப்பு கொரோனா முகாமுக்குள்ள இறக்கி விடோணும்!

Link to comment
Share on other sites

  • 1 month later...

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 10:28 AM   குரங்குகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை பேராதனை பல்கலைக்கழகத்தில் உள்ள கால்நடை மருத்துவ பீடம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கருவி பெண் குரங்களின் கருப்பையில் கருவுறுவதை தடுக்கும் என தெரிவித்துள்ளது. கருவியை ஒருமுறை குட்டி ஈன்ற ஒன்றரை வயது பெண் குரங்கிற்கு சோதனைக்காக பயன்படுத்தப்பட்டது. சோதனையின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட கதிரியக்க பரிசோதனையில், கருப்பையில் பொருத்தப்பட்ட கருவி வெற்றிகரமாக செயல்பட்டுள்ளதை அவதானித்ததாக பேராதனை பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ பீடத்தைச் சேர்ந்த சிரேஷ்ட பேராசிரியர் அசோக தங்கொல்ல தெரிவித்தார். பெண்களுக்கு கர்ப்பம் தரிப்பதை தடுக்கும் நடைமுறையிலுள்ள சாதாரண அளவிலான கருவியை பயன்படுத்திய போது அது தோல்லி அடைந்தது. அதனால் சிறிய அளவிலான வளையத்தை உருவாக்க முடிவு செய்தோம் என தெரிவித்துள்ளார்.  பேராதனை போதனா வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் நரம்பியல் திணைக்களத்தின் வைத்தியர்களும் பேராதனையிலுள்ள பல் வைத்திய பீடத்தினரும் இந்த முயற்சிக்கு தமது ஒத்துழைப்பை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். “இந்த கருவியை பொறுத்த விலங்கை அமைதிப்படுத்த அரை மணி நேரம் எடுக்கும், அதைத் தொடர்ந்து அறுவை சிகிச்சைக்கு மற்றொரு அரை மணி நேரம் எடுக்கும். இந்த முறை நாட்டில் குரங்குகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது." என தெரிவித்துள்ளார். இந்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை உற்பத்தி செய்ய 2000 ரூபாய் செலவாகும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181987
    • 25 APR, 2024 | 07:33 PM   (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) சிரேஷ்ட பிரஜைகளுக்கான வட்டியை 15 வீதமாக வழங்க வேண்டுமானால் அரசாங்கம் மேலும்  40 பில்லியன் ரூபாவை அதற்காகச் செலுத்த நேரிடும். அரசாங்கத்தின் தற்போதைய நிதி நிலைமையைக் கவனத்தில் கொண்டு அது தொடர்பில் உரியக் கவனம் செலுத்தப்படும்  என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய  தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் தமது கேள்வியின் போது வங்கி வட்டி வீதங்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில் சிரேஷ்ட பிரஜைகளுக்கான வங்கி வைப்புக்கான வட்டி வீதமும் குறைக்கப்பட்டுள்ளது. அதனை நம்பி வாழும் அவர்களின் வட்டி வீதத்தை அதிகரித்து வழங்க அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அது தொடர்பில்  இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இக் காலங்களில் வங்கி வட்டி வீதம் தொடர்பில் பிரச்சினைகள் எழுந்துள்ளன. கடனுக்கான வட்டி அதிகரிக்கப்பட்டு வங்கி வைப்புக்கான வட்டியை 16 வீதத்திலிருந்து தற்போது தனி இலக்கத்திற்குக் கொண்டு வந்துள்ளோம். வைப்புக்களுக்கான வட்டியைக் குறைப்பது இயல்பாக இடம்பெறுகின்ற ஒன்று. அது தொடர்பில் சிரேஷ்ட பிரஜைகளும் சில பாதிப்புகளை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. அதேவேளை, சிரேஷ்ட பிரஜைகள் முகம் கொடுக்கும் மற்றுமொரு பிரச்சினை ஒரு லட்சம் ரூபாவுக்கு குறைவாகப் பணத்தை வைப்புச் செய்வது. அவ்வாறான பிரச்சினைகளுக்கு நாம் நடவடிக்கை ஒன்றை எடுத்தோம். எனினும் அது சாத்தியப்படவில்லை. சிரேஷ்ட பிரஜைகளின் வங்கி வைப்புகளுக்கு வட்டி அதிகரிக்க வேண்டியது அவசியம். எனினும் அதற்கான நிதியை அரசாங்கமே ஒதுக்க வேண்டியுள்ளது. இவ்வாறான விடயங்களுக்காக ஏற்கனவே வங்கிக்கு அரசாங்கம் வழங்க வேண்டிய நிலுவை இன்னும் தொடர்கிறது.  நீண்ட காலமாக இவ்வாறு சிரேஷ்ட பிரஜைகளுக்கு அதிக வட்டியை வழங்குவதற்கு அரசாங்கமே வங்கிகளுக்கு நிதி வழங்கி வந்துள்ளது.  நூற்றுக்கு 15 வீதமாக அதனை வழங்க வேண்டுமானால் சுமார் 40 பில்லியன் ரூபாவை அரசாங்கம் அதற்காக ஒதுக்க வேண்டியுள்ளது. முன்னரை விட அதிகமான நிதியை இப்போது ஒதுக்க நேர்ந்துள்ளது. அந்த வகையில்  நாட்டின் தற்போதைய நிலையையும் கவனத்திற் கொண்டு எவ்வாறு இந்த நிலைமையைச் சரி செய்வது என்பது தொடர்பில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருகிறது என்றார். https://www.virakesari.lk/article/181967
    • அரைச்சதம் அடித்து வென்றபோதும் விமர்சிக்கப்படும் கோலி; ஆர்சிபி கேப்டன் கூறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES 26 ஏப்ரல் 2024, 03:06 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடந்த 6 போட்டிகள் முடிந்தபோதெல்லாம் ஆர்சிபி வீரர்கள் முகத்தில் சோகம், விரக்தி, நம்பிக்கையின்மை, டக்அவுட்டுக்கும் கவலையோடு சென்றனர், ஆர்சிபி ரசிகர்களும் சோகத்தோடு வீட்டுக்குப் புறப்பட்டனர். ஆனால், நிலைமை நேற்று தலைகீழாக மாறியது. ஆர்சிபி வீரர்கள், ரசிகர்கள் முகம் நிறைய மகிழ்ச்சி, புன்னகை மிதந்தது, வீரர்கள் ஒவ்வொருவரும் கட்டிஅணைத்து மிகழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். காரணம், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றி. ஒவ்வொரு ஆட்டத்தின் முடிவிலும் ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் போட்டி முடிந்தபின் பேட்டியளிப்பது வழக்கம். ஆனால், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றியால், கொண்டாட்டமனநிலையில் கேப்டன் டூப்பிளசிஸ் பேட்டியளிக்கவே மறந்துவிட்டார். சக வீரர்களுடன் வெற்றிக் கொண்டாட்டத்தை முடித்தபின்புதான் டூப்பிளசிஸ் சேனல்களைச் சந்தித்தார். ஹைதராபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 41-ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 35 ரன்களில் வீழ்த்தி ஒரு மாதத்துக்குப்பின் ஆர்சிபி அணி வெற்றியை ருசித்தது. முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 7 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் சேர்த்தது. 207 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்து 35 ரன்களில் தோல்வி அடைந்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபிக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு இன்னும் இருக்கிறதா? ஆர்சிபி அணி தொடர்ந்து 6 தோல்விகளைச் சந்தித்த நிலையில் இந்த வெற்றி அந்த அணிக்கு பெரிய ஊக்கமாகவும், நம்பிக்கையையும் அளித்துள்ளது. இந்த வெற்றியால் புள்ளிப்பட்டியலில் பெரிதாக மாற்றத்தை ஆர்சிபி ஏற்படுத்தவில்லை என்றபோதிலும், வீரர்களின் அணுகுமுறை, நம்பிக்கை, உற்சாகம் ஆகியவை அதிகரிக்கும். ஆர்சிபி அணி 9 போட்டிகளில் 2 வெற்றி, 7 தோல்விகள் என 4 புள்ளிகளுடன் 10-வது இடத்திலேயே நீடிக்கிறது. நிகர ரன்ரேட்டில் மைனஸ் 0.721 என்ற ரீதியில் இருக்கிறது. இந்த வெற்றியால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது. அடுத்துவரும் 5 போட்டிகளிலும் ஆர்சிபி அணி தொடர் வெற்றிகள் பெறும்பட்சத்தில் , பிற அணிகளின் தோல்விகளும் சாதகமாக இருந்தால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும். அதேசமயம், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்விகள் என 10 புள்ளிகளுடன் 3 - ஆவது இடத்திலேயே நீடிக்கிறது, நிகர ரன்ரேட்டில் 0.577 என்ற நிலையில் இருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபியின் வெற்றிக்குக் காரணம் என்ன? ஆர்சிபி அணிக்கு நேற்று கிடைத்த வெற்றி ஒரு தனிநபர் உழைப்பால் கிடைத்ததாகக் கூறமுடியாது. தொடக்கத்தில் ஆர்சிபி அணிக்கு கிடைத்த வாய்ப்பை நழுவவிடாமல் கடைசிவரை சன்ரைசர்ஸ் அணிக்கு கொடுத்த நெருக்கடியால் வெற்றி வசமானது. இதில் ஏதேனும் ஒரு கட்டத்தில் கேப்டன்ஷிப்பில் சுணக்கம் ஏற்பட்டிருந்தாலோ அல்லது, வீரர்களிடையே உற்சாகக் குறைவு ஏற்பட்டிருந்தாலோ ஆட்டம் கைமாறி இருக்கும். ஆர்சிபி அணி தங்களுக்கு கிடைத்த தருணத்தை தவறவிடாமல் கடைசிவரை எடுத்துச் சென்றதே வெற்றிக்கு முக்கியக் காரணம், பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங்கில் ஒவ்வொரு வீரர்களும் தங்களின் அதிகபட்ச பங்களிப்பை அளித்தனர். அதில் குறிப்பாக மெதுவான விக்கெட்டைக் கொண்ட மைதானத்தில் 19 பந்துகளில் அரைசதம் அடித்து ஆட்டமிழந்த ரஜத் பட்டிதார் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரின் கணக்கில் 2 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் அடங்கும். அதிலும் மயங்க் மார்க்கண்டே வீசிய 11வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை பட்டிதார் பறக்கவிட்டு அரைசத்ததை நிறைவு செய்தார். பட்டிதாரின் ஸ்ட்ரைக் ரேட் 250 ஆக இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பொறுமையாக ஆடிய கோலி விராட் கோலியும் அரைசதம் அடித்தார். ஆனாலும் அவர் மீது சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. கோலி ஆட்டமிழந்தபோது 43 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்திருந்தார். இதில் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரி, ஸ்ட்ரைக் ரேட் 118.60 ஆக இருந்தது. விராட் கோலி தனது இருப்பை ஆட்டம்முழுவதும் வைத்திருக்கும் நோக்கில் டி20 போட்டி என்பதையே மறந்துவிட்டு பேட் செய்கிறாரா என்று ரசிகர்கள் விமர்சித்தனர். விராட் கோலி பவுண்டரி, சிக்ஸர் அடிக்க வேண்டிய பந்துகளில் கூட ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்கிறேன் எனக் கூறிக்கொண்டு ஒரு ரன், 2 ரன்கள் எடுத்தார் என ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் விராட் கோலி வீணாக்கிய பந்துகளால் ஆர்சிபி அணியின் ஸ்கோர் 20 முதல் 30 ரன்கள் குறைந்துவிட்டது என்றும் விமர்சிக்கப்படுகிறது. இந்த ஆட்டத்தில் ஆர்சிபி அணியில் அரைசதம் அடித்திருந்தபோதிலும் ஸ்ட்ரைக் ரேட் குறைவாக வைத்திருந்த ஒரே பேட்டர் கோலி மட்டும்தான். கேப்டன் டூப்பிளசிஸ் தொடக்கத்தில் சிறிய கேமியோ ஆடி 12 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்து 250 ஸ்ட்ரைக் ரேட்டில் பேட் செய்து ஆட்டமிழந்தார். கேமரூன் க்ரீன் 20 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் ஸ்ட்ரைக் ரேட் 185 ஆக இருந்தது. கடைசி வரிசையில் களமிறங்கிய மகிபால் லாம்ரோர், தினேஷ் கார்த்திக், ஸ்வப்னில் சிங் ஆகிய 3 பேரின் ஸ்ட்ரைக் ரேட்டும் 175க்கு அதிகமாகவே இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பந்துவீச்சில் பொறுப்புணர்வு ஆர்சிபி அணி பந்துவீச்சாளர்கள் நேற்றைய ஆட்டத்தில் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினர். முகமது சிராஜ் வழக்கமாக ரன்களை வாரி வழங்கும் நிலையில் 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள்தான் கொடுத்தார். யாஷ் தயால் 3 ஓவர்கள் வீசி 18 ரன்கள் ஒருவிக்கெட், கரன் ஷர்மா 4 ஓவர்கள் வீசி 29 ரன்கள் கொடுத்து 2 விக்கெட், கேமரூன் க்ரீன் 2 ஓவர்கள் வீசி 12 ரன்களுடன் 2 விக்கெட் என 6 ரன்ரேட்டுக்குள் கட்டுக்கோப்பாக பந்துவீசினர். ஸ்வப்னில் சிங், பெர்குஷன், ஜேக்ஸ் மட்டுமே இரட்டை இலக்க ரன்ரேட் வைத்திருந்தனர். மற்ற பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்புடன் பந்துவீசியது வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. வெற்றி கிடைக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்? ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் கூறுகையில் “ ஒவ்வொரு போட்டி முடிந்தபின்பும் பேட்டியளிப்பேன் ஆனால் இன்று மறந்துவிட்டேன். காரணம் 6 போட்டிகள் தோல்விக்குப்பின் கிடைத்த வெற்றிதான். கடந்த போட்டிகளில் எல்லாம் நாங்கள் வெற்றிக்கு அருகே வந்துதான் அதை அடையமுடியாமல் தோற்றோம். கொல்கத்தா அணியுடன் ஒரு ரன்னில் வெற்றியை இழந்தோம். எங்களால் வெற்றி பெற முடியும் கடைசி நேரத்தில் ஏதோ தவறு நடக்கிறது என்பதை புரிந்துகொண்டோம். இதுபோன்ற நெருக்கடியான நேரத்தில் கிடைக்கும் வெற்றிதான் வீரர்களுக்கு நம்பிக்கையளிக்கும். இந்த வெற்றி எங்களுக்கு மகத்தானது.” “இந்தவெற்றி கிடைக்காவிட்டால் வீரர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பார்கள், நம்பிக்கையை ஒட்டுமொத்தமாக குலைத்திருக்கும். நம்பிக்கையை பற்றி ஓய்வறைக்குள் பேசவே முடியாது, போலியான நம்பிக்கையை வீரர்களிடம் செலுத்த முடியாது. களத்தில் நமது செயல்பாடுதான் நம்பிக்கையை ஏற்படுத்தும். போட்டித்தொடரின் முதல்பாதியில் நம்முடைய முழுதிறமைக்கும் விளையாடவில்லை என்று நினைத்தோம். 50சதவீதம் முதல் 60 சதவீதத்தை வெளிப்படுத்தனால், உங்களால் நம்பிக்கையைப் பெற முடியாது. கடந்த வாரம் முழுவதும் நாங்கள் அனைவரும் கடினமாக பயிற்சி செய்தோம், உழைத்தோம், சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த திட்டமிட்டோம்.” “ரஜத் பட்டிதார் தொடர்ந்து இரு அரைசதங்களை விளாசியுள்ளார். கிரீன் தேவையான கேமியோ ஆடினார். சின்னசாமி அரங்கு எங்களுக்கு மிகப்பெரிய மனவேதனையை அளித்தது. அதுபோன்ற சிறிய மைதானத்தில் பந்துவீசுவது பந்துவீச்சாளர்களுக்கு கடினமான பணி. கரன் சர்மா அவரின் திறமையை வெளிப்படுத்த ஒரு தளம் தேவைப்பட்டது, அதற்கு இந்தப் போட்டி உதவியது. எங்களிடம் தற்போது லெக் ஸ்பின்னரும் இருக்கிறார்” எனத் தெரிவித்தார் பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பலவீனத்தை அம்பலமாக்கிய ஆர்சிபி சன்ரைசர்ஸ் அணி இந்த சீசனில் இதற்கு முன் பெற்ற வெற்றிகள் அனைத்தும் முதலில் பேட் செய்து மிகப்பெரிய ஸ்கோரை எட்டி, எதிரணியை திக்குமுக்காடச் செய்து பெற்றவையாகும். சேஸிங் செய்து சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது குறைவுதான். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் 207 ரன்கள் இலக்கு வைத்து சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்ய அழைத்தபோது அந்த அணியின் பலவீனத்தை ஆர்சிபி அணி வெளிப்படுத்திவிட்டது. அதாவது மிகப்பெரிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டால், சன்ரைசர்ஸ் பேட்டர்களும் பதற்றத்தில் சொதப்புகிறார்கள் என்பதை வெளிப்படுத்திவிட்டது. ஹைதராபாத் ஆடுகளம் சன்ரைசர்ஸ் அணிக்கு சொந்த மைதானம். பேட்டிங்கிற்கு சொர்க்கபுரியான இந்த மைதானத்தில்தான் சன்ரைசர்ஸ் அணி மிகப்பெரிய ஸ்கோரையும் எட்டியுள்ளது. அப்படி இருந்தும் நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி தோற்றதற்கு சேஸிங்கை கையில் எடுத்ததுதான் என்று ஆர்சிபி வெளிப்படுத்தியுள்ளது. அடுத்துவரும் ஆட்டங்களில் சன்ரைசர்ஸ் அணி ஒருவேளை டாஸில் தோற்றால், எதிரணிகள் பேட்டிங் செய்து, சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்யவைத்து நெருக்கடி கொடுக்கும் வியூகத்தை கையில் எடுக்கலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பேட்டர்களை எவ்வாறு சுருட்டுவது என கேப்டன் டூப்பிளசிஸ் பல உத்திகளைப் பயன்படுத்தினார். முதல் ஓவரிலேயே ஜேக்ஸை பந்துவீசச் செய்து டிராவிஸ் ஹெட் விக்கெட் வீழ்த்தப்பட்டது, அடுத்து ஸ்வப்னில் சிங் மூலம் ஒரே ஓவரில் கிளாசன், மார்க்ரம் என இரு ஆபத்தான பேட்டர்கள் பெவிலியனுக்கு அனுப்பப்பட்டனர். கிளாசன் இமாலய சிக்ஸர் அடித்த நிலையில் அடுத்த பந்தில் விக்கெட்டை இழந்தார். மார்க்ரம் ஃபுல்டாஸ் பந்தில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். அபிஷேக் சர்மா விக்கெட்டை யாஷ் தயாலும், நிதிஷ் ரெட்டி விக்கெட்டை கரண் சர்மாவும் எடுக்கவே சன்ரைசர்ஸ் பேட்டிங் வரிசை ஆட்டம் கண்டது. பவர்ப்ளே ஓவருக்குள் சன்ரைசர்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்தது, 10 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை சன்ரைசர்ஸ் இழந்து தடுமாறியது. பாட்கம்மின்ஸ் கேமியோ ஆடி 31 ரன்கள் சேர்த்து க்ரீன் பந்துவீச்சிலும், புவனேஷ்வர் குமார் 13 ரன்னில் க்ரீன் பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தனர். ஷாபாஸ் அகமது மட்டும் 40 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அடுத்தடுத்து விக்கெட் சரிவு, பெரிய இலக்கு ஆகியவை சன்ரைசர்ஸ் அணியை மேலும் நெருக்கடிக்குள் தள்ளி, தோல்வியடையச் செய்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES பட்டிதார் அளித்த உத்வேகம் ஆர்சிபி அணி பெரிய ஸ்கோரை எட்டுவோம் என்ற நோக்கத்தில் ஆட்டத்தைத் தொடங்கியது, புவனேஷ்வர், கம்மின்ஸ் வீசிய ஓவர்களை அதிரடியாக அடித்த கேப்டன் டூப்பிளசிஸ் பவுண்டரி, சிக்ஸர் விளாசினார். 3ஓவர்களில் 43 ரன்கள் என பெரிய ஸ்கோர் சென்றது. ஆனால், நடராஜன் பந்துவீச்சில் டூப்பிளசிஸ் 25 ரன்களில் ஆட்டமிழந்தவுடன் ரன்ரேட் குறையத் தொடங்கியது. ஷாபாஸ் சுழற்பந்துவீச்சில் கோலி வழக்கம்போல் மெதுவாக ஆடத் தொடங்கினார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் ஆர்சிபி ஒரு விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் சேர்த்தது. தொடக்கத்தில் வேகமாக பேட்டை சுழற்றிய கோலி 11 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்தார், அதன்பின், 32 பந்துகளில் கோலி 28 ரன்கள் மட்டுமே சேர்த்தார். ஜேக்ஸ் 6 ரன்னில் மார்க்கண்டே பந்துவீச்சில் ஆட்டமிழந்தபின் பட்டிதார் களமிறங்கினார். பட்டிதார் களத்துக்கு வந்தபின்புதான் ஆர்சிபியின் ஸ்கோர் எகிறத் தொடங்கியது. வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 125 ஸ்ட்ரைக்ரேட்டிலும், சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 197 ஸ்ட்ரைக் ரேட்டிலும் பட்டிதார் ஆடி ரன்களைச் சேர்த்தார். அதிலும் மார்க்கண்டே வீசிய 11-வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை விளாசிய பட்டிதார் 19 பந்துகளில் அரைசதம் அடித்தார். கேமரூன் நடுவரிசையில் களமிறங்கி தேவையான ஒரு கேமியோ ஆடி ஸ்கோரை உயர்த்தினார். குறிப்பாக கேப்டன் கம்மின்ஸ் பந்துவீச்சில் கேமரூன் 4 பவுண்டரிகளை விளாசி 20 பந்துகளில் 37ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த சீசனில் சிறப்பாக பேட் செய்து வரும் டிகே 11 ரன்னில் ஆட்டமிழந்தார். ஸ்வப்னில் சிங் 12 ரன்னில் விக்கெட்டை இழந்தார். https://www.bbc.com/tamil/articles/c80z102przro
    • தந்தை செல்வாவின் 47வது நினைவு தினம்! வவுனியாவில் தந்தை செல்வாவின் 47வது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. குறித்த நிகழ்வானது வவுனியா மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் உள்ள அன்னாரின் சிலையருகில் இடம்பெற்றிருந்தது. இதன்போது அன்னாரின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டதுடன், நினைவு பேருரையும் இடம்பெற்றிருந்தது. தமிழரசு கட்சியின் தந்தை செல்வா நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். https://athavannews.com/2024/1379846
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.