Jump to content

கோமகன் இன்று காலமாகி விட்டார்.


Recommended Posts

  • Replies 73
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

large.6F2265F1-D1D9-4426-8134-FE2781F36DA4.webp.0ae1bc6586d36d1ed4d4382ef3123aa2.webp

 

கோமகன் மரணமடைந்தார் என்ற செய்தி மிகவும் அதிர்ச்சியைத் தந்தது. 

கோமகன் யாழ் களமூடாக அறிமுகமாகியவர். அவர் யாழ் களத்தில்தான் தனது எழுத்துப் பயணத்தை ஆரம்பித்தார் என நினைக்கின்றேன். கதை, கவிதை, பட்டிமன்றம், தமிழ் இலக்கியம், இலக்கணம் என்று மட்டும் இல்லாமல் கள உறுப்பினர்களுடனான அலப்பறைகளுக்கும் குறைவில்லை. தமிழ்த்தேசிய அரசியலின் மீதான மாற்றுப் பார்வையால் முரண்பட்ட கருத்துக்களை வைத்து யாழ்களத்தை சில காலம் கொதிநிலையிலும் வைத்திருந்தார்.

யாழ் களத்தில் தனிமடலிலும், அதன் பின்னர் முகநூல் உள்பெட்டியினூடாகவும் மிகவும் பண்பாகவும், இனிமையாகவும், தனக்கேயுரிய பகிடிகளுடனும் உரையாடியவர். 

முகநூலில் சுறுக்கரின் பகிடிகள் மட்டுமில்லாமல், இலக்கிய உரையாடல்களும், விமர்சனக் குறிப்புக்களும், அரசியல் அவதானங்களும் என்று சுறுசுறுப்பாகவே இருப்பார்.

அவரது சிறுகதைகள், நேர்காணல்கள் “நடு” இணைய இதழில் வெளிவரும்போதெல்லாம் அபிப்பிராயங்களைக் கேட்பார். அவரது ஆக்கங்களை யாழில் இணைத்து “வாசக நயப்பை” சில வரிகளில் கொடுப்பதுண்டு.

அண்மையில் தாயகத்திலிருந்து அவர் தோட்டத்தில் களையெடுத்த படத்தைப் போட்டபோது “மெத்தக் கவனமாய்க் கூலியும் வாங்காமல் வேலை புரிபவன் வேறு யார்?” என்று கலாய்த்திருந்தேன். ஆனால் அவர் விடுமுறை முடிந்து திரும்ப பிரான்ஸ் வரமுன்னரே இவ்வுலகை விட்டுப் பிரிந்தார் என்பதை மனம் நம்ப மறுக்கின்றது.

நண்பர் கோமகனின் இழப்பினால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள். குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினருக்கும் ஆழ்ந்த அனுதாங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

C9989-EFA-02-B4-4-FEE-800-B-0462746-D144

தனதுநடுஇணைய சஞ்சிகைக்கு என்னிடம் இருந்து கோமகன் ஓவியங்களைப் பெற்றிருந்தார். என்னை நடு இதழுக்குள் உள்வாங்கவும் அவர் விருப்பம் கொண்டிருந்தார். தமிழ்கார்டியன், பொங்குதமிழ் இரண்டிற்கும் அப்பொழுது எனது பங்களிப்பு௧ள் இருந்ததால் அவர் கேட்ட பொழுது என்னால் முடியாமல் போயிற்று.

பொதுவாக படைப்பாளிகளுக்குள்நான், நீஎன்ற சச்சரவுகள் இருக்கும். ஆனால் கோமகன் வேறுபட்டவர். எல்லோரிடமும் சுமூகமான நல்லுறவை வைத்திருந்தார்.

ஆழ்ந்த இரங்கல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் சூடாக விவாதித்தாலும்  படைப்புகளில்  நல்லதொரு எழுத்துநடை இருக்கும்.  நம்பமுடியவில்லை.    அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் உறவுகளோடு  ஆழந்த இரங்கலைப் பகிர்வதோடு இயற்கையுள் சங்கமித்துவிட்ட கோமகனவர்களின் ஆத்மா சாந்தியடைவதாக. 

Link to comment
Share on other sites

யாழ்களகளத்தில் கற்றுக்குட்டியாக நுளைந்த வேளை எனது கிறுக்கல்களையும் கருத்துக்களாக ஏற்று ஊக்கம்தந்த உறவுகளில் ஒருவர்தான் கோமகன். அவரை என்றாவது ஒருநாள் சந்திக்கவேண்டும் என்ற எனது ஆசையை நிராசையாக்கிவிட்டு அவர் இயற்கை எய்திவிட்டார் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

கோமகன் அவர்களின் ஆத்மா சாந்திபெற இறைவனை வேண்டுவதோடு அவர் குடும்பத்தவர்க்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

ஆழ்ந்த இரங்கல்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களால் மாறுபட்டிருந்தாலும் தமிழால் இவர் யாழில் இணைந்திருந்த காலங்கள் இப்பவும் பசுமையாக.

அன்னாருக்கு கண்ணீரஞ்சலியும் குடும்பத்தார் உறவினர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Paanch said:

அவரை என்றாவது ஒருநாள் சந்திக்கவேண்டும் என்ற எனது ஆசையை நிராசையாக்கிவிட்டு அவர் இயற்கை எய்திவிட்டார் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

நானும் இவரும் பல தடவைகள் தொலைபேசியில் உரையாடியுள்ளோம்.யாழ்களத்தை தவிர வேறு எந்த விடயங்களும் எமக்குள் பகிர்ந்து கொண்டதில்லை. ஏனெனில் அவர் கொள்கை வேறு என் கொள்கை வேறு. ஆனால் யாழ்களத்தை பொறுத்தவரை இருவரும் சம நிலையை பேணினோம்.அரசியலும் பேசியதில்லை.நாட்டு நிலவரங்களும் பேசியதில்லை.

யாழ்களத்தை கலகலப்பாக வைத்திருக்க ஒரு திரி ஆரம்பிக்கப்பட்டது.அதில் நானும் கோமகனும் சேர்ந்து சில நிகழ்ச்சி நிரல்களை தயாரித்து தொடர்ந்த போது அது அரசியலாக்கப்பட்டு நானும் பலரது வெறுப்புகளுக்கு உள்ளாகினேன்.அந்த திரியை பலர் பகிஸ்கரித்தார்கள்.வெறும் அரசியல் காரணங்களுக்காக மட்டும்.ஆனால் அந்த திரி யாழ்களத்திற்கானது என்பது மட்டும் எனக்கு தெரியும்.இது சம்பந்தமாக நான் நள்ளிரவு வேலையால் வரும்  வரைக்கும் காத்திருந்து தொலைபேசியில் தொடர்புகொண்டு விவாதிப்பார்.பல இடங்களில் என் தொனியை கூட்டி கதைக்கும் போது அப்படியெல்லாம் கதைக்கக்கூடது என்பார்.

முகநூலிலும் பல கலாய்ப்புகளுடன் எமக்குள்ளான உறவு இருந்தது.இருந்தாலும் ஏனோ தெரியவில்லை எதுவுமேயில்லாமல் கருத்துபரிமாற்றங்கள் இடைநிறுத்தப்பட்டு விட்டது.யாழ்கள மூத்த உறவு சாத்திரியும் அவரது நெருங்கிய நண்பர். அவருக்கும் இந்த அவலச்செய்தி அதிர்சியை கொடுத்திருக்கும். ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

மைத்ரேயின் கைப்பக்குவம் எனும் சமையல் திரியும் அவருடையது என நினைக்கின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரிவால் வாடும் உறவுகளுக்கு என் அனுதாபங்கள்.

யாழின் அறுசுவைகளில் ஒன்று அன்றே அகன்றது. இன்றோ அது அணைந்தே விட்டது.

எனக்கு இவரை வாசகனாக மட்டுமே தெரியும். எல்லாரைபோலவும் இவருடனும் கருத்து ஒற்றுமை, வேற்றுமை இருந்தது.

ஆத்மசாந்திக்கு பிரார்திக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.
பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினருக்கும் ஆழ்ந்த அனுதாங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோமகனின் பிரிவால் துயருற்று இருக்கும், குடும்பத்தினருக்கும்…
உற்றார் உறவினருக்கும், ஆழ்ந்த அனுதாங்கள்.பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினருக்கும் ஆழ்ந்த அனுதாங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோமகன் அவர்களின் ஆத்மா சாந்திபெற இறைவனை வேண்டுவதோடு அவர் குடும்பத்தவர்க்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவரது பூதவுடல் சொந்த ஊரான கோப்பாயில் நடைபெற இருப்பதாக அறிந்தேன்.

மிகவும் கொடுத்து வைத்தவர்.

Link to comment
Share on other sites

மிகவும் அதிர்ச்சியான செய்தி. யாழ் மூலமாகத்தான் கோம்ஸை (என்னை தும்ஸ் எண்டு மனிசன் கூப்பிடும்) எனக்குத் தெரியும். நேரிலே சந்திக்க வேண்டும் எண்டு நினைத்த உறவுகளில் ஒருவர். ஒரு கையில் கோப்பியுடனும் மறுகையில் சிகரெட்டுடனும் தனது பால்கனியில் இருந்து விடுப்பு பார்ப்பது அவரது தெரபி. அருமையான, பழக இனிய மனிசன். எல்லாருடைய எழுத்துக்களையும் ஊக்கப்படுத்துவார். எனது சில கிறுக்கல்களையும் முகநூலில் பகிர்ந்திருக்கிறார். நடுவுக்கு ஏதாவது ஆக்கம் கேட்டிருந்தார். எனக்கு எழுதப்பஞ்சி/நேரப்பிரச்சினை. கொஞ்சநாளா ஆளை வெட்டி விளையாடிக்கொண்டிருந்தேன். மனிசனும், உந்த கேஸ் உருப்படாது எண்டு பேசாமல் விட்டிட்டார். இலக்கியப் பரப்பில் மிகுந்த ஈடுபாட்டுடன் செயற்பட்டுக் கொண்டிருந்தார். இலங்கை, புலம்பெயர் நாடுகள் தவிர தமிழகத்திலும், கிழக்கிலங்கை இஸ்லாமிய இலக்கிய வட்டத்திலும் பல நண்பர்களை கொண்டிருந்தார்.  

போய் வாருங்கள் அண்ணை, ஆழ்ந்த இரங்கல்கள் அக்கா.     

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆத்ம சாந்திக்கு பிரார்திக்கிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
May be an image of 1 person and indoor
 
யாழ் கருத்துக்களத்தில் சந்தித்த மறக்க முடியாத உறவுகளில் ஓன்று இன்று எம்மை விட்டு பிரிந்தது.
ஆழமான சிந்தனையாளன் அவருக்கும் எனக்கும் இருவேறு அரசியல் நிலைப்பாடுகள் ஆனாலும் எந்தவித சமரசமும் இல்லாமல் தனது சார்பு போராட்ட இயக்கத்தையும் அரசியல் எதிர் கருத்தையும் துணிந்து பொது வெளியில் வைத்தவர் அதனால் நிறைய சண்டையும் பிடித்திருக்கிறோம் இருவரும் கருத்துக்களால் தான் முரண் பட்டோமே தவிர அதை தாண்டிய அன்பும் அக்கறையும் அவரிடம் இருந்தது
 
கோமகன் அண்ணா எழுதும் கதைகளும் சரி 2010 களின் ஆரம்பத்தில் அப்பொழுது யாழ் கருத்துக்களத்தில் அவர் எழுதிய ஊருக்கு போயிட்டு வந்த பயண தொடரும் ( நெருடிய நெருஞ்சி ) வாரா வாரம் எப்பொழுது வரும் என்று காத்திருந்து படித்தது நினைவுகளில் வந்து போகிறது அவ்வளவு சுவாரசியமா அதை எழுதி இருந்தார்
சென்று வாருங்கள் கோமகன் அண்ணா
 
நீங்கள் எழுதிய கதைகளும் உங்கள் கருத்தாடல்களும் உங்களுடன் போட்டுக்கொண்ட அரசியல் சண்டைகளும் நினைவில் இருக்கும்.
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மட்டக்களப்பு எல்லையில் புதிதாக விகாரை அமைப்பு – திட்டமிட்ட சிங்கள மயமாக்கல் தீவிரம் May 23, 2024   மட்டக்களப்பை சிங்கள மயமாக்கலின் அடிப்படையில் எல்லைக் கிராமமான கிரான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வடமுனை கிராம சேவகர்பிரில் உள்ள நெலுகல் மலை எனப்படுகின்ற மலையில் எமது மாவட்டத்தின் இரு இராஜாங்க அமைச்சர்களின் ஆசீர்வாதத்துடன் நெலுகல்மலை கிறீன் விகாரை எனும் பெயரில் புதிதாக விகாரை கட்டும் பணி திருகோணமலை சோமவதி விகாரை விகாராதிபதி தலைமையில் இடம்பெற்று வருகின்றது என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தேசிய அமைப்பாளா் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார். மட்டக்களப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி காரியாலத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாள் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். திட்டமிட்ட அடிப்படையிலே கிழக்கு சிங்கள தேசத்துக்குள் படிப் படியாக கரைந்து கொண்டிருக்கின்றது அம்பாறை. திருகோணமலை மாவட்டம் முழுவதுமாக சிங்கள தேசத்தின் திட்டமிட்ட அபகரிப்பு உட்பட்டு தமிழ் மக்கள் கையில் இருந்து விடுவிக்கப்படுகின்ற மிகப் பெரிய ஆபத்தான நிலைக்கு போயிருக்கின்றது. அதன் அடுத்த கட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் இதில் எல்லைப்புற கிராமங்கள் சிங்கள தேசத்தினாலும் பெரும்பான்மை இனத்தவர்களால் குறிவைக்கப்பட்டு எல்லைக் கிராமங்கள் அபகரிக்கும் செயற்பாடுகள் படிபடியாக நடந்தேறிவருகின்றது. அதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரான் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள வடமுனை கிராமசேவகர் பிரிவிலுள்ள நெலுகல் மலையில் எனப்படுகின்ற குடும்பி மலையின் பின்பகுதியான இந்த மலையில் நெலுகல்மலை கிறீன் விகாரை எனும் பெயரில் விகாரை கட்டும் பணியை திருகோணமலை சோமவதி விகாரை விகாராதிபதி தலைமையில் இடம்பெற்று வருகின்றது. இந்த பகுதியில் பாரிய கட்டிடம் அமைக்கப்பட்டு அதில் இருந்துகொண்டு கட்டுமானப்பணியில் இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதன்நோக்கம் கிழக்கு மாகாணத்தை முற்றுமுழுதாக சிங்கள பௌத்த தேசத்துக்குள் கரைப்பதற்கான நடவடிக்கையபக பார்க்கின்றோம் வடக்கில் குருந்தூர்மலை வெடுக்குநாறி மலை, கையகப்படுத்தப்பட்டுள்ள இந்த வேளையிலே கிழக்கு மண் சத்தம் இல்லாமல் பறிபோய் கொண்டிருக்கின்றது. மயிலத்தமடு மேச்சல்தரையில் ரவுண்டப் எனும் புல்லுக்கு அடிக்கும் மருந்தையடித்து மேச்சல் புல்தரைகள் அழிக்கப்பட்டு 8 ஆயிரத்துக்கு மேற்பட்ட மேச்சல் தரை காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளது அதேவேளை மகாவலி ஏ வலயத்துக்குரிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு பெரும்பான்மை இனத்தவர்களை குடியேற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்தப் பண்ணையாளா்கள் தொடர்ந்து அச்சுறுத்தி அங்கிருந்து அவர்களை வெளியேற்றுகின்ற நடவடிக்கைகள் கச்சிதமாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றது இந்த நடவடிக்கைகளுக்கு யார் காரணம் என்பதை மக்கள் மிகத் தெளிவாக விளங்கிகொள்ள வேண்டும். இந்த மாவட்டத்தில் 2 இராஜாங்க அமைச்சர்கள் இருக்கின்றனர். இவர்களுடைய பணி சிங்கள தேசத்தினுடைய நிகழ்சி நிரலை அமுல்படுத்துவதுதான் இவர்களது நோக்கமாக இருக்கின்றதே தவிர மட்டக்களப்பு மாவட்ட மக்களை பாதுகாக்க எந்தவொரு முன்னேற்றகரவமான செயற்பாடுகளையும் செய்யவில்லை. குறிப்பாக மேச்சல்தரை பகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் போக முடியாத சூழ்நிலை காணப்பட்டது அதனை எமது கட்சி தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அந்த இடத்துக்கு சென்று அந்த பகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர் கூட செல்லமுடியாது என்பதை சர்வதேசத்துக்கு அம்பலப்படுயிருந்தார். இந்த நிலையில் கஜேந்திரகுமார் ஏன் இங்கு வரவேண்டும் என பிள்ளையான் நேற்ரூ முன்தினம் கூட்டத்தில் கேட்டிருந்தார். எனவே கஜேந்திரகுமார் இந்த இடத்துக்கு வரவேண்டியதாக இருந்தது. நீங்கள் ஒரு காட்டிக் கொடுப்பை செய்து தமிழ் மக்களை அழிக்கின்ற செயற்பாட்டில் நின்றதனால் அந்த மக்கள் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளை கூப்பிடவேண்டிய அபாய நிலைக்கு இட்டுச் சென்றீர்கள் எனவே அது ஒரு வெக்க கேடான விடயம். இவரின் செயற்பாடுகளை பார்த்தால் தெரியும் தங்களது பக்கற்றுக்களை நிரப்புகின்ற விதமாக தங்களின் அமைச்சுக்கு ஊடாககிடைக்கின்ற வீதிகளை அமைத்து அதில் 15 வீதம் தரகு பணம் பெற்றுக் கொண்டு அதற்கு வக்காளத்து வாங்குகின்ற ஒப்பந்தகாரர்களை பின்னால் வைத்துக்கொண்டு பேச ஒப்பந்தகாரர்கள் கையடிக்கின்ற செயற்பாட்டை மிகக் கச்சிதமாக பிள்ளையான் செய்துவருகின்றாா் என்றும் சுரேஷ் தெரிவித்தாா்.   https://www.ilakku.org/மட்டக்களப்பு-எல்லையில்-ப/
    • ஈரான் ஜனாதிபதியின் ஜனாசா நல்லடக்கம் இன்று sachinthaMay 23, 2024 ஹெலிகொப்டர் விபத்தில் கொல்லப்பட்ட ஈரான் ஜனாதிபதி, வெளியுறவு அமைச்சர் மற்றும் ஏனையவர்களுக்காக அந்நாட்டு உயர்மட்டத் தலைவர் ஆயதொல்லா அலி காமெய்னி நேற்று தொழுகை நடத்தினார். ஈரானிய கொடி போர்த்திய இறந்தவர்களின் உடல்கள் அடங்கிய பேழைகள் டெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டு பெரும் எண்ணிக்கையான மக்களுக்கு முன் உயர்மட்டத் தலைவர் ஜனாஸா தொழுகையை நடத்தினார். ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிர் அப்துல்லாஹியன் மற்றும் மேலும் ஆறு பேர் சென்ற ஹெலி கடந்த ஞாயிற்றுக்கிழமை அசர்பைஜான் நாட்டு எல்லைக்கு அருகில் விபத்துக்குள்ளாகியதில் ஒருவரும் உயிர் தப்பவில்லை. ‘இறைவனே நாம் அவரிடம் நன்மையைத் தவிர வேறு எதனையும் பார்க்கவில்லை’ என்று உயர்மட்டத் தலைவர் பிரார்த்தனையின்போது தெரிவித்தார். தொடர்ந்து அந்த பேழைகள் மக்களால் சுமந்து செல்லப்பட்டதோடு வெளியே ‘அமெரிக்கா ஒழிக’ என்ற கோசமும் எழுப்பப்பட்டது. இந்த இறுதிக் கிரியையில் பல வெளிநாட்டு தலைவர்களும் பங்கேற்றனர். ஈரான் ஜனாதிபதியின் இறுதிக் கிரியை கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அவரது உடல் தெற்கு கொராசன் மாகாணத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் அவரது சொந்த ஊரான மஷாத்துக்கு எடுத்து வரப்படவுள்ளது. இன்று (23) மாலை இறுதிச் சடங்குகளுக்குப் பின்னர் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.   https://www.thinakaran.lk/2024/05/23/world/62483/ஈரான்-ஜனாதிபதியின்-ஜனாச/
    • இதெல்லாம் ரணிலுக்கு வாக்கு போட சொல்லும் ஒரு யுக்தி , மொக்கு சிங்களவனுக்கு சொல்லும் செய்தி 
    • கூகா என என் கிளை கூடி அழப் போகா வகை, மெய்ப்பொருள் பேசியவா நாகாசல வேலவ நாலு கவித் தியாகா சுரலோக சிகாமணியே.    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.