Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மானசீகத் தேர்தல் 2024 - உங்கள் வாக்கு யாருக்கு 61 members have voted

  1. 1. இந்த தேர்தலில் நீங்கள் ஒரு இலங்கை வாக்காளர் எனில் எந்த கட்சிக்கு வாக்களிப்பீர்கள்

    • தமிழரசுக் கட்சி
      13
    • தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
      15
    • தமிழ் மக்கள் விடுதலை புலிகள்
      1
    • ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி
      0
    • தமிழ் மக்கள் கூட்டணி
      0
    • ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி
      1
    • ஐக்கிய மக்கள் கூட்டணி (சஜித்)
      0
    • தேசிய மக்கள் சக்தி(அனுர)
      14
    • சுயேட்சை குழு -அருச்சுனா
      7
    • கருணாவின் கட்சி
      0
    • இலங்கை பொதுஜன முன்னணி (நாமல்)
      0
    • புதிய சனநாயக முன்னணி (ரணில்)
      0

This poll is closed to new votes

Poll closed on 11/14/24 at 11:59

Please sign in or register to vote in this poll.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிந்திய நிலவரம்

சைக்கிள், அனுர, வீடு…தலா ஒரு, ஒரு வாக்கு வித்தியாசத்தில், முறையே 1,2,3 ஆக உள்ளனர்.

ஆகவே….

All to play for …..

வாக்கை செலுத்தவும்.

வாக்களிக்க முன் முடிவுகளை பார்க்க வேண்டாம். உங்களால் வாக்களிக்க முடியாது போய்விடும்.

  • Replies 223
  • Views 11.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    @நிலாமதி, @யாயினி, @nilmini, @Kavallur Kanmani, @தமிழினி, @வல்வை சகாறா, @கறுப்பி, @பெருமாள், @alvayan, @ரசோதரன், @ஈழப்பிரியன், @நீர்வேலியான், @நியாயம், @விசுகு, @goshan_che, @Ahasthiyan, @nedukkalapo

  • ஐயகோ அவர்களையும் தவற விட்டுவிட்டேனே….. தவராசா, தவறாக நினைக்கப்போறார். மாம்பழ வாக்காளர் மன்னிக்கவும். விரும்பினால் மேலே வாக்களிக்காமல் கருத்து களத்தில் தெரிவை மாம்பழம் என எழுதவும்.

  • ரசோதரன்
    ரசோதரன்

    என்னுடைய வாக்கை தேசிய மக்கள் சக்திக்கு அளித்துள்ளேன். இங்கு களத்தில் இருக்கும் பெரும்பான்மையானவர்கள் தமிழ் தேசிய பற்றும், ஆதரவும் உள்ளவர்கள் என்பது வெள்ளிடை மலை. நானும் என் இனத்திற்கோ அல்லது என்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, வீரப் பையன்26 said:

இந்தியா தேர்த‌ல் மாதிரி இழுத்த‌டிக்காம‌ நாளைக்கே முடிவை தேர்த‌ல் ஆனைய‌ம் சொல்லி விடுவின‌ம் தானே.....................

 

 

ஆமா பையா.நாளை மதியம் முடிவுகள் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவரும்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, வீரப் பையன்26 said:

இந்தியா தேர்த‌ல் மாதிரி இழுத்த‌டிக்காம‌ நாளைக்கே முடிவை தேர்த‌ல் ஆனைய‌ம் சொல்லி விடுவின‌ம் தானே.....................

 

 

ஆமா பையா.நாளை மதியம் முடிவுகள் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவரும்.

பையா உங்கள் நேரம் இரவு 6 மணியாகலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

ஒம் ஒம்.    அதேவேளை    அனுர தேசியக்கட்சி   ஆனால் சைக்கிள் மாநிலக்கட்சி     அனுரவுக்கு   கிடைக்கும் வாக்குகள்.  தேசிய மட்டத்தில். மேலதிக சீட்டுகளைப்பெற உதவும்     சைக்கிள் தேசியமட்டத்தில்.  5% க்கு குறைய. வரலாம்.   வாக்குகள் கூடவும் வாய்ப்புகள் இல்லை    

இது வடக்கு கிழக்கு இரண்டும் சேர்ந்த போட்டி அல்லவா?? 

எனவே ஆசனங்கள். 20. க்கு  கிட்ட. வர வேண்டும் 

தேசிய மட்டத்தில் 5 %  யில்லை. தேசிய மட்டத்தில் 29 பேரை தெரிவு செய்வார்கள்.  100%/29 = 3.45% 

3.448% மேல் கிடைத்தால் ஒரு இடம் கிடைக்கும். சென்ற தேர்தலில் சைக்கிளுக்கு ஒரு இடம் கிடைத்தது. கொழும்பில் டக்ளஸ் கட்சி போட்டியிடுவதும் தேசிய மட்டத்தில் கிடைக்கலாம் என்பதினால் தான்.  வடக்கு கிழக்கில் தமிழ் வாக்காளர்களினால் ஜேவிபி உட்பட சிங்கள கட்சிக்கு கிடைக்கும் வாக்குகள் தேசிய மட்டத்தில் சிங்களவர்களுக்கு இடம் கிடைக்க உதவபோகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்

தண்ணி பைப் சின்னத்தில் ஒரு சுயேட்ச்சைக் குழு இருக்காம் யாருக்காவது தொpயுமா

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

தண்ணி பைப் சின்னத்தில் ஒரு சுயேட்ச்சைக் குழு இருக்காம் யாருக்காவது தொpயுமா

அருணலு மக்கள் முன்னணி என்ற கட்சி தண்ணீர் பைப் சின்னத்தில் யாழ்ப்பாணத்தில் கேட்கிறது.  இவ்வணியின் செயலாளர் பெயர் - கிறிசான். கட்சி அலுவலகம் வெல்லம்பிட்டியாவில் இருக்கிறது 

நுவரெலியா மாவட்டத்தில் இக்கட்சியின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டு இருக்கிறது

Edited by கந்தப்பு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

 

பிந்திய நிலவரம்

சைக்கிள், அனுர, வீடு…தலா ஒரு, ஒரு வாக்கு வித்தியாசத்தில், முறையே 1,2,3 ஆக உள்ளனர்.

 

ஆகவே….

All to play for …..

வாக்கை செலுத்தவும்.

வாக்களிக்க முன் முடிவுகளை பார்க்க வேண்டாம். உங்களால் வாக்களிக்க முடியாது போய்விடும்.

மானசீக வாக்கெடுப்பு நிலவரத்தில் மாற்றம் இல்லை.

இலங்கையில் வாக்களிப்பு முடிந்து விட்டது.

இங்கே இன்னும் ஒரு மணத்தியால நேரம் இருக்கிறது எவரேனும் வாக்களிக்க விரும்பினால்.

  • கருத்துக்கள உறவுகள்

அர்சசுனா கட்சிக்கு ஒரு இடமும் கிடைக்காது என்றே  தாயகத்தின் இன்றைய நிலவரம் தெரிவிக்கிறது.  😂

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கந்தப்பு said:

2) குறைவான வாக்குகளை நீக்காவிட்டால் (2004 தேர்தல் போல)

சைக்கிள் 3 இடம் 

அனுரா 1 இடம் 

வீடு 1 இடம் 

ஊசி 1 இடம் 

 

ஆமாம்

மாவட்ட ரீதியில் 5விகிதத்திற்குக் கீழே வாக்குக்களைப் பெற்ற குழுக்களின் வாக்குக்களே வெட்டப்படும்
அது மட்டுமல்லாமல் அவர்கள் தோல்வியடைந்தவர்களாக வெளியேற்றப்படுவார்கள் . அத்துடன் செல்லுபடியாகாத வாக்குகளும் அடங்கும்

  • கருத்துக்கள உறவுகள்

நாம் நினைக்கும் அளவுக்கு அநுர அலையும் யாழில் இல்லையாம். பொறுத்திருந்து பார்பபோம். 

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, island said:

நாம் நினைக்கும் அளவுக்கு அநுர அலையும் யாழில் இல்லையாம். பொறுத்திருந்து பார்பபோம். 

இருக்கலாம்   ஐனதிபதி தேர்தலில் 27.000 வாக்குகள்  கிடைத்ததாகவும்  அது தன். வெல்ல பெரிதும் உதவியது என்றார் அனுர   இந்தமுறை. ஒரு லட்சம் வாக்குகள் கிடைக்கலாம்  யாழ்ப்பாணத்தில் இடம் கிடையாது விடினும் தேசிய அளவில்  

அந்த 29.  இடங்களில் ஒன்று இரண்டு இடஙகளை கைப்பற்ற உதவும்   இதுபற்றி அடிக்கடி கத்தப்பு அண்ணை எழுதியுள்ளார்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்போ மானசீக தேர்தல் முடிவுகளை எல்லோரும் பார்க்க முடியுமாய் இருக்கும் என நம்புகிறேன்.

பார்ககலாம். நிஜத்தேர்தல் என்ன சொல்கிறது என.

20 hours ago, ஈழப்பிரியன் said:

உள்ளுக்கு வரக்கேயே பார் திறந்திருந்ததால் பலர் பாருக்குள் புகுந்துவிட்டார்கள்.

@நிழலி யும் மாறி போட்டேன் என்று எழுதியது இதைத் தான்.

நம்மவர்களின் ரசனை தெரிந்து தான் லைசன்ஸ்சுகள் வழங்கப்பட்டுள்ளன.

 

பிரியன் அண்ணா, 'அச்சச்சோ என்று'' " நான் சொன்னது ஒரு சிரிப்புக்காக. நான் தவறுதலாக தமிழரசுக் கட்சிக்கு வாக்கு போடவில்லை. 

எனக்கு இருந்த தெரிவு இரண்டு தான் (வாக்களிக்காமல் விடுவதை தவிர்த்து.. ஆனால் யாழில் இடம்பெறும் ஒன்றை நானே விலத்தி செல்ல விரும்பவில்லை). ஒன்று, அனுரவுக்கு அடுத்தது தமிழ் கட்சிக்கு. அனுர கட்சியின் இனவாத செயற்பாடுகளின் நினைவுகளும், அவர்கள் ஒரு போதும் மாற மாட்டார்கள் என்ற எண்ணமும் இருப்பதால், அவர்களுக்கு வாக்களிக்கவில்லை. எனவே தமிழரசுக் கட்சிக்கு வாக்களித்தேன்.

3 hours ago, island said:

அர்சசுனா கட்சிக்கு ஒரு இடமும் கிடைக்காது என்றே  தாயகத்தின் இன்றைய நிலவரம் தெரிவிக்கிறது.  😂

கிடைக்கும் என நம்பினீர்களா? அவர்களில் பலருக்கு கட்டுக்காசும் கிடைக்காது.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நிழலி said:

கிடைக்கும் என நம்பினீர்களா? அவர்களில் பலருக்கு கட்டுக்காசும் கிடைக்காது.

எப்படி அவ்வளவு உறுதியாக சொல்கிறீர்கள்?

17 minutes ago, ஈழப்பிரியன் said:

எப்படி அவ்வளவு உறுதியாக சொல்கிறீர்கள்?

ஊரில் இருப்பவர்கள் மாதிரி சிந்தித்து பார்த்தேன்.

என் கணிப்பு பிழையானால் கணிப்பிடுதலில் இன்னும் பயிற்சி தேவை என்று எஸ்கேப் ஆகிவிடுவேன் 😀

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, நிழலி said:

கிடைக்கும் என நம்பினீர்களா? அவர்களில் பலருக்கு கட்டுக்காசும் கிடைக்காது.

இல்லை. நான் நம்பவும் இல்லை, விரும்பவும் இல்லை.  ஆனால், சமூக ஊடகங்களில் அலப்பறைகள் அப்படி இருக்குமோ என்று எண்ண தோன்றியது.   கோஷானின் மானசீக வாக்களிப்பும் அதையே சொன்னது.  இன்று மதியம் தாயக நண்பர்கள் உறவினர்களுடன் பேசியபோது  அவர்கள் கடைசிவரை அரச்சுனாவுக்கு ஒரு சீட்  கூடக்  கிடைக்காது என்றார்கள்.   பார்பபோம் என்ன நடக்கிறது என்று. 

சற்று முன் அர்சுனா பேட்டி வென்றவுடன் புலிக்  கொடியுடன்  பாராளுமன்றம. செல்வாராம். 

 

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, நிழலி said:

ஊரில் இருப்பவர்கள் மாதிரி சிந்தித்து பார்த்தேன்.

என் கணிப்பு பிழையானால் கணிப்பிடுதலில் இன்னும் பயிற்சி தேவை என்று எஸ்கேப் ஆகிவிடுவேன் 😀

பயிற்சி தேவை.

  • கருத்துக்கள உறவுகள்
On 12/11/2024 at 20:13, தமிழ் சிறி said:

@நிலாமதி, @யாயினி, @nilmini, @Kavallur Kanmani, @தமிழினி, @வல்வை சகாறா, @கறுப்பி, @பெருமாள், @alvayan, @ரசோதரன், @ஈழப்பிரியன், @நீர்வேலியான், @நியாயம், @விசுகு, @goshan_che, @Ahasthiyan, @nedukkalapoovan, @குமாரசாமி, @nochchi, @satan, @Sasi_varnam, @putthan, @உடையார், @Sabesh, @valavan, @Kapithan, @Justin, @Kavi arunasalam, @நிழலி, @nunavilan, @புங்கையூரன், @இணையவன், @மோகன், @நீர்வேலியான், @Paanch, @பாலபத்ர ஓணாண்டி, @ஏராளன், @நந்தன், @சுப.சோமசுந்தரம், @ராசவன்னியன், @புரட்சிகர தமிழ்தேசியன், @வாலி, @புலவர், @Eppothum Thamizhan, @MEERA, @விளங்க நினைப்பவன், @ரஞ்சித், @பிரபா, @கந்தப்பு, @வாதவூரான், @island, @நன்னிச் சோழன், @தனிக்காட்டு ராஜா, @colomban, @பகிடி, @பசுவூர்க்கோபி, @uthayakumar, @kandiah Thillaivinayagalingam, @theeya, @kalyani, @முதல்வன், @P.S.பிரபா, @Maruthankerny, @ரதி, @vanangaamudi, @ragaa, @villavan, @Elugnajiru, @zuma, @அக்னியஷ்த்ரா, @வாத்தியார், @Kandiah57, @vaasi, @vasee, @சுவைப்பிரியன், @கிருபன், @alvayan, @suvy, @வீரப் பையன்26, @புலிக்குரல், @S. Karunanandarajah, @saravanar, @Kadancha, @Thumpalayan, @paragon, @ஊர்க்காவலன், @nirmalan, @தமிழன்பன், @நந்தி, @வைரவன், @aaresh,  @செவ்வியன், @nirmalan

அன்பான யாழ்.கள உறவுகளே... 
மேலே உள்ள... இலங்கை பாராளுமன்ற, இரகசிய வாக்கெடுப்பில் கலந்து கொள்ள உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
இது, இரகசிய வாக்கெடுப்பு என்பதால்... நீங்களாக வெளியே  சொல்லாதவரை, எந்தக் கட்சிக்கு வாக்களித்து உள்ளீர்கள் என்று எவருக்கும் தெரியாது. 

ஆகவே... தயங்கமால் நீங்கள் தெரிவு செய்து  வாக்களிக்கப் போகும்  கட்சிக்கு முன்னே  உள்ள, வட்டத்தில் கிளிக் பண்ணி  வாக்களிக்க முடியும். 

இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ள  ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரமே எடுக்கும் என்பதால்... உங்கள் வாக்களிப்பை ஆவலுடன் எதிர் பார்க்கின்றோம்.

இது... இலங்கையில் நடக்க இருக்கும் தேர்தலை முன்னிட்டு... யாழ். கள  உறவுகளின் அரசியல் மனநிலையை, நாடி பிடித்து பார்க்கும் தேர்தல் என்ற படியால்... தயங்காமல், உற்சாகத்துடன் கலந்து கொள்ளுங்கள். 🙂

மன்னிக்கவும் தமிழ் சிறி, இன்று ( இப்பத்தான்) உங்கள் பதிவை பார்த்தேன்.

எனது வாக்கு

தேசிந மக்கள் கட்சி

காரணம்: தமிழரின் ஒற்றுமையான குணம் என்னை புல்லரிக்க வைத்துவிட்டது 🤬. இப்படிப்பட்ட கேவலாமான இனத்திற்கு ஒரு ஆசனுமும் இடைக்ககூடாது இதன்மூலம் தமிழ் மக்கள் பிற்காலத்திலாவது ஒற்றுமையாக ஒரு தமிழ்கட்சயை ஆதரித்து தம் பலத்தை நிரூபிப்பார்கள் என்ற நப்பசைதான்.

Edited by ragaa

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ragaa said:

மன்னிக்கவும் தமிழ் சிறி, இன்று ( இப்பத்தான்) உங்கள் பதிவை பார்த்தேன் . காலம் கடந்துவிட்டதால் வாக்கிக்க முடியாது 

ராகா.... நீங்கள் அந்த இடைப்பட்ட காலத்தில் யாழ்.களத்திற்கு வராமல் இருந்ததால், 
உங்களுக்கு போட்டி நடப்பது தெரிந்திருக்காது  தானே...
பரவாயில்லை, அடுத்த போட்டிகளில் கலந்து கொள்ளலாம். 🙂

  • கருத்துக்கள உறவுகள்

க‌ந்த‌ப்பு அண்ணா

மெது மெதுவாய் ச‌ரி பிழை பார்த்து வெற்றியாள‌ர‌ அறிவியுங்கோ.............................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த மானசீக வாக்கெடுப்பு யாழ், வன்னி தேர்தல் மாவட்ட முடிவுகளை பெரிதும் ஒத்திருக்கிறது.

உண்மையில் யாழ் களம் போல இதுவரை கடும் தமிழ் தேசியம் பேசியவர்கள், வடமாகாணத்தவர் அநேகர் இருக்கும் ஒரு தளத்தில் கூட என் பி பி 27.4% எனும் போது - அது யாழ் வன்னி மாவட்டங்களில் வரவிருக்கும் நிஜ தேர்தல் முடிவை ஆரூடம் கூறியது என்பதே உண்மை (யாழ் மாவட்டத்தில் என் பி பி 25%). 

அத்தோடு புலம்பெயர் தேசத்தில் த.தே.ம.மு வுக்கு இருக்கும் அதீத ஆதரவு, நாட்டில் இல்லை என்பதை கருத்த்தில் எடுத்து பார்க்கும் போது….இந்த “புலம்பெயர் எப்பெக்ட்” ஐ கழித்து விட்டு பார்த்தால் வரவிருந்த முடிவுக்கான க்ளூக்களை இந்த மானசீக தேர்தல் கொடுத்திருந்தது, ஆனால் நாம் (நிச்சயமாக நான்) அதை அப்போது உணரவில்லை என நினைக்கிறேன்.

அருச்சுனாவுக்கு 1 சீட் (13.5%) அப்படியே நிஜத்தேர்தலில் பலித்துள்ளது.

—/——

ஆனால் கிழக்கின் 3 மாவட்ட மக்களின் எண்ண ஓட்டத்தில் இருந்து மானசீக தேர்தல் முடிவுகள் பெரிதும் வேறுபட்டு நிற்கிறது.

இதற்கு பிரதான காரணம் சிறிய மாதிரி அளவு (சாம்பிள் சைஸ்) என நினைக்கிறேன். வாக்களிப்பில் பங்கு கொண்டோரில் மிக சிறிய அளவிலானோரே கிழக்கு மாகாண பூர்வீகத்தினர் என நினைக்கிறேன்.

கலந்து கொண்டும், திரியில் எழுதியும் சிறப்பித்த அனைவருக்கும் நன்றி.

 

  • கருத்துக்கள உறவுகள்
On 12/11/2024 at 14:43, தமிழ் சிறி said:

@நிலாமதி, @யாயினி, @nilmini, @Kavallur Kanmani, @தமிழினி, @வல்வை சகாறா, @கறுப்பி, @பெருமாள், @alvayan, @ரசோதரன், @ஈழப்பிரியன், @நீர்வேலியான், @நியாயம், @விசுகு, @goshan_che, @Ahasthiyan, @nedukkalapoovan, @குமாரசாமி, @nochchi, @satan, @Sasi_varnam, @putthan, @உடையார், @Sabesh, @valavan, @Kapithan, @Justin, @Kavi arunasalam, @நிழலி, @nunavilan, @புங்கையூரன், @இணையவன், @மோகன், @நீர்வேலியான், @Paanch, @பாலபத்ர ஓணாண்டி, @ஏராளன், @நந்தன், @சுப.சோமசுந்தரம், @ராசவன்னியன், @புரட்சிகர தமிழ்தேசியன், @வாலி, @புலவர், @Eppothum Thamizhan, @MEERA, @விளங்க நினைப்பவன், @ரஞ்சித், @பிரபா, @கந்தப்பு, @வாதவூரான், @island, @நன்னிச் சோழன், @தனிக்காட்டு ராஜா, @colomban, @பகிடி, @பசுவூர்க்கோபி, @uthayakumar, @kandiah Thillaivinayagalingam, @theeya, @kalyani, @முதல்வன், @P.S.பிரபா, @Maruthankerny, @ரதி, @vanangaamudi, @ragaa, @villavan, @Elugnajiru, @zuma, @அக்னியஷ்த்ரா, @வாத்தியார், @Kandiah57, @vaasi, @vasee, @சுவைப்பிரியன், @கிருபன், @alvayan, @suvy, @வீரப் பையன்26, @புலிக்குரல், @S. Karunanandarajah, @saravanar, @Kadancha, @Thumpalayan, @paragon, @ஊர்க்காவலன், @nirmalan, @தமிழன்பன், @நந்தி, @வைரவன், @aaresh,  @செவ்வியன், @nirmalan

அன்பான யாழ்.கள உறவுகளே... 
மேலே உள்ள... இலங்கை பாராளுமன்ற, இரகசிய வாக்கெடுப்பில் கலந்து கொள்ள உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
இது, இரகசிய வாக்கெடுப்பு என்பதால்... நீங்களாக வெளியே  சொல்லாதவரை, எந்தக் கட்சிக்கு வாக்களித்து உள்ளீர்கள் என்று எவருக்கும் தெரியாது. 

ஆகவே... தயங்கமால் நீங்கள் தெரிவு செய்து  வாக்களிக்கப் போகும்  கட்சிக்கு முன்னே  உள்ள, வட்டத்தில் கிளிக் பண்ணி  வாக்களிக்க முடியும். 

இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ள  ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரமே எடுக்கும் என்பதால்... உங்கள் வாக்களிப்பை ஆவலுடன் எதிர் பார்க்கின்றோம்.

இது... இலங்கையில் நடக்க இருக்கும் தேர்தலை முன்னிட்டு... யாழ். கள  உறவுகளின் அரசியல் மனநிலையை, நாடி பிடித்து பார்க்கும் தேர்தல் என்ற படியால்... தயங்காமல், உற்சாகத்துடன் கலந்து கொள்ளுங்கள். 🙂

வணக்கம் தமிழ்சிறி அண்ணா.. வேலைப்பழு காரணமாக வரமுடியவில்லை. நான் இம்முறை அனுரவின் கட்சிக்கு வாக்களித்தேன். திருக்கோணமலை மாவட்டம். இளம் தமிழ் பிரதிநிதி. திறமையானவர். இம்முறை எம்மவர்களுக்கு ஒரு பாடம் புகட்டவேண்டும் என்கிற நோக்கம்தான். திருகோணமலையில் இருக்கும் பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்கிற அதீத நம்பிக்கைதான். (ஊடறுத்த குடியேற்றங்கள். அதிகரிக்கும் விகாரைகள் பேன்றவை) 'மகிந்த யதார்த்தவாதி' என்று சந்தர்ப்பம் வழங்கப்பட்டதோ அதே தலைவரின் வழிகாட்டல்தான்.

போராட்ட வடிவங்கள் மாறலாம் ஆனால் இலட்சியம் ஒன்றுதான்!

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, புலிக்குரல் said:

வணக்கம் தமிழ்சிறி அண்ணா.. வேலைப்பழு காரணமாக வரமுடியவில்லை. நான் இம்முறை அனுரவின் கட்சிக்கு வாக்களித்தேன். திருக்கோணமலை மாவட்டம். இளம் தமிழ் பிரதிநிதி. திறமையானவர். இம்முறை எம்மவர்களுக்கு ஒரு பாடம் புகட்டவேண்டும் என்கிற நோக்கம்தான். திருகோணமலையில் இருக்கும் பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்கிற அதீத நம்பிக்கைதான். (ஊடறுத்த குடியேற்றங்கள். அதிகரிக்கும் விகாரைகள் பேன்றவை) 'மகிந்த யதார்த்தவாதி' என்று சந்தர்ப்பம் வழங்கப்பட்டதோ அதே தலைவரின் வழிகாட்டல்தான்.

போராட்ட வடிவங்கள் மாறலாம் ஆனால் இலட்சியம் ஒன்றுதான்!

புலிக்குரல்… உங்களை மீண்டும் காண்பதில் மிக்க மகிழ்ச்சி.
திருகோணமலை மாவட்டத்தில் அனுர கட்சியில் கேட்ட அந்த இளையவரைப் பற்றி பலரும் நல்ல மாதிரி சொன்னார்கள்.
உங்கள் தெரிவு நியாயமானது. புரிந்து கொள்கின்றோம். 🙂 👍🏽

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.